உன்னை பார்த்த பின்பு நானாகயில்லை
உன் பார்வையில் நான் அழகானேன்
எனக்குள்ளே புது உணர்வை அளித்தவன்
என்னுள் உள்ள அனைத்து அன்பையும் அள்ளியவன்
துள்ளுகிறேன் நீ மகிழ்ச்சியில் இருந்தால்
துடிக்கிறேன் நீ வலியில் அழுதால்
உனக்காகவே பெரிய பொட்டு வைத்தேன்
உனக்காகவே கொண்டை போடுவதில்லை
உனக்காகவே அழகாய் உலவிக் கொண்டிருந்தேன் வீட்டிலும்
உன்னை தவிர வேறு காட்சியில்லை
உலகமே நீ ஆனாய் எனக்கு
இப்படி ஒவ்வொரு நொடியும் வாழ்கிறேன் உனக்காக
எப்படி மனம் வந்தது என்னை முதியோர் இல்லத்தில் விட....
No comments:
Post a Comment