Saturday, 10 February 2018

மணிகண்டபிரபு

[14/01, 3:14 p.m.] 💥TNPTF MANI💥: நீங்கள்தான் கடவுள் என்று கூறுங்கள். அப்போது நீங்கள் செய்யும்  அதர்மம் தெய்வீக நாடகம் என்று ஏற்றுக் கொள்ளப்படும்.

ஆனந்த் நீலகண்டன்

[14/01, 3:18 p.m.] 💥TNPTF MANI💥: “சிரிப்பதற்குக் காரணம் தேடுவதுதான் மனிதனின் மிகப்பெரிய பலவீனம்”

- எஸ்.ராமகிருஷ்ணன்

[14/01, 3:34 p.m.] 💥TNPTF MANI💥: கேள்வி கேட்டால் குழந்தை அம்மாவை பார்ப்பது,உண்மை சொல்லவா பொய் சொல்லவா என்ற தொனியிலேயே இருக்கிறது

[14/01, 5:12 p.m.] VIJAI TNPTF: உன் ஞாபகமாய்
என்னிடம் எதுவுமே இல்லை
உன் ஞாபத்தைத் தவிர.
_தபூ சங்கர்.

[14/01, 5:54 p.m.] 💥TNPTF MANI💥: விவாகரத்து முடிந்தபின்
யாரிடத்தில் இருக்கும்
திருமண ஆல்பம்

-ராஜா சந்திரசேகர்

[14/01, 5:57 p.m.] 💥TNPTF MANI💥: வந்த உடனேயே போகவேண்டும் என்பவர்கள் எதற்கு வருகிறார்கள்

-ராஜா சந்திரசேகர்

[14/01, 6:10 p.m.] 💥TNPTF MANI💥: பக்கத்து இருக்கை நிரம்பாத பயணத்துக்கான பிரார்த்தனையின் முடிவில் வந்து அமர்பவன் கடவுள் என்று அறிக

*மணி

[14/01, 9:40 p.m.] VIJAI TNPTF: அழும் பெண்ணின்
அருகில் போய்
கண்ணீரைத் துடைத்துக்கொள்
என்று சொல்வதற்கு
கருணை வேண்டும்

இதற்கு
யார் காரணம்
என்று கேட்க‌
துணிவு வேண்டும்

அருகில் போய்
துணிந்து கேட்டேன்
சொன்னாள்
உன்னைப் போல்
ஒருவன்தான் என்று...

_ராஜா சந்திரசேகர்...

[14/01, 10:19 p.m.] VIJAI TNPTF: உடைந்த வார்த்தைகள்
வலிகளைத்
தருவதென்னவோ
உடைத்த எனக்குதான்...
_ராஜா சந்திரசேகர்.
[14/01, 11:37 p.m.] 💥TNPTF MANI💥: இரவின் நீளம் தூக்கம் வராத போதுதான் தெரிகிறது.!"

No comments:

Post a Comment