Saturday, 10 February 2018

தனியொருவன்

"தனி ஒருவனால்
என்ன செய்திட முடியும்" என
மூச்சு முட்டப்
பேசிக்கொண்டு
இருந்தார் ஒருவர்..

அதை
கேட்டுக்கொண்டு
இருந்தனர் பலர்..
தனியொருவன்
வைத்துச் சென்ற
மரத்தடியில்.!

விஜயகுமார் வேல்முருகன்

No comments:

Post a Comment