நண்பகல் நேரத்து மயக்கம்:
“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு “
இறப்பு என்பது மீண்டும் விழிக்கு முடியாத தூக்கம். பிறப்பு என்பது நீண்ட தூக்கத்திற்கு பிறகு விழித்தல். இது நிலையாமை அதிகாரத்தில் வரும் ஒரு குறளின் பொருள்.
இந்தக் குறள் இறப்பு மற்றும் பிறப்பை define செய்வது போல தோன்றினாலும் இதற்குள் நிலையாமை கொள்கை குறித்த ஆழமான பொருளும் உண்டு. பிறப்பு என்றால் விழிப்பு , மரணம் என்றால் தூக்கம் அப்படியென்றால் “ வாழ்க்கை” என்பது என்ன?
சமீபத்தில் Wabi Sabi - the wisdom of imperfection எனும் புத்தகம் வாசித்தேன். வாபி சாபி என்பது ஜப்பானிய சிந்தனை அல்லது தத்துவம் அல்லது ஒரு கலை வடிவம் எனச் சொல்லாம்.
Nothing is perfect
Nothing is finished
Nothing last forever எனும்
முக்கிய மூன்று கொள்கைகளை அடிப்படையாக கொண்டது இந்த வாபி - சாபி. புத்த மத “நிலையாமை” கோட்பாட்டின் ஜென் புத்த மத வடிவம் இந்த வாபி- சாபி.
நாளைக்கு எல்லாமே மாறக்கூடும் என்கிற போது எதிர்காலம் குறித்தும் நிகழ் காலம் குறித்தும் ஏன் கவலையும் பதட்டமும் கொள்ள வேண்டும் என்கிற கேள்வியை ஏழுப்புகிற தத்துவம் இந்த வாபி சாபி.
முழுமையற்றதை நிலையற்றதை குறையுள்ளவற்றை அழகியலாக பார்க்கும் முறை இந்த வாபி சாபி மூலம் உருவானது .
வாழ்க்கை நிலையற்றது நிச்சையமற்றது அதனால் நாம் ஏதுவும் செய்ய வேண்டாம் , என்ன செய்தாலும் என்ன பயன், இந்த உலகமே மாயை, நம்மால் ஆவது எதுவும் இல்லை, எல்லாம் அவன் செயல் - போன்ற கொள்கைகளை வாபி சாபி ஏற்றுக் கொள்வதில்லை.
மனித ஆற்றலில் பெரும் நம்பிக்கை கொண்டது வாபி சாபி.
We embrace the utter uncertainty along with the mystery of our own ability அதாவது நாம் நமது ஆச்சரியப்படுத்தும் திறமையையும் நமது செயல்திறனையும் அங்கீகரித்து இந்த உலகின் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்றுக்கொள்வது வாபி-சாபி நிலையாமை கொள்கை.
நம்மூரில் நிலையாமை என்றால் உலகம் ஒரு மாயை, இன்னிக்கி செத்தா நாளைக்கு பால், இங்கு நாமாக செய்ய ஒன்னுமில்லை, எல்லாம் அவன் செயல், உலகமே நாடக மேடை, இங்கு நம்மால் செய்ய ஒன்னும் இல்லை … இப்படியான நெகடிவ் உணர்வு தரும் வாக்கியங்களே நாம் கேள்விப்படுவோம், ஆனால் வாபி - சாபி நிலையாமை கொள்கைக்குள் இருக்கும் அழகியல், அதற்குள் இருக்கும் அமைதி, பிரச்சனைளை தீர்வு காணும் முறை, முன்னேற்றம், இப்பொழுது இருப்பதை விட அடுத்த முறையை சிறப்பாக்கும் செயல்பாடுகளையும் கொண்டது.
உலகம் போற்றும் ஜப்பானிய செயல் திறனுக்கு பின் இருக்கும் காரணங்களில் ஒன்று இந்த வாபி சாபி எனும் நிலையாமை கொள்கை.
எதுவும் நிலைக்க போவதில்லை, எதுவும் முடிவுபெறப் போவதில்லை, எதுவும் முழுமையானதும் அல்ல ஆனால் மனித திறன் கொண்டு தொடர்ந்து சிறப்பாக்கிக் கொண்டே இருக்க முடியும் என ஜப்பானியர்கள் நம்மூர் நிலையாமை கொள்கையை மனித திறன் மேம்பாட்டுக்காகவும் பயன்படுத்துக் கொள்கிறார்கள் நம்மூரிலோ எதுவும் நம் கையில் இல்லை எல்லாம் இறைவனே என பக்தி ஆன்மீகம் வளர்க்க மட்டுமே பயன்படுத்துகிறோமோ என சந்தேகம் வருவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.
எல்லாமே அழியும் அதுக்கு “சும்மா இருக்கலாம்” என்பது நிலையாமை கொள்கை அல்ல என எனக்கு புரிய வைத்தது இந்த வாபி - சாபி.
அப்போ அடுத்து வள்ளுவர் என்ன சொல்லிருக்கிறார்ன்னு தேடி பார்த்தால் அட …
நிலையாமை உண்மை அதனால் அறத்தை விரைவாக சிறப்பா செய் என செயலுக்கே முக்கியத்துவம் தருவதாக இருக்கிறது “ நிலையாமை” எனும் அதிகாரம்.
இதைக் குறித்து யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது நேற்று பார்க்க நேர்ந்த படம் “நண்பகல் நேரத்து மயக்கம்” எனும் தமிழ் - மலையாள படம். அந்தப் படத் துவக்கத்தில் இந்த பதிவின் துவக்கத்தில் சொல்லப்பட்ட திருக்குறள் இடம்பெறுகிறது. அதிலிருந்துதான் கதை ஆரம்பிக்கிறது.