Saturday, 10 February 2018

படித்தது-மணிகண்டபிரபு

💥: அனுபவம் என்பது
பரந்த அர்த்தத்தில்
தனக்குரிய வார்த்தைகளோடு
வெளிப்பட வேண்டும்

💥: வாரக்கடைசியில் காட்டிக்கொடுக்கும் சாயமடித்த மீசைப்போல,
மூடிமூடி வைத்தாலும்
முட்டி முட்டி எட்டிப்பார்க்கும் துக்கம்
-வைரமுத்து

I💥: எதுவும் தெரியாவிட்டாலும்
அமைதியாய் இரு
தேர்வு அறையைப் போல..!!

💥: அப்படி என்னதான் இருக்கிறது வாழ்க்கையில்?
"உயிர் வாழும் சவால்"
-சுஜாதா

💥: காட்சியே மறையும் விரைந்து;
சாட்சியாய் ஒரு சொல் மட்டுமே
நானென்று நிற்கும்
-பிரம்மராஜன்

‬: மௌனம்
-------------------
உன் மெளனத்தின் அடுக்குகளிலிருந்த
வார்த்தைகளைப்
பிடித்துக் கொள்கிறேன்
சொற்களின் ஒலிகள்
செவிகளை வந்தடையத்
தேவையில்லை
எல்லா மௌனங்களும்
உன் வார்த்தைகளையே
பேசிக் கொண்டிருக்கின்றன

எனது மக்கள்
----------------------------
இரவு அழகானது
எனது மக்களின் முகங்களைப் போலவே
விண்மீன்கள் அழகானவை
எனது மக்களின் கண்களைப் போலவே
சூரியனும் அழகானதுதான்
எனது மக்களின் ஒளிரும் ஆன்மாவைப் போலவே.

 கனவுகள்
-------------------
கனவுகளை சட்டெனப் பற்றிக் கொள்
கனவுகள் இறந்துவிடலாம்
வாழ்வென்பது பறக்கவியலாத
இறக்கை உடைந்த ஒரு பறவையைப் போன்றது
கனவுகளை சட்டெனப் பற்றிக் கொள்
கனவுகள் தொலைந்துப் போகலாம்
வாழ்வென்பது வரண்டுபோன வயல் அதில்
பனி கெட்டியாக உறைந்து கிடக்கிறது

- லாங்ஸ்டன் ஹியூஸ்-

செ பாலா: நீ படிக்க விரும்பும் புத்தகம் இன்னும் எழுதப்படவில்லையென்று நீ உணர்ந்தால், அத்தகைய புத்தகத்தை நீயே எழுத ஆரம்பித்துவிடு!

                                           -டோனி மாரிஸன்

செ பாலா: எனக்குப் பின்னே வராதே...
நான் வழிகாட்டி அல்ல;
எனக்கு முன்னே போகாதே...
நான் பின்பற்றுபவன் அல்ல;
என்னோடு நட...
எனக்கு நண்பனாக இரு!

                                              -ஆல்பர்ட் காம்யு

💥: எங்கள் வீட்டில் கோழிக்கறி சாப்பிட வேண்டுமென்றால் நான் நோயில் விழவேண்டும் அல்லது கோழி நோயில் விழ வேண்டும்
-அ.முத்துலிங்கம்

No comments:

Post a Comment