💥: குடும்பத்திற்காக மாடாய் உழைக்கும் அனைவருக்கும் மாட்டுப்பொங்கல்
நல்வாழ்த்துக்கள்
*மணி
💥: அதிகாரம் எப்போதும் அறிவை பார்த்து பயப்படும்
-ஞாநி
💥: திருத்தப்பட்ட பிறகே பிழை
தெளிவாக தெரிகிறது
💥: உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரித்தார் பலர்"
-தம்முடைய பலம் அறியாமல் ஒரு காரியத்தில் இறங்கி பாதியில் கைவிட்டவர்கள் பலர்
💥 உளுத்தம் பருப்பு, உளுந்தம் பருப்பு - எது சரி?
**
பயறு வகைச் செடியிலிருந்து விளையும் தானியம்தான் உழுந்து. உளுந்து என்றும் வழங்கப்படுவதுண்டு.
ழகர ளகரத்தில் இருவாறும் வழங்கப்படும் சில சொற்களில் உழுந்து/உளுந்து என்பதும் ஒன்று. பவழம்/பவளம், குழறு/குளறு என்று சில வழக்குகள் இவ்வாறு இருவகை ழ/ள பயன்பாட்டோடு வழங்கப்படுகின்றன. நிற்க.
உழுந்து என்னும் நிலைமொழி, வருமொழியான பருப்புடன் சேர்கையில் அம் சாரியை மிகும்.
புணர்ச்சியில் வல்லொற்று மிகுவதைப்போல அம் சாரியை மிகுவதும் ஒரு பண்பு. அத்துச் சாரியை மிகுவதைப்போல அம் சாரியை மிகுவது.
குளம் + மீன் = இதைக் குளமீன் என்று புணர்த்த முடியாது.
குளம் + மீன் = குளம் + அத்து + மீன் = குளத்து மீன் என்றுதான் புணர்த்த வேண்டும். இங்கே ’அத்து’ என்ற சொல்லுருபு மிகுந்தது. அந்தச் சொல்லுருபுக்குச் சாரியை என்று பெயர். அத்து போலவே ‘அம்’ என்பதும் ஒரு சாரியை.
உழுந்து + பருப்பு = உழுந்து + அம் + பருப்பு
அப்படியானால் உழுந்தம்பருப்பு என்றுதானே ஆகவேண்டும் ? உழுத்தம்பகுப்பு என்றானது எப்படி ?
மென்தொடர்க்குற்றியலுகரச் சொற்கள் புணரும்போது, அச்சொல்லின் கடைசி எழுத்துக்கு முன்னுள்ள மெல்லின மெய் தனக்குரிய வல்லின மெய்யாகத் திரியும்.
உழுந்து என்பதில் கடைசி எழுத்துக்கு முன்னுள்ள மெல்லின மெய் ந் என்பதாகும்.
ந் - என்பதன் இனவல்லினம் “த்”. அதன்படி உழுந்து என்பது உழுத்து என்றாகி அம் சாரியை பெற்றுப் புணர்ந்தது.
உழுந்து + அம் + பருப்பு =>
உழுத்து + அம் + பருப்பு =>
உழுத்தப்பருப்பு.
வேம்பு + காய் = வேப்பு + அம் + காய் = வேப்பங்காய்
கரும்பு + சாறு = கருப்பு + அம் + சாறு = கருப்பஞ்சாறு
(ம் என்பதன் இனவல்லினம் ப்)
ஆக, உழுத்தம்பருப்பு என்பதே சரி.
உழுத்தங்களி, உழுத்தங்கஞ்சி என்று இன்றும் பேச்சில் வழங்குவர்.
- கவிஞர் மகுடேசுவரன்
No comments:
Post a Comment