[29/07, 10:22 am] TNPTF MANI: கலைஞர் உடல் நலக்கோளாறால் ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது டாக்டர் கூறுகிறார்.
“மூச்சை நல்லா இழுத்துப் புடிங்க” (கலைஞர் மூச்சை இழுத்துப் பிடிக்கிறார்)
“இப்போ மூச்சை விடுங்க”
“மூச்சை விடக்கூடதுன்னுதான் டாக்டர் நான் மருத்துவமனைக்கே வந்திருக்கேன்”
[29/07, 10:22 am] TNPTF MANI: ஹாக்கிப் போட்டி ஒன்றிற்கு கலைஞர் பரிசளிக்க வந்திருக்கிறார். இரண்டு அணிகளும் சமமான கோல். டாஸ் போடப்படுகிறது. “தலை” கேட்ட அணி தோற்று, “பூ” கேட்ட அணி ஜெயிக்கிறது.
கலைஞர் இப்போது பேசுகிறார்.
“இது நாணயமான வெற்றி. நாணயத்தால் தீர்மானிக்கப்பட்ட வெற்றி. “தலை” கேட்டவர்கள் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார்கள். ஏனென்றால் “தலை” கேட்பது வன்முறை அல்லவா?” என்றார் கலைஞர்.
[29/07, 10:22 am] TNPTF MANI: கவியரங்கம் ஒன்றில் புலவர் புலமைப் பித்தன் ஈழத்தைப் பற்றி ஒரு கவிதை பாடுகிறார். “கலைஞரே எனக்கொரு துப்பாக்கி தாருங்கள்!”“ என்று ஆவேசத்துடன் முடிக்கிறார். கலைஞர் வசம்தான் அப்போது காவல் துறை இருக்கிறது. “புலவேரே! வேறு ஏதாவது ‘பாக்கி’ இருந்தால் கேளுங்கள். துப்”பாக்கி” மட்டும் என்னால் தர இயலாது”
[29/07, 10:22 am] TNPTF MANI: கவிஞர் கண்ணதாசன் தி.மு.க.வில் இருந்த போது கலைஞர் அவரிடம் கேட்கிறார்.
“இந்த முறை தேர்தலில் எங்கு நிற்கப் போகிறீர்கள்..?
” எந்த தொகுதி கேட்டாலும் ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி மறுத்து விடுகிறீர்கள். நான் இம்முறை தமிழ்நாட்டில் நிற்கப்போவதில்லை. பாண்டிச்சேரியில் நிற்கப் போகிறேன்..!”
சிரித்தபடி தனக்கே உரித்தான பாணியில் கவிஞருக்கு இருக்கும் மதுப்பழக்கத்தை மனதில் கொண்டு …
” பாண்டிச்சேரி போனா உங்களால் நிற்க முடியாதே..!”
[29/07, 10:22 am] TNPTF MANI: ஒருமுறை செல்வி ஜெயலலிதா “நான் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு நன்மை செய்வேன்” என்று கூறியபோது “அம்மையார் ஆட்சியில் இல்லாமல் இருப்பதே மக்களுக்கு செய்யும் பெரிய நன்மைதான்” என்றார்.
[29/07, 10:25 am] TNPTF MANI: ஒலிபெருக்கியில் கட்சிக்காரர்: அடுத்து மீன்வளத்துறை அமைச்சர் பேசுவார் (பேச எழுந்த அமைச்சரின் காதில் கலைஞர் கிசுகிசுக்கிறார்.”அயிரை மீன் அளவுக்குப் பேசு, அதிகமாய் பேசாதே!” இதனை ஒரு நிகழ்ச்சியின்போது கவிஞர் வைரமுத்து சொன்னது.
[29/07, 10:25 am] TNPTF MANI: 1970 களில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அரசுப் பேருந்துகளில் திருக்குறள் எழுதி வைக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது, இதன் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் கருத்திருமன், விளையாட்டாக,
பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும்
(பெரியாரை மதிக்காமல் நடந்துகொண்டால் பெரும் துன்பத்தை அனுபவிக்க வேண்டி வரும்)
என்ற குறளை ராஜாஜி வீட்டிலும்
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
( இறைவன் திருவடிகளை வணங்காவிட்டால், படித்தும் பயனில்லை)
என்ற குறளை பெரியார் வீட்டிலும் வைக்க அரசு ஏற்பாடு செய்யுமா என்று கேட்டார்.
முதல்வர் கருணாநிதி உடனே எழுந்து,
”யார் வீட்ட்டில் எந்த குறளை வைக்கிறோமோ இல்லையோ
யாகவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
என்ற குறளை கருத்திருமன் வீட்டில் வைக்க நிச்சயமாக ஏற்பாடு செய்யப்படும்’ என்றார். அவையில் சிரிப்பலை எழுந்தது
[29/07, 10:25 am] TNPTF MANI: ஆர்.சிங்காரம்: ‘‘இந்த சட்டமன்றத்தில் நிலைய வித்வான்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள்தான் எப்போது பார்த்தாலும் வாசித்துக் கொண்டே இருக்கிறார்கள். இது நியாயம்தானா? புதிய வித்வான் களுக்கு வாய்ப்பு தர வேண்டாமா? நாங்கள் எல்லாம் புதிய வித்வான் கள்!’’
கருணாநிதி: ‘‘நான் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக இங்கே இருக்கிறேன். நானும் பழைய நிலைய வித்வான் தானா? நான் வாசிக்கலாமா, கூடாதா?’’
[29/07, 10:25 am] TNPTF MANI: வி.பி.துரைசாமி: ‘‘ஆஞ்சநேயர் கோயிலில் அசையும் சொத்து எவ்வளவு? அசையா சொத்து எவ்வளவு?’’
கருணாநிதி: ‘‘அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து ஆஞ்சநேயர்!’’
[29/07, 7:25 pm] TNPTF MANI: வெல்வதற்காக அல்ல
விளையாடுவதற்காகவே விளையாட்டு
-படித்தது
[29/07, 7:34 pm] TNPTF MANI: பாதை ஒன்று கிடைத்திருக்கிறது வெகு தூரம் நடக்க நான் மட்டும் போதும், வெகுநேரம் நடக்க நீயும் வேண்டும்.
-நித்திலன்
[29/07, 7:36 pm] TNPTF MANI: ஜன்னலை திறந்தேன்
அகப்பட்டது வானம்
"இணையம்"!
[29/07, 7:43 pm] TNPTF MANI: அசோகப் பேரரசு,
மெளரியப் பேரரசு,
முகலயாப் பேரரசு
எல்லாவற்றையும்
எல்லை பிரித்து
வர்ணம் அடித்துக்
காட்டிய கலர் பென்சில்
என் பரணில் கிடைத்தது
நேற்று.
அந்தப் பேரரசுகள்
கிடக்கின்றன
வேறு ஒரு பரணில்.
#முகுந்த்_நாகராஜன்
[29/07, 7:47 pm] TNPTF MANI: கோபங்கள் மோதிக் கொண்டன.
கருத்துக்கள் உடைந்து கிடந்தன.
-ராஜா சந்திரசேகர்
[30/07, 6:42 am] TNPTF MANI: நீங்கள் ஏற்றுக்கொண்டால் உண்டு, இல்லையேல் சந்தேகம் உங்களுடையது, உண்மை என்னுடையது,அவ்வளவுதான்.
- லாசரா,
[30/07, 6:47 am] TNPTF MANI: அழைத்துப் போய் வந்த
ஆசிரியரின் அத்தனை
கெடுபிடிகளுக்குப் பின்னும்
இன்னமும் நினைவில்
அந்த ஸ்கூல் பயணம்
இன்பச் சுற்றுலா என்றே..!”
-செல்வராஜ் ஜெகதீசன்.
[30/07, 12:30 pm] TNPTF MANI: ஒரு வலுவான
உலுக்கலுக்கு
உள்ளத்தை
உட்படுத்தியபோது
வினா,துணைவினாக்கள்
உள் வினாக்கள்
சடசடவென உதிர்ந்துவிட
நின்றேன்
பளிச்சென்று
ஒரு விடையாக
ஆயினும்
எந்த வினாவின் விடையாக நான்?
-தமிழன்பன்
[30/07, 12:50 pm] TNPTF MANI: எண்களில் 4 என்ற எண் மட்டுமே
தன் பொருளுக்கேற்ப அதே எண்ணிக்கையிலான எழுத்துக்களை கொண்டுள்ளது
[30/07, 1:00 pm] TNPTF MANI: தந்தது எதையும்
கேட்பதில்லை உலகம்
உலகம் போல்
உள்ளம் வேண்டும்
-ராஜா சந்திரசேகர்
[30/07, 8:08 pm] TNPTF MANI: நீ அருந்தும் மெளனத்தில்
என் ஏதோ ஒரு சொல்
இனிப்பாக இருக்கக்கூடும்
-ராஜா சந்திரசேகர்
[30/07, 8:14 pm] TNPTF MANI: நட்பு புரிதலோடு இருக்கும் வரை நன்றாக இருக்கும்.எடை போடுதலாக மாறும் போது உடைந்து விடும்
-படித்தது
[31/07, 7:21 am] TNPTF MANI: மகுடேசுவரனின் 'சென்ட் ரப்பரை'
நான் திருடியதாய் நினைத்து
முழிகளை வீங்கவைத்த
இரண்டாம் வகுப்பு மிஸ்ஸிற்கு
குற்றத்தை நிரூபிக்கக் கிடைத்த
ஒரே தடயம்
என் கறுப்பு முகம்
- நிறமறியா தூரிகை.
[31/07, 7:24 am] TNPTF MANI: மனிதனாய் இரு;
மனிதனுக்கு அடிமைப்பட்டவனாய் இராதே!
உன் பாதையை நீயே வகுத்துக்கொள்
வழிகாட்டியை தேடி அலைந்து தலை கிறுகிறுக்கும் ஒருவனாக இருக்காதே"
-ரூமி
[31/07, 7:34 am] TNPTF MANI: என்னை எடை போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல நான் விலைபொருளும் அல்ல
-படித்தது
[31/07, 12:52 pm] TNPTF MANI: குறை சொன்னது யார் என்பதை இரண்டாவது பார்
சொல்லப்பட்ட குறை
உன்னிடம் உண்டா
என்று முதலில் நீ பார்!
[31/07, 10:29 pm] TNPTF MANI: காலம் எந்தக் காயத்தையும் ஆற்றுவது இல்லை அது நம் மனதைப் பக்குவபடுத்துகிறது..அவ்வளவே...!!
-படித்தது