Saturday, 10 February 2018

மணி

கனவின் விடுதலை
-மணி

சிறு வயதில் சினிமாவுக்கு போகலாம் என்றால் ஒரே குஷிதான்.சைக்கிள் பார்கம்பி சீட்டில் நானும் பின்னால் என் அக்காவும் அமர்ந்து சினிமாவுக்கு போவோம்.சினிமா என் அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் நுணுக்கமான சீன் களை சொல்லுவார்.அப்பா சிறுவயதில் வீட்டை விட்டு ஓடிவந்து ஏவிஎம்,ஜெமினியில் வேலை பார்த்தவர்.பின்பு பத்து வருடம் கழித்துதான் சொந்த ஊர் திரும்பியதால் எல்லா சினிமாவும் பார்க்க வைப்பார்.

வீட்டில் ஜெமினி சினிமா, சினிமா எக்ஸ்பிரஸ் வாங்குவோம்.90களில் டைனோரா டிவி வாங்கிவிட்டோம். அப்போது அப்பா பார்க்கச் சொன்னது அந்தநாள் படம். முதல்காட்சியிலேயே சிவாஜி சுட்டுக்கொல்லப்பட்டு பின் துப்பறியும் காட்சிகள்.சுவாரஸ்யமானது.பின்பு பொம்மை படம். வீணை எஸ்.பாலச்சந்தர் எடுத்து இறுதிக்காட்சியில் எல்லா டெக்னீசியனும்.அறிமுகமாவது புதுமை எனச்சொன்னார்.

96ல் தினகரன் தீபாவளி மலர் 95ரூபாய்.4புத்தகம் இலவசம். அதில்தான் திரை உலகில் ருத்ரைய்யா, ராஜேஸ்வர், ஆபாவாணன்,போன்ற திரைப்பட கல்லூரி மாணவர்கள் படங்களை நுணுக்கமாய் பதிவிட்டிருந்தாங்க. பின்பு விஜய் டிவி முதலில் ஈகிள் டிவியாய் இருந்தபோது ஒருநாளைக்கு 4படம் பார்ப்பேன்.7ம் வகுப்பு முதல் 10ம் வகுப்புவரை சினிமாதான்.ஏறக்குறைய தமிழில் வெளிவந்த முக்கால்வாசி படம் பார்த்துவிட்டேன்.துலாபாரம் படத்தையெல்லாம் பார்த்தேன்.
பி.யு.சின்னப்பாவின் அசோக்குமார் கூட

பீம்சிங் உதவியாளர்கள் திருமலை-மகாலிங்கம் ஜோடி.காமெடி கட்டாயம் இருக்கும்.மதறாஸ் டூ பாண்டிச்சேரி பிடித்துபோனதால் அவர்களின் மூன்றுபடங்கள், மாடர்ன் தியேட்டர்ஸ் ஜெய்சங்கர் காம்போ அனைத்தும்..

80s ஏறக்குறைய முக்கால்வாசிப்படங்கள், 90லிருந்து அனைத்து படங்களும். தெலுங்கு டப்பிங் படம் ஓடியதால் பின்பு அது. வைஜெயந்தி ஐபிஎஸ், எங்கடா உங்க எம்.எல்.ஏ, இதுதாண்டா போலிஸ்,மீசைக்காரன். பிறந்த வீட்டு பட்டுப்புடவை (மெகா ஹிட் படம்)
மலையாளத்தில் ப்ரியதர்சன் மை ஃபேவரைட்.கோபுர வாசலிலே எதார்த்த காமெடி.

இப்போதும் கிராமத்து நண்பர்கள் பஸ்ஸில் சினிமாதான் பார்ப்பாங்க. பாட்டு வைத்தால் கூட பிடிக்காது. சினிமாபார்த்து நகை,அழுகை,இளிவரல் என அனைத்து நவரசத்தையும் காட்ட முயற்சிப்பாங்க.

இப்போது சினிமா பார்ப்பது  வீக் எண் டை கொண்டாடுவதுபோல் ஆகிடுச்சு.கரகாட்டக்காரன் 100வது நாளில் ராமராஜனை பார்க்க டைமண்ட் தியேட்டரில் கூட்டம் அள்ளியது.ஏதோ வானத்து தேவதூதர் மாதிரி ஒரு மரியாதை. இப்போது ட்விட்டர் மூலம் ஹாய் சொல்ல முடிகிறது. அருகில் வந்துவிட்டதால் பிரம்மிப்பு குறைந்துவிட்டது.

அந்த இடைவெளியுடன் சினிமாவை புரிந்து கொள்ள முயற்சித்தது இன்பத்திலும் இன்பம்.அந்த பிரமிப்பை அருகில் சென்று பார்த்துவிட்டதால் இருள் விலகிவிட்டது.ஆனாலும் அந்த இருளுடன் சினிமாவை பார்த்த நாட்கள் ஒளிமயமானது

கண் விழித்தபடியே ஒரே கனவை ஆயிரம்பேர் காண்பதுதான் சினிமா
-பெர்டோலூசி

-மணிகண்டபிரபு

No comments:

Post a Comment