*தமிழ் ஹைக்கூ 1⃣0⃣1⃣ ஆண்டு*
பகுதி - 61
தமிழ் ஹைக்கூக்களில் படிமங்கள் பற்றி பார்த்து வருகிறோம்..
பாலை மணற்புயலில்
பாவம் ஒரு பட்டுப்பூச்சி
நாளை வரும் வசந்தம் என்று
- மோகனராசு
ஈரோடு தமிழன்பனின் சூரியபிறைகள் என்ற ஹைக்கு கவிதை நூலில் படிமங்கள் விளையாடின..
மழையிலும் நனையவில்லை
எப்போதும்போல
தாமரை இலை
❗
தெரு விளக்கில்
உதிர்ந்த ஈசல் இறகுகள்
மௌனிக்கும் காலைக்கதிர்கள்
❗
அறுவடை முடிந்த வயல்
தனியே நான் - மேலே
கிறீச்சிட்டு போகும் கிளி
❗
புள்ளிக்கோடுகளை
உதிர்த்துவிட்ட - ஓவியம்
ஆகாயத்தில்
இப்படியாக படிமங்கள் விளையாடின தமிழ் ஹைக்கூவில்..
நாளை முதல் " தமிழ் ஹைக்கூகளில் புனைவியம் "
*பெருநதி 2018 அக்டோபர் 16 வரை உங்களை நனைக்கும்*
ஸ்ரீதர்
🍀 திண்டுக்கல் 🍀
No comments:
Post a Comment