Sunday, 2 April 2023

Book-19


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-9
Book-19
Pages-573

காங்கிரஸ் மகாசபை சரித்திரம் 
-டாக்டர் பட்டாபி சீதாராமையா

நீண்ட நாள் வாங்க வேண்டும் என்று நினைத்த புத்தகம் இந்த ஆண்டு திருப்பூர் புத்தகத் திருவிழாவில் வாங்கினேன். காங்கிரஸின் வரலாறு என்பது பாடப் புத்தகங்களில் படிப்பது போல் டீஸ்பூன் அளவு வரலாறு அல்ல. அது கடல் போல் பிரம்மாண்டமானது பிரம்மிக்க வைத்தது. ஏனெனில் ஒவ்வொரு வரலாற்று நிகழ்வும் காங்கிரஸின் முன்னெடுப்பின் மூலமாக அப்போது நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விடுமுறையில் நிகழும் காங்கிரஸ் கூட்டத்தை பார்த்து அப்போது முதல் முறையாக கலந்து கொண்ட காந்தி ஒவ்வொரு ஆண்டும் பேசி கூடி கலையும் ஒரு சம்பிரதாய கூட்டம் என்று அதனை விமர்சித்தார். ஆனால் பின்னாளில் ஒரே ஒருமுறை மட்டும் காந்தி அவர்கள் காங்கிரசுக்கு தலைவராய் இருந்திருக்கிறார் அவரின் வழிகாட்டுதலில் காங்கிரஸின் இயங்கி இருக்கிறது

ஆறு பாகங்கள் உள்ள இந்த புத்தகத்தில் முதல் பாகத்தில் காங்கிரஸின் அத்தியாயமும் இரண்டாம் பாகத்தில் 1920 வரையிலான காலகட்டங்களும் மூன்றாம் பாகத்தில் 1920 முதல் சுதந்திரப் போர் வரையிலும் நான்கு ஐந்தாம்  பாகத்தில் சுதந்திரப் போர் மற்றும் 1931 ஆம் வருட ஒப்பந்தம் முடிவும் இறுதி பாகத்தில் சிம்லா சட்டம் 1935 ஆம் ஆண்டு பதவியேற்பு வரையிலான நிகழ்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. டாக்டர் ராஜேந்திர பிரசாத் முன்னுரை எழுதிய புத்தகம் 1935 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது.

காங்கிரஸ் உதயமானதன் நோக்கம் பல்வேறு சட்டங்களும் பிரிட்டிஷ் அவர்களின் கொடுமை செய்யும் உயர் பதவி மறுப்பு பத்திரிகை தடை சட்டம் போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கும்போது.. சுரேந்திரநாத் பானர்ஜி தேசத்தின் பிரச்சனையை சர்க்கார்க்கு எடுத்துரைக்க இந்தியர்கள் ஒருமிக்க கூடிய ஒரு ஸ்தாபனம் தேவை என எடுத்துக் காட்டினார். 1881 ஆம் ஆண்டு சென்னை மாகாண சபை நிறுவப்பட்டது. பம்பாயிலும் அதேபோல் சபை நிறுவப்பட்டது. 1884 சென்னையில் கூடிய பிரம்ம ஞான சங்கம் மகா நாட்டுக்கு பின் நடைபெற்ற ஒரு அந்தரங்க கூட்டத்தில் இந்த முயற்சிகளின் காரணமாக 1885 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் பிறந்தது.

கிறிஸ்மஸ் விடுமுறை நாட்களில் பூனா நகரத்தில் காலரா நோய் கண்டதால் மாநாட்டை பம்பாயில் நடத்த கூட்டணி தீர்மானித்து. 1885 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி கோகுல்தாஸ் தேஜ்பால் சமஸ்கிருத கல்லூரியில் நடைபெற்றது .பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அடுத்த மாநாட்டை டிசம்பர் 28ஆம் தேதி என்று கல்கத்தாவில் கூட்டுவதாக தீர்மானித்து கலைந்தனர். இந்தியர்களுக்கு காமன் சபையில் பிரதிநிதித்துவம் வழங்கவும் இந்தியாவுக்கு மற்ற குடியேற்ற நாடுகளைப் போலவே சுயாட்சி அந்தஸ்து அளிக்க வேண்டும் என கூறப்பட்டது .ஏற்பட்ட ஏமாற்றத்தை தொடர்ந்து எதிர்ப்பும் இல்லாமல் போராட்டமும் இல்லாமல் அமைதி வழியிலேயே சென்று கொண்டிருந்தது.

1913 நடந்த கராச்சி மகாநாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமை லட்சியம் ஒன்றிணையே கவனத்தை செலுத்த வேண்டும். நமது தாய்நாடு ஹிந்துக்கள் நாடல்ல, முகமதியர்கள் தேசம் மட்டுமல்ல ,ஆங்கிலோ இந்தியர்களுடையது அல்ல, ஐரோப்பியர் நாடாக அல்ல இந்தியா. இவர்கள் எல்லோருடைய நாடுகளாகும். கடந்த காலத்தில் ஏதேனும் மனக்கசப்புகள் இருந்தால் மறந்து விடுவோம். வருங்காலத்தில் ஒன்றாக பயணிப்போம் என்று பூபேந்திரநாத் பாசு வீர மொழிகளை புகன்றார். எனினும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அளிப்பது என்பது இந்திய அரசியல் வாழ்க்கையில் வேறூன்றிவிட்டது. இந்த பெருத்த இடர் தேச மக்களின் வாழ்க்கையில் ஒரு புண்ணாக அன்று முதல் இன்று வரை உபத்திரவித்து கொண்டு தான் இருக்கிறது.
வங்கப் பிரிவினையோடு முதல் பாகம் நிறைவு பெறுகிறது

அலகாபாத்தில் நடந்த காங்கிரசு மாநாட்டுக்கு அநேக இடையூறுகள் ஏற்பட்டன .பந்தல் அமைப்பதற்கு இடம் கொடுக்கவில்லை. அந்த உத்தரவை மீறி சென்னை காங்கிரசு சேர்ந்த ஒருவர் 20,000 ஜாமீனாக கட்ட வேண்டிய நிலை நேரிட்டது என ஸ்ரீமதி பெசன்ட் தமது புத்தகத்தின் குறிப்பிட்டு இருக்கிறார்

மாண்டகு ஜெம்ஸ் போர்டு அறிக்கையை தொடர்ந்து இந்தியாவின் சார்பில் கொடுக்கப்பட்ட மறுப்பு அறிக்கையும் தேவைகளையும் காந்தியின் அரசியல் பிரவேசமும் அமிர்தசரஸ் காங்கிரஸின் வைஸ்ராய் நீக்க ஏற்பட்ட தீர்மானத்தையும் இரண்டாம் பாகத்தில் சொல்லி உள்ளனர். 1920 ஆம் ஆண்டு இந்தியாவின் சரித்திரத்தில் இது முக்கியமான காலம் என்று கூறி ஒத்துழையாமை இயக்கம், கிலாபத் இயக்க தோற்றம் ஆகியவற்றையும் அதன் விளைவாக ஏற்பட்ட போராட்டங்கள் தீர்மானங்கள் ஹண்டர் கமிஷன் அறிக்கை நாகபுரி காங்கிரஸ் தீர்மானம் அடக்குமுறை சம்பவம், மாப்பிள்ளை கழகம் என பல்வேறு போராட்டங்களை அந்த காலகட்டம் விளக்குகிறது. சௌரி சவுரா நிகழ்ச்சியின் மூலம் காந்திஜியின் சிறை தண்டனை..1924ல் எரவாடா சிறையில் இருந்த போது காந்திஜிக்கு ஏற்பட்ட குடல் இறக்க அறுவை சிகிச்ச
 சுயராஜ்ய கட்சியினரின் அறிக்கையில் முரண்பாடுகள் என சுயராஜ் கட்சியின் செயல்பாடுகள் போன்றவை இதில் சொல்லப்பட்டுள்ளன

லாகூர் காங்கிரசுக்கு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட வகையில் வசீகரமாக இருந்ததாக சொல்கிறார் 10 மாகணங்கள் காந்தியின் பெயரைச் சொல்ல, ஐந்து மாகாணங்கள் வல்லபாய் பட்டேலின் பெயரைச் சொல்ல, மூன்று மாகாணங்கள் நேருவை தேர்வு செய்ய சொல்ல.. ஆகவே காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார் .ஆனால் அவரால் பதவி வகிக்க விரும்பாமல் ராஜினாமா செய்து விட்டார். வேறொருவர் தேர்வு செய்யும் பொறுப்பு .கூடிய கூட்டத்தில் நேரு தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்தி இரவின் ஒப்பந்தம் சுதந்திர தீர்மானம் 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்கள் உப்பு சத்தியாகிரகம் நாடெங்கும் உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் விளைவுகள் வட்டமேசை மாநாடு காந்தி கலந்து கொண்டது இப்படி பல்வேறு நிகழ்வுகள் வரிசையாக காங்கிரஸின் பார்வையில் அருகில் இருந்து நடந்தது போல ஒவ்வொன்றையும் நுணுகி ஆராய்ந்து எழுதியுள்ளார்

இந்திய சட்டசபை 1935 ஆம் ஆண்டு கூடிய போது பல விவாதங்கள் நடைபெற்றன .இந்தியாவிலேயே ரயில் இன்ஜின்கள் செய்ய வேண்டும் என்று ஸ்ரீசாமி வெங்கடாசலம் கொண்டு வந்த தீர்மானத்தை சர்க்கார் எதிர்த்து தோல்வி பெற வைத்தனர். எல்லைப்புறத்தில் நிரபராதிகளாக இருக்கும் பெண்கள் குழந்தைகள் மீது குண்டுகள் போடப்படுவதை கண்டித்து கான்சாகிப் கொண்டு வந்த பிரச்சனைக்கு சட்டசபை ஆதரவளித்தது. சர்க்கார் கிரிமினல் திருத்தச் சட்ட மசோதாவை பிரசுரித்தார்கள் ஆனால் காங்கிரஸின் எதிர்ப்பு காரணமாக தோற்கடிக்கப்பட்டது.

இயக்கம் தோன்றிய 50 ஆண்டுகளுக்குள் நடந்த நிகழ்வுகளையும் போராட்டங்களையும் காங்கிரஸ் சந்தித்த பிரச்சனைகளையும் புத்தகம் விவரிக்கிறது .வரலாற்றை தெரிந்து கொள்வதற்கும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்வதற்கும் இது போன்ற புத்தகங்கள் மிகவும் பயனாக இருக்கும்.

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment