Wednesday, 5 April 2023

Book-26


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-12
Book-26
Pages-173

குமாயுன் புலிகள்
-ஜிம் கார்பெட்

எல்லா மனிதர்களுமே உள்ளத்தில் வேட்டையாடிகள்தான்.ஆனால் பத்திரமாக தங்கள் வீட்டில் இருந்தபடியே,வீட்டுச் செயல்களின் இன்பத்திலும் பிரதாபத்திலும் பங்கு கொள்ள விரும்புகிறார்கள்
-ஜிம் கார்பெட்

குமாயுன் மலைகளில் மக்களை கொல்லும் புலிகளை வேட்டையாடிய ஜிம் கார்பெட் (முதல் புலி முருகன்) வேட்டைக்காரருக்கு இருக்க வேண்டியவை பற்றி சொல்லியிருக்கிறார்.சமீபத்தில் உடுமலைப் பேட்டையில் சிறுத்தை ஒன்று வந்த போது நாயை அடிப்பது போல கல் எடுத்து வீசியிருக்கிறார் ஒருவர். ஒரே செகண்டில் அடித்துப் போட்டுவிட்டது. வீட்டு விலங்குகள் போல் காட்டு விலங்குகளை நினைப்பது அறியாமை. உண்மையில் வேட்டையாட முன் யோசனை, தயாரிப்பு ,குறிபார்க்கும் யுக்தி, பொறுமை அனைத்தும் தேவை.வேங்கைக்கு மனிதர்கள் இரையல்ல.காயம் மற்றும் முதுமை காரணமாக ஆட்கொல்லியாக மாறுகிறது.

தாபிதுரா, துனாகட் பகுதிக்கிடையில் ஆட்கொல்லி புலி இருப்பதாய் தகவல்.வேட்டைக்காரனுக்கு காலம் உயிர் போன்றது. உடனே கிளம்பினேன்.பாம்பைப்போலத்தான் புலியை சாகடித்துவிட வேண்டும் அல்லது துரத்திவிட வேண்டும்.
ஏனெனில் ஆட்கொழி இருந்தால் பயத்தில் மக்கள் வீட்டில் இருந்தனர்.

பல நாள் தேடினோம். நாங்கள் செல்வதகு சிலமணி நேரம் முன் புலி போயிருக்கும்.சில நூறு அடிக்கு முன்நின்று சுட்டேன். நூத்துக்கு சிலமுறை பலிக்கும். இப்போது புலி இறந்த செய்தி அறிந்தேன. மக்களுக்கு மகிழ்ச்சி. பல சாலைகள் திற்க்கப்பட்டன். எனக்கும் மகிழ்ச்சி ஆனால் உட்னே கிளம்பவில்லை. சிறுத்தை தொந்தரவுமிருந்ததால் பயணத்தை தள்ளிவைத்துவிட்டேன்.

சில காலம் கழித்து ராபின் என்ற நாயை வளர்த்தேன். வேட்டைக்கு போகும்போது அழைத்துச்செல்வேன்.
ஒருமுறை சிறுத்தைப்புலி ஒன்று நாயை கைக்கெட்டும் தூரம் நெருங்கியது. ஹேய் என்று கத்தியவுடன் 100 மீட்டர் இடைவெளியில் வேகத்துடன் ஓடியது.சிறுத்தை ஏனோ புதரில் மறைந்தது.மீண்டும் ஒரு முறை செல்லும்போது "சிறுத்தை என்னைக் கடந்து சென்றது , ரைஃபிளை இடுப்பிலே முட்டுக் கொடுத்துக்கொண்டு , சிறுத்தையின் வயிற்றிலே ஒரு பக்கத்தில் இரண்டாவது குண்டைச் செலுத்தினேன்.இறந்துவிட்டது.

இன்னொருமுறை கண்டா ஆட்கொல்லி புலியை கொன்ற கிராமத்தில் ஒரு கதை கேள்விபட்டேன்.காட்டுவழியில் ராணுவ வீரனும் அவர் மகனும்
செல்லும் போது மகனை தொலைத்திவிட்டான். அது புலி நடமாட்ட பகுதி.இரு நாள் தேடியும் இறுதியில் புலி மீதம் வைத்த மகனை புதைத்தார். இப்போது அந்த புலியை கொன்ற போது அதனருகில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதனை பழி வாங்கியதாக எண்ணினார்.

*பட்டப்பகலில் புலியும் இரவில் சிறுத்தையும் ஆட்கொல்லி யாக மாறுகின்றன.மனிதர்கள் மீதான பயமே சிறுத்தை இரவில் வேட்டையாடுகிறது.

*பையனுக்கும் நாய்க்குட்டிக்கும் எவ்வளவு சீக்கிரம் பயிற்சியை துவங்குகிறோமோ அவ்வளவு சீக்கிரம் நல்லது

*மேலிருந்து கீழே சுடுவதை விட தரையிலிருந்து தரையில் உள உயிரை சுடுவதே சிறந்தது

*காயம்பட்ட ஒரு விலங்கு , சிறுத்தையாயிருந்தாலும் சரி , வேங்கையாயிருந்தாலும் சரி , நேரே வந்து பாய்ந்து , தன் பாய்ச்சல் பலிக்காவிட்டால் , அப்படியே போய்க்கொண்டே தான் இருக்கும் ; மீண்டும் தன்னை யாரும் தொந்தரவு செய்யாத வரையில் , அது திரும்பி வந்து தாக்குவதே இல்லை

*சிறுத்தையின் தோலை உரிக்கும் வரைக்கும் அது செத்ததாய் நம்ப முடியாது" 

*ஆட்கொல்லி புலி நடமாடுகிற இடத்தில் நடக்கும் ஒருவன்,மெதுவாக நடக்க வேண்டும். ஏனெனில் அவன் நடக்கிற காட்டிலோ, பாறையோ, பள்ளமோ இருந்தாலும் அதில் அவன் சாவு மறைந்திருக்கக்கூடும்

*இரையை திறந்தவெளியில் இருந்து வேங்கை இல்லாமல் இருந்தால் ஆபத்து.அது அருகில் தான் எங்கேயோ இருக்கும்

*ஒரு கடமானை 2 நாளில், ஒரு எருமை 3 நாளில் தின்றுவிடும்

*பத்திரிக்கை கார்ட்டூன்:
ஒரு வேட்டையாடி சிங்கத்தை தேடி பாறை மீது ஏறுகிறான். மேலே ஏறி முடித்தவுடன் சிங்கம் ஆ என் வாய்பிளந்து நிற்கிறது.

கீழுள்ள வாசகம்:சிங்கத்தை தேடிக் கொண்டு நீ போகும்போது, அதை நீ பார்க்க விரும்புகிறாயா என்று நீ நிச்சயம் செய்து கொண்டு போ.

*சிறுத்தைகளுக்கு முள்ளம்பன்றி என்றால் ஆசை அவை வேங்கை போல் முள்ளால் குத்து வாங்குவதில்லை.தலையை பிடித்து கொன்றுவிடுகிறது

*முன்னங்கால் பாதசுவடுக்கும் பின்னங்கால் பாத சுவடுக்கும் உள்ள இடைவெளி வைத்து அதன் வேகத்தை கணக்கிடலாம்

இறுதியில் வேட்டையாடிகளுக்கு அறிவுரை சொல்கிறார்.துப்பாக்கி எடுத்து சுடுவதைவிட கேமரா மூலம் அதனை போட்டோ எடுத்தால் செலவு குறைவு .ஏனெனில் விலங்குகளின் எண்ணிக்கையை குறைந்து கொண்டே வருகிறது. நீங்கள் வேட்டையாடினால் வேங்கையின் தோல்கள் சில நாட்களில் உதிர்ந்திருக்கும்.அதையே புகைப்படமாக எடுத்து வைத்திருந்தால் காலத்துக்கும் அது உங்களுக்கு சந்தோஷத்தை தரும். தன்னுடைய கேமராவில் புகைப்படம் எடுத்த அனுபவத்தையும் பின் இணைப்பில் கொடுத்துள்ளார்

 தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment