Sunday 30 April 2023

பாலுமகேந்திரா


ஒரு படத்திற்கான இசையை யார் தீர்மானிப்பது? "

                   என்ன மன நிலையில் அந்தக் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது என்பதை உடனடியாக நான் புரிந்துகொண்டேன். இசை அமைப்பதில் அதுவரை அவர் அனுபவித்து வந்த படைப்புச் சுதந்திரத்திற்குள் நான் மூக்கை நுழைக்கிறேனோ என்ற சந்தேகம் எனக்கே தோன்ற ஆரம்பித்திருந்தது. கொஞ்சம் யோசித்துவிட்டு நான் சொன்னேன்.

                        "  Raja. let me answer your question this way " என்ற முன்னுரையுடன் பேச ஆரம்பித்தேன்.

                  ஒரு நதியானது அது ஆரம்பிக்கும் இடத்திலிருந்து அதாவது 'நதிமூலம்' என்று சொல்லப்படும் அதன் தொடக்கத்திலிருந்து கடலில் சென்று கலக்கும் வரை மாறிக் கொண்டே இருக்கும் அதன் தோற்றத்தையும், வேகத்தையும், ஆழத்தையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்...
                   
                   ஆரம்பிக்கும் இடத்தில் அது ஒரு சிறிய ஊற்றாக இருக்கலாம். அப்படி ஆரம்பிக்கும் அந்த நதி சற்றுத் தள்ளி ஒரு சிறிய அருவியாக ஓடுகிறது. இன்னும் சற்றுத் தொலைவில் வேறு சிற்றருவிகள் சில அதனுடன் சேர்ந்து கொள்ள,அது ஒரு காட்டருவியாக உருமாறுகிறது. அதன் தோற்றத்திலும், வேகத்திலும் கணிசமான மாற்றத்தைப் பார்க்க முடிகிறது. இன்னுமொரு இடத்தில் நெடிதுயர்ந்து நிற்கும் பாறைகளிலிருந்து பேரழகும், பேரிரைச்சலும் கொண்ட நீர்வீழ்ச்சியாகக் கொட்டுகிறது. வேறு ஒரு இடத்தில் அது விரிந்து பரந்த நீர்த்தேக்கமாக ஸ்தம்பித்து நிற்பது போன்ற தோற்றத்துடனும் அதிக ஆழத்துடனும் காட்சியளிக்கிறது. அந்த நீர்த்தேக்கத்திலிருந்து வழிந்து கீழே உள்ள கூழாங்கற்களின் மீது ஒரு குட்டிப் பெண்ணின் குதூகலத்துடனும் சிலு சிலு என்ற சத்தத்துடனும் ஸ்படிகம் போன்ற தெளிவுடனும் துள்ளிக் குதித்தபடித் தொடர்கிறது.

                  இன்னும் சில இடங்களில் அது நிலத்தடி நீராக மாறிக் காணாமல் போய் விடுகிறது. பிறிதொரு இடத்தில் பொங்கும் சுனையாக அது வெளியே வந்து அகலம் குறைந்து, வேகம் அதிகரித்து அவசரம் அவசரமாக ஓடிச்சென்று கடலுடன் கலக்கிறது.

                  இப்படியாக ஒரு நதியானது அது ஆரம்பிக்கும் இடத்திலிருந்து இறுதியில் கடலுடன் சென்று கலக்கும் வரை அதன் தோற்றத்திலும்
வேகம் மற்றும் ஆழம் ஆகியனவற்றிலும் மாறிக் கொண்டே இருக்கின்றது.

                 இந்த மாற்றங்களையெல்லாம் நதியா தீர்மானிக்கிறது?  இல்லவே இல்லை. ஒரு நதியின் அனைத்து மாற்றங்களையும் அதன் கீழேயுள்ள
நிலப்படுகை தானே - நிலத்தின் அமைப்பு தானே தீர்மானிக்கிறது !

                நான் பேசப் பேச ராஜாவின் அகத்தில் ஏற்பட்ட தெளிவு அவர் முகத்தில் தெரிகிறது.
     
                இதுபோலத்தான் ஒரு திரைப்படத்தின் இசையும். ஒரு திரைப்படத்திற்கான இசையை, குறிப்பாக அதன் பின்னணி இசையை,
அந்தப் படம் தான் - அந்தப் படத்தின் திரைக்கதை தான் script-தான்        
தீர்மானிக்கிறது. இசை மட்டுமல்ல, ஒளிப்பதிவையும், ஒலி அமைப்பையும்,
நடிப்பையும், படத்தொகுப்பையும், உடைகளையும் மற்றும் அந்தப் படத்தின் சகலத்தையும் தீர்மானிப்பது அதன் திரைக்கதை தான்! அதன் script-தான்.

                கேட்டுக் கொண்டிருந்த ராஜாவின் முகத்தில் புன்னகை மலர்கிறது. கைதட்டி ஆமோதிக்கிறார்.

               ஒரு திரைப்படத்தில் அதன் திரைக்கதையே மிக முக்கியமான அம்சம். அதன் தேவையை ஒட்டியே எல்லாம் இருக்க வேண்டும். திரைக்கதையின் தேவைக்கு அப்பாற்பட்டு, தன்னிச்சையாகச் செயல்படும் இசையோ, ஒளிப்பதிவோ, ஒலி அமைப்போ, நடிப்போ, அல்லது வேறு எதுவோ தனக்குத் தானே கவன ஈர்ப்பைக் கோரி நிற்குமே தவிர, சம்பந்தப்பட்ட படத்தோடு ஒட்டாது.

                அவர் கேட்ட கேள்விக்கு நான் சொன்ன பதில் ராஜாவை வெகுவாகத் திருப்திப்படுத்தியது. முழுவதுமாகப் புரிந்துகொண்டார். அன்று முதல் இன்று வரை எனது படங்களுக்கான அவரது இசை அந்தந்தத் திரைக்கதைகளின் தேவையை ஒட்டியே இருந்து வருகிறது.

               எனது படங்களில் வரும் பிரக்ஞைப்பூர்வமான மௌனங்களை மதிக்கத் தெரிந்தவர் அவர். எனது அர்த்தமுள்ள மௌனங்களின் அழுத்தத்தை என்றுமே இசைகொண்டு அவர் கலைத்ததில்லை.
      That is my Raja..!

-பாலு மகேந்திரா

கற்கை நன்றே-28


கற்கை நன்றே-28
*மணி

ஒரு இளைஞன் வெளியூர் சென்று திரும்பும்போது பாலைவனத்தின் வழியே திரும்ப நேர்ந்தது. அப்போது ஒரு சுனையில் நீரை கண்டான்.

ஆவலுடன் ஓடிச்சென்று நீரை பருகியவன், அந்த நீரின் சுவையில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான்.

குடிமக்களை சிறந்த முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது நாட்டு மன்னனுக்கு அந்த நீரை கொடுத்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று கருதி, தன்னுடைய தோல் பையில் அந்த நீரை கொஞ்சம் நிரப்பிக் கொண்டான்.

நான்கு நாட்கள் பயண முடிவில் தன்னுடைய ஊரைச் சென்றடைந்தவன்,அரண்மனைக்கு சென்று அரசனிடம் அந்த நீரின் அருமை பெருமைகளை கூறி, உலகிலேயே இது போல சுவையான நீர் இருக்கமுடியாது என்று கூறி, அதை அவருக்கு அளித்தான்.

மன்னன் சிறிதும் தாமதிக்காமல் மொத்த நீரையும் குடிக்க ஆரம்பித்தான்.

இதை அருகே அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்த பட்டத்து ராணி, “எனக்கும் கொஞ்சம் அந்த நீரை கொடுங்களேன்.
எனக்கும் அதை குடிக்க ஆசையாக இருக்கிறது” என்று கூற, அவள் கூறியதை காதில் வாங்கிக்கொள்ளாமல் மொத்த நீரையும் குடித்து முடித்துவிட்டான் மன்னன்.

“பிரமாதம்… உண்மையில் இதுபோல ஒரு சுவையான ஒரு நீரை நான் இது வரை என் வாழ்க்கையில் அருந்தி யதேயில்லை. உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். நீ நீடூழி வாழ்க!” என்று வாழ்த்தி பரிசுகள் வழங்கி அனுப்புகிறார்.

இளைஞன் தனது மன்னனுக்கு அந்த அதிசய நீரை கொடுத்த சந்தோஷத்தில் விடைபெற்று சென்றான்.
அவன் சென்ற பிறகு,
ராணி“இருந்தாலும் உங்களுக்கு இத்தனை சுயநலம் ஆகாது. அந்த நீரை எனக்கும் கொஞ்சம் கொடுத்தால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்? என்றாள்

“இல்லை ராணி … நான் மொத்த நீரையும் குடிக்கவில்லை. அதில் கொஞ்சம் நீர் இன்னும் இருக்கிறது. வேண்டுமானால் நீ கொஞ்சம் குடித்துப் பாரேன்”
அரசன் சொல்ல,ஆர்வமுடன் எடுத்து குடிப்பவள், ஒரு வாய் குடித்ததும்…. “சே… சே… என்ன தண்ணீர் என்ன இப்படி நாற்றமடிக்கிறது?” என்று கூறி அந்த நீரை உடனடியாக துப்பி விடுகிறாள்.

“தேவி… நீ நீரை தான் சுவைத்தாய். ஆனால் நான் அவன் என் மீது வைத்திருந்த அன்பை சுவைத்தேன்.

பாலைவனத்தில் தாகமெடுத்து அலைந்து திரிந்த அவனுக்கு ஒரு சாதாரண சுனை நீரே தேவாமிர்தம் போல இருந்திருக்கிறது. அதை மன்னனாகிய எனக்கு கொடுக்கவேண்டும் என்று கருதி தனது தோல் பையில் நிரப்பி கொண்டுவந்தான். 

எனவே தோலின் வாடையும் நீரில் ஏறிவிட்டது. நீரின் சுவை முற்றிலும் மாறிவிட்டது.
அவன் இருக்கும்போது நீரை உனக்கு கொடுத்திருந்தால் நீ இப்போது செய்ததைப் போலவே அவன் முன்பு செய்திருப்பாய். அவன் மனம்வேதனைப் பட்டிருக்கும். அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை

நம்மில் பெரும்பாலானோர் பொருளின் மதிப்பைத் தான் எடைபோடுகிறோமே தவிர அதனுள் பொதிந்திருக்கும் அன்பை அல்ல. அப்படி செய்வது, உள்ளிருக்கும் முத்தை அறியாமல் சிப்பியை ஒதுக்குவது போன்று.

 நீங்கள் வாழ்க்கையில் அது போன்று எத்தனை முத்துக்களை தவறவிட்டிருக்கிறீர்கள் தெரியுமா? இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்!
மனித உணர்வுகளை
நாம் மதிக்க கற்றுக் கொள்ளவேண்டும் . 

நம் குழந்தைகளுக்கும் அவற்றை கற்றுத் தரவேண்டும்.
இதயப்பூர்வமாக தருப்படும் பரிசு இதயங்களின் பரிசேயல்லாமல் வேறு ஒன்றுமில்லை.
அதே போன்று நாம் யாருக்காவது நன்றி தெரிவிக்கும்போது அவை வெறும் வார்த்தையாக நின்றுவிடாமல் செயலிலும் நன்றியை காட்டவேண்டும். 

அதுவே உண்மையான நன்றி.
அடுத்த முறை உங்களுக்கு யாராவது ஏதேனும் பரிசு கொடுத்தால் அதன் விலை மதிப்பையோ அது எத்தனை பெரிது என்பதையோ பார்க்காதீர்கள். 

அதன் பின்னணியில் உள்ள அன்பை, அந்த எண்ணத்தை பாருங்கள்.

யார் மூலம் என்ன கிடைத்தாலும் எந்த வடிவில் கிடைத்தாலும் அவர்களுக்கு மனப்பூர்வமான ஒரு ‘நன்றி’ சொல்வோம்.

இனிய காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

நமக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, நாம் விட்டுச்சென்ற இடம் மறுபடி திரும்பும்போது எப்போதும் சற்றே வேறுப்பட்டு இருக்கும். அது ஒருபோதும் முன்புபோல இருக்கவே முடியாது. -ஹாருகி முரகாமி

Saturday 29 April 2023

கற்கை நன்றே-27*மணி



மனித உளவியலை பற்றிய வினோதமான விஷயங்கள்

உங்களுக்கு வரும் எதிர்மறை எண்ணங்களை ஒரு காகிதத்தில் எழுதி, அதை சுருட்டி குப்பையில் போடுவது உங்களின் மனநிலையை (Mood) மேம்படுத்தும்.

ஒரு விடயத்தின் நடுப்பகுதியை விட அதன் ஆரம்பமும், இறுதியும் ஞாபகத்தில் வைத்திருப்பதற்கு இலகுவாக இருக்கும்.

பொதுவாகவே மனிதர்கள் எப்போதும் நமக்கு செய்யப்பட்ட உதவிக்கு கைம்மாறு செய்யவே முயற்சிப்பார்கள்.

ஓர் அழைப்பை பேச முன்னர் புன்னகையுங்கள். ஏனெனில், இந்த முறை உங்களை மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் உரையாட வழிவகுக்கும்.

நீங்கள் நேரடியாக ஒருவரிடம் ஒரு கேள்வி கேட்டு அவர் முழுமையாக பதிலளிக்கவில்லை எனில், அமைதியாக அவரையே உற்று நோக்குங்கள். பிறகு பதில் தானாகவே வரும்.

ஒருவர் உங்களிடம் 'நான் உங்ககிட்ட ஒன்னு கேக்கணும்' என்று சொல்லும் போது நீங்கள் சமீபத்தில் செய்த தவறுகளை எல்லாம் நினைத்து பார்ப்பீர்கள்.

நாம் பகல் நேரங்களை விட இரவு நேரங்களிலேயே அதிக படைப்புத் திறன் (Creativity) கொண்டவர்களாக இருப்போம்.

90 சதவீதமானோர் தாம் எதற்காக சிரிக்கிறோம் என்று கூற முற்படும் போது தான் முன்பை விட அதிகமாகவே சிரிக்க ஆரம்பிக்கிறார்கள்.

நீங்கள் ஒருவரின் குணத்தை அறிய விரும்பினால் அவர் சிரிக்கும் நகைச்சுவைகளை அவதானியுங்கள்.

ஒரு குழுவிலுள்ள அனைவரும் சிரிக்கும் போது ஒவ்வொருவரும் முதலில் தனக்கு பிடித்தமான நபரையே பார்ப்பார்கள்.

உங்களை உத்வேகப்படுத்த விரும்பினால் குளியுங்கள். ஏனெனில், சுத்தமாக இருக்கும்போது உற்பத்தி திறன் (Productivity) அதிகரிக்கின்றது.

நீங்கள் உங்களுக்காக பணம் செலவழிப்பதை விட இன்னொருவருக்காக பணம் செலவழிக்கும் போது அதிகமாக மகிழ்ச்சியடைவீர்கள்.

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்"

நீங்கள் தினமும் உங்களிடம் 'நான் எப்பெயும் உண்ம தான் பேசுவன்' என்று அடிக்கடி கூறுவீர்களானால் நீங்கள் பொய்யே பேசாமல் இருப்பீர்கள்.

கண்களை மூடுவது ஒரு விடயத்தை ஞாபகப்படுத்துவதை இலகுபடுத்துகிறது.

பாடுவதன் மூலம் கவலை மற்றும் மன அழுத்த உணர்வுகளை குறைத்துக் கொள்ளலாம்.

ஒருவர் மற்றவர்களை பற்றி உங்களிடம் எப்படி பேசுகிறார் என்று கவனியுங்கள். ஏனென்றால், இப்படித்தான் இன்னொருவரிடமும் அவர் உங்களை பற்றி பேசுவார்.

இனிய காலை

தோழமையுடன் மணிகண்ட பிரபு

உன் நடவடிக்கைகளை காலத்தை அனுசரித்து வடிவமைத்துக் கொள்-டேமிங்

ஓங்கிய ஓசையுடன் புறப்படும்ஒவ்வொரு ரயிலுக்குள்ளேயும்அல்லாடுகின்றனசொல்ல முடியாத காதலும்சொல்லியதால் முடிந்த காதலும்.-யுகபாரதி

ஆலோலம்




வயலில் தானியங்களை தின்பதற்காகப் பலவகைப் பறவைகள் வரும். அவற்றை அடித்து விரட்ட முடியாது, ஆகவே, அந்த வயலைக் காவல் காக்கும் பெண்கள் பாட்டுப் பாடி அவற்றை மெல்ல விரட்டுவார்களாம். அந்தப் பாடல் வகைதான் ‘ஆலோலம்’
வாயால் ஒலி எழுப்புதல் என்று அழைக்கப்படுகிறது.

#info

Friday 28 April 2023

பொன்னியின் செல்வன்-2*மணி




பாகுபலி போல் காட்சியின் ஃபேண்டசிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் காட்சியை விரைவாகவும் நிதானமாகவும் சொல்ல வேண்டும் என்பதில் உழைத்திருக்கிறார்கள்.
இரண்டாம் பாகத்தில் மையமாய் தன் நடிப்பின் மூலம் அசர வைக்கின்றனர் விக்ரமும் ஐஸ்வர்யாவும்

முதல் பாகத்தில் கதாப்பாத்திர அறிமுகத்துடனும்,இலங்கையில் ஏற்பட்ட புயலில் அருண்மொழி பிழைத்தாரா, ஊமை ராணி காப்பாற்றினாரா என்பதுடன்
கதை ஓரளவு துவக்கத்துடன் நிறைவடைந்திருந்தது. இரண்டாம் பாகத்தில் நந்தினி ஆதித்த கரிகாலன் இளமைப்பருவ காட்சிகளுடன் துவங்குகிறது.

உயிர் பிழைக்கும் அருண்மொழி நாகை புத்தமடாலத்திலிருந்து சிகிச்சை பெற்று தஞ்சை திரும்புகிறார்.கடம்பூருக்கு ஆதித்த கரிகாலனை வரவைக்கும் நந்தினியின் சதியை விக்ரம் பிரபு மூலம் நிறைவேற்றுகிறார்.கடம்பூரில் நடக்கும் ஆலோசனையில் தனது பட்டத்தை உத்தம சோழனுக்கு விட்டுத்தரும் விக்ரம் இரவு நந்தினியை தனிமையில் சந்திக்கிறார்.அப்போது வரும் உணர்ச்சிகரமான காட்சியில் என்ன ஆனது? வந்தியத்தேவனுக்கு நேர்ந்த கதி என்ன?நந்தினி என்ன ஆனார்? என்பதே திரையில் விரியும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்.

சோழர்களின் அதிகாரத்தை அடைய நிகழும் சூழ்ச்சிகள், துரோகங்கள், சதிவலைகளை இவற்றையெல்லாம் தாண்டி படம் பார்ப்பவர்களை ரொம்பவே ஈர்ப்பது வந்தியதேவன்-குந்தவை மற்றும் ஆதித்த கரிகாலன்- நந்தினி இடையேயான காதல் காட்சிகள் தான்.

#ப்ளஸ்

ஜெயம் ரவிக்கும் விக்ரமிற்கும் இரண்டாம் பாகத்தில் நல்வாய்ப்பு.

*/மக்களை நம்பாதவன் மக்களை ஆளமுடியாது

/மறக்க முடியாமல் இருக்கலாம் மன்னிக்கவும் முடியாதா/

/அரசர் சொல்லும் பொய் அரசியல் எனப்படும்',

 '/பேராசைதானே அரசர்களுக்கு அழகு/

/தன்னையே வெறுப்பவனுக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் இல்லை/என கூர் வசனங்கள் நம் மனதை பதம் பார்க்கிறது

அகநக பாடல்களில் வழக்கம் போல ஏ.ஆர் ரகுமான் தனது முத்திரையை பதித்திருக்கிறார்.பல சாதாரண காட்சிகள் கூட இவரின் பின்னணி இசை காரணமாக அசாதாரண காட்சிகளாக மாறியுள்ளது.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் கைவண்ணத்தில் படத்தின் ஒவ்வொரு ப்ரேமும் நம்மை கண் இமைக்காமல் ரசிக்க வைத்திருக்கிறது.

#மைனஸ்

*சில இடங்களில் கதை மெதுவாகப் போவது போல் ஒரு ஃபீல்

*சேந்தன் அமுதன்-பூங்குழலியும் என்ன ஆனார்களென தெரியவில்லை. அந்த ட்விஸ்ட்டை படித்தவர்களுக்கு மிஸ்ஸிங்

*நந்தினியின் கெத்துக்காகவே படித்தவர்கள் அதிகம். இறுதியில் நாவலில் வருவது போலவே குதிரையில் போக விட்டிருக்கலாம்.

*இறுதிக்கட்ட போர் திணித்தது போல் இருந்தது. சீக்கிரமாகவும் முடிஞ்சிருச்சு.

 குறைகள் இருப்பினும் திரையில் ஒளிரும் பிரம்மாண்டம் அனைத்தையும் மறக்கச் செய்கிறது. தமிழில் இதுபோல் திரைப்படங்கள் வர பிள்ளையார் சுழி போட்டுள்ளனர். வாழ்த்துகள்.

படம் பார்க்கலாம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

கற்கை நன்றே-26



கற்கை நன்றே-26
*மணி

காட்டுக்கு நடுவுல ஒரு அஞ்சு பெரு வழிதவறி மாட்டிக்கறாங்க. மேப்பு, காம்பஸ்சுன்னு எதுவும் உதவிக்கு இல்ல.



எந்த திசையில போறதுன்னு யோசிக்கறப்ப, அவங்கவங்களுக்கு தோணினபடி பண்ராங்க. ஒருத்தன் இடப்பக்கம், ஒருத்தன் வலப்பக்கம், ஒருத்தன் போய்கிட்டிருந்த அதே திசையில், அப்புறம் ஒருத்தன் வந்த வழியே திரும்பி போக முடிவு பண்ராங்க.

இந்த gut feeling, instincts, குருட்டாம்போக்கு, என்று அவங்க எல்லோரும் ஒரு காரணத்த சொல்லி அதன்படி பிரிஞ்சி போறாங்க.

கடைசி ஆள் மட்டும் என்ன பண்றதுன்னு தெரியாம நிக்கிறான். அப்புறம் நிதானமா யோசிச்சி பாக்கறான். அறிவுபூர்வமா சிந்திச்சி பாக்கறான். உயரமா இருக்கற ஒரு மரத்துல ஏறி சுத்தி முத்தி பாத்தான். ஒரு திக்குல ஏதோ கிராமம் இருக்கற மாதிரி தெரிஞ்சது.

 கூரைகள், புகை, ஒத்தயடிப்பாதை எல்லாம் தெரிய, அந்த திக்குல போறான்.
ஒங்க கேள்விக்கு இப்போ பதில் கிடைச்சிருக்கும்.
வெயிட், கத இன்னும் முடியல.
.
.
.
மத்த நாலு பெரும் என்ன ஆனாங்கன்னு தெரியாம இவரு மட்டும்தான் டாப்பு டக்கரு பேர்வழின்னு நாம எல்லோரும் முடிவு பண்ணிடறது தான் நம்மோட பொதுவான குறைபாடு.

அஞ்சாவது ஆள் மட்டும்தான் உருப்பட்டாப்லன்னு நாமளா நினைச்சுக்க வேண்டியது. மத்தவனெல்லாம் வீணாப்போனவன்னு முடிவு பண்ணிடுறது.
ஏங்க...ஏன்?

லெப்டுல போனவன் ஒரு அரிதான மூலிகையை கண்டுபுடிச்சான்.
ரைட்டுல போனவன் ஒரு ஓநாய் கூட்டத்துல மாட்டி தப்பிக்கறான்.
வந்த வழி திரும்பி போனவன் தொலஞ்சி போன வேற குரூப்பை சந்திக்கிறான்; அவங்க வந்த பாதை, இவன் வந்து போன பாதை எல்லாத்தையும் கம்பேர் பண்ணி எலிமினேஷன் முறையில வழி கண்டுபிடிச்சிடறாங்க. சிறந்த நண்பர்களும் ஆய்டறாங்க.

நேரா போனவன் ஒரு countryside குடும்பத்தை சந்திக்கிறான், ரெண்டு நாள் தங்கப்போக, அந்த வீட்டு பொண்ண புடிச்சி போக, கல்யாணம் பண்ணி ஜெகஜோதியா வாழறான். இயற்கை விவசாயம் கத்து தரார் மாமனார்.

ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொன்னு கிடைச்சது…
Medical miracle! Survival Skills! Friends for life time! A great family!

அப்புறம் நம்மாளு - மரத்துல ஏறி வழி கண்டுபிடிச்சு அந்த கிராமத்துக்கு போயி, தன்னோட ஊருக்கு/வீட்டுக்கும் பத்திரமா போய் சேர்ந்துடுறார்.
இந்த 'பத்திரமா வீடு 
போய் சேர்வதைத்தான் முன்னேற்றம்னு பேசக்கூடாதுனு சொல்றாங்க

சில நேரங்களில் ரிஸ்க் எடுக்க வேண்டும் என எண்ணிக் கொள்வோம்

இனிய காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

``மறதி ஒரு கல்லறை”உயிருள்ளவர்கள் அதில்தூங்குகிறார்கள்-கலாப்ரியா

வேகம் வேறு, அவசரம் வேறு. உடலும் மனமும் ஒரே கதியில் இயங்கினால் அது வேகம்.மனம் பின் தங்கினால் அது அவசரம்-இறையன்பு

Tuesday 25 April 2023

கற்கை நன்றே-25



கற்கை நன்றே-25
*மணி

தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்று போட்டிருக்கிறார்களே, அப்படியென்றால் 

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் இரண்டோடு, சமநோக்கு நாள் என்பதும் நடைமுறையில் உள்ளது.
இவை மூன்றும் அன்றைய நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைகின்றன.

ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பதும்( ஊர்த்துவமுக ) நட்சத்திரங்கள் எனப்படுகின்றன.அதாவது, இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்களை மேல்நோக்கு நாட்கள்.
இவை மேல்நோக்கி வளர்கின்ற பயிர்களுக்காக விதைக்கவும், மரங்களை நடுவதற்கும், மேல்நோக்கி எழும் கட்டிடங்கள் , உயரமான மதில் போன்றவற்றைக் கட்ட ஆரம்பிக்க உரிய நாட்கள் ஆகும்.

பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்கள், ( அதோமுக ) நட்சத்திரங்கள், அதாவது, கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும்.
இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்கள், கீழ்நோக்கு நாட்கள்.
இந்த நாட்களில் கிணறு வெட்டுதல், புதையல் தேடுதல், சுரங்கப் பணிகளை மேற்கொள்ளுதல், கிழங்கு வகைச் செடி களைப் பயிரிடுதல் முதலான பணிகளைச் செய்வது நல்லது.

அஸ்வினி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பதும் ( த்ரியக்முக ) நட்சத்திரங்கள், அதாவது, சமநோக்கு நட்சத்திரங்கள் ஆகும்.
இந்த நட்சத்திரங்கள் இடம் பெறும் நாட்கள், சமநோக்கு நாட்கள்.
இந்த நாட்களில் வாகனங்கள் வாங்குதல், செல்லப் பிராணிகள், பசு, காளை வாங்குதல், சாலை அமைத்தல், வாசக்கால் வைத்தல், வயல் உழுதல் ஆகிய பணிகளைச் செய்வது உத்தமம்.
நீங்களே இந்த நாட்களை தினசரி காலண்டர்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், கிழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் என்று வார்த்தையில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். அல்லது குறியீடு முறையில் இருக்கும்..!!

-படித்தது

இனிய காலை

தோழமையுடன் மணிகண்ட பிரபு

தன்னைப்போலவே கைவிடப்பட்டஒற்றைச்செருப்பைப் பார்த்தவுடனேவிளையாடத் தொடங்குகிறதுஅதனோடு நாய்க்குட்டிகைவிடப்பட்ட இரண்டு துயரங்கள்ஒன்றுக்கொன்று ஆறுதல்சொல்லிக் கொள்வதாய் இருக்கிறதுஅவ்விளையாட்டுநான் நாய்க்குட்டியாகவும்இருந்திருக்கிறேன்.செருப்பாகவும் கிடந்திருக்கிறேன்படித்தது

Sunday 23 April 2023

தினங்களின் மொட்டுகள் பிடிவாதமாக அரும்புகின்றன-உமா மகேஸ்வரி

Book-87


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-30
Book-87
Pages-496

இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும்-1919-1947
-சுனில் குமார் கோஷ்
தமிழில் சிங்கராயர்

சூழலியலாளர் நக்கீரன் அவர்கள் ஒருமுறை இந்த புத்தகத்தை இத்தனை காலம் படிக்காமல் விட்டு விட்டேனே என்று ஆதங்கத்துடன் இந்த புத்தகம் குறித்த அறிமுகம் ஒன்றை தந்திருந்தார் .உடனே நானும் இந்த புத்தகத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்து இன்று படித்தேன் அவர் கூறியது போல நிச்சயம் இது ஒரு முக்கியமான வரலாற்று ஆவணம். வரலாறு குறித்து அறிய விரும்புபவர்களுக்கு இது ஒரு பொக்கிஷமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

சுதந்திரப் போராட்ட காலம் என்பது நமக்குத் தெரிந்து 1920 இல் தான் போராட்டம் நடைபெற்றதாக தெரிகிறது .ஆனால் உண்மையில் காலணி ஆட்சியின் போது இரண்டு வகையான சக்திகள் தோன்றின என்று ஆசிரியர் கூறுகிறார் .ஒன்று பழங்குடிகள் விவசாயிகள் கைத்தொழில்கள் சிறு முதலாளிகள் ஆகியோர் ஒரு அணியாகவும், உயர் அலுவலர்கள் அறிவு ஜீவிகள் மருத்துவர்கள் மேல் தட்டினர் ஆகியோரின் அணியாகவும் இருந்து வந்தனர் .

இவர்களில் அடித்தட்டு மக்களான விவசாயிகள் நில உடமை சார்ந்த பிரிட்டிஷ் காலனியத்தை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டே வந்தனர் சொந்த நிலம் வைத்திருந்த விவசாயிகளிடமிருந்தும் அல்லது குத்தகை விவசாயிகளிடமிருந்தும் நிலவரி அல்லது வாடகை காலணியவாதிகள் கையகப்படுத்துவதை ஒப்பீட்டு அளவில் எளிதாக்கின. கந்து வட்டிக்காரர்கள் இவ்வாறு விவசாயிகளுக்கு மேலும் மேலும் சுமையை அதிகரித்து வந்தனர். இந்தியாவில் பழைய வணிகர்கள் வர்க்கம் ஏறக்குறைய ஒலித்துக் கட்டப்பட்டு தரகு வணிகர்கள் என்ற ஒரு புதிய வர்க்கம் முளைத்தது

1906 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய தாதாபாய் நௌரோஜி பிரிட்டிஷ் கொடியின் கீழ் வந்த அக்கணமே மக்கள் சுதந்திரப் குடிகளாகவும் பிரிட்டனுக்கு இணையான குடிமக்களாகவும் நாம் இருந்து வருகிறோம் என்றார். கோகலே அவர்கள் பிரிட்டனின் ஆதிக்கத்தை மாற்ற முடியாத இறை கட்டளையாக கருதினார். இவ்வாறு முன்னணி தலைவர்கள் அனைவரும் பிரிட்டிஷார்களுக்கு ஆதரவான குரல்களையே ஆரம்பத்தில் கொடுத்து வந்துள்ளனர். காந்தியும் வல்லபாய் பட்டேலும் பிரிட்டனுக்கு ஆதரவான மனநிலையும் ஆரம்பத்தில் இருந்தனர். இதனால்தான் திலகர் தலைமையில் இவர்களை மிதவாதிகள் என்று சொல்லிவிட்டு கொள்கையளவில் பிரிந்தனர்.

பிரிட்டிஷாரின் ஆட்சியில் கீழ் மட்ட மக்கள் அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் போராடி வந்த போது.. இன்னொரு புறம் முதல் உலகப்போர் ஊக வணிகத்துக்கு நேர்த்தியான வாய்ப்புகளை முன்வைத்தது. திம்பெர்கு கூறுவது போல போரின் போது சணல் சணல் தயாரிப்புகள் சணல் ஆலை பங்குகள் பருத்தி நாணயம் ஆகிய இந்த அனைத்து சந்ததிகளிலும் மார்வாடிகள் ஊக வணிகத்தின் வெகுமதிகளை அள்ளிக் கொண்டனர். 

தொடர்ந்து ஊக வணிகத்தில் மாபெரும் ஆதாயங்கள் கிடைத்ததின் காரணமாக பிர்லா, பம்பாயை சேர்ந்த ஆனந்திலால் பொடர், ஜம்னா லால் பஜாஜ், சுராஜ் முதல், ஆகியவர் தொழில் துறைகள் நுழைய முடிந்தது .முதல் எழுச்சியில் வெற்றி பெற்ற தொழிலதிபர்கள் பிரிட்டிஷ் நிறுவனங்களுக்கு தரவர்களாக இருந்தார்கள் அல்லது உள்நாட்டில் பறந்துபட்ட வலை பின்னலை கொண்டிருந்த பாரம்பரியம் உள்ள நிறுவனங்களுக்கு சொந்தக்காரர்களாக இருந்தார்கள்.
1914 முன்பும் பின்பும் ஏகாதிபத்திய மூலதனத்திற்கும் இந்திய பெருந்தொழில் நிறுவனங்களுக்கும் இடையில் தொடர்ந்து உருவான அமைப்பு ரீதியான பிணைப்புகளை இந்திய பெரும் முதலாளி வர்க்கம் விளக்குகிறது.

1931 இல் இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்ட காங்கிரஸ் பிரதிநிதி காந்தியைப் போல எஃப் ஐ சி சி ஐ இன் பிரதிநிதிகளான புருஷோத்தம் தாஸ் தாக்கூர் தாஸ் ஜிடி பிர்லா ஜமால் முகமது ஆகியோர் இந்தியாவில் பிரிட்டிஷ் மூலதனத்தில் நலன்களை பாதுகாப்பதற்கான காப்புக் கூறுகளை ஏற்றுக் கொள்வதற்கு சித்தமாக இருந்தார்கள்.
1931 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய பொது பெரு முதலாளி வர்க்கம் காங்கிரசை எப்படி எல்லாம் தன்னுடைய தொழில்துறைக்கு பயன்படுத்தலாம் எவ்வாறு பிரிட்டனுக்கு இடையில் இருந்து தங்களுடைய தொழில் வளத்தை மேம்படுத்திக் கொள்ளலாம் என்பதில் உறுதியாக இருந்தனர்

விவசாயிகள் போராட்டம் வெடிப்பது போன்ற நிலை வரும் போதெல்லாம் அவர்களை கட்டுப்படுத்தவும் அணுகுமுறை சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுதல் அரசாங்கத்துடன் அதிகாரப்பூர் முறையில் ஒத்துழைப்பதாகவே இருந்தது‌ இந்த இயக்கத்தின் தலைமை தனியார் வசமே இருக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் மிக கவனமாக இருந்தது என்கிறார்கள். 1931இல் பொருளாதார பின்னடைவானது விவசாயிகளை மிக கடுமையாக பாதித்தது அப்போது காங்கிரஸ் தரப்பிலிருந்து ஜமீன்தார்களை இழிவாக நடத்தக்கூடாது ஒரு உடன்படிக்கைக்கு வர முயல்வார்கள் என்று நம்புகிறேன் என்று கேட்டுக் கொள்கிறார்கள்

இரண்டாம் உலகப் போரின் போது இந்தியா கலந்து கொள்வதா வேண்டாமா என்ற கேள்வி வந்த போது பெரு முதலாளிகளின் நலனுக்காகவும் ஆங்கிலேயர் நலனுக்காகவும் கலந்து கொள்ள இசைந்தது. ஆனால் அந்நிய நாடுகள் யாரும் நம்மை எதிர்க்க கூடாது என்பதிலும் தெளிவாக இருந்தனர். அந்தோனியோகிராம்சி கூறியது போல ஆங்கிலேயருக்கு எதிரான இந்தியாவின் அரசியல் போராட்டமானது நிலை பெயரும் போர் நிலை, எடுப்பு போர் ,தலை மறைவு போர் ஆகிய மூன்று வடிவங்களை கண்டுள்ளது

காந்தியார் அழைப்பு விடுத்த அன்னிய துணி புறக்கணிப்பு முழக்கமானது லங்காசர் ஆடைகளில் வணிகம் செய்து கொண்டிருந்த தரகு வணிகர்கள் மற்றும் இந்திய பருத்தி ஆலை முதலாளிகள் ஆகியவரின் நலன்களுக்கு ஒத்து போனது. ரூபாயின் மதிப்பு உயர்ந்தது .அந்நிய துணி புறக்கணிப்பால் பலன் அடைந்தவர்கள் பெரிய தலைமை வணிகர்களும் உள்நாட்டு பருத்தி அதிபர்களும் தான் என்பதில் ஐயமில்லை.

பி ஹார்டி குறிப்பிட்டது போல இந்துக்களும் முஸ்லிம்களும் நேர்மையாக தொடுத்தது ஒரு பொது போராட்டம்  அல்ல அது ஒரு கூட்டு போராட்டம் தான். அவர்கள் சேர்ந்து வேலை செய்தார்கள். ஆனால் ஒன்றாக வேலை செய்யவில்லை. இக்குறிப்பில் பாதி சரியும் பாதி தவறும் ஆகும் தலைவர்களை பொருத்தவரை அது பொது போராட்டமாக இல்லாமல் கூட்டுப் போராட்டமாக இருந்தது. விளைவாக காங்கிரஸ் கிலாபத் என்று தனித்தனியே அமைப்புகளாகவே இருந்தார்கள். இரண்டாவதாக முதன்மையான இலக்குகளும் வெவ்வேறாணையாகவே தோன்றியது .கிலாபத்தில் முதன்மை இலக்கு, கிலாபத் தவறுகளுக்கு பரிகாரம் காண்பது என்பதாக இருந்தது. ஆனால் காங்கிரஸை பொறுத்தவரை சுயராஜ்யம் அடைவது என்பதாக இருந்தது.

இவ்வாறு சுதந்திரப் போராட்டத்தில் காலத்தில் இது போன்ற சில நிகழ்வுகள் சாதாரண மக்களுக்கு அறியாமலேயே பெரு முதலாளிகள் கொள்கை வேறுபாடுகள் மற்றும் அங்கு நிலவும் சூழல்கள்  ஆகியவை முரண்பட்டவையாகவே இருந்தன இது போன்ற பல்வேறு வரலாற்று தகவல்கள் இந்த நூலில் பொதிந்துள்ளன 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Saturday 22 April 2023

book-86


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-30
Book-86
Pages-507

வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்
-வி.அமலன் ஸ்டேன்லி

சஞ்சலமிகு மனிதகுலம் கேட்பதெல்லாம் துயரறுக்கும் ஒரு வழி தானே? அன்றாட வலிகளிலிருந்து விடுபட ஏங்கும் மார்க்கம் தானே?

ஒவ்வொரு புத்தக கண்காட்சியின் போதும் தமிழினி அரங்கில் உள்ள வசந்தகுமார் அவர்களை சந்தித்து உரையாற்றுவது வழக்கம். அவகையில் திருப்பூர் புத்தக கண்காட்சியில் இருக்கும் போது ஒரு நல்ல நாவல் சொல்லுங்களேன் என்று கேட்ட போது தான் இந்த நாவலை பரிந்துரைத்தார் நாவலை படிக்கும் போது அதன் இயல்பான சொற்களில் ஆழ்ந்த தத்துவ ஞானம் நிரம்பியிருந்தது தெரிகிறது.

 உதாரணத்திற்கு முன்னுரையில் அனைத்து வார்த்தைகளுமே மனதை தொடுபவியாக இருந்தன. "இருப்பதிலிருந்து மாறி முன்னேறி அல்லது கடந்து எதையாவது அடைவதே மனித வாழ்க்கையாக இருக்கிறது. அன்றாடம் ஏன் ஒவ்வொரு கணமும் இன்னொன்றை நோக்கி நகர்வாகவே இருக்கிறது. எத்தனை விரைவில் நாம் அடைவது அதை அடைவதற்குள் அதற்கடுத்ததை குறிக்க வேண்டும் என்பதாக நீள்கிறது. வாழ்நாள் என்று தத்துவ தரிசனத்தை முன்னுரையிலேயே அவர் நமக்கு கொடுத்து விடுகிறார். இருத்தலியல் குறித்த பார்வையையும் நமக்கு வந்து விடுகிறது.

ஜெரி மற்றும் சேவியர்  இரு நண்பர் நண்பர்களின் வழியே கதை துவங்குகிறது முதலில் சாரதா அக்கா அவர்களின் மரணம் அவர்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது .சிலுவைராஜ் சரித்திரம் போல இருவரின் நினைவுகளும்  நம்மை பால்யத்திற்கு அழைத்துச் செல்லும் விதத்தில் இருக்கின்றன. 

உதாரணத்துக்கு நாகையில் சத்தியநாதன் அண்ணன் ஈ மந்திரம் சொல்லித் தந்ததை வைத்து மேட்டு தெருவில் செத்த ஈயை உயிர் ஆக்கும் தந்திரத்தை காட்டுவேன் என்று ஜெரி கூறுகிறான். கையை வீசி உள்ளங்கைக்குள் மட்டும் கை மூடிய படியே வைத்து உரை முக்குவது சில வினாடிகளுக்கு பிறகு ஈயை தரையில் போட்டால் செத்தது போல் மயங்கி கிடக்கும் .நாகையிலிருந்து எடுத்து வந்த திருநீறை துளி எடுத்து அந்த ஈ யின் மேல் சூ மந்திர காளி போட உடல் ஈரம் காய்ந்து மெல்ல எழுந்து பின் கிளம்பி போகும் இது போன்ற நிகழ்வுகள் நம்மை இளமைப் பருவத்திற்கு கூட்டி செல்கின்றன.

 ஐ.சி.எஃப்  எனப்படும் சென்னை  பெரம்பூர் இரயில் பெட்டித் தொழிற்சாலையின் அலுவலர் குடியிருப்புதான் அவர்கள் வளர்ந்த இடம். அதைச் சுற்றி நண்பர்கள், பள்ளி, காதல் என செல்கிறது 
ஜெரி தன்னுடைய படிப்பை முடித்து வேலையில் சேரும் வரை இந்த கதை இளமைப் பருவ நினைவுகளை தொடர்கிறது பின்பு ஒரு மெய்ஞான தரிசனத்தை நோக்கி திரும்புகிறது.

அதன் பின் தன்னுடைய தேடல்களின் மூலம் தன்னை கண்டு கொள்வது குறித்த தத்துவார்த்தை நோக்கி செல்லும் பாதையை ஜெரி கண்டடைகிறான். தான் பணியாற்றும் ஆய்வக சாலையில் எலிகளுக்கு புற்று நோய்க்கான மருந்து செலுத்தும் போது ஜெரிக்கு ஒரு அகச்சிகள் ஏற்படுகிறது அதில் தன்னுடைய அக்கா எவ்வாறெல்லாம் நோயுடன் போராடி வருகிறார் என்பது குறித்து உணர்ந்து கொள்கிறான்.

 இது போல் தானே மற்றவர்கள் அனைவரும் நோயுடன் போராடுவார்கள் என்ற ஒரு கேள்வியும் அவனை வாட்டுகிறது. இதனைத் தொடர்ந்து தொழிற்சாலை உள்ள கழிவுகள் அதை சுற்றியுள்ள மனிதர்களிடம் பறவைகளிடம் விலங்குகளிடம் எவ்வகையான மாற்றங்களை எல்லாம் ஏற்படுத்துகின்றன என்பது குறித்து அவன் மன வேதனை அடைகிறான் விழிப்புணர்வும் செய்து வருகிறான். இன்னும் ஒரு சிறப்பு சக்தியாக எங்கோ நடக்கும் ஒரு சம்பவம் அவன் நினைவில் வந்து அடிக்கடி அவன் திகைப்படைகிறான்

பின்னர் அவன் அதற்கான கேள்வியை கொண்டு தியானத்தில் ஈடுபடுகிறான் தன்னுடைய அகத் தேடலை தொடர்கிறான் .அதற்காக பல்வேறு தத்துவார்த்தவாதிகளை அவன் பயில்கிறான் பின்பற்றுகிறான். புத்தம் ,ஜேகே மற்றும் ரமணாஸ்ரமம் செல்கிறான் ஜெரி. தன்னுடைய இருப்பை புரிந்து கொள்வதில் உள்ள தெளிவும் ஆனந்தத்தையும் ஜெர்ரி அடைகிறானா இல்லையா என்பதே கதை

*எதுக்கு இந்த ஓட்டம் யாருக்கென்று இந்த ஓட்டம் இறுதியில் கிடைத்தது என்ன கிடைத்தது தான் ஓடியத நோக்கமா? அது வழியில் மாறி போயிற்றா தடம் தப்பிச்சா பிரிதுற்றதா எதுவும் அறிவதற்குள் முடிந்து கிடக்கிறது .உடல் அயர்வற்று நிரந்தர சயனத்துக்குள்ளாக்கி மறுக்கிறது .இவ்வளவுதானா இதற்குத்தானா ஓட்டம் அருளிய இட கூடுவதில்லை

*நல்லது என்று கூறுகையிலேயே தீயது உறுக் கொள்கிறது 

*உடலும் மனமும் களமாகி போக எல்லாவித எண்ணங்களும் வந்து நின்று கடந்து போகின்றன பெருஞ்சாலையில் வந்து போகும் வாகனங்களை போல சாலை அங்கேயே எப்போதும் போல் நிலைத்திருக்கிறது

*மன ஒருமிப்பே வாழ்வின் கலை

*உள்ளே ஊடுருவி நோக்கு. உட்பார்வை கிட்டும் சரியான எண்ணம் சரியான முயற்சி சரியான செயல் சரியான மாற்றத்தை உண்டு பண்ணும்.

*கையில் இருக்கும் பறிக்கப்பட்ட இலைகள் மிக மிக குறைவு. கானகத்தில் இருக்கும் இலைகளோ எண்ணில் அடங்காதவை

*நெருங்கிய உறவுகளின் நட்பின் அருமை சிதைவுறாதிக்க சில சமயம் வெட்டி பிரிவது நல்லது தான்

*எல்லாமே திரவமாய் ரூபமற்று திகழ்ந்து இருக்கிறது .வடிவங்கள் உருவங்கள் மனதின் வார்ப்புகள் மனம் எதைப் பற்றுகிறதோ அது திடப்பட்டு வடிவம் கொள்கிறது.

நூலை படிக்கும் போது நமக்குள் எனும் கேள்விகளுக்கு பதிலாக பிற்பகுதியில் ஒரு அழுத்தமான ஒரு தேடல் இருதலியல் குறித்து நமக்கு சொல்கிறது. இந்த நாவலை படிக்கும் போதே இதன் வசீகரிக்கும் நடை நம்மை கதாபாத்திரங்களின் ஒன்ற வைக்கிறது அவ்வப்போது வரும் தத்துவ வார்த்தைகளும் இந்த நாவலை மேலும் ஊக்கப்படுத்துகிறது. இறுதியாக நாவல்கள் இவ்வாறு முடிகிறது . இப்போது பிரபஞ்சத்துடன் ஒருபோதும் பிரிவென்பதென்று என்றைக்குமாக உறவு வைத்திருக்கும் இருப்பு மனித வாழ்விதமாகிறது. எல்லா திரைகளும் விலகிட தரித்திருப்பது பிரபஞ்சத்தின் சாரம். அந்த தரிசனத்தை பகிர சொற்களை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறது இருப்பு.

எழுஞ்சுடர் உச்சியின் மேல் மனம் வைக்கத் தொழிலொன்றிலாத சுடர். பின்னர் புலனுக்கு இல்லை வேலை. எப்பாலுமாய் வெளியெல்லாங் கடந்து மேல் அப்பாலுமாகிய அருட்பெருஞ்ஜோதியாகி நிற்கும் தற்பரம்

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

கோவிலுக்கு சென்று விட்டு இருட்டுல தனியா வந்து கொண்டிருக்கும் போது திடீர்னு ஒரு உருவம் எதிரில் வந்தால் பேயா இருக்குமோன்னு நம்ம மனசு ஒரு விநாடி பதறுமே தவிர,நாம கும்பிட்டுட்டு வந்த கடவுள்தான் நேர்ல வந்திருப்பார் என நினைக்காது.அவ்வளவுதான் கடவுள் நம்பிக்கை....!!~ ஜெயமோகன் ~

book-82


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-29
Book-82
Pages-303

தோன்றியதென் சிந்தைக்கே 
இறையன்பு

ஆரம்பகால வாசகர் முதல் மேம்பட்ட வாசகர்கள் வரை அனைவராலும் படிக்கப்பட வேண்டிய ஆளுமை தான் இறையன்பு அவர்கள். தினத்தந்தியில் வாரந்தோறும் இவர் எழுதிய சிந்தித்தவை சந்தித்ததை படித்தவை பார்த்தவை ரசித்தவை என்ற தொடரில்.. அவர் தான் படித்த விஷயங்களை பார்த்த குறும்படங்களை சந்தித்த நபர்களை பற்றி எல்லாம் விரிவாக சொல்லி இருப்பார் .அதேபோல் இந்த புத்தகத்தில் தான் படித்து ரசித்தவற்றையெல்லாம் நம்முடன் பகிர்ந்து இருப்பார். இந்தத் தொடர் எழுதுவதற்காக 500க்கும் மேற்பட்ட குறும்படங்களை பார்த்ததாகவும் அதிலிருந்து சிலவற்றை இதில் கொடுத்ததாகவும் நமக்கு சொல்லி இருப்பார். நாம் பல புத்தகங்களை படித்ததுக்கு சமமாக இருக்கிறது

தேவையானவை என்கிற கிரேக் மிக்கான் என்கிற நூலை வாசித்த போது வாழ்வின் ஞானம் தேவையற்றவற்றை நீக்குவதில் தொடங்குகிறது என்கிற சீன பொன்மொழியோடு தொடங்கும் நூல். பல நேரங்களில் நாம் அதிக பணிகளை செய்து கலைத்துப் போய் விடுகிறோம். அதே நேரத்தில் ஒன்றும் செய்யாததை போன்ற உணர்வும் ஏற்படுகிறது‌. இது குறித்து விரிவான அலசலை சொல்லியதோடு தேவையற்ற வேலைகளை செய்கிற பலர் என்னை விட்டால் யாரும் இல்லை என்று புலம்பிக்கொண்டே செய்வதை பார்க்கலாம். இது ஒரு வகையான கற்றுக் கொண்ட தவிப்பு என்கிறார்.

அவமானங்கள் இரண்டு வகை ஒன்று நாமாக தேடிக் கொள்பவை, மற்றொன்று தாமாக வருபவை. தாமாக வருவதை பற்றி நாம் கவலைப்படக்கூடாது. தேவையில்லாமல் சிலர் முகத்தை திருப்பிக் கொண்டு போவார்கள். நாம் செய்யாதவற்றுக்கு கோபப்பட்டு எரிந்து விழுவார்கள் .அதற்கெல்லாம் முகம் தளர்ந்து மனம் சுருங்கி நிம்மதியை இழக்க வேண்டிய அவசியம் இல்லை. நாமாக தேடிக் கொள்ளும் அவமானம் அபாயகரமானது .அதற்கு நாமே பொறுப்பு. நாம் செய்கிற பிழைகளால் நேர்மையின்மையால் மாட்டிக்கொண்டு பெறுகிற அவப்பெயர். அதற்குத்தான் கூனி குறுக வேண்டும். அப்படிப்பட்ட அவமானம் ஒரு முறை கூட ஏற்படாமல் வாழ்வதே உன்னத வாழ்க்கை என்கிறார்.

குப்பை என்கிற குறும்படத்தை தான் பார்த்ததாகவும் அதில் வரும் ஒரு சிறுவனுக்கு இளம் வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டு நடக்க இயலாத நிலைமை. காற் சட்டையோடு காத்திருக்கும் அவனுக்கு மேல் சட்டை வாங்க கூட வசதி இல்லை. இரண்டு இளைஞர்கள் இருக்கும் பெட்டிக்கடையில் தயாரிக்கப்பட்ட உணவு பண்டம் ஒன்றை வாங்கிக் கொண்டு நடந்து செல்கிறார்கள் .அவனைத் தாண்டி போகும்போது பையில் நொறுங்கி போயிருக்கும் தின்பண்ட்டத்தை தூக்கி எறிகிறார்கள் .அவன் அதை ஊர்ந்து சென்று எடுக்கிறான். அதனைப் பார்த்ததும் புதிய தின்பண்டம் வாங்கி கொடுத்து எச்சில் பை அங்கே ஒதுக்கி விடுகிறார்கள். அவர்கள் தருவதை வாங்கிவிட்டு அவன் தரையில் ஊர்ந்து சென்று அங்கு இருக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடுவதோடு படம் நிறைவடைகிறது. நாமே ஊர்ந்து சென்றதைப் போன்ற வலி உடல் முழுவதும் என்று முடித்து இருப்பார் . இதே போல் தான் சமீபத்தில் வாழைப்பழத்தை குரங்குக்கு தருகிறார்கள் அந்த குரங்கு சாப்பிட்டவுடன் குப்பை தொட்டியில் போடுகிறது குரங்கு.
தெருவில் எறிபவர் மனதிலா, தொட்டியிலா குப்பை? என்கிற கேள்வியோடு அதனை நிறைவு செய்திருப்பார்.

21 ஆம் நூற்றாண்டிற்கும் அவர் கூறும் 21 பாடங்கள் புத்தகம் கவனிக்க வேண்டியவை. எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு எப்படி எல்லாம் அறிவு உலகத்தை ஆளப்போகிறது என்பதையும் நாம் எப்போதும் கவனிக்கப்படுகிறோம் என்பதையும் படிக்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது .2050 ஆம் ஆண்டில் நோய்கள் வலி வருவதற்கு முன்பே கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என்று வாசிக்கும் போது ஆறுதலாக இருக்கிறது. மனித உணர்ச்சிகளை கூட அறிந்து கொள்வதற்கான மென்பொருள் உருவாக்கும் முயற்சியை இப்போது நடந்து கொண்டிருக்கிறது எதிர்காலத்தில் தியான முக்கியமான பங்கை வைக்கப் போகிறது என்பதை அவருடைய சொந்த அனுபவத்திலிருந்து விவரிக்கிறார்

பேருக்கும் புகழுக்கும் ஆசைப்படுபவர்களே பெரும்பான்மையான மனிதர்கள் அவர்களைப் பற்றி குறிப்பிடும் போது மணல் வீடுகள் கட்ட கடின உழைப்பை சிந்தும் குழந்தைகளை போல அவர்கள் என்று லாமா குறிப்பிடுகிறார். குழந்தைகள் தாங்கள் கட்டிய மணல் வீடு சரிந்ததும் அழுது அடம் பிடிப்பர்.
அது போல புகழுக்கு ஆசைப்படுபவர்கள். பெயரில் எந்த சாரமும் இல்லை புகழ் எந்த பொருளும் இல்லை. அதை நம்மை சான்றான்மையிலிருந்து விலகி விடக் கூடியவை. பௌத்தத்தின் சாரமே வெறுமை என்பதிலிருந்து தலாய்லாமா குறித்த அவருடைய பேச்சுக்களை குறிப்பிடுகிறார்.

பாரசீக குறும்படத்தில் ஒன்றில் கணவனும் மனைவியும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். நள்ளிரவு ஆழமான தூக்கம். தொலைபேசி அழைப்பு வருகிறது அவன் அம்மாவிடமிருந்து .பதறிப் போய் என்ன என்று கேட்கிறான். உன் ஞாபகம் வந்தது பேச வேண்டும் என்று தோன்றியது என்கிறார். சொன்னதும் கோப குரலில் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது எழுப்பி என்னை தொந்தரவு செய்ய வேண்டுமா? என்று அவன் கூறுகிறான். அதற்கு அவள் 35 ஆண்டுகளுக்கு முன்பு இதே நேரத்தில் நீ என்னை தொந்தரவு செய்தாய். பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறி வைக்கிறாள். அவன் முகம் முழுவதும் பரவசம் .தாய் என்கிற அந்த படம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்ததாக குறிப்பிடுகிறார்.

*முகத்தில் அழுக்கு இருப்பதைச் சொன்னால் பதறிப் போய் துடைத்துக் கொள்கிறோம். ஆனால் மனதில் அழுக்கிருப்பதை யாராவது சுட்டிக்காட்டினால் கோபப்படுகிறோம்

*பலவீனங்களையே பலமாக நினைப்பவர்களை என்ன செய்ய முடியும்

*அம்மா.. 
அடுப்பை பற்றவை 
குளிராவது காயலாம் 
-இளம்பிறை

*இலக்கை மறக்காமல் சொற்களை எடுத்து வைப்பதே பயனுள்ள உரையாடலை ஏற்படுத்தும்

*உறங்குகிற ஓராயிரம் பேரை விட விழித்துக் கொண்டிருக்கிற ஓர் இருவர் போதும். பார்வையாளர்களே பேச்சின் தரத்தை உயர்த்துபவர்கள்

*மரணப்படுக்கையில் உங்கள் சாம்ராஜ்யத்தை யாருக்கு விட்டுச் செல்ல போகிறீர்கள்? என்று கேட்டதற்கு இருப்பதிலேயே வலிமையானவருக்கு என்ற அலெக்சாண்டர்

*எழுதப்படாத பலகையாக இருக்கும் குழந்தைகள் இதயத்தில் எப்படி எல்லாம் கிறுக்கி விடுகிறோம்

கருத்தாழம் மிகுந்த மனநிறைவு அளிக்கும் வகையில் இருந்தது. இந்த புத்தகத்தில் நான் படித்த சாரம்சத்தை மட்டும் குறிப்பிடுகிறேன். இது தவிர இன்னும் நிறைய கருத்துக்கள் குறும்படங்கள் படித்தவைகள் சந்தித்தவர்கள் சிந்தனைகள் என பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன இது ஒரு நல்ல புத்தகம் 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

#30நாள்_வாசிப்புபோட்டி_2023#TD038Day-29Book-81Pages-349#இந்திய ரயில் போக்குவரத்தின் சுவையான வரலாறு -பேராசிரியர் சோ முத்துக்குமரன் பேராசிரியர் மா சாலமன் பெர்னாட்ஷாசாதி மத வேறுபாடுகளை எல்லாம் கடந்து முதல் முறையாக அனைவரையும் சமமாய் அமர வைத்து சென்ற வாகனம் தான் ரயில் என்று என் எஸ் கிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய ஒரு பாடலின் மூலமாக சொல்லுவார். ஆங்கிலேயர்கள் தன்னுடைய தொழில் அபிவிருத்திக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தங்களுடைய பொருட்களை எடுத்துச் செல்லவும் முதன்முறையாக ரயில்வே அமைக்கும் திட்டம் இருந்தது2016 17 ஆம் ஆண்டு புள்ளி விவர கணக்கின்படி இந்தியாவில் 67 ஆயிரத்து 368 கிலோமீட்டர் வழித் தட இணைப்பில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து நானூத்தி ஏழு கிலோமீட்டர் இருப்புப்பாதை பயன்படுத்தப்பட்டுள்ளது .49 விழுக்காடு இருப்பு பாதை வழித்தடங்கள் 25 கிலோ வாட் எதிர் மின் கடத்தி வழித்தடங்களாகவும் 33 விழுக்காடு வழித்தடங்கள் இரட்டை இருப்புப் பாதைகளாகவோ அல்லது அதற்கு மேம்பட்டவாயாக உள்ளன .7349 ரயில் நிலையங்கள் நிலைத்திருக்கும் வகையில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணியர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் பயணியர் ரயில்கள் நீண்ட தொலைவு ரயில்கள் என பலவகைப்பட்டுள்ளன. 9,200க்கும் மேற்பட்ட சரக்கு ரயில் இயக்கப்படுகின்றன. இத்தகைய பிரமாண்டமான இயக்கத்தில் 2,77987 சரக்கு பெட்டிகளும் 70 ஆயிரத்து 937 பயணியர் பெட்டிகளும் 11,452 ரயில் இன்ஜின்களும் பயன்படுத்தப்படுகின்றன .உலக அரங்கில் அதிக ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களில் இந்திய ரயில்வே எட்டாவது இடத்தை பிடிக்கின்றது இந்த வளர்ச்சியை பற்றி எடுத்துரைக்கும் நூல் தான் இந்நூல்.இந்திய ரயில்வே இயக்கத்தின் முன்னோடியாக சார் ஆர்தர் காட்டன் குறிப்பிடப்படுகிறார் ஆங்கிலேயரின் நிதி நிர்வாக சுமையை குறைப்பதற்கு இருப்பு பாதை அமைப்பது செலவை குறைத்துருமா என்பது குறித்து ஐந்து அறிக்கை இவர் தான் அளித்துள்ளார்.இவரின் முயற்சியினால் ரெட்ஹில்ஸ் ரயில் ரோடு நிறுவப்பட்டது. இதன் சோதனை முயற்சிகள் அனைத்திலும் கேப்டன் காட்டன் பங்கு அபரிமிதமாக இருந்தது. இருப்பு பாதையையும் அதன் மேல் சக்கரத்தின் நகரும் பாரஞ்சுமக்கும் பெட்டிகளையும் உற்பத்தி செய்திடும் பணி பரங்கிப்பேட்டையில் இருந்த இரும்பு தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டது. சோதனை முயற்சியாக சிறு தொலைவு இருப்புப் பாதையாக மலர்ந்தது. வாகனங்களை இயக்குவதிலும் மேடு பள்ளங்களை கடப்பதிலும் உள்ள இடங்களை எவ்வாறு சமாளித்தனர் என்பதை குறித்து இதில் சொல்லப்பட்டுள்ளதுகேப்டன் காட்டன் ரயில் சேவை அனுபவத்தையும் பெற்றதன் மூலம் அடுத்து திருச்சி கல்லணையை தூர் வாரும் பணியை நிறைவேற்றியவரும் கேப்டன் காட்டன் தான். மணல் படுக்கையில் அணை அடித்தளம் குறித்து இவர்தான் முதலில் சொன்னவர்.மேலும் வெள்ளப்பெருக்கின் போது வீணாக கலந்து விடும் கோதாவரி நதியின் ஒரு நாள் நீரும் தேம்ஸ் நதியின் ஒரு ஆண்டு முழுவதும் ஓடிடும் நீரும் சமம் என்று கருதி மேற்கு கோதாவரி மாவட்டங்களை நெற்களஞ்சியமாக மாற்றிடும் இவர்தான் ஈடுபட்டார்டல்ஹொளசி குறித்து சொல்லப்படும் போது 1825 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 இங்கிலாந்தில் ஸ்டாக்டன் மற்றும் டார்லிங்டன் இடையே முதல் ரயில் இயக்கப்பட்டது .இதற்கு உந்து சக்தியாக இருந்தது கம்பளி வர்த்தகம் தான். 1845 46 ஆம் ஆண்டுகளில் கல்கத்தாவுக்கும் டெல்லிக்கும் இடையே முதல் இருப்பு பாதை அமைப்பதற்கான நில அளவை மேற்கொள்ளப்பட்டது. டல்ஹொளசியின் வழிகாட்டுதல் இந்தியாவில் துரிதமாக ரயில்வே சேவை வளர்ச்சி அடைந்தது .1869 ஆம் ஆண்டுக்குள் 89 கோடி ரூபாய் முதலீட்டில் 465 மைல் தொலைவு ரயில்கள் சேவைக்கு வழி வகுத்தது எனவே தான் இவரை இந்திய ரயில்வே சேவையின் தந்தை என்று நினைவு கூறப்படுகிறார்.ரயில் எஞ்சின் குறித்த கட்டுரை ஒன்றில் இந்தியாவில் ரயில்வே துறையை அறிமுகப்படுத்தும் தனது கனவை நினைவாக்கிட இந்தியாவில் தான் முதலில் முயற்சிக்க வேண்டும் என முடிவெடுத்தார் ஸ்டீவன்சன் மனைவி குழந்தைகளோடு 1843 ஆம் ஆண்டு இந்தியாவை அடைந்தார். இந்தியாவுக்கு முற்றிலும் அறிமுகம் இல்லாதது ரயில்வே துறை .எனவே ரயில்வே துறை பற்றிய தகவல்களை முதலில் மக்களிடையே அதிகார வர்க்கத்தினையும் பரப்புரை செய்வது அவசியம் என உணர்ந்தார். எனவே இதற்கு ஏற்றார் போல் இங்கிலீஷ் மேன் என்ற ஆங்கில தினசரியை தொகுத்து நிர்வகித்து வெளிவிடும் பொறுப்பு ஸ்டீவன்ஷனுக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் எவ்வாறு ரயில்வே சேவையை இந்தியாவுக்கு அளித்தார் என்பது குறித்து சொல்லப்பட்டுள்ளது.தொடக்க முதல் இறுதி நிலை வரையிலான அனைத்து செலவுகளுக்கும் திட்ட நிதி இவ்வளவு என நிர்ணயிக்கப்பட்டது. அனைத்து செலவுகளும் என்பதில் நில அளவை இருப்புப் பாதை அமைத்தல் பாலங்கள் அமைத்தல் பயணியர் பெட்டிகள் நீராவி இன்ஜின்கள் இயந்திர உபகரணங்கள் போன்றவை போதுமான எண்ணிக்கையில் வாங்குதல் என சகலமும் அடங்கும். திட்டத்தை நிறைவு செய்திடும் திட்ட காலமும் நிர்ணயிக்கப்பட்டது. இது அக்காலத்துக்கு முன்பே முடிந்து விட்டது. இதனால் திட்ட செலவில் 20 விழுக்காடு தொகை மீதமானது. இவை எல்லாம் ரயில்வே திட்டத்தின் அளப்பரிய சாதனைகள் எனலாம். அனைத்திற்கும் மேலாய் இந்தியர்கள் பத்தாயிரக் கணக்கில் இத்திட்டத்தில் பணியமர்த்தப்பட்டனர். 4 ,5 மடங்கு கூடுதலாய் ஊதியம் பெற்றனர். இவை அனைத்தும் நேர்மையான கடின உழைப்பால் விரைவில் கற்றுக் கொள்ளும் திறனால் இவர்களுக்கு கிடைத்த ஊதியம் என்று சொல்லப்பட்டதுஇவ்வாறு அடுத்தடுத்து கிழக்கிந்திய ரயில்வே கம்பெனி கிரேட் இந்தியன் பெனின்சுலார் ரயில்வே கம்பெனி, நதி மூலம் பயணித்தல், சுரங்கத்தில் பயணித்தல் பெர்க்லியின் அபார திட்டம் மழையேற்றத்தை கடத்தல் அரிது மலையேற்ற பாதைகளில் எவ்வாறெல்லாம் ரயில்களை இயக்குதல், மெட்ராஸ் ரயில்வே கம்பெனி அதன் சோதனை ஓட்டத்தில் கடந்த ஊர்கள் என பல்வேறு ரயில்வே கம்பெனிகள் குறித்து விரிவாக இதில் சொல்லப்பட்டுள்ளது.அக்காலத்தில் சிப்பாய் கழகத்தில் இந்திய ரயில்வே எவ்வாறு எல்லாம் உதவியது இந்தியர்களுக்கு. ரயில் விபத்துக்கள் புரட்டிப்போட்ட பஞ்சமும் தூக்கி நிறுத்தி ரயில்வே போன்றவை பல்வேறு மாநிலங்களை இணைப்பதற்கு பயன்படுத்தி ரயில்களின் விவரங்கள், ஸ்டேட் ரயில்வேயும் தனியாருக்கு தாரை பார்க்கும் நிகழ்வுகள், புதிய உத்தரவாத ஒப்பந்தங்கள் என ரயில்வே துறை சந்தித்த பல்வேறு இடர்பாடுகள் முயற்சிகள் அதையெல்லாம் மீறி ரயில்வே எவ்வாறு எல்லாம் வெற்றிகரமாக இயக்கப்பட்டது என்பதை குறித்து எல்லாம் இந்த புத்தகத்தில் மிக விரிவாகவும் அழகாகவும் வரலாற்று பின்புலத்தோடும் இந்த நூல் சொல்லப்பட்டுள்ளது தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

book-80


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-29
Book-80
Pages-544

ஃபியோதர் தஸ்ரயெவ்ஸ்கி-200
-க.விக்னேஷ்வரன்

இந்த ஆண்டு வாங்கிய முக்கியமான புத்தகங்களில் இந்த புத்தகமும் ஒன்று. இந்த புத்தகத்தை படிப்பதற்கு முன் அவர் குறித்த படித்தது வெண்ணிற இரவுகளும் நிலவறை குறிப்புகளும் தான். நிலவறை குறிப்புகள் படித்த பின்தான் இவர் மீது மானசீகமாக மரியாதை ஏற்பட்டது. இவர் குறித்து மேலும் தேடித்தேடி வாசித்தபோது எல்லாம் பெரிய பெரிய புத்தகங்களாக இருந்தன. ஒவ்வொன்றாக தேடி வாசித்துக் கொண்டிருந்த வேலையில் தான் இந்த புத்தகம் இந்த ஆண்டு வந்திருந்தது. இது பெரும் மகிழ்வுடன் வாசிக்கத் தொடங்கினேன். இதில் முன்னுரை நேர்காணல் மொழிபெயர்ப்பு நேர்காணல்கள் 28 ஆளுமைகளின் கட்டுரைகள் மொழி சார்ந்த சிறுகதைகள் மூன்று சிறுகதைகள் என்று இதில் உள்ளன.

ஷேக்ஸ்பியர் நாடகத்தில் தான் ஒரு சில கதாபாத்திரங்கள் மிக முக்கியமானதாக இருக்கும். அதேபோல இவர் நாவல் ஒன்றில் இவான் வைக்கும் வாதங்கள் கடவுள் பற்றிய பார்வையை நமக்கு கொடுக்கும். அதில் ஒரு இடத்தில் சிலுவையில் இருந்து நீ இறங்கி வா அப்போதுதான் உங்களை நம்புவோம் என்று மக்கள் கூச்சலிட்ட போதும், நீ இறங்கி வரவில்லை. காரணம் அற்புதம் செய்து மனிதரை அன்பால் ஏற்கனவே விரும்பவில்லை. அதேபோல் அதிகாரம் கொண்டு மனிதரை அடிமைப்படுத்தவும் நமக்கு பிடிக்காது இப்படியான தர்க்கத்தை அந்த கதாபாத்திரம் செய்கிறது.

வாசிப்பு என்ற வார்த்தையை தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகள் நிராகரிக்கின்றன என்று சொல்லலாம். நாம் அவரை கற்கலாம் கற்று ஏற்கவும் மறுக்கவும் செய்யலாம். நாம் வெறுமனே வாசிப்பு என்பது எடுத்து எடுப்பில் ஒரு சிருஷ்டியை விழுங்கி ஏப்பம் விடுதல் போல. தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளை கற்று நிராகரித்தவர்களும் உண்டு வாசித்து புளதாகிதம் அடைந்தவர்களும் உண்டு என்று அவருடைய படைப்புகளின் சாராம்சத்தை விளக்கி கூறி சுந்தரராமசாமி சொல்கிறார்.

தலை மறைவுக் குறிப்புகளில் லிசா கூறியதாக ஒரு காட்சி வரும் அவள் வறுமையின் காரணமாக இழி தொழிலுக்கு வந்துவிட்ட போதிலும் என் கௌரவத்திற்கு ஏற்பட்ட இழுக்கின் பொருட்டு யாராவது ஒருவரை பழிவாங்கும் பொருட்டு என் வெறுப்பை உன் மீது கொட்டினேன் .உன்னை எள்ளி நகையாடினேன் .நான் அவமதிக்கப்பட்டேன் எனவே நானும் யாரேனும் அவமதிக்க விரும்பினேன். அவர்கள் என்னை தூசு மாதிரி நடத்தினார்கள் எனவே நானும் வலிமை காட்ட விரும்பினேன் என்று கூறுவதாகவும் உளவியல் பண்புகளை பின்னால் வந்த உளவியலாளர்கள் சொன்னதற்கு முன்பே தன்னுடைய கதாபாத்திரங்களில் பொருத்திருப்பதாக அவருக்கு புகழாரம் சூட்டுகிறார் எஸ் வி ராஜதுரை.

தஸ்தாயெவ்ஸ்கியின் தனித்துவம் என்பது நாவல்களை  வாழ்வின் வெளித்தோற்றங்களை கண்ணாடி என கருதாது, வாழ்வின் உள் முகங்களை ஊடுருவி பார்க்கும் முயற்சியில் விளைந்தது என்கிறார் .குதிரைகள் பூட்டிய வண்டிகள் செல்லும் போது அவர்கள் ஏன் அழுகிறார்கள்? அவர்கள் ஏன் அழுகிறார்கள் ?என டிமீட்டரி கேட்கிறான் அது குழந்தை தான் அழுகிறது என்கிறான் பதில். ஏன் அழுகிறது? எனும்போது குழந்தை குளிரில் வாடுகிறது. அதன் மெல்லிய ஆடை தாங்கக் கூடியதாக இல்லை. ஏன் அப்படி? என்று கேட்கும் போது ஏனென்றால் அவர்கள் ஏழை மக்கள் சாப்பிட அவர்களுக்கு ரொட்டி இல்லை. அதனால் பிச்சை எடுக்கிறார்கள் என்றார். அதனைக் கேட்டவுடன் அவன் மனதில் இரக்க உணர்வு  சுரக்கிறது என்று ஒருவன் கனவு முடித்து விழித்தெழும்போது கூட சமூக பார்வையோடு எழுகிறான் என டிமிட்ரிக்கு புகழாரம் சூட்டுகிறார்.

உங்கள் சகோதரன் உங்களுக்கு தீங்கு செய்தால் ஏழு தடவை அல்ல 700 தடவை மன்னிக்கும்படி தான் நான் சொல்லுவேன் என்ற அறை கூவலின் சாரத்தை அறியாதவர் அல்ல. தஸ்தாயெவ்ஸ்கி. மகத்தான மானுட கனவுகளை எதிரொலிக்கும் படைப்புலகம் அவருடையது. தன் ஆத்மாவின் நிரந்தர ஜோதியாக எரியும் மகத்தான லட்சியங்கள் குறியீட்டையே மறுதலிக்கும் நிலை வரை அவனை கொண்டு செல்லும் மன உச்சம் இது. மானுடமே மகத்தானது என்கிறான் .லட்சியங்களை விடவும் கனவுகளை விடவும் மானுடத்தை புழுதியில் புரட்டும் சகல கீழ்மைகளுக்கும் எதிராக தனது எளிய கதாபாத்திரம் மூலம் தீர்ப்பு வழங்குகிறான் என்று ஜெயமோகன் கூறுகிறார்

உலகின் தலைசிறந்த நாவல் எது என்றால் போரும் அமைதியும் என்று கூறப்பட்டாலும் உலக இலக்கியத்தில் தலைசிறந்த நாவலாசிரியர் யார் என்று கேட்டால் பியோதரை தான் சொல்வார்கள். மரண தண்டனை விதிக்கப்பட்டு தனக்கு மரணம் நெருங்கி வரும் என்ற மனவேதனை தரும் சித்திரவதைகளை எல்லாம் அனுபவித்த பிறகு நீ இனிமேல் போகலாம் உன்னை மன்னித்தாயிற்று என்று யாராவது ஒரு மனிதன் சொல்லப்பட்டிருந்தால், அப்படிப்பட்ட ஒரு மனிதன் மட்டும்தான் அவன் அந்த கணத்தில் அனுபவித்த வேதனைகளையும் சித்திரவதைகளையும் விரிவாக சொல்ல முடியும் என்று தன் பாத்திரத்தின் வழியாக வாக்குமூலம் அளிக்கிறார் என்று எம்.ஏ சுசிலா தனது கட்டுரையில் சொல்லி இருப்பார்.

தஸ்தாயெவ்ஸ்கியின் ஆக்கங்களில் தீவிர இன்பியல் முக்கிய பங்காற்றுகிறது என்று பக்தீன் தெரிவிக்கிறார் .மூன்று கதைகளின் முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார் "அவர் எப்போதும் மிக அசாதாரணமான எதார்த்தத்தை எடுத்துக் கொள்கிறார் .நாயகனை புற உலகில் அல்லது அகவுலகில் அசாதாரண தளத்தில் பொருத்துகிறார். பின்னர் நாம் வியக்கும் வகையில் மிகுந்த கூர்மையுடன் நாயகனின் ஆன்மாவை ஊடுருவி செல்லும் வகையில் அந்த கதையில் நாயகனின் நிலையை சொல்கிறார் என்று எழுதுகிறார். எதிர்நிலை சிக்கல் உரையாடல் வடிவத்தை போன்றது என்கிறார் பக்தீன்

முரண்பட்டு பிரிந்து நிற்பவன் என பொருள்படும் ரசிய சொல்லை உணர்த்தும் பெயர் கொண்ட மாணவன் ரஸ்கோல்னிகோவ். வட்டிக்கு கடன் கொடுக்கும் மூதாட்டி ஒருவரை உயர் நன்மையின் பொருட்டு கொலை செய்வதென்று திருகலான தர்க்கவிசாரணை ஒன்றின் முடிவில் தீர்மானிக்கிறான் .குற்றமும் தண்டனையும் நாவலின் கதை இந்த குற்றச்செயலுக்கு இரண்டு நாட்கள் முன்னர் துவங்கி அடுத்த இரு வாரங்களில் ரஸ்கோல்னிகோவ் எதிர்கொள்ளும் பல்வகை அனுபவங்களை விவரிக்கிறது. தேடப்படுவது குற்றவாளி என்றல்லாமல் தேடல் என்ற குற்றச் செயலின் உந்துவிசையை நோக்கி திரும்புகிறது. உண்மையான தேடல் கொலைகாரனாலேயே மேற்கொள்ளப்படுகிறது. தான் செய்த குற்றத்தின் காரணமாய் அமைந்த உள்நோக்கங்களை கண்டறிவது இத்தேடலின் லட்சியம். இவ்வாறு இந்த நாவல் மிக சிறப்புடன் அமைந்ததற்கு தஸ்தாயெவ்ஸ்கியின் நடையும் முக்கியமாய் இருக்கிறது.

இவ்வாறு பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி குறித்து அறிய விரும்புவார்கள் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம் தான் இது. இதில் அந் நாவலின் உள்நோக்கத்தில் என்னென்ன கருத்துக்கள் சுவைப்பான சம்பவங்கள் கதாபாத்திரத்தின் உளவியல் தன்மை போன்றவற்றை குறித்த ஆளுமைகளின் கட்டுரைகள் இவர் குறித்த மேலதிக செய்திகளையும் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த கட்டுரைகள் எல்லாம் படித்து முடித்த பின் மேலும் இவரின் புத்தகங்களை எல்லாம் மறு வாசிப்பு செய்து அதனை நினைவு கூற வேண்டிய கடமையையும் இந்த புத்தகம் ஏற்படுத்துகிறது 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Friday 21 April 2023

Book-79


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-29
Book-79
Pages-952

கோ.கேசவன் நூல் தொகுப்பு-2
தலித்தியம்

தீண்டாமையின் வேர் பார்ப்பனியத்திலும், பார்ப்பனியத்தின் வேர் அரசியலதிகாரத்திலும் உள்ளது

-அம்பேத்கர்

நேற்று காலை ஆரம்பித்த இந்த புத்தகம் தற்போது தான் முடிக்க முடிந்தது. காரணம் இந்த நூலில் உள்ள அரிய கருத்துக்களும் ஆய்வு கட்டுரைகளும் தான். வேகமாய் படிக்க முடியாது. மெதுவாகத்தான் படிக்க முடியும். அதனால் பரவாயில்லை இந்த புத்தகத்தை படித்து முடிக்கும் வரை வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் இதனை முடிக்க வேண்டும் என்று ஒரு நாள் எடுத்துக் கொண்டது.இப்புத்தகம் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் தன்மை, எதையும் தரவுகளின் படி அலசி ஆராய்ந்து முடிவு எடுத்தல் ,அனைவருக்கும் புரியும்படி உவமைப்படுத்தி விளக்குதல் என்று இந்த புத்தகத்தில் உள்ள மையக்கருத்து நமக்கு விளக்குகிறது.

இப்புத்தகத்தில் ஏழு இயல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சமூக விடுதலையும் தாழ்த்தப்பட்டோரும், சாதியம், கோயில் நுழைவுப் போராட்டங்கள், சாதி ஒழிப்பு பெரியாரின் பங்கும் படிப்பினைகளும், அம்பேத்கரின் சாதிய ஒழிப்பும், தலித் இயக்கம், தலித் அரசியல் என்று.

சமூகத்தில் இழிவான தொழில்களை செய்வோர் ஆரம்பத்திலேயே இழிந்தவர்களாகவும் கருதப்பட்ட நிலையில் தமிழ் சமூகம் தொன்மை நிலையில் கீழ் சாதியினர்,இழி குலத்தினர் என்றெல்லாம் மதிப்பிட்டு வெளிப்படுத்தினர். தமிழகத்தில் உருவான சாதி தொகுப்புகளின் முதன்மை காலத்தில் கிபி 12ஆம் நூற்றாண்டு முதல் வலங்கை சாதிகள் இடங்கை சாதிகள் என்றே பகுக்கப்பட்டுள்ளன. அதில் தாழ்த்தப்பட்டோர் ஒடுக்கப்பட்டோர் தீண்ட தகாதோர் என்பவர்களை பற்றி இடங்கை சாதிகள் என கூறிக் கொண்டனர்.

  1822ல் சென்னை மாகாணத்தில் மாவட்டம் தோறும் முறை சாரா மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது .அவற்றை 1871 இல் மீண்டும் கணக்கெடுக்கப்பட்டு பிராமணர்கள் பிற இந்துக்கள் என்பனவற்றில் பிற இந்துக்கள் என்ற வகைப்பாட்டில் தாழ்த்தப்பட்டோர் அடக்கப்பட்டோர்
தீண்ட தகாதவர் என்ற பொதுவான அடையாளத்தை அவர்கள் பயன்படுத்தினர். அதன் பின் சென்னை மாகாண கல்வி ஆணையக் குழுவில் அறிக்கையில் பூர்வ குடிகள் தாழ்ந்த சாதியாளர் என்றெல்லாம் குறிப்பிட்டனர்.

20ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய இத்தகைய தொகுப்பு அடையாளங்கள் அரசின் அறிக்கைகளில் வருகின்ற சொற்கள் விரிவடைந்து கொண்டே வந்தது. பஞ்சமர் என்று சொல் நால்வர்ணத்துக்கும் கீழானதோடு தொடர்புடைய இழிவான அடையாளமாக கருதப்பட்டு எம் சி ராஜாவால் எதிர்க்கப்பட்டது. இதனை மேலும் பல திராவிட இயக்க தலைவர்களும் களப்போராட்ட காரர்களும், களப் போராட்டக்காரர்களும் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இதனை ஒட்டி பல்வேறு முற்போக்கு சிந்தனை ஆளர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு மாற்றாக ஆதிதிராவிடர் என்று அழைக்க முன்மொழியை துவங்கப்பட்டு அச்சொல்லை வழங்க வேண்டும் என திராவிட மகாஜன சபை கேட்டுக் கொண்டது.

இதே போல் தான் இந்தியாவில் அரிசன் என்னும் சொல்லை சட்டப்பூர்வ சொல்லாக மாற்ற முயன்ற போது (1938 பம்பாய் மாகாண சட்டமன்றம்) இந்த சொல் இனிப்பு தடவிக் கொண்டு வருகிறது என விமர்சித்தார் அம்பேத்கர். இந்த சமயத்தில் அம்பேத்கர் தலித் என்ற அடையாளத்தை முதலில் மகர்களுக்கும் பின்னர் தாழ்த்தப்பட்டோருக்கும் பயன்படுத்தியதாக குறிப்பிடப்படுபவர். ஆனால் அதற்கு முன்பே ஜோதிபா பூலே என்பவர் தான் ஒடுக்கப்பட்டவர்களுக்காக தலித் என்று சொல்லை பயன்படுத்தினார்.

மாண்டேகு ஜேம்ஸ்போர்ட் சீர்திருத்தத்தில் சென்னை மாகாணத்தில் 132 உறுப்பினர்களில் 34 நியமனங்களில் 10 பேர் தாழ்த்தப்பட்டவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டது. இங்கு முதன்மையான அம்சம் 1921ல் சென்னை வாக்காளர்களில் 4.1% தாழ்த்தப்பட்டோராக இருந்தனர். படித்தவராகவும் சொத்து வரி கட்டுபவராகவும் உள்ளோர்க்கே வாக்குரிமை என்ற நிலையில் 4.1% வாக்காளர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தாழ்த்தப்பட்டோரும் அரசியல் இயக்கங்களும் எனும் தலைப்பில் தமிழ்நாட்டு தளத்தில் செயல்படும் திராவிட இயக்கம் இந்திய பின்னணியுடன் செயல்படும் காங்கிரஸ் இயக்கம் பொதுவுடைமை இயக்கம் போன்றவை தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்தில் எவ்வாறு பங்காற்றினார் என்பதை பற்றியும் அவர்களுக்குள் இருக்கும் கருத்து முரண்பாடுகளும் இந்த ஆய்வில் சொல்லப்படுகிறது.

1930 களில் ஏற்பட்ட நிகழ்வுகள் தாழ்த்தப்பட்டோருக்கு பல பாதுகாப்பு வளையங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டிய தேவையை உணர்த்தினர் .1930 களிலும் 40 களிலும் பொதுவுடமை இயக்கம் தமிழகத்தில் நடத்திய பல வர்க்க போராட்டங்கள் தாழ்த்தப்பட்டோரை பொருளாதார ரீதியில் வென்றெடுக்க பயன்பட்டன .கூலி விவசாயிகள் அதிகம் இருந்த நெல்லை மதுரை தஞ்சை பகுதிகளிலும் ஜமீன் பகுதிகளிலும் பொதுவுடமை கட்சியை சாதிய கட்சிகள் என்றே பெயர் பெற்றது. இக்காலத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான தனி அமைப்புகள் யாவும் முக்கியத்துவம் குறைந்தே காணப்பட்டன.

தமிழகத்தில் சாதிய மோதல்கள் எப்போது இருந்து நடைபெற்றன என்னென்ன சாதியினருக்கு இடையே முரண்பாடுகளும் சண்டைகளும் வருகின்றன என்பது பற்றி சொல்லியுள்ளார். கோயில் நுழைவுப் போராட்டங்கள் எதனால் நடைபெற்றன என்பதற்கான காரணமும் விளைவுகளும் குடியேற்ற ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் குறித்தும் இந்த பகுதியில் சொல்லியுள்ளார். அம்பேத்கரும் சாதிய ஒழிப்பும் பகுதியில் புதிய ஜனநாயகப் போராட்டத்தில் அம்பேத்கரின் பங்கும் வர்க்க போராட்டமும், ஆளும் வர்க்கத்தின் சித்தாந்தமா? என்ற கேள்விகளோடும் அந்த கட்டுரைகள் மிக நீண்ட நெடிய ஆய்வுக்கட்டுரைகள் போல உள்ளது. அதில் இறுதியாக தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளுக்கான அம்பேத்கரின் போராட்டம் பகுதியில் பல்வேறு போராட்டங்கள் குறித்து நமக்குச் சொல்லி உள்ளார்.

*அநீதிகள் என்பவை வர்க்க அளவில் மட்டுமின்றி சாதி அளவிலும் உண்டு

*இன்றைய சாதியத்தை எதிர்த்த போராட்டம் இல்லாமல் ஜனநாயகத்தையோ சோசியலிசத்தையோ அடைய இயலாது

*இங்கே மனித உரிமை அல்ல மனிதர்களாக கூட உரிமை இல்லாத நிலை. எல்லோரும் மனிதர்களாக மதிக்கப்பட்டால் தான் மனிதர்களுக்கு இடையிலான உரிமைகளை பேச இயலும். அதற்கு சாதியம் ஒரு வலுவான தடை.

*வேறுபாடுகள் அற்ற சாதியை தேடுதல் இருட்டுக்குள் தொலைந்த பொருளை விளக்கு பிடித்துக் கொண்டு தேடுவதாகும்.

*குறியீடுகள் மாற்றுக் குறியீடுகளால் அழிக்கப்படுகின்றன .ஆனால் ஆதிக்கத்தின் மையம் முற்றாக அழிக்கப்படுவது இல்லை.

*வர்க்க அமைப்புகளில் அணி திரண்டு தொடர்ந்து வர்க்கமாக இருத்தலுக்கே சாதி வலுவான தடையாக இருப்பதை அம்பேத்கர் உணர்ந்தார்.

*தவறான புரிதல்களுக்கு அடிப்படையாக உள்ள பொருண்மை காரணிகளை கண்டறிதலும் அவற்றை சரியாக விளக்கிக் கொள்வதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளுதலும் ஆகும்

*உண்மையான தீர்வு என்பது கலப்பு மணமாகும். சாதி உருவாக்கிய உணர்வை அதுதான் மறைய செய்யும்.

*சாதி மற்றும் சமூக ஒடுக்கு முறையே மனிதனை மனிதன் ஒடுக்கும் முறைகளில் மிகவும் மோசமானது

புத்தகத்தில் இறுதியாக தலித் இலக்கியம் தலித் அரசியல் பற்றி எல்லாம் சொல்லியுள்ளார். இந்த புத்தகத்தை சிறு அறிமுக உரையில் அடக்குவது என்பது இயலாத காரியம்.பெருங் கடலில் இருந்து ஒரே ஒரு கோப்பை நீரை மட்டுமே எடுத்து தங்களுக்கு கொடுத்துள்ளேன். தலித்தியம் குறித்து அறிய விரும்புவர்கள் மறக்காமல் படிக்க வேண்டிய புத்தகம் இது 

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

கற்கை நன்றே-23


கற்கை நன்றே-23-
*மணி

மாத்திரை அட்டைகளில் கோடு

மாத்திரை மருந்து கடைகளின் மருந்து அட்டைகளிலும், டப்பாக்களிலும் பெறும்பாலும் சிவப்பு நிறக்கோடு போடப்பட்டு இருக்கும்..இந்த சிவப்பு நிற கோடானது மருந்து அட்டைகளில் இடது புறமாக ஒரு ஓரத்தில் போட்டு இருப்பார்கள். இது எதற்காக போடப்பட்டுள்ளது என்றால் மருத்துவர் பறிந்துரை(prescription) இல்லாமல் இந்த மாத்திரையை உட்கொள்வது நமக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்டுவதற்காக அச்சிடப்பட்ட கோடுதான் அது.....

அதாவது மருத்துவர் எழுதி கொடுத்த பரிந்துரை சீட்டை (Prescription) மருந்தகத்தாரிடம் குடுத்தால் மட்டுமே அந்த மருந்து மாத்திரையை அவர்கள் நமக்கு குடுப்பார்கள்....இதுவே சாதாரண அன்னாசின், பாராசிட்டமல் போன்ற சில மாத்திரைகளில் இந்த சிகப்பு காேடு இருக்காது என்பதாலே நம்மால் அந்த மாத்திரிகளை மருந்தகங்களில் எளிதில் கேட்டு பெறமுடிகிறது....

மேலே படத்தில் காட்டப்பட்டுள்ள Rx குறியீடானது எதற்காக மருந்து மாத்திரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றால்

நாம் உடல்நிலை சரியில்லை என்று மருத்துவரிடம் செல்கிறோம், மருத்துவர் நமக்கு மருந்து மாத்திரைகளை எழுதிதருவார்..அவ்வாறு எழுதிதந்த மருந்து சீட்டை மருந்தகத்தில் காட்டினால் மட்டுமே இந்த Rx மருந்துகள் குடுக்கப்படும். முக்கியமாக அந்த மருந்தை நாம் எடுத்துக்கொண்டு உடல்நிலை சரியாகிவிட்டு மீண்டும் சில மாதங்கள் கழித்து அதே போன்று உடல்நிலை சரியில்லை என்றால் நாம் மருத்துவரிடம் செல்லாமல்..., ஏற்கனவே அம்மருத்துவர் எழுதி கொடுத்த அந்த Rx மாத்திரை, மருந்துகளை நாம் மீண்டும் மீண்டும் மருந்தகங்களில் வாங்கி பயன்படுத்தலாம் என்பதே இந்த Rx குறியீடானது நமக்கு உணர்த்துகிறது.

இப்ப NRx பற்றி பார்ப்போம்...... பொதுவாக NRx என்பதை New Prescription என்று சொல்வார்கள். இந்த NRx வகை மருந்துகள் சிறிதளவு நம்மை கிளர்ச்சி ஊட்டக்கூடிய வகையில் இந்த மருந்து(Drugs) இருக்கக்கூடும் . இந்த மருந்துகளை Narcotic Drugs என்று குறிப்பிடுவார்கள். இந்த NRx மருந்துகள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் நமக்கு தர மாட்டார்கள்... குறிப்பாக மருத்துவர் பரிந்துரை சீட்டானது (prescription) 6 மாதம் வரைதான் செல்லுபடியாகும்....பின்பு அந்து மருந்து சீட்டானது காலாவதி ஆகிவிடும். அதாவது 6 மாதம் கழித்து மருத்துவர் எழுதிக் குடுத்த NRx வகை மருந்துகள் நம்மால் மருந்தகங்களில் பெறமுடியாது.

பொதுவாக NRx வகை மருந்துகளை "மனஅழுத்தம், உளவியல், தூக்கமின்மை போன்ற நாேய்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். இந்த மருந்துகளை H, H1 என்று மருந்தகங்களில் வகைப்படுத்தி வைத்துள்ளார்கள்.

இந்த XRx வகை மருந்துகள் பொதுவாக அதிக அளவு கிளர்ச்சி ஊட்டக் கூடிய போதை வகை மருந்து என குறிப்பிடுவர். இவ்வகை மருந்துகளை Narcotic and psychotropic substance based drugs என்று அழைப்பர். இந்த மருந்துகள் அனைத்தும் X என்ற எழுத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.... இந்த மருந்துகள் எல்லாம் அதிக பலம் வாய்ந்த வலி நிவாரணி மற்றும் மயக்கமூட்டிகளாக பயன்படுகிறது.

பொதுவாக இந்த XRx மருந்துகள் புற்றுநோயாளிகள், மனநோயாளிகள் மற்றும் பெறும் அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்துகளை எல்லா மருத்துவர்களும் பரிந்துரை செய்ய மாட்டார்கள். குறிப்பாக மனநல டாக்டர், மயக்கவியல் நிபுணர், புற்றுநோய் மருத்துவர்கள்தான் அதிகம் பரிந்துரை செய்வார்கள்.

இந்த XRx வகை மருந்து சீட்டை பரிந்துரைக்கப்பட்ட அந்த நாளில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் மருந்தகத்தார்கள் நோயாளிகளின் தகவல்களுடன் இந்த மருந்து சீட்டை 2 வருடம் பாதுகாத்து வைத்திருத்தல் அவசியமாகும்.

NRx மற்றும் XRx மருந்துகளுக்கு ஏன் இவ்வளவு கட்டுப்பாடு எனில் இந்த மருந்துகளை சிலர் போதையூக்கியாக தவறான முறையில் பயன்படுத்துகின்றனர் என்பதாலே..மேலும் மருத்துவர்கள் இந்த வகை Drugs மருந்துகளை நோயாளிகளுக்கு ஒரே அடியாக நிறுத்தமாட்டார்கள்.கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்துதான் நிறுத்துவார்கள்..அவ்வாறாக இந்த Drugsகளை ஒரே அடியாக நிறுத்தினால் நோயாளிகளுக்கு பக்கவிளைவை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது

-படித்தது

இனிய காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு

துரோகத்துக்கு மாத்திரம் தான் சோமாலியாவில் ஆகக்கூடிய தண்டனை கிடைக்கும்.கல்லால் அடித்துக் கொல்வதை நான் பார்த்திருக்கிறேன்.ஒரு முறை இறந்தால் போதுமானது விட்டுவிடுவார்கள்.-அ.முத்துலிங்கம்(அதிர்ஷ்டம் என்பது ஒருவித திறமை என்னும் சிறுகதையில்)

உலகத்தில் ஒரு தெருவுக்கு வைப்பதற்கு பெயரா இல்லை? ஒரு பெயருடைய ஆளா இல்லை?அந்தத் தெருவுக்கு வாட்டர் டேங்க் தெரு என்று பலகையில் எழுதியிருந்தார்கள்-வண்ணதாசன்

குற்றஞ்சாட்டி சலித்துவிட்டதெனில் ஆசீர்வதித்துவிட்டு வேலையைப் பாருங்களேன்! மனச்சுமையாவது குறையட்டும்.-இந்திரா

Thursday 20 April 2023

இருக்கிறேன் என்பதை நினைவூட்டத்தானே, இல்லாமல் போக விரும்புகிறாய்.-யாத்திரி

book-76


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-27
Book-76
Pages-423

சுதந்திரச் சுடர்கள் 
-ஸ்டாலின் குணசேகரன்

நேற்று இறந்தவர்க்கும், இன்று இருப்பவர்க்கும் நாளை பிறப்பவர்க்கும் இடையில் உருவாகும் ஒப்பந்தமே வரலாறு-எட்மண்ட் பர்க்

சரித்திரம் என்பது சாதாரணமாக போகிற போக்கில் கதை போல் சொல்லப்படக்கூடாது அதற்கு தக்க சான்றுகள் வேண்டும் .ஓரிடத்தில் ஒரு சான்று கிடைத்தால் வேறொரு இடத்தில் அதை உறுதிப்படுத்துவதற்கான மற்றொரு சான்று கிடைக்க வேண்டும். கிடைத்த ஒன்று மட்டும் வைத்து சரித்திரத்தை எழுதிவிட முடியாது இவை அனைத்தையும் ஒன்றாக தேடி தொகுத்து ஓரிடத்தில் உட்கார்ந்து எழுதும்போது உண்டாகும் வியப்பிற்கு எல்லை இல்லை என்று ஆசிரியர் கூறுகிறார்

தமிழகத்தில் காந்தி வந்ததற்கான முதல் கட்டுரையில் 1896 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகிறார் காந்தி அச்சமயத்தில் தான் முதன்முறையாக தமிழகத்திற்கு வருகிறார் 1946 ஆம் ஆண்டு கடைசியாக தமிழகம் வருகிறார் .இந்த காலகட்டங்களுக்கு இடையில் 20 முறை தமிழகத்துக்கு வந்துள்ளார் 27 வயது இளைஞர் ஆக முதல்முறையாக தமிழ்நாட்டுக்கு வந்த போது அவர் பேசி முடித்ததும் பச்சை பிரசாரம் என்ற பிரசுரம் விற்பனை ஆயிற்று.

 தென்னாப்பிரிக்காவில் தமிழர்கள் என்ன பாடு படுகிறார்கள் என்பதை குறித்த சிறு பிரசாரம் தான் அது. மகாத்மா என முதலில் அழைத்தவர் குறித்த செய்தியை படிக்கும்போது 1912 ஆம் ஆண்டு சுதேசமித்திரன் எதிரில் ஜி சுப்பிரமணிய ஐயர் ஒரு தலையங்கம் எழுதினார் தென் ஆப்பிரிக்க போராட்டத்தைப் பற்றி எழுதிவிட்டு கடைசியாக இந்த மகத்தான மனிதனை நாம் எப்படி அழைக்க வேண்டும் என்றால் மகாத்மா என்று தான் அழைக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார் ஆக காந்தியை மகாத்மா என்று அழைத்த முதல் மனிதன் தமிழன் தான் என்று தெரிய வருகிறது

இந்தியாவில் இரண்டு விதமான வரலாறுகள் இன்று ஆங்கிலேயரால் நேரடியாக எழுதப்பட்டது மற்றொன்று ஆங்கிலேய எதிர்ப்புணர்வு இல்லாத அடிமைப்பட்டு கிடப்பதை சுகம் என்று கொண்ட சிலரால் எழுதப்பட்டது.
இந்த கட்டுரைகளில் தென்னிந்தியாவை சேர்ந்த புரட்சியாளர்கள் பாளையக்காரர்கள் படித்த வீரமான போராட்டத்தையும் பூலித்தேவனின் போர்முறையையும் கட்டபொம்மன் திப்புசுல்தானின் வீரத்தையும் வீரபாண்டிய கட்டபொம்மனின் மனைவிக்கு பின் அவருடைய தம்பி ஊமைத்துரை செவத்தையாவின் வரலாற்று சிறப்புமிக்க சண்டைகள் பற்றியும் இதில் விவரித்துள்ளனர்

விடுலைப் போரில் போர்களும் போராட்டங்களும் மற்றும் முக்கியத்துவம் பெறவில்லை .தமிழ் சினிமாவும் பாடல்களும் முக்கிய இடத்தை பெற்றுள்ளன .1922 ஆம் ஆண்டில் கதரின் வெற்றி என்ற ஒரு நாடகம் நடத்தப்பட்டது .மதுரை பல்கலைக்கழக துணைவேந்தர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் மூத்த சகோதரன் தெ.பொ கிருஷ்ணசாமி பாவலர் என்ற மாபெரும் அறிஞர் முழு நேர பணியாக நாடகங்களை எழுத தொடங்கினார். வசனத்தின் மூலம் மறைமுகமான விடுதலைப் போராட்டத்தை மக்கள் மனதில் ஏற்படுத்த முடியும். அவ்வாறு அந்த நாடகம் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது .அந்த நாடகத்தில் ஒரு காட்சியில் கதர் சட்டை கொடுங்கள் இப்போதிருந்து நான் அணிந்து கொள்கிறேன். இனி எப்போதும் கதரை அணிவேன் என்று சபதம் ஏற்றுவார்கள். இதையெல்லாம் மறைமுகமாய் மக்கள் மனதில் விடுதலை வளர்ச்சி தோன்றின.

இவர்களைப் போல் தமிழ் நாடகத்தில் விடுதலை உணர்வை கூட்டியவர்கள் சாமிநாத சர்மா என் எஸ் கிருஷ்ணன் டி கே எஸ் சகோதரர்கள் மதுரகவி பாஸ்கரதாஸ் விஸ்வநாததாஸ் திரைப்படங்களில் தியாக பூமி கல்கியின் நாவல்கள் இயக்குனர் சுப்பிரமணியம் நாம் இருவர் திரைப்படத்தில் ஒரு காட்சிகள் ராட்டையில் நூல் நூற்பது போன்ற ஒரு காட்சி வைத்திருப்பார்கள். தாயின் மணிக்கொடி பாரீர் என்ற மகாகவியின் பாடலையும் மூவர்ணக் கொடி பறப்பது போன்ற ஒரு காட்சியும் இணைத்துவிட்டு ஓட்டினார்கள் அது மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது

திரைப்படத்தில் 1931 ஆம் ஆண்டில் தான் முதன்முறையாக பாரதியாரின் பாடல் நாடக மேடையில் ஒலித்தது. அதற்கு முன் எந்த ஒரு நாடகத்திலும் பாரதியின் பாடல் இடம் பெறவில்லை. டி.கே. சண்முகம் அவர்கள் தான் முதன் முதலில் திரைப்படத்தில் பாரதியார் பாடல் ஒளிபரப்பதற்கான ஏற்பாட்டை செய்தார். 1935 ஆம் ஆண்டு வெளிவந்த மேனகா என்ற திரைப்படம் தான் பாரதியார் பாடல் ஒலித்த முதல் திரைப்படம்

விடுதலைப் போரில் பெண் வீராங்கனைகள் குறித்த வரலாறு இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது இதில் மேடம் காமாவின் வாழ்க்கையை அறிந்து கொள்ளாமல் 75 ஆண்டுகால வரலாற்றை நாம் புரிந்து கொள்ள முடியாது. மேடம் காமா என்பவர் பம்பாயில் ஒரு பார்சி இனத்தில் பிறந்தவர். சிறிய வயதிலேயே விடுதலைப் போராட்ட உணர்வு மிக்கவர். ஆனாலும் இங்கிலாந்துக்கு சென்ற பிறகு அவருக்கு புதிய தொடர்புகள் ஏற்பட்டது. 1970 ஜெர்மனி நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் அவர் வந்தே மாதரம் என்ற முழக்கத்தை முன்வைத்து உரையாற்றினார் .அந்த மாநாட்டில் தான் உரையாற்றி முடித்த பிறகு ஒரு கொடியை அறிவிக்கிறார். அந்த கொடி தான் கொஞ்சம் பரிணாம வளர்ச்சி பெற்று ஆகஸ்ட் 15ஆம் தேதி நாம் இங்கு ஏற்றும் தேசிய கொடியாக வடிவம் பெற்றுள்ளது

சூரியன் இந்து மதத்தையும் சந்திரன் இஸ்லாம் மதத்தையும் குறிக்கும் வகையில் கொடியில் இரண்டு வண்ணங்களும் 8 மாகாணங்கள் இருந்ததால் 8 தாமரைகளும் இடம் பெற்றன.இவரைத் தொடர்ந்து கேப்டன் லட்சுமி கல்பனா சூர்யா சென் கடலூர் அஞ்சலை அம்மாள் லீலாவதி அம்மா கண்ணு ஆகஸ்ட் புரட்சியில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பெண்கள் பலரும் போராட்டத்தில் பங்கு கொண்டனர் .காளியம்மாள் என்ற பெண் காலை 10 மணிக்கு ராஜபாளையத்தில் உள்ள பெண்களை எல்லாம் அழைத்துக் கொண்டு அந்த ஆர்ப்பாட்டத்துக்கு கலந்து கொள்வதற்கு நடு நகர் பகுதிக்கு வந்து விட்டார். தன் ஒரு வயது குழந்தையை கையில் வைத்துக் கொண்டு மூவர்ண கொடியுடன் போராட்டக் களத்தில் சென்றது அனைவரின் வியப்பில் ஆழ்த்தியது.

சிறைச்சாலைகளைப் பற்றி பார்க்கும் போது அந்தமான் சிறைகளும் அதில் நிகழ்ந்த காட்சிகளையும் நாம் அறிவோம். அதேபோல் அலிப்பூர் சிலை என்பது முதலாம் உலக யுத்தத்தின் போது வெளிநாடுகளில் பிடிக்கப்பட்ட போர் கைதிகளை கொண்டு வந்து அடைப்பதற்காக உருவாக்கப்பட்ட பெரும் சிறை. கர்நாடகத்தில் பெல்லாரி மத்திய சிறையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அச்சிறையில் மூன்று அடி உயரத்துக்கு தார் பூசி இருப்பார்கள். எதற்காக என்றால் சுவற்றில் யாரும் சாய்ந்து ஓய்வெடுக்க கூடாது என்பதற்காக. மேலும் ஆங்காங்கே சிமெண்ட் உடைந்திருக்கும் .இரவு படுத்து இருக்கும் போது 100 ,200 மூட்டை பூச்சிகள் கொத்துக்கொத்தாக உடலில் வந்துவிழும். இவ்வாறு சிறைக் கொடுமைகளை பற்றியும் எவ்வாறெல்லாம் அந்த காலகட்டங்களில் சிறைகள் இருந்தன என்பதை பற்றியும் இந்த கட்டுரைகளில் தெரிய வருகிறது

இத்தகைய புத்தகங்களை படிக்கும் போதெல்லாம் இயல்பாகவே சுதந்திர உணர்வையும் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்கும் மதிப்பும் நமக்கு வருகிறது. நுகர்வு கலாச்சாரத்தின் முற்றுகையால் சுயநலமாகவே சிந்தித்து வாழ பழகி விட்டன. சமூக நேயத்துடன் சக மனிதர் தேர்வும் சுதந்திர காற்றை இந்த மண் என்றும் சுவாசிக்கவும் சென்ற தலைமுறை செய்திருக்கும் தியாகங்களை திரும்பிப் பார்க்கவும் சிறிதளவு பொது நலன் சார்ந்து அவர்களைப் போன்று செயல்படவும் நம்மை நிச்சயம் மாற்றியமைக்கும் என்று தமிழருவி மணியன் புகழாரம் சுற்றியுள்ளார் இந்த புத்தகத்திற்கு

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Book-74


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-27
Book-74
Pages-432

பெரிதினும் பெரிது கேள்
-முனைவர் த.செந்தில்குமார்
காவல் கண்காணிப்பாளர்

உயர் பதவிகளில் இருப்போர் வாசிப்பது என்பது மிகவும் சவாலானது.ஏனெனில் பணிப்பளு, அதிக பொறுப்புத் தன்மை, பல்வேறு கூட்டங்கள் வழிகாட்டுதல்கள் போன்றவற்றின் காரணமாக வாசிப்பதில் அவர்களுக்கு நேர பற்றாக்குறை இருக்கும். அதனையும் மீறி அவர்கள் வாசிக்கும் போது, அதனை அவர்கள் புத்தகமாய் வெளியிடும் போது அவர்கள் மீது மட்டற்ற மதிப்பு ஏற்படுகிறது. அந்த விதத்தில் தற்போது படித்து முடித்த காவல் கண்காணிப்பாளர் முனைவர் செந்தில்குமார் அவர்கள் எழுதிய பெரிதினும் பெரிது கேள் புத்தகம் நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை தந்தது. முன்னுரையிலேயே தந்தை பெரியார் 1944 இல் புது இயக்கம் தொடங்கிய போது என்ன பெயர் வைக்கலாம் என யோசித்தார். சைவ சித்தாந்த கழகத்திற்கு அடிக்கடி பெரியார் சென்று வந்த தாக்கத்தால் அறிவார்ந்த அவர்கள் கூடும் அவை என்று பொருள்படக்கூடிய 'கழகம்' என்ற வார்த்தையை சைவ சித்தாந்த கழகத்திலிருந்து எடுத்து திராவிடர் கழகம் என பெயர் சூட்டினார் என்பது போன்ற செய்திகள் நிச்சயம் நல்லதொரு விஷயங்களை தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருந்தது.

வாசிப்பின் மீது தீராத காதலை கொண்ட நமது கண்காணிப்பாளர் அவர்கள் இந்த புத்தகத்தில் 16 கட்டுரைகளை சீரிய நோக்கில் நிறைய செய்திகள் உடன் நல்லதொரு தமிழில் ஆய்வு நூல் போல கொடுத்துள்ளார். முதல் கட்டுரையான பெரிதினும் பெரிதுகள் என்பது சுய முன்னேற்ற சிந்தனைகளை உள்ளடக்கிய கட்டுரையாகவும் அதே நேரத்தில் போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டியவர்கள் முதலில் என்னென்ன செய்து கொள்ள வேண்டும் ஐயம் திரிபுரா கற்க வேண்டும் ஆள கற்க வேண்டும் என்பதையெல்லாம் வலியுறுத்தி சமகால அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் உதாரணத்திற்கு காஷ்மீர் விவகாரம் என்றால் மற்றவர்கள் போல் வெறுமனே சொல்லாமல் சட்டப்பிரிவுகளை முழுமையாக படித்து புரிந்து கொண்டு கடந்த கால வரலாற்றினையும் ஒப்பிட்டு பார்த்து அதனை உண்மையாக தெரிந்து கொள்ளும்போதுதான் அது குறித்த கேள்விகளை நாம் எதிர் கொள்ள முடியும் என்கிறார்.

வாசிப்பே வாழ்க்கையாய் கட்டுரையில் தன் இளமை நாள் முதல் தான் வாசித்த நூல்களின் அனுபவங்களை தொகுத்து சொல்லி இருக்கிறார். முதன் முதலில் ஆவினங்குடி கிளை நூலகத்தில் உறுப்பினராய் ஆனது முதல் அங்கு கிடைத்த புத்தகங்கள்.. சாமிநாத சர்மாவின் காரல் மார்க்ஸ் புத்தகம் அவரின் எழுத்து நடைக்கவே நான் விரும்பி படித்தேன். பாலகுமாரனின் புத்தகங்களுக்கு மாற்றம் அடைந்தபோது வரலாற்றுப் பிழியலை படித்தவருக்கு எல்லாம் இவரின் வாழ்வியல் எதார்த்தத்தை விளக்கும் நடைமுறை காட்சிகள் மேலும் வாசிப்பை கூர் படுத்தியது. ஜெயகாந்தன் நூல்களையும், சென்னையில் உள்ள பல்வேறு நூலகங்களில் தனக்கு கிடைத்த அனுபவத்தையும் கூறிக் கொள்கிறார். ஒருமுறை தேவநேயப் பாவாணர் நூலகத்தில் வலம்புரி ஜானின் உரையை கேட்டு அண்ணாவிற்கு பிறகு இவ்வளவு ஆற்றலா தமிழிலும் ஆங்கிலத்திலும் என மெய்சிலிர்த்து போனாராம். அதன் பிறகு புஷ்பா தங்கதுரை திரு வி க,மறைமலை அடிகள் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற நூலகங்களில் உள்ள நூல்களைப் பற்றி எல்லாம் எதுவாக குறிப்பிடுகிறார் 

சங்க இலக்கியத்தில் தான் படித்து வியந்த பாடல்களையும் அது குறித்த அறிமுகத்தையும் பத்தி எழுத்துக்கள் மூலமாக அதனை நமக்கு அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் அதேபோல் நூலாசிரியர்களாக சமகால படைப்பாளிகளையும் பற்றி கூறி அவர்களையும் கௌரவப்படுத்தியுள்ளார். பயணங்களில் மிகவும் ரசிப்புத்தன்மை கொண்ட எழுத்தாளர்கள் குறித்து தனியே விவரித்துள்ளார்.
திருக்குறளை தனக்கு மிகவும் பிடித்த புத்தகமாக கூறி திருக்குறள் போற்றுதும் கட்டுரையில் திருக்குறள் குறித்த எண்ணற்ற விவரங்களை கூறியதுடன் அதற்கான மொழிபெயர்ப்பு நூல்களையும் பட்டியலிட்டுள்ளார்

தமிழிசையின் வரலாற்றினையும் தமிழிசை கருவிகளில் பாரம்பரியத்தையும் விளக்கும் விதமாக இந்த கட்டுரையை அமைந்துள்ளது. சங்க பாடங்களில் இசை நயம் உள்ள பாடல்களையும், இசைக்கும் தனக்கும் உள்ள தொடர்பையும் கூறுவது. எல்லா நாளும் ஆனந்தமாய் விளங்கிட மகிழ்ச்சியாய் இருந்திட மனதை இலகுவாக வைத்துக் கொள்ள உங்கள் செயல் திறன் மேம்பட செய்யும் எதிலும் உற்சாகத்தையும் உன்னதத்தையும் வெளிப்படுத்த இந்த வாழ்க்கையை இசையோடு கொண்டாடுங்கள் என்கிறார்.

பாரதி குறித்த சில புத்தகங்கள் படித்திருந்தாலும் கல்லூரி காலத்தில் பாரதியாரை தேடி எனது பயணங்கள் அமைந்திருந்தது. அந்த வகையில் சீனி விஸ்வநாதன் எழுதிய மகா கவி பாரதியார் வரலாறு புத்தகத்தை நான் மிகவும் விரும்பி படித்தேன். ஏனெனில் அவர் ஒரு ஆய்வாளரோ முனைவரோ பேராசிரியரோ அல்ல. தான் தேடி தேடி கண்டறிந்து பிழைகளை நீக்கி இடைச் செருகல்களை களைந்து பாரதியின் மொத்த பணியையும் முழுமையான படைப்பாக கொண்டுவர வேண்டும் என்பதை வாழ்நாள் சாதனையாக எடுத்துக் கொண்டு அதனை மெச்சக்கமாக ஏன் செய்து முடித்திருக்கிறார். கீழடி குறித்து நேரடியாக ஆய்வு செய்து பல்வேறு தகவல்களையும் இதில் நமக்கு கொடுத்துள்ளார்

வைட்டமின் கண்டுபிடிக்கப்பட்ட சுவாரசியமான கதையை நமக்குச் சொல்கிறார். ஜப்பான் கடற்படை தலைவர் என்பவர் நீண்ட நாட்கள் பயணம் செய்து நாடு திரும்புகிறார். அப்போது சில வீரர்கள் சுறுசுறுப்பாகவும் சோர்வாகவும் இருப்பதைக் கண்டு மருத்துவக் குழுவின் தலைவர்களிடம் காரணத்தை கண்டறிமாறு உத்தரவிடுகிறார் .ஒருநாள் டாக்டர் கிறிஸ்டியன் ஜக்குமான் ஜாவா தீவில் பயணம் மேற்கொண்டு இருந்தபோது, சாலையில் நிறுத்தி தேநீர் அருந்திக் கொண்டிருந்தார் .அப்போது அங்கு மேய்ந்து கொண்டிருந்த சில கோழிகள் சுறுசுறுப்பாகவும் சுறுசுறுப்பு இல்லாமல் இருந்தன. காரணத்தை கண்டறிய முற்பட்ட போது உமி நீக்கப்படாத தவிட்டு அரிசியை உண்பதால் சுறுசுறுப்பாக உள்ளதாகவும் மற்றது அப்படியே சாப்பிடுவதால் சுறுசுறுப்பு குறைவாக இருப்பதை கண்டுபிடித்து இதற்கு காரணம் பி சத்துக் குறைபாடு தான் என்பதை கண்டறிகிறார். 1911 இல் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் எனும் ஊட்டச்சத்து மாத்திரை உருவாக்கினார். இந்த ஊட்டச்சத்து பொருளுக்கு அமீன் என்று பெயர் வைத்தார்‌ இதுபோல பல்வேறு தகவல்களை மெல்வின் என்பவர் எழுதியுள்ளதாக தான் படித்து வியந்த விஷயங்களை நமக்குச் சொல்கிறார்.

தான் பணியாற்றும் காவல்துறை குறித்தும் அதில் உள்ள பல்வேறு பிரிவுகள் குறித்தும் விரிவாக 15 வது கட்டுரையில் விளக்கியுள்ளார். குற்றத்தை பதிவு செய்தல் ஆராய்தல் போன்ற பல்வேறு வகையான நுணுக்கமான செய்திகளையும் ஆங்காங்கே சொல்லியுள்ளார். மேலும் உலக அளவில் கவனத்தை ஈர்த்த நல்ல பல புத்தகங்களையும் நமக்குச் சொல்லி உள்ளார். பட்டாம்பூச்சி,தி ரெவல்னிஸ்ட் மாக்கியவல்லி என்ட்ரி டேவிட் தோரா டாம் மாமனின் குடில் ராகுல்ஜியின் சுயசரிதை உப பாண்டவம் என பல்வேறு நூல்களையும் நமக்கு ஆங்காங்கே சொல்லி இருக்கிறார்.

மகாத்மா காந்தியை மாற்றிய புத்தகம் என்பதால் ஹென்றி டேவிட் தோராவின் சட்ட மறுப்பு (civil disobedience) எனப்படும் நூலை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தேடித் தேடி அதனை நான் கண்டறிந்து படித்தேன்

*வாசிப்பு என்பது ஒரு தவம். அதுவும் அந்த பதின் வயதில் உடலையும் மனதையும் கட்டுப்படுத்தி ஓர் இடத்தில் அமர்ந்து நூல்கள் வாசிப்பது என்பதே ஒரு தவம் போலத்தான்.

*வெற்றிக்கான விதை எந்த நேரத்திலும் விழலாம். விழித்துக் கொண்டே இருங்கள் -கலில் ஜிப்ரான்

*உங்களுடைய ஆட்டத்தை நீங்களே ஆடுங்கள்! உங்கள் இயல்பில் இருந்து மாறாதீர்கள்! வெற்றிக்கு தேவையான உத்திகளில் உங்களுக்கு முடிந்த அளவில், தேவையான அளவு மட்டும் மாற்றத்தை செய்து கொள்ளுங்கள்.

*ரோஜா முத்தையா செட்டியார் என்பவர் தான் படித்து சேகரித்து வைத்திருந்த புத்தகங்களை நூலகத்திற்கு கொடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் நூலகத்திற்கு அன்பாக வழங்கி உள்ளார்

*வரலாறு படைப்பதிலும் அந்த வரலாற்றை வசதியாக மறந்து விடுவதிலும் தமிழருக்கு நிகர் தமிழர்களே

பல்வேறு பணிகளுக்கு இடையேயும் தமிழ் மொழி மீதும் வரலாற்றின் மீதும் தீராத தாகம் கொண்டு ஆய்வு நூல் போல் என் நூலை எழுதிய கண்காணிப்பாளர் அவர்களுக்கு நன்றியும் வணக்கங்களும்

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

உன் இயல்பிலிருந்து நீ இறங்கிப் போகும் போதெல்லாம் உன்னை அவமானங்கள் வரவேற்கும்.-விசித்திரன்

Wednesday 19 April 2023

சு ரா


காலை வாரிவிடுவது, வீழ்ச்சி அடைந்துவிடுவது என்றெல்லாம் எதுவும் இல்லை. நாம் எவ்வாறோ அவ்வாறு நாம் இருந்துகொண்டிருக்க வேண்டும். முடிந்தவரையிலும் நமது எண்ண ஓட்டங்களையும் செயல்களையும் புற உலக இயக்கங்களையும் விழிப்போடு கணத்துக்குக் கணம் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். விமர்சனமின்றி, மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது திருத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமின்றிப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்.

- சு ரா கடிதங்கள்

book-73


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-26
Book-73
Pages-1000

 விகடன் 1000
நூற்றாண்டுப் பயணம்

விகடன் வாசகரானது 2006 ஆம் ஆண்டில் தான். அன்றில் இருந்துதான் வார வாரம் விகடன் வியாழக்கிழமை வாங்கி விடுவேன். எங்கள் இல்லத்தை அலங்கரித்தது. ஏற்கனவே விகடன் வந்த பொக்கிஷம் மற்றும் காலப் பெட்டகத்தை பத்திரமாக வைத்திருந்து இந்த புத்தகமும் அந்த வகையில் ஒரு நூற்றாண்டு பயணத்தை நாம் கைகளில் ஏந்தி படிக்க வைத்திருக்கிறது. 1926 வது ஆண்டு முதல் ஆரம்பித்த விகடன் இன்று நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது பூதூர் வைத்தியநாதன் ஐயரிடம் இருந்து வாசன் அவர்கள் வாங்கிய பத்திரிகையை நாம் அறிவோம். ஆனால் அவரைப் பற்றி ஏகே செட்டியார் அவர்கள் நல்லதொரு கட்டுரையை ஆரம்பத்திலேயே எழுதியிருக்கிறார்

விகடன் தாத்தா 1928 இதழில் விகடன் பேச்சு மூலமாக சி.வி மார்க்கம் அவர்களால் பிள்ளையார் சுழி போடப்பட்டு படிப்படியாக கோடு நெற்றி பொட்டு என்பதெல்லாம் பரிணாமம் எடுத்து 32 ஆம் ஆண்டு மாலியின் பிரவேசம் நிகழ்ந்த போது தமாசாக இருக்க வேண்டும் என்பதால் விகடன் தாத்தா உருவானார். தியாக பூமியை தொடர்கதை வெளியாக இருப்பதை குறிக்கும் அறிவிப்பில்தான் 1938 இல் விகடன் தாத்தாவின் உருவம் முதல் முறையாக பக்காவான லோகோவாக அமைந்திருக்கிறது.

என் எஸ் கே குறித்த கட்டுரையில் ராமசாமி என்ற நடிகர் ..திருடன் வேடத்தில் நடித்த போது திடீரென அவரை காணவில்லை. எங்கே அந்த புளி மூட்டை என்றிருக்கிறார் உடனே அவருக்கு புளிமுட்டை ராமசாமி என்ற பெயரானது. அதேபோலத்தான் பொன்னுசாமி பிள்ளைக்கும் எதார்த்தம் என்ற பட்ட பெயர் கலைவாணரால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கலைவாணர் கடைசியாக அரசு மருத்துவமனையில் இருந்த போது அவருக்கு வந்து குவிந்த பழங்களை தனியாக ஆள் நியமித்து சாறு பிழிந்து மருத்துவமனையில் உள்ள அனைவருக்கும் கொடுக்கச் செய்தாராம்.

ஜூனியர் விகடன் என்பதற்கான பெயர் காரணம் தனது அலுவலகத்தில் பணிபுரிகிற பி எஸ் பாலசுப்பிரமணியம் தான் இந்த பெயரை பேச்சுவாக்கில் முதலில் சொன்னால் அவரின் ஐடியா குழந்தைகளுக்கான புத்தகமாக இருக்க வேண்டும் என்று ஆனால் நான் விகடனுக்கு ஜூனியர் என்பது தான் இந்த பத்திரிக்கையின் எண்ணமே தவிர குழந்தைகள் பத்திரிக்கை அல்ல என்று முடிவெடுத்தேன் என்று ஆசிரியர் பாலசுப்பிரமணியம் தெரிவிக்கிறார். ஒருமுறை ஜூனியர் விகடனை வைரமுத்து அவர்கள் புகழ்ந்து சொல்லிக் கொண்டிருக்கும்போது நீங்கள் ஆனந்த விகடன் அட்டை படத்தில் மட்டும் வந்தால் போதும் ஜூனியர் விகடன் அட்டை படத்தில் வரவேண்டாம் என்று தமாசாக கூறினார் ஆசிரியர்.

இயக்கத்திற்கு புலி முத்திரைக்காக சரியான புலி படம் தேடி அத்தனை மெனக்கெட்டோம். சிவகாசி பட்டாசு உள்பட .உலகில் உள்ள அத்தனை புலிகளின் படங்களையும் பரிசீலித்தோம் .நாளைக்கு அதை விட ஒரு படம் பார்த்தால் அதை பயன்படுத்தி இருக்கலாமே என்று தோன்றக்கூடாது பாருங்கள். என்கிறார் ஒரு பெர்ஃபெக்க்ஷனிஸ்டாக வேலுப்பிள்ளை அவர்கள்

2012 ஆம் ஆண்டு அப்போது விகடனில் வைரமுத்துவின் நேர்காணல் வந்திருந்தது அதில் அவர் சொன்ன ஒரு துணுக்கு இப்போதும் படித்ததை நினைத்துக் கொள்கிறேன். "ஒரு குடும்பமே தற்கொலைக்கு எண்ணும் போது.. எவ்வாறெல்லாம் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று ஒன்றன்பின் ஒன்றாக எழுதிக் கொண்டிருந்தார்கள். அதனைப் பார்த்த கடைசி குழந்தை ஒரு கேள்வி கேட்கிறது "அப்பா சாவதற்கு இத்தனை வழிகள் இருக்கும்போது பிழைப்பதற்கு ஒரு வழி இல்லையா? என்று .உடம்பையும் உயிரையும் ஆடி அதிர வைத்த கேள்வி அது என்கிறார்.

சகோதரி படத்தில் தன் கதாபாத்திரம் தேவைப்படுவதாக ஏவிஎம் சொன்ன போது ஒரு பாத்திரத்தை உருவாக்கி எங்கெங்கே நுழைக்க வேண்டும் என்று தீர்மானித்து மூன்றே செட்டில் நடித்துக் கொடுத்து விட்டார். அதில் "நான் ஒரு முட்டாளுங்க, ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க" என்ற பல்லவி என்னுடையது மிச்சம் கண்ணதாசனுடையது என்று சொல்லி இருப்பார் சந்திரபாபு.

இந்தியாவின் முதல் டெஸ்ட் டியூப் பேபி ஆன குழந்தைகளையும் அவரது பெற்றோர்களையும் பேட்டி மருத்துவத்துறையின் மகத்தான இன்னொரு பாய்ச்சலை அப்போது விளக்கி இருந்தது.
ராஜீவ் கொலையின் போது புகைப்படக்காரர் எம்ஏ பார்த்தசாரதியின் பேட்டி மாஸ்

ஸ்டீராய்டு மாத்திரைகள் உட்கொள்வதில் மர்மம் என்ன என்ற கேள்விக்கு சுஜாதா அளித்த பதில் அனபாலிக் ஸ்டீராயுடுகள் நம் உடலில் இயற்கையாக இருக்கும் டெஸ்ட்டாஸ்டிரோன் என்னும் ஹார்மோனின் அளவை அதிகப்படுத்துகிறது. இது தசைகளின் வலுவை அதிகரிக்கிறது. ஓட்டக்காரர்கள் நீச்சல் வீரர்கள் புதிய சாதனை அடைய தற்காலிக வலிமைக்கு உதவுகிறது. நமது சிறுநீரில் இந்த விகிதம் 1:1 என்று இருக்க வேண்டும் இந்த விகிதம் 1:5 என்று இருந்தால் வீரருக்கு தடை.

இந்தியாவிலேயே மூன்று தியேட்டர்களை ஒரே இடத்தில் அமைத்தவர்கள் சஃபையர் தியேட்டர் உரிமையாளர்கள் தான். இடைவிடாத காட்சிகளை நடத்துபவர்கள் தியேட்டரில் முதன்முதலாக டேப் ரெக்கார்டு செய்யப்பட்ட விளம்பரங்களை அறிவித்தவர்கள். முதன் முதலாக சென்னையில் அழகி போட்டிகள் நாடகங்கள் ஆகியவற்றை தியேட்டரில் நடத்தியவர்கள.
 இந்தியாவிலேயே 70 எம்எம் ஸ்லைடு போடுபவர்கள் என்று சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

தாய் சேய் நல விடுதி ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அறிஞர் அண்ணா தாமதமாக வந்தார் தனது தாமதற்கான காரணத்தை சொன்னார் .பெண்கள் ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் காலம் தாழ்த்தி தான் இடைவெளி விட்டு அடுத்த குழந்தை பெற வேண்டும். அதனை நினைவு படுத்தவே நான் காலம் தாழ்த்தி தாமதமாக வந்தேன் என்றார் நகைச்சுவையாக.

*காமன் இருக்கிறானே அவன் நண்பன் போல் ஒரு எதிரி எமன் இருக்கிறானே அவன் எதிரி போல் ஒரு நண்பன்- ஆதிசங்கரர்

*இப்போதைக்கு காலத்தை கடக்கும் ஒரே வழி தூங்கி கழிப்பது தான் ..டைம் மெஷின் குறித்த கட்டுரையில்

*என் கணவர் தூக்கத்தில் எழுந்து ..
நடக்கிறாரா?
 இல்லை.. சைக்கிள் ஓட்டுறார் டாக்டர்

*இன்னைக்கு பக்தி பெருகிடுச்சு ,ஆனா மக்களிடம் ஒழுக்கம் குறைந்து போச்சு -கிருபானந்த வாரியார்

*உங்கள் மனைவியின் பெயரில் கதை எழுத என்ன காரணம் சார்? என் பெயரில் மற்றொருவர் எழுதிக் கொண்டிருப்பதால்- சுஜாதா

*கற்பு இதற்கு உங்கள் விளக்கம் என்ன? மனசாட்சியுடன் தனியாக இருக்கும்போது பாவம் செய்யாமல் இருப்பது _சுஜாதா

*விட்டலாச்சாரியா பற்றிய ஒரு பேட்டியில் அவரைப் பற்றி அறியாத ஒரு விஷயம் அவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றிருக்கிறார்

*இங்க வேலை ஒன்னும் இல்லப்பா போயிட்டு வா.. வேலையில்லாத போது எதுக்கு அநாவசியமா தொழிற்சாலையை திறந்து வைத்து இருக்கீங்க.. மூடி விடுவது தானே !! ஜோக்ஸ் பகுதியில்

*சிறையில் இருந்த அண்ணாவுடன் கே பி சுந்தரம் அவர்கள் தன் நினைவை பகிர்ந்து கொள்கிறார் அண்ணாவுக்கு ஓவியம் என்றால் மிகவும் விருப்பம் .அவரே ஓவியம் வரைந்து இருக்கிறார்

*ஒவ்வொரு முகத்திலும் சொல்லப்படாத 100 கதைகள். ஒரு முகம் என்பது வெறும் முகம் மட்டுமா அது துவங்கி வைக்கும் நினைவுகள் எத்தனை- செழியன்

*மிகவும் நாணயமான மனிதர் நாணயம் என்றால் அவருக்கு உயிர்- நகுலன்

*ஒரு இசை கச்சேரியில்..
 கொஞ்சம் கதவை மூடி தொலைங்க சார். உள்ளே பாகவதர் பாடுவது காதல் விழுந்து தொலைக்குது. ஜோக் பகுதியில்

விகடனின் இணை இதழ்களான மோட்டார் விகடன் அவழ்வியுடன் ஜூனியர் விகடன் தீபாவளி மலர் போன்ற பல்வேறு இதழ்களில் வந்த தொகுப்புகளை கட்டுரைகளாக ஆக்கி தந்துள்ளனர். இடையில் அட்டை படங்கள் கார்ட்டுன்கள் அந்த கால கிளாசிக் ஜோக்குகள் தலையங்கங்கள் பிரபலங்களின் கட்டுரைகள் வழக்குகள் சமூக பிரச்சனைகள் சினிமா பிரபலங்களின் பேட்டிகள் உரையாடல்கள் என பல்வேறு விஷயங்களை ஒரு கால பொக்கிஷமாக இந்த புத்தகம் நமக்கு இருக்கிறது. எந்த பக்கங்களையும் நாம் எளிதில் கடக்க விடாதபடி சுவாரசியமாகவும் அதே நேரத்தில் பழமையை நினைத்து எண்ணிப் பார்க்கவும் இந்த புத்தகம் நமக்கு வழிவகை செய்கிறது 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Tuesday 18 April 2023

நினைவிலிருந்து அழிக்க முடியாத கசப்புகள், அழிக்க விரும்பாத கசப்புகள், இரண்டும் நம்மை எப்போதும் அச்சுறுத்துகின்றன-நரன்

வேலை செய்யுமிடத்தில் மிகவும் விசுவாசமாய் இருந்து விடாதீர்கள்.ஏனெனில் அவர்கள் எதிர்பார்ப்பது திறமையான ஊழியனைத் தானே தவிர நிரந்தரமான ஊழியனை அல்ல-ப.பி

நிராகரிப்பின் வலிவார்த்தைகளில் அடங்காதது.வாழ்வு முழுதும் தொடர்வது...!!-வெ.பூபதி

தோல்வி என்பது கண்ணீர், அதைக்கூட எளிதாக விழுங்கி விடலாம்.ஆனால் வெற்றி என்பது மது,அது தரும் போதையில் தள்ளாடாமல் இருப்பதுதான் பெரிது-வைரமுத்து

"இரண்டு புள்ளிகளுக்கிடையில் நேரான கோடு ஒன்று தான் வரைய முடியும்.வளைவான கோடுகளோ எத்தனை வேண்டுமானாலும் வரையலாம்.ஆனால் வளைவான கோடுகளை வரையும் குழந்தை தற்செயலாகத் தான் நேரான கோட்டை வரையும்.அஹிம்சை என்பது நேரான கோடு போன்றதாகும்"-காந்தி

Book-70


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-25
Book-70
Pages-192

பச்சையும் சிவப்புமாய் ஒரு பாதாம் மரம்
-முத்தரசி

அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்தாமல் பதுக்குகிறார்கள்.பதுக்குவது எதுவும் பத்திரமாக இருப்பதில்லை என்பதே உலக நியதி.விருத்தி செய்பவனே திருப்தியடைகிறான். விருட்சமாகிறான்
-இறையன்பு

அருமை நண்பர் பாரத் பாரதி சார் அவர்கள் ஒரு நாள் எனக்கு இந்த புத்தகத்தை அஞ்சலில் அனுப்பி வைத்தார்கள். நாம் படிக்காத புத்தகத்தை அதுவும் நல்ல புத்தகத்தை எவர் தருகிறாரோ அவரே உண்மையான நண்பர் என்பார்கள். அதுபோல ஒரு நல்ல புத்தகத்தை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு முதலில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .இந்நூல் எழுதியவர் முதுகலை ஆசிரியர். பலரும் பணியை பாரமாக சொல்லும் போது இவர் துலாபாரமாக தன்னுடைய ரசனையையும் பணியையும் சமமாக பாவித்து தான் அனுபவித்த அனுபவங்களை தன்னுடைய நண்பருக்கு கடிதம் மூலமாக எழுதுவதில் இந்த நூல் விரிவடைகிறது. கசடுகளும் குப்பைகளும் நிறைந்திருக்கும் கரைகள் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும் நடு ஆற்றில் ஓடும் நீரைப் போல தூய்மையானது எங்கள் இருவரின் அன்பும் நட்பும் என்று ஆரம்பத்திலேயே இவர்களின் நட்பின் ஆழத்தை உணர முடிகிறது.

ஜெயகாந்தனின் குருபீடம் கதையில் குரு சொல்கிறார் நான் ஆசான் அல்ல என்னிடம் சீடனாக இருந்தவனை நமக்கெல்லாம் ஆசிரியர் என்று அடிக்கடி அறிவிக்கிறார். நல்ல சீடர்கள் வாய்க்கும் போது சராசரிகளும் சரியான ஆசனம் அமையப் பெறுவார்கள் என்று தெரிவித்தது போல தன்னிடம் பயின்ற மாணவி கனிஷ்காவின் ஆற்றலை புகழ்ந்து கூறுவதுடன் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றதையும் சொல்கிறார். பெற்றோருக்கு உயிர் கொல்லி நோய் வாய்க்கப்பட்ட சூர்யாவின் மனநிலையை நாமும் அதே சிந்தனையில் நினைக்க வைத்து விடுகிறார் வருத்தத்துடன்

மானுடத்தின் பொது மொழியான பசியை முதலில் அறிவது தாய்மையின் கருணை தானே. அந்த கருணையில் தான் ஒவ்வொருவரின் உலகம் உயிர்பித்திருக்கிறது என்ற வரிகளுக்கு முன் உதாரணமாய் பொது தேர்வு எழுதும் குழந்தைகளுக்கு தவறாமல் சமைத்து தரும் பொறுப்பை ஏற்ற அந்த பெண்மணியின் முகம் நம்மையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகின்றன .நிர்வாகவியல் கல்லூரியில் தேர்வில் இறுதி கேள்வியாக உங்கள் வகுப்பை தினசரி சுத்தம் செய்யும் பெண்மணியின் பெயர் என்ன என்று இருக்கும் அனைவரும் அந்த கேள்வியை படித்து திகைக்கின்றனர். ஒரு நிர்வாகவியலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான விஷயம் கீழ்மட்ட ஊழியர் முதல் மேலதிகாரிகள் வரை இணைந்த ஒற்றுமையாய் பணியாற்ற வேண்டும் என்பதைத்தான் நமக்குச் சொல்கிறார்.

ஆசிரியர்கள் பலரைப் பார்த்து இருக்கிறேன் தன்னை முன்னிறுத்திக் கொள்வதில் இருக்கும் ஆர்வம் பின்னால் இருக்கும் மாணவர்களை தூக்கி விடுவதில் இல்லை என்று பொதுவான குற்றச்சாட்டு இருக்கிறது .ஆனால் இந்த கட்டுரையில்" நான் படிப்பதில் என்ன பெருமை இருக்க முடியும் என் பிள்ளைகளை அந்த உயரத்தை எட்ட வைப்பது தானே என் பணியின் அறமாக இருக்க முடியும்" என்று நறுக்கு தெரித்தால் போல் ஒரு வரி. கட்டுரையின் துவக்கத்தில் ஒரு திருமண விழாவில் முகமூடி அணிந்த சிரிப்பு காட்டும் மனிதர்களின் அகத்தை குறித்து அவர் அளிக்கும் வார்த்தை உரையாடல்கள் நிச்சயம் நம்மை சிந்திக்க வைக்கும். போராடும் பெண்மணிகள் புத்தகத்தை படித்த ஸ்ரீஜாவின் கதை நெகிழ்வூட்டும்

ஆசிரியர் விழாவில் நடைபெற்ற அனுபவங்களையும் ஆசிரியர் பணி குறித்த அவரின் மேலான பார்வையும் விளக்கிவிட்டு "ஆசிரியரின் வாழ்வு என்பது வரத்திற்கும் சாபத்திற்கும் இடையில் நடைபெறும் ஒரு அற்ப வாழ்வு. நீங்கதான் என் உலகம் என்கிற இதயங்களுக்கும், இந்த வாத்திகளுக்கு வேற வேலை இல்லை என தரம்தாழ்ந்து பேசும் உதடுகளுக்கும் இடையே தான் ஒரு ஆசிரியர் என்பது வாழ்ந்து தீர்த்தாக வேண்டும் என்ற நிதர்சன உண்மையையும் நமக்கு கூறியிருக்கிறார்.

முதன்முதலாக தான் பணியாற்ற வாய்ப்பு கிடைத்த நீலகிரி கேரளா எல்லையில் அமைந்துள்ள தேவாலா என்ற கிராமத்தில் பணியாற்றிய அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் போது நாமும் அந்த இடத்தில் மாணவனாய் இருந்து பார்க்கிறோம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அப்போது பாடம் எடுக்கும் முறை குறித்தும் ,அவர்களின் மனதடங்கல் தாழ்வு மனப்பான்மை இயலாமை என்று இருக்கும் அவர்களுக்கு இவைகளை எல்லாம் மீறி எவ்வாறு அந்த சவால்களை நிறைவேற்றினார் என்பதைத்தான் வசிகரமாக சொல்லிவிட்டு அந்த பள்ளியை விட்டு பிரியும் போது சொல்லும் வரி நமக்கும்  மனதையும் கணக்க வைக்கிறது. "எதிர்பாரா திருப்பங்களையும் துயரங்களையும் தரும் இந்த வாழ்க்கை தான், நாம் மீண்டு எழுவதற்கான மனிதர்களையும் அருள்கிறது."

சொற்களை மிகவும் ரசித்து ரசித்து செதுக்கி உள்ளார் .ஒவ்வொரு இடத்திலும் தன்னுடைய ட்ரேட் மார்க் தத்துவ முத்திரைகளை மிக இயல்பான நடையில் பதித்து விடுகிறார். அவ்வாறு ஒரு இடத்தில் "அன்பின் வார்த்தைகளுக்கு தானே வாழ்நாள் முழுவதும் தவம் இருக்கிறோம். நம்மோடு கூடவே வாழும் மனிதர்களுக்கு நம்மிடம் சொல்ல எதுவும் இல்லாமல் போகும் நொடியில் தானே ஒரு பூவின் மலர்தலை, மலையின் ஈரத்தை, உருண்டு விழும் கண்ணீரின் ஒரு துளியை, தென்றலின் சிறு தழுவலை, இசையின் ஒரு துணுக்கை, இனிப்பின் ருசியை  நாம் சொற்களாக மொழியாக உருவம் செய்து கொள்கிறோம். ஒரு வார்த்தை எத்தனையோ நம்பிக்கைகளை அழித்து விடுவது போலவே சொற்களின்றி இருப்பதும் உண்மையான பேரனுபவம் என்று ரசனையுடன் இதனை எழுதி இருக்கிறார்

*வாழ்வின் படிநிலையில் கீழே இறங்க இறங்கத்தான் நட்பும் அன்பும் பிரியமும் நிபந்தனை இன்றி கிடைக்கும்

*துயரங்களை முதன் முதலில் சந்திக்கும் போது  அதிர்வுற்று அதிர்வுற்று அடங்குகிறது. பின்னர் அதையே எந்த சலனமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ள பழகி விடுகிறது.

*சந்தோசமாகட்டும் துக்கம் ஆகட்டும் இரண்டாவது கோட்டை அருகில் வரைந்து ,நம் கணங்களை சிறிது ஆக்கிக் கொண்டே இருக்கிறது இந்த வாழ்க்கை

*வெறும் அறிவை மட்டுமே அடைத்து நிரப்பி நாம் உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்த சமூகத்தில் தான் ,தன் பெயரை தானே தாங்கிக் கொண்டு ,தன் கனவுகளை தானே வார்த்தெடுக்கும் ஒரு சமூகம் உருவாகி கொண்டு இருக்கிறது

*மற்றவர்களுக்காக வாழும் மனசுக்காரர்கள் தான் எத்தனை அழகானவர்கள் அந்த இதயங்கள் தான் கடவுளின் நிழல்கள்.

*உயிருக்கென ஓடும் ஒரு சிறு உயிரை உணவுக்கென ஓடும் ஒரு பெரு உயிர் எப்போதும் ஜெயிக்க முடியாது. வாழ்வின் மேல் விரக்தி ஏற்படாமல் பிரியம் ஏற்படுவதில்லை. என்றேனும் ஒரு நாள் துயரத்தின் இரவு விடியத்தானே வேண்டும்

*வாசிப்பு நான்கு எழுத்துக்களில் அடங்கும் ஒரு மகத்தான பெருவாழ்வு. அது ஒன்றுதான் மனித மனங்களின் மாண்பை மனதுக்கு பெரும் விசாலத்தை பரிசளிக்கிறது. கூட்டுப்புழு மனதை சிறகு விரிக்க வைக்கிறது.

*நம்பிக்கையை பரிசளிக்கும் இதயங்கள் மட்டுமே எப்போதைக்குமான தேவை எல்லோருக்கும்

தன்னுடைய ஆசிரியர் தொழிலில் ஏற்பட்ட அனுபவங்களை தனக்குரிய நடையில் மிக எளிதாக தான் படித்த வரிகளுடன் சேர்த்து நெய்து அழகிய ஆடையாக இந்த புத்தகத்தை நமக்கு கொடுத்துள்ளார். தான் கண்ட அனுபவத்தை அறிவுப்பகிர்தல் என்று சொல்லும் அளவுக்கு எவ்வளவு தூரம் அந்த அனுபவத்தை கூர் தீட்டி சொல்ல முடியுமோ அத்தனை கூராக்கி நல்ல சொற்களுடன் நமக்கு வழங்கி இருக்கிறார். நல்ல ஒரு வாசிப்பு அனுபவத்தை நல்கிய திருமதி தமிழரசி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்தாமல் பதுக்குகிறார்கள்.பதுக்குவது எதுவும் பத்திரமாக இருப்பதில்லை என்பதே உலக நியதி.விருத்தி செய்பவனே திருப்தியடைகிறான். விருட்சமாகிறான்-இறையன்பு

Book-69


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-25
Book-69
Pages-315

உளவியல் ஆலோசனை
-தி கு இரவிச்சந்திரன்

உள்ளம் என்பது ஆமை,
அதில் உண்மை என்பது ஊமை.
சொல்லில் வருவது பாதி,
நெஞ்சில் தூங்கி கிடப்பது நீதி. என்று எழுதி இருப்பார் கவியரசர்.உள்ளத்தை பற்றி தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும். உளப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேவையான ஆலோசனைகளை இப்புத்தகம் வழங்குகிறது. இதில் உள்ள 123 கட்டுரைகள் அனைத்தும் அரைப்பக்கம் ஒருபக்கம் மட்டுமே மீறினால் இரு பக்கங்கள
இருப்பதால் படிப்பது சுலபம். ஒவ்வொரு விசயங்களுக்கும் தேவையான மேற்கோள்கள் கொடுத்திருப்பதால் அனைத்தும் எளிதில் விளங்கும்படி இருக்கிறது.

உள்ளம் என்றால் என்ன உளவியல் படி நோக்கினால் நமது செயல்பாட்டுக்கு ஆதாரமாக இருக்கும் ஒன்றுதான் மனம் என்கிறது. பெரும்பாலும் மூளை செயல்பாட்டில் மனதை பொருத்திப் பார்க்கிறது உளவியல். அதிலும் நரம்பணுக்களின் செயல்பாடுகளையே மனம் என்கிறது .அப்படி என்றால் மனதை பொருளாக பார்க்கின்ற போக்கு உளவியலில் உள்ளது. உள்ளம் என்பதற்கு உள்ளுதல் அல்லது எண்ணுதல் என்று அதிலேயே விடை இருக்கின்றன. உள்ளத்தை குறிக்கின்ற psyche எனும் ஆங்கில சொல் கிரேக்கத்திலிருந்து கையாளப்பட்டு வருகிறது. இதன் நேரடி பொருண்மைகள் உயிர் மனம் ஆவி சிலவேளை சுவாசத்தையும் குறிக்க பயன்படுத்தியது உண்டு

ஒரு ஊரில் ஒரு முரடன் இருந்தான் அவர் தனது மகளைக் காண அடுத்த ஊர் சென்றான். அது எப்படியோ சிலருக்கு தெரிந்து விட்டது .அவரை வழியில் பார்த்த முதல் இளைஞன் அண்ணே உங்க கண்ணு ஏன் ஒரு மாதிரியா இருக்கு? என்றார், ஒன்றும் இல்லையே என கூறிச் சென்றார். அடுத்ததாக வந்தவர் முகம் ஏன் தொலைவில் பார்க்க மாதிரியா இருக்கு.. அதற்கும் மறுத்தான். நடையில் கொஞ்சம் தொய்வு தெரிகிறது என்றான். இன்னொருவன் சொன்னதற்கு அதனையும் மறுத்தான். அதற்கு பின் நமக்கு ஏதோ ஆகிவிட்டது என்று எண்ணத் தொடங்கினான். நடை தளர்ந்தது, முகம் வாடியது, உடல் கொதித்தது. ஒரு கட்டத்தில் நடக்க முடியாமல் சாய்ந்தான் என்று அந்த கதை முடிகிறது. நமது மனம் இயல்பில் பலவீனமானது என்பதை உணர்த்தும் கதை தான் இது

பித்த நிலை ,கூடுதல் புலனறிவு ,பால்நிலை மனம், நவீன நோய்கள் இச்சை என உளவியல் காரணங்கள் ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே வருகிறார் .இதில் வாய் மோகம் முதன்மையானது என்கிறார்.லக்கான் கொள்கைப்படி கண்மோகம் முதன்மையானது என்கிறார்கள் .நம் மனதை அலைக்கழிக்கும் பணியில் வாய்ச்சுவையும் கண்ரசனையும் பெரும் பங்கு வைக்கின்றன. பிறந்த குழந்தையின் மனதுக்குள் விளைவுகளை ஏற்படுத்துகின்ற ஐம்புலன்களில் இவை இரண்டும் அதிக தாக்கங்களை ஏற்படுத்துகின்றன

பிறக்கும் முன் நம் மனம் சூனியத்திலிருந்து இருந்தது. பிறக்கும்போது முதல் எண்ணம் தோன்றுகிறது. தோன்றியவுடன் அழுகை வந்து விடுகின்றது. அப்போதே நம் மனதில் கருவறை வேட்கை வந்து விடுகிறது. இதை கண்டுபிடித்தவர் தியோடர் ரெய்க். கருவறை பற்றிய எண்ணமே நமது முதல் எண்ணம். முதல் எண்ணமே வேட்கை என்றாகி விட்டது .அதனால் தான் வாழ்நாள் முழுவதும் வேட்கைப் போக்கில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்கிறார்‌.

ஐம்புலன்களும் உணர்வுகளும் என்னும் கட்டுரையில் ஒவ்வொரு சுவைக்கும் ஒரு மன வெளிப்பாடுகளை கூறுகிறார் ஆசிரியர். இனிப்பு என்பது இன்பத்தின் ஆதாரம் .அதனால் தான் மகிழ்வு நடந்தால் நாம் இனிப்புடன் கொண்டாடுகிறோம். உவகை உணர்வு வருகிறது. அடுத்த உவர்ப்பு மனித உடலில் பெரும் பகுதி உப்பு கலந்துள்ளது .இது அளவோடு இருந்தால் நல்லது. உப்பு அதிகம் எடுத்துக் கொண்டால் ரோஷம் இருக்கும் என்று நாம் நம்புகிறோம். காரம் என்றால் கோபம் .நாவில் காரம் பட்டவுடன் நரம்பு உணர்வுகள் கடுகடுப்பாவதன் வழியில் மனம் கடுகடுப்பாகும். புளிப்பில் சகிப்புத்தன்மை உள்ளது. சகிப்புத்தன்மை குறையும். அதேபோல் கசப்பானது விரும்புவோரிடம் சோகங்களை தாங்கிக் கொள்கின்ற மனநிலை ஏற்படும் .அதிக கசப்பு விரும்பினால் சுயநலம் அதிகம் உள்ளது என்று உளவியல் கூறுகிறது. இறுதியாக துவர்ப்பு சிரத்தை எடுக்கின்ற மன நிலை ஏற்படுத்தும் என்கிறது உளவியல் .பெரிய இலக்கில் மனதை ஈடுபடுத்த துவர்ப்பு சுவை துணை புரிகிறது. இவை அழுக்கை போக்கும் தன்மை உடையது.

ஒரு எண்ணத்தை செயல்படுத்த விடாமல் சில எண்ணங்கள் அல்லது சூழல் நெருக்கும் போது டென்ஷன் ஏற்படுகிறது .இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு .அந்த எண்ணம் மீது நாம் ஏற்படுத்திக் கொள்கின்ற அதீத அவா. மற்றொன்று சூழலுக்கு ஏற்ப எண்ணத்தை மாற்றிக் கொள்ள முடியாமை அல்லது எண்ணத்தை மாற்றிக் கொள்ளும் சூழல் ஏற்படாமை. இரு மனங்களின் நெகிழ்ச்சி குறைபாடே இதற்கு காரணமாகும் என்கிறார்.

மனநலத்திற்கும் வாசிப்பு பழக்கத்திற்கும் மிகச் சிறந்த ஒற்றுமை உள்ளதாக உளவியலாளர்கள் சொல்கிறார்கள் .கல்வி புத்தகங்கள் படிப்பதற்கு ஒரு நோக்கம் உள்ளது .அது அறிவு சார்ந்தது .அறிவு விசாலம் அடையும். பொது புத்தகங்கள் படிப்பதற்கு நாம் வைத்த பெயர் பொழுதுபோக்கு. உண்மையில் இத்தகைய வாசிப்பு பொழுதுபோக்குடன் நின்று விடுவது கிடையாது .மனதை விசாலம் ஆக்குகிறது. நாவலையோ கவிதையோ வாசிக்கும் போது அதில் வரும் காட்சிகளை மனதுக்குள் கற்பனை செய்ய வேண்டி உள்ளது .படிக்க படிக்க நம் மனதுக்குள் காட்சிகள் ஓடும். இதனால் மனதில் எண்ணங்கள் புத்துணர்ச்சி பெருகும். சிந்தனை திறன் வளரும். சோம்பி கிடக்கின்ற உணர்வுகள் ஓட்டம் பெரும் மனதின் அகப்பார்வை விசாலமடையும் என்கிறார்.

மனித ஜாதியில் 
துயரம் யாவுமே 
மனதினால் வந்த நோயடா ...

~ கண்ணதாசன் ~

*பிறழ்வு மனம் கொண்டவர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருப்பதாக கருத வேண்டாம் சராசரி மனிதர் யாவரும் சற்று பிறழ்நிலை மனம் உடையவர்களே

* நனவு நிலையில் நாம் எளிதாக இருப்பது போல் தோன்றினாலும் கனவில் நாம் அனைவரும் பித்தர்களே என்கிறார் பிராய்டு 

*எண்ணங்களின் கணம்(set of thoughts) மனம் ஆகும்

*எண்ணங்களை அதன் போக்கில் ஓட விட்டு வெறுமனே கவனித்து வந்தாலே மனப்பயிற்சி கைக்கூடும்.

*நெடுந்தொடரை பார்க்கும் பெண்கள் பின்வரும் இரண்டில் ஒரு குணத்தை உள்வாங்கி வைத்து விடுகின்றனர். ஒன்று சோகத்தில் சுகம், இன்னொன்று கோபத்தில் சுகம்.

*சந்தேகப்படு என்கிறார் மார்க்ஸ். பலபேர் இதனை பிழைப்பாக கொண்டு இருக்கின்றனர். மார்க்ஸ் சொன்னது அறிவு சார்ந்த சந்தேகம். மனிதன் பின்பற்றுவது உணர்வு சார்ந்த சந்தேகம். இந்த சந்தேகம் நம்பிக்கையின் எதிர் முகம் .ஒன்று கூடினால் இன்னொன்று குறையும். இரண்டுக்கும் இடையில் மனிதனின் ஊசலாட்டம் நின்றபாடில் இல்லை

இவ்வாறு புத்தகம் முழுவதும் உளவியல் சார்ந்த பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் மனிதனை பண்படுத்த வேண்டிய கடமைகளும் பொறுப்புகளும் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த புத்தகங்கள் உள்ளது. எந்த ஒரு பகுதிகளும் வீணாணவை என்று ஒதுக்கி விட முடியாமல் ஒவ்வொரு விஷயத்திலும் உளவியல் ரீதியான கருத்துக்களை பரவ விட்டுள்ளனர் .

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Monday 17 April 2023

எல்லாம் சரியாகும் என்கிற மகத்தான ஆறுதல் எல்லோரிடமும் இருக்கிறது... 'எப்பொழுது?' என்ற ஒரே ஒரு கேள்வியில் கலைந்து போகும் அபாயத்துடன்-செளம்யா

கொள்கை அளவில் முடிவு எடுத்தல்ஒரு மரவட்டை ஆந்தையிடம் "எனக்கு இத்தனை கால்கள் இருப்பதால் எத்தனை பிரச்சனை" என்று நொந்து கொண்டதாம். உடனே ஆந்தை "நீ மாத்திரம் எளிதாகி விட்டால் நான்கு கால்கள் தான் இருக்கும். அப்போது உன் வலி பல மடங்கு குறைந்து விடும்" என்றது. உடனே மரவட்டை கேட்டது "நீ சொல்வது நல்ல யோசனையாக இருக்கிறது, அதற்கு நாம் எப்படி எலியாக மாற முடியும்"? அதற்கு ஆந்தை சொன்னது "எப்படி செயல்படுத்துவது என்பதை என்னிடம் கேட்காதே, கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பது தான் என்னுடைய பணி" என்றது. பல கொள்கை ரீதியான முடிவுகள் இவ்வாறு தான் இருக்கின்றன-படித்தது

தாம்பூலம்


பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் 

இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது. சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது. 

வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. 

இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

ஆக மொத்தம் வெற்றிலை போடுவதால் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன. 

அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. 

தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. 

நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் 

சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. 

பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது.

ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே 

ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. 

காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.

அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.

இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது .....இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க வேண்டும்....

-படித்தது

Book-66


#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-24
Book-66
Pages-354

தமிழக தொல்குடிகள் 

எட்கர் தர்ஸ்டன் காதம்பி ரங்காச்சாரி

இந்த நூலை எழுதிய எட்கர் தர்ஸ்டன் ஒரு மருத்துவர். இங்கிலாந்து நாட்டவர். சென்னை அரசு அருங்காட்சியகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து தென்னிந்திய இனவரைவியல் குறிப்புகளும் ,சாதிகளும் பழங்குடிகளும் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார் .அதேபோல் மற்றொரு ஆசிரியரான காதம்பி ரங்காச்சாரி சென்னை அரசு அருங்காட்சியகத்தில் துறை கண்காணிப்பாளராக பணியாற்றி தர்ஸ்டனுடன் உடன் இணை ஆசிரியராக பணியாற்றி மேற்கூறிய 9 தொகுதி நூல்களிலும் துணையாக நின்றவர். இந்நூல் தமிழ்நாடு தொல்குடிகளான பழங்குடியினரின் 24 வகையினரை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.

இந்த நூல் ஆந்திரா ஒடிசா எல்லை தொடங்கிய கன்னியாகுமரி வரை பரவி வாழும் இந்த இனத்தவர்களை பற்றியே 135 ஆண்டுகளுக்கு முன்னால் தொகுக்கப்பட்ட விவரங்கள் இவற்றில் உள்ளதாகவும் இது ஒரு அறிய சமூக ஆவணமாக கூறப்படுகிறது. அதில் ஒரு பகுதியான தமிழக தொல்குடிகள் பற்றி நீண்ட நெடிய அறுபடாத மரபை கொண்ட தமிழ் சமூகத்தின் எண்ணற்ற ஆதி கூறுகளை இந்த தொல் குடிகள் பிரதிபலிக்கிறார்கள் என்றும் இது ஒரு பெரிய ஆய்வு களஞ்சியமாக திகழ்கிறது என்றும் நூலின் முன்னுரையிலேயே பண்பாட்டாளர் பக்தவச்சல பாரதி தெரிவிக்கிறார்.

பழங்குடியினர்களான கோத்தர் வடகர் கன்னட இருளர் குரும்பர் கொடநாடு மந்தையிலிருந்து தோடன் ஆகியோராக சேர திரண்டு இருக்கலாம். நீலகிரி சேர்ந்த பழங்குடியினர் படகர்கள் நல்ல நிறம் வாய்க்க பெற்றவர்கள். இதற்கு மாறானவர்களாக இருளர்கள் இருந்தனர் .கருப்பு நிறத்தில் இருளன் என்ற பெயர் இருட்டு அல்லது கருப்பு என்ற பொருளை தருவது. மலை தோட்டங்களில் கூலிகளாக பணிபுரிந்து இப்பெயர் அமைந்ததா அல்லது இவர்களின் தோலின் நிறத்தை குறித்து பெயர் அமைந்ததா என்பதை தெளிவாக புரியவில்லை. மழைக்காக வேண்டியும் மக்களும் கால்நடைகளும் நலமாக வாழ வேண்டியும் இருளர்களின் காட்டு நடனம் பால் பொங்கலும் நிகழும்.

 ஈரோடு மாவட்டத்தில் உள்ள திம்பம் காடுகளில் 1800 அடி உயரத்தில் வாழ்பவர்கள் ஊராளி எனப்படுபவர்கள். இவர்கள் ஏழு குலத்தவர்கள் என கூறிக் கொள்கின்றனர். கன்னடமும் தமிழும் கலந்த கொச்சை மொழியே இவர்கள் பேசுகின்றனர். இறந்தவர்களை புதைக்கின்றனர் சாவு சடங்குகள் ஓரளவு படகர் சாவு சடங்குகளை ஒத்துள்ளன .மேலும் இவர்களைப் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன .மேலும் எர்நாடன்,எரவாளர் உள்ளிட்டோர் குறித்த குறிப்புகளும் உள்ளன

காடர் அல்லது காடன்கள் என அழைக்கப்படும் இவர்கள் ஆனைமலை பகுதிகளில் வாழ்பவர்கள். தொன்மையான பழங்குடிகள் என அழைக்கப்படும் இவர்கள் தமிழும் மலையாளமும் கலந்த மொழிகளை பேசுகின்றனர். நாகரீக தொடர்பு இன்றி மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்த முடியும் என்று எடுத்துக்காட்டாக விளங்குபவர்கள். இயற்கையே வாழ்க்கை தேவைகளை அனைத்தும் நிறைவு செய்யும் .காடுகளில் கிடைக்கும் மெழுகு தேன் ஏலம் கடுக்காய் இஞ்சி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து பிழைத்து வருகின்றனர்.

குருவிக்காரன் எனப்படுவோர் மராத்தி பேசுபவராக பறவைகளைப் பிடிப்பவராக இருக்கின்றனர். தமிழகத்தில் நரிக்குறவர் என வழங்கப்படுபவரே குருவிக்காரர் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளனர். இவர்களை குறித்த பல்வேறு கதைகள் சொல்லப்பட்டாலும் நரிக்கொம்பு தயாரித்து வைக்கும் தொழிலை மேற்கொண்டுள்ளனர். முதலில் தலையிலிருந்து மூளையை அகற்றுவார் பின்னர் மண்டையோட்டின் ஒரு பகுதியில் இருந்து தோலை உரிப்பர் .மண்டையின் இரு பக்க எலும்புகளும் இணையும் எலும்பும் பின் மண்டையில் உள்ள துளைக்கு மேல் இடத்தில் இணையும் பகுதியில் நீட்டிக் கொண்டிருப்பது போல தோன்றும்படி உள்ள எலும்பு பகுதியை மட்டும் விட்டுவிட்டு எஞ்சிய பகுதி ராவி நீக்கிவிட்டு உரித்த தோல் பகுதி இழுத்து நீட்டி கொண்டிருக்கும் அந்த எலும்பின் மேல் வைத்து அழுத்தி மீண்டும் பொருத்துவர்.

தோடர்கள் நீலகிரியில் தங்களுக்கான நில உரிமையை பெறும் முன் கோத்தர்களும் தோடர்களும் மிக நெருக்கமாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. இரு சாராரும் பேசும் மொழிகள் மிகுந்த ஒற்றுமை உடையவனாக உள்ளன. கோ ஹாட்டியா என்ற வடமொழிச் சொல்லிலிருந்து வந்ததுதான் கோத்தர் என்ற பெயர். கோத்தர்கள் காண்டியன் திராவிட பிரிவை சேர்ந்தவர் .நீலகிரியில் உள்ள கோத்தகிரி கீழ்கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் கோத்தர்கள் வாழ்கின்றனர். கோத்தர்களும் தோடர்களும் கூடி வாழ்ந்து எருமைகளை வளர்த்து வந்தனர். ஆனால் கோத்தர்கள் இறந்து போன எருமையின் இறைச்சியை தின்றதால் தோடர்கள் இவர்களை விரட்டி விட்டனர் என கூறப்படுகிறது.

மலையாளிகள் பற்றிய குறிப்புகளை படித்த போது ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் அல்ல. மலையாளி என்ற சொல் மலைகளில் வாழ்பவன் என பொருள்படும். நீலகிரி மலையில் வாழும் தோடரை போல மலையாளிகள் தங்களை இந்த மலைப் பகுதிக்கு உரிமையுடைய பழங்குடிகள் என கூறிக் கொள்வதில்லை. காஞ்சிபுரத்திலிருந்து தென்னிந்தியாவில் முகமதியர் ஆட்சி மேலோங்கிய போது பத்து தலைமுறைகளுக்கு முன் மலைப் பகுதிக்கு குடியேறியவர்கள் இவர்கள் .சேலம் மாவட்டம் சேர்வராயன் மலைகளை காஞ்சி மண்டலம் என்று கூறிக் கொள்கின்றனர் .சேர்வராயன் மலையில் உச்சியில் இருக்கும் சேர்வராயனுக்கு ஆண்டுதோறும் திருவிழா கொண்டாடுகின்றனர்.

இவர்களைப் போல் இன்னும் பல இனத்தவர்களை பற்றிய குறிப்புகள் படிக்க சுவாரசியமாக இருக்கிறது. இவர்கள் பெரும்பாலும் கோவை ஈரோடு சேர்வராயன் மலை கேரளாவில் வயநாடு உள்ளிட்ட மலைப் பகுதிகளில் தான் அதிகம் வசிக்கின்றனர. இவ்வாறு தமிழக தொல் குடிகளை பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு நிச்சயம் இது ஒரு நல்ல புத்தகமாக அமையும்

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

book-65



#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038

Day-24
Book-65
Pages-256

அழகிரிசாமி இலக்கியத்தடம்
-மு.பரமசிவம்

பஞ்சம் வந்துவிட்டது. பஞ்சம் வந்துவிட்டால் என்ன மக்கள் பட்டினி கிடப்பதோடு மட்டுமல்லாமல், மற்றொரு பரிதாபகரமான காரியத்தையும் செய்வார்கள். அதாவது ஒரு பஞ்ச பிரதேசத்தை விட்டு அதைவிடக் கொடுமையான மற்றொரு பஞ்ச பிரதேசத்திற்கு குடி பெயர்ந்து செல்வார்கள். பட்டினிப் பட்டாளங்கள் ஏதோ நம்பிக்கையுடன் ஒரு சாலையில் எதிரெதிர் திசையில் பிரயாணம் செய்வது பஞ்சத்தின் கோரமான அலைகடவுகளில் ஒன்று
-திரிபுரம்

மேற்காண் வரிகள் ஒரு சிறுகதையின் துவக்க வரி கதையின் ஒட்டுமொத்த சாராம்சமும் அந்த முதல் பத்தியிலேயே வந்து விடுகிறது. இந்த எழுத்தின் பலம் தான் அழகிரி சாமியின் பலம்.

அழகரிசாமி என்னும் ஆளுமை பற்றித் தான் இந்த புத்தகம். இடைச்செவல் கிராமத்தில் எஸ்எஸ்எல்சி வரை படித்தவர். இளமைக்காலத்தில் கம்ப ராமாயணம் பாரதியார் கவிதைகளை சுயமாக படித்து தெரிந்து கொண்டவர் .அப்போது ஆங்கில நூல்களை படித்துக் கொண்டிருப்பார் .1943 பிரசண்ட விகடனில் சேர்ந்தார் .முதல் சிறுகதை தொகுப்பு பேராசிரியர் கல்கியின் முன்னுரையுடன் 1952 இல் வந்தது .அதே ஆண்டில் தான் மலேசியாவுக்கு பயணம் ஆனார் மலேசியாவில் தமிழ் நேசன் பத்திரிக்கையில் 5 ஆண்டுகள் பணியில் இருந்த காலத்தில் தான் சீதாலட்சுமி என்ற பெண்ணை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். இது ஒரு கலப்பை திருமணம் ஆகும். 1957 ல்சென்னை திரும்பியபோது காந்தி நூல் வெளியீட்டு கழகத்தில் மொழிபெயர்ப்பாக இருந்தார் .1960 இல் நவசக்தி பத்திரிக்கை துணை ஆசிரியராக இருந்தார். சோவியத் நாடு இதழிலும் பணியாற்றினார் .1970 இல் அவரின் அன்பளிப்பு என்ற சிறுகதை தொகுப்புக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. ஆனால் அவர் அப்போது உயிரோடும் இல்லை. அழகிரி சாமியின் படைப்புகள் குறைவாக இருந்தாலும் அவர் படைத்தன என்றும் காலத்தால் நீங்காத இடம் பெற்றவைகள்.

அழகிரி சாமியின் ஒரே ஊர்காரரும் அண்டை வீட்டுக்காரருமான கி ராஜநாராயணன் அழகிரி சாமியின் இளமை பருவம் குறித்து ஒவ்வொன்றாய் நமக்கு சொல்லிக் கொண்டு வருகிறார். இளமை காலத்திலேயே ஆங்கில நூல் படிப்பதில் ஆர்வம் கொண்டவர். வீட்டில் நாங்கள் தெலுங்கு பேசினாலும் அழகிரிசாமி உடன் எப்போதும் தமிழில் தான் உரையாடுவோம். பத்தாம் வகுப்பு முடிவிற்கு பின் சர்வீஸ் கமிஷன் பரிச்சையிலும் தேறி கொஞ்ச நாள் வேலை இல்லாமல் பக்கம் பக்கமாய் புத்தகம் படித்து தள்ளுவதே வேலையாய் இருந்தான். படிப்பதில் அவனுடைய வேகத்தை யாராலும் பின்பற்ற முடியாது. அவனுடைய கண் விழிகளை கவனித்தால் இடதும் வலதுமாக கடிகாரத்தின் பெண்டுலத்தை விட வேகமாக அசையும் .நம்முடைய கண்கள் வார்த்தைகளாக கொத்தி விழுங்கினால் அவருடைய கண்கள் வாக்கியங்களாக அள்ளி விழுங்கும்

ஜெயகாந்தனின் கட்டுரையில் அழகிரிசாமி என்கிற ஐந்தடி ஏழு அங்குலம் உயரமுள்ள சிறிதே வழுக்கையான சதா நேரமும் சிரிக்கின்ற முகம் உள்ள அந்த மனிதன் .அவனிடம் பொய்மை எப்போதும் இல்லை. திருவேணி, சிரிக்கவில்லை, அழகம்மா, வெறும் தா ,ராசா வந்துட்டாரு.. நான் படித்து பரவசமூட்டி பாராட்டி நினைத்து மகிழ்ந்திருக்கிறேன் என்று அவருடைய எழுத்தை பற்றி உயர்வான வார்த்தை சொல்லுகிறார்

சிறுகதை மொழிபெயர்ப்பு ஆகியவற்றோடு பழந்தமிழ் இலக்கியத்தின் மீதும் அதிகமான ஈடுபாடு கொண்டவர். அந்த வழியில் முதல் தொகுப்பான இலக்கியச் சுவை என்ற பெயரில் 1954 இல் வெளிவந்தது. தொடர்ந்து அவர் இலக்கியத்தேன் இலக்கிய அமுதம் இலக்கிய விருந்து என்ற தலைப்புகளில் கொண்டு வந்தார். கம்பராமாயணம் அவர் அதிகம் ஆர்வம் கொண்டிருந்தார். அவருக்கு சின்ன வயதிலிருந்து சித்திரம் வரைவது ஆசை அதிகம். ஆனால் இலக்கியத்துக்கு வந்ததும் அதை விட்டு விட்டார். அடிக்கடி படம் போடுவார் .1960 இல் நவசக்தி இதழில் பணியாற்றி ஐந்தாண்டு காலம் வேலை பார்த்தார். பிறகு அதனை விட்டு முழு நேர எழுத்தாளராக மாறிப்போனார். 1970 சோவியத் அலுவலகத்தில் சேர்ந்த சில நாட்களுக்குள்ளாகவே அவருக்கு உடம்புக்கு முடியாமல் போய்விட்டது. சென்னை பொது மருத்துவமனையில் இருந்தார்.

1944 திருச்சி வானொலி நிலையம் முதன்முதலாக எழில் என்னும் பொது தலைப்பில் கவியரங்கம் ஒன்றை நடத்தியது.டி கே சி தலைமையில் நடைபெற்ற அந்த கவியரங்கத்தில் கலந்து கொண்டார். அந்த கவியரங்கில் கலந்து கொண்டவர்களில் ந. பிச்சை மூர்த்தியும், கு.ப.ராவும் குறிப்பிடத்தக்கவர்கள் அப்போதுதான் அவர்களுக்கு ள் அறிமுகம் ஆனது. அழகிரிசாமியின் கவிதைகள் இதுவரையில் புத்தகமாக வெளிவரவில்லை.
அவர் பதுப்பித்த சுந்தரகாண்டம் ஒரு ஆண்டில் 5000 பிரதிகள் விற்று சாதனை படைத்ததாக கண. முத்தையா சொல்கிறார்

மனிதநேயத்தின் இழைகள் ஒவ்வொன்றாய் அறுந்து கொண்டிருக்கும் பரபரப்பான எந்திரகதியான இன்றைய வாழ்க்கைச் சூழலில் மனித நேயத்தின் சிறப்பையும் மனிதனிடத்தில் அவருடைய சிறுகதைகளும் நம்மை ஈர்ப்பதில் வியப்பில்லை.
கல்கி எழுதுகிறார்.. ஒருவன் நம்பத்தகாத நிகழ்ச்சி ஏதேனும் கூறினால் என்னப்பா கதை சொல்கிறாயா? என்கிறோம் .என்னடா கதை அழக்கிறாய் என்கிறோம். கதை என்றால் எளிதில் நம்ப முடியாத அபூர்வமான நிகழ்ச்சிகள் அடங்கியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கத் தோன்றுகிறது.

தேவையும் தெய்வமும் கதை கடற்கரைக்குச் செல்லலாம் என்று வாதிடும் நாத்திக நண்பரையும் கோவிலுக்கு செல்ல விரும்பும் ஆத்திகரையும் பற்றியது. கடைசியில் கோவிலுக்கு செல்கிறார்கள். வெளியில் விட்டு வந்த செருப்பு பத்திரமாக இருக்க வேண்டுமே என்று அதைப் பற்றிய நினைத்துக் கொண்டிருக்கும் நாத்திக நண்பரும் ஆத்திகரும் தத்துவ ரீதியில் விவாதிக்கிறார்கள் .செருப்பை பற்றிய நினைத்ததற்காக தெய்வமே தன்னைச் சாடுவது போல அவருக்கு தோன்றுவதாக அந்தக் கதை இருக்கிறது.

அழகிரி சாமியின் கதைகளில் புதுவகையான உத்தியோ உள்ளடக்கமோ இல்லை என்பது பல விமர்சகர்களின் கருத்து. ஆனால் அதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. உத்தி என்பதும் உள்ளடக்கம் என்பதும் கதைக்கு ஒரு சுமை. அது ஒரு மாயவலை. அதனுள் சிக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை என்பதோடு புதிய உள்ளடக்கத்துடன் எழுதுபவர்களை மதித்ததும் இல்லை என்கிறார். ஆனால் பல உத்திகளோடு எழுதப்படும் கதைகள் கூட இவரின் கதைக்கு நிகராக இல்லை என்பதும் ஒரு உண்மையோடு ஒத்துக் கொள்ள வேண்டியதுதான் என்கிறார் ஆர் உமா அவர்கள்

*தமிழ் சிறுகதையில் அமைதியாக புரட்சி செய்தவர் அழகிரிசாமி 

*சிறுகதைகளில் வரும் உரையாடல்களே அவற்றின் கதை பொருள் வளர்ச்சிக்கும் பாத்திரங்களின் பண்புகளை விளக்குவதற்கும் துணை வருகின்றன.

*லார்டு இர்வின் என்று ஒரு வெள்ளைக்காரன் இந்தியாவுக்கு வைஸ்ராயாக இருந்தார். அவனுக்கும் நம்முடைய அழகிரிசாமி கை இருந்ததால் செல்லையாவை லார்டு இர்வின் என்று அழைத்து வந்தோம்

*1950 ஆம் ஆண்டு கரிசல் காட்டில் பிண்ணாக்கு பஞ்சம் வந்தது. சாப்பிடுவதற்கு ஒன்றுமே கிடைக்காத போது கடலை பிண்ணாக்கை மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்தார்கள். கொஞ்சம் வசதியாக வாழ்ந்தவர்கள். மொச்சை கொட்டை வாங்கி அவித்துச்  தின்றார்கள். ஆகவே இதற்கு மொச்சை கொட்டை பஞ்சம் என்று மற்றொரு பெயர் உண்டு.

பல்வேறு ஆளுமைகள் அவர் குறித்த இலக்கிய திறனாய்வுகளை இந்த புத்தகத்தில் படித்ததில் மிக்க மகிழ்வை தந்தது 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு