பூமிக்கடியில் ஒரு பயணம்
*மணி
வழக்கமாய் சென்னை மெட்ரோ ரயிலில் போறவங்க செல்ஃபி தான் போடுவாங்க.. நேற்றுதான் அதில் பயணித்தேன்.
தற்போது நேருபூங்கா முதல் திரிசூலம் வரை தூரத்தை அதிகப்படுத்தியிருக்காங்க. நேற்று அமைந்தகரை முதல் திரிசூலம் வரை நானும் நண்பர் பாலாஜியும் பயணித்தோம். அண்டர்கிரவுண்டில் போய் காத்திருந்தோம். புது உலகமாய் தெரிந்தது.பளிங்கு தரை, ஐ.சி.யு.வார்டு போல் அமைதி.. ஏடிஎம் வடிவில் டிக்கெட் வாங்கினோம்.60ரூபாய். சீசன் டிக்கெட் வாங்கினால் சலுகை உள்ளது.
அந்த ஏடிஎம் போல் டிக்கெட்டை டச் ஸ்கீரினில் வைத்தால்தான் உள்ளே நுழைய முடியும். ஒவ்வொரு பேக் கும் ஸ்கேன் செய்கிறார்கள். விமானம் நிலையம் போல..
பிறகு காத்திருந்த போது ஒவ்வொரு நிமிடமும் ரயில் எங்குள்ளது என மானிடரில் தெரிகொறது.அதிகபட்சம் 7நிமிடம் முதல் 15நிமிடம் வரை காத்திருக்க வேண்டும். பின்பு எல்லா கதவுகளும் லிப்ட் ஓபன் ஆவதுபோல் திறந்து உள்ளே செல்லலாம். முழுவதும் ஏ.சி.
பூமிக்கடியிலிருந்து பாலம் ஏறுவது போல் ஏறி, மேலே செல்கிறது.சென்னையின் டிராபிக்கை மேலிருந்து "உங்களையெல்லாம் பார்த்தா பாவமா இருக்குனு வடிவேல் மாடுலேஷனில் பார்க்கலாம். கோயம்பேடு பஸ் நிலையத்தில் இறங்கலாம். திரிசூலம் நிறுத்தம் வந்தவுடன் இறங்கி வெளியே வரும்போது அந்த கார்டை அதே போல் டச் ஸ்கீரினில் ஸ்கேன் செய்தே நம்மை விடுவிக்கிறது.
#பாமரத்தனமான கேள்வி
*கார்டு தொலைந்தால் கண்டிப்பா ஃபைன்
*ரயிலில் ஆபத்து வந்தால் சங்கிலி இருக்கா..
இருப்பது மாதிரிதான் தெரியுது. சிவப்பு திருகு போல் உள்ளது.
*ஆபத்து வந்தால் போன் நெம்பர் இருக்கு
*ஒரு ரூபாய் காசு வச்சு இன்னும் கிறுக்கததால் வண்டி சர்வீஸ் விட்ட புது பைக் மாதிரிதான் இருக்கு
*முன்னாடி உள்ள பெட்டி.. வளைவில் மினி பஸ் மாதிரி வளையுது.அப்ப மட்டும் நம்ம கடைசி ஆசை ஃபளாஸ் நியூஸ் மாதிரி ட்ரால் ஆகுது
*பக்கத்திலிருப்பவங்களை பார்த்தால் பொறந்ததே மெட்ரோ ல தாண்டா என் சிப்ஸ் னு பார்ப்பாங்க
ஒருவாட்டி போங்க..சென்னையின் இன்னொரு பேசியல் செய்த முகத்தை பார்க்கலாம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment