வெள்ளிக்கிழமை மசூதிக்கு போவோம்,சனிக்கிழமை கோவிலுக்கு போவோம், ஞாயிறு தேவாலயங்களுக்கு செல்வோம்
நாங்கள் பிச்சைக்காரர்கள்....
நான் கவலைப்பட மாட்டேன்
-------------------------------------
நான் இறந்தபிறகு
ஒளிரும் ஏப்ரல்
அவளது மழைக் கூந்தலை
என்மீது அசைத்து
நீர்த்துளிகள் சிந்தும்போது
மனமுடைந்து நீ என் மீது
சாய்ந்தாலும்
நான் கவலைப்பட மாட்டேன்
மழை,கிளைகளை
உடைத்துப்போடும்போதும்
அமைதியாய் இருக்கும்
மரங்கள்போல
நானும் அமைதியாய் இருப்பேன்
இப்போது நீ இருப்பதைவிட
மேலும் அமைதியாகவும்
மேலும் இறுகிய இதயத்துடனும்
-சாரா டீஸ்டேல்-
விழிகளை பொறுத்தது.... வனப்பு.
-உஷா
இன்டிகேடர் இல்லாதவர்களுக்கு தலையே இன்டிகேடர்
-இரு சக்கர வாகனம்.
உயிர்க்கொல்லும் போதும்
வாயிருந்தும் அழவில்லை
கண்ணிருந்தும் கலங்கவில்லை
கையிருந்தும் தடுக்கவில்லை
காலிருந்தும் நகரவில்லை
இதயம் மட்டும்
அடித்துக்கொள்கிறது
என்னை வாழவிடுங்களேன் என்று .........
கருகலைப்பு..
-உஷாராணி
No comments:
Post a Comment