Saturday, 10 February 2018

மணிகண்டபிரபு


இன்குலாப்பின் மனம் கவர்ந்த வரிகள்
*மணி

#எல்லா மீன்கள் வாக்களித்தாலும் எப்பொழுதும் சுறாக்களே ஆட்சிக்கு வருகின்றன
-இன்குலாப்

#செருப்பணிந்து நடக்காதே
என்றவனின் தோலை உரித்தே
செருப்பாய் தைத்து நட......

   - இன்குலாப்

#இலையுதிர் காலம் எனினும் சருகாவதில்லை வேர்கள்,,
                 - இன்குலாப்.

#எனக்கானது
அடைய ஒரு கிளையும்
அடங்காத வானமும் தான்
-இன்குலாப்

#உறக்கத்தின் இடத்தில்
மரணத்தை நிறுத்தி
இரவின் நம்பகத்தை
எவர் பறித்தார்கள்?
-இன்குலாப்

#அகிம்சையின் முறையீடுகளை எந்த ஆதிக்கக்காரனும் செவி மடுப்பதில்லை
-இன்குலாப்

#ஏதோ ஒரு மூலையில்
நானும் பூக்கிறேன்
பார்வையில் படவும்
படாமல் உதிரவும்
-இன்குலாப்

#கவனம் பிசகினால்
உறக்கம் மரணமாகிவிடும்
நட்பு
காதலாவதுபோல்
-இன்குலாப்

#“அகிம்சையின் முறையீடுகளை எந்த ஆதிக்கக்காரனும் செவி மடுப்பதில்லை”

- இன்குலாப்

#நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கைகளிலும் நெஞ்சம் படரும்
எனக்கு வேண்டும் உலகம் ஓர்கடலாய்
உலகுக்கு வேண்டும் நானும் ஓர்துளியாய்
-இன்குலாப்

#உங்க தலைவன் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்

உங்க ஊர்வலத்துல தர்ம அடிய வாங்கிக் கட்டவும் - அட

எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் - நாங்க

இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்...

மனுசங்கடா நாங்க மனுசங்கடா..!

உன்னப்போல அவனப்போல எட்டு சாணு ஒசரமுள்ள

மனுசங்கடா நாங்க மனுசங்கடா..!

- கவிஞர் இன்குலாப்.

No comments:

Post a Comment