வருத்தம்
சுந்தர ராமசாமி
வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டடைக்கலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத்தொடங்கினேன்
பின் வில்வித்தை
பின் வாள் வீச்சு
பின் குதிரையேற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிகிறது என் காலம்
திறந்துவைத்த கற்பூரம்போல்
ஆயுளின் கடைசித் தேசல் இப்போது
இனி ஆயஹ்த்தங்களைத் தின்று சாகும் என் முதுமை
பின்னும் உயிர்வாழும் கானல்
#
உரிமை
எஸ்.வைத்தீஸ்வரன்
அவன் வீட்டு சாக்கடையில்
அடுத்த வீட்டு நாய்படுத்துப்
புரளுவது ஒரு வழக்கமாச்சு
உரிமையால்
ஆனமட்டும் விரட்டிப் பார்த்தும்
அது நகரவில்லை, ஒருநாள்
ஆளுயரத் தடியெடுத்து
ஆத்திரத்தால் அடித்துவிட
அது வள்ளென வால்மடக்கிக்
குதித்தோட
அவன் வாய்க்குள்ளே
சள்ளென சகதி விழுந்து தெறித்தது
அவன் வீட்டு சகதி
No comments:
Post a Comment