#30நாள்_வாசிப்புப்போட்டி
#RM105
Book:18
Pages:575
விகடன் மேடை
ஆனந்த விகடனில் வாரந்தோறும் வாசகர் கேள்விகளுக்கு பிரபலங்கள் அளித்துள்ள பதில்கள் தான் விகடன் மேடை புத்தகம். நெறியாளர்கள் பேட்டி எடுக்கும் போது கேள்வி கேட்கும் போது சில கேள்விகளை தவிர்த்து விடுவார்கள். ஆனால் வாசகர்கள் அப்படி அல்ல. உண்மையை பட்டவர்த்தனமாய் கேட்கும்போது பதிலும் பட்டவர்த்தனமாக சொல்ல வேண்டிய நிலை வரும். அவ்வாறு தன் மனதில் பட்டதை பிரபலங்கள் சுவாரசியமாகவும் துணிவுடனும் கூறியிருப்பார்கள். சில ஆளுமைகளைப் பற்றி நம் பிம்பத்தை மாற்றும் அளவுக்கு சில பதில்கள் இருக்கும். அவ்வாறு பிரபலங்கள் அளித்த பதில்களில் நான் ரசித்த பதில்கள் சில.
#கமல்ஹாசன்
நிறைய படித்தவர். விஷய ஞானம் உள்ளவர். நாம் கேட்கும் கேள்விகளுக்கு எதார்த்தமாகவும் உண்மையாகவும் பதில்கள் இருக்கும் அவ்வாறு கேட்ட கேள்விகள்..
*எந்திரன் படத்தில் நாம் நடிக்கவில்லை என்று நினைத்தீர்களா?
நினைத்திருந்தால், நடிக்கும் வாய்ப்பு இருந்தது. நடிக்கவில்லை விடுங்கள்
*அடுத்த பிறவி பற்றி?
இந்த அடுத்த பிறவியை யார் மனதிலும் இல்லாத புனைக் கதையாக நிரூபிக்கும் நல்லறிவாளராக, மறுபிறவி அறுக்கும் பகுத்தறிவாளராக.
*நமது தேசிய குணம்?
"சமரசம்"
*வறுமையின் நிறம் என்ன? பஞ்ச'வர்ணம்
*தொண்டன் பக்தன் ரசிகன் யார் ஏமாளி?
ரசிகன் ஏமாறத் தேவையில்லை ரசனையை மேம்படுத்திக் கொள்ளும் வரை.
#இயக்குநர் பாலா
*அறியாமையை அறிந்து விடுவார்கள் என்பதால் தான் அதிகம் பேசுவதில்லை?
கண்டுபிடிச்சிட்டியே ராசா
*பாலா ஒரு சுயமதிப்பீடு?
நான் ஒரு பரதேசி நல்லோர் கால் தூசி
*உங்கள் பார்வையில் அழகு? முதுமை தான். அந்த முகச் சுருக்கங்கள்
*நீங்கள் ஈழத்தமிழனாக பிறந்தால்?
அங்கு பிறந்திருந்தால் செத்து மண்ணோடு மண்ணாக போயிருப்பேன். இங்கே பிறந்திருப்பதால் குற்ற உணர்வில் ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டிருக்கிறேன்
#சூர்யா
*நீங்க தம் அடிப்பீங்களா?
சினிமாவில் அடிச்சுகிட்டு இருந்தேன். பேரழகன் படத்தில் ஏவிஎம் சரவணன் சார் உங்களை பார்த்து 10 பேர் தம்மடிக்க பழகுவார்கள் என்று சொன்னார். உடனே நிறுத்தி விட்டேன். அவரிடம் பிராமிஸ் செய்தது இன்றுவரை அதை காப்பாற்றி கொண்டு வருகிறேன்.
(நிறைய கேள்வி பதில்கள் சூர்யா ஜோதிகாவை பற்றிய இருந்ததால் சொல்ல நினைத்தவை இது ஒன்றுதான்)
#தமிழருவி மணியன்
*தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் அநாதை யார்?
தமிழருவி மணியன்
*பேச்சுக்கலையில் உங்கள் முன்னோடி யார்?
அவர் பொய் சொன்னார் என்று சொல்ல மாட்டேன். உண்மைக்குப் புறம்பாக பேசினார் என்று மென்மையான வார்த்தைகளால் மேடை நாகரீகம் காத்த ஈ.வே.கி.சம்பத்
#அப்துல் கலாம்
*உங்களின ரோல் மாடல் யார்?
சிறுவயதில் பறவை பறக்கும் விதம் குறித்து கற்பித்து, வாழ்க்கையில் பறக்கும் எண்ணத்தை விதைத்த என் ஆசிரியர் சிவசுப்பிரமணிய ஐயர்.
*இவர் இல்லையேல் நான் இல்லை என எண்ணும் மனிதர் யார்? திருவள்ளுவர்.
*தெரிந்தே செய்யப்படும் ஊழல் தெரியாமல் செய்யப்படும் ஊழல் எது?
ஊழல் என்றால் ஊழல் தான். வேறுபாடு கிடையாது.
#விஜய்
*பல எஸ்எம்எஸ்கள் உங்கள் மொபைலில் வரும் போது உங்களின் ரியாக்ஷன்?
S- சிந்திப்பேன் Mமௌனமாய் இருப்பேன் Sசிரிப்பேன்
*உங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வாசகம் ?
வள்ளலாரின் சொன்ன தனித்திரு விழித்திரு பசித்திரு
*பலம் பலவீனம் என்ன?
பலவீனத்தை புரிந்துகொண்டால் பலம். பலத்தை புரிந்து கொள்ளாவிட்டால் பலவீனம்
#எஸ்.ரா
*எத்தனையோ இசங்கள் இருக்கின்றன உங்களுக்கு பிடித்த இசம் எது?
கம்யூனிசம் எல்லா இசங்களும் அறிவாளிகளுக்காணது. கம்யூனிசம் மட்டுமே சாமானிய மக்களுக்கானது
*தமிழ்நாட்டில் பிடித்த அரசியல்வாதி? தோழர் நல்லகண்ணு
*எஸ்ரா ஜெயமோகன் சாரு இருவரில் யாருக்கு ரசிகர்கள் வாசகர்கள் அதிகம்?
ஒரே ரசிகர் தான் வேறு வேறு காரணங்களுக்காக மூவருக்கும் வாசகர்களாக இருக்கிறார்கள்.
*இதுவரை படித்ததில் உங்களுக்கு மிகவும் பிடித்தது?
ஒரு நூற்றாண்டு காலத் தனிமை எனும் புத்தகம்
*தமிழில் டாப் 10 புதினங்கள்?
மோகமுள், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், புயலிலே ஒரு தோணி, கோபல்ல கிராமம், நாளை மற்றொரு நாளே, ஒரு புளிய மரத்தின் கதை, ஒற்றன், பசித்த மானுடம், இடைவெளி கடல்புரத்தில்.
#ட்ராபிக் ராமசாமி
*போலீஸ்க்கும் உங்களுக்குமான உறவு எப்போது ஆரம்பித்தது?
1963 ஆம் ஆண்டு பின்னி மில்லில் பணிபுரிந்தபோது ஊர்க்காவல் படையில் முதன் முதலில் நான்தான் அமைத்தேன். அப்போது மில்லில் பணிபுரிந்த நூறு பேருக்கும் நான்தான் கமாண்டராக இருந்தேன்
*ரா பார்த்திபன்
*ரஜினிக்கு ஒரு ஒன்லைன்?
ரஜினி ஒரு லயன்
*எதையும் வித்தியாசமாக செய்யும் நீங்கள் வித்தியாசம் பார்க்காமல் செய்வது ?
மனிதம் வளர்ப்பது வித்தியாசம் பார்க்காமல்
*உதவி இயக்குனர்கள் பற்றி ?விரல்களின் உதவியின்றி கரம் வெறும் கட்டையே
இதுபோல் 20 பிரபலங்களில் ஒன் லைனர்கள் விரிவான பதிவுகள் இலக்கியங்கள் சினிமாக்கள் அரசியல் பதிவுகள் நட்புகள் தன்னம்பிக்கைகள் வாழ்வியல் குறித்து அவர்கள் விளக்கியுள்ள பதில்கள் மிகவும் அற்புதமானவை. ஒவ்வொரு பதில்களும் அடுத்தடுத்து சுவாரஸ்யத்தை தூண்டக்கூடிய வகையில் அமைந்துள்ளன. சில பதில்கள் சுமாராய் இருந்தாலும் பல பதில்கள் படு சூப்பராய் இருப்பதே இந்த புத்தகத்தில் வெற்றியாக கருதுகிறேன்
தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு