Saturday, 10 February 2018

சுஜய்

கனவு
-------------
இன்றதிகாலை ஒரு கனவு 
மிகவும் பரிச்சயமுள்ள கனவு 
சொல் வழக்கும் புதிதல்ல 
அந்த இசை கேட்டுச் சலித்தவை 
விருப்பமுள்ள இசைஞன் ஒருவனின் 
இரண்டாவது புல்லாங்குழல்
பலவருடப் படுக்கை
கவிதையின் புளித்த சொற்கள் 
கிளைமுறிக்கும் காற்றின் குறிப்பிட்ட திசை 
காலத்திற்கும் நிலைத்துப்போன 
குழந்தைக்கான நிலா பாடல் 
இன்னொரு மார்கழியில் பூத்திருக்கும் வாசல் 
கடவுள்களில்
மற்றுமொரு சிலை
மரம் கூட்டிற்காகவும்
கூடு பறவைக்காகவும்
காத்திருக்கும்
மாதவமும் கூட

-சுஜய் ரகு-

No comments:

Post a Comment