Friday, 9 February 2018

படித்தது

ஆறுதலால் தேற்றப்படுமெனில் அதன் பெயர் இழப்பில்லை.

-படித்தது

தவிர்க்க முடியாத காரணம் என்பது
நம்மை தவிர்ப்பதற்கான காரணம்!

இரவல் வாங்கினேன்
கொடுக்கவேயில்லை
"புத்தகம்"!

#உடைபடும் கணம்
-----------------------------
வானினின்றும் தப்பிவந்த மழை
அடைக்கலம் கேட்டு
என்வீட்டுக் கதவை
இரவெல்லாம் விடாமல்
தட்டிக் கொண்டேயிருக்கிறது
காதுக்குள் இறங்கி உடம்பெங்கும்
ஓடுகிறது அவ்வோசை
தாழ்ப்பாள் திறந்து உள்ளே அழைத்து
மழையின் துக்கத்தைக் கேட்டு
ஆறுதல்படுத்தலாம்
மழையிடம் என் கதையைக் கூறியும்
ஆசுவாசப்படலாம்
எழ மனமின்றி
கதவு தட்டப்படும் ஓசையில் லயித்துக் கிடக்கிறேன்
நீளும் இரவில்
கதவு உடைபடும் கணம் வரட்டும் என்று.

-பெருமாள் முருகன்-

எனக்கு நடந்த இதுவும்
உனக்கு நடந்திருந்தால்
உன் கண்ணீரை
ஒவ்வொரு நாளும் துடைப்பதற்காக
வாழ்நாளெல்லாம்
உன் அருகிலேயே
இருந்திருப்பேன்
-மனுஷ்யபுத்திரன்

[18/12/2017, 12:33 p.m.] 💥TNPTF MANI💥: பொய் பேசுவதில் கில்லாடிகள் ஆண்கள்.அதைச் சட்டென்று கண்டுபிடிப்பதில் கில்லாடிகள் பெண்கள்
-சுஜாதா
[18/12/2017, 12:33 p.m.] 💥TNPTF MANI💥: ஊரிலிருந்து கிளம்புகையில்
அழுகை வந்தது
ஊரைப் பிரிந்த ஒருவனால்
அழ மட்டும்தான் முடிகிறது
-யுகபாரதி
[18/12/2017, 12:34 p.m.] 💥TNPTF MANI💥: ஒரு பெண்ணோட மனசு இன்னொரு பெண்ணுக்கு தெரிவதால்தான்
அடிக்கடி பெண்களுக்குள் சண்டை வந்துவிடுகிறது.

No comments:

Post a Comment