ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு கவிதா பப்ளிகேஷன்..
படிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே ஜெயகாந்தன் சிறுகதைகளை பற்றி பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.. ஆனால் அங்கொன்றும் இங்கொன்றும் ஒரு ஏழு எட்டு கதைகள் மட்டுமே படித்திருப்பேன்.. நீண்டகாலமாகவே அவருடைய சிறுகதைகள் முழுவதையும் படிக்க வேண்டும் வேண்டும் என்ற ஆசை இருந்துகொண்டே இருந்தது.. தற்போது அதற்கான ஒரு வாய்ப்பு அமைந்தது.. கவிதா பப்ளிகேஷன் வெளியிட்டுள்ள இந்த ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுத் தொகுப்பும் சேர்ந்து 1750 பக்கங்கள் வரும் என்று நினைக்கின்றேன்.. மொத்தம் 136 சிறுகதைகள் உள்ளன.. ஒரு வாரத்தில் மொத்தக் கதைகளையும் படித்து முடித்துவிட்டேன்.. மிகவும் அற்புதமான கதைகள்.. இவ்வளவு காலமாக படிக்காமல் விட்டு விட்டோமே என்று ஒரு எண்ணம் தோன்றியது..
வெவ்வேறு விதமான மனிதர்கள், வெவ்வேறு விதமான வாழ்க்கை முறை, வெவ்வேறு விதமான எண்ணங்கள், வெவ்வேறுவிதமான உறவுமுறை என்று பலதரப்பட்ட மாந்தர்களின் உணர்வுகள், உறவுகள் என்று கதைகளாக மாற்றப்பட்டுள்ளது..
பெரும்பாலான கதைகள் எளிய மக்களின் வாழ்க்கை முறையை பேசுகின்றன.. முன்னுரையாக நவ பாரதி அவர்கள் அவர்கள் 40 பக்கங்கள் எழுதியுள்ளார்.. அதை படித்துவிட்டு கதைகளை படிக்காமல், அனைத்து கதைகளையும் படித்து விட்டு முன்னுரையைப் படிக்கும்போது மிகவும் நன்றாக உள்ளது.. முன்னுரையை பின்னுரையாக படிக்க வேண்டும்..
காந்தி ராஜ்யம் என்ற கதையில் சுதேசி இயக்கத்தில் கலந்துகொண்டு உயிரைவிட்ட சுதந்திரப்போராட்ட சுதந்திரப்போராட்ட வீரரின் மகன் சைனா பஜாரில் பொருட்களை விற்கும் காட்சி,
தமிழச்சி என்ற கதையில் கண்ணகியும் இளங்கோவடிகளும் மீண்டும் பூமிக்கு வந்து தற்போதுள்ள நாட்டை பார்த்து வெட்கப்படுவது போன்ற ஒரு காட்சி,
ஒரு பிடி சோறு கதையில் பிடி சோற்றுக்கு அல்லல் படும் காட்சி,
தாம்பத்தியம் கதையில் வீடு இல்லாத ஏழை திருமணம் செய்துகொண்டு பக்கத்தில் உள்ள பூங்காவில் முதலிரவு நடக்கும் நடக்கும்போது விபச்சாரம் செய்ய வந்தவர்கள் என்று போலீஸ் கூட்டிச் செல்லும் செல்லும் காட்சி இன்னும் இதுபோல பல நூறு காட்சிகளை அவரது கதைகளில் இருந்து சொல்லிக்கொண்டே போகலாம்..
அந்தரங்கம் புனிதமானது, பொம்மை, பத்தினிப் பரம்பரை, லவ் பண்ணுங்க சார், அடல்ஸ் ஒன்லி, உண்மை சுடும்,
பூ உதிரும், ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின், விளக்கு எரிகிறது, அக்னிப்பிரவேசம், இறந்த காலங்கள், அக்ரஹாரத்துப் பூனை, கோடுகளை தாண்டாத கோலங்கள், தவறுகள் குற்றங்கள் அல்ல, அந்த உயிலின் மரணம், புது செருப்பு கடிக்கும், அரை குறைகள், புகை நடுவினிலே, ரிஷி பத்தினி, ரிஷி குமாரன் போன்ற எண்ணற்ற கதைகள் நினைவில் நீங்காமல் மனதை அரிக்கின்றது..
ஒவ்வொரு கதையிலும் பலவிதமான உளவியல் சிக்கல்கள், பாலியல் சிக்கல்கள், மனச்சிக்கல்கள், பண சிக்கல்கள் என்று பல யதார்த்த யதார்த்த கதைகள்..
ஏழைகள், பணக்காரர்கள்....
வீடு இல்லாதவர்கள்,
குடிசை வீட்டில் வசிப்பவர்கள், பங்களாவில் வசிப்பவர்கள்,
சாலையோரத்தில் வசிப்பவர்கள், நாடோடிகளாக திரிபவர்கள்....
தொழிலதிபர், பிச்சைக்காரன், விபச்சாரி, குமாஸ்தா, கிளர்க், ரிகஷாக்காரன், சோற்று மூட்டை தூக்கி வியாபாரம் செய்பவர், கைவண்டி இழுப்பவன், மளிகை கடை, துணி வியாபாரம் போன்ற பல தொழில் செய்பவர்கள்..
பிராமணர், செட்டியார், முதலியார், அருந்ததியர், நாயுடு, ஆதிதிராவிடர் போன்ற பல ஜாதியினர்...
என்று அனைவருடைய வாழ்க்கையும் கதைகளில் புகுத்தியுள்ளார்..
ஜெயகாந்தன் சிறுகதை தொகுப்பில் இருந்து அவருடைய சில வரிகள்..
எப்பொழுதும் ஏதோ தப்பு செய்துவிட்டோம் என்று நினைத்துக் கொண்டே இருந்தால்
யார் என்ன கேட்டாலும் தப்பாதான் படும்..
ஒரு நியாயத்தின் அடிப்படையில்தான் சில நிர்ப்பந்தங்கள் நேர்கின்றன..
பயந்து நடுங்குகிறவர்களுக்குக் கூட தன்னை விட பயந்து நடுங்குகிற இன்னொரு துணை இருந்தால் ஒரு தைரியம் பிறக்கும்..
மனிதனே ரொம்ப பழமையான உலோகம்தான்..
காலம் தான் அவனை புதிது புதிதாக வார்க்கிறது..
கெட்டவனா எல்லாருக்குமே கெட்டவங்களா இருந்திடுவாங்கன்னு நினைக்கிறது சரியா..
ஆசையும், உறவும் மனசிலே ஆழமாக இருந்தால் உதட்டோட சொல்ற வார்த்தை எல்லாம் அனாவசியம் என்று தோன்றுகிறது..
இயற்கையிலே ஒரு சிக்கலும் இல்லை.. சிக்கலே இல்லை என்றால் அது செயற்கையே இல்லை..
தாய்ப் பாலில் என்னென்ன வைட்டமின் இருக்கு என்று தெரிந்து கொண்டா குழந்தை குடிக்கிறது..
எல்லா விஷயங்களிலும் ஏதோ ஒரு மகத்துவம் நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கிறது..
வாழ்வைப் புரிந்து கொண்டு அதன் பொய்யான மயக்கத்திற்கு ஆட்படாமல் வாழ முயல்வது தான் துறவு..
பூ உதிரும் ஆனாலும் புதுசு புதுசாக பூக்கும்..
அழகுங்கிரது ஒரு வேஷம் தான், வேஷங்கள் கலைக்கப்பட வேண்டியவை தான்..
வாழ்க்கை பழசே ஆவதில்லை, அது ஒவ்வொரு வினாடியும் புதுசு புதுசாக பூக்கிறது..
மனசு இருக்கே அது ரொம்ப பொறுக்கி..
சும்மா சொல்லிக்கிறது தான் மனசு சலிச்சு போச்சு, வெறுத்துப் போச்சு என்று அனுபவித்தவனுக்கு எதுவும் சலிப்பதில்லை..
கெட்டுப் போறதுன்னாலும் சிலபேர் ஓசியில தான் கெட்டுப் போவார்கள்..
வாழ்க்கையே உறுத்தல்களும் சமாதானங்களும்தான்..
அழகு என்றால் நீங்கள் என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ எனக்கு தெரியாது..
என்னைப் பொறுத்தவரை ஒன்றின் நினைவே சுகம் அளிக்கிறது என்றால் அது ரொம்ப அழகாகத்தான் இருக்க வேண்டும்..
ஆசைதான் மானத்துக்கு பகைவன்..
வயது வேறு அனுபவம் வேறு.. அனுபவம் வேறு அதிலிருந்து பெறுகின்ற முதிர்ச்சி வேறு..
ருசி என்பதே பழக்கத்தினால் படிகிற பயிற்சி தானே..
ஒரு மனிதனுடைய பெருமை, திறமை எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவனுடைய அந்தரங்கமான பலவீனங்களைப் பற்றிப் பேசுவதே நமது வேலை..
பொறுமையும், சகிப்புத்தன்மையும் இல்லை என்றால் அன்பு, காதல் என்பதற்கெல்லாம் அர்த்தமே இல்லை..
ஒருத்தரை நாம் மதிக்கிறோம் என்பதற்கு என்ன அர்த்தம்? அவருடைய அந்தரங்கத்தை, பிரைவசியை தெரிந்து கொள்வதற்கு பலவந்தமாக முயற்சி செய்யாமல் இருப்பதுதான்..
எது பெரியது? பி.ஏ வா? எம்.ஏ வா?..
பெரிசு என்ன பெரிசு எல்லாம் ஒரு கழுதை தான்.. வேலை கிடைச்சா தான் எதுக்குனாலும் மதிப்பு..
மன்னிக்கப்பட்டவர்களே மன்னிக்கிறார்கள்..
பேசுவதற்கு பெண்கள் கிடைத்துவிட்டால் எல்லா அசட்டுத்தனங்களிலும் ஒருவன் கவிதை கண்டு கொண்டிருப்பான்..
தாவரங்கள் பூமியில் நிலை பெற்ற மனிதர்கள்..
மனிதர்கள் நடமாடும் தாவரங்கள்..
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்..
அளவோடு இருந்தால் விஷமும் அமிர்தம்..
நம்மை மனிதனாக மதிக்காமல் நம் முதுகு மேலே உட்கார்ந்து இருப்பவர்களை நாம் ஏன் மனுசன்னு நினைக்கனும்..
உலகத்திலே ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது தான் சொர்க்கம்.. ஆனால் அந்த சொர்க்கத்திலே பசியும் பட்டினியும், பிக்கல் பிடுங்கல் ஏற்பட்டால் அதை விட நரகம் வேறொன்றுமில்லை..
கண்களை என்னதான் அகல திறந்து விழித்து பார்த்தாலும் ஒருவரின் உருவத்தின் வரம்பு தான் தெரியும், இதயத்தின் வரம்பு தெரியுமா..
மற்றவர் கண்ணுக்கு இது என்ன அழகு என்று தோன்றும் இடம் ஒருவனுக்கு இந்திரலோகமாகத் தோன்றும்..
நினைப்புக்கு வயசு உண்டா?.
அழகுக்கு, கற்பனைக்கு, கனவுகளுக்கு வயசேது..
நாய்க்கு மனிதனுக்கும் நட்பு உண்டாக ஓர் எலும்புத்துண்டு போதும்..
அந்த நட்புக்கு பிறகு தட்டு நிறைய மாமிசத்தை வைத்து அந்த நாயைக் காவலுக்கு விட்டு விட்டு போகலாம்..
செத்தவனுக்காக அழுவார்கள்.. ஆயிரம்தான் அன்பு இருக்கட்டுமே செத்தவனுக்காகச் சாவார்களா..
செத்தால்தான் ஆடையும் சாகும்..
நான் வாழ்கிறேன் என் ஆசை வாழ்கிறது..
நம்ம கண்ணுக்கு அழகா இல்லை என்பதற்காக ஒருத்தரை அவமானப்படுத்துவது எவ்வளவு பாவம்னு யாருக்குமே தோன்றுவதில்லை..
வாழ்க்கையே ஒரு ட்ரையல் தான்..
ஐந்து பேர் உள்ள உலகத்திலே, நாலுபேர் எது தர்மம் என்று சொல்கிறார்களோ சொல்கிறார்களோ அதுதான் தர்மம் என்றாகிவிட்டது...
நன்றி பிரகாஷ்