ஒருவன் புதிதாக ஒரு வீட்டிற்குக்குடி வருகிறான். எதிர்த்த வீட்டில் கணவன் மனைவி. அவர்களுக்குள் சண்டை அடிக்கடி நிகழ்கிறது. இவன் வந்தபோது உதவி எதுவென்றாலும் கேளுங்கள் என்று சொன்னவன்தான் எதிர்வீட்டுக்காரன். ஒருநாள் மனைவியைப் பிடித்து அடிக்கிறான். அவள் வலி தாங்க முடியாது கத்துகிறான். அடி நிற்பதாக இல்லை. புதிதாக வந்தவன் பொறுக்கமுடியாமல் எதிர்வீட்டுக் கதவைத் தட்டுகிறான். கதவைத் திறந்த கணவன் நீ யார் எங்கள் பிரச்சனையில் தலையிட என்று முகத்தில் அறைந்ததுபோல் திட்டுகிறான். என் மனைவியை அடிப்பேன் உதைப்பேன் உனக்கு எந்த உரிமையும் கிடையாது பேசாமல் போ என்று கத்துகிறான். புதிதாகக் குடிவந்த எழுத்தாளன் இனியொரு தடவை அடித்தால் நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டேன். மனைவியைக் கைநீட்டி அடிக்கிறாயே நீ என்ன மனுஷனா என்று கேட்கிறான். மனைவியை அடித்தால் திருப்பி அடிக்கும் வேகத்தில் புதியவன் நிற்கிறான். அந்தப் பெண் இது எங்கள் குடும்பப் பிரச்சனை நீங்கள் தலையிட உரிமையில்லை போய்விடுங்கள் என கடுமையாகப் பேசுகிறாள். இந்தப்பேச்சை எதிர்கொள்ள முடியாமல் தன் அறைக்குப் போய்விடுகிறான். கணவன், இவன் யாருடி உனக்கு சப்போர்ட்பண்ண வந்திருக்கிறான் என ஏசுகிறான். சண்டை ஓய்கிறது. வெளியே சென்ற கணவன் வரவில்லை. மாலைபோய் இருள் வருகிறது. கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டு புதிதாக வந்தவன் கதவைத் திறக்கிறான். எதிர்வீட்டுப் பெண். உள்ளே நுழைந்து இந்த வெளிச்சத்தை அமர்ந்துங்களேன் என்கிறாள். வெளிச்சத்தை அணைக்கிறான். உங்கள் மடிமீது தலைவைத்துக் கொள்ளட்டுமா என்று கேட்கிறாள். சரியென்கிறான். அவன் மடிமீது தலை வைக்கிறாள். தன் துயரம் வடித்ததுபோல உணர்கிறாள். அவன் மடியில் இரண்டு சொட்டு கண்ணீர்த்துளிகளின் சூடுபடுகிறது.
‘போதும் இந்த கணம். நான் பெரிய ஆறுதல் பெற்றேன். விளக்கைப் போடுங்கள்’ என்று சொல்லி அறையைவிட்டு வெளியேறுகிறாள். கதையின் பல்வேறு விசயங்கள், உரையாடல்கள் மறந்துவிட்டன. ஆனால் இந்தக்காட்சி இன்றளவும் என் மனதிலிருந்து மறையவேயில்லை. கதையின் பெயர் ‘சிறிது வெளிச்சம்’ -கு.ப.ராஜகோபாலன்
No comments:
Post a Comment