*தமிழ் ஹைக்கூ 1⃣0⃣1⃣ ஆண்டு*
பகுதி - 79
தமிழ் ஹைக்கூக்களில் முரண்கள்..
இரவின் சோக இசை
தூங்குமூஞ்சு மரத்திலிருந்து
தூங்காத குயில் கிளையில்
- நிர்மலா சுரேஷ்
🌹
யானை கட்டி போரடித்த தமிழன்
கையில் - யானை காட்டி
பிச்சையெடுத்த காசு
- அறிவுமணி
🌹
வான் அழுகிறது
மண் சிரிக்கிறது
என்ன அழகான முரண்
- கழனியூரான்
🌹
செவிடன் இறந்த போதும்
தலைமாட்டில்
ஒப்பாரி
- அவைநாயகன்
🌹
அடர்ந்த காட்டின் இறுக்கம்
ஒரு குருவியின் வரவால்
கலகலப்புற்றது
- அமுதபாரதி
முரண்கள் நாளையும் தொடரும்...
*பெருநதி 2018 அக்டோபர் 16 வரை உங்களை நனைக்கும்*
ஸ்ரீதர்
🍀 திண்டுக்கல் 🍀
No comments:
Post a Comment