Tuesday 31 August 2021
அந்த்வன் து செந்த்-எக்சுபரி
Monday 30 August 2021
சுரபாலர்
யுகபாரதி
Sunday 29 August 2021
Home movie review
கனலி
The joy of failure
திருச்செந்தாழை
விடிவதற்குள் வா*சுஜாதா
Friday 27 August 2021
போய் உட்கார்ந்ததும் எல்லாரும் நம்மையே பார்ப்பாங்க! - கல்யாண பிளாஷ்பேக்
உள்ளதிலேயே சிறந்த புகைப்படத்தைத்தான் பெண் வீட்டுக்கு அனுப்பினேன் வந்ததிலேயே சிறந்த புகைப்படத்தைத் தேர்வு செய்திருப்பார்கள் போல பதில் இல்லை!பா.ராஜாராம்
புராணக் காலத்திலிருந்து நவீன காலம் பெண் பார்த்தல் என்பது ஒவ்வொரு குடும்பத்திலும் நடைபெறும் முக்கிய நிகழ்வு ஆகும். ஜாதகம் பார்த்து, புகைப்படங்கள் பரிமாறி இரு வீட்டாருக்கும் பூரண திருப்தி ஏற்பட்டு மணமகன் வருங்கால மனைவியை காண வருவார். `எனக்கென ஏற்கெனவே பிறந்தவள் இவளோ’ எனப் பின்னணியில் பாடல் ஒலிக்கும். சில சமயம் இருவருக்கும் பிடிக்கவில்லையெனில், `ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ’ எனவும் ஒலிக்கும். இருவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமையும் அந்த சந்திப்பு வாழ்வில் என்றும் இனியவை.
உயிர் துறக்கும் தருவாயில் ஒரு நிமிடம் இந்த உலகை காண எப்படி ஆவல் கொள்வோமோ அதுபோல் முதன்முதலாய் பெண் பார்க்கும் அந்த நொடி எதிர்பார்ப்புகளால் நிறைந்தது
#ஜாதகமே துணை
தங்கைகள் இருந்தால் திருமணம் முடிந்த பின்னும், தங்கை இல்லையென்றால் 25 வயதிலும் பேச்சு ஆரம்பமாகும். சொந்தக்காரங்ககிட்ட போனில் அப்பா பேசும்போது அப்பிடியே மகனுக்கு இனி பொன்னு தேடனும்னு சொல்லும்போது..இன்ப தேன் வந்து பாயும் ஆண்களுக்கு.
"ஒருவார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்னு" ஒரு அசரீரி ஹோம் தியேட்டரில் ஒலிக்கும். அப்ப இருந்தே ரொமாண்டிக் மூட், லுக், இன்ன பிற இதர எண்ணங்களும் தொடங்கி கற்பனையிலயே மிதப்போம். கார் வாங்க முடிவெடுத்த போது சாலையில் செல்லும் அனைத்தும் நாம் நினைத்த கார் செல்வது போல.. பார்க்கும் ஒவ்வொரு பெண்ணும் நாம் நினைத்தது போலவே இருப்பார்கள்.
மார்க் ஷீட், ரெஸ்யூம்க்கு அப்புறம் அதிகம் ஜெராக்ஸ் போட்டது ஜாதகத்துக்கு தான்.பார்க்கிறவங்க கிட்ட எல்லாம் How are you னு கேட்கிற மாதிரி..மனசுக்குள்ள ஐ எம் கண்ணன் ராகு கேது இருக்குது, இரண்டுல செவ்வாய் இருக்கு, எட்டுல செவ்வாய் இருக்கு, நீட்சியில் செவ்வாய் இருக்கு, சுத்த ஜாதகம் என ஏதேனும் ஒன்றை சொல்லி பெண் இருந்தா சொல்லுங்கனு கேட்போம்.புதுசா யாராவது இளம்பெண் தெருவுக்கு வந்தாலோ, ஆபிசுல ஜூனியராய் பணியில் சேர்ந்தாலோ ராமன் தேடிய சீதை படத்தில் வரும் சேரன் மாதிரி ரியாக்சன் கொடுப்போம்.
யாரைப் பார்த்தாலும் ஐ வான் டூ மேரியூ னு வானத்தைப் போல விஜயகாந்த் மாதிரி சொல்லத் தோணும்.
#ஆடுவோம் பாடுவோம் தேடுவோம்
நியூஸ் பேப்பரில் ஸ்போர்ட்ஸ் நியூஸையே படித்துக் கொண்டிருந்தவன் முதல்முறை மணப்பந்தலை தேடுவாங்க.அதுல மணமகன் தேவை விளம்பரத்தை ஜூம் பன்னி ஜூம் மீட்டிங்கில் பேசுவது போல பார்ப்பாங்க. உனக்குனு ஒருத்தி பொறக்கவா போறா ஏற்கனவே பொறந்திருப்பா என்பது அம்மாக்களின் தேசிய கீதம் தினசரி கேட்டுக்கொண்டே இருக்கும்.இதை கேட்டு கேட்டுத் தான் பார்கே பார்க்கே னு மனசை உற்சாகப்படுத்தனும்.
ஆபிஸ் மெயில் பார்க்கும் நேரம் தவிர மேட்ரிமோனியில் வரும் மணப்பெண் படங்களைப் பார்ப்பது T20யில் சூப்பர் ஓவர் பார்ப்பதுபோல் சுவாரஸ்யமானது.
#மணப்பெண் பார்த்தல்
வர்ற ஞாயித்துக்கிழமை பொண்ணுப் பார்க்க கோயிலுக்கு வரச்சொல்லிட்டாங்கனு சொன்னதும் அந்த விடியலுக்காய் காத்திருப்பது மழைக்காய் காத்திருக்கும் விவசாயியைப் போல குதூகலமானது. இருப்பதிலேயே நல்ல சட்டையைப் போட்டுக் கொண்டு ஓராயிரம் முறை கண்ணாடி பார்ப்போம். எல்லா ஆங்கிளிலும் பார்த்த பின்புதான் படையெடுத்து செல்வோம்.
தலைக்கு குளிச்சதும் தப்பித்தவறி கூட எண்ணெய் வச்சிட மாட்டாங்க.
சகுனமே பார்க்காதவன் கூட அன்னிக்கு சகுனம் பார்ப்பான். அப்பதான் கார் வச்சிருக்கிற நண்பனின் அருமை தெரியும். முல்லைக்கு தேர் கொடுத்த பாரியாய் இந்த அபலைக்கு லிப்ட் கொடுத்த நவீன பாரியாய் வருவான். ஒன்னுமே இருக்காது ஆனா பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுக்கு போஸ் கொடுக்கிற மாதிரி சிரிச்சிக்கிட்டே இருப்பாங்க ஆண்கள். எல்லாரிடமும் அன்பை கொட்டுவாங்க. அப்பிடியே மனசு முழுக்க வீதி பைப்பில் நிறைந்து வழியும் குடம் போல அன்பும் புன்னகையும் வழிந்து கொண்டே இருக்கும்.
#கண்டேன் பெண்ணை
பெண் வீட்டின் முன்னால் போய் இறங்கியதும் தேவசேனையை கூட்டி வந்த பாகுபலியைப் போல் பெருமிதத்துடன் பார்ப்போம். கவுன்சிலருக்கு நிற்க கூடிய தகுதியுடன் அனைவருக்கும் வணக்கம் சொல்லிப்போகும் போது நமக்குள் இருக்கும் நாகராஜ சோழன் வெளிப்படுவார். போய் உட்கார்ந்ததும் எல்லாரும் நம்மையே பார்ப்பாங்க. கொஞ்சம் ஷையா தான் இருக்கும். அப்பதான் ஒரு பெருசு கடி ஜோக் சொல்லி சிரிக்க வைக்கும்.
கூட்டத்தினரும் பெருசின் கடைசி ஆசையை நிறைவேற்றுவது போல சிரிச்சு வைப்பாங்க
கொஞ்ச நேரத்தில் பெண் வருவாங்க. பயம், பதட்டம், கூச்சம், ஆவல் என நவரசாவும் பெண்ணின் முகத்திலும், மாப்பிள்ளையின் முகத்திலும் இருக்கும். சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை.. மைண்ட்வாய்ஸ் முணுமுணுக்கும். காபி கொடுக்கும் போது காதலுக்கு மரியாதை ஷாலினி மாதிரி.. பயத்தில் அவங்க கையும் நம்ம கையும் சுகர் லெவல் நானூறை தாண்டியது மாதிரி நடு நடுங்கும்.
பெண்ணுக்கு நம்மை பிடிக்குமானு ஒரு கேள்வி வரும் பாருங்க. சரி எப்பிடியாச்சும் போன் நெம்பர் வாங்கி பேசியே நம்மை பிடிக்க வச்சிடனும் ஒரு வைராக்கியம் பிறக்கும். துடிக்குது புஜம் ஜெயிப்பது நிஜம்னு மனசு உடுக்கை அடிக்கும். தனியா போய் பேசிட்டு வா என யாராவது சொல்லுவாங்களானு அகவிலைப்படி உயர்வை எதிர்பார்க்கும் அரசு ஊழியர் போல காத்திட்டு இருப்பாங்க மாப்பிள்ளைகள்.
பீக் அவர்ல க்ரீன் சிக்னல் விழுந்தது மாதிரி.. சொன்னதும் டீசண்ட்டா அதே நேரத்தில் வேகமா வெட்கப்பட்டது மாதிரி எழுந்து போனேன். போனதும் நலம் விசாரிப்பு, படிப்பெல்லாம் ஃபார்மாலிட்டிக்கு கேட்டேன். சம்பிரதாயத்துக்கு சமைக்கத் தெரியுமானு கேட்டேன். சுடு தண்ணி வைக்க எத்தனை விசில் விடனும்னு கேட்டாங்க.. நான் அப்பிடியே ஆடிப்போய்ட்டேன். அப்ப போன் நெம்பர் வாங்குவது கொரோனா தடுப்பூசிக்கு டோக்கன் வாங்குவது மாதிரி கஷ்டமானது.
அதனால் என்னோட போன் நெம்பர் மட்டும் கொடுத்திட்டு.. பிடிச்சிருந்தா போன் பன்னுங்கனு சொல்லிட்டு வந்திட்டேன். வெளியே வந்ததும் ரத்த தானம் குடுத்து வந்தவனைப் போல பெருமிதமா பார்த்தாங்க. மீண்டும் கும்பிட்டு வந்திட்டேன். அப்புடி ஒரு பூரிப்பு இருந்துக்கிட்டே இருக்கும். வந்து அடுத்த நாளே பெண்ணிடமிருந்து மெசேஜ்.. அப்புறமென்ன பூவரசம்பூ பூத்தாச்சு ஆணுக்கு சேதியும் வந்தாச்சுனு மாப்பிள்ளை ஹேப்பி அண்ணாச்சி.
ஜாதகம் போட்டோ எல்லாம் பிடித்திருந்தால் மட்டும் செல்லவும். அதுவும் கோயிலுக்கு. அங்கும் பார்த்து இருவருக்கும் ஓகேனு தோன்றினால் மட்டும் வீட்டுக்கு செல்லவும். கும்பலாய் செல்லாமல் ஓரிருவர் மட்டும் செல்லவும். ஆள்பாதி ஆடை பாதி என்பது அங்கேதான் வேலை செய்யும். ஆகவே நல்ல ஆடைகளை தேர்வு செய்து அணிய வேண்டும்.
*நூறு நாளில் பணத்தை செலவு செய்யும் அருணாசலம் போல, ஆறு மாசம் தான் உனக்கு குருபலன் வருது.. அதை விட்டால் உனக்கு கல்யாணமே நடக்காது-னு சொன்னதும் பல ஆண்கள் மும்முரமாய் களத்தில் இறங்குவாங்க
*பெண் பார்க்க ஒத்தப்படையில் ஆளுக போனால் நல்லதென்று ஆம்னி வேனில் ஒன்பது பேர் போன கதைகள் உண்டு
*நாம பார்த்த பொன்னுக எல்லாருக்கும் ஈசியா கல்யாணம் நடந்திடும். நமக்கு மட்டும் ஆகவே ஆகாது. அதனாலேயே கல்யாணம் ஆகாத பெண்ணை பார்க்க guest lecturer மாதிரி கூப்பிடுவாங்க. அப்ப அந்த வேதனை இருக்கே வேதனை
*பல வீடுகளில் தையல் மெஷின், கணிப்பொறி இருக்கும். அதை வச்சு எந்த கால்குலேசனும் செய்ய வேண்டாம்.
*CCTV மாதிரி பெண்ணின் தம்பியோ அத்தையோ, சித்தியோ நம்மை கடைசி வரை கவனிச்சிக்கிட்டே இருப்பாங்க
*நண்பர் பெண் பார்க்கப்போன இடத்தில் பெண்ணின் போன் நெம்பர் வாங்கல. குடும்பத்தினரும் வாங்கல. உங்களையெல்லாம் வச்சிட்டு ஒரு கொல கூட செய்ய முடியாதுனு சொல்ல நினைக்கும் போது அவங்க பாட்டி வாங்கி வந்ததை சிலாகித்துச் சொன்னார்
*போன் நெம்பர் வாங்கியதும் முதல் ஒரு வாரம் மெசேஜ் அனுப்ப நல்ல quote-களை ட்ராப்டில் வைத்துக் கொள்ளவும்.
*என் நண்பர் காந்தி போன் நெம்பரை எழுதி சின்னக்கவுண்டர் விஜயகாந்த் மாதிரி இலைக்கு அடியில் வச்சிட்டு வந்துட்டார். அப்புறம் அந்த பெண் கண்டுபிடித்து எடுத்து போன் செய்து பேசியிருக்கார்.
*மாமியாரை அம்மா போல் பார்த்துக்குவாங்க, நகை புடவை மீதெல்லாம் சின்னவயசிலிருந்து ஆசை இல்ல-னு சொல்வதையெல்லாம் இந்த காதில வாங்கி அந்த காதில அங்கியே விட்டிடுங்க.
*உங்க EMI, மாத வருமானம், கடன் பத்தியெல்லாம் முன்பே உண்மையா சொல்லிடுங்க.
பெண் பார்க்க வருவதே ஒரு தவறான அணுகுமுறை தான். அதனை பெண்ணின் இடத்தில் இருந்து பார்க்கும் போது அந்த உளவியல் காரணம் புரியும். ஜவுளிக்கடை பொம்மை போல ஒரு பெண்ணை பார்ப்பது எவ்வளவு சங்கடமானது என்பது தெரியும்.
இருப்பினும் இவை நடந்து கொண்டுதான் இருக்கிறது. முன்பு போல் இல்லாமல் தற்போது நிறைய மாற்றம் கண்டிருக்கிறது. இன்னும் மாற வேண்டும். பெண் பார்ப்பதையே பொழுது போக்காய் எண்ணிக் கொண்டிருப்போர் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது போல் அவர்களை ஒரு கட்டத்துக்குப் பின் பெண்கள் ஒதுக்க ஆரம்பிக்கின்றனர்.
25 வயதில் சலித்து தேடி பின் 35 வயதில் தேடி சலித்துவிடுகின்றனர். எல்லோருக்கும் காதல் திருமணம் அமைவதில்லை. பெற்றோரின் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்து அரேஞ்சு மேரேஜ் செய்கின்றனர் பலர். இதில் மெயின் வில்லனாய் ஜாதகம் தான் இருக்கிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். குறிப்பிட்ட நட்சத்திரம், குறிப்பிட்ட ராசியில் தான் இருக்க வேண்டுமென்ற நிபந்தனையை தருகிறது.
மாறாக குடும்பம், குணநலனுக்கு முக்கியத்துவம் தந்தால் இன்னும் நம்பகத்தன்மை ஏற்படும். அளவாய் ஓரிருவர் மட்டும் சென்று பொது இடத்தில் பார்த்துவிட்டு வந்து பிடித்தால் மட்டும் வீட்டிற்கு செல்லலாம். பெண்ணை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் உறவினர் மற்றும் சுற்றத்தாரின் முன் ஏற்படும் அவமானம் ஒரு பெண்ணுக்கு பெரிது. ஆகவே நன்கு யோசித்து இருவரும் பிடித்திருந்தால் மட்டும் உறுதி செய்ய பெண் பார்க்கச் செல்லலாம்.
Marriage is a Necessary Risk. திருமணம் என்பது தேவையான ஆபத்து என்பார்கள். உங்கள் வாழ்க்கைத் துணையை சரியாக தேர்ந்தெடுப்பதில்தான் உங்கள் நூறு சதவீத வெற்றி அமைந்துள்ளது.
-மணிகண்டபிரபு
Thursday 26 August 2021
பலாவின் சுளை
படித்தது
Tuesday 24 August 2021
முருகேஷ்
அப்துல்ரகுமான்
Monday 23 August 2021
மஸ்தான்
அண்ணா
Sunday 22 August 2021
படித்தது
Saturday 21 August 2021
சென்னை தினம்*மணி
Friday 20 August 2021
பாலோ கொயலோ
உங்கள் மதிப்பை எப்போதும் உணர்ந்திருங்கள் ".
Wednesday 18 August 2021
Deddy Bear
பெவிகால் போன்ற ஒட்டும் திரவங்கள் அதனுடைய டப்பாக்களில் ஒட்டாமல் வருவது எப்படி?
Tuesday 17 August 2021
Sunday 15 August 2021
உருது கவிதை
நெரூடா
தாவோ
Saturday 14 August 2021
வெ.சாமிநாதசர்மா
Friday 13 August 2021
Cobra Effect
90ஸ் கிட்ஸ் இந்த வண்டிகளை மறக்கவே மாட்டாங்க! - விண்டேஜ் மெமரீஸ்
என் முதல் பைக்கை வாங்கிய போதுதான் உலகின் எல்லாச் சாலைகளும் எனக்கும் சொந்தம் என்பதை உணர்ந்தேன்!-மகுடேசுவரன்
90-களில் டயர் வண்டியும், சைக்கிளும் ஓட்டிக் கொண்டிருந்த வாண்டுகளுக்கு பைக் என்றாலே கொள்ளைப் பிரியம். உறவினர் வைத்திருக்கும் பைக்குகளில் ஹாரன் அடிப்பது, தொட்டுப் பார்ப்பது, துடைத்துப் பார்ப்பது என அலாதிப் பிரியம் வாகனங்களின் மீது. ஆதார் கார்ட் இல்லாத ஊழியனாய் குடும்பத்தில் ஒருவனாய் வாகனங்களைப் பார்த்த காலகட்டம்.
இன்று வாகனம் ஓட்டும் அனைவரிடமும் ஏதேனும் ஒரு நாள் தான் கண்ட கனவின் பெருமிதம் இருக்கத்தான் செய்கிறது.
90-களில் வளர்ந்தவர்கள் சைலன்சரில் வரும் பெட்ரோல், டீசல் புகையை முகர்ந்து பார்ப்பது, சென்டர் ஸ்டாண்ட் போட்டு முன் சக்கரத்தை முடிந்த மட்டும் சுற்றிச்சென்று ஓடி வேக முள்ளைப் பார்ப்பது, ஒவ்வொருவரும் வண்டியில் எப்படி உட்கார்ந்து ஓட்டுவார்கள் என இமிட்டேட் செய்வது.. என அன்றைய நாள் வாகனம் குறித்த கனவு அலாதிப் பிரியம். அசோகமித்திரனின் கதையில் சொன்னதைப் போல இரும்புக் குதிரையை அடக்கிய கர்வமும், பெருமையும் சூழ முறைத்தபடியே வாகனம் ஓட்டுவது வழக்கமாகிவிட்டது ஆண்களுக்கு.
அந்த ப்ளாஸ்பேக்கை அப்பிடியே திரும்பிப்பார்த்தால்..
Motor with pedal என்பதுதான் Moped என்று அன்று அறிந்த பொது அறிவை பெருமை பொங்க வகுப்பறையில் சொன்ன காலம். நாலாவது சாரின் டி.வி எஸ் வெளிர் சிவப்பு போல இருக்கும். ஆனால் அஞ்சாப்பு சாரின் வண்டியோ பச்சை கலரில் வித் பாக்ஸ் சைடில் இருக்கும். அதை துடைப்பதற்கு தான் அலாதிப்பிரியம்.
"ஒரு அம்பாசிடர் காரில் குழந்தையை கடத்திக் கொண்டு போவாங்க.. செய்வதறியாது திகைத்து நிற்கும் போது ஒருவர் TVS-50ல் வருவார். இருவரும் விரைந்து வண்டியில் சென்று மடக்கி.. குழந்தையை மீட்பர்.
நம்ம ஊரு வண்டி TVS-50என விளம்பரத்தை பார்த்து பார்த்து வண்டி வாங்காமலே டி வி.எஸ்ஸை லவ் பன்னினது காதல் கோட்டைக்கு முந்தைய வெர்சன்.
லூனாவின் அடுத்த வெர்சன் தான் TVS-50. எந்தப் பொருளையும் எடுத்துச்செல்ல இடைவெளி விட்டு இருந்தது தவமின்றி கிடைத்த வரமாய் அமைந்தது பலருக்கு.குறிப்பாய் சிலிண்டர், தண்ணீர் குடம் தூக்கிச்செல்வது நடுத்தரமக்களுக்கு உபயோகமாய் இருந்தது.இண்டிகேட்டர் எல்லாம் இருக்காது..கை நீட்டியே சிக்னல் செய்வார்.கருப்பு கலரில் மூன்று ஸ்விட்ச் இருக்கும்.இரண்டு லைட்டுக்கும்,ஒன்று ஹாரனுக்கும், வண்டி ஆஃப் செய்ய சதுரமாய் ஓரத்தில் ஒட்டி இருக்கும்.அந்த ஸ்விட்சை அழுத்தித்தான் விளையாடுவோம்.இதற்கு அடுத்த மாடலாய் TVS Champ வந்தது. சீட்டின் அடியே வளைந்து இருப்பது ஒரு மாடர்ன் லுக் தந்தது.
#சுசுகி சாமுராய் நோ ப்ராப்ளம்
1984ல் சுசுகி நிறுவனம் இந்தியாவுடன் இணைந்து மோட்டார் சைக்கிளை தயாரித்தது.பின் 1987ல் டி.வி எஸ் உடன் இணைந்து தயாரித்து புகழின் உச்சிக்குச் சென்றனர்.அடுத்து supra,supra ss,shogun, samurai,shaolin ஆகியவை. இதில் சாமுராய் பைக் விளம்பரத்தில் ஜப்பானியர் நோ ப்ராளம் னு சொன்னது அன்றைக்கு வைரலாய் பரவியது.
இளைஞர்களிடம் அதிகம் வரவேற்பு கிடைத்தது. மே மாதம் படத்தில் ஹீரோயின் ஒரு பாடலில் ஓட்டிவருவது பெரிதாய் பேசினாங்க.
Suzuki RX100- ஸ்டார்ட் செய்தாலே குதிரையின் கனைப்புடன் சீறிப்பாயும் சுசுகி பலரின் கனவு பைக்காக அப்போது விளங்கியது. நீலம் மற்றும் சிவப்பு வண்ணங்களில் குடும்பத்தின் ஸ்டேட்டஸ் ஐகானாக இருந்தது.
#ஸ்கூட்டர்
முதன்முதலில் எங்கள் ட்யூசன் வாத்தியார் தான் நீலக்கலர் ஸ்கூட்டர் வச்சிருந்தார். எப்படி, கிராமத்தில் சாமியாடி வரும் கருப்பசாமி முன்னால போக பயப்படுவோமோ அப்படி அவர் வண்டியை நிறுத்த வரும் போது எதிரில் வந்தால் அவ்வளவுதான். ஒன் சைட் என்ஜின் இருப்பதால் ஸ்டார்ட் செய்யும் போது பாம்பு கடிச்சவனை படுக்க வைப்பது போல் மெல்ல படுக்க வைத்து தூக்கி உதைத்தால் ஸ்டார்ட் ஆகிடும். கல்லும் முள்ளும் டயருக்கு பஞ்சர் எனும் நிலையில் ஸ்டெப்னி வண்டியின் பின்னாலேயே மாட்டப்பட்டிருக்கும்.அன்றைய வரதட்சணையில் ஸ்கூட்டருக்குத்தான் முதல் உரிமை.
பஜாஜ் நிறுவனம் இதில் வெற்றிக்கொடி நாட்டியதால் யமஹா நிறுவனம் ஸ்கூட்டர் டைப் தயாரிக்காமல் பைக் மட்டும் அப்போது தயாரித்தது.
மலிவு விலையில் ஹாமாரா பஜாஜ் என்று அழைக்கப்பட்ட பஜாஜ் சேட்டக், பஜாஜ் சூப்பர் மற்றும் பஜாஜ் பிரியா போன்ற பல ஸ்கூட்டர்களை பஜாஜ் உருவாக்கியுள்ளது.இதில் சடாக் வண்டிபிரிமியம் கட்டி காத்திருந்தனர்.வீட்டிற்கு லெட்டர் வந்தால் பம்பர் பரிசு சீட்டு விழுந்த ஆனந்தம்.
#Yamaha RX100
Yamaha என்ற பேச்சினிலே உயிர் சக்தி பிறக்குது மூச்சினிலே. என்றுதான் சொல்லனும்.
இந்திய தெருக்களின் ராஜாவாக வலம் வந்தது. அந்த இஞ்சின் சத்தம் தான் இளைஞர்களின் ரீங்காரம். இன்னும் பலர் விற்காமல் பொக்கிசமாய் பாதுகாக்கின்றனர். மற்ற வாகனங்களை போல் அல்லாமல் யமஹாவின் கியர் முறை முன்னும் பின்னும் வித்தியாசமாய் அமைந்திருக்கும். எப்பிடியோ அழுத்தி அழுத்தி நியூட்ரல் கொண்டு வருவது பப்ளிக் எக்ஸாமில் பத்து மார்க் கணக்கு போடுவது மாதிரி. அதிலே மனைவியை உட்கார வைத்துக் கொண்டு செல்வது காதலியையும் மனைவியையும் ஒரு சேரக் கையை பிடித்துக் கொண்டு அழைத்துச் செல்வது போல் அலாதியானது.
இன்றும் இளைஞர்களின் விரும்பத்தகுந்த வாகனம் என்றால் ஹீரோ ஹோண்டாதான். மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும் போது கடல் அலைபோல் முன்சக்கரம் ஏறி இறங்குவது தனி அழகு. CD 100 வெற்றி அடைந்ததை தொடர்ந்தது CD 100SS என விற்பனையில் உயர்ந்த போது அடுத்து வந்த Splender, பட்டி தொட்டி எங்கும் புகழ் பரவியது. அதிலும் கருப்பு கலர் ஸ்பெலெண்டர் எடுத்தால் மைலேஜ் அதிகம் கிடைக்கும் என்பது பெப்ஸி உங்கள் சாய்ஸ்க்கு அப்புறம் அநேக மக்களின் சாய்ஸ் அதுதான். காதலுக்கு மரியாதை படத்தில் விஜய் ஓட்டி வரும் ரெட் கலர் வைசர் அனைவரையும் எடுக்க தூண்டியது. தொடர்ந்து splender+, CD Dawn, passion என சக்சஸ் பார்முலா தொடர்ந்தது.
#ராஜ்தூத்
RD என்றும் அழைக்கப்படும் ராஜ்தூத்.
ஒருகாலத்தில் கார்காரர் வீடு என தனிச்சிறப்புடன் அழைப்பது போலத்தான் ராஜ்தூத்காரர் வீடு என அழைப்பதும். அந்த வண்டியை துடைக்கிற துணியாக மாட்டோமானு ஏங்கிய காலமெல்லாம் உண்டு.
Yezdi Roadking 250 என்றால் ராஜ்தூத் 350சிசி. யமாஹாவின் மூத்த குடும்ப வாரிசாக இருந்தாலும் அதிக எரிபொருள் நுகர்வு காரணமாக வணிக ரீதியில் வெற்றி பெறவில்லை எனக்கூறினர்.
இந்திய மோட்டார் சைக்கிள் நிறுவனம் 1960 இல் ஜாவா மற்றும் எஸ்டி என்ற பிராண்ட் பெயரில் மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்தியது. Java ஹெட்லைட்டின் மீதுதான் சாவிபோடும் துவாரம் இருக்கும். கிக்கரும் அதுதான், கியர்போடுவதும் அதுதான்.இரண்டு சைலென்சர் இருக்கும்.புடுபுடுபுடுனு வரும் போது வீதியே வெறிக்க வெறிக்க பார்க்கும்.
மிகவும் பிரபலமான மாடல் எஸ்டி ரோடிங் மற்றும் ஜாவா அதன் செயலில் பந்தயத்திற்கு பெயர் பெற்றது
#கைனடிக் ஹோண்டா
மென்மையான ஆண்களுக்கு ஏற்றது என சொல்லப்பட்டது கைனடிக் ஹோண்டா. கியர் இல்லாத வகையில் புதுமையான முறையில் தயாரான வாகனங்கள் பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு அருமருந்தாய் கிடைத்தது. வெஸ்பா, சுவேகா, ஹீரோ puch அறிமுகமாகி வெற்றி பெற்றவுடன் லூனா வந்து பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. உதைக்காமல் எலக்ட்ரிக் ஸ்டார்டருடன் வந்ததுதான் கைனடிக் ஹோண்டாவின் ஸ்பெசல்.
அதன் பின் கல்லூரி மாணவிகள் sunny bike பிரபலமானது.எடை குறைவு, 60சிசி ஓட்டுவதற்கு எளிதானதாய் இருந்தது. ஹீரோ puch (Now you’ve got the Power) பல சிறுவர்களின் முதல் தேர்வாய் இருந்தது.ஜாமின்ட்ரி பாக்ஸ் பரிசளிப்பது போல் 3 வேரியண்ட்டுகளில் வந்த பைக்கினை பெற்றோர்கள் பரிசளித்தனர்.
#M80
கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை போல் பைக்,ஸ்கூட்டரின் கலவையாய் பஜாஜ் நிறுவனத்தாரால் உருவாகி வெற்றி நடை போட்டதுதான் M80.
இன்றும் இருசக்கர வாகன லைசென்ஸ் எடுக்க இந்த வண்டியில் அமர்ந்து முதல் கியர் போட்டால் போதும். அதுவே எட்டு போட்டுட்டு வந்திடும் அளவுக்கு பயிற்சி பெற்றது.கிராமம் என்றால் வயல் வெளியுடன் நினைவுக்கு வருவது எம்80 தான்.தொடர்ந்து M80 மேஜர் 4S,92 சிசி, 4-ஸ்ட்ரோக் எஞ்சின் அறிமுகமானது. பால்காரர்களின் பாரம்பரிய வாகனமாகவே மாறியது.
#ராயல் என்பீல்டு
இன்றுவரை அதன் தனித்துவத்தை இழக்காதது இதுதான். கம்பீரம், ஸ்டைல் என வாகன ஓட்டிகளின் எவர்கிரீன் ப்ரைம்.. ராயல் என்பீல்டுதான். 1994 ஆம் ஆண்டில், இந்நிறுவனம் 500 சிசி ஸ்டாண்டர்டின் பதிப்பை அறிமுகப்படுத்தியது அதிக சிசி உள்ள பைக்கை உருவாக்கியது போலவே குறைவான 25சிசி கொண்ட Mofa பைக்கினையும் என்பீல்ட் நிறுவனம் உருவாக்கியது.
30சிசிக்கு கீழே இருந்ததால் ரிஜிஸ்ட்ரேசன் இல்லை என சொன்னார்கள்.
*பஜாஜ் செடக்கில் செடக் என்பது அந்தக்கால மஹாராணா பிரதாப்பின் குதிரையின் பெயர்
1576ல் ஹட்லிகாட்டி போரில் சேடக் மகாராணாவின் உயிரைக் காப்பாற்றினார்.இந்த வாகனத்தை வைத்திருப்பவர்கள் சாதாரண மக்களாக இருந்தாலும், இந்த வண்டியின் அற்புதம் எப்போதும் அதன் உரிமையாளரை மகாராணாவை போல் உணர வைத்தது.
*நவீன யுகத்தில் ஹைட்ராலிக் பிரேக்குகளை அறிமுகப்படுத்திய முதல் மோட்டார் சைக்கிள்களில் Hero Honda CBZ ஆகும்.
*மற்ற பைக்குகள் டீசல் போட்டால் ஓடாது.ஆனால் புல்லட்களில் சிறிய மாற்றம் செய்தால் டீசலில் ஓடும் பழைய மாடல்களில் கேஸ்ட்டைன் வடிவமைப்பில் உடல் இருந்ததால் மைலெஜ் குறைவு.தற்போது இன்டாலியம் மாற்றியதால் நல்ல மைலேஜ் கிடைக்கிறது.
*புல்லட்டில் மட்டும் நான்காவது கியரில் இருந்து நேரடியாய் நியூட்ரல் கொண்டு வரும் முறை இருந்தது. வலது பக்க சின்ன லிவரை அமிழ்த்தினால் போதுமானது
*இடது பக்கம் பிரேக், வலது பக்கம் கியர் முறை இருந்தது புல்லட்டில். இந்திய முறைப்படி மாற்றி அமைத்தனர்.அந்த கிக்கரை உதைக்கவே தனி கட்ஸ் இருக்கனும்.
சென்னையை சேர்ந்த எனது நண்பர் சிவ தினகரன் பழைய வாகனங்களின் காதலர். 90களில் வந்த வெஸ்பா பைக்கை மணப்பாறையில் வாங்கிக் கொண்டு சென்னை வரை ஓட்டிக்கொண்டே சென்றுள்ளார் என்பது ஆச்சர்யமளித்தது.அவர் சொல்லுவார்
ராஜ்தூத்- பண்ணையார்கள்,
லூனா-ஆசிரியர்களுக்கு
புல்லட்-போலீஸ்,மிலிட்டரி ஆபிசர்ஸ்
TVS-50-விவசாயிகள்
M80-கிராமத்து ராஜா
ஸ்கூட்டர் -குடும்பஸ்தர்கள்
யமஹாRX100- கல்லூரி மாணவர்
சன்னி-கல்லூரி மாணவிகள்
என 90களின் வாழ்வை பிரிக்கலாம்
நினைவுகளை அசைபோடுவதில்
அந்த காலம்.. வாகன ஓட்டிகளுக்கு என்றும் வசந்த காலமே
-மணிகண்டபிரபு