Wednesday, 12 April 2023

book-55


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-19
Book-55
Pages-927

குடியரசு 1931
பெரியாரின் பேச்சும் எழுத்தும்

காலை 6 மணிக்கு ஆரம்பித்த புத்தகம் பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் பணிக்கிடையில் தற்போது தான் வாசித்து முடித்தேன். அறிஞர்கள் கூறுவது போல எந்தவித மேற்கோளும் சொல்லாமல் பெரியாரின் பேச்சு தன்னுடைய உள்ளத்தில் இருந்து எழுந்தவை ஆகும். அவை வெறுமனே தப்பு என்றோ இல்லை என்றோ நாம் ஒதுக்கி விட முடியாது .அது குறித்து ஆராய்ந்து பார்தது நம்முடைய மனசாட்சியிடம் விட்டால் அது நிச்சயம் பெரியார் பக்கம் தான் சாயும். சிந்தித்துப் பேசக்கூடிய பேச்சு நம்மையும் சிந்திக்க வைக்கும் விதத்தில் இருப்பது தான் பெரியாரின் மிகப்பெரிய வெற்றி. அந்த வகையில் இந்த புத்தகமும் ஆங்காங்கே தத்துவம் ஆத்தமும் கருத்துக்களும் நையாண்டியும் பகுத்தறிவும் பல வகைகளில் உள்ளே மிளிர்கிறது.

1931 ஆம் ஆண்டிலேயே வட மாநிலங்களில் வர்ணாசிரம சுயராஜ்ய மாநாடுகளை தேச பக்தர்கள் நடத்தி அதில் மனு தர்மத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட செய்திகளை குடியரசு கண்டனத்துடன் பதிவு செய்துள்ளது. சுயமரியாதை இயக்கத்தின் ஆஸ்தியே மன உறுதி தான்.மார்க்ஸ் ஏங்கல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையை முதன்முதலாக தமிழில் வெளியிட்டது சுயமரியாதை இயக்கம் தான். அதில் பெரியார் எழுதிய முகவுரையில் "மற்ற நாடுகளில் ஒரு விஷயம் தான் முக்கியமாய் கருதப்படுகிறது. அதாவது முதலாளி தொழிலாளி. ஆனால் இந்தியாவிலோ மேல்ஜாதியார் கீழ் ஜாதியார் என்பது ஒன்று அதிகமாகவும் முதன்மையானதும் இருப்பதால் அது பணக்காரன் ஏழை தத்துவத்துக்கு கோட்டையாக இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகின்றது" என்கிறார்.

அறிவு இயக்கம் எனும் கட்டுரையில் மேல்நாடுகளில் வெகு தீவிரமாய் அறிவு இயக்க பிரச்சாரங்கள் முக்கியமாய் கருதப்படும் பரப்பப்படும் வருகின்றன. அந்த இயக்கத்தின் சார்பில் ஒன்றான லண்டனில் இருக்கும் அறிவு ஆராய்ச்சியாளர்களின் அபிப்பிராய பதிவு சங்கம் பல புத்தகங்கள் அச்சிட்டு அடித்து விளக்கி விநியோகிக்கிறது. அதில் அறிவு விளக்கம் என்னும் பெயரால் நடத்தப்பட்டு வந்த அந்த புத்தகத்தில் இந்திய சரித்திரத்தில் அதிசய தக்கபடி ஒரு பெரிய புத்துணர்ச்சி பிரபாகம் இரு கரையை புரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது சுயமரியாதை இயக்கம் சென்னை மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு மக்களால் எதிர்காலமாக மரியாதை செய்யப்பட்டு வந்த நம்பிக்கைகளுக்கும் முயற்சிகளுக்கும் அஸ்திவாரத்திலேயே ஆட்டம் ஏற்படும்படி செய்து விட்டது. இந்த இயக்கமானது இந்துக்களை நூற்றுக்கு 97 பேர் ஆதிக்கம் செலுத்தி வந்த பார்ப்பனியத்தின் மீது பாய்ந்து அதை கண்டிப்பதன் மூலமாக தொடங்கி பிறகு ஜாதி வித்தியாசத்தை கண்டிப்பதில் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதில் தனிப்பங்காற்றி வருகிறது என்று புகழாரம் சூட்டி இருக்கிறது.

புதிய கொள்கைகள் ஏன் என்பது ஒரு கேள்வியாகும்
அதற்கு பதில் என்னவென்றால் நமது முன்னேற்றத்திற்கு பழைய கொள்கைகள் பயன்படவில்லை என்பதோடு பழைய கொள்கைகளின் பயனாய் நாம் மிகுதியும் பின்னடைந்து விட்டோம் .நம்மை போன்ற மற்ற நாடுகள் எல்லாம் புதிய கொள்கைகளாலேயே வெகு வேகமாக முற்போக்கு அடைந்து வருகின்றன. நம்மிடம் வேறு எவ்விதமான நல்ல காரியங்களில் உறுதியான குணம் இல்லாவிட்டாலும் பழைய கொள்கைகளை குரங்கு பிடியாய் பிடித்துக் கொண்டிருப்பதிலும் புதிய கொள்கைகளிடம் துவேசமும் வெறுப்பும் காட்டுவதில் உலகத்தில் தாமே தலைசிறந்து விளங்குவதாக இருக்கிறோம். மற்ற நாடுகளெல்லாம் ஐரோப்பிய ஜப்பானியர் எல்லாம் புதிது புதிதாக சிந்திக்கின்றனர். புதிய கொள்கைகளின் அவசியத்திற்கு இன்னும் என்ன காரணம் உதாரணம் கேட்கிறீர்கள் என்பது எனக்கு விளங்கவில்லை. நம்முடைய சனாதான தர்மபிரச்சாரம் எல்லாம் பழைய கொள்கை பிரச்சாரம் இல்லாமல் வேறு என்ன பிரச்சாரம் என்று எண்ணுகிறீர்கள். இன்றைய முற்போக்குத்தனத்தை அப்போதே முன்னிறுத்துகிறார்

மொழி குறித்த அவரின் பார்வையில் இந்த உலகில் இந்திய மக்களுக்கு அவரவர் சொந்த மொழி தவிர வேறு மொழி தெரிய வேண்டும் என்றால் அது ஆங்கில மொழி என்று நாம் தைரியமாக சொல்லுவோம். உலகமே ஒரு கிராமம் என்று எண்ணிக் கொண்டிருந்த காலம் மலை ஏறிவிட்டது. தமிழ் மக்களுக்கு சுயமரியாதை என்பது பல துறைகளிலும் வர வேண்டி இருப்பதை ஹிந்தியின் ஆதிக்கம் இனியும் அதிகமாய் வலியுறுத்துகிறது என்று சொல்லுகிறோம் .தமிழ் மொழியின் பாண்டித்தியம் என்பதை இப்போது அநேகமாய் பார்ப்பனர்களிடமிருந்து தமிழ் மொழியின் சங்கத் தலைவர்கள் பார்ப்பனராய் இருக்கிறார்கள் என்பதோடு இவர்கள் ஹிந்தி படிக்க கட்டாயப்படுத்துகின்றார்கள் என்றால் தமிழ் மொழிக்காரர்களின் சுயமரியாதை எவ்வளவு என்பதை உணர்வீர்கள் ஆக

வட்டமேசை மாநாடு குறித்து ஒரு கட்டுரையில் மகாத்மா காந்தி வட்டமேசைக்கு போக மாட்டார் .ஒரு சமயம் போனாலும் அவர்தான் போவாரே ஒழிய மற்றவர்கள் போக மாட்டார்கள். மற்றவர்கள் போனாலும் மகாத்மா தான் காங்கிரஸ் பிரதிநிதியாக இருப்பார். வட்டமேஜை மாநாட்டில் ஒரு சமயம் கலந்து கொண்டாலும் காங்கிரஸ் கட்சி மாத்திரம் எடுத்துச் சொல்லிவிட்டு விவாதத்தில் கலந்து கொள்ள மாட்டார். பாதுகாப்பு விஷயத்தில் மாத்திரம் சிறிதும் விட்டுக் கொடுக்க மாட்டார். பிரிட்டிஷ் நன்மைக்காகவே என்று ஒரு சமயம் ஏதாவது விட்டுக் கொடுத்தாலும் ஐயோ பாவம் அவர்களும் நம்மை போல மனிதர்கள் தானே பிழைத்து போகட்டும் என்று கருதி தயாளத்தின் மீது விட்டுக் கொடுப்பாரே ஒழிய மிருக பலத்துக்கு பயந்து கொண்டு ஒரு காலம் விட்டுக் கொடுக்க மாட்டார் .இதனை எல்லாம் உத்தேசித்து அகிம்சையும் சத்தியாகிரகம் தோற்றுப் போகும் என்று ஒருநாளும் சந்தேகப்பட மாட்டார். ஏனெனில் அது கீதையின் ரகசியமாயும் கடவுள் செயலாளரும் தான் இருக்குமே ஒழிய ஒரு நாளும் மகாத்மா காந்தி செயலாக இருக்க முடியாது என்பது மாத்திரம் உறுதி என்று ஜோசியன் எனும் ஒரு கட்டுரையில் சொல்லியுள்ளார்.

சுயமரியாதை திருமணம் குறித்த பார்வையில் பெண்களுக்கு போதிய அறிவில்லாததாலும் அவர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்படாதொளாலும் முழு சுயமரியாதை முறையில் திருமணம் நடைபெற முடியவில்லை. எப்பொழுது மணமகனால் மணமகளுக்கு கழுத்தில் தாலி கட்டப்பட்டதோ அது அடிமைத்தனத்தை குறிப்பிடப்படுகிறது. நியாயமாகவே மணமகள் தாலி கட்டிக் கொள்ள தனது கழுத்தை அளித்து இருக்க கூடாது. இந்த விவகாரத்தில் புரோகித செலவு குறைக்கப்பட்ட இருப்பதாக நான் கருதுவது இல்லை .பொதுவாக விவாகத்தை கடவுளின் தலையில் சுமத்தி விடுகிறோம் என்ன செய்வது விவாகம் திடீரென கூடிவிட்டது, இருவரின் சம்மதத்தையும் வயதையும் கவனிக்காமல் நாம் செய்து வைக்கின்றோம். உனக்கு என்ன கவலை வந்தது என்று சொல்லியே பல மணங்கள் முடிக்கப்படுகிறது. பொருத்தம் சரியாக இருக்கிறதா என்று தான் கேட்டு தெரிந்து இருக்கிறோம். பணத்தை வாங்கிக் கொண்டு இருவருக்கும் பொருத்தம் இருப்பதாக கூறிவிட்டால் உடனே விவாகம் நடந்து விடுகிறது. இதே போல கிறிஸ்துவ இஸ்லாமிய திருமண முறைகளின் மூடநம்பிக்கைகளையும் சாடி சுயமரியாதை திருமணங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக தன்னுடைய சொற்பொழிவில் கூறியுள்ளார் மேலும் அதிக செலவில்லாமல் சடங்குகள் இன்றி தம்பதிகள் இருவரும் தங்களுடைய விவாதத்தை இரண்டு சாட்சிகளின் முன்னணியில் ரிஜிஸ்டர் செய்து கொள்வதே போதுமானது என்று தீர்வையும் சொல்லி இருக்கிறார்.

இதற்கு என்ன சொல்கிறீர்கள் எனும் கட்டுரையில் இன்றைய தினமே கண்டிப்பாக மாற்றித்தீர வேண்டிய முக்கிய விஷயங்களான ஒருவருக்கொருவர் மதங்களை மரியாதை செய்வது, பெண்களை எல்லா விஷயங்களிலும் சமத்துவமாய் நடத்துவது, தீண்டாமையை ஒழித்து விடுவது ஆகிய காரியங்களை செய்ய இப்பொழுதே நாம் நாள் முடியாவிட்டால் சுயராஜ்யம் வந்த பிறகு சுயராஜ்ய அரசாங்கத்தாருக்கு மக்களை நிர்பந்தப்படுத்தி மேற்கொண்ட சீர்திருத்தங்களை செய்வதற்கு சக்தி இல்லாமல் போய்விடும் என்று நான் தீர்க்கதரிசனமாக சொல்லுவேன். ஏனெனில் மக்கள் அபிப்ராயங்களுக்கு விரோதமாக ஒரு அரசை பெற வேண்டிய காரியத்தை செய்யவே முடியாது. பகுத்தறிவும் ஞானமும் கட்டுப்பாடுள்ள ஜனநாயகம் தான் சரியான ஜனநாயகம் ஆகும்

சுயமரியாதை இயக்கம் என்ன செய்து விட்டது சத்தியாகிரகம் செய்கிறார்களா என்று கேள்வி எழுப்புகின்றனர் சத்தியாகிரகம் என்ற பெயரில் விளம்பரம் கொடுத்து கோவில்களில் முன்பு குளங்களின் முன்பாக நிறுத்தி ஜெயிலுக்கு அனுப்பி அதற்கு தகுந்த விளம்பரங்களும் பாராட்டுகளும் போட்டு ஆடம்பரம் செய்வதல்ல. அவை இல்லாமலேயே சுயமரியாதை இயக்கம் நிறைய சாதித்து விட்டது. முதலாவது நமது மக்களுக்கு பெரும்பாலும் பகுத்தறிவு ஆராய்ச்சி என்பது தடை படுத்தப்பட்டு விட்டது. உணர்ச்சி இருந்தாலும் அதனை நேர்வழியில் பயன்படுத்த யோக்கியமோ நாணயமோ தன்மையோ இல்லாமல் இருக்கிறது. இந்த இரண்டு காரணங்களாலேயே பொதுநல வாழ்க்கையில் நாணயமாக இல்லாமல் இருப்பதுடன் மக்களை அறிய முடிவோ நன்றி செலுத்துவோ இல்லாமல் போய்விடுகிறது. இந்த இயக்கம் தோன்றிய காலம் முதல் அரசியல் பிரதிநிதித்துவ தேர்தலிலும் அரசியல் உத்தியோகத்திலும் வகுப்புவாரி உரிமை ஏற்பட வேண்டும் என்று கூப்பாடு போட்டு வந்ததாகும்.

வேகின்ற வீட்டிலே பிடுங்கினது வரை லாபம் என்பதாக பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய தேசியமும் பல்வேறு பொருளாதார நெருக்கடியை சரிப்படுத்த புதிய புதிய வரிகளை போடுவதில் ஆர்வமாய் இருக்கின்றார்கள். நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது என்றால் அது யாருக்கு ஏற்பட்டிருக்கிறது. எதனால் ஏற்பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏழை மக்கள் கிராமத்தில் ஆடு மாடு மேய்த்து செருப்பு தைத்து வாழ வேண்டியது. அவர்களது கையில் காசு சேரும்படியான வேலை எதுவும் செய்யக்கூடாது. மற்றும் பம்பாய் மேல் முதலாளிகளை பார்த்து பொறாமை படக்கூடாது. அவர்களைப் போல பணக்காரன் ஆவதற்கு எண்ணவும் கூடாது என்பதாக கொள்கை இருந்தால் இந்த அரசாங்கம் நடைபெற்று வருகிறது.. என்று தற்கால உண்மைகளை கூட அப்போதே சொல்லி இருப்பது தான் மிக ஆச்சரியமாய் இருக்கிறது

*தோலை கடித்து துருக்கியை கடித்து கடைசியாக வேட்டைக்கு தயாராகி விட்டது

*ஒரு குரங்கு கள்ளைக் குடித்து அதை தேளும் கடித்துவிட்டால் எப்படி அது தலைகால் தெரியாமல் கண்டதை எல்லாம் கடிக்குமோ அது போலத்தான் காவல்துறை இருக்கிறது சகோதரர்களே 

இதுபோல் நூல் முழுக்க மக்களின் குரலாக சமூகத்தின் குரலாக அன்றைய விடுதலையில் என்னென்ன தேவை இருக்கிறது என்பதனையும் ஒவ்வொரு மேடையிலும் கட்டுரைகளிலும் தன்னுடைய இயல்பான சொற்களில் ஆழமான அர்த்தத்துடன் ஒவ்வொரு பகுதியும் இருக்கிறது. இதில் நான் ரசித்த பகுதிகளை மட்டும் குறித்துள்ளேன். இது போன்ற ஏராளமான கருத்துக்கள் சிந்தனை செய்துள்ள பக்கங்கள் இருக்கின்றன 

தொடர்ந்து வாசிப்போம் 
தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment