Saturday, 10 February 2018

வாசித்தது

[01/01, 12:07 p.m.] 💥TNPTF MANI💥: நீங்கள் வெகுதூரம் செல்ல வேண்டுமானால் மிக அருகிலிருந்தே துவங்க வேண்டும். மிக அருகில் என்பது உங்களிடமிருந்தேதான்.

- ஜே. கிருஷ்ணமூர்த்தி
[01/01, 12:11 p.m.] 💥TNPTF MANI💥: பேசத்தகுந்த மனிதர் கிடைத்து நீ பேசத்தவறினால்,தகுதியான மனிதரை இழந்ததாய் அர்த்தம்

பேசத்தகுதியில்லாத மனிதரிடம் நீ பேசினால் உன்னையே இழந்ததாய் அர்த்தம்

-படித்தது
[01/01, 1:20 p.m.] 💥TNPTF MANI💥: விருதுகள் கெளரவப்படுத்தும்
பிணமாக வாழ்ந்தால்
என் போன்றோரை..
-இன்குலாப்
[01/01, 2:18 p.m.] பாரத் கோவை: 💥நம் இயல்பில் தான் மற்றவர் பொறாமைப்பட வேண்டும்;
மெனக்கெடலில் அல்ல.
-சி. சரவண கார்த்திகேயன்.
[01/01, 4:28 p.m.] 💥TNPTF MANI💥: "@Shanthhi:

"நீ ரொம்ப மாறிட்ட"என்பதன் அர்த்தம் பெரும்பாலும் "நீ இப்ப இளிச்சவாயா இல்லயே!" என்பதாகவே இருக்கிறது #அவதானிப்பு"
[01/01, 4:28 p.m.] 💥TNPTF MANI💥: நடுக்கடலில் உள்ள மீன்களை பத்திரமாய் கரை சேர்ப்பவனே மீனவன்
[01/01, 4:30 p.m.] 💥TNPTF MANI💥: கிறுக்கலில் ஆரம்பித்து கிறுக்கலிலேயே முடிகிறது ஒரு பேனாவின் வாழ்க்கை ..!""

-புதியவன்
[01/01, 5:19 p.m.] 💥TNPTF MANI💥: பேருந்தில் நின்று கொண்டே வந்த பெரியவர் இறங்கும் போது சொன்னார்.'எல்லோர் மனதிலும் கொஞ்ச நேரம் உட்கார்ந்து கொண்டே வந்தேன்'என்று
-ராஜாசந்திரசேகர்
[01/01, 9:31 p.m.] 💥TNPTF MANI💥: ஒரு புத்தகத்தை இரவல் தருபவன் முட்டாள்,
அதை திருப்பி தருபவன் அதை விட முட்டாள்
-பழமொழி
[01/01, 9:35 p.m.] 💥TNPTF MANI💥: "பிறக்கும்போது சாதாரண பெண் தான். வளர்க்கும்போது தான் பெண்ணாக வளர்க்க படுகிறாள்.
[01/01, 10:33 p.m.] 💥TNPTF MANI💥: ' தன்னையும் , காலத்தையும் நம்புவதை தவிர, இந்த வாழ்க்கையில் பயனுள்ள அர்த்தமுள்ள காரியம் வேறில்லை

'- ஜெயகாந்தன்
[01/01, 10:37 p.m.] 💥TNPTF MANI💥: ஜன.,1,1970ல், 'குமுதம்' இதழில், தன் புத்தாண்டு செய்தியாக, எழுத்தாளர், ஜெயகாந்தன் தெரிவித்திருந்தது:

புத்தாண்டுகள் எல்லாமே நம்பிக்கை தருவன. அடுத்த புத்தாண்டு வருகிற வரை இந்த ஆண்டை தான் நம்பி வாழ்தல் வேண்டும். இந்த ஆண்டில் எனக்கு வயது, 36; வழக்கம் போல் பல சிறுகதைகளும், ஓரிரு நாவல்களும் நிச்சயம் எழுதுவேன். ஒரு படம் தயாரிக்கும் திட்டமும் உண்டு. அது, என் முந்தைய படைப்புகளிலிருந்து, மாறுபட்டிருக்கும். அதை, 'ஷார்ட் பிலிம்'மாகத் தயாரிக்க தான் என்னிடம் வசதி உண்டு. இதுவும் ஒரு புத்தாண்டு நம்பிக்கை!

இம்மாதிரியான நம்பிக்கை தான் எல்லா மனிதரையும் வாழ வைக்கிறது; நம்பிக்கை நிறைவேறுவது இரண்டாம் பட்சம்; ஆனால், நம்பிக்கை தான் வாழ்க்கைக்கு அடிப்படை; அடித்தளம்!
எவ்வளவு தான் சிறப்பானதாயிருந்த போதிலும், முந்தைய ஆண்டு என்பது இறந்த காலம் தான்; எவ்வளவு தான் குழப்பமானதாக இருந்தாலும், இந்த ஆண்டு தான் எதிர்காலமும், நாம் எதிர்கொள்ள வேண்டிய காலமும் ஆகும். எனவே, புதிய நம்பிக்கைகளுடன் இந்த ஆண்டை எதிர்கொள்வோம்.
ஒவ்வொரு நாளின் உதயமும், நம்பிக்கையின் எழுச்சியாகவே மலர்கிறது. என் வீட்டு வாசலில் எப்போதும் ஒரு ரோஜா மலர்ந்திருக்கிறது; வந்து பாருங்கள். எல்லா வீடுகளின் முன்னாலும் எப்போதும் ஓர் இனிமை மலர்ந்திருக்கிறது; ஆழ்ந்து கவனியுங்கள்!

நேற்று வரை, விடிவே இல்லையா என்று தனிமையில், ரகசியமாக பெருமூச்செறிந்த ஒரு கன்னிப் பெண்ணுக்காக, இன்று கெட்டி மேளம் முழங்குகிறது. இந்த நல்ல செய்தியை இப்போது தனிமையில் பெருமூச்செறிந்து நிற்கிற கன்னிப் பெண்ணுக்கு சொல்வதை விட, நல்ல பணி உங்களுக்கு வேறு என்ன இருக்கிறது!
இதைத்தான் நான் செய்கிறேன். அதோ அந்த கூரையின் மீது ஏறி நின்று, இறுமாப்புடன் இந்த உலகைப் பார்த்து, நம்பிக்கையோடு கொக்கரிக்கிறது, செந்நிறக் கொண்டை கோழி.ஆனால், சில நண்பர்களின் பார்வை மட்டும் குனிந்தே போயிருக்கிறதே!

ஒடெட்டா என்ற நீக்ரோ மாது சொல்கிறாள்...
நீ உன்னையே பார்
நீ சர்வ வல்லமை வாய்ந்தவன்
நீ சர்வ வல்லமை பொருந்திய
உலகத்தின் ஓர் அங்கம்
எனவே, நீ சர்வ
வல்லமை வாய்ந்த ஆத்மா!
தன்னையும், காலத்தையும் நம்புவதை தவிர, இந்த வாழ்க்கையில் பயனுள்ள, அர்த்தமுள்ள காரியம் வேறில்லை.
பகைமையும், வெறுப்பும், வஞ்சனையும், ஏமாற்றும்,
பழைய நைந்து போன பிசாசுகள்!
நம்பிக்கை ஒன்று தான் எப்போதும் புதிதாய், ஒளிமிக்கதாய், மகிழ்ச்சி தருவதாய் உள்ள ஒரே ஆயுதம்; மருந்து; மந்திரம்!

நன்றி:நாகராஜன்
[02/01, 6:32 a.m.] 💥TNPTF MANI💥: அறிவு எப்போதும் நிகழ்காலத்தில் இருப்பதில்லை.எப்போதும் கடந்த காலத்திய விஷயமாகவே இருக்கிறது.
அதைப்பற்றி பேசிய கனமே அறிதல்கூட அறிவாகிபோகிறது-ஓஷோ
[02/01, 7:39 a.m.] 💥TNPTF MANI💥: மனதுக்கு புரிந்துவிட்டது
மூளைக்கு தாமதமாய் தான்
புரியும்
எழுதும்போது வருடத்தை
மாற்றி எழுத வேண்டுமென்பதை
[02/01, 7:50 a.m.] 💥TNPTF MANI💥: லீவு கேட்பது கடன் கேட்பதை விட கொடுமையானது
[02/01, 11:12 a.m.] முருகேசன்: தன்னுடைய சொந்த ஆதாயத்துக்காக மட்டுமே நட்பாக நடித்துக் கொண்டிருப்பவர்களுக்குப் பெயர்தான் துரோகிகள்!
#பொன் விமலா
[02/01, 4:00 p.m.] 💥TNPTF MANI💥: காலண்டரில் முதல் கலர் பேப்பரை கிழித்தவுடன், வாழ்க்கை எப்போதும்போல் கருப்பு வெள்ளைக்கு மாறிவிடுகிறது
[02/01, 4:01 p.m.] 💥TNPTF MANI💥: ஜாதியையும்,ப்ளாஸ்டிக்கையும் அழிக்க முடியாது. பயன்படுத்துவதை
தவிர்க்கலாம்
[02/01, 4:01 p.m.] 💥TNPTF MANI💥: கார் வாங்குவதற்கு பணக்காரனா இருக்கனும்னு அவசியம் இல்லை குழந்தையா இருந்தாலே போதும் !"
[02/01, 4:01 p.m.] 💥TNPTF MANI💥: ஒரு புத்தகத்தை இரவல் தருபவன் முட்டாள்,
அதை திருப்பி தருபவன் அதை விட முட்டாள்
-பழமொழி

No comments:

Post a Comment