Saturday, 10 February 2018

@மணி-வாசித்தது

[25/12/2017, 6:49 a.m.] 💥TNPTF MANI💥: xmas என்று கிறிஸ்துமஸ் விழாவை குறிக்கத்துவங்கி ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கிறிஸ்து + மாஸ் தான் கிறிஸ்துமஸ். கிரேக்கத்தில் x என்கிற எழுத்தே கிறிஸ்துவை குறிக்கும் அதைக்கொண்டு xmas என்று சுருக்கி அழைக்கிறார்கள் இன்றுவரை

-கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

-தோழமையுடன்
மணிகண்டபிரபு
[25/12/2017, 7:06 a.m.] 💥TNPTF MANI💥: துச்சமென எண்ணி நம்மைத் தூறு
செய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
-பாரதியார்
[25/12/2017, 7:08 a.m.] 💥TNPTF MANI💥: காலை எழுந்தவுடன்
படிப்பென்றான்
பாரதி..
படிப்பவனுக்கு மட்டும்தான்
காலையே எழுகிறது
-தமிழன்பன்
[25/12/2017, 7:25 a.m.] 💥TNPTF MANI💥: முதல் மனிதன் உருவானபோது காடு அவனை பயமுறுத்தியது

இரண்டாம் மனிதன் உருவானபோது காடு அவனுக்கு பழக்கமானது

மூன்றாம் மனுதன் உருவானபோது காடு அவனுக்கு கற்றுக் கொடுத்தது

நான்காம் மனிதன் உருவானபோது காடு அவனிடம் கட்டுப்பட்டது

அடுத்தடுத்த மனிதர்கள் உருவானபோது காடு அவர்களிடம் காயப்பட்டது.!

-நா.முத்துக்குமார்
[25/12/2017, 7:30 a.m.] 💥TNPTF MANI💥: முற்றும் அறிதல் என்பது என்றைக்கும் முடியாத ஒன்று! என்றாலும் கூடுதல் அறிவை நோக்கியே நாம் ஓடுகிறோம்
-சுப.வீ
[25/12/2017, 8:44 a.m.] 💥TNPTF MANI💥: அபூவாறு கடலுக்குள் இறங்கும் முன் தங்கமுருகன் கேட்டார்: "சுற்றுச்சூழல் அதிகமாக பாதித்து தொல்லை தருகிறது. அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பதுதான் பிரச்னையாக இருக்கிறது" என்றார்.
"ஓஷோ சொல்லி இருப்பாரே?" என்று எடுத்துக் கொடுத்தார் தங்கவேல்!
நினைவுக்கு வந்த கதையைச் சொன்னேன்:

அந்தக் கிராமத்தின் ஓய்வு விடுதியில், ஒரு நாள் இரவு ஓஷோவும் மாநில அமைச்சர் ஒருவரும் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தனர்.

இரவு முழுவதும் முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த விடுதியைச் சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன. அமைச்சரால் தூங்கவே முடியவில்லை.

ஆனால், இத்தனைக்கும் மத்தியில் ஓஷோ நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.

ஓஷோவை எழுப்பிய அமைச்சர்,
''என்ன மனிதர் நீங்கள்... இவ்வளவு சத்தத்துக்கு மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது...???'' என்று புலம்பினார்.

ஓஷோ, தனது வழக்கமான கிண்டலுடன் கூறினார்:
''அந்த நாய்கள், உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இங்கு கூடவில்லை; கோஷமிடவில்லை

பாவம், அந்த நாய்களுக்கு... இங்கு ஒரு மந்திரி தங்கி இருப்பது தெரியாது. அவை, தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன. நீங்கள், தூங்குகிற வேலையைப் பாருங்கள்...!!!'' என்றார்.

"நாய்களின் குரைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.  இந்த இரவிலும் எவ்வளவு சக்தியுடன் அவை குரைக்கின்றன... பார்த்தீர்களா....?ஏற்பு உணர்ச்சியுடன் கவனித்தால், குரைப்புச் சத்தமும் ஒருவகை மந்திரம்தான்...!!!'' என்றார் ஓஷோ

காலையில், மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து ஓஷோவைச் சந்தித்தார் அமைச்சர்...

"எனது எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு, நாய்கள் குரைப்பதைக் கவனித்தேன். ஆழ்ந்து ரசிக்கவும் தொடங்கினேன். அப்படியே உறங்கிப் போனேன்'' என்றார் அமைச்சர்.

ஓஷோ சொல்கிறார்:

" உன்னைச் சுற்றி இருப்பவற்றால் நீ எரிச்சல் அடைந்தால், உன் முகத்தை உள்முகமாகத் திருப்பு.. !"

-திருமாவேலன்
[25/12/2017, 9:00 a.m.] 💥TNPTF MANI💥: எழுதப்படாத மொழிகள் பெரும்பாலும் இந்தியாவின் பழங்குடி மக்களின் மொழிகள்.பழங்குடி இலக்கியத்தில் தொன்மங்களுக்கு (Myth) மிக முக்கிய இடம் உண்டு. இப்போது இளந்தலைமுறையினர் புதிய தொன்மங்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அது என்ன புதிய தொன்மம்? பழைய கதைகளை எடுத்துக் கொண்டு அதற்கு ஒரு புதிய கோணம் கொடுப்பது. இதோ ஒன்று:

துரோணர் தன் சீடர்களுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். மரத்தில் ஊசலாடிக் கொண்டிருந்த கிளி பொம்மையின் கண்ணைக் குறிபார்த்து அம்பெய்த வேண்டும். எவரும் தேறவில்லை. அர்ஜுனன் கணை செலுத்த வில்லுயர்த்தினான். குறி பார்த்தான்.

நாணிலிருந்து அவன் கணையை விடுவிக்கப் போகும் நேரம், அவனது அம்பை முந்திக்கொண்டு வேறொரு அம்பு கிளியின் கண்ணைத் தைத்தது. திடுக்கிட்டுத் திரும்பினார்கள் துரோணரும் அர்ஜுனனும்.

ஏகலைவன்!

”யாரிடம் கற்றாய் இந்த வித்தையை?” என்றார் துரோணர்.

“உங்களிடம்தான் குருவே!” எனப் பணிந்தான் ஏகலைவன்

“அப்படியா? குருதட்சிணை எங்கே?”

”என்ன கொடுக்கட்டும்,குருவே?”

”உன் வலது கைக் கட்டை விரல்!”

வாளெடுத்தான்.வெட்டினான்,புன்னகையோடு இலையில் வைத்து நீட்டினான். அந்தப் புன்னகையின் வசீகரம் கண்டு பாண்டவர்கள் அசந்து போனார்கள்

துரோணரும் சீடர்களும் திருப்தியோடு திரும்பி நடந்தார்கள். சில அடிகள் கடந்ததும் திடுக்கிட்டு நின்றார்கள். எதிரே பாம்பொன்று படமெடுத்துச் சீறிக் கொண்டிருந்தது. என்ன செய்வதென்று அவர்கள் மருண்டிருந்த அந்தக் கணத்தில் அம்பொன்று சீறிக் கொண்டு வந்து அந்தப் பாம்பின் படத்தைக் கிழித்தது.

யார் என்று திரும்பிப் பார்த்தார்கள். ஏகலைவன்! திடுக்கிட்ட துரோணர் கேட்டார், “உனக்குத்தான் வலதுகைக் கட்டை விரல் இல்லையே, நீ எப்படி?”

ஏகலைவன் சிரித்துக் கொண்டே சொன்னான்: “ குருவே நான் இடக்கை ஆட்டக்காரன்!”
[25/12/2017, 1:22 p.m.] 💥TNPTF MANI💥: முதலாளித்துவ சமூகத்தில் பணத்திற்கு மதிப்பிருக்கும்.ஆனால் அதை நம்பியிருக்கும் மனிதனுக்கு மதிப்பிருக்காது
-கார்ல் மார்க்ஸ்
[25/12/2017, 1:22 p.m.] 💥TNPTF MANI💥: நாம பிரம்மிப்ப பார்க்கிற எல்லோரும்
நம்மல கேவலமாத்தான் பார்க்குறாங்க
[25/12/2017, 3:57 p.m.] 💥TNPTF MANI💥: பற்ற வைத்த
சிகரெட் இரையானது
காற்றுக்கு!
[25/12/2017, 7:27 p.m.] 💥TNPTF MANI💥: படிப்பு என்பதே வயிற்றுச்சோற்றுக்கு வழியில்லாதவர்கள் மாதச்சம்பளத்துக்கு
வழி தேடிக்கொள்ளும் முயற்சி
-ஜெயகாந்தன்
[25/12/2017, 7:29 p.m.] 💥TNPTF MANI💥: பிணமும்,பேருந்தும் ஒன்று.இரண்டையும் எடுக்கும்வரை சலிப்புடன் காத்திருக்க வேண்டும்
[25/12/2017, 7:32 p.m.] 💥TNPTF MANI💥: ஒலிக்காமலேயே அலைபேசியை
எடுத்துப் பார்ப்பது
இணையம் வந்த பிறகுதான்"!
[25/12/2017, 8:50 p.m.] 💥TNPTF MANI💥: ஒரு புகைப்படம் உயிர்கொள்வது
நம் நினைவுகளால் மட்டும்தான்
[25/12/2017, 8:51 p.m.] 💥TNPTF MANI💥: ஆர்டர் செய்யாமலே விரைவாய் வந்தது
"வாழை இலை"!
[25/12/2017, 8:52 p.m.] 💥TNPTF MANI💥: பரட்டைத் தலையுடன் இலந்தை மரம்
முடி வெட்டுகின்றன
ஆடுகள்!

# பிரபலமானவர்களின் வீடு
வரவேற்பறையில் பரிசுக் கடிகாரங்கள்
எதுவும் ஓடவில்லை!

# காலியான தைல புட்டி
நிரம்பியிருக்கிறது
வாசனையால்!

# காற்று பறித்து போட்டது
தரையெல்லாம் நட்சத்திரங்கள்
வேப்பம் பூக்கள்!

# யாரும் கவனிக்காததை
உணர்ந்த சிறுவன்
அழுகையை நிறுத்துகிறான்!

# இறந்த பாட்டியின் மருந்து புட்டியில்
மண்ணெண்ணெய் விளக்கு
ஞாபகங்கள் எரிகின்றன!

# பறவைகள் முகம் பார்க்க
கண்ணாடியின்று திரும்பின
வறண்டு போனது நதி!

# கடலுக்குள் தொடங்கி
குடலுக்குள் முடித்தது
வாழ்க்கையை மீன்!

# குழந்தைகள் நிறைந்த வீடு
சத்தமாக ஒலியெழுப்புகிறது
ஐஸ் வண்டி!

-நா.முத்துக்குமாரின் குழந்தைகள் நிறைந்த வீடு புத்தகத்திலிருந்து..
[25/12/2017, 8:55 p.m.] 💥TNPTF MANI💥: கந்தையானாலும் கசக்க முடிவதில்லை
"Dry wash"!
[25/12/2017, 10:49 p.m.] 💥TNPTF MANI💥: இரவோடு இரவாக
கடந்தது
இரவு
-பேயோன்

No comments:

Post a Comment