#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-23
Book-62
Pages-532
இந்திய பணக்காரர்களின் இன்னொரு முகம்
- வே குமரவேல்
நாடாளுமன்றத்தில் பிர்லாவின் பிரதிநிதிகள் அமர்ந்திருந்த போது வடநாட்டு தலைவர்களும் நடுங்குகின்ற வகையில் பலர் திடுக்கிட்டு இருக்கும்போது அண்ணா கூறிய சொல் "ஒவ்வொரு துறைகளிலும் உங்களுடைய ஆதிக்கமே நிலவுகிறது. மக்களவையில் பிர்லாவின் பிரதிநிதிகளுக்கு என்ன வேலை. பொதுமக்களுக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு என்ன உறவு" என்று கேட்டார் அண்ணா. நூலின் மொத்த சாரமும் பெரு முதலாளிகளின் மறுபக்கம் தான். இன்று நாம் அன்றாடம் பார்க்கும் பல்வேறு விஷயங்களில் இந்த பெரு முதலாளிகளின் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது.
தவறு செய்வது மனித இயற்கை அது சகஜம் தவறு செய்வதையே தொழிலாக கொண்டிருக்கக் கூடாது. அது பழக்கம் ஆகிவிட்டால் தவறுகளை தத்துவம் ஆகிவிடும். நாற்காலிக்கு சிலர் அடித்துக் கொள்வதால் நாற்காலிக்கு பெருமை வந்துவிடாது. மனிதன் தான் நாற்காலியில் உட்கார வேண்டுமே தவிர நாற்காலியை தூக்கிக் கொண்டு மனிதனுக்கு கூடாது. சமூகத்தில் பெரு முதலாளிகள் சட்டத்தின் வழி கொண்டு எவ்வாறெல்லாம் தப்பிக்கிறார்கள்.. அவர்களுக்கு உதவும் அரசியல்வாதிகள்.. இவ்வாறு நடைமுறை எதார்த்த சிக்கல்களை பெரும் முதலாளிகள் எவ்வாறெல்லாம் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக சொல்லும் புத்தகம் தான் இது.
புலிகளை வேட்டையாடாமல் புள்ளிமான்களே வளர்ப்பதில் பயனிலை எனும் உரையில் தா. பாண்டியன் அவர்கள் பேசிய உரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் காக்கையை குயிலாக்க வேண்டும் என நினைப்பது ஆசையின் ஆர்வத்தின் விளைவு .ஆனால் முடியும் என நம்புவது நம்பிக்கையின் விளைவு. ஆசைப்படுவது குற்றம் ஆகாது. ஆனால் நம்புவது வாழ்வையும் சக்தியையும் ஆற்றலையும் வீணடித்து விடும் என பெரு முதலாளிகளின் சோசலிச தத்துவம் அரசியல்வாதிகளின் புரிதல் ஆகியவை பற்றி எல்லாம் சொல்கிறது. புதிய பொருளாதாரக் கொள்கையாக இருந்தாலும் அவை 75 ஏகபோக குடும்பங்களை கொழுக்க வைப்பதில் தான் குறியாக இருக்கிறது
உலகெங்கிலும் இயற்கையை பாதுகாப்போம் என்று சொன்னாலும் லாபம் ஈட்டும் தனியார்கள் கனிம வளத்தையும் கொள்ளையடிக்கிற கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் ஒரிசா மாநிலம் கியான் ஜவகர் மாவட்டத்தில் 3000 ஏக்கரை பன்னாட்டு நிறுவனத்திற்கு தாரை பார்க்கிறார்கள். தென்கொரியாவின் போஸ்கோ கம்பெனி உலகில் உருக்கு உற்பத்தியில் மூன்றாவது இடம் பிடித்த கம்பெனி . அங்கே இருக்கக்கூடிய ஆதிவாசிகளிடம் அடிமாட்டு விலைக்கு நிலத்தை வாங்கி தன்னுடைய தொழில் அபிவிருத்தியை தொடங்குகின்றனர் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டக் கூடிய அதிகாரம் இல்லாமல் போகிறது.
இந்தியாவை குறித்து பன்னாட்டு நிறுவனங்கள் விரும்பி வருவது ஏன் என்பதற்கான காரணத்தை பார்த்தால் உலக சந்தையில் நட்டம் ஏற்பட்டால் என்ன செய்வது? இந்திய மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு. அரசியல்வாதிகள் தொழிலதிபர்களுக்கு உதவி செய்ய தயாராக உள்ளனர் .திறந்த வீடாக சலுகைகளும் கிடைக்கிறது. இந்தியா வளர்ந்து வருகின்ற சந்தை அமைப்பு உள்ள நாடுகள் பலவும் இங்கு தொழில் துவங்க துடிக்கின்றன
அரசியல்வாதிகள் தாங்கள் நடத்தும் பத்திரிகைக்காகவும் அறக்கட்டளைக்காகவும் தேர்தல் நிதிக்காகவும் பல நூற்றுக்கணக்கான கோடிகளை திரட்டுகிறார்கள். இதில் கருப்பு எவ்வளவு வெள்ளை எவ்வளவு என்று எமதர்மராஜாவிடம் கணக்கு எழுதும் சித்திரகுப்தனுக்கு கூட தெரியாது. பசுமை புரட்சி என்கிற பெயரில் ரசாயனங்களை உரத்தில் கலந்ததால் மென்மையான மண் என்ன கதியாகும் என்று பிற்கால சந்ததிகள் நிச்சயம் உணர்வார்கள். தன் விருப்பம் போல் உற்பத்தி செய்து கொள்ளலாம் தன் விருப்பம் போல உரத்துக்கு விலை நிர்ணயம் செய்து கொள்ளலாம், தங்கு தடையற்ற முறையில் உரங்களை தயாரித்துக் கொள்ளலாம் என்பன போன்ற சலுகைகள் பெரும முதலாளிகளுக்கு வசதியாக போயிற்று.
*காபித்தூள் அரைக்கும் இயந்திரத்தில் அரிசி அரைக்க முயலாதீர்கள். அரிசி தவிடு ஆகிவிடும். நெல் அரைக்கும் மில்லில் காபித்தூள் அரைக்க முயலாதீர்கள். காபி கொட்டை தூளாகாது .
*சோசலிச லட்சியத்தில் ஆர்வம் இருந்தால் வென்று நிற்கும் மெய்யை காணுங்கள் .அது சொகுசு பேச்சால், மினுக்கால் வராது, கடுமையான உழைப்பும் தெளிவான சிந்தனை உரமும் தேவை
*வெண்ணையைப் பூட்டிவிட்டு நெய்யை தேடுவதைப் போல, யானையை பூட்டிவிட்டு பூனையைத் தேடுவதைப் போல
*குட்ட குட்ட குனிகிறவனும் முட்டாள் குனிய குனிய கொட்டுகிறவனும் முட்டாள்
*ஜெயகாந்தன் எழுதியதை போல இவர்களை நாம் அறிவாலும் வாதத்தாலும் வெல்ல முடியும். ஆனாலும் நாமும் போர் பயிற்சி பெற வேண்டும். அதுதான் பதிலடியாகும்.
*கண்ணதாசன் அழகாக சொன்னார் "நாக்கு தொழிற்சாலை அமைக்காது .நாக்கு வேலை செய்யாது. சம்பளம் பெற்று தராது. நாக்கு சோறு சாப்பிடுமே தவிர சோறு போடாதே. இந்த நாக்கால் ஏமாற்றி விட்டார்கள் நம்மை அரசியல்வாதிகள்
பெரும் பணக்காரர்களின் உடைமைகளின் மீது கை வைக்காமல் பெரும் ஏழைகளை பெரிய வறுமையை தீர்க்க இயலாது. கருப்பு பணத்தில் கை வைக்காமல் கஷ்டப்படும் எளியவர்களுக்கு காவிய தரிசனம் கிடைக்காது .அமெரிக்காவில் சூரியன் உதிக்க வேண்டுமானால் நம்முடைய நாட்டிலே சூரியன் மறைய வேண்டும். நமது தேசத்தில் கதிரவன் எழ வேண்டும் ஆனால் அமெரிக்காவிலே ஆதவன் விழ வேண்டும். ஏழைகள் ஏற்றம் பெற வேண்டும் என்றால் பெரும் பணக்காரர்களிடம் மாற்றம் வர வேண்டும். அந்த மாற்றம் ஒன்றே நிலையானது உறுதியானது. தொடர்ந்து கருப்பு பணம் பெரும் முதலாளிகளின் தொழில் வளம் சங்கங்களினால் என்ன செய்ய முடிந்தது வாழ்வதற்கு பொருள் வேண்டும் போன்ற கட்டுரைகள் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் விரிவான விளக்கத்தை அளிக்கிறது
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment