[13/01, 7:15 a.m.] 💥TNPTF MANI💥: வராத உறக்கத்தை போல் ஒரு அவஸ்தையில்லை,
வந்துவிட்ட விழிப்பை போன்ற ஒரு
உற்சாகமில்லை
-வண்ணதாசன்
[13/01, 7:21 a.m.] 💥TNPTF MANI💥: கரம் நீட்டியதால்
சிரம்,புறம வெளியே
காட்ட முடியவில்லை
#கடனாளி
[13/01, 7:50 a.m.] 💥TNPTF MANI💥: புத்தகங்களை வாசித்துக்கொண்டே இரு, ஆனால் புத்தகம் என்பது வெறும் பக்கங்கள் மட்டுமே. சிந்தித்தல் எனும் அதன் நீட்சியை நீதான் கற்றுணர வேண்டும்
-மாக்சிம் கார்க்கி
[13/01, 8:44 a.m.] 💥TNPTF MANI💥: வேளைக்குத் தகுந்த வேஷம்
ஆளுக்கேற்ற அபிநயம்
இதுதான் வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு
-நகுலன்
[13/01, 10:21 a.m.] 💥TNPTF MANI💥: கடைசி ஆசை பெரும்பாலும்
பேராசையாகவே இருக்கும்
[13/01, 10:23 a.m.] 💥TNPTF MANI💥: வல்லாரை விற்றவன்
மறந்தான்
காசு வாங்க.!
-p
[13/01, 10:29 a.m.] 💥TNPTF MANI💥: இறந்து போக
எத்தனையோ தருணங்கள்
இருக்கின்றன
உயிர்த்தெழ
ஒரு வரி போதும்
-ராஜா சந்திரசேகர்
No comments:
Post a Comment