Wednesday, 12 April 2023

Book-54


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-19
Book-54
Pages-472

இந்தியா
-சசி தரூர்

வாழ்வின் கனவை மனிதன் காணத் தொடங்கிய ஆதி நாட்களிலிருந்து, உயிர் வாழ்ந்த மனிதர்களின் கனவுகளின் இல்லமாக ஓர் இடம் உலகில் இருக்கும் என்றால் அது இந்தியா தான் 
-ரோமைன் ரோலன்ட்

1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று விடுதலை பெற்ற இந்தியாவுக்கு 50 வயது ஆகிறது .இந்த முதல் 50 ஆண்டுகளின் கதை என்ன? 21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கு என்ன வைத்திருக்கிறது? இந்த இரண்டு வினாக்கள் ஏன் முக்கியத்துவம் பெற வேண்டும் என்பதற்கான கேள்விக்கான பதிலாக இந்த புத்தகம் இருக்கிறது

இந்தியாவைப் பற்றிய மெய் வாசகத்தோடு இந்தியாவைப் பற்றிய இன்னொரு வாசகம் முரண்படும். நாட்டின் அரசு இலட்சணையில் பொறிக்கப்பட்டிருக்கும் தேசிய குறிக்கோள் வாக்கியம் வாய்மையே வெல்லும் என்பது. இப்போது ஒரு கேள்வி எழுகிறது. யாருடைய உண்மை? இந்த கேள்விக்கு ஒரு கோடி பதில்கள் கிடைக்கும். 

ஆனால் அப்படிப்பட்ட விடை விடையே அல்ல.எனவே ஒரு கேள்வி க்கான விடையை காண வேண்டும். இது ஒருமை நிலையில் உள்ளொளியில் இருக்கிறது. இந்தியாவைப் பற்றிய ஒருமை தன்மையை பற்றி மட்டும் தான் பேச முடியும் என்பது தான் அந்த விடை.பல இந்தியாக்கள் இருக்கின்றன ஒவ்வொன்றும் எண்ணற்ற வேறுபட்ட வகைகளாக இருக்கின்றன. ஒரே தரம் என்றோ, ஒரே மாதிரி என்றோ, ஒரே வழி என்றோ ஒன்றும் இல்லை. இந்தியாவில் எல்லா குழுக்கள் சமயங்கள் ரசனைகள் அனைத்தும் தொடர்ந்து இயங்கி வருவதற்கு இவ்வுலகில் அவற்றினை ஒழுங்குபடுத்துவதில் இப் பன்முகத்தன்மை ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

தொடர்ந்து வேற்றுமையில் ஒற்றுமை கடைபிடிக்க பிரிட்டிஷ் ஆட்சியின் முதல் கொண்டு எவ்வாறு எல்லாம் திட்டம் தீட்டினர். இறுதியில் மக்கள் எவ்வாறு எல்லாம் ஒன்றுபட்டு ஒரே கோட்டில் நின்றனர் என்பது பற்றியும் கட்டுரை இன்னும் ஆழ அலசுகிறது. சோனியா காந்தி வெளிநாட்டவர் என்ற கருத்தின் அடிப்படையில் அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களையும் அவதூறுகளையும் எவ்வாறெல்லாம் கருதலாம் என்பதைப் பற்றியும் கருத்தியல் ரீதியாக அவர் மீதான குற்றச்சாட்டை மறுக்கும் அடிப்படையில் இரண்டாம் பகுதியின் கட்டுரை அமைந்துள்ளது.

மிகத் தவறாக பயன்படுத்தப்படும் சொல்லான மதச்சார்பின்மை என்பதற்கு இதுதான் பொருள். மேலைநாட்டு அகராதிகள் மதச்சார்பின்மை இச்சொல்லுக்கு மதம் இல்லை என்று பொருள் காண்கின்றன. ஆனால் இந்த செக்யூரிலிசம்.. மதங்களின் மிகுந்திருத்தல் என்று பொருள் தெரிகிறது.இவற்றில் எந்த மதமும் அரசாங்க மதம் இல்லை .மக்கள் பண்பாட்டில் மதம் என்பது எங்கும் நிரவி இருக்கிறது. அதுவும் நேரு வெளிப்படையாகவே தான் எந்த மதமும் இல்லாதவராக இருந்தார் .ஆனால் மதம் பொதுக் கொள்கையில் எந்த இடத்திலும் பெறவில்லை என்பது இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருந்தது. மதம் குறித்தும் மதச்சார்பின்மை குறித்தும் இப்பகுதியில் நீண்ட நெடிய வரலாற்றுத்துடன் இந்தியாவின் பன்முகத்தன்மையை மதச்சார்பின்மையை தகுதியை வெளிப்படுத்துகிறது

பட்டியலின  ஜாதிகள் தொடர்பான கட்டுரை ஒன்றில் இந்தியா விடுதலை பெற்ற 50 ஆண்டுகளாக நிலைபெற உழைத்த மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையான மாற்றம் கேரளாவில் நன்றாகவே நடந்தது. அங்கே தொடர்ந்து வந்த பொதுவுடமை அரசுகள் அவர்களது புரட்சிகர ஆர்வத்தை வளர்ச்சி மாற்றுவதற்கு உட்படுத்திக் கொண்டார்கள். மற்ற இடங்களில் இல்லாவிட்டாலும் இந்தியா முழுவதும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது.

நீங்கள் ஒரு மதத்தினை சேர்ந்தவராக இருந்து உங்களை நீங்களே பெரும்பான்மையானதாக நினைத்துக் கொண்டிருந்தால் ரயிலில் இந்தியா முழுவதும் சுற்றி வாருங்கள். நாம் எவ்வளவு சிறுபான்மையினர் என்பது தெரியும். ஏனெனில் பல்வேறு தரப்பினர் வாழ்ந்து வரும் பூமி தான் இந்தியா. இங்கே நாம் பெரும்பான்மை என்று எண்ணிக் கொண்டிருந்தால் வெளி உலகத்துக்கு செல்லும்போது சிறுபான்மை போல நினைக்க நேரிடும். இந்தியா ஒரு பழைய சுவடி போன்றது. அதன் மேல் அடுக்கின் மேல் அடுக்காய் சிந்தனையும் கனவுகளும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஏற்கனவே எழுதப்பட்ட எதுவும் முழுதும் மறைக்கப்படவோ அழிக்கப்படவோ இல்லை .மக்கள் மத்தியில் வேறுபாடும் கணக்கற்ற வகைகளும் வெளிப்படையாக இருந்தாலும் எங்கும் ஒருமைப்பாடு எனும் மிகப்பெரிய அழுத்தம் இருந்து வந்து கொண்டிருக்கிறது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலனில் இந்தியா காட்டும் அக்கறையும் இந்து வளர்ச்சி வீதமும் பிற கடவுள் மறுப்பு பாரம்பரியங்களும் கட்டுரைகளும் நாட்டில் பொருளாதார நிலையில் ஏற்பட்ட மாற்றங்களும் மக்களிடையே ஏற்பட்ட முன்னேற்றங்களும் எவ்வாறெல்லாம் வரலாற்றில் பதிவு பெற்றன என்பதை பற்றிய கட்டுரையாக வருணிக்கிறது.

சுதந்திரம் அடைந்த ஆண்டுகளில் இந்தியாவின் பன்முகத்தன்மை எவ்வாறு நாம் அயல்நாடுகளுக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகினோம் என்றும் இந்தியாவின் தத்துவார்த்த ரீதியான கொள்கை விளக்கங்கள் எவ்வாறு மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கின்றன என்பது பற்றியும் நீண்ட நெடிய கட்டுரைகளாக ஒவ்வொன்றும் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. வரலாறை மீள் வாசிப்பு செய்வதற்கு இது போன்ற கட்டுரைகள் துணை புரிகின்றன

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment