எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள்
*மணி
பிடித்த பாடல் வரும்போது சத்தம் கூட்டி ரிமோட்டை கையில் வைத்து கத்தி கதிரேசன் மாதிரி போஸ் கொடுக்கும் குழந்தை பருவத்திலிருந்து தொடங்குகிறது எல்லாம் தெரிந்தது போல் காட்டிக்கொள்ளும் மனநிலை
*அஞ்சு நிமிசத்துக்கு முன்னாடி தெரிந்ததை ஐம்பது வருசத்துக்கு முன்னாடியே காட்டிக்கொள்ளும் மன இயல்பு
*இன்னும் கத்திப்பாரா பாலத்தில் டூரிஸ்ட் பஸ்ஸிலிருந்து ஒரு குரல் கேட்கும்
"எல்லாம் ஏரோப்ளைன் பார்க்காதவங்க பாத்துங்குங்க னு" அவரே அப்பதான் பார்ப்பாரு.ஆனாலும் நானெல்லாங்கிற தோற்றத்தை உருவாக்குவாரு
*ட்ராபிக் ஆனால் முதலில் பஸ்சிலிருந்து இறங்கி போய் முன்னாடி நின்னு வேடிக்கை பார்ப்பாரு.தன்னால் ட்ராபிக்கோ/ சண்டையோ க்ளியர் செய்ய முடியுமானு பார்ப்பாரு.முடிந்தால் செய்து முடித்து அலப்பறை செய்வாரு
*பேங்கிலோ,பொது இடத்திலோ கட்டுப்பணத்தை எண்ணும் போது,போகிற வருபவர்களை அநாயசமா பார்ப்பாரு.பணம் எண்றதுல P.hd முடிச்சமாதிரி
*புதிதாய் பணியில் சேர்ந்தவரை ஏளனமாய் என் சர்வீஸ் இருக்குமா உன் வயசு னு கேட்பாரு பாருங்க.அவரை வச்சு பாகுபலி பார்ட் த்ரீயே எடுக்கலாம்
*கன்னியாகுமரி போனவுடன் எல்லாரும் சூரியனை பாருகன்னு ஒருத்தர் சொல்லுவாரு பாருங்க.என்னமோ அவர் காட்டினதால் தான் சூரியனையே நாம பார்த்த மாதிரி
*ஒரு முறை எங்கிட்ட குலேபகாவலி படத்தை காட்டி இந்த படம் வந்தப்ப நீ பொறந்திருக்கவே மாட்டனு லுக் விட்டாரு.நான் உடனே இது ராமண்ணா படம்னு சொன்னதும் அமைதியானாரு
*அப்புறம் அரசியலை பத்தி பேசுவாங்க..தமிழக அரசியல் வரலாறு னு புக் இருக்கு.அதை படிச்சாலே போதும் இவங்களை ஈஸியா சமாளிக்கலாம்.
*பஸ்ல க்ளீனரா இருப்பாரு பாருங்க..நல்ல பாட்டை ரசிக்க விடாம மாத்திட்டே இருப்பான்
*குழந்தைகளும் விதிவிலக்கல்ல..படம் பார்க்கும்போது அடுத்த சீனை சொல்லி அது திரையில் வந்தால் அனைவரும் ஆச்சர்யமாய் பார்க்கும் அதிசயத்தை குழந்தை ரசிக்கும்
*கி.ரா வின் கதை ஒன்னுதான் நினைவுக்கு வருது.கிராமத்துல எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் இருந்தார்.ஊரே அறிவாளியாய் பார்க்கும்.சந்தேகம் கேட்கும்.அப்போ யானை ஒன்னு போகும்.ஊரே இவரை பார்த்து இது என்னனு கேட்கும்.?
நேத்து நைட் இருட்டு வந்துதுல்ல,அதோட மிச்சம் போகுது னு சொல்லுவார்.ஊரே கைதட்டி பார்க்கும்.
*அந்த காலத்தில னு ஆரம்பிக்கிற சிலர் தன் அனுபவத்தை,ஏமாற்றத்தை அப்படியே சொல்லி அதிலிருந்த உண்மையை சொல்லும்போது தான் அது நமக்கு ஆர்வத்தை தூண்டும்
*அத விட்டுட்டு நான்யார் தெரியுமில்ல, அந்த காலத்திலயே நான் பெரிய இவன்னு சொல்லும் ஏகாம்பரங்கள் அதிகமாயிட்டாங்க
*அனுபவத்தை அனுபவிச்சி சொல்லனும். தன்னை ஊரே அதிசயமா ஆச்சர்யமா பார்க்கனும் னு நினைப்பவரை பார்த்து சிரிச்சு கடந்து செல்லுங்க
தோழமையுடன் மணிகண்டபிரபு