பெண் மூன்று முறை அணைக்கிறாள்
முதல் முறை
பரம்பரை ஞாபகங்கள்
அவள் மனத்திலிருந்து துகள் துகளாய் உதிரும்படி
அரிக்கும் ஒரு கரையானாக
இரண்டாம் முறை
தாய் புகட்டிய முலைப்பால்
அவன் இரைப்பையிலிருந்து
வற்றும்படி
நக்கும் ஒரு பூனையாக
மூன்றாம் முறை
அவள் பிள்ளைகளின் பயணங்களுக்கு
நீர் வேண்டுமென்று திமில் நிறைக்கும்
ஒரு ஒட்டகமாக
-மகுடேசுவரன்-
No comments:
Post a Comment