#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-27
Book-76
Pages-423
சுதந்திரச் சுடர்கள்
-ஸ்டாலின் குணசேகரன்
நேற்று இறந்தவர்க்கும், இன்று இருப்பவர்க்கும் நாளை பிறப்பவர்க்கும் இடையில் உருவாகும் ஒப்பந்தமே வரலாறு-எட்மண்ட் பர்க்
சரித்திரம் என்பது சாதாரணமாக போகிற போக்கில் கதை போல் சொல்லப்படக்கூடாது அதற்கு தக்க சான்றுகள் வேண்டும் .ஓரிடத்தில் ஒரு சான்று கிடைத்தால் வேறொரு இடத்தில் அதை உறுதிப்படுத்துவதற்கான மற்றொரு சான்று கிடைக்க வேண்டும். கிடைத்த ஒன்று மட்டும் வைத்து சரித்திரத்தை எழுதிவிட முடியாது இவை அனைத்தையும் ஒன்றாக தேடி தொகுத்து ஓரிடத்தில் உட்கார்ந்து எழுதும்போது உண்டாகும் வியப்பிற்கு எல்லை இல்லை என்று ஆசிரியர் கூறுகிறார்
தமிழகத்தில் காந்தி வந்ததற்கான முதல் கட்டுரையில் 1896 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகிறார் காந்தி அச்சமயத்தில் தான் முதன்முறையாக தமிழகத்திற்கு வருகிறார் 1946 ஆம் ஆண்டு கடைசியாக தமிழகம் வருகிறார் .இந்த காலகட்டங்களுக்கு இடையில் 20 முறை தமிழகத்துக்கு வந்துள்ளார் 27 வயது இளைஞர் ஆக முதல்முறையாக தமிழ்நாட்டுக்கு வந்த போது அவர் பேசி முடித்ததும் பச்சை பிரசாரம் என்ற பிரசுரம் விற்பனை ஆயிற்று.
தென்னாப்பிரிக்காவில் தமிழர்கள் என்ன பாடு படுகிறார்கள் என்பதை குறித்த சிறு பிரசாரம் தான் அது. மகாத்மா என முதலில் அழைத்தவர் குறித்த செய்தியை படிக்கும்போது 1912 ஆம் ஆண்டு சுதேசமித்திரன் எதிரில் ஜி சுப்பிரமணிய ஐயர் ஒரு தலையங்கம் எழுதினார் தென் ஆப்பிரிக்க போராட்டத்தைப் பற்றி எழுதிவிட்டு கடைசியாக இந்த மகத்தான மனிதனை நாம் எப்படி அழைக்க வேண்டும் என்றால் மகாத்மா என்று தான் அழைக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார் ஆக காந்தியை மகாத்மா என்று அழைத்த முதல் மனிதன் தமிழன் தான் என்று தெரிய வருகிறது
இந்தியாவில் இரண்டு விதமான வரலாறுகள் இன்று ஆங்கிலேயரால் நேரடியாக எழுதப்பட்டது மற்றொன்று ஆங்கிலேய எதிர்ப்புணர்வு இல்லாத அடிமைப்பட்டு கிடப்பதை சுகம் என்று கொண்ட சிலரால் எழுதப்பட்டது.
இந்த கட்டுரைகளில் தென்னிந்தியாவை சேர்ந்த புரட்சியாளர்கள் பாளையக்காரர்கள் படித்த வீரமான போராட்டத்தையும் பூலித்தேவனின் போர்முறையையும் கட்டபொம்மன் திப்புசுல்தானின் வீரத்தையும் வீரபாண்டிய கட்டபொம்மனின் மனைவிக்கு பின் அவருடைய தம்பி ஊமைத்துரை செவத்தையாவின் வரலாற்று சிறப்புமிக்க சண்டைகள் பற்றியும் இதில் விவரித்துள்ளனர்
விடுலைப் போரில் போர்களும் போராட்டங்களும் மற்றும் முக்கியத்துவம் பெறவில்லை .தமிழ் சினிமாவும் பாடல்களும் முக்கிய இடத்தை பெற்றுள்ளன .1922 ஆம் ஆண்டில் கதரின் வெற்றி என்ற ஒரு நாடகம் நடத்தப்பட்டது .மதுரை பல்கலைக்கழக துணைவேந்தர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் மூத்த சகோதரன் தெ.பொ கிருஷ்ணசாமி பாவலர் என்ற மாபெரும் அறிஞர் முழு நேர பணியாக நாடகங்களை எழுத தொடங்கினார். வசனத்தின் மூலம் மறைமுகமான விடுதலைப் போராட்டத்தை மக்கள் மனதில் ஏற்படுத்த முடியும். அவ்வாறு அந்த நாடகம் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது .அந்த நாடகத்தில் ஒரு காட்சியில் கதர் சட்டை கொடுங்கள் இப்போதிருந்து நான் அணிந்து கொள்கிறேன். இனி எப்போதும் கதரை அணிவேன் என்று சபதம் ஏற்றுவார்கள். இதையெல்லாம் மறைமுகமாய் மக்கள் மனதில் விடுதலை வளர்ச்சி தோன்றின.
இவர்களைப் போல் தமிழ் நாடகத்தில் விடுதலை உணர்வை கூட்டியவர்கள் சாமிநாத சர்மா என் எஸ் கிருஷ்ணன் டி கே எஸ் சகோதரர்கள் மதுரகவி பாஸ்கரதாஸ் விஸ்வநாததாஸ் திரைப்படங்களில் தியாக பூமி கல்கியின் நாவல்கள் இயக்குனர் சுப்பிரமணியம் நாம் இருவர் திரைப்படத்தில் ஒரு காட்சிகள் ராட்டையில் நூல் நூற்பது போன்ற ஒரு காட்சி வைத்திருப்பார்கள். தாயின் மணிக்கொடி பாரீர் என்ற மகாகவியின் பாடலையும் மூவர்ணக் கொடி பறப்பது போன்ற ஒரு காட்சியும் இணைத்துவிட்டு ஓட்டினார்கள் அது மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது
திரைப்படத்தில் 1931 ஆம் ஆண்டில் தான் முதன்முறையாக பாரதியாரின் பாடல் நாடக மேடையில் ஒலித்தது. அதற்கு முன் எந்த ஒரு நாடகத்திலும் பாரதியின் பாடல் இடம் பெறவில்லை. டி.கே. சண்முகம் அவர்கள் தான் முதன் முதலில் திரைப்படத்தில் பாரதியார் பாடல் ஒளிபரப்பதற்கான ஏற்பாட்டை செய்தார். 1935 ஆம் ஆண்டு வெளிவந்த மேனகா என்ற திரைப்படம் தான் பாரதியார் பாடல் ஒலித்த முதல் திரைப்படம்
விடுதலைப் போரில் பெண் வீராங்கனைகள் குறித்த வரலாறு இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது இதில் மேடம் காமாவின் வாழ்க்கையை அறிந்து கொள்ளாமல் 75 ஆண்டுகால வரலாற்றை நாம் புரிந்து கொள்ள முடியாது. மேடம் காமா என்பவர் பம்பாயில் ஒரு பார்சி இனத்தில் பிறந்தவர். சிறிய வயதிலேயே விடுதலைப் போராட்ட உணர்வு மிக்கவர். ஆனாலும் இங்கிலாந்துக்கு சென்ற பிறகு அவருக்கு புதிய தொடர்புகள் ஏற்பட்டது. 1970 ஜெர்மனி நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் அவர் வந்தே மாதரம் என்ற முழக்கத்தை முன்வைத்து உரையாற்றினார் .அந்த மாநாட்டில் தான் உரையாற்றி முடித்த பிறகு ஒரு கொடியை அறிவிக்கிறார். அந்த கொடி தான் கொஞ்சம் பரிணாம வளர்ச்சி பெற்று ஆகஸ்ட் 15ஆம் தேதி நாம் இங்கு ஏற்றும் தேசிய கொடியாக வடிவம் பெற்றுள்ளது
சூரியன் இந்து மதத்தையும் சந்திரன் இஸ்லாம் மதத்தையும் குறிக்கும் வகையில் கொடியில் இரண்டு வண்ணங்களும் 8 மாகாணங்கள் இருந்ததால் 8 தாமரைகளும் இடம் பெற்றன.இவரைத் தொடர்ந்து கேப்டன் லட்சுமி கல்பனா சூர்யா சென் கடலூர் அஞ்சலை அம்மாள் லீலாவதி அம்மா கண்ணு ஆகஸ்ட் புரட்சியில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பெண்கள் பலரும் போராட்டத்தில் பங்கு கொண்டனர் .காளியம்மாள் என்ற பெண் காலை 10 மணிக்கு ராஜபாளையத்தில் உள்ள பெண்களை எல்லாம் அழைத்துக் கொண்டு அந்த ஆர்ப்பாட்டத்துக்கு கலந்து கொள்வதற்கு நடு நகர் பகுதிக்கு வந்து விட்டார். தன் ஒரு வயது குழந்தையை கையில் வைத்துக் கொண்டு மூவர்ண கொடியுடன் போராட்டக் களத்தில் சென்றது அனைவரின் வியப்பில் ஆழ்த்தியது.
சிறைச்சாலைகளைப் பற்றி பார்க்கும் போது அந்தமான் சிறைகளும் அதில் நிகழ்ந்த காட்சிகளையும் நாம் அறிவோம். அதேபோல் அலிப்பூர் சிலை என்பது முதலாம் உலக யுத்தத்தின் போது வெளிநாடுகளில் பிடிக்கப்பட்ட போர் கைதிகளை கொண்டு வந்து அடைப்பதற்காக உருவாக்கப்பட்ட பெரும் சிறை. கர்நாடகத்தில் பெல்லாரி மத்திய சிறையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அச்சிறையில் மூன்று அடி உயரத்துக்கு தார் பூசி இருப்பார்கள். எதற்காக என்றால் சுவற்றில் யாரும் சாய்ந்து ஓய்வெடுக்க கூடாது என்பதற்காக. மேலும் ஆங்காங்கே சிமெண்ட் உடைந்திருக்கும் .இரவு படுத்து இருக்கும் போது 100 ,200 மூட்டை பூச்சிகள் கொத்துக்கொத்தாக உடலில் வந்துவிழும். இவ்வாறு சிறைக் கொடுமைகளை பற்றியும் எவ்வாறெல்லாம் அந்த காலகட்டங்களில் சிறைகள் இருந்தன என்பதை பற்றியும் இந்த கட்டுரைகளில் தெரிய வருகிறது
இத்தகைய புத்தகங்களை படிக்கும் போதெல்லாம் இயல்பாகவே சுதந்திர உணர்வையும் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்கும் மதிப்பும் நமக்கு வருகிறது. நுகர்வு கலாச்சாரத்தின் முற்றுகையால் சுயநலமாகவே சிந்தித்து வாழ பழகி விட்டன. சமூக நேயத்துடன் சக மனிதர் தேர்வும் சுதந்திர காற்றை இந்த மண் என்றும் சுவாசிக்கவும் சென்ற தலைமுறை செய்திருக்கும் தியாகங்களை திரும்பிப் பார்க்கவும் சிறிதளவு பொது நலன் சார்ந்து அவர்களைப் போன்று செயல்படவும் நம்மை நிச்சயம் மாற்றியமைக்கும் என்று தமிழருவி மணியன் புகழாரம் சுற்றியுள்ளார் இந்த புத்தகத்திற்கு
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment