Saturday, 10 February 2018

மகுடேசுவரன்

பெண் மூன்று முறை அணைக்கிறாள்
முதல் முறை
பரம்பரை ஞாபகங்கள்
அவள் மனத்திலிருந்து துகள் துகளாய் உதிரும்படி
அரிக்கும் ஒரு கரையானாக

இரண்டாம் முறை
தாய் புகட்டிய முலைப்பால்
அவன் இரைப்பையிலிருந்து
வற்றும்படி
நக்கும் ஒரு பூனையாக

மூன்றாம் முறை
அவள் பிள்ளைகளின் பயணங்களுக்கு
நீர் வேண்டுமென்று திமில் நிறைக்கும்
ஒரு ஒட்டகமாக

-மகுடேசுவரன்-

No comments:

Post a Comment