Wednesday 30 November 2022

August-august


ஒரு நண்பர் August என்பதற்கும் august என்பதற்கும் வித்தியாசம் உண்டா? என்று கேட்டார். முதன்முறை படித்தபோது இந்த இரண்டு ஆங்கில வார்த்தைகளுக்கும் வித்தியாசம் புரிய வில்லை. பிறகுதான் புரிந்தது அவர் Capitonym பற்றிக் கேட்கிறார் என்று.

அதாவது அவர் குறிப்பிட்டதில் ஒரு வார்த்தை (August என்று) Capital Letter- ல் தொடங்க, மற்றொன்று ‘august’ என்று Capital Letter இல்லாமல் தொடங்குகிறது. இதுபோன்ற வார்த்தைகளை ஆங்கிலத்தில் Capitonym என்பார்கள். அதாவது முதல் எழுத்தை Capital ஆக மாற்றிவிட்டால் அந்த வார்த்தையின் அர்த்தம் மாறிவிடும்.

சில சமயம் உச்சரிப்புகூட மாறிவிடும். நண்பர் சுட்டிக் காட்டிய வார்த்தைகளையே எடுத்துக் கொள்ளலாமே. August என்பது ஒரு மாதத்தின் பெயர். ரோமானியச் சக்கரவர்த்தி Augustus என்பவர் பெயரிலிருந்து உருவானது.

மாறாக august என்ற வார்த்தைக்குப் பொருள் மரியாதைக்குரிய மற்றும் கவரக்கூடிய என்பதாகும்.. அதாவது Respected, distinguished, renowned, prestigious போன்ற வார்த்தைகளுக்குச் சமமானது

இறையன்பு


என்னுடைய கையெழுத்து, எதையாவது பார்த்து எழுதும்போது கிறுக்கலாக இருக்கும்.நானாக எழுதும் போது சற்றுத் தெளிவாக இருக்கும்.என் கையெழுத்தில் இருந்துதான் "மற்றவர்களை நகலெடுப்பது கிறுக்குத்தனம்" என்று கற்றுக்கொண்டேன்

-வெ.இறையன்பு

info


'இம்மி கூடத் தரமாட்டான்' என்பதில் வரும் இம்மி என்பது '10,75,200ல் ஒரு பங்கு

#info

புத்தர்


உண்மையை உண்மைதான் எனத் தெரிந்துகொள்; உண்மைக்குப் புறம்பானது உண்மையல்ல என்பதையும் தெரிந்து கொள்

-புத்தர்

Monday 28 November 2022

ரோலக்ஸ்


ரோலக்ஸ் வாட்ச்

1.சுவிட்சர்லாந்தில் ஒரு ரோலக்ஸ் வாட்ச் தயாரிக்க ஒரு வருட காலத்தை அதன் நிறுவனம் செலவிடுகிறது. அதில் இருக்கும் ஒவ்வொரு அமைப்புகளும் கைகளாலேயே பொருத்தப்படுகிறது. ரோலக்ஸ் வாட்சை தயாரிக்க அத்தனை முக்கியத்துவமும் ஒவ்வொரு ஊழியரிடம் இருந்தும் கொடுக்கப்படுகிறது.

2. ரோலக்ஸ் வாட்ச்க்கான அனைத்து உதிரிபாகங்களையும் ரோலக்ஸ் நிறுவனமே சொந்தமாக தயாரிக்கிறது. வெளியில் இருந்து சிறு துகள்களை கூட ரோலக்ஸ் பெறாது. தர உறுதிக்கான செயல்பாடுகளை மிகவும் நுட்பமாக கையாள்கிறது.

3.ஒவ்வொரு ரோலக்ஸும் காற்றழுத்த கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்படுகிறது. அதில் காற்றுக் கசிவோ, தண்ணீர் ஊடுறுவலோ தென்பட்டால் அந்த வாட்சை இரண்டாம் தரத்துக்கு அனுப்பி சந்தையில் வெளியிடாமல் முற்றிலும் அகற்றப்பட்டு ஸ்கார்ப் செய்யப்படும்.

4. உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த துருப்பிடிக்காத ஸ்டீலை ரோலக்ஸ் பயன்படுத்துகிறது. மற்ற உயர் ரக கைகடிகாரங்களில் 316 L கொண்ட எஃகு பயன்படுத்தப்பட்டால் ரோலக்ஸில் மட்டுமே 904 L எஃகு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் எந்த குழியில் இருந்தாலும் துரு அரிப்பு போன்றவற்றால் ரோலக்ஸ் பாதிக்காது.

5.1968ல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் தோலால் உருவாக்கப்பட்ட டேடொனா ரக ரோலக்ஸ் வாட்ச் 18 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் 139 கோடி) நியூயார்க்கில் நடந்த பிலிப்ஸின் ஏலத்தில் விலை போனது.

6.உலகிலேயே ரோலக்ஸ் மட்டுமே தனது தயாரிப்புக்கு சொந்த தங்கத்தை பயன்படுத்துகிறது. இதற்காகவே சுவிட்சர்லாந்தில் உள்ள தலைமையகத்தில் ஒரு ஃபவுண்டரியையே ரோலக்ஸ் உருவாக்கியிருக்கிறது. இந்த தலைமையகம் அமெரிக்காவின் பெண்டகனை போல அத்தனை சிறப்பு பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டது.

7. ரோலக்ஸ் தலைமையகத்தின் ஒரு தளத்தில் பணியாற்றும் ஊழியர் வேறு தளத்திற்கு செல்ல முடியாதபடி செக்யூரிட்டி சிஸ்டம் அத்தனை பலம். கைரேகை ஸ்கேனர்கள், சிறப்பு வங்கி பெட்டகங்கள் அனைத்தும் நிறுவப்பட்டிருக்கும்.

8.ரோலக்ஸ் என்ற பெயருக்கு உண்மையில் என்ன அர்த்தம் என எவருக்குமே தெரிந்திருக்கவில்லை. தற்போதுதான் ரோலக்ஸ்னா ஆடம்பரம் என அழைக்கப்படுகிறது. ஆனால் ரோலக்ஸ் என்ற பெயருக்கு எந்த அர்த்தமும் இல்லை என நிறுவனர் ஹேன்ஸ் வில்ஸ்ட்ராஃப் கூறியிருக்கிறார்.

எளிதாகவும், ஷார்ட்டாகவும் இருந்ததாலும், அனைத்து மொழிகளிலும் அழைப்பதற்கு சுலபமாக இருக்கும் என தெரிவித்தார் ஹேன்ஸ். ஆனால் வாட்ச் மேக்கர்கள் இந்த பெயர் horlogerie exquise என்ற பிரஞ்சு வார்த்தையில் இருந்து வந்ததாக நம்புகிறார்கள்.

9. சுவிட்சர்லாந்தில் ரோலக்ஸ் தயாரிக்கப்பட்டாலும் உண்மையில் அது லண்டனில் உருவானது. Hans Wilsdorf , Alfred Davis என்ற இருவரும் முதல் முதலில் Wilsdorf and Davis என்ற பெயரில் நகைகளை விற்று வந்தார்கள். ஆனால் 1919ல் உலகப்போர் நடந்ததால் தங்களுடைய நிறுவனத்தை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவுக்கு மாற்றி அங்கு ரோலக்ஸை தயாரித்தார்கள்.

10. ரோலக்ஸ் வாட்சுகளின் முக்கிய சிறப்பம்சமே டையலில் உள்ள நிமிடங்கள் அனைத்தும் ரோமன் எழுத்தில் இருந்தாலும் 4 அதாவது IVக்கு பதில் IIII என்றே குறிப்பிடப்பட்டிருக்கும்.

11. ஆழ்கடலில் 12,000 மீட்டரில் ( 39,370 அடி ஆழத்தில்) இருந்தாலும் 7 மணிநேரத்திற்கு ரோலக்ஸ் வாட்ச் செயல்படுமாம்.

ரோலக்ஸ் வாட்சின் குறைந்தபட்ச விலையே 4 லட்ச ரூபாயாம்.

-படித்தது

சாக்ரடீஸ்


உலகின் அத்தனை கஷ்டங்களையும் மொத்தமாக ஒரு இடத்தில் குவித்து அனைவரும் அதை சமபங்காக பிரித்தெடுத்துக்கொள்ள வேண்டும் என்றிருந்தால், 
அனைவரும் அவரவர் கஷ்டத்தையே திருப்தியாக ஏற்றுக்
கொண்டுவிடுவார்கள்..

 -சாக்ரடீஸ்...

உமா மகேஸ்வரி


மனித உடலின் மிகப் பெரிய உறுப்பு தோல்தான்.அதன் ஒவ்வொரு சதுர மில்லி மீட்டருக்கு அடியிலும் ஆயிரக்கணக்கான நரம்பு முனைகள் இருக்கின்றன. அவை மூளைக்கும் தண்டுவடத்துக்கும் ஓயாமல் செய்திகளை அனுப்ப உதவுகின்றன. மனித பிறப்பின் போது முதன்முதலாக புலனாவது தொடு உணர்வு தான்.மரண நேரத்தில் இறுதியாக உடலில் இருந்து விடைபெறுவதும் அது தான்

-உமா மகேஸ்வரி

Sunday 27 November 2022

பிச்சைக்காரன்


ஒரு  கிறிஸ்தவ மத  போதகர் உரையில்  கேட்டதில்  பிடித்தது..

ஒரு  பணக்காரர்  இருந்தார்..  வெளியூர்  போக  வேண்டியிருந்தது..  வீட்டை  பார்த்துக் கொள்ள  சொல்லி  ஒரு  வேலையாளிடம்  ஒப்படைத்துவிட்டு  சென்றார்  திரும்பிவர ஒரு வருடம்  ஆகும் என்றார்

வேலைக்காரனுக்கு  அவ்வளவு  பெரிய வசதியான  வீடு  கிடைத்ததும்  மது  விருந்து  என  ஆடித்தீர்த்தான்  ஒரு"வருடம் முடியும் தறுவாயில்  வீட்டை  சீர்ப்படுத்தி விடலாம்  என  நினைத்தான்

எதிர்பாராமல்  முதலாளி  ஆறு மாதத்திலேயே  வந்து விட்டார்  அலங்கோலமான  வீட்டைப்பார்த்து  டென்ஷனாகி  அவனை  துரத்தி  விட்டார்

இன்னொரு  வேலைக்காரன்  இது  நம்ம  வீடு  இல்ல  எப்ப  வேணும்னாலும்  ஓனர்  வரக்கூடும்  என்ற  எண்ணத்தில்  வீட்டை  அன்றாடம்  சுத்தமாக  பராமரித்தான்   திடீரென  ஒரு  நாள்  வந்து  பார்த்த  ஓனர்  மகிழ்ந்து  அவனுக்கு  நல்லதொரு வீட்டை  பரிசளித்தார்

அதுபோலத்தான்  நம்  வாழ்வு  எப்போது வேண்டுமானாலும்  கடவுள்  இதை திரும்பக்  கேட்பார்  என்ற  உணர்வுடன்  வாழ வேண்டும்

ராஜீவ்  காந்தி  பிரதமராக  இருந்தபோது  அவரது  உடைகளின்  நேர்த்தி  அழகான  முகம்  போன்றவை  பேசு  பொருளாக  இருந்தன

அலங்கோலமான  ஆடையில்  ஷேவ் செய்யாத முகத்துடன்  ஒரு  ஃபோட்டோ கிடைத்தால்  பரபரப்பாக  இருக்குமே  என பத்திரிக்கையாளர்கள்  நினைத்தனர்;

ஒரு  நாள்  அவர் ஒரு  வெளிநாட்டு  பயணத்தில்  ஹோட்டலில்  தங்கி இருந்தபோது  அதை ஹோட்டலில்  தங்கும்  வாய்ப்பு  ஒரு  போட்டோகிராபருக்கு  கிடைத்தது..

இரவு  நேரத்தில்  சாதாரண  ஆடையில்  பார்த்து  விடலாம்  என  இரவெல்லாம்  தூங்காமல்  இருந்தான்.

அவன் எதிர்பார்த்தது  ஒரு  நாள்  நடந்தேவிட்டது

யாருடனோ பேசுவதற்கு  நடுநிசியில்  ராஜிவ்  வெளியே  வந்தார்
ஆனால்  ஏமாற்றம்

நள்ளிரவிலும்கூட  நேர்த்தியான  ஆடை  க்ளீன்  ஷேவ்  என்று  இருந்தார்

பிற்காலத்தில்  இதை நிருபரிடம்  சிரித்தபடி  சொன்னாராம்

பிரதமர் என்றால் 24 மணி நேரமும்  பிரதமர்தான்  எப்போதும்  தயார் நிலையில் இருப்பது  கடமை  மற்றபடி  இயல்பான  தோற்றத்தில்  போட்டோ வேண்டுமென்றால்  என்னிடமே  கேட்டிருக்கலாமே  என்றாராம்

   Readiness  is  everything
,,,

தமிழ்


நம் கவனத்திற்கே வராமல் ஒசையேதுமின்றி 
மெளனமாக 
யாரோ ஒருவர் 
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நம்மிடமிருந்து 
விலகிக் கொள்கிறார்கள்...!!

-தமிழ்

அம்பேத்கர்


எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்போதும் தற்காத்துக்கொள்ள தயாராக இருக்கிறானோ, 
யார் ஒருவன் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ, 
அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுய மரியாதையும் பெற்று இருக்கிறானோ, அவனே சுதந்திரமான 
மனிதன் என்பேன்.

-டாக்டர் அம்பேத்கர்

அமைதி- நா காத்தல்- மௌனம் இந்த மூன்றும் எப்படி வெவ்வேறானவை?



அமைதி - இரண்டு பேருக்கிடையே முழுமையான, சரியான புரிதல் ஏற்படும் போது வருவது. 

நா காத்தல் - இரண்டு பேருக்கிடையே பேசுற பேச்சால பிரச்சனை ஆகக்கூடாது என்ற நிலையில் வருவது. 

மௌனம் - இரண்டு பேருக்கிடையே எது பேசினாலும் பிரச்சனை வரும் என்ற நிலையில் மலர்வது... 

🙂படித்தது

Friday 25 November 2022

காலம் நாசூக்காக நரைமுடியில் எட்டிப் பார்க்கிறது

குழம்பிய ஞாபகங்களின் தள்ளாட்டத்தில்..வார்த்தைகள் மட்டும் வேடிக்கைப் பார்த்து வர மறுக்கிறது

சுந்தர ராமசாமி


"உனக்கான சந்தோசத்தை நீதான் உனக்கு கொடுத்துக் கொள்ள வேண்டும்" யாரும் உனக்காக மெனக்கெட்டு இவனுக்கு மகிழ்ச்சியைத் தரவேண்டும் என நினைக்கமாட்டார்கள். அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கும். அதைப் பார்க்க வேண்டும். சில தருணங்கள் அவர்கள் தரலாம், தர முடியும். உனக்காகவே வாழ முடியுமா? உனக்கான மகிழ்ச்சியை நீ தேடு.

-சுந்தர ராமசாமி

.பூபதி


உறவில் வளர்த்த ஆழமான நம்பிக்கையை, 
பேரன்பை 
அந்த உறவு சட்டென விலகும்போது 
என்ன 
செய்வதென்று தெரியாமல் மனம் தவிப்பது 
மோசமான தருணம்..!!

-வெ.பூபதி

Thursday 24 November 2022

ஹிட்லரும்-மனநல மருத்துவரும்


ஒரு முறை மனநல மருத்துவமனையை பார்க்க ஹிட்லர் வருவதாக இருந்தது…

உடனே அங்க இருக்கும் மனநல மருத்துவர்… பைத்தியங்களை வரிசையா நிக்க வச்சி ஹிட்லர் வரும்போது "ஹிட்லர் வாழ்க" அப்படினு சொல்றாபோல ட்ரைனிங் கொடுத்தார்.

ஹிட்லரும் வந்தார். எல்லா பைத்தியங்களும் "ஹிட்லர் வாழ்க" னு சொல்லிச்சிங்க…

ஒருத்தர் சொல்லாத்தை பார்த்து ஹிட்லர் கேட்டார்…

"நீ ஏன் சொல்லல"

"நான் பைத்தியம் இல்ல…டாக்டர்"

(பைத்தியங்கள் எல்லாம் தப்பின… மறுநாள் டாக்டர் சிறையில் இருந்தார்😏😏)

வைக்கம் முகம்மது பஷீர்(டைகர்)


சிறைச்சாலை, குற்றவாளிகளின் சொர்க்கம் என்றால், போலீஸ் காவல்தான் நரகம்.ஒவ்வொரு கைதிகளின் மனதிலும் பெரும் சீற்றம் இருக்கும்.இதை அவர்கள் பார்வை மூலம் நாய்மீது காட்டுவார்கள்..

-வைக்கம் முகம்மது பஷீர்
(டைகர்)

Wednesday 23 November 2022

பரவாயில்லை


பரவாயில்லை என்பது,
வருத்தமில்லை
வலிக்கவில்லை
என அர்த்தம் ஆகாது..

அது பொறுத்துக்கொள்ள
முடிவதன் அறிவிப்பு..!!

-வெ.பூபதி

ஜெயகாந்தன்


நதியும் கடலும் மட்டும்தான் முழுமையா என்ன? தண்ணீரின் ஒவ்வொரு துளியும் முழுமையானதே ஆகும்.நாடுகளும் கண்டங்களும் தான் உலகம் என்பதில்லை.ஒவ்வொரு மனிதனும் உலகம் தான்

-ஜெயகாந்தன்
(ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் முன்னுரையில்)

"எனது லட்சியம் சோம்பலால் ஊனமுற்றது." - சார்லஸ் புகோவ்ஸ்கி

வேலை


சம்பளம் செய்யாததை "சுதந்திரம்" செய்யும்.
இப்ப நிறைய நிறுவனங்களில் லீடர்ஷிப்புக்கு இருக்கும் பெரிய பிரச்சனை, புது பசங்க வந்து ஒரு வருஷம், ரெண்டு வருஷத்துக்குள்ள வேலையை ரிசைன் பண்ணிடறாங்க. விசுவாசம் இல்லை என கவலைப் படுகிறார்கள். அவர்கள் இந்த தலைமுறையின் மனநிலையை கவனிக்க தவறிவிட்டார்கள். 

ஒவ்வொறு 20 ஆண்டுகளுக்கும் பெரும்பான்மை பணியாளர்களின் மனநிலை மாற்றமடைந்து வருகிறது. 60களில் Loyalty முக்கியமாக இருந்தது. சேர்ந்த கம்பெனியிலேயே ரிடயர்ட் ஆகும்வரை வேலை செய்தார்கள். 80களில் standard of living முக்கியத்துவம் பெற்றது. பணியாளர்கள் தமக்கு வீடு, நகர வாழ்க்கை, குழந்தைகளுக்கு நல்ல கல்வி, சுகாதாரம் போன்றவற்றை விரும்பினர். இதனால் பத்து - பதினைந்து வருடங்களுக்கு ஒருமுறை  வேலையை மாற்றிக்கொண்டனர்.

 2000த்துக்குப் பிறகு freedom of choice தான் மற்ற எதையும் விட முக்கியம். 
பத்து வருடங்களுக்கு முன்பு, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் என்கார்ட்டா எனும் உலகளாவிய என்சைக்ளோபீடியாவை உருவாக்க திட்டமிட்டது. அதற்காக உலகின் பல பகுதிகளில் இருந்து, பல துறைகளைச் சார்ந்த மிகச்சிறந்த வல்லுனர்களை கட்டுரைகள் எழுத நியமித்தது. தனியாக பெரிய அணியையும் கட்டமைத்து, மிக அதிகமான செலவில் என்கார்ட்டா எனும் மின்மய என்சைக்ளோபீடியாவை ஏற்படுத்த தீவிரமாக உழைத்தது.

இன்னொறு பக்கம், ஏறக்குறைய அதே காலகட்டத்தில் கட்டுரைகளுக்கு பத்து பைசா கூட சன்மானமாக தராமல், ஆர்வமும் அறிவும் இருப்பவர்கள் உலகில் எங்கிருந்தாலும் அவர்கள் தமது ஓய்வு நேரத்தில் தமக்கு விருப்பப்பட்டதை எழுதி பங்களிக்கலாம் என்ற யோசனையுடன் வேறொரு மாடல் உருவானது. பிற்காலத்தில் அது மிகப்பெரிய தகவல் கருவூலமாக, விக்கிப்பீடியாவாக மாறியது.

 என்கார்ட்டாவை விட பல மடங்கு உயரத்துக்குச் சென்றது.
இது மிக முக்கியமான செய்தி. ஒரு செயலில் வெற்றியும், சாதனையும் நிகழ வெறும் சம்பளம், பணம் சார்ந்த இன்சென்டிவ்கள் உதவுவதில்லை. பங்கேற்பாளர்களுக்கு அளிக்கப்படும் சுதந்திரமும், பொது தேவை குறித்த புரிதலுமே சாதனைகளை நிகழ்த்துகின்றன. 
கூகிள் தனது பணியாளர்களுக்கு மொத்த வேலை நேரத்தில் 20% நேரத்தை அவர்கள் விரும்பும் பணியை செய்துகொள்ளலாம் என்ற சுதந்திரத்தை அளித்தது. கூகிளின் மிகப்பெரிய வெற்றி பெற்ற கண்டுபிடிப்புகளில் பெரும்பாலானவை அந்த 20% நேரத்தில் பணியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆக, 2k கிட்ஸ்சை, சம்பளத்தை வைத்து மட்டுமே இன்ஸ்பையர் செய்ய முடியாது. அவர்கள், ஒரு நிறுவனத்தில் தொடர்ச்சியாக பணி செய்ய, பங்களிப்பு செய்ய சுதந்திரத்தை எதிர்பார்க்கிறார்கள். இதனை புரிந்துகொண்ட புதிய தலைமுறை நிறுவனங்களே சாதித்து வருகின்றன.

Janakiraman Nabalur

Ginger


Ginger-ஜிஞ்சர் என்பது இஞ்சி வேர் என்னும் தமிழ்ச்சொல்லின் சிதைவேயாம்.முற்காலத்தில் நமது நாட்டிலுள்ள மலையாள தேசத்திலிருந்து இஞ்சி வேர் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏராளமாக ஏற்றுமதி செய்யப்பட்டது.

-மயிலை சீனி.வேங்கடசாமி

மு.கதிரேசன்


பத்துரூபாய்க் கீரைவிற்கக் 
கத்தும்குரல் காததூரம் கேட்கிறது. 
வாடாதிருக்க வேண்டும் 
விற்றுத் தீரும்வரை. 

- மு.கதிரேசன்

Tuesday 22 November 2022

Knowledge isn't free. You have to pay attention.

பெரும்பாலும் கிணறுகள் வட்ட வடிவில் அமைந்திருப்பது ஏன்?



கிணறு என்பது மழைநீரை சேகரிப்பதற்கும், நிலத்தடி நீரை நாம் எடுத்து பயன்படுத்துவதற்கும் வசதியாக நிலத்தில் தோண்டப்படும் ஒருவகை குழி ஆகும்.

கிணறுகள் எங்கு இருந்தாலும் அதிகபட்சமாக வட்ட வடிவிலே அமைக்கப்பட்டிருக்கும், அதற்கு காரணங்கள் இருக்கின்றன.

வட்டமாக கிணறு அமைப்பதற்கான காரணம்

வட்டம் என்பது இரண்டு அரை வட்ட ஆர்ச்சுக்கள் ஒன்று சேர்வதால் உருவாகின்றது.

பொதுவாக ஆர்ச் வடிவ வளைவுக்கு அதிகளவில் எடை தாங்கும் திறன் உண்டு.

அதனால் தான் அந்த காலத்தில் கட்டிடங்கள், மண்டபங்கள், பாலங்கள் போன்றவைகள் அனைத்து இடங்களிலும் ஆர்ச் வடிவ வளைவுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும்.

கிணறுகள் தோண்டியவுடன், அவற்றின் நான்கு பக்கத்திலும் கிணற்றின் வடிவம் கலையாமல் இருக்க செய்வது கிணற்றை சுற்றிலும் வட்டவடிவில் உள்ள மண் மற்றும் கல்லின் எடைகள்.

கிணற்றை வட்டவடிவில் அமைக்கும்போது மட்டுமே அதன் எடை தாங்கும் திறன் அதிகரிக்கிறது, எனவே தான் கிணறு வட்டமாக அமைக்கப்படுகிறது…

போகன்


யானையிடம் அடிக்கடி
அது ஒரு யானை என்று
நினைவுபடுத்த வேண்டியிருக்கும்
பூனையிடம் அந்தப் 
பிரச்சனை இல்லை. 
அது தன்னைத் தானே
யானை என்று 
நினைத்துக்கொள்ளும்.

-போகன்

கால்குலேட்டரில் MC, MR, மற்றும் M+ என்பதன் அர்த்தம் என்ன?




MC….. MEMORY CLEAR

கால்குலேட்டரின் நினைவகத்தில் இருப்பனவற்றை மீண்டும் உபயோகிக்க திரைக்கு கொண்டுவருதல்

MR …..MEMORY RECALL

கால்குலேட்டரின் நினைவகத்தில் இருப்பனவற்றுடன் மேலும் புதிதாக சில எண்களை அல்லது விடைகளை கூட்டுவதை செய்தல்

M + ……MEMORY PLUS
உதாரணத்துக்கு

2*2=4

M +

3*3=9

M +

4*4=16

+
M R

=
என்றால் முதலில் வந்த விடை நான்குடன் ,அடுத்து வந்த விடை 9 கூட்டப்பட்டு,இறுதியாக வந்த விடையுடன் மேலும் மெமரியில் இருந்து கொண்டு வந்து சேர்க்கப்பட்டு 29 என்று திரையில் காண்பிக்கும் .

#info

தாவோ தே சிங்


‘இது போதும்’ என்ற மனநிலையில் இருப்பதுதான் மனநிறைவோடு இருப்பதற்கான வழி என்பதை ஒருமுறை அறிந்துவிட்டவன் எப்போதும் அப்படியே இருப்பான்.” 

- தாவோ தே சிங்

Monday 21 November 2022

மாயா ஏஞ்சலோ


நீங்கள் சொன்ன சொற்களை குழந்தைகள் மறந்துவிடுவார்கள்; நீங்கள் செய்த செயல்களையும் மறந்துவிடுவார்கள்; ஆனால், நீங்கள் அவர்களை எவ்வாறு உணரச்செய்தீர்கள் என்பதை அவர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். 
   - மாயா ஏஞ்சலோ

உண்மைக்கும் பொய்க்கும் உள்ள வேறுபாடு என்ன?



 எத்தனை தடவை சொன்னாலும் ஒரே மாதிரி இருந்தால் அது உண்மை. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மாதிரி இருந்தால் அது பொய்.

Sunday 20 November 2022

ஜானகிராமன்


உப்பாக இருப்போம்.

உணவுப் பொருட்களில் உப்பு தனித்துவமானது. ஒரு உணவில் உப்பு சேர்க்கப்பட்டிருந்தால் அந்த உணவு சுவைக்கும், ஆனால் யாரும் அந்த உணவின் சுவைக்காக உப்பை பாராட்டுவதில்லை. உணவில் உப்பு சேர்க்கப்பட வில்லை என்றால் உணவு தின்பதற்கே தகுதியற்றதாகி விடுகிறது. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே. உப்பின் அளவு குறைவாகவோ, அல்லது உப்பில்லாமலோ சமைக்கப்படும் போது தான் உப்பின் தேவை உடனடியாக உணரப்படுகிறது. 

அதே போல பணிச்சூழலிலும் நட்பு வட்டத்திலும் நமது இருப்பும் பங்களிப்பும் உப்பைப் போல பிறர் அறியாமலும் நாம் இல்லாதிருந்தால் நமது தேவை மிக முக்கியமாக வெளிப்படுவது போலவும் கரைந்திருக்க வேண்டும்.

உப்பு மிகுதியாக சேர்க்கப்பட்டாலும் உணவில் சுவை கெட்டுப்போவது போல, நமது பங்களிப்பு தேவைக்கும் அதிகமாக இருக்கும் போது அந்தச் செயலில் போலித்தனமும் நமது ஈகோவும் வெளிப்படுகிறது. அதையும் தவிர்ப்போம்.

இந்த பூமியின் உப்பாக இருப்பவர்களே, இந்த உலகத்தின் ஒளியாக இருக்கிறார்கள். 

இனிய நற்காலை 🌸

பட்டாபிராமன்


Sardar Patel and his idea of India
The Man who saved India  என்ற புத்தகம் ஹிந்தோல் சென்குப்தா எழுதியது. அதில் இடம் பெறும் சில சுவாரஸ்யமான அளவைத் தகவல்கள்

கல்கத்தா பள்ளி ஒன்றில் கணக்கு வாத்தியார் மாணவர்களிடம் தலைவர்களின் உயரத்தைச் சொல்கிறார். காந்தி 5 அடி 3 அங்குலம், சுபாஷ் 5’5, படேல் 5’5, நேரு 5’8.  எனவே வரலாறு உயரமானவர்களுக்கானது என்கிறார். அவர் ஜின்னாவைச் சொல்லி அவரும் 5’8 அவருக்கும் நாடு கிடைத்தது என்கிறார். அந்த ஆசிரியர் 10ஆம் வகுப்புமாணவர் சராசரி உயரத்தில் இருந்த உயரமற்ற மனிதராம்.

சுனில் கில்நானியின்  Theidea of India வில் படேல் பெயர் 8 இடங்களிலும், காந்தி பெயர் 29 இடங்களிலும், நேருவின் பெயர் 65இடங்களிலும் வருகிறதாம்.
ராமச்சந்திர குஹா எழுதிய India After  Gandhiல்படேல் 48 இடங்களிலும், காந்தி 120இடங்களிலும்  நேரு 185 இடங்களிலும் வருகிறதாம்.

படேலின் மகள் மனிபென் படேல் அவரிடம் சொன்னதாக குறிப்பிடுகிறார். என்னால் வரலாற்றை எழுதும் வேலையை செய்து நேரவிரயம் செய்யமுடியாது.முடிந்த அளவு வரலாற்றை உருவாக்கிவிட்டு போக விழைகிறேன்.
காந்தி நேரு படேல் ஆகியமூவரையும் மும்மூர்த்திகள் என சென்குப்தா சொல்கிறார். வேறுபாடுகளைத்தாண்டி அவர்களிடம் affection brotherhood  அதிகமாகவே இருந்தது என எழுதுகிறார்.

படேல் காந்தி- நேருவைவிட  ambition குறைந்தவராக இருந்தார் எனவும் சென்குப்தா சொல்கிறார். ஆசாத் புத்தகத்தில் மாறுபட்ட தகவல் நமக்கு கிடைக்கும். காங்கிரஸ் ஸ்தாபனத்தை- அதற்கு பொறுப்பிற்கு வருபவர் குறித்த கட்டுப்பாட்டை தன் கையில் வைத்திருந்தார் என்பதை எப்படி பார்ப்பது எனத் தெரியவில்லை. கிருபளானி புத்தகம் ஆசாத் தகவலுக்கு மறுப்பாக படேலின் பக்கம் நிற்கும்.

சென்குப்தா சொல்வது வேறு ஒன்றில் சரி. அதாவது காந்தி- நேரு போல ஏராள எழுத்து வால்யூம்களை- அவர் தரப்பு குறித்து நின்று பேசுவதற்கான வகையில்- படேல் விட்டுச்செல்லவில்லை. சென்குப்தா இதை If history is writings by the victors, Patel clearly was on the vanquised side  எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே தான் படேல் குறித்த எழுத்துக்கள் மிகவும் குறைவாக இருக்கின்றன.

 மனிபென் தன் தந்தையை குறித்து இப்படி ஒரு சித்திரம் தருகிறார்
Sardar was a man of few words. He wrote very little; he hardly kept any record of his public or party work. He destroyed letters addressed to him after reading them and replied by hand, not keeping copies.
இது முழுமையான சித்திரமா தெரியவில்லை. நம்மிடம் நேரு- படேல் கடித தொகுப்புகள் கிடைக்கின்றன. சில படேல் - காந்தி கடிதங்களும் கிடைக்கின்றன. மனிபென் பொதுவான அவர் சுபாவத்தை பதிவு செய்திருக்கலாம்.

-பட்டாபிராமன்

கார்ல்மார்க்ஸ்


"விஞ்ஞானத்தில் ராஜபாட்டை என்பது கிடையாது.அதன் செங்குத்தான பாதையில் களைப்போடு ஏறிச் செல்வதற்குத் தயங்காதவர்களுக்கு மட்டுமே அதன் பிரகாசமான சிகரங்களை எட்டுகின்ற சந்தர்ப்பம் கிடைக்கும்"

-கார்ல்மார்க்ஸ்

Saturday 19 November 2022

வைகறை


சாவிலிருந்து

ஒரு தூக்குக் கயிறென
தேங்காய்ச் சில்லு தொங்கிக் கொண்டிருக்கும்
மரணத்தின் கூண்டிற்குள்
இரவெல்லாம் அல்லாடிக் கொண்டிருந்த
எலியொன்று
இப்போது திறந்து விடப்படுகிறது
ஒரு கயிற்று சாக்கிற்குள்.
உயிரைக் கையில் பிடித்தபடி
ஓடுகிறது எலி
சாவிலிருந்து
சாவுக்குள் !

– வைகறை

துணுக்கு


ஒரு பைத்தியகார மருத்துவமனையில் புதிதாய் ஒரு மருத்துவர் பதிவியேற்றார்.
விடுதி முழுக்க பைத்தியங்கள் மிகவும் கொண்டாடினர். இத்தனை மகிழ்ச்சியாய் இருந்ததே இல்லை.ஏன் என டாக்டர் வினவினார்..

"நீங்கள் எங்களைப் போலவே இருக்கிறீர்கள்.முன்பிருந்தவர் அப்படியில்லை'என்றனர்.

பலரும் உன்னை பாராட்டும் போது இதை நினைவில் வைத்துக்கொள்.உன்னிடம் ஏதோ ஒரு வகையில் தாழ்வானது இருக்க வேண்டும்.

Friday 18 November 2022

ரூமி


இருப்பவர்களை அரவணைத்துக்கொள். 
கிடைப்பதை பகிர்ந்துகொள். 
நல்லதை எடுத்துக்கொள். 

நல்லவர்களை மட்டுமே தேடாதே...
இறந்த பிறகுதான் வருவார்கள் 
நாலு பேர் 
அதுவும் உன்னை புதைப்பதற்கு...!!!

 பாத்திமா மவுனா ரூமி ~

சுவாங் ட்ஸூ


“உண்மையான மனிதன் தன் கண்கள் பார்க்கின்றவற்றைப் பார்க்கிறான். இல்லாத ஒன்றை அவன் பார்ப்பதில்லை. தன்னுடைய காதுகள் செவிமடுக்கும் விஷயங்களை அவன் கேட்கிறான். கற்பனையான குரல்கள் எதையும் அவன் கேட்பதில்லை. மறைவான அர்த்தங்களை அவன் தேடுவதில்லை.” 

-சுவாங் ட்ஸூ

Thursday 17 November 2022

பெட்ரண்ட் ரசல்


Education is not the imparting of a settled body of knowledge; but the inculcation of a spirit of enquiry"

மனிதனைத் தேடவைப்பது தான் கல்வி. தேடிக்கொண்டே இருப்பது கல்வி. தேடல்தான் கல்வி

-பெட்ரண்ட் ரசல்

ஓஷோ


நண்பன் என்பவன்
குறைந்த அளவு பகைமை கொண்டவன்.
பகைவன் என்பவன் 
குறைந்த அளவு நட்பு கொண்டவன்.

~ ஓஷோ ~

Wednesday 16 November 2022

பெருந்தேவி


அறியாமையின் பெருவெளி
சிறகடிக்கத் தூண்டியது.
அவநம்பிக்கையின் ஒரு கல்
பறத்தலை ஊர்தலாக்கியது

-பெருந்தேவி

கோடார்டின்


கோடார்டின் 'பியராட் லே ஃபெள' படத்தில் வரும் வசனம்: "இதுதான் என்னை மிகவும் சோகமாக்குகிறது... வாழ்க்கை என்பது, புத்தகங்களில் வருவதைப்போல் இல்லை."

புத்தகம் வாழ்க்கையாகும் சாத்தியங்கள் உண்டோ இல்லையோ, வாழ்க்கை புத்தகம் ஆகும் சாத்தியங்கள் உண்டு.

இங்கிலாந்தைச் சேர்ந்த பெஞ்சமின் மீ-யின் வாழ்க்கை புத்தகமாகியிருக்கிறது. காரணம் அவர் தன் வாழ்க்கையில் எடுத்த ஒரு முடிவு. அந்த முடிவை எடுக்க அவர் எடுத்துக் கொண்ட நேரம் வெறும் 20 நொடிகள்.

காதல் மனைவி இறந்து விட்டாள். மகன் டைலனும் மகள் ரோசியும் இந்த துக்கத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர். அதனால், தான் இப்போது குடியிருக்கிற வீட்டை அவசரமாக மாற்றியாக வேண்டிய நிலைமை மீக்கு. இடத்தை மாற்றினால் எல்லாம் சரியாகி விடுமென டேவான் பகுதியில் ஒரு வீடு பார்க்க, குழந்தைகளுக்கும் அது பிடித்து விடுகிறது.

இந்த இடத்தில் ஒரு சிக்கல்... அந்த வீட்டை தனியாக வாங்க முடியாது. அதன் பின்பகுதியில் இருநூறு வகை மிருகங்கள், பத்து பணியாட்கள் கொண்ட ஒரு மிருகக்காட்சி சாலையையும் அதனுடன் சேர்த்தே வாங்கியாக வேண்டும். 20 நொடிகள் யோசித்தபின் மீ அந்த வீட்டை வாங்கி விடுகிறார்.

மிருகக் காட்சிசாலையை சீரமைத்து பொதுமக்கள் பார்வைக்கு அதை திறந்து வைக்க வேண்டிய கட்டாயம் மீக்கு. வாழ்க்கை இப்போது போர்க்களம் ஆகிறது. கையிலிருக்கிற கடைசிப் பைசாவும் கரைந்து போகிறது. சான்றிதழ் தர வேண்டிய அதிகாரிகளோ மிருகக்காட்சி சாலையில் அங்கே குறை இங்கே குறை என்று ஒரு பெரிய பட்டியலை நீட்டுகிறார்கள்.

இச்சமயம் மீக்கு மனைவியின் வங்கிச் சேமிப்பான பெரிய தொகை கைக்கு வந்து சேர்கிறது. "அந்த பணத்தை வைத்து புத்திசாலித்தனமாக பிழைத்துக் கொள். மிருகக்காட்சிசாலை தொடங்கும் எண்ணத்தைத் தூக்கி ஏறி" என்கின்றனர் நண்பர்கள். ஆனால் மீ அதை பொருட்படுத்தவில்லை. அத்தனை பணத்தையும், நிறைய உழைப்பையும் கொட்டி கடைசியில் மிருகக்காட்சிசாலையை திறந்தே விடுகிறார்.

மீ தன் மனைவியை முதன்முதலில் சந்தித்தது ஒரு ஹோட்டலில். அவளைப் பார்த்ததுமே பிடித்துவிடுகிறது. உடனே அவளிடம் தன் காதலைச் சொல்ல மீக்கு வேண்டி இருந்தது அந்த இருபது நொடிகளே.

நம் வாழ்க்கையை மாற்றவும் புத்தகமாக்கவும் அந்த 20 நொடி தைரியம் போதும்தான். அதுவும் பிரியமானவளிடம் நம் காதலைச் சொல்ல பத்து நொடிகளே கூட போதும். ஆனால் வீட்டுடன் மிருகக்காட்சிசாலையை வாங்கிய மீயின் அந்த தைரியம் நமக்கு வருமா? சந்தேகம்தான். ஏனென்றால் நாம் புத்திசாலிகள்... நமக்கெல்லாம் புத்தகம் வாசித்தால் மட்டும் போதும்.

பெஞ்சமின் மீ என்கிற எழுத்தாளரின் வாழ்க்கை 'WE BOUGHT A ZOO' என்ற நாவலாகியது. 2008ல் கெமரூன் கிராவ் என்கிற அமெரிக்க இயக்குனர் இதை சினிமாவாகவும் எடுத்திருக்கிறார்.

R.O water வந்த கதை




R.O என்றால் ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ். அதாவது தண்ணீரின் உப்பு தன்மையை நீக்கும் தொழில்நுட்பம். பெரிய தொழிற்சாலைகள் பலவற்றிலும் பிரம்மாண்ட இயந்திரங்கள் இருக்கும். அவர்களின் பயன்பாட்டுக்கு போர்வெல் மூலம் தண்ணீர் எடுக்கப்படும். 

அந்தத் தண்ணீரின் உப்புத்தன்மை காரணமாக இயந்திரங்கள் பழுதாக வாய்ப்பு இருக்கிறது. அந்த உப்புத்தன்மையை நீக்க கண்டுபிடிக்கப்பட்டதே ஆர்.ஓ தொழில்நுட்பம். மக்கள் அருந்துவதற்காக உருவானது அல்ல.TDS 50-100 வரை இருப்பது ஆற்று நீருக்கு இணையானது.அப்பொது குடிக்கலாம்.

- டாக்டர் அருண்குமார் கட்டுரையிலிருந்து

அதிரூபன்


நாம் இருக்க வேண்டிய இடத்தில் வேறொரு நபர் இருப்பது சாதாரணம்.

நாம் இருந்த இடத்தில் இன்னொரு நபர் இருப்பது தான் பெரும் ரணம்.

-அதிரூபன்

Tuesday 15 November 2022

ஜிப்ரான்


ஒரு நாள் என்னிடம் "உன்னுடைய வாழ்க்கையா அல்லது என் வாழ்க்கையா? '' எது முக்கியமானது என்று நீ கேட்கலாம்.
நான் “என் வாழ்க்கைதான் முக்கியம்”என்பேன். அப்போது 'நீ' தான் என் வாழ்க்கை என்பதை அறியாமல் என்னைவிட்டு விலகிச் சென்றுகொண்டிருப்பாய். 

- ஜிப்ரான்

Old is gold-13*மணி



தீவின் தண்ணீர் கரு நீல நிறம் கொண்டதாக இருப்பதால் அது கருந்தண்ணீர் (காலாபாணி )என்று அழைக்கப்படலயிற்று

#அந்தமான் தீவுச்சிறை
-என் ராமகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்து கருவூலம் என் ராமகிருஷ்ணன் அவர்கள் என் சங்கரய்யாவின் தம்பியாக இருந்த போதிலும்.. தான் கற்ற வரலாற்றை அனுபவங்களை, கட்சிகளின் வரலாற்றை, போராட்டத்தை எல்லாவற்றையும் ஆவணப்படுத்தியவர் தோழர் என். ஆர் ஆவார். பொதுவுடமை இயக்க வரலாற்றை அறிய நினைக்கும் ஒருவர் இவரின் பங்களிப்பை படிக்காமல் அதனை தெரிந்து கொள்ள முடியாது.

அந்தமான் சிறையை முதன் முதலில் தெரிந்து கொண்டது சிறைச்சாலை படத்தில் தான். அதற்கு முன்பு இந்திய வரைபடங்களில் பார்த்திருந்தாலும் அந்தமான் என்பதை கண்கூடாக பார்க்க வைத்தது அத்திரைப்படம் தான். இந்த புத்தகத்தை வாசித்த போது தான் அந்தமான் சிறையில் இன்னொரு முகம் நமக்குத் தெரிகிறது.78 பக்கங்களை நிரம்பிய இப்புத்தகம் ஒவ்வொரு பக்கங்களிலும் அறியாத பல வரலாற்றுச் செய்திகளை 13 கட்டுரைகளில் விவரிக்கிறது

1857 ஆம் ஆண்டு போராட்டத்திற்கு பின் தனிமை சிறையில் அடைத்து புரட்சியாளர்களை ஒடுக்க நினைத்தது ஆங்கில அரசாங்கம். இந்தியாவில் இருந்து 1440 கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ளது அந்தமான் தீவு.1796 இல் அங்கு மலேரியா விஷக்காய்ச்சல் ஏற்பட்டதால் அங்கிருந்து கப்பல் தளத்தை மூடியது. 1858 ஆம் ஆண்டு பஞ்சாபில் ஏற்பட்ட கிளர்ச்சியின் காரணமாக 200 வீரர்கள் முதன் முதலாக அந்தமானுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

நூற்றுக்கணக்கானோர் நோய்வாய்ப்பட்டு இறந்தனர். அங்கு இருக்கும் இரு ஆபத்துகள் விஷப்பூச்சிகள் மற்றொன்று பழங்குடியினர்கள். காட்டில் தப்பித்துச் சென்றாள் பழங்குடியினர் கொன்று விடுவார்கள் நேரில் தப்பித்துச் சென்றால் ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்துக் கொன்று விடுவார்கள் அல்லது நீரில் மூழ்கி இறப்பார்கள் சிறைக்குச் சென்று மீண்டு வந்தவர்கள் அப்போது மிகவும் கொஞ்சம் பேர் தான்.

#எவ்வாறு கொண்டு செல்வார்கள்?

10 அல்லது 12 பேர்களை சேர்த்து சங்கிலிகள் இட்டு கப்பலில் இன்ஜினுக்கு அடுத்த இடம் தான் சிறை கூடமாக கருதப்படும். இங்கே கை விலங்குகளை எடுத்து விடுவார்கள். ஒவ்வொரு வினாடியும் இஞ்சினிலிருந்து வரும் உஷ்ணக்காற்று உடலை வாட்டும். இவ்வாறு நான்கு நாட்கள் கடலில் பிரயாணம் செய்து பின் அந்தமான் தீவை அடையலாம்.

சமூக அந்தஸ்து அடிப்படையில் டிவிஷன் இரண்டு மூன்று என்று பிரித்தனர். இரண்டாம் டிவிஷனை சேர்ந்தவர்களுக்கு அரிக்கேன் விளக்கு கட்டில் தலையணை தண்ணீர் இருக்கும். மூன்றாம் டிவிஷன் கைதிகளுக்கு எதுவும் இல்லை .நாயினும் கீழாக நடத்தப்படுவார்கள். நார் உரிப்பது செக்கு வேலை செய்ய வேண்டும். ஏதேனும் வேலை செய்யவில்லை என்றால் நாள் முழுவதும் நின்று கொண்டே இருக்கும் படியான இரும்பு சட்டங்கள் பூட்டப்பட்டு கசையடி கொடுக்கப்படும்.

#உண்ணாவிரதம்

1933 ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி காலை அடிப்படை வசதிகள் கேட்டு உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. இதில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மகாவீர் சிங் என்ற பகத்சிங்கின் தோழர் உயிரிழந்தார். இவ்வாறு மூன்று உயிர்கள் பறிபோன பின் 46 நாட்கள் உண்ணாவிரதத்திற்கு பிறகு அரசாங்கம் பணிந்தது. பல்வேறு சலுகைகள் வழங்கியது. புத்தகங்கள் படித்தல் விவாதித்தல் மாலையில் விளையாட்டு என்று நாட்கள் செல்ல 
ஆரம்பித்தது.

*1896-97 ஆம் ஆண்டில் தான் 400 அறைகள் கட்டி முடிக்கப்பட்டன. 1910 ஆம் ஆண்டில் 663 அறைகள் தயாராகின.

*1919- 20 ஆம் ஆண்டுகளில் ஆங்கில அரசாங்கம் இந்திய சிறைச்சாலை குழு ஒன்றை நியமித்து அந்த குழுவின் சிபாரிசின் அடிப்படையில் தண்டனை குடியிருப்புகளை(penal settlement) கைவிடுவது என்றும், அந்தமான் சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை இந்திய சிறைச்சாலைக்கு மாற்றுவது என்றும் ஆங்கில அரசாங்கம் முடிவு செய்தது. அதன்படி அச்சிறைச்சாலை 1921 இல் மூடப்பட்டது .குடியிருப்பு என்பது இங்கிருந்து வலுக்கட்டாயமாக அழைத்து சென்று அங்கேயே தங்க வைக்கப்படுவார்கள். தீவினை சீர் செய்வது, ஆங்கிலேயருக்கு உதவுவது என வாழ்நாள் முழுவதும் அங்கேயே தங்க வைக்க வேண்டும்.

அன்றைய நாட்களில் அகிம்சாவாதியாக சிறைக்குச் செல்பவர்கள் திரும்பி வரும்போது கம்யூனிஸ்ட் ஆக திரும்பி வருவார்கள். சிறைக்குள் நடக்கும் மார்க்சிய வகுப்புகள் இடதுசாரி சிந்தனை போதிக்கும் ஆசான்கள் பலரால் ஒவ்வொருவரும் புரட்சியாளராகவும் இந்திய தேசத்தின் விடுதலைக்கு பாடுபடுவதாகவும் திரும்பி வந்தனர். அவ்வாறு டாக்டர் நாராயண் ராய் பல்வேறு நபர்களை கம்யூனிஸ்ட் ஆக்கி திருப்பி அனுப்பினார்.

அந்தமான் குடியிருப்புகளை மூடியதைப் போன்று அந்தமான் சிறைகளையும் மூட வேண்டும் என்று உண்ணாவிரத போராட்டம் துவங்கியது. 1937 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கடைசி வாரத்தில் 183 அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருந்தனர். பல்வேறு நெருக்கடிகளை தொடர்ந்து இறுதியாக 1938 ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் நாள் மாலை நேரத்தில் அந்தமான் தீவில் இருந்து இந்தியாவின் நோக்கி நகர ஆரம்பித்தது அரசியல் கைதிகள் கண்களில் அப்போதுதான் சுதந்திரம் தென்பட்டது.

புத்தகத்தை வாசித்து முடித்த பின் நாமும் இந்தியாவை தன் கண்களால் பார்த்தவாறு உணர்வுகளால் ஒவ்வொரு சொற்களையும் வெளிப்படுத்தி இருந்தார் .இந்த புத்தகத்தில் தோழர் என் ராமகிருஷ்ணன்

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

சுதா ஆறுமுகம்


மற்றவர்களின் மதிப்பீடுகளுக்கு பொருந்திப் போவதற்காக அடையாளங்களை மாற்றிக் கொண்டிருக்க முடியாது!

-சுதா ஆறுமுகம்

மகுடேசுவரன்


ஒன்றுக்கு ஒரு ஓர். 
இரண்டுக்கு இரு, ஈர். 
மூன்றுக்கு என்ன ? 
OO

1 – ஒன்று

உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன்னால் ஒரு வரும்.

ஒரு புத்தகம், ஒரு வண்டி, ஒரு கட்டடம்

உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன்னால் ஓர் வரும். ஒன்று என்ற சொல்தான் இரண்டாம் சொல்லுக்கேற்ப ஒரு, ஓர் என்றாகிறது.

ஓர் எழுத்து, ஓர் அணில், ஓர் அருவி

2- இரண்டு

இதனை அப்படியே இரண்டு என்ற எண்ணிற்கும் பொருத்தி எடுத்துக்கொள்ளலாம். 

உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொற்களின் முன்னம் இரு வரும். 

இரு படங்கள், இரு மலர்கள், இரு பெண்டிர்

உயிரெழுத்தில் தொடங்கும் சொற்களின் முன் ஈர் என்றுதான் வரும்.

ஈராயிரம், ஈருருளி, ஈருயிர்.

ஒரு ஓர், இரு ஈர் ஆகியன நம் அனைவர்க்கும் தெரியும். மூன்று என்னாகிறது என்று பார்ப்போம். 

3 – மூன்று

மூன்று என்பதனை அடுத்து உயிர்மெய்யெழுத்து வந்தால் மூ என்ற எழுத்து மட்டுமே குறிலாய் மு என எஞ்சி நிற்கும். இரண்டாம் சொல்லுக்கேற்ப ஒற்று மிகும்.

முத்தமிழ், முக்கடல், முப்பால், முச்சந்தி, மும்மலர், முவ்வழி

இரண்டாம் சொல் உயிரெழுத்தில் தொடங்கினால் மூ என்ற நெடிலாகவே நிற்கும். ஒரு ஓர் போல மு, மூ என்றே மூன்றுக்கு அமைகின்றன.

மூவாறு, மூவேழு, மூவிரண்டு, மூவுலகம்

இவ்விடத்தில் முவ்வாறு, முவ்வேழு, முவ்விரண்டு, முவ்வைந்து, முவ்வுயிர் என்றாலும் பிழையில்லை.

4 – நான்கு :

நான்கிற்கு என்ன ஆகும் ? நான்கு நால் என்று ஆகும். 

நாலடி, நாலிலை.

உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லின் முன்னும் நால் என்றே அமைந்து வரும் எழுத்திற்கேற்பச் சேரும்.

நாற்கரம், நாற்சந்தி, நாற்புரம், நால்வகை (நான்வகை), நால்மணி (நான்மணி)
 
நான்கினைக் குறிக்க அச்சொல்லைத் தனியே பிரித்து எழுதும் போக்கும் மிகுதியாக இருக்கிறது – நான்கு உயிர்கள், நான்கு கோவில்கள், நான்கு வழிகள். 

- கவிஞர் மகுடேசுவரன் 
(இன்றைய தினமலரில் வெளிவந்தது.)

தலைப்பிலுள்ள கேள்விக்கு விடை :

ஒன்றுக்கு ஒரு ஓர். 
இரண்டுக்கு இரு ஈர். 
மூன்றுக்கு மு, மூ.

Monday 14 November 2022

ஜென்குரு


“சிறு பொய்களால் மட்டுமே மனைவியைச் சமாளிக்க முடிவது உறுத்தலாக உள்ளது குருவே என்றான் சீடன். 

மனைவிகள் எதிர்பார்ப்பது உண்மைகளையல்ல; பொருத்தமான பதில்களை மட்டுமே என்றார் ஜென்குரு.

பிர்சா முண்டா




உழுபவனுக்கே நிலம் சொந்தமென உரிமைகுரல் எழுப்பிய பழங்குடியினப் போராளி.வில் அம்புகளை பயன்படுத்தியே எதிரிகளை வீழ்த்தி..25வயதில் இறந்தார். 1908ம் ஆண்டு வந்த சட்டத்தின் படி ஆதிவாசிகளின் நிலத்தை யாரும் பயன்படுத்த முடியாத சட்டம் வந்தது.

*நாடாளுமன்ற அருங்காட்சியகத்தில் 
பழங்குடியினத்தை சேர்ந்த இவருக்கு மட்டுமே சிலை வைத்துள்ளனர்.ராஞ்சி விமான நிலையத்துக்கு இவர் பெயர் சூட்டியுள்ளனர்.மலை வாசிகளின் தந்தை என்று இன்றளவும் போற்றப்படுகிறார்

info


முதலையின் கடிக்கும் திறன்
psi.(pounds per square inch )என்ற அளவீடு மூலம்,  அளவிடப்படுகின்றது. இதன் கடிக்கும் திறன் 3,700 psi. ( மனிதர்களின் கடிக்கும் சக்தி 150 முதல் 200 PSI அளவில் இருக்கும். சிங்கம் அல்லது புலியின் கடிக்கும் சக்தி சுமார் 1,000 PSI அளவில் இருக்கும்.)

#info

Sunday 13 November 2022

Old is gold-12*மணிIf you find science boring, you're learning it from a wrong teacher.#சிள்வண்டு முதல் கிகாபைட்ஸ் வரை-ஹாலாஸ்யன்இக்கட்டுரையாசிரியர் ஹாலாஸ்யன் ஏற்கனவே தினமணியில் ஆச்சரியமூட்டும் அறிவியல் புத்தகம் வாசித்துள்ளதால் இந்தப் புத்தகத்தையும் மிகவும் ஆர்வத்துடன் வாசிக்க தொடங்கினேன். அறிவியல் குரூப் எடுத்து படித்தால் மருத்துவம் படிக்கலாம், இன்ஜினியரிங் படிக்கலாம் என்றுதான் அறிவியலை பெரும்பாலானோர் எடுத்து பயிலகின்றனர். ஆனால் அறிவியல் குரூப் பயில்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது.அவர்களுக்கெல்லாம் இது போன்ற புத்தகங்களை கொடுத்தால் நிச்சயம் அறிவியல் ஆர்வம் ஏற்படும் அறிவியல் மனப்பான்மை வளரும்.செல்லின் அழிவு செயல்பாடுகளில் ஒன்று ஆட்டோ ஃபஜி. செல்கள் எவ்வாறு அழிகின்றன என்பதை சில எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குகிறார் .அதற்கு உறுதுணையாக இருக்கும் ஆட்டோஃ பஜி குறித்து ஆய்வு மேற்கொண்டு நோபல் பரிசு பெற்றவரை பற்றி இதில் கூறியிருப்பார். உணவுச் சங்கிலியில் ஒவ்வொரு உயிரினங்களும் பெருகுவதற்கான காரணத்தை பகு எண்கள்,பகா எண்கள் மூலம் விளக்கி இருப்பார்.காற்று மாசுபாட்டில் வாயு நிலையில் இருக்கும் நைட்ரஜன் மற்றும் சல்பர் ஆக்சைடுகள் அதன்பின் வைரஸ் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் அதன் பின் துகள்மப் பொருட்கள் போன்றவை காற்றில் உள்ள மாசுபடும் பொருட்கள். மைக்ரோமீட்டரில் சொன்னால் 2.5 முதல் 10 மைக்ரோ மீட்டர் வரை இருப்பவை. அதற்கு மேல் புழுதி இதெல்லாம். இதில் 2.5 முதல் 10 வரையிலான துகள்கள் ஆபத்தானவை. அவற்றின் சிறிய அளவுகள் வடிகட்டப்படாமல் நேரடியாக நுரையீரலிலும் ரத்தத்திலும் கலந்து விடக்கூடியவை. இவற்றை பார்ட்டிக்குலட் மேட்டர் என அழைக்கிறார்கள். இவைதான் பனிப்புகை உருவாக்கத்தில் முக்கியமானவை என்று காற்று மாசுபாடு குறித்த ஒரு கட்டுரையில் கூறியுள்ளார். இந்த பனிப்புகை தாக்கத்தால் காற்றை சுத்திகரிக்கும் கோபுரம் ஒன்றை பீஜிங்கில் அமைத்துள்ளனர். ஏழு மீட்டர் உயரம் கொண்டது. மணிக்கு சுமார் ஆயிரம் கன மீட்டர் காற்றில் இருந்து இந்த துகல்களை பிரித்து எடுக்கிறது குறித்து விரிவாக சொல்லிவிடுவார்.அத்தி பழத்தை சாப்பிடுவது விதைகளா பூச்சிகளா என்று பட்டிமன்றம் நிகழ்த்தி அதில் விதைகள் தான் என்பதை இறுதியில் தீர்ப்பளித்து இருப்பார். தடையவியலில் ஃபாரன்ஸ் டிபார்ட்மெண்ட் குறித்து மிக அழகாக ஆழமாகவும் வழக்குகளில் முடிவுக்கு வர சமர்ப்பிக்கப்படும் நீதிமன்ற ஆவணங்களில் தடயவியல் ஆய்வு அறிக்கை எவ்வாறு முக்கியமானவை என்பது குறித்து சுருக்கமாக அறிவியல் பூர்வமாக சொல்லி இருப்பார்.தடயவியலில் இரண்டு சிக்கல்கள் உண்டு. கிடைத்த டிஎன்ஏ வேறு எந்த டிஎன்ஏயுடன் கலப்படமில்லாமல் இருக்க வேண்டும் .ஒரே கருமுட்டையில் இருந்து உதித்த இரட்டையர்கள் ஒரே டிஎன்ஏ வை கொண்டிருப்பதால் குற்றவியல் வழக்குகள் சிக்கல் வரலாம்1930ல் ஜோசப் கார் கடலில் சில இடங்களில் உயிர் வளச்சிக்கு தேவையான எல்லாம் இருந்தும் உயிர்கள் ஏன் இல்லை என்பதனை கண்டறிந்து desolete regions எனக் குறிப்பிட்டார். அதன் தொடர்ச்சியாக 1980ல் ஜான் மார்ட்டின் என்பவர் இரும்புச்சத்து குறைபாடு என்னும் கருத்தை தோண்டி எடுத்து ஒளிச்சேர்க்கைக்கு இரும்பு ஒரு முக்கிய நுண்சத்து பொருள் என்று நிரூபிக்கிறார். இரும்புச்சத்து குறைபாடு அந்தப் பகுதிகளில் உயிரினம் இல்லாமல் போக காரணம் என்கிறார். அந்தப் பகுதிகளில் இரும்புச்சத்தை சேர்த்தால் கண் கணக்கில் கரியமிட வாய்வை கவர்ந்து கடலுக்குள் புதைக்கும் சக்தியை பாசிகள் உருவாக்கும் என்றன என்பதையும் கூறுகிறார்.மறைநீர் குறித்து படித்திருந்தாலும் இதில் நீல நீர், பச்சை நீர், சாம்பல் நீர் நீர் என்பது. நமக்கு கிடைக்கும் ஏரி,குளம்-நீல நீர். பச்சை நீர் என்பது மழை நீர். சாம்பல் நீர் என்பது ஏதேனும் ஒரு காரணியால் மாசுபடுகிற நீர் எல்லாம். ஒரு சட்டை உருவாவதற்கு 2700 லிட்டர் மறை நீர் தேவைப்படுகிறது. காவேரி தமிழகத்துக்கு கிடைக்காமல் போனதற்கு மாண்டியா பகுதியில் சிறு தானியம் விளைந்த வயல்களில் கரும்பு விளைவிக்க அவை அதிக நீர் உறிஞ்சுகிறது. பருத்தி ஒரு கார்போஹைட்ரேட். செல்லுலோசால் ஆன இலைகளைக் கொண்டது. அந்த செல்லுலோஸ் உருவாகும் ஒளிச்சேர்க்கை வினையில் நீர் ஒரு முக்கிய வினைப்பொருள். நீர் இல்லாமல் வராது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் ஒவ்வொரு பொருளுக்குள்ளும் எவ்வளவு மறை நீர் உள்ளது என்பதனையும் வியக்கச் சொல்லி இருப்பார்.பறவைகள் பறக்கும் போது எவ்வாறு திசை அறிகின்றன என்பதை குறித்து சொல்லும் போது the great arctic tern இன்னும் பறவை வட துருவத்தில் இருந்து தென் துருவத்திற்கு வலசை போகும். தமிழில் ஆலாக்கள் என்று அழைக்கப்படும் பறவையைப் பற்றி சொல்லியிருப்பார். கடல் மேல் பறக்கையில் சட்டென்று நீருக்குள் பாய்ந்து ஒரு மீனை கவ்விக்கொண்டு அந்த மீனை காற்றிலே தூக்கி போட்டு பிடித்து விழுங்கிவிடும். ஓயாமல் பறக்கிற அவற்றின் பெயராலேயே ஆலாய் பறக்கிறான் என்று சொலவடை வந்திருக்க கூடும் என்று சொல்கிறார். நாமும் அதனை படிக்கும் போது அப்படித்தான் இருக்கக்கூடும் என்று மனதில் நினைக்கத் தோன்றுகிறது. ஒவ்வொரு விலங்குகளும் பறவைகளும் எவ்வாறு வழியை கண்டுபிடிக்கின்றன, எலிகளில் உள்ள நியூரான் செயல்பாடுகளையும் குறித்து சொல்லி இருப்பார்கவுண்டமணி ஒரு படத்தில் வண்டுரட்டான் தலையா என்பார். உண்மையில் வண்டுருட்டான் என்பது மிருகங்களுடைய கழிவுகளை வண்டுகள் உருட்டி உருட்டி எடுத்துப் போகும். இந்த வண்டுகளுக்கு dung beetles என்று பெயர். மண்ணின் வளத்தை பெருக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன கழிவுகள் ஒரே இடத்தில் குவித்து ஈக்கள் வராமலும் நோய் பரவாமலும் தடுக்கின்றன. கால்நடை வளர்ப்பில் முக்கியமாகவும் விவசாயிகளுக்கு நண்பனாகவும் விளங்கும் இந்த வண்டுகளை பற்றி தெரிந்து கொண்டது மட்டற்ற மகிழ்ச்சிசிறிய புத்தகம்தான் ஆனால் படிப்பதற்கு நிறைய நேரம் தேவைப்படும். நிறைய கருத்துக்களை உள்வாங்கி நம்மை யோசிக்க வைத்ததுடன், வெறுமனே வரட்டும் நிலையில் எழுதாமல் அவ்வப்போது சினிமா வசனங்களையும் நடைமுறை யதார்த்த பேச்சுக்களையும் உள்ளடக்கி சொல்லும் போது அறிவியல் மீது நமக்கும் ஒரு ஆர்வம் பிறக்கிறது. இந்த செய்திகளை எல்லாம் யாரிடமாவது சொல்லும் போது இன்னும் கொஞ்சம் உற்சாகம் பிறக்கும் அல்லவா தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

janakiraman nabalur


நீள் வட்ட வாழ்க்கை! 

இயற்கைக்கு மிகப் பிடித்த கணித வடிவம், நீள்வட்டம். சின்னஞ்சிறிய அணுவில் எலக்ட்ரானும், பரந்து விரிந்த இந்த பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள், கிரகங்கள் என அனைத்தும் நீள் வட்டப் பாதையிலேயே சுற்றுகின்றன. நமது கண், பெரும்பாலான தாவரத்தின் இலைகள், முட்டையின் வடிவம் என நம்மைச் சுற்றியுள்ள பல பொருட்களின் அவுட்லைன் நீள் வட்டமாகவே அமைந்திருக்கும். 

நேர்கோட்டை விட வட்டப்பாதை சிறப்பானது. வட்டப்பாதையை விட நீள் வட்டப்பாதை இன்னும் சிறப்பானது. நீள்வட்டத்தில், மையத்துக்கும் வட்டத்தின் நிலைக்கும் இருக்கும் ஆரத் தொலைவு மாறிக்கொண்டே இருக்கும். சில காலம் மிக அருகிலும், சில காலம் மிக தொலைவும் அமையும். 

நமது வாழ்வுமே, நீள் வட்டப் பாதையாக இருந்தால் நல்லது. நம்மைச்சுற்றியுள்ள மனிதர்கள், நிகழ்வுகள், பொருட்கள் ஆகியவற்றுடன் எப்போதும் ஒரே வித  தொடர்பும், பிடிப்பும் கொண்டிருக்க வேண்டியதில்லை. சில சமயங்களில் அவைகளுடன் நாம் விலகி இருக்க வேண்டும், சில சமயங்களில் அவைகளுடன் நெருங்கி பயணிக்க வேண்டும். அது, நமது எதிர்பார்ப்பை குறைத்து, பல ஏமாற்றங்களை தவிர்க்க உதவும்.

நமது வாழ்க்கையின் வெற்றி ஒன்றினை அடைவதில் அல்ல, பூஜ்யத்தைப் புரிந்து கொள்வதில் உள்ளது.

-janakiraman

Saturday 12 November 2022

Old is gold-11*மணி



#அம்பேத்கரின் உலகம்
தலித் இயக்க உருவாக்கம்
-எலினார் ஸெல்லியட்

ஒரு மனிதன் ஒரு வாக்கு வந்துவிட்டது
ஒரு மனிதன்-ஒரே மதிப்பு
என்று வரும்

-அம்பேத்கர்

ஐந்து தலைப்புகளில் ஆய்வு கட்டுரைகள் போல் நீளும் இப் புத்தகத்தில் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன என்பதை ஒவ்வொரு அத்தியாயத்திலும் காண முடிகிறது. முதலாவதாக மஹர் இனத்தின் பின்புலத்தை மிகவும் வரலாற்று ரீதியாகவும் எவ்வாறு கட்டமைக்கப்பட்டன என்பதை பற்றியும் மிக விரிவாக 83 பக்கங்களில் விவரிக்கிறது. 17 ஆம் நூற்றாண்டில் இருந்து மஹர்கள் காவலாளியாகவும், படைவீரர்களாகவும் பணிபுரிந்துள்ளனர். பேஸ்வாக்களின் காலம் ஆரம்பம் ஆகும் போதும் மஹர்கள் பழைய பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்தனர்.பேஷ்வா என்ற பிராமணர்களின் கைக்குள் அதிகாரம் சென்றபின் மஹர்களின் நிலை மோசமடைய ஆரம்பித்துவிடுகிறது என்பது தொடங்கி அவர்கள் பட்ட துன்பத்தினை மிக விரிவாக.. அம்பேத்கர் முன் போராடிய தலைவர்களை பற்றியும் விளக்குகிறது.

நாக்பூரில் பன்சோத், புனேவில்  காம்ப்ளே ஆகிய இரு தலைவர்களும் மஹர்களின் வாழ்வாதாரம் மேம்பட போராடியவர்கள்.1904 இல் இருந்து 1920 வரை தொடர்ந்த நீண்ட நெடிய போராட்டம் மஹர்களின் குறைகளை பறைசாற்றுவதும் உரிமைகளை பெற்று தரவும் நடந்த போராட்டத்தில் முன் நின்று நடத்தியவர் காம்ப்ளே. 1920 இல் சமூக களத்தில் அம்பேத்கர் இறங்கும் போது காம்ப்ளே அவரை முழு மனதுடன் வரவேற்கிறார். 1930 இல் நடந்த வட்டமேசை மாநாட்டில் தாழ்த்தப்பட்டோரின் சார்பாக அம்பேத்கர் கலந்து கொண்டார். 1937 இல் காம்ப்ளே இயக்கத்தில் இருந்து அம்பேத்கர் விலகுகிறார். ஆனாலும் காம்ப்ளேயின் வழியிலேயே தன்னுடைய இயக்கத்தையும் நடத்தினார்.

அம்பேத்கரை மாபெரும் தலைவராக ஆக்கிய மூன்று விஷயங்களாக சொல்லப்படுவன.. ஆங்கிலேயரை சாராமல் எவ்வித எதிர்பார்ப்புமின்றி தனித்து இயங்கினார்.தெளிந்த அவரது சிந்தனையில் அழகிய மொழி வல்லமையும், உயர் சாதி இந்து மக்கள் மீது கொடுத்த குத்தல்களும் கைதேர்ந்த வழக்கறிஞரின் தொகுப்புரை விட சிறப்பாக இருந்தது. மூன்றாவதாக தாழ்த்தப்பட்டோரின் குறைகளையும் அரசியல் பிரதிநிதித்துவத்தின் தேவையை நிறுத்தி விடாமல் ஜனநாயக அரசின் அதிகார பரவலாக்கம் ஆகியவை குறித்தும் பேசியது குறிப்பிடத்தக்கது.

அம்பேத்கரின் பின்னணி பற்றி பாட புத்தகங்களில் நாம் படித்தவர்கள் தான். ஆனால் தெரியாதவையாக அம்பேத்கரின் தந்தை ராம்ஜி சப்பல் பணி ஓய்வு பெற்ற ராணுவத்தினர். மனைவியின் தந்தையும் ராணுவத்தில் பணியாற்றியவர்கள். இவரின் குடும்பப் பெயர் சக்பால். பிறந்த மண்ணின் பெயர் அம்பவதேக்கர். இதுதான் இரண்டாவது பெயராக இருந்திருக்க வேண்டும். ஆனால் ஆசிரியரின் அன்பு இதையெல்லாம் தாண்டி அவருக்கு புதிய பெயர் ஒன்றை அளித்தது.

அம்பேத்கரின் அரசியல் பயணத்தில் ஆலய நுழைவு போராட்டம் மிக முக்கியமாக இருந்துள்ளது 1927 இல் மூன்று கோவில்களில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு செய்தித்தாள் மூக் நாயக் எனும் குரலற்றோரின் நாயகன் மற்றும் விலக்கப்பட்ட இந்தியா,மக்கள், எழுச்சி பெற்ற இந்தியா என பல்வேறு செய்தித்தாள்களில் அவர் ஆசிரியராக இருந்து வெளியிட்டுள்ளார்.

1919 முதல் 1936 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் நிறைவேறும் நாள் வரை ஆங்கிலேயர் அமைத்த அத்தனை கமிஷன்கள் மாநாடுகள் அனைத்திலும் தீவிரமாக கலந்து கொண்டு தன் கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார். இதற்குப்பின்  காந்திக்கும் இவருக்கும் ஆன கருத்து மோதல் வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது. தனித்தொகுதி வேண்டும் என்பதில் தீவிரமாகவும் தாழ்த்தப்பட்ட மக்களை முன்னேற்றுவதிலும் தீவிர முனைப்புடன் இருந்தார். சுதந்திரத்திற்கு முன்பே 1932 முதல் 1942 வரை தாழ்த்தப்பட்டவர்களின் நலன்களுக்காக பாடுபட்டதுடன், எப்படியாவது முன்னேற்றி  விட வேண்டும் என்று தீவிரமாக உழைத்தார்.

1935 லிருந்து தீண்டப்படாத மக்கள் முன் இரண்டு வார்த்தைகள் நின்றன. ஹரிஜன் மற்றும் பட்டியலினம். இதில் ஹரிஜன் என்ற சொல் கடவுளின் மக்கள் என்று பொருள் படும் குஜராத் சமயத்துறவி ஒருவரால் முதலில் பயன்படுத்தப்பட்டது‌. காந்திக்கு இது பிடித்ததால் அச்சொல்லை காந்தியும் காங்கிரஸ் கட்சியும் 1933 பயன்படுத்த ஆரம்பித்தனர். 1935 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு தீண்டாமைக்குள் அடைபட்டிருக்கும் சில சாதிகளை தனியாக பட்டியலிட்டு அவர்களை பட்டியல் இனங்கள் என்று அழைக்கப்பட்டனர். மஹர் ஜாதியினரும் இரண்டாவது பெயரையே தேர்ந்தெடுத்தனர். 1942-ல் அம்பேத்கர் பட்டியல் இனத்தவருக்கென்று ஆரம்பித்த அரசியல் கட்சிக்குப் பிறகே இந்த பெயர் முழு புழக்கத்திற்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

1935 ஆம் ஆண்டில் தான் இந்து மதத்தை விட்டு விலக வேண்டும் என்ற முடிவை அக்டோபர் மாதம் 13ஆம் தேதி இயோலா நகரில் நடைபெற்ற தாழ்த்தப்பட்ட மக்களின் மாநாட்டில் முதன்முறையாக அறிவித்தார். இதற்குப் பின் பல்வேறு உரையாடல்கள் போராட்டங்கள் நடைபெற்றாலும் 20 ஆண்டுகள் காத்திருக்கும் படி நேர்ந்து பின்பு மதம் மாறினார்கள். 1956 ஆம் ஆண்டு நாக்பூரில் மதம் மாற விரும்புவர்கள் வெள்ளை உடையில் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அக்டோபர் 14 மற்றும் 15ஆம் தேதி நாக்பூரில் நடைபெற்றது. 65 ஆயிரம் பேர் இதில் பெயர் கொடுத்திருந்தனர். ஆனால் மதமாற்றுச் சடங்கில் கலந்து கொண்டிருந்தவர்கள் மூன்றிலிருந்து 5 லட்சம் பேர் என்கிறார்கள். அம்பேத்கர் பர்மாவில் இருந்து வந்திருந்த 83 வயதான புத்தப்பிச்சு விடமிருந்து தீட்சை பெற்றார். அதன் பின் மூன்று சரணங்களையும், ஐந்து வாக்குறுதிகளையும், 22 உறுதிமொழிகளையும் எடுத்தார். இந்த உறுதிமொழிகள் அனைத்தும் மதமாற்றத்துக்கு வந்திருந்த அனைவருக்காகவும் அவரே சிந்தித்து உருவாக்கியது. இவை அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளன.

1935 ஆம் ஆண்டு முதல் 1956ஆம் ஆண்டு வரை அம்பேத்கரின் அரசியல் வளர்ச்சியை ஒவ்வொரு நிலையிலிருந்தும் அவர் ஆரம்பித்த இயக்கம் கட்சி இயக்கப்பட்ட போராட்டங்கள் அந்த ஆண்டுகளில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்று வரிசை கிராமமாக மிகவும் விரிவாக இந்த கட்டுரை தந்துள்ளது.

இறுதியாக அம்பேத்கர் மூன்று பெரும் அமைப்புகளை வாரிசுரிமையாக விட்டுச் சென்றுள்ளார் .அவை மக்களின் கல்வி அமைப்பு, இந்திய புத்தமத அமைப்பு, குடியரசு கட்சி என் மூன்று ஆகும். அம்பேத்கர் மறைவுக்கு பின்பு மகாராஷ்டிராவில் புத்த மத மாநாடுகள் நடைபெற்றன புத்த மதத்தினர் அரசியல் ஈடுபாடு இல்லாததும் ஒரு காரணமாக மக்களிடையே ஈர்ப்பு இல்லை என்பது தெரிய வருகிறது. அவருக்கு பின் அவரது மகன் யஸ்வந்த் அம்பேத்கர் தலைமையில் நடந்த இந்த அமைப்பு முறையாக இயங்கவில்லை. புத்த மதத்தினருக்கு சலுகைகள் கிடையாது என்பதும் இன்னொரு முக்கிய காரணமாக அமைந்தது.

அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு குடியரசு கட்சி பி கே கெய்கவாட் என்பவரின் தலைமையை எதிர்த்து இளைஞர்கள் விலகி பிளவு ஏற்படுத்தினர்.அதனால் தோல்வியே மிஞ்சியது. ஒரு சிலர் சோசியலிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்தனர். காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து அதன் மூலகாரணத்தை தகர்த்து விட்டார் என்பார்கள் அரசியல் அறிஞர்கள்

*எங்கள் நாட்டில் முதல் முறை ஆங்கிலேயர்கள் படைப்பிரிவு ஆரம்பத்தை நாளிலிருந்து மஹர்கள் அதன் முழுமையாக ஈடுபட்டிருந்தார்கள்

*1907 ஆம் ஆண்டு அம்பேத்கர் மெட்ரிகுலேஷன் படிப்பினை முடித்தார். இந்தக் கல்வி நிலையை கடந்த இரண்டாவது மஹர் அம்பேத்கர் தான்

*பட்டம் வாங்கியதும் பரோடா மன்னரிடம் ஒன்பது நாட்கள் வேலைக்கு இருந்தார். பின் தந்தை உடல்நிலை காரணமாக திரும்பி வந்து விட்டார்

*1913-1916 மூன்று ஆண்டுகள் கொலம்பியாவில் பயின்றார்  என் வாழ்வில் மிகச் சிறந்த நண்பர்களாக வந்தவர்கள் என்னுடன் கொலம்பியாவில் பயின்ற வகுப்பு தோழர்களும் மதிப்புக்குரிய என் பேராசிரியர்களும் ஆவார் என்று குறிப்பிட்டுள்ளார்

*1914 இல் அமெரிக்காவில் ஹோம் ரூல் இயக்க கிளைக்கு அவரை அழைத்த போது "அரசியல் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற விரும்பியோரின் அடிமைகளாக இன்னும் தாழ்த்தப்பட்டோர் இருப்பதால் மறுத்துவிட்டார்.

* இந்தியன் பழம்பொருள் திரட்டு என்ற ஆய்விதழில் அவரின் ஆய்வு கட்டுரை வந்துள்ளது முதல் முறையாக

*முனைவர் பட்டம் 1927ல் வாங்கியுள்ளார்.

நூலின் ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த இடத்திலும் தொய்வு இல்லாமல் மிகவும் ஆதாரத்துடன் குறிப்புகளுடன் மிகவும் நேர்த்தியாக புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாம் அறிந்த தகவல்கள் சில இருந்தாலும் அறியாத தகவல்களும் அவ்வப்போது எட்டி பார்ப்பதால் படிப்பதற்கு மிகவும் சுவாரசியமாகவும் உள்ளது. அம்பேத்கர் குறித்து அறிய விரும்புபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்களுள் இதுவும் ஒன்று. அம்பேத்கர் கனவு கண்ட சமத்துவ உலகம் இன்னும் கனவாகவே இருப்பது வேதனைக்குரியதுதான். எதிர்காலத்தில் அவரின் கனவு நிச்சயம் நிறைவேறும் என்ற நிலைப்பாட்டுடன் புத்தகத்தை படித்து முடித்தேன் 

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

ஜெயமோகன்


“எது பேசப்பட்டதோ அதுவல்ல, எது செயல்படுத்தப்பட்டதோ அதுதான் இறுதியில் நிலைக்கும்” 

-ஜெயமோகன்

திரவியம்


முந்திய ஊரில் 
மழை பெய்ததை
ஈரக்குறுஞ்செய்தியாய்
ஊற்றிச் செல்கிறது
பேருந்து!

-இளந்தென்றல் திரவியம்

நரன்


பயணம்....
தூரத்தாலும்,உயரத்தாலும்,
ஆழத்தாலும் ஆனதல்ல...
அது தரும்
அனுபவத்தாலானது.

-நரன்

Friday 11 November 2022

திருச்செந்தாழை


‘பின்னால் அமர்ந்திருக்கும் 
நிறைசூலி மனைவியுடன் 
சண்டையிட்டபடி, 
பதனமாக 
சைக்கிள் மிதிக்கிறான். 
அப்படி ஓர் அழகான கோபம் 
எங்கேயும் இல்லை’ 

-திருச்செந்தாழை

வண்ணதாசன்


நீங்கள் செய்யவேண்டியது
வேறு ஒன்றுமே இல்லை.

செய்துகொண்டே இருப்பது தான்.

-வண்ணதாசன்

ஜீவன் பென்னி.


கிடைக்காமல் விட்டுப் போன ப்ரியங்களே 
நம் வாழ்வாகின்றன.

-ஜீவன் பென்னி.

Thursday 10 November 2022

ஓஷோ


ஆசைகளுக்கு தான் எதிர்காலம் தேவை. 
ஆனந்தமாக வாழ்வதற்கு நிகழ்காலம் போதும்

-ஓஷோ

Wednesday 9 November 2022

நிலாகண்ணன்


குட்டியானையில் சாமான்களை
ஏற்றிக் கொண்டிருக்கிறேன்...
பெரிய யானையாய்
இருக்கிறது
சொந்த வீட்டுக்கனவு!

-நிலாகண்ணன்

அம்பேத்கர்


நீங்கள் விரும்புகிற எந்தத் திசையை நோக்கி வேண்டுமானாலும் திரும்புங்கள்.அந்தப் பாதையில் பிசாசைப் போல சாதி குறுக்கே நிற்கும்

-அம்பேத்கர்

Tuesday 8 November 2022

மவுனா


நீ ஏன் இவ்வளவு
அமைதியாக இருக்கிறாய் என்று
சிலர் எப்போதும் கேட்கிறார்கள்.

வார்த்தைகளின் ஆழம் அறியாமல்
விழுந்துவிட்டேன்.
இப்போது எழ முயற்சி
செய்து கொண்டிருக்கிறேன்.

-மவுனா

Monday 7 November 2022

Principles என்றால் அடிப்படைக் கொள்கைகள்,Policy என்றால் அந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தக் கையாளுகின்ற முறைகள்.#info

pmp

தூங்குவது போல் நடிக்கும்போது..
புன்னகை மிகை நடுப்பாகிவிடுகிறது
குழந்தைகளுக்கு.!

படித்தது


சந்திக்கும் போது 
பருகலாம் என்று 
நீ சொன்ன தேநீர் 
ஏதோ ஒரு கடையில் 
கொதித்து கொண்டு 
தான் இருக்கிறது..

ஆறி போன தென்னவோ
உன்னை சந்திக்கும்
ஆவல் மட்டும்..!

-படித்தது

Sunday 6 November 2022

ராம் வசந்த்


முடிவெடுக்கும் சுதந்திரம் உள்ளவர்களுக்கே இந்த உலகம் சொந்தமானது. 
மற்றவர்கள்? வசித்து மட்டும் கொள்ளலாம்.

-ராம் வசந்த்

Old is Gold-10*மணி




வார்த்தைகளில் வெளியிட்டால் சோபையற்ற வெறும் செயல்களாக மாறிவிடும் உள்ளத்துக்குள்ளையே சுவைத்துக் கொள்ளக்கூடிய பல அனுபவங்கள் அவளுக்கும் ஏற்பட்டன..

#சிறகுகள் முறியும் அம்பை

அம்பையின் கதைகளை பள்ளி நாட்களில்  ஒரிரு கதைகள் படித்ததுண்டு. பின்பு நூலகத்தில் தான் அம்பையின் கதைகளை அவ்வப்போது படித்திருக்கிறேன். சாதாரண ஒரு பெண்மணியின் பார்வையில் விரியும் கதைகள் எல்லாமே ஒவ்வொரு ஆணையும் குற்ற உணர்ச்சி கூண்டில் ஏற்றி நிறுத்தும். அந்தக் கதைகள் யாவும் மிகையாகவும் இருக்காது, வலிந்து திணிக்கப்பட்டவை ஆகவும் இருக்காது. இயல்பாக ஒரு வீட்டில் நடக்கும் கதைகளாக தான் இருக்கும்.
அதுவே அந்த கதைகளை மிக ஈர்ப்புடன் ஒவ்வொரு ஆணையும் படிக்க தூண்டும்.

இயற்பெயரான லக்ஷ்மி என்னும் புனைபெயரைச் சூட்டிக்கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால் வெள்ளிக்கிழமை பிறந்த எல்லா குழந்தைகளுக்கும் லக்ஷ்மி என்றுதான் பெயர் சூட்டுவார்கள். 'தேவன்’ எழுதிய பார்வதியின் சங்கல்பம் என்னும் நாவலில் கணவனால் கைவிடப்பட்ட பெண்ணாகிய பார்வதி 'அம்பை’ என்ற பெயரில்தான் எழுத ஆரம்பிப்பாள் என்பதால் அப்பெயரையே புனைப் பெயராக சூட்டிக்கொண்டதாய் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.

1971 முதல் 1976 வரை எழுதிய  13 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. முதலில் படித்த சூரியன் சிறுகதை இலங்கை போன்ற போர் பின்னணியில் போர்க்களத்தில் இரு பிள்ளைகளை காப்பாற்றும் அம்மாவின் உணவுகளை மிக அழகாக கடத்தியுள்ளார். பூமிக்கடியில் பதுங்குகளில் இருக்கும் அம்மா மகன் இருவரை விட்டு அக்கா பக்கத்தில் இருக்கும் தோட்டத்துக்கு செல்கிறார். ஒரு நாள் ஆகியும் வராததால் மகனை கையை பிடித்து வேகமாக அழைத்துக் கொண்டு பதுங்கி  பதுங்கி செல்கிறார் .அப்போது தன் பிள்ளை இறந்து கிடந்ததை கண்டு பதை பதைத்தவாறு இருக்கும் நிலை மிகவும் கனமானது. அந்த சூழலில் மகனின் கையைப் பிடித்துக் கொண்டு மீண்டும் நடக்க ஆரம்பிக்கிறார் என்று முடிவது இன்னும் சோகமாக இருக்கும்.

வல்லூறுகள் கதையில் அம்மா மகளுக்கு இடையேயான உறவினையும் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையில் நடக்கும் கசப்பு உணர்வையும் அழகாக வெளிப்படுத்தி இருப்பார். இறுதியில் அம்மா தற்கொலை செய்து கொள்வது போல் காட்டி இருப்பது படிப்போரையும் துன்பத்தில் பங்கெடுக்க வைக்கும்.

அம்பையின் மாஸ்டர் பீஸ் கதைகளில் ஒன்று சிறகுகள் முறியும். சாயா எனும் பெண்மணியின் கணவர் ஒரு கஞ்சத்தனமான கணக்கு பேர்வழி. அவளின் உணர்வுகளை ஒருநாளும் புரிந்து கொண்டது கிடையாது. எது செய்தாலும் செலவாகுமே என்றுதான் சொல்வான். இதையெல்லாம் மறந்துவிட்டு தன் மகன் சேகரை நம்பியே காலத்தை ஓட்டிக் கொண்டிருப்பார். ஆனால் அவ்வப்போது தன் மனதில் ஒவ்வொரு சட்டமாக பிறப்பிக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வாள்.

' மென்மையே இல்லாத ஆண்களுக்கு குழந்தையே பிறக்க கூடாது என்று கட்டாய வாசக்டமி செய்து வட வேண்டும், ஆவலுடன் மனைவியின் கண்கள் ஒரு பொருளின் மீது படியும்போது பர்சை கெட்டியாக மூடிக்கொள்ளும் கணவனின் பர்ஸ் பறிமுதல் செய்யப்பட வேண்டும். இப்படி ஒவ்வொரு சட்டமாக மனதுக்குள் நிறைவேற்றிக் கொண்டே இருப்பார். அப்போது ஒரு நாள் தன் தங்கைக்கு திருமணம் நிச்சயம் செய்ததாக கடிதம் வரும். அப்போது தாய் வீட்டுக்கு செல்வதற்காக போகும்போது கணவனின் வார்த்தைகள் தினசரியும் கொடுக்குகள் போல் ஏதோ ஒன்று கொட்டிக் கொண்டே இருக்கும்.

 ஆனாலும் கணவனுடன் அவர்களுக்குள் சந்தோசமாய் தான் இருப்பாள். இவ்வாறு செல்லும் வாழ்க்கையில் இறுதியில் இன்னொரு குழந்தை பிறக்கப் போகும் செய்தி அவளுக்கு தெரிகிறது. மௌனம் அறையில் நிலவியது. ஏற்படப்போகும் செலவு பட்டியலை அதை எப்படி பின்னால் ஈடு செய்ய வேண்டும் என்பதை பாஸ்கரன் சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் சட்டம் சட்டம் சட்டம் சட்டம் சாயா தூங்கிவிட்டாள் என்று கதையை முடித்து இருப்பார்.நீ எத்தனை சட்டம் போட்டாலும் நடப்பது நடந்து கொண்டுதான் இருக்கும் என்பதை போல அவள் மனம் தூங்கிப் போய் இருக்கும். ஒவ்வொரு இடமும் இந்த கதையில் மிகவும் முக்கியமாக வெளிப்படுத்தப்பட்டு இருக்கும்

ஒரு சராசரியான பெண் ஆராய்ச்சி படிப்பை படிக்கும் போது ஏற்படும் இடைஞ்சல்கள் மிக அழகாக திரிசங்கு கதையில் சொல்லியிருப்பார் .எவ்வளவுதான் படித்தாலும் தன் அறிவு  பற்றிய நிதர்சனம் அவளுக்கு பயங்கர கூச்சத்தை ஏற்படுத்தியது. ஒருமுறை பொது அறிவு தாள் வந்தது அதில் உள்ள எழுத்துக்கள் எல்லாம் கருப்பு ஈக்களாக பறந்தன.லியாகத் அலிகான் எனும் பெயரைப் படித்தவுடன் நிச்சயம் சித்தார்
கலைஞராக இருப்பார் என்று எண்ணுவாள். பகத்சிங் பெயர் கேட்டவுடன் அவர் நிச்சயம் ஹாக்கி ஆட்டக்காரராக இருப்பார் தான் என்று நினைப்பாள். இப்படியாக ஆராய்ச்சி படிப்பு சென்று கொண்டிருக்கும்போது ஒரு கருத்தரங்கில் அயல்நாட்டு விரிவுரையாளர் தன்னுடைய ஆய்வை சமர்ப்பித்துக் கொண்டிருக்கும் போது இவள் கேட்ட கேள்விகள் அங்கு இருப்பவரை வியப்பில் ஆழ்த்தும். அவள் பெருமிதத்தில் மிதந்து கொண்டிருக்கும்போது யாவரும் கண்டு கொள்ளாமல் எழுந்து சென்று விடுவார்கள். அதன் இறுதி வரிகள் மிகவும் முக்கியமானது 

"பரந்த வெளியில் அமைந்திருக்கும் போது நிர்ப்பயமாக, கூச்சமின்றி, சுதந்திரமாக, அவளால் எதையும் வெளி காட்ட முடியாது என்று நினைத்தாள். கண்ணீரை கூட.. என்று முடித்திருப்பார். அந்த கண்ணீரை கூட என்பது இந்த கதைக்கான ஒட்டுமொத்த கணத்தையும் அந்த வார்த்தை கொண்டிருக்கும்.

#ரசித்தது

*எல்லாருக்குமே புகழ வந்து விடுகிறதா?

*கணவனை அனலை செய்வது போல் ஒரு முட்டாள்தனம் வேறு கிடையாது

*இரு நபர்கள் எவ்வளவு தான் இணைந்தாலும் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் உண்டு. அந்த சுதந்திரத்தை இருவருமே பலிக்கலாகாது என்பது அவள் கொள்கை.

*அவனை அவள் ஏன் மாற்ற முயல வேண்டும் .அவன் குணத்தின் கோணலை அவள் உணராத போது, ஏன் அந்த குணம் தான் சிறந்தது என்று அவன் கருதும் போது மாற்ற முயற்சி செய்வது மடமை

*எதற்குத்தான் சந்தோசப்படுவது என்று நியதி கிடையாதா. இத்தனை சின்ன வாண்டு பயல் அவளை அழகு என்று விட்டால் இப்படியா மனம் துள்ளுவது

*எல்லாமே அவளுக்கு பழகிவிட்டது அதிலிருந்து விடுபட வேண்டும் என்ற வேகம் கூட தணிந்து சிறகிழந்த பறவையாய் அவள் படுக்கையில் முடங்கி கொண்டாள்.

*அசத்தங்களை எரித்து சுத்திகரிக்கும் நெருப்பு அவள். ஒரு சிரிப்பில் மனதில் கோடான கோடி அழகுகளை தோரணமாக வைப்பவள் அவள்.

*அப்போது அவளுக்கு பேச எந்த சொற்களும் மனதில் உருவாகவில்லை. ஓராயிரம் சொற்கள் ஒரே அடியாக மனதில் எழுந்து புகையாய் பிசுபிசுத்து போயின

*எல்லாவற்றையும் மலையாய் நினைத்து அயரும் மலைப்பும் மும்முரமும் அவள் வர்க்கத்துக்கே உரியது என்று தோன்றியது.

*படிப்பில் கூட முதுகு ஓடியே படிக்கும் கழுதைத்தனம் தான் வந்தது.

இவரின் கதைகளில் வரும் கதாநாயகிகள் சாகசக்காரர்களோ பெண்ணியம் பேசியும் மேதாவிகளோ இல்லை. சாதாரண குடும்பப் பெண்களும், சாதாரணமாக படிப்பு வராத பெண்களும், சாதாரணமாக இருக்கும் இளம் வயது பெண்களும் ஆவார்கள். சாதாரண மனிதர்களின் உணர்வுகள் வெளிப்படுத்துவதை யாரும் அவ்வளவு சீக்கிரம் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். ஆனால் இவரின் கதைகள் வழியே படிக்கும் போது ஒவ்வொரு சாதாரண மனிதர்களையும் உற்றுநோக்கும் வாய்ப்பையும், தன் மனதில் அதனை விவாதித்து ஒரு முடிவுக்கு வரும் கேள்வி எழுப்பும் கலையையும் தன் கதைகளின் சொல்லியிருப்பார் 

தொடர்ந்து வாசிப்போம் 
தோழமையுடன் மணிகண்ட பிரபு

Saturday 5 November 2022

படித்தது


எது பயம்?
நிச்சயமற்றத்தன்மையை ஏற்றுக்கொள்ளாத மனநிலையே பயம். நிச்சயமற்றத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் போது அது சாகசமாகிறது. 

எது பொறாமை?
மற்றவரிடமிருக்கும் நல்லவைகளை காணமுடியாததே பொறாமை. நல்லவைகளை காணும் போது அது உத்வேகமாகிறது. 

எது கோபம்?
நம்மால் கட்டுப்படுத்த முடியாதவைகளை ஏற்றுக்கொள்ளாத நிலையே கோபம். அவற்றை ஏற்றுக்கொள்ளும் போது அது சகிப்புத்தன்மையாகிறது. 

எது வெறுப்பு?
மற்றவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே ஏற்றுக்கொள்ளாத நிலையே வெறுப்பு. ஒருவரை எந்த கட்டுப்பாடுமின்றி நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளும் போது அது அன்பாகிறது. 

-படித்தது

Old is gold-9-மணி



கண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா!
இப்பயிரை குருதிச் செந்நீர் விட்டே காத்தோம்!

#இந்திய வரலாற்றில் வ உ சி 
-ப. முத்துக்குமாரசுவாமி

பாடநூல்களில் படிக்கும் ஆளுமைகளை விடவும் இது போல் ஆய்வு நூல்களைப் படிக்கும்போது அவர்களைத் தெரிந்து கொள்வது அதிகம். கப்பலோட்டிய தமிழன் வ உ சி என்று நான் படித்த ஐந்தாம் வகுப்பு பாட புத்தகத்தில் அவரின் பிறப்பு, போராட்டம், கப்பலை விட்டவர், இறுதியில் இறந்தார் என்று மட்டும் சில அத்தியாயங்கள் இடம் பெற்று இருக்கும். இந்த புத்தகங்களை படிக்கும்போது அவரைப் பற்றிய பிம்பம் வேறு வேறாக இருக்கிறது. குறிப்பாக அவர் ஒரு சிறந்த எழுத்தாளுமை என்பது வ.உ.சி யை பற்றி படிக்கும் போது அறிந்து கொண்டேன். மேலும் பல சுவாரசியமான பகுதிகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. வாழ்வியல், நிகழ்வுகள், நினைவுகளின் பதிவுகள், படைப்புலக பதிவுகள், அரசியல் அறிஞர்கள் பார்வையில், தமிழறிஞர்கள் பார்வையில் வ உ சி, வ உ சி குமாரிடம் நேர்காணல் என அவரின் முழு வரலாற்றையும் தெரிந்து கொள்ள இந்த புத்தகம் ஒரு நல்ல ஆவணமாக இருக்கிறது.

தூத்துக்குடியில் கோரல் மில்ஸ் என்ற ஆர்வி கம்பெனியாளரின் பருத்தி ஆலையில் ஏற்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவான ஒரு போராட்டமே அவரை அந்நாளில் ஒரு புரட்சியாளராக மாற்றியது என்று சொன்னால் அது மிகை இல்லை.

வ உ சி யின் உயிலில் என்னென்ன விஷயங்களை சொல்லி இருக்கிறார் என்பதை இதில் கொடுக்கப்பட்டுள்ளது .இதில் வ உ சி யோடு உடன் பிறந்தவர்கள் ஏழு பேர் ஆவார்கள் .வ உ சிக்கு இரண்டு திருமணங்கள் நடைபெற்றது . அவரின் மூத்த மகன் உலகநாதன் அண்ணல் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தினை ஏற்று பள்ளிக்கு அனுப்பாமல் வேறு பள்ளிக்கு மாற்றியதாகவும் தனது 16 வயதிலேயே திலகர் பல்பொடி திலகர் திலகர் சோப்பு என்று பொருள்களை தாமே உற்பத்தி செய்து விற்கும் ஆற்றல் இருந்ததாகவும், இவருக்கு திருமணம் செய்து வைக்க எண்ணிய போது நச்சு காய்ச்சலில் 16 வயதில் மறைந்தார் என்பதும் மிகவும் சோக வரலாறு. அவரைத் தொடர்ந்து ஆறுமுகம், ஞானாம்பிகை, வேதவல்லி, ஆனந்தவல்லி, மரகதவல்லி, சுப்பிரமணியம், வாலேஸ்வரன் ஆகிய ஒவ்வொருவரை பற்றியும் குறிப்புகள் கொடுத்துள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த பின் தான் மீண்டும் வழக்கறிஞராக பணியாற்ற உத்தரவளித்த வாலிஸ் துரையின் நினைவாக தன் மகனுக்கு வாலேஸ்வரன் என்று பெயர் சூட்டியதும் உள்ளது

ஸ்டீம் நேவிகேஷன் கப்பல் கம்பெனி பற்றியும் அதை பங்குகளாக பிரித்து ஒவ்வொருவரின் மூலமும் கப்பல் வாங்கியது குறித்தும், இயக்குனர்கள், செயலாளர்கள் என்று கப்பல் கம்பெனியின் நோக்கங்கள் குறித்து விரிவாக சொல்லப்பட்டுள்ளது. இக்கப்பல் 42 முதல் வகுப்பு பிரயாணிகள் 24 இரண்டாம் வகுப்பு பிரயாணிகள் 1300 சாதாரண வகுப்பு பிரயாணிகள் மற்றும் 4000 மூட்டை சரக்குகள் ஏற்றுவதற்கு வசதி உடையதாய் இருந்தது. பம்பாய் சென்று 'காலியா' கப்பலை வாங்கி வந்த பின்னர் இன்னொரு கப்பலும் வாங்க முடிவு செய்யப்பட்டு 'லாவோ' என்கிற கப்பலை பிரான்ஸ்  சென்று வாங்கி வந்தார் .அதோடு இரண்டு இயந்திரபடகுகளும் விலைக்கு வாங்கப்பட்டன. ஒரே நேரத்தில் இரு பெரும் கப்பல்களும், இயந்திர படங்களும் வாங்கி பெரும் சாதனை படைத்த வ.உ.சி அவர்களை அப்போதைய பத்திரிகைகள் பெரிதும் பாராட்டின.

திலகரை  தன்னுடைய அரசியல் குருவாக ஏற்று தனது 21ஆம் வயதிலிருந்து அவருடைய பேச்சுக்களும் எழுத்துக்களும் இவரை வெகுவாக கவர்ந்தது. வக்கீலுக்கு படித்துக் கொண்டிருக்கும் காலத்திலேயே இவருக்கு அரசியல் ஈடுபாடு வந்து விட்டது. பம்பாயில் 1885 இல் துவங்கப்பட்ட காங்கிரசுக்கு அடுத்த 13 ஆண்டுகளில் இந்தியாவின் தென்கோடி ஒட்டப்பிடாரத்தில் ஒரு கிளை அமைத்து அதற்கு அவரே செயலாளர் பொருளாளராக திகழ்ந்தார்.

கொள்கை வேற்றுமை காரணமாக காங்கிரஸிலிருந்து பிரிந்து இருந்தாலும் 1927 ஆம் ஆண்டு 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் காங்கிரஸில் சேர்ந்தார்.
 அப்போது சேலத்தில் நடந்த மாநாட்டில் பேசிய உரையை மபொசி அவர்கள் மகத்தான தேச பக்தர் வ.உ.சி என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதினார். வக்கீல் தொழிலில் மீண்டும் பணியாற்றிய தொடங்கிய காலத்தில் தேச பக்தர்கள் மீதான அரசாங்க வழக்குகளில் ஊதியம் வாங்காமல் வாதாடுவதை கடமையாக கொண்டிருந்தார் வ உ சி.

1912 ஆம் ஆண்டு கண்ணனூர் சிறையில் இருந்து விடுதலை அடைந்தவுடன் நேராக ஊருக்கு செல்லாமல் சென்னை சென்றார் வ உ சி போது திலகர் ஹோம் ரூல் இயக்க நிதியிலிருந்து மாதம் 100 ரூபாய் அனுப்பி வந்தார். 1918 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் திலகரின் பேச்சை மொழிபெயர்த்தார் வ உ சி. கோவையில் இருந்த நண்பர்களின் அழைப்பின் பேரில
 கோவையில் தொழிலாளர் இயக்கத்தை ஆரம்பிக்க எண்ணி கோவைக்கு குடிபெயர்ந்தார். அங்கு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட போது பிளேக் நோய் நகரெங்கும் பரவியதன் காரணமாக கோவை அடுத்த பேரூரில் குடிபெயர்ந்தனர். கடைசி தங்கை அங்கு தான் பிறந்தார் அந்த கோவிலில் உள்ள மரகதவல்லி எனும் தெய்வத்தின் பெயரை தன் மகளுக்கு அவர்களுக்கு சூட்டினார். தேசபக்தியோடு தெய்வ பக்தியும் நிரம்பியவர் வ உ சி

வ.உ.சியின் இன்னொரு முகம் எழுத்தாளராக பரிணமித்தது தான். மொழிபெயர்ப்பாளராக, உரையாசிரியராக இன்னிலை உரைப்பாயிரம் ,ஜேம்ஸ் ஆலன் இயற்றிய அகத்தில் இருந்து புறம், ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பு மற்றும் மனம் போல வாழ்வு, எளிமையில் இருந்து வலிமைக்கு, திருக்குறள் அறத்துப்பால் பொருளுரை பல்வேறு நூல்களை தமிழர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்

1936 நவம்பர் 18 இரவு 11 மணி அளவில் வ உ சி நம்மை விட்டு பிரிந்தார். அவரின் இறுதி யாத்திரையை காங்கிரஸ் பொறுப்பேற்று நடத்தியது .சுதேச மித்ரன் எழுதியது. துக்கத்தை தெரிவிப்பதன் அறிகுறியாக ஆங்காங்கே கருப்பு கதர் கொடிகள் தொங்க விடப்பட்டன. கருப்பு கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட விமானத்தில் இவரை பல நூற்றுக்கணக்கான காங்கிரஸார்கள் சூழ இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

அரசியல் என்பது ஏதோ பாட்டும் பேச்சும் மட்டுமல்ல. தியாகமும் செய்ய வேண்டும்.இன்று பேச்சு மேடை ,நாளை தூக்கு மேடை. இன்று  கழுத்தில் பூமாலை, நாளை கழுத்தில் சுருக்கு கயிறு. இவ்வாறு எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்களே அரசியலில் பேச்சாளராக வளர முடியும் என்பர் தோழர் பா ஜீவா. இதற்கு முற்றிலும் பொருத்தமாக பொருந்திக் கூடியவர் வ உ சி ஆவார் மேடைதமிழ் மூலம் விடுதலை வேட்கையை பாமர மக்களின் நெஞ்சில் விதைத்தவர்களில் முக்கியமானவர் வ உ சி

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

Old is gold-8*மணி


#வேண்டாம் மரண தண்டனை
-கோபால கிருஷ்ண காந்தி

ஒரு மனிதன் கொலை செய்யும் போது சட்டத்தை மீறுகிறான். அரசாங்கம் மரண தண்டனை மூலம் அவனை தண்டிக்கும் போது சட்டத்தை காக்கிறது

மரண தண்டனைக்கு எதிரான குரல்கள் உலகெங்கும் கேட்டுக் கொண்டிருக்கும் வேளையில்.. இந்தப் புத்தகம் மரண தண்டனை தேவையா? இல்லையா? என்பதையும் அதன் காரண காரியத்தையும் இயல்பாக விவரித்து பேசுகிறது. மரண தண்டனைக்கு எதிராக வி ஆர் கிருஷ்ணய்யர், விருமாண்டி கமல்ஹாசன் ஆகியோர் உரத்தக் குரல்களை எழுப்பினாலும் புத்தக வடிவில் உள்ள் இந்த கருத்துக்கள் நம்மையும் சற்று சிந்திக்க வைத்து கேள்வி கேட்க வைத்திருக்கின்றன.

முதல் அத்தியாயத்தில் மூல குற்றம் இழைக்கப்பட்டு, அதற்கு மரண தண்டனை அளிக்கப்பட்டு, மூன்றாவதாக கருணை மனு ஒன்று சமர்ப்பிக்கப்படுகிறது. அதன் நோக்கம் மரண தண்டனையை 14 வருட சிறை வாசமாக அல்லது ஆயுள் முழுதும் சிறையில் கழிக்கும் தண்டனையாக மாற்றக் கூறுவது தான் என்று இந்தியாவில் கருணை மனுக்களை பெறுவதிலும் பரிசீலிப்பதிலும் குடியரசுத் தலைவரின் பங்கு என்ன என்பதையும், அவரிடம் கேட்கும் கேள்விகள் பற்றியும் முதல் அத்தியாயத்தில் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு உலக நாடுகளில் எவ்வாறு தூக்கு தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதையும் அதன் அறிக்கையையும் மிக சுருக்கமாகவும் நேர்த்தியாகவும் சொல்லி இருக்கிறது.

1981 ஆண்டு பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ப்ராங்கோய் மிட்டரண்ட் தாம் மரண தண்டனைக்கு எதிரானவர் என்று வெளிப்படையாக அறிவித்தார். தான் பதவி ஏற்றவுடன் மரணம் தண்டனையை நீக்கும் மசோதாவில் கையெழுத்து விட்டதுதான் மரண தண்டனையை ஒழித்த கடைசி ஐரோப்பிய நாளாக பிரான்ஸ் வரலாற்றில் இடம் பிடித்தது. மேலும் நார்வே தென் ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகளில் மரணம் தண்டனையை ஒழித்ததுக்கான காரணம் காரியத்தை தேவையான வரலாற்றுடன் இதில் சொல்லியுள்ளார்.

ஒரு கொலை அசட்டு துணிச்சலையும் மீட்க முடியாத தன்மையையும் கொண்டு கொடூரத் தன்மையை வெளிப்படுத்துகிறது என்றால் பாலியல் வன்முறையுடன் கூடிய கொலை இவை இரண்டோடு வக்கிரத்தையும் சேர்த்து விடுகிறது. ஒரு பெண்ணின் பூத உடல் கொலை செய்யப்படுவதின் முன்னால் அவளின் ஆளுமை கொல்லப்பட்டு விடுகிறது. இந்த உண்மையை பொறுத்தவரையில் மரண தண்டனைக்கு எதிரானவர்களும் ஆதரிப்பவர்களும் ஒன்றுபடுவர். கொலையின் கொடூரத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் மரண தண்டனையின் குறைகளை பற்றி சொல்லி பயனில்லை என்று மரண தண்டனைக்கு ஆதரவாக உள்ளோர்களின் கருத்தினையும் அதனை கேள்விக்குள்ளாக்கி அதனால் ஏற்படும் விளைவுகளையும் இரண்டு பக்கங்களிலிருந்தும் கூறி இருப்பது பொருத்தமாய் இருந்தது.
துயரத்தில் இருப்பவர்களுக்கு மரண தண்டனையை ஒழிப்பதின் காரணங்களை சொல்ல முயல்வது பலனை தராது. அது மட்டுமல்ல அது இரக்கமற்றதும் கூட.

இந்தியாவில் அசோகரது காலத்தில் இருந்தும் அவரின் கல்வெட்டுகளில் இருந்தும் கிடைத்ததின்படி மரண தண்டனை விதிக்கப்பட்ட வரலாற்றினை அறிய முடிகிறது. கிரேக்க நாட்டில் நடைபெற்ற மன்னர்களுக்கு எதிரான ராஜா துரோக குற்றச்சாட்டையும் அதன் விளைவாக மரண தண்டனை நிறைவேற்றியதும், சாக்ரடீஸ் முதலான பல்வேறு தலைவர்களின் மூலமாக நாம் அறிந்ததை இன்னும் மேலும் விரிவாக இந்த அத்தியாயத்தில் கூறியிருக்கிறார்.

மூன்றாவது அத்தியாயத்தில் பிரபல தலைவர்களின் கொலைகளும் அதற்கு அவர்கள் பெற்ற தண்டனையையும் கூறியிருக்கிறார். உதாரணத்திற்கு லிங்கனின் படுகொலையில் அவரைச் சுட்ட ஜான் வில்ஸ் பூத் அந்த இடத்தை விட்டு தப்பியோடிய போது துரத்தப்பட்டு சுடப்பட்டு உயிர் இழந்தார். இறக்கும் முன் தன் செயலிழந்து கைகளை பார்த்து உதவாக்கரை உதவாக்கரை என்று கூறியபடி உயிரிழந்தார்.  மேலும் விங்களின் சதி வேலையில் ஈடுபட்டமைக்காக நால்வர் தூக்கிலிடப்பட்டனர். மூவர் ஆயுள் தண்டனை பெற்றனர். தூக்கு தண்டனை பெற்ற நால்வரில் ஒருவர் பெண் என்பது பலர் அறியாதது.இந்த புத்தகத்தை படித்த பிறகு தான் நானும் அறிந்து கொண்டேன்.

குடியரசுத்தலைவர் பதவியில் இருந்த போது யார் யார் எத்தனை கருணை மனுக்களை அமல்படுத்தினர்.. யார் நிராகரித்தினர் என்பதை ஒவ்வொரு குடியரசுத் தலைவரின் பொறப்பு வகித்த காலத்தில் இருந்து இதில் சுட்டிக்காட்டி உள்ளார். இந்திரா காந்தி படுகொலையும் மரண தண்டனைக்கு எதிரான போக்கை சிறிது பலவீனப்படுத்த செய்தது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்வதற்கான உரிமை என்னும் தலைப்பில் மனித உயிர்களின் மதிப்பினை பற்றியும் இந்தியாவில் மரண தண்டனையின் எதிர்காலம் எனும் தலைப்பில் வரலாற்றில் இருந்து மரண தண்டனை கூடாது என்பதையும் வரிசை கிராமமாக எடுத்துக் காட்டியுள்ளார்

#ரசித்தவை

*ரப்பர் ஸ்டாம்புகள் ரப்பர் பிடிகளுடன் வருவதில்லை.அவை மரத்தாலும் சில சமயம் இரும்பாலும் கூட ஆனதாக இருக்கலாம். அவை அரசின் சொந்த மை அட்டைக்குப் பதிலாக தன்னுடையதைப் பயன்படுத்தவும் முடிவு செய்யலாம்

*காரணங்கள் வேதனைகளை குறைப்பதில்லை. கற்பித சித்தாந்தங்கள் இழப்பை, அவை உண்மையானவையோ ஊகத்தின் அடிப்படையிலானவையோ ஈடு செய்ய இயலாதவை. 

*எதார்த்த வாழ்க்கையில் ஒரு சரிக்கும் மற்றொரு சரிக்கும் ஒரு உண்மைக்கும் மற்றொரு உண்மைக்கும் இடையிலான போராட்டங்கள் வேதனையானது

*அரசியல் எப்போதும் அரசியல் தான். தோள்களுக்கு பின்னால் திரும்பி பார்க்கும். சாளரங்களுக்கு அப்பால் நோக்கும், குப்பை தொட்டிக்கொள்ளும் தலைவிரிப்புக்கு உள்ளும் சென்று பார்க்கும் தன்மை உள்ளது அது.

*தண்டனைகள் சட்டத்தை மதிப்பவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையிலும் அதை எதிர்ப்பவர்களை கண்டிக்கும் வகையிலும் செயல்படுகின்றன

*சட்டத்தின் முன் இந்த 'லாம்' என்கிற சாத்தியக்கூறுகளுக்கு இடமில்லை

இறுதியில் ஒரு தண்டனைக்கு ஐந்து நோக்கங்கள் உண்டு தண்டிப்பது, தடுப்பது, பழி தீர்ப்பது, விதிகளை பின்பற்றுவது ,ஐந்தாவது அனுபவரீதியானது .முதல் நான்கும் தாமாகவே நடந்து விடுகின்றன. ஐந்தாவது நடப்பதில்லை. மரணம் குறிப்பிடுவதால் அது நடக்கவும் முடியாது என்றும் மரண தண்டனை அடிப்படையில் முழுமை அடையாத தண்டனை என்பதை பற்றியும் அதனை அளிப்பது ஒரு வகையான சுய ஏமாற்று வேலையே என்பதை பற்றியும் வலியுறுத்தியுள்ளார். எனினும் குற்றம் சாட்டப்பட்டவர் படும் வேதனைகளை பார்ப்பதை விடவும் கொலை செய்யப்பட்ட குடும்பத்தின் பார்வையில் தூக்கு தண்டனை அவசியமானது என்றும் இன்றைய
காலகட்டத்தில் சொல்லப்படுகிறது. அதனால் தான் தூக்கு தண்டனைக்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தூக்கு தண்டனை அவசியம் என்று பலரால் உணரப்படுகிறது. இதற்கான பதில்கள் எதிர்காலத்தில் தான் கிடைக்கும்.

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

பெரியார்


பக்கத்து வீட்டில் ஒருவன் இருக்கிறான், என்னைத் தொடக்கூடாது என்கிறான் - தீண்டாதே என்கிறான். 

இன்னொருவன் அயல் நாட்டுக்காரன் - ஆயிரம் மைல் களுக்கு அப்பால் இருந்து வருகிறான்.என்னோடு கைகுலுக்குகிறான்; என்னைக் கட்டிப் பிடித்துத் தழுவுகிறான். இவர்களில் எனக்கு யார் அந்நியன்? 

-பெரியார்

அம்மை நாதன்


வார்த்தையில் மட்டுமே
வைக்க வேண்டிய 
கோபத்தை மனதிலும்,
மனதில் வைக்க 
வேண்டிய அன்பை 
வெறும் வார்த்தையிலும்
வைத்து சுற்றிக்
கொண்டிருக்கிறோம்..!!

-அம்மை நாதன்

திருச்செந்தாழை


ஒன்றை இன்னொருவரிடம் கூறிவிட்டால் பாரம் குறைந்துவிடும் என்பது ஓரளவு உண்மைதான்.
ஒன்றை முழுமையாக நம்மிடம் நாமே அமைதியாகக் கூறிக்கொள்ளும்போது நிகழ்கின்ற ஆசுவாசம் வேறுவகையானது. சமயங்களில் அது அற்புதமான நேர்மறையாகவும் மாறவல்லது.

-பா.திருச்செந்தாழை

Thursday 3 November 2022

கண்டுபிடிப்பது


கண்டுபிடிப்பது, கண்டறிவது இரண்டும் வெவ்வேறானவை. அதுவரை இல்லாத ஒன்றை கண்டுபிடித்து சொல்வது கண்டுபிடிப்பு, கண்டறிவது என்றால் அதுவரை யாரும் காணாததை கண்டறிந்து சொல்வது.கொலம்பஸ் அமெரிக்காவை கண்டறிந்தது போல.

ஜா.தீபா


செய்த தவறுக்கு தேவையானால் விளக்கம் கொடுக்கலாம்.
 ஒருபோதும் செயல்களுக்கு அல்ல.

-ஜா.தீபா

சுனந்தா எனும் தேனருவி




செல்போன் அறிமுகமாத நேரம்.
விடுதியில் தங்கிப் படிக்கும் காலக்கட்டங்களில் பாட்டுப் புத்தகம் தான் ஒரே பொழுதுப்போக்கு. சீனியர்கள் விட்டுச் சென்ற பரம்பரைச் சொத்தில் அதுவும் ஒன்று.பாட்டுப்புத்தகத்தில் எண்ணற்ற ஆச்சர்யம் காத்திருக்கும். நாம் காலம் காலமாக இவர் இசையமைத்திருப்பார், இவர் பாடியிருப்பார் எனும் அனுமானத்தை சுக்கு நூறாய் உடைக்க வல்லது. அப்போது அருகில் இசை மேதை நண்பர்கள் அதை உணர வைக்கும் போது அந்த பாடகர் மீதும் அபரிமித மரியாதை வரும். அவர்கள் பாடிய பாடல்களை புதையல் எடுப்பது போல் தேடித் தேடி கேட்டு பரவசமடைந்த காலம்.

கட் பன்னினா சில நண்பர்களுடன் காரில் பயணம்.உடன் பாடல் கேட்டுக்கொண்டே..அப்போது ஒரு பாடல் 'செண்பகமே செண்பகமே' (எங்க ஊரு பாட்டுக்காரன்)ஒலித்த போது இதை பாடியது யாரென கேட்டேன்.நண்பரும் உடனே ஆஷா போன்ஸ்லே என்றார்.நான் அதில் வரும் சோகப் பாடல் மட்டுமே ஆஷா என்றும் சந்தோசப்பாடல் யாருடையது என்றேன்.இரண்டுமே ஆஷா தான் என்றார்.உடனே வண்டியை நிறுத்தி அவரையே கூகுளில் தேடச் சொன்னேன். தேடியதன் விடையில் கண்டது பாடகி சுனந்தா.நண்பர் என்னிடம் தோற்றதற்கு நூறு ரூபாய் கொடுத்தார்.

மீண்டும் எங்கள் உரையாடல் துவங்கிய போது சூரிய வம்சம் படத்தில் நட்சத்திர ஜன்னலில் பாடல் யார் என்று கேட்டேன். தயக்கத்துடன் சுஜாதா என்றார்.இதுபோல் பல பாடல்களை நமக்கு தெரிந்த ஒரு சில பாடகர்கள்தான் பாடியிருப்பார்கள் என நினைப்பது சலனப்பிழை என்பார் ஆத்மார்த்தி. இல்லை சுனந்தா என்றேன்.இது போல் லைம் லைட்டுக்கு வராத பாடகிகளில் சுனந்தாவும் ஒருவர்.கேரளாவில் முறைப்படி சங்கீதம் படித்து..சென்னைக்கு பணி மாற்றலான தந்தையோடு வருகிறார். தான் பாடிய பாடல் கேசட் நண்பர்களின் உதவியோடு இளையராஜா வுக்கு அனுப்புகிறார். அவர் பாடல்களை ஓரிரு நாளில் கேட்டுவிட்டு இளையராஜா சில ஆலாபனைகளை பாட கேட்டு புதுமைப்பெண் படத்தில் வரும் கா..தல் மயக்கம் எனும் பாடலை ஜெயச்சந்திரன் அவர்களுடன் இணைந்து பாடியது ஹிட் ஆகிறது.
ரேவதிக்கு உமா ரமணன் குரல் போல சுனந்தாவின் குரலும் இயல்பாய் பொருந்திப் போனது.இப்பாடலின் முன்பு வரும் துவக்கவரிகள் 

'அன்பே உன் பாதங்கள் சுப்ரபாதம்
ஆனந்த சங்கமம் தந்த பாதம்
என் வாழ்வில் வேறேதும் வந்தபோதும்
எந்நாளும் உன் பாதம் ரெண்டு போதும்' எனும் வரிகளுக்கு இசையும் ஜுவனும் அந்தப் பாடலோடு நம்மையும் கட்டிப்போடும்

அதனைத் தொடர்ந்து சின்ன வீடு படத்தில் மலேசியா வாசுதேவனுடன் இணைந்து 'வெள்ளை மனம் உள்ள மச்சான்' பாடல் மற்றொரு வெற்றிப்பாடலாய் அமைந்தது. சொல்லத்துடிக்குது மனசு படத்தில் இடையில் ஒரு சங்கதி பாட சுனந்தாவை அழைத்துப் பின் அது நன்றாய் இருந்ததால் பூவே செம்பூவே பாடலைப் பாடியது இன்னொரு வைரக்கல்லாக அவரின் வெற்றி மகுடத்தில் சூட்டப்பட்டது.

அதன் பின்பு ராஜாவின் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார்.பாடகர் ஜெயச்சந்திரனுடன் இவர் பாடிய பூ முடித்து பொட்டு வச்ச வட்ட நிலா பாடல் மேலும் இவரை பிரபலமாக்கியது.

இன்றும் பல பேருந்துகளில் எவர் கிரீனாய் ஒலிக்கும் செவ்வந்தி படத்தில் வரும் செம்மீனே செம்மீனே பாடல் இவர் பாடியதுதான்.இவர் பாடிய பாடல்கள் முக்கால்வாசி தாலாட்டு பாணியிலான பாடல்களாய் அமைய ராஜா வால்டர் வெற்றிவேல் படத்தில் வரும் மன்னவா மன்னவா பாடல் இவரின் தேன்குரலுக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு. படத்தின் சிச்சுவேசனே கேட்காமல் தாலாட்டு என்று நினைத்துக் கொண்டு பாடிய பாடல் நம்மையும் அந்த குரல் அக் குழந்தையை நினைத்து கண்ணீர் சொந்த வைக்கும்.

பொன்விலங்கு படத்தில் வரும் 'ஒரு கோலக்கிளி' மற்றும் ஊட்டி மலை பாட்டும் இவருக்கு பெயர் சொல்லும் படி அமைந்தது.செந்தமிழ் பாட்டு படத்தில் சுஜாதாவுக்கு பின்னனி குரலாய் சொல்லி சொல்லி பாடல் அந்த கதாபாத்திரத்துக்கு ஒத்திசைந்து இருக்கும்.இதே போல் உழைப்பாளி படத்தில் அம்மா அம்மா பாடலை எஸ்பி பி பாடியதோடு பெண் குரலில் சுனந்தாவும் சுஜாதாவுக்கு பாடியுள்ளார்.

ரஹ்மானின் இசையில் வித்தியாசமாய் கிழக்குச் சீமையிலேவில் எதுக்கு பொண்டாட்டி பாடல் பாடினாலும், காதலனில் வரும் இந்திரையோ இவள் சுந்தரியோ பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.

பெரும்புள்ளி படத்தில் வரும் மனசும் மனசும் சேர்ந்தாச்சு பாடல் ரேடியோவில் வந்தால் காலை மணி 9 ஆனது போல் நினைத்து ஸ்கூலுக்கு கேட்டுக்கொண்டே ஓடியிருக்கேன்.

பல குரலில் பாடகிகள் வரும் போது இதுபோன்ற பல பாடகிகள் கால வெள்ளத்தில் போய்விட்டாலும் இவர்கள் விட்டுச்சென்ற பாடல்கள் என்றும் அழிவில்லாதது.இதுபோன்ற பாடல்கள் இவர்களின் திறமைகளை குரல் வளத்தை நினைக்காமல் விட்டுவைப்பதில்லை.மீண்டும் ஸ்வரம் தா என சுனந்தாவின் குரல் கேட்க காத்திருக்கிறோம்

-மணிகண்டபிரபு

Wednesday 2 November 2022

அண்ணா


என்னுடைய பேச்சு, பக்கோடா பொட்டலத்தைப் போன்றது. பொட்டலத்தின் நூலைப் பிரித்தவுடன் உடனே பக்கோடாவைத் தின்று விடலாம்.அப்படித்தான் சாதாரணமானவர்களுக்கு என் பேச்சின் பலன் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்

-அண்ணா

தங்கம் மூர்த்தி


வாசலில் நாய்கள் வாலாட்டின
உள்ளே
குரைக்கும் சத்தம்

-தங்கம் மூர்த்தி

Tuesday 1 November 2022

சொக்கன்


நாம் சரியாகவும் பிறர் தவறாகவும் இருக்கிற நேரத்தில் அறச்சீற்றம் கொள்வது உடனடி மகிழ்ச்சியைத் தருகிறது, நான் பெரியவன் என்னும் ஈகோவுக்குத் தீனி போடுகிறது

அதே நேரத்தில் பொறுமை காப்பதும் பரிவைக் காண்பிப்பதும் பண்பையும் தொலைநோக்கில் பல கூடுதல் நன்மைகளையும் தருகின்றன. ஆனால் இது நமக்கு உடனடியாகப் புரிவதில்லை. பின்னர் புரிந்து பயன் இல்லை.

-என்.சொக்கன்