Saturday, 11 July 2026

38


#Reading_Marathon2026
#26RM009
Book No:38/150+
Pages:-653

குழந்தைகள் பெண்கள் ஆண்கள் 
சுந்தர ராமசாமி 

தமிழ் இலக்கியத்தில் குடும்பம், சமூகம், மனித உறவுகள் மற்றும் கால மாற்றங்களை ஆழமான உளவியல் பார்வையுடன் பதிவு செய்யும் முக்கியமான படைப்பாகக் கருதப்படுகிறது. இதில் குழந்தைகளின் உலகம், பெண்களின் அனுபவங்கள், ஆண்களின் அதிகார மனப்பான்மை மற்றும் அவற்றுக்கிடையேயான உறவுகளின் சிக்கல்கள் மிக இயல்பாக சித்தரிக்கப்படுகின்றன.

இந்த நாவல் ஒரு தனிப்பட்ட கதையை மட்டும் சொல்லுவதில்லை. மாறாக, ஒரு குடும்பத்தையும் அதன் வழியாக ஒரு சமூகத்தையும் வாசகன் முன் நிறுத்துகிறது. வயது, பாலினம், அதிகாரம், அன்பு, பொறுப்பு, ஆசை, ஏமாற்றம் போன்ற மனித வாழ்க்கையின் பல அடுக்குகள் இதில் வெளிப்படுகின்றன.

தாத்தாவின் கடனை அடைக்க கோட்டயம் செல்லும்.அப்பா எஸ்.ஆர் எஸ்க்கு அங்கேயே ஏஜென்சி தொழில் அமைகிறது.எஸ்.ஆர்.எஸ் லட்சுமி தம்பதியினரின் குழந்தைகள் மூத்தவள் ரமணி மற்றும் பாலு.கோட்டயத்தில் வசிக்கின்றனர். லட்சுமியின் தங்கை வள்ளி கல்வி பயில அங்கு வருகிறாள்.லட்சுமிக்கு ஆஸ்துமா நோய் இருப்பதால் அவர்களுக்கு உதவ இளம்விதவையான ஆனந்தம் அந்த வீட்டில் இருக்கிறாள்.

இதே குடும்பத்தில்  சாமு சீதையின் குழந்தைகளான லச்சம்,கோமு, பிஷாரடியின் குழந்தைகளான ஸ்ரீதரன்,அப்புக்குட்டன், சுகன் யா ஆகியோர் உள்ளனர். இதில் ஸ்ரீதரன் லண்டனில் ஐ.சி எஸ் படிக்க சென்று நாத்திகனாய் புரட்சிக்காரனாய் வருகிறான்.வள்ளியை திருமணம் செய்து வைக்கும் ஆசை நிராசையாகிறது. இவளின் தங்கை சுகன் யா தந்தைக்கும் த்மையனுக்கும்.உறவுப்பாலமாய் இருக்கிறாள்.

சேது அய்யரின் குடும்பத்தில் உள்ள வள்ளியுடன் ரமணிக்கு நல்ல தோழமை அமைகிறது.எஸ் ஆர் எஸ்ஸின் தங்கை பங்கஜாவின் வருகை சாதாரணமாய் குடும்பங்களில் நடக்கும் உரையாடல் போல் இருக்கிறது.

இந்த குடும்பங்களின் குழ்ந்தைகள், பெண்கள் பெரியவர்களுக்கு இடையேயான உரையாடலே நாவலாய் விரிகிறது.நாவல் ஒவ்வொரு அத்தியாத்திலும் உரையாடல் வழியே சென்று கொண்டே இருக்கிறது. இடம் வீடு குறித்த மையச்சரடு அவ்வப்போது வந்துகொண்டே இருக்கிறது.

#குழந்தைகளின் உலகம்

பகல் தூக்கத்திலிருக்கும்
தந்தைக்கு பயந்த மகன்பாலுவின் பார்வையில் குழந்தைகள் உலகம் விரிகிறது. எல்லாம் ஒழுங்காக இருக்க வேண்டும்.பகல்.தூக்கத்தில்.பாலுவின் மன் உலகத்தில் வாழை தோப்பு விவரிக்கப்படுகிறது.ரமணியின் பார்வையில் படகுப் பயணம், பாடல் என கதை செல்கிறது. இவர்களின் உலகில்.குரியன் ஜானகி ஆகியோர் கதாபாத்திரங்களும் பேசப்படுகிறது.
ரமணி,பாலு, லச்சம்,வள்ளி ஆகியோரன் விளையாட்டுகள் அணுகுமுறைகள் படிக்கும் நம்மையும் குழந்தைகளின் உலகத்திற்கே கொண்டு செல்கிறது

இயல்பாய் நடக்கும் அன்றாட குழந்தைகள் உலகமான டீச்சர் விளையாட்டு, பாட்டுப் போட்டி, கடுதாசி போடுவது, சைக்கிள் ஓட்டுவது என உரையாடலின் வழியே அமைகிறது. குழந்தைகளின் உலகத்தில் பெற்றோர்கள் இருப்பதை சூழலும் அனுபவமும் உணர்த்துகிறது.

பாலு தன் ஆசிரியை எலிசபெத்தை வீட்டுக்கு அழைத்து வருவது, அப்பாவுடன் பாலு முரண்படும் இடங்கள் என பாலுவின் கதாபாத்திரம் நன்கு வடிமைத்திருப்பார் சு.ரா.
லச்சத்தின் இறப்பு நம்மை மனம் கனக்க வைக்கிறது.

மொட்டை பாலு என பட்டப்பெயர் குறித்து சொல்லபோது..ஒழுங்கா கூப்பிட்டா அன்பைக் காட்ட முடியுமா? இஷ்டத்தை பொறுத்துதான் எல்லாமே என்கிறாள் வள்ளி. எத்தனை நிதர்சன வார்த்தைகள்.வீட்டை விட்டு ஓடிப்போயிடலாமா என கேட்கையில் பசிக்குமா என்கிறாள்.பாலு அதற்கு தோசை காய்க்கிற மரம் இருக்காதா? என வெள்ளந்தியாக கேட்கிறான். பாலு தனது எலிசபெத் டீச்சரை வாஞ்சையோடு வீட்டுக்கு அழைத்து வந்து எல்லா பொருட்களையும் காட்டுகிறான்.

#பெண்கள்

லட்சுமிக்கு ஆஸ்துமா இருந்தாலும் கணவனின் சுயமுரண்களை அறியும் ஆளுமை மிக்கவள்.

மனைவி லட்சுமியின் சுபாவத்தை தனது அழகிய உவமையில் சு.ரா விளக்குகிறார்

/அவளுடனான அவருடைய பேச்சு
நாலு முழம் கயிற்றில் கட்டப்பட்டிருக்கும் கன்றின் சுதந்திரம் போல் தான்.கன்று தும்பை அறுத்துக் கொள்ளும்போது அது எந்த திசை நோக்கிப் பாயும்?அது இலக்கணமற்ற சுதந்திரம்/ என்கிறார்.

நாவலில் வரும் இளம் விதவையான ஆனந்ததத்தை மணக்க விரும்பும் செல்லாப்பாவை பாராட்டுக்கின்றனர் எஸ்.ஆர் எஸ். தன் கணவன் சிறைக்கு சென்றாலும் தனி ஆளாக மன உறுதியுடன் இருக்கிறார் எலிசபெத் டீச்சர்.

ஏன் அழறேனு பாலு கேட்கும் போது ஆனந்தம் சொல்கிறாள்

அப்படி அழுதாத்தான் கொஞ்சமாவது நிம்மதியா இருக்க முடியும் என சொல்லி பெண்களின் அக உலகை விவரிக்கிறார்.

1939 களில் முற்போக்கு சிந்தனையாக வள்ளி மேற்படிப்பு படிக்க வள்ளி வருவது நல்ல முன்னேற்றத்தின் அறிகுறி.

#ஆண்கள்

எஸ்.ஆர்.எஸ் உடன் விவாதிக்க வரும் கோவிந்தன் குட்டி, கருநாகப்புள்ளி ஆகியோரின் உரையாடல் தத்துவமயமானது.

இந்திய சமுதாயத்தில் புரட்சி என்பது
 சாத்தியமல்ல.சீர்திருத்தங்கள் வழியாக சிறுகசிறுகத்தான் சமூகம் மாறும். ஒரு சீர்திருத்தத்தை புகுத்தும் வரையிலம் சமூகம் வெடித்திவிடும் என்றநிலை ஏற்பட்டால் தான் அந்த சீர்திருத்தம் அமலாகும் என்கிறார். இந்திய மனம் ஒரு நம்பிக்கையிலிருந்து இன்னொரு நம்பிக்கைக்கு தாவுமே தவிர கேள்வி கேட்கும் பகுத்தறிவை பார்க்காது என்கிறார்.

மேலும்.எதிர்காலம் என்பது இருட்டாகத்தான் இருக்கிறது. நம் அறிவில் சில வெளிச்சங்கள் தெரிந்தும் இருளின் திரை எல்லையற்றதாக விரிந்து கொண்டு இருக்கிறது என்கிறார்

எஸ்.ஆர்.எஸ் ஏஜென்சி தொழிலில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தால் கோட்டயத்தைவிட்டு வெளியேறுகிறார்.இனி கோட்டத்தை இருளை எப்படி பார்ப்பேன் என மனம் உடைகிறார்.ஊருக்கு திரும்புவதுடன் நாவல் நிறைவுறுகிறது.

வீடு பற்றிய செய்திகள் அடிக்கடி வருகிறது.பிரதான கதாபாத்திரமான எஸ்.ஆர் எஸ் கண்டிபான தந்தையாக வருகிறார்.

 /சிறிய விஷயங்களைப் பெரிதாகக் காட்டும் கண் அவருக்கு. அலங் கோலத்தைச் சிறிய அளவில் நுழையவிட்டால் அது பூதாகரமாகிப் பெருகி தன்னையே விழுங்கிவிடும் என்ற பயம். சுற்றிவரப் பார்த்து சதா கொதித்துக்கொண்டிருப்பது அவருடைய இயற்கையாகிவிட்டது. லட்சுமிக்கோ சகஜமாகவும் கலகலப்பாகவும் இருக்கவேண்டும் என்று ஆசை.ஒவ்வொருவருக்கும் உள்ளங்கை நீரைக் கசியாமல் வைத்துக்கொள்ளக் கட்டாயப்படுத்தப் படுவது போல் ஆகிவிடுகிறது. எவ்வளவுதான் முயன்றாலும் அதையும் மீறி விரல் இடுக்கில் ஈரம் கசிகிறது./
கோபமும் ஈரமும் எல்லைமீறி வழிவதாக குறிப்பிடுகிறார்.

/நினைவுகள் வயதான பின்பும் மழுங்காமல் கூராக இருக்கின்றன. நின்று நிலைக்க எவ்வளவு மழுங்கல் தேவைப்படுகிறது/

/எப்படிச் செயல்பட வேண்டும் என்பது பல சந்தர்ப்பங்களில் மனிதனுக்குத் தெரிவதில்லை. என்ன செய்ய வேண்டும் என்று அவனுக்குத் தெரிய வருகிறபோதும் பல சந்தர்ப்பங்களில் அவனால் அவற்றை அமுல்படுத்த முடியாமல் போய்விடுகிறது. ஒரு உலோகம் உருகித் திரவ வடிவம் கொண்டிருக்கும்போது அதற்கு நாம் விரும்பும் வடிவம் தர முடியும். அது உருவம் பெற்று இறுகியபின் அதை மாற்ற முடியுமா?./

/எல்லாவற்றுக்கும் நம்மிடம் விடைகள் இருப்பதன் தீர்மானம் கற்பனையானது/

ஒவ்வொரு பாத்திரங்களும் முரண்பா
 முரண்பாடுகளுடனும் குறைகளுடனும் காட்டப்படுகிறார்கள்.
எளிய ஆழமான மொழிநடை பலம்.
மனித மன்ங்களின் அசைவுகளை துல்லியமாக காட்டுகிறது.

"குழந்தைகளின் பார்வையில் உலகம் புதிது; பெண்களின் பார்வையில் உலகம் பொறுப்பு; ஆண்களின் பார்வையில் உலகம் அதிகாரம். இந்த மூன்றின் சந்திப்பே மனித வாழ்க்கை."
என்பதை உணர்த்துகிறது.

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்டபிரபு

Friday, 10 July 2026

ஷோபனா


ஒருவரின் reputation என்பதே முக்கியம். அதை உருவாக்கிவிட்டால் போதும். பிறகு அவரை நம்பியவர்கள் அவர் எத்தனை குற்றம் இழைத்தாலுமே தங்களின் அபிமானமோ சார்போ தவறு என்பதை ஏற்க மாட்டார்கள். தாங்கள் தவறு என்பதை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். எனவே அவர்களே அந்த ஒருவரின் பிம்பத்திற்காக , இமேஜிற்காக இறங்கிப்போராடுவார்கள். இங்கு சரி தவறு என்பதை விட அவரவர் அபிமானமும் சார்புமே ஒரு விஷயத்திற்கான சரி அல்லது தவறு என்னும் முடிவு நோக்கு அவர்களை நகர்த்துகிறது. ரெபுடேஷனை காப்பாற்றிக்கொண்டால் போதும். 

-ஷோபனா

மெளனம்.சம்மதமா


மெளனம் சம்மதமா
-ஷங்கர் பாபு

பேசாக்காரர்களைக் கண்டறிவது எப்படி? பார்க்க சாதுக்கள் போலத்தான் காணப்படுவார்கள். ஆனால், இப்படிப் பேசி ஆதங்கப்படுவார்கள்:

"தோணுச்சு..சரி.. போனாப் போகுதுன்னு விட்டுட்டேன்."

"வாய் வரைக்கும் வந்துச்சு, சரி, பொழைச்சுப்போன்னு விட்டுட்டேன்."

"எனக்குக் கேக்கத் தெரியாம இல்ல."

"அன்னைக்கே நாங்ககூட புழுங்கற மாதிரி கேட்டிருக்கணும், விட்டுட்டேன்."

"நுனிநாக்கு வரை வந்துச்சே!"

இவர்கள்தான் அந்தப் பேசாக்காரர்கள். அதாவது, நம்மில் 99% பேர்! இவர்கள், பேசுவதைப் பார்த்தால் குணக்குன்றுகள் போலத்தான் தோன்றும். ஆனால், சொல்லவில்லை, அதனால் நினைத்தபடி காட்சிகள் நடக்கவில்லை. நியாயம்தானே என்று பெருந்தன்மையாக இருப்பார்களா, என்ன!

அப்படிச் சொல்லி இருக்கலாமோ, இப்படிச் சொல்லி இருக்கலாமோ என்றெல்லாம் பரிதவிக்கத்தான் செய்வார்கள். ஆனால், சொல்ல நினைத்தபடி காட்சிகள் நடப்பதைத் தானே உள்ளுக்குள் விரும்புகிறோம். இது பேராசை இல்லையா?

சொல்லியிருக்க வேண்டிய விநாடி கடந்துவிட்டது. எனவே, அதைப்பொறுட்டி நடக்கும் சம்பவங்கள் உங்களுக்குச் சாதகமாக இல்லாதபட்சத்தில் இப்படித் தோன்றித்தான் செய்யும். "எனக்கு மட்டும் ஏன்?"

நுனிநாக்குவரை வந்துச்சே. ஏன் சொல்லவில்லை? உங்களின் 25,000 ஆவது வயதில்கூட அல்லது கலியுகம் முடியும் வரையும்கூட இந்த ஆதங்கம் தொடரும்!

பலரும் சொல்லாத வார்த்தைகளோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். கடந்த காலக் காட்சியை மனதில் மீண்டும் மீண்டும் ஓட்டி, கற்பனையில் சொல்ல நினைத்ததைச் சொல்லி காலம்கடத்துகிறார்கள். ஒருகட்டத்தில் சொல்லாததைப் புரிந்துகொண்டு நடக்கவும், அடுத்தவரைக் குற்றஞ்சொல்லவும் தலைப்படுகிறோம். மனுஷனா இவங்களாம்?

உச்சக்கட்டப் பேராசை ஒன்றும் இருக்கிறது.

"அவரே புரிஞ்சுக்குவார்னு நினைச்சேன்."

அதாவது, மனதுக்குள்ளேயே நினைப்பீர்கள், அதைக் கேட்பவர் புரிந்துகொள்ள வேண்டும்; சொல்லாமல் சொல்வார்கள், மனதுக்குள் கதறுவார்கள், கண்களால் சொல்வார்கள், கேட்பவருக்கு வேறு வேலை இல்லை பாருங்கள், நீங்கள் சொல்லாததையும் புரிந்துகொண்டு எதிர்வினையாற்ற! அதுவும் உங்கள் விருப்பப்படி!

நாம் எவ்வளவு பெரிய மொழி வளத்தைக் கொண்டிருக்கிறோம்! பேசுபவர்களைச் சிலாகிக்கிறோம். நாமும் மக்களுடன், நிறுவனப் பேச்சுகள், நேரில் என்று வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பேசுகிறோம். ஆனால், சொல்ல வேண்டிய நேரத்தில், ஏனோ பேச்சுற்று நிற்கிறோம். நாம் மட்டும்தான் இப்படி என்று கவலைகொள்ள வேண்டாம். 12ஆம் நூற்றாண்டிலேயே பேசத் தெரியாத, 'ப்ரோ'க்களை நன்னூல்' என்னும் தன் இலக்கண நூலில் ஆராய்ந்திருக்கிறார் பவணந்தி முனிவர்.

அதாவது, "மட்டன் பிரியாணி உள்ளதா?" என்றால், "இல்லை" என்று சொல்லாமல், "பாகற்காய் பிரியாணி உள்ளது" என்றோ, "தயிர் சாதம் உள்ளது" என்றோதான் பதில் சொல்லி கடைக்காரர் டென்ஷன் படுத்துவார்.

கொஞ்சம் மார்க்கெட்டிங் உத்தி இதன் பின்னால் இருப்பதாக வைத்துக்கொண்டாலும், இல்லாத ஒன்றை இல்லை என்றே கூறாமலே, ஏன் சுற்றி வளைத்து இல்லை என்று கூற வேண்டும்? நேரடியாகப் பதில் சொல்வதில் என்ன பிரச்சினை?

நன்னூல் 8 வகைக் கேள்விகளில் மனிதன் 3க்கு மட்டும்தான் நேரடியான பதிலைச் சொல்வான் என்கிறது. அதாவது, 37.5% தான் நேரடியாகப் பதில் சொல்வான்; மீதி 62.5%, "பரோட்டா சாப்பிடுவாயா?" என்றால் "நான் விரதம்னு சொன்னேனா?" என்று குண்டக்க மண்டக்கத்தான் பதில் சொல்வான் என்கிறது.

நாகர்கோவில் நண்பன் ஒருவனிடம், "சாப்பிட்டாச்சா?" என்றாள், அவன், "மணி 2 ஆகுதுல்லா?" என்பான். அதாவது, மத்தியானம் 2 ஆகிறதாம். இன்னமுமா சாப்பிடாமல் இருப்பான் என்று நாமாகவே புரிந்துகொள்ள வேண்டுமாம். அடேய்!

இப்படியெல்லாம் சுற்றி வளைத்துப் பேசும் இயல்புடைய மனிதனுக்கு, பேச வேண்டியதைப் பேசும் நேரத்தில் தொண்டைக்குள்ளேயே வார்த்தைகள் சிக்கி நின்றுவிடுவது நகை முரண் ஒன்று. பேசிக்கொண்டே இருக்கிறோம் அல்லது பேசவே இல்லை அல்லது தேவையான நேரத்தில், தேவையான நேரத்தில் பேசுவதே இல்லை அல்லது சுற்றி வளைத்துப் பேசுகிறோம். அதில் திறமை காட்டுகிறோம்!

பாஸ், இப்போது உலகம் நாளொரு 'ஏஐ', பொழுதொரு 'ஆப்' என்றாகிவிட்டது. நீங்கள் சுற்றிவளைத்துப் பேசுவதையும், சொல்லில் விளையாடுவதையும் புரிந்துகொள்ள யாருக்கும், இப்போதெல்லாம் நேரமில்லை. தெளிவாகச் சொன்னாலே அவரவர் இஷ்டத்துக்குப் புரிந்து கொள்ளும் உலகம் இது. நீங்கள் என்னைச் சொல்ல வருகிறீர்கள் என்பது உங்களுக்கே சில நேரம் சரியாகத் தெரியாதபோது, அடுத்தவரிடம் ஏன் அந்தப் பொறுப்பைக் கொடுக்க வேண்டும்?

சொல்லி வாய்ப்புகளை இழந்தவர்களைவிட, சொல்லாமல், தயக்கத்தால், வாய்ப்புகளை இழந்தவர்கள் கோடி. அதையே நினைத்து இன்றுவரை ஆதங்கப்படுபவர் கோடானுகோடி.

தீர்வு:
நினைத்ததை வெளிப்படுத்தாமல் அந்தச் செயல் பூர்த்தியடையாது. உங்களுக்காகவும், உங்களைச் சேர்ந்தவர்களுக்காகவும் நீங்கள்தான் பேசியாக வேண்டும். ஒருவேளை, நேரடியாகச் சொல்லி, அதனால் கேட்பவர் மனம் புண்படும் என்றால், அப்படிப் பயந்து வாழும் அளவு, அந்த உறவின் தேவைதான் என்ன?

நீங்கள் சொல்லி, அது எதிர்பார்த்த மாதிரி நடக்காவிட்டாலும், சொல்லிவிட்டோம் என்பதே நிம்மதியைத் தந்து, பிற்கால டென்ஷன் மாத்திரைகளைக் குறைக்கும். நேரடியான பதில்களும் வெளிப்படையான மனமும் விரும்பப்படும் காலம் இது. வெளிப்படுத்துங்கள், அடுத்தவர் வெளிப்படுத்தினால் அதையும் மதியுங்கள்.

சொல்லாமலே தெரிய வேண்டியது, சொல்லிய பின் தெரியப்போகிறது; மௌனம் சம்மதம் என்பது போன்ற வசனங்கள் எல்லாம் அந்தந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொள்ள கண்டறியப்பட்ட சாதூர்ய வார்த்தைகள். மௌனம் சம்மதம் அல்ல, சம்மதம் என்றால் மட்டுமே சம்மதம்!

நன்றி தி இந்து

Thursday, 9 July 2026

படித்தது


வாழ்க்கை நமக்குக் கற்றுத்தரும் பாடங்கள்

ஏமாற்றுவது ஒரு கௌரவமாகக் கருதப்படும் ஒரு விளையாட்டில், ஒருபோதும் நேர்மையாக விளையாடாதீர்கள்.

விலங்கு உலகில், சிங்கத்திற்கும் கழுதைப்புலிகளுக்கும் (hyenas) இடையிலான அந்தத் தொடர் போராட்டம் போல, வாழ்க்கையின் எதார்த்தத்தை மிகத் தெளிவாக உணர்த்தும் மோதல்கள் மிகக் குறைவு.

சிங்கம் என்பது வலிமை, துணிச்சல் மற்றும் கம்பீரத்தின் அடையாளம். கழுதைப்புலிகள் என்பவை தந்திரம், எண்ணிக்கை பலம் மற்றும் சந்தர்ப்பவாதத்தை மட்டுமே நம்பியிருப்பவை. இந்த இரு சக்திகளும் மோதும்போது, ​​அது ஒருபோதும் சமமான போட்டியாக இருப்பதில்லை.

சிங்கம் கூட்டமாகச் சென்று வேட்டையாடுவதில்லை. அது மற்றொன்று கொன்ற இரையைத் திருடுவதில்லை. அது தனது உணவை வீரத்துடனும் வலிமையுடனும் போராடிப் பெறுகிறது.

ஆனால் கழுதைப்புலி?
அது சிங்கத்தைச் சோர்வடையச் செய்கிறது.
கவனத்தைத் திசைதிருப்புகிறது.
மறைந்திருந்து தாக்குகிறது.
பின்புறமிருந்து தாக்குகிறது.

சிங்கம் காயமடையும்போது, ​​அந்தக் கூட்டமே அங்கு வருகிறது; சவாலை எதிர்கொள்ள அல்ல, அந்த இரையைப் பறித்துக்கொள்ளும் வெற்றியை அனுபவிக்கவே அவை வருகின்றன.

கழுதைப்புலி விதிகளை மதிப்பதில்லை; ஏனெனில் அதன் உலகில் ஏமாற்றுவது கொண்டாடப்படுகிறது. வேட்டையாடப்பட்ட இரையைத் திருடுவது அவமானமாகக் கருதப்படுவதில்லை, மாறாக அது பாராட்டப்படுகிறது. கூட்டமாகச் சேர்ந்து காட்டும் கோழைத்தனம் 'தந்திரம்' என்று அழைக்கப்படுகிறது. துரோகம் என்பது பிழைத்திருப்பதற்கான வழியாகக் கருதப்படுகிறது.

கழுதைப்புலிகளின் கலாச்சாரத்திலும் உலகிலும், ஏமாற்றுவது ஒரு கௌரவமாகக் கருதப்படுகிறது.

இது நமக்கு என்ன கற்றுத்தருகிறது?

வாழ்க்கை எப்போதும் நியாயமான ஒரு விளையாட்டு மைதானம் அல்ல. நேர்மை கேலி செய்யப்படும், நாணயம் தண்டிக்கப்படும், மற்றும் வஞ்சகம் வெகுமதி பெறும் சூழல்கள் வாழ்க்கையில் உண்டு.

அத்தகைய சூழலில் நீங்கள் நேர்மையாக விளையாடத் தேர்ந்தெடுத்தால், நீங்கள் தோற்கலாம், அல்லது உயிரோடு விழுங்கப்படலாம், அல்லது பின்வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படலாம்.

சிங்கம் நமக்குச் சில கடுமையான உண்மைகளைக் கற்றுத்தருகிறது:

1. உங்கள் சூழலை அறிந்துகொள்ளுங்கள்
சிங்கம் கண்மூடித்தனமாக ஒரு பொறிக்குள் நுழைவதில்லை. அது நிலப்பரப்பு, காற்று மற்றும் தன்னைச் சுற்றியுள்ள ஆபத்து ஆகியவற்றை நன்கு ஆராய்கிறது.
வாழ்க்கையில், நீங்கள் எந்த வகையான விளையாட்டில் இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே ஞானம் தொடங்குகிறது.

2. வலிமை மட்டும் போதாது
சிங்கம் வலிமையானதாக இருக்கலாம், ஆனால் அதுவும் தந்திரோபாயத்துடன் போராட வேண்டும். தந்திரோபாயம் இல்லாத வலிமை வீணான வலிமையே.

3. அவர்களின் பாணியில் ஒருபோதும் போராடாதீர்கள்
சிங்கம் ஒருபோதும் கழுதைப்புலியாக மாறுவதில்லை. அது சூழலுக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொள்ளலாம், ஆனால் ஒருபோதும் தனது இயல்பைக் குறைத்துக்கொள்வதில்லை. நீங்கள் வெறுக்கும் ஒருவராக மாறாமலேயே தந்திரோபாயத்துடன் செயல்பட முடியும்.

4. உங்கள் வெற்றியைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்
வேட்டையாடி முடித்த பிறகுதான் உண்மையான போராட்டம் தொடங்குகிறது என்பதை சிங்கம் அறியும். உங்கள் வெற்றியைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள், ஏனெனில் சந்தர்ப்பவாதிகள் எப்போதும் அதைக் கவனித்துக்கொண்டே இருப்பார்கள்.

5. உங்கள் போர்களைத் தேர்ந்தெடுங்கள்
சில நேரங்களில், அங்கிருந்து விலகிச் சென்று, உண்மையிலேயே முக்கியமான ஒரு போருக்காக உங்கள் வலிமையைச் சேமித்து வைப்பதே புத்திசாலித்தனமான செயலாகும். கழுதைப்புலிகள் நிறைந்த உலகில், மௌனம் ஒரு உத்தியாக அமையலாம்.

மரியாதை என்பது சம்பாதிக்கப்பட வேண்டியது, கோரப்பட வேண்டியது அல்ல.

துரோகத்தால் பயனடைபவர்களின் துரோகத்தைக் கண்டு ஆச்சரியப்படாதீர்கள்.

ஒரு சிங்கம் இரத்தம் சிந்தலாம், ஆனால் அது அங்கீகாரத்திற்காக யாசிக்காது.

ஒற்றுமையின் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள், ஆனால் அது சரியான பெருமையுடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

சிங்கம் எப்போதும் காட்டின் ராஜாவாக இருக்கும், ஆனால் ராஜாக்களும் புத்திசாலிகளாக இருக்க வேண்டும்.

ஏமாற்றுதல் கொண்டாடப்படும்போது, ​​நேர்மை ஒரு பலவீனமாகிறது.

வாழ்க்கை நேர்மைக்கு வெகுமதி அளிப்பதில்லை. அது உயிர்வாழ்தல், உத்தி மற்றும் ஞானத்துடன் கூடிய வலிமைக்கு வெகுமதி அளிக்கிறது.

புரிந்தால் வாழ்க்கை உங்களுடையது.. வாழ்த்துக்கள்.

-படித்தது

இந்த மனதோடுதான்வாழ வேண்டி இருக்கிறது.இந்த மனதுதான் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.~ ராஜா சந்திரசேகர் ~

Wednesday, 8 July 2026

படித்தது


ஒரு ஜப்பானிய துறவி சொன்னார்... இதை படித்தால் உங்கள் வாழ்க்கை இன்றிலிருந்தே மாறும்

உலகில் பலர் வெற்றியை தேடுகிறார்கள். சந்தோஷத்தை தேடுகிறார்கள். அமைதியை தேடுகிறார்கள். ஆனால் தேடும் இடத்தில் கிடைப்பதில்லை. ஏனென்றால் தேடும் திசை தவறாக இருக்கிறது. 

நூற்றாண்டுகளாக ஞானிகள் சொல்லிவந்த இந்த 5 உண்மைகளை இன்று நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பாருங்கள்.

1. கவலை என்பது நம் கட்டுப்பாட்டில் இல்லாதவற்றை கட்டுப்படுத்த நினைப்பதால் வருகிறது

இன்று உங்களுக்கு என்ன கவலை இருக்கிறது?
நாளை என்ன ஆகுமோ என்ற கவலையா? மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற கவலையா? வேலை இருக்குமா என்ற கவலையா? பிள்ளைகள் சரியாக வளருவார்களா என்ற கவலையா?
இந்த கவலைகளில் எத்தனை உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்றன என்று யோசியுங்கள்.

நாளை என்ன ஆகும் என்பது நம் கட்டுப்பாட்டில் இல்லை. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது நம் கட்டுப்பாட்டில் இல்லை. இயற்கை என்ன செய்யும் என்பது நம் கட்டுப்பாட்டில் இல்லை. இருந்தும் நாம் இந்த விஷயங்களுக்காக இரவும் பகலும் கவலைப்படுகிறோம். தூக்கம் இல்லாமல் படுக்கையில் புரண்டு புரண்டு கிடக்கிறோம்.
ஒரு எளிய உண்மை இருக்கிறது. நம் கட்டுப்பாட்டில் இருப்பதை மட்டும் கவனிக்கலாம். கட்டுப்பாட்டில் இல்லாதவற்றை விட்டுவிடலாம். இந்த ஒரு பழக்கம் மட்டும் போதும். கவலை பாதியாகும். வாழ்க்கை இலகுவாகும்.

2. மௌனம் என்பது வெறுமை அல்ல. அது ஆழமான சிந்தனை தொடங்கும் இடம்
நாம் எப்போதும் சத்தத்தில் வாழுகிறோம்.

காலையில் எழுந்தவுடன் தொலைபேசி. வேலையில் கூட்டங்கள். வீட்டில் தொலைக்காட்சி. படுக்கையிலும் காதில் ஒலிகள். மௌனம் என்பது நமக்கு பயமாக இருக்கிறது. ஏனென்றால் மௌனத்தில் நம் மனசு நம்மோடு பேசத் தொடங்குகிறது. அந்த பேச்சை கேட்க நாம் தயாராக இல்லை.

ஆனால் உண்மையான ஞானம் சத்தத்தில் பிறப்பதில்லை. மௌனத்தில் பிறக்கிறது. உலகின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகள் எல்லாம் மௌனத்தில் நடந்தவை. மிகப்பெரிய முடிவுகள் எல்லாம் மௌனத்தில் எடுக்கப்பட்டவை. மிகப்பெரிய புரிதல்கள் எல்லாம் மௌனத்தில் வந்தவை.

இன்று ஒரே ஒரு காரியம் செய்யுங்கள். பத்து நிமிடம் எந்த சத்தமும் இல்லாமல் அமருங்கள். தொலைபேசி வேண்டாம். தொலைக்காட்சி வேண்டாம். வெறும் மௌனம். அந்த பத்து நிமிடம் உங்களுக்கு என்ன சொல்கிறது என்று கவனியுங்கள். வாழ்க்கையின் மிகவும் முக்கியமான பதில்கள் அங்கே இருக்கின்றன.

3. ஒழுக்கம் முதலில் கஷ்டமாக இருக்கும். ஆனால் வருத்தம் இன்னும் நீண்ட காலம் இருக்கும்
இரண்டு வலிகளில் ஒன்றை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஒழுக்கத்தின் வலி. அல்லது வருத்தத்தின் வலி.

ஒழுக்கத்தின் வலி தற்காலிகமானது. காலை நான்கு மணிக்கு எழுவது கஷ்டமாக இருக்கும். உடற்பயிற்சி செய்வது கஷ்டமாக இருக்கும். படிப்பதற்காக நேரம் ஒதுக்குவது கஷ்டமாக இருக்கும். ஆனால் இந்த கஷ்டங்கள் காலப்போக்கில் பழக்கமாகும். பழக்கம் வாழ்க்கையாகும்.
வருத்தத்தின் வலி நிரந்தரமானது. படிக்காமல் போனதற்கான வருத்தம். உடல் நலனை கவனிக்காமல் போனதற்கான வருத்தம். நேரத்தை வீணாக்கியதற்கான வருத்தம். உறவுகளை கவனிக்காமல் போனதற்கான வருத்தம். இந்த வருத்தங்கள் வாழ்க்கையின் இறுதி வரை துரத்தும்.

இன்றே தேர்ந்தெடுங்கள். ஒழுக்கத்தின் சின்னச்சின்ன கஷ்டங்களை. வருத்தத்தின் பெரிய வலியை தவிர்க்க.

4. குறைவாக விரும்புவது அதிகமாக சம்பாதிப்பதை விட அதிகமான இடத்தை தருகிறது
இந்த உலகம் நமக்கு ஒரு பொய்யை சொல்லிக்கொண்டே இருக்கிறது.
அதிகமாக சம்பாதியுங்கள். அதிகமாக வாங்குங்கள். அதிகமாக இருங்கள். அப்போது மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று.

ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது? அதிகமாக சம்பாதிக்க அதிகமாக உழைக்கிறோம். அதிகமாக உழைக்க அதிகமாக அழுத்தம் வருகிறது. அதிகமாக வாங்க அதிகமாக கடன் வருகிறது. அதிகமாக இருக்க அதிகமாக போட்டி வருகிறது. இதன் முடிவில் என்ன இருக்கிறது? அமைதியில்லாத வாழ்க்கை.

குறைவாக விரும்பினால் என்ன நடக்கும்? தேவையற்ற ஓட்டம் நிற்கும். தேவையற்ற கடன் வராது. தேவையற்ற போட்டி தேவையில்லை. மனதில் இடம் வரும். வாழ்க்கையில் நிம்மதி வரும்.
மகிழ்ச்சி அதிகமாக சேர்ப்பதில் இல்லை. தேவையற்றதை கழிப்பதில் இருக்கிறது.

5. அமைதி தினசரி நடத்தையால் கட்டப்படுகிறது. திடீர் உணர்வுகளால் அல்ல
ஒரு கோயில் ஒரே நாளில் கட்டப்படுவதில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கல் சேர்க்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு கோயில் உருவாகிறது.

அமைதியும் அப்படித்தான். ஒரு நாள் தியானம் செய்தால் வாழ்க்கை மாறாது. ஒரு நாள் நல்லதாக இருந்தால் போதாது. ஒரு நாள் கோபப்படாமல் இருந்தால் அது பழக்கமாகாது.

தினமும் கொஞ்சம் கொஞ்சமாக. தினமும் ஒரு நல்ல பழக்கம். தினமும் ஒரு நல்ல செயல். தினமும் ஒரு அமைதியான தருணம். இந்த தினசரி சின்னச்சின்ன செயல்களே மாதங்கள் கழித்து ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கும்.

திடீரென்று ஒருநாள் தூக்கத்திலிருந்து எழுந்து வாழ்க்கை மாறியிருக்காது. மாற்றம் தினசரி நடத்தையில் இருக்கிறது. சின்னச்சின்ன தேர்வுகளில் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் எடுக்கும் முடிவுகளில் இருக்கிறது.

இந்த 5 உண்மைகளும் நமக்கு ஒரே ஒரு செய்தி சொல்கின்றன
வாழ்க்கை வெளியில் இல்லை. உள்ளில் இருக்கிறது. கட்டுப்பாட்டில் இல்லாதவற்றை விடுங்கள். மௌனத்தை நேசியுங்கள். ஒழுக்கத்தை தேர்ந்தெடுங்கள். குறைவில் மகிழுங்கள். தினமும் கட்டுங்கள்.
இந்த ஐந்து பழக்கங்கள் மட்டும் போதும். வாழ்க்கை இன்றிலிருந்தே மாற தொடங்கும்.

இந்த 5 பாடங்களில் இன்று உங்களுக்கு மிகவும் தேவையானது எது? கீழே உங்கள் எண்ணங்களை பகிருங்கள். இதை படிக்க வேண்டிய யாரோ ஒருவர் உங்கள் வாழ்க்கையில் இருக்கிறார்களா? இப்போதே அவர்களுக்கு அனுப்புங்கள். ஒரு நல்ல வார்த்தை ஒரு வாழ்க்கையை மாற்றலாம்.

படித்ததில்பிடித்தது
#motivation #thoughtschallenge #thoughtoftheday

Monday, 6 July 2026

அடிக்கடி நேர்ந்து வழக்கமாகிவிடும்போது அனுபவங்கள் தனது அற்புத தன்மையை இழந்துவிடுகின்றன-உமா மகேஸ்வரி

ஹெரால்ட் ப்ளூமின்


ஹெரால்ட் ப்ளூமின் இலக்கிய வாசிப்பின் ஐந்து முக்கிய விதிகள் பற்றிய கட்டுரையைப் படித்துக்கொண்டிருந்தேன். அவர் எந்தவொரு இலக்கிய வாசிப்பையும் ஒரு தனிப்பட்ட, படைப்பாற்றல் மிக்க, ஆழமான அனுபவம் என்றே வரையறுக்கிறார். அதற்காக அவர் எடுத்தியம்பும் ஐந்து முக்கியமான விதிகளைத் தொகுத்துப் படிக்கும் போது நமக்கு வாசிப்பின் நுண்ணிய சூத்திரங்கள் கொஞ்சம் பிடிபடுகின்றன.

1.  Clear your mind of cant: மனதை cant எனப்படும் ஒன்றுமில்லாத, புனிதமான, கோட்பாட்டுகளின் மற்றும் கல்விப்புலங்களின் சொற்களஞ்சியத்திலிருந்து அகற்றுவதை ப்ளூம் முன்வைக்கிறார்.

(ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியை இருத்தலியல், பல்கலைக்கழகம் சார்ந்த அடைப்புக்குறிக்குள் அடக்கி வாசிக்க வேண்டாம். தஸ்தயேவ்ஸ்கி நம்முடைய  வாழ்க்கையில் எப்படியாக ஒத்துப்போகிறார் என்றே வாசிக்க  வேண்டும் என்றே நான் இதைப் புரிந்து கொள்கிறேன்.)

2.  வாசிப்பில் உங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்:வாசிப்பு என்பது சமூக சீர்திருத்தக் கருவி அல்ல. அது முதலில் உங்களை மாற்ற வேண்டும். மற்றவர்களை மாற்ற நினைத்தால், அது பாசாங்காக மாறிவிடும். உண்மையான மாற்றம் உங்களிடமிருந்து தான் தொடங்குகிறது என்கிறார் ப்ளூம்.

(ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலை வாசிக்கும் போது, இந்த நாவல் ரஷ்ய சமூகத்தையே மாற்ற வேண்டும் என்றெல்லாம் சிந்தனை செய்யாமல், நாவலில் வரும் இவானின் கடவுள் மறுப்பு நம்முடைய தனிப்பட்ட உள்ளார்ந்த சந்தேகங்களை எப்படி பிரதிபலிக்கிறது போன்ற கேள்வியை எழுப்பினால், அக்கேள்வியுடனான அந்த வாசிப்புக்கு பிறக்கும் மாற்றம் இயல்பாகவே நமது வாழ்வின் சுற்றத்தைப் பாதிக்கும் என்றே இதை நான் புரிந்து கொள்கிறேன்.)

3.  உங்களுக்கு நெருக்கமானவற்றைத் தேடுங்கள்:
ஒவ்வொரு வாசகருக்கும் தனிப்பட்ட தொடர்ச்சியான இணைப்பு வாசிப்புள்ளது. அந்த இணைப்பைத் தொடர்ந்து வாசிப்பில் தேடுவதே எந்தவொரு வாசகனுக்கும் பயனளிக்கும். ஒரே இயல்பை பகிர்ந்துகொள்வதைப் போல உங்களை அணுகும் நூல்களைத் தேர்ந்தெடுங்கள் என்கிறார் ப்ளூம்.

(ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியா டால்ஸ்டாய்யா என்கிற கேள்வி உங்கள் முன் வெளிப்படும் போது நீங்கள் உங்கள் வாசிப்பின் தொடர்ச்சியான இணைப்பு வழியே அச்சமின்றி ஒருவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்றும், தேவையற்ற புத்தகங்களையும் வாசிக்காமல் நீங்கள் அச்சமின்றி அவற்றை தயக்கமின்றி கைகழுவலாம் என்றே இதையும் நான் புரிந்து கொள்கிறேன்.)

4.  படைப்பாற்றல் மிக்க வாசிப்பு:
உண்மையான வாசிப்பு என்பது சரியாகப் படிப்பது அல்ல. அது தவறாகப் படித்து, அதை உங்கள் சொந்த அனுபவத்துடன் இணைத்து, புதிய வாசிப்பனுபவத்தையும் உருவாக்குவது. இதைத்தான் ப்ளூம் படைப்பாற்றலுடன் தவறான வாசிப்பு என்றும் அழைக்கிறார்.

(படைப்பாற்றல் மிக்க தவறான வாசிப்பு என்பது வாசகரை அடிமையாக்கும் வாசிப்பு அல்ல; அவரை ஒரு படைப்பாளியாக உயர்த்தும் செயல்முறை. இது ஒரு கனவு போன்ற உரையாடல்,நீங்களும் புத்தகமும் சந்தித்து, புதிதாக ஒன்றைப் பிறப்பிக்கும் செயல் என்றே நான் இதையும் புரிந்து கொள்கிறேன்.)

5.  முரண்களை மீட்டெடுங்கள்:
இது ப்ளூமின் ஐந்தாவது மற்றும் கடைசி மற்றும் முக்கியமான பரிந்துரை. கோட்பாடுகளின் ஆழமற்ற வடிவங்கள் முரண்களை அழிக்கின்றன. அதை மீட்டெடுப்பது வாசிப்புக்கு அவசியம் என்கிறார் ப்ளூம்.

(ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலை வாசிக்கும் போது நாம் இவானை ஓர் அறிவுஜீவி, தர்க்கவாதி, கடவுள் மறுப்பாளன், மனித சுதந்திரம் மிகக் கொடூரமானது என்று கூறுகிறவன், குழந்தைகள் படும் வேதனைக்கு கடவுள் பதில் சொல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறான்.அதே இவான் தன் தந்தை கரமசோவின் கொலைக்கு மறைமுகமாகப் பொறுப்பேற்கிறான். தன் சகோதரன் திமித்ரியை காப்பாற்ற முயல்கிறான், ஆனால் தன் உள்ளுணர்வில் தந்தையின் மரணத்தை விரும்பியவனாக இருக்கிறான். இறுதியில் பைத்தியக்காரனாக மாறுகிறான், அவனது அறிவு அவனையே அழிக்கிறது என்கிற ரீதியில்  எளிய வாசிப்பு வழியே இவானை நாத்திக அறிவுஜீவி என்று முத்திரை குத்திவிடுவோம் ஆனால் இவானின் முரண்பாடுகளை மீட்டெடுத்து வாசிக்கும் எவரும் இவானின் உள்ளார்ந்த முரண்பாடுகளை,அவனது அறிவின் பலமும், அதே அறிவின் கொடூரமும், ஒரே நேரத்தில் ஒன்றாக உணர்வார்கள். இதுவே ப்ளூம் சொல்லும் முரண்களை மீட்டெடுப்பது என்றே நான் புரிந்து கொள்கிறேன்.)

ஹெரால்ட் ப்ளூம் தஸ்தயேவ்ஸ்கியை அதிகம் உணர்ச்சிவயப்படும் மற்றும் ஆன்மீக தத்துவங்களை மிகைப்படுத்தல் செய்யும் மனிதர் என்கிற விமர்சனம் ஒன்றை முன்வைப்பார். இன்று அதே தஸ்தயேவ்ஸ்கியை வைத்தே ஹெரால்ட் ப்ளூம் அளித்திருக்கும் வாசிப்பின் ஐந்து வரையறைகளை நான் புரிந்து கொள்ள முயல்கிறேன்.

சிறந்த வாசகர் என்பவர் புத்தகத்தை சரியாக வாசிப்பவர் அல்ல. அவர் புத்தகத்தை தனக்குச் சொந்தமாக தவறாகப் புரிந்துகொள்பவர் என்பார் ப்ளூம். நானும் எனக்கு ஏற்றவகையில் ப்ளூமின் கோட்பாடுகளையும் தவறாகப் புரிந்துகொள்ள முயல்கிறேன். இதன் வழியே என் வாசிப்பும் இன்னும் ஒருவேளை மேம்படலாம்.

Sunday, 5 July 2026

36


காலச்சுமை
-ராஜ் கெளதமன்

சிலுவைராஜ் சரித்திரம், லண்டனில் சிலுவைராஜ் என தனித்துவமான படைப்புகளைத் தந்த ராஜ் கெளதமனின் படைப்பு. இவரின் எழுத்துகள் எப்போதும் எளிமையானவை. சிந்தனையைத் தூண்டும் வகையில் இருக்கும்.

காலச்சுமை தலைப்பே வித்தியாசமாக இருந்தது.

"காலம் மனிதன் மீது சுமத்தும் பாரம்" என்பதைக் குறிக்கிறது. இந்த நாவல், ஒரு தனி மனிதனின் வாழ்க்கையை மட்டுமல்லாமல், பல தலைமுறைகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை அனுபவங்களையும் பதிவு செய்கிறது.

எமர்ஜென்சி காலத்தில் கிராமத்தில் படித்து முடித்து விட்டு.. வேலையின்றி இருக்கிறான் சிலுவை. திடீரென தந்தியில் பாண்டிச்சேரி கல்லூரியில் விரிவுரையாளர் பணிக்கு நேர்முக தேர்வுக்கு அழைப்பு வருகிறது. எப்போதோ விண்ணப்பித்தது.. ஆனால் தந்தி வந்ததை நினைத்து பார்க்கவில்லை. எப்படியோ எந்த ஒரு இலஞ்சமும் இன்றி பணியில் சேர்கிறான். தமிழ் விரிவிரையாளராகி காணும் காட்சிகளிலிருந்து நாவல் துவங்ககிறது.

பெற்றோர் சம்மதத்துடன் ஏர்வாடியில் பொன்னம்மாவை திருமணம் முடித்த சிலுவை..இரு பெண் குழந்தைகளை தந்தையானான்.ஆனால் காலக்கொடுமையாக இளையமகள் எதிர்பாராத விதமாக இறந்துவிட அந்த சோகம் அவனை அலைக்கழித்தது. அவனை ஆற்றுப்படுத்தியது தத்துவ நூல்களும் ,மொழிபெயர்ப்பு நூல் எழுத துவங்கியதுதான். வாசிப்பு, எழுத்து, வீடுமாற்றம், எமர்ஜென்சி  காலகட்டம் என செல்லும் நாவல் புதிதாக மாற்றலாகி சேரும் கல்லூரியில் சாதொ பிரச்சனையை எதிர்கொள்கிறான்.

அன்றாடம் கல்லூரியில் நடக்கும் சம்பவங்கள் சுவை. சிலுவைக்கு ஒரு சோதனையாக ஒருபெயர் அவிச்ச ராணி என உச்சரிக்க இருக்கும்
நிகழ்வு சுவை.எமர்ஜென்சி காலத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவர் கல்லூரியில் விரிவுரையாளர் ஆனால் நேரும் நடைமுறை இடர்பாடுகளை யதார்த்த நடையில் சொல்லியிருப்பார்.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஊர் குறித்த நினைவுகள்,மக்கள் மனநிலை, உடன் படித்த நண்பர்கள், சக ஊழியர்கள் குறித்த விவரணைகள் வருகின்றன.

கல்வி சிலுவைராஜுக்கு புதிய உலகத்தைத் திறக்கிறது. இருப்பினும், சமூகப் பாகுபாடுகள் தொடர்ந்து அவரைத் துரத்துகின்றன
நம்மில் ஒருவராக சிலுவை தெரிகிறார்.சிலுவைராஜ் சரித்திரத்தின் நீட்சியாக தெரிவாதால் சிலுவையின் குணநலன்கள் நமக்கு நன்கு அறிமுகமானவைதான்.

சிலுவை காரைக்காலிலிருந்து 
புதுச்சேரிக்கு மாறுதல் ஆகிறார்.பெரிய ஊர், புதிய இடம் அங்குள்ள ஆய்வாளர்கள் ,ஊழியர்ளகள் என அதே சாதிய பிரச்சினை.

/இயக்கங்கள் சீரழிவதற்கு காரணம் மனுசங்கதான். எல்லாம் மாறுவது மாதிரி மனுசங்களும் மாறிப்போறாங்க. இல்லநான், மாறல அப்பிடியே இருக்கேன்னு அடம்பிடிக்கிற மனுசங்க உண்டுதான்.பறவைகளை போல ஜாலியா இருக்க ஆசைதான். எல்லாரும் பறவைகளா இருந்தா இது நடக்கும்.ஒவ்வொரு மனுசனும் ஒவ்வொரு மாதிரி/ என் மனித இயல்பை பகிர்கிறார் ஒரு இடத்தில்

சிலுவையின் பரிணாமங்கள் காலத்திற்கு ஏற்றபடி தன்னை மேம்படுத்திக் கொள்கிறான். சிலுவையின் பின்பாதி சரித்திரமாக நாவல் தொடர்கிறது.

சிலுவையின் மகளை கல்யாணம் செய்தும் கொடுத்தாயிற்று. ஓய்வு காலத்தில் தான் வாழ்ந்த வாழ்வை நினைத்துப் பார்க்கிறான்.திரும்பி பார்த்தால் வாழ்வே காலத்திடம் சுமையாக உள்ளது.நாமே நம்மை பற்றி சிந்திப்பது போல உள்ளது.. காலச்சுமையை எங்ஙனம் கொண்டு இறக்கி வைப்பது. அவ்வாறு இறக்கி வைத்தால் அதுவே ஆன்ம விடுதலை போல எண்ண வைக்கிறார்.

சிலுவை என்பவர் அசகாய சூரன் அல்ல. அன்றாடம் நாம் பார்க்கும் எளிமையான் மனிதன். அவரிடம் பலவீனங்களும், குழப்பங்களும், ஏமாற்றங்களும் உள்ளன. அதுவே அவரை மிகவும் இயல்பான, நம்பகமான கதாபாத்திரமாக மாற்றுகிறது.சுற்றியுள்ள சூழல்கள் நம்மை சூழ்ந்துள்ள வாழ்க்கை முறை எவ்வாறு நம் மீது ஆதிக்கம செலுத்துகிறது. நாம் அதிலிருந்து  விடுதலை அடைவது எவ்வாறு என யோசிக்க வைக்கிறது.

காலம் என்பது நாட்களைக் கணக்கிடும் கருவி மட்டுமல்ல; தலைமுறைகளின் காயங்களையும் சுமக்கும் நினைவகமாகும்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Tuesday, 30 June 2026

ஜானகிராம்

"The Sheep Detectives" திரைப்படத்தில்,

George Hardy தன் மகளுக்கு எழுதும் கடிதத்தில்,

கடைசியா எழுதின லெட்டர்ல உனக்கு எந்த Sheep Special nu கேட்டிருந்த..எனக்கு எல்லா 
Sheep um Special தான்!
அதனாலதான் ஒவ்வொருத்தருக்கும் நான் ஒரு பேர் வச்சிருக்கேன்!"

என்று ஒவ்வொரு ஆட்டின் பெயரையும் அதன் குணத்தையும் சொல்லிக் கொண்டே வரும்பொழுது,

ஆனா, ரெண்டு பேர் மட்டும் கொஞ்சம் Extra Special என்று சொல்வார்! 

Sebestian - என் சிங்கக்குட்டி!
என்ன மாதிரியே தனிமையை தேடுவான்.. அவனுக்கு எப்ப அந்த மலைக்கு போகணும் தோணுதோ அப்ப போயிடுவான்..எப்ப திரும்பி வரணும் தோணுதோ அப்பதான் வருவான்!

அப்புறம் என் செல்ல குட்டி - Lilly! 
இங்க இருக்கிறதிலேயே ரொம்ப அறிவாளி! என் மனசுல எப்போ என்ன ஓடிட்டு இருக்குன்னு பாத்த உடனேயே கண்டுபிடிச்சுடுவா..
எல்லாரையும் விட இவளை பார்க்கும் போது ஒரு நிம்மதி கிடைக்கும் பாரு..அது ஒரு Shepherd க்கு தான் புரியும்!" 

என்று அந்த கடிதத்தை முடிப்பார் Geogre!

Lilly - George காதலித்த ஒரே ஒரு பெண் அவனின் மனைவி! அவள் பெயரைத்தான் அந்த ஆட்டிற்கு சூட்டி அழகு பார்ப்பான் George!

உண்மையில்,

நமக்கும் எவ்வளவு பேரை பிடித்திருந்தாலும் நம்மை பிரதிபலிக்கும் ஒருவரை 
நம் மௌனங்களை புரிந்து கொள்ளும் ஒருவரை 
அழுகை முட்டிக் கொண்டு வரும் பொழுது சொல்லாமலேயே நம் கைகளை பிடித்துக் கொள்ளும் ஒருவரை நாம் சோகமாக இருக்கிறோம் என்று தெரிந்து கொண்டு நம்மை புன்னகைக்க வைக்க மெனக்கெடும் ஒருவரை கொஞ்சம் அதிகம் பிடித்துப் போகிறது! அவர்களை கொஞ்சம் அதிகமாகவே கொண்டாடுகிறோம்!

இந்த உலகில் நாம் எல்லோரிடத்திலும் தேடுவது நம்மைத்தான்! 

நமக்கு பிடித்த பாடல்களை பிடிக்கும் என்று சொல்பவர்கள் அடுத்த நொடியே நமக்கும் பிடித்தவர்களாகி விடுகிறார்கள்! 

அந்தி மாலை சூரியன் அஸ்தமிக்கும்போது கீழ்வானில் பரவும் மஞ்சளும் ஆரஞ்சும் பிடிக்கும் என்று சொல்பவர்கள் எப்படி இருந்தாலும் அழகாக தெரிகிறார்கள்!

கடல் பிடிக்கும் என்று சொல்பவர்களையும் காலாற நடை பிடிக்கும் என்று சொல்பவர்களை பெயரைக் கூட கேட்காமல் பிடித்துப் போகிறது!

ஏனென்றால் அவர்களில் நாம் 
நம் சாயலை உணர்கிறோம்!

ஒருவரை எந்த மதிப்பீடும் செய்யாமல் அவர்களின் இயல்பில் அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் தான் உண்மையில் அழகு!

ஆனால்,அதில் நம்மின் ஒரு சிறு துளியை கண்டடையும்போது பேரழகாகிறார்கள்!

விக்னேஷ்


"The Sheep Detectives" திரைப்படத்தில்,

George Hardy தன் மகளுக்கு எழுதும் கடிதத்தில்,

கடைசியா எழுதின லெட்டர்ல உனக்கு எந்த Sheep Special nu கேட்டிருந்த..எனக்கு எல்லா 
Sheep um Special தான்!
அதனாலதான் ஒவ்வொருத்தருக்கும் நான் ஒரு பேர் வச்சிருக்கேன்!"

என்று ஒவ்வொரு ஆட்டின் பெயரையும் அதன் குணத்தையும் சொல்லிக் கொண்டே வரும்பொழுது,

ஆனா, ரெண்டு பேர் மட்டும் கொஞ்சம் Extra Special என்று சொல்வார்! 

Sebestian - என் சிங்கக்குட்டி!
என்ன மாதிரியே தனிமையை தேடுவான்.. அவனுக்கு எப்ப அந்த மலைக்கு போகணும் தோணுதோ அப்ப போயிடுவான்..எப்ப திரும்பி வரணும் தோணுதோ அப்பதான் வருவான்!

அப்புறம் என் செல்ல குட்டி - Lilly! 
இங்க இருக்கிறதிலேயே ரொம்ப அறிவாளி! என் மனசுல எப்போ என்ன ஓடிட்டு இருக்குன்னு பாத்த உடனேயே கண்டுபிடிச்சுடுவா..
எல்லாரையும் விட இவளை பார்க்கும் போது ஒரு நிம்மதி கிடைக்கும் பாரு..அது ஒரு Shepherd க்கு தான் புரியும்!" 

என்று அந்த கடிதத்தை முடிப்பார் Geogre!

Lilly - George காதலித்த ஒரே ஒரு பெண் அவனின் மனைவி! அவள் பெயரைத்தான் அந்த ஆட்டிற்கு சூட்டி அழகு பார்ப்பான் George!

உண்மையில்,

நமக்கும் எவ்வளவு பேரை பிடித்திருந்தாலும் நம்மை பிரதிபலிக்கும் ஒருவரை 
நம் மௌனங்களை புரிந்து கொள்ளும் ஒருவரை 
அழுகை முட்டிக் கொண்டு வரும் பொழுது சொல்லாமலேயே நம் கைகளை பிடித்துக் கொள்ளும் ஒருவரை நாம் சோகமாக இருக்கிறோம் என்று தெரிந்து கொண்டு நம்மை புன்னகைக்க வைக்க மெனக்கெடும் ஒருவரை கொஞ்சம் அதிகம் பிடித்துப் போகிறது! அவர்களை கொஞ்சம் அதிகமாகவே கொண்டாடுகிறோம்!

இந்த உலகில் நாம் எல்லோரிடத்திலும் தேடுவது நம்மைத்தான்! 

நமக்கு பிடித்த பாடல்களை பிடிக்கும் என்று சொல்பவர்கள் அடுத்த நொடியே நமக்கும் பிடித்தவர்களாகி விடுகிறார்கள்! 

அந்தி மாலை சூரியன் அஸ்தமிக்கும்போது கீழ்வானில் பரவும் மஞ்சளும் ஆரஞ்சும் பிடிக்கும் என்று சொல்பவர்கள் எப்படி இருந்தாலும் அழகாக தெரிகிறார்கள்!

கடல் பிடிக்கும் என்று சொல்பவர்களையும் காலாற நடை பிடிக்கும் என்று சொல்பவர்களை பெயரைக் கூட கேட்காமல் பிடித்துப் போகிறது!

ஏனென்றால் அவர்களில் நாம் 
நம் சாயலை உணர்கிறோம்!

ஒருவரை எந்த மதிப்பீடும் செய்யாமல் அவர்களின் இயல்பில் அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் தான் உண்மையில் அழகு!

ஆனால்,அதில் நம்மின் ஒரு சிறு துளியை கண்டடையும்போது பேரழகாகிறார்கள்!

Monday, 29 June 2026

ஜானகிராம்


"வெளியே உள்ள உலகத்தை விட, 
உள்ளே இருக்கும் உலகம் பெரியது."

ரூமியின் இந்த ஆழ்ந்த தத்துவ வரிகள், மனிதனின் அக உலகம் மற்றும் புற உலகத்திற்கு இடையே உள்ள வித்தியாசத்தையும், அக உலகத்தின் பிரம்மாண்டத்தையும் உணர்த்துகின்றன. 

நாம் கண்களால் பார்க்கும் புற உலகம் முடிவற்றதாகத் தோன்றினாலும், அதை அறிவியல் மூலமும், பயணம் மூலமும் அளவிட முடியும். ஆனால், மனிதனின் அக உலகம் அதாவது நமது சிந்தனைகள், உணர்வுகள், கற்பனைகள், நினைவுகள் ஆகியவை எல்லைகளற்றது. அதை அளவிடவோ, எல்லை வகுக்கவோ முடியாது.

புற உலகிலுள்ள பொருட்கள் அனைத்தும், அக உலகிலிருந்து தான் உதிக்கின்றன. ஒரு சிற்பி ஒரு சிலையை வடிப்பதற்கு முன், அதைத் தனது மனதில் முதலில் உருவாக்குகிறான். எனவே, படைக்கும் திறன் கொண்ட அக உலகம், படைக்கப்பட்ட புற உலகை விடப் பெரியது.

புற உலகம் நமக்கு இன்பத்தையும், துன்பத்தையும், சவால்களையும் தரும். ஆனால், உண்மையான அமைதியும், ஞானமும், ஆன்மீக விடுதலையும் அக உலகிற்குள் பயணிப்பதன் மூலமே கிடைக்கும். தியானம், சுய-ஆய்வு போன்றவை இந்த அக உலகத்தைப் புரிந்துகொள்ள உதவும் கருவிகள். 

புற உலகத்தை விட அக உலகம் பிரம்மாண்டமானது. எடுத்துக்காட்டாக நாம் உறங்கும்போது, ஒரு சிறிய அறைக்குள் இருக்கிறோம். ஆனால், அதே நேரத்தில் கனவில் நாம் பிரம்மாண்டமான மலைகளில் பறக்கலாம், அறியாத நாடுகளுக்குச் செல்லலாம், அல்லது காலங்களைக் கடந்து பயணிக்கலாம். ஒரு சிறிய மூளைக்குள் இவ்வளவு பெரிய உலகத்தை நாம் உருவாக்க முடிகிறது. 

அதே போல, நாம் நிகழ்காலத்தில் ஒரு இடத்தில் அமர்ந்திருக்கிலாம். ஆனால், நம் மனம் கடந்த காலத்தின் இனிமையான நினைவுகளை மீட்டிப் பார்க்க முடியும், அல்லது எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளைக் காண முடியும். நாம் விரும்பும் எவரையும், எந்த இடத்தையும் நொடிப் பொழுதில் நம் நினைவில் கொண்டு வர முடியும்.

புற உலகத்தில் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு அல்லது ஒரு துயரமான நிகழ்வு ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே நிகழ்கிறது. ஆனால், அந்த நிகழ்வு நம் மனதில் ஏற்படுத்தும் மகிழ்ச்சி அல்லது துயரம், பல ஆண்டுக்கணக்கில் நீடிக்கலாம். வெளியே நடக்கும் சிறிய தூண்டுதல், மனதுக்கள் ஒரு பெரிய உணர்ச்சிப் பெருக்கை ஏற்படுத்துகிறது.

ரூமியின் இந்த வரிகள், நம்மை நமக்குள் திரும்பிப் பார்க்கச் சொல்கின்றன. புற உலகைத் தேடி ஓடுவதை விட, நம் அக உலகைப் புரிந்துகொண்டு, அதை மேம்படுத்துவதே உண்மையான மகிழ்ச்சிக்கும், ஞானத்திற்கும் வழி என்பதை உணர்த்துகின்றன. 

நம் அக உலகம் நமக்குள் இருக்கும் பெரிய பிரபஞ்சமாகும். அதை புரிந்து கொள்ளும் போது, நாம் யார் என்பதையும், நம் வாழ்வின் நோக்கம் என்ன என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

🌸

Tuesday, 23 June 2026

35


#Reading_Marathon2026
#26RM009

Book No:35/150+
Pages:-561

பாட்டு புஸ்தகம்-2
யுகபாரதி

திரைப்பட பாடல்கள் தான்  அன்றைய மக்களுக்கு வாழ்வியல் அறத்தை கற்றுக் கொடுத்தது. களைப்பு நீங்க பாடி, தத்துவ கருத்துக்களை உள்வாஙகி, சிந்தித்து, லயித்து பாடி புளகாங்கிதம் அடைந்தனர். மக்கள் பேசும் மொழியில் காதலை, இன்பத்தை, வாழ்க்கையை, துள்ளலை பாடும் மனநிலைக்கேற்ப தங்களுக்கேற்ற வரிகளை தெரிவு செய்து கொள்கின்றனர். முன்பு முத்திலிங்கம், வைரமுத்து எழுதிய திரைப்பாடல்களை புத்தகமாக் படித்துள்ளேன். அந்த வகையில் நவீன கவிதையில் நல்ல கருத்துக்களை எழுதும் யுகபாரதியின் இரண்டாம் பாகமாக இப்புத்தகம் வெளிவந்துள்ளது.

மன்மதராசாவும் எழுதுவார், எள்ளுவய பூக்களியே யும் எழுதும் அற்புத கவிஞன். முற்போக்கு எண்ணங்களும் பொதுவுடைமை கருத்துக்களும் கவிஞனுக்கு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக ஜோக்கர் படத்தில் வரும் என்னங்க சார் உங்க சட்டம் பாடலைச் சொல்லலாம்./ ஆண்ட பரம்பரை கைநாட்டு, ஆட்டிப் படைக்குது கார்ப்பரெட்டு, நாட்ட விக்கிற மந்திரிமார்க்கு நல்லா வையி சல்யூட்டு/ என்றும் / இயற்கை என்ன மறுக்குதா, எதையும் உள்ள பதுக்குதா, எல்லாத்தையும் சூறையாட,சர்க்கார் கூட்டிக் குடுக்குதா/ எனும் வரிகள் நியாயத்துக்கு போராடும் நாயகனுக்கு பலம் சேர்க்கும் வகையில் இருக்கிறது.

பணம் பத்தும் செய்யும் ஆனால் அது அன்பை ஒன்றும் செய்வதில்லை என உணர்த்தும் வகையில் இவ்ரின் வரிகள் பாடலில் மிளிரும்.

/நெருப்புல விழுந்திடும் பருத்தியைப் போல நெனப்பையும் கொளுத்துது நேசம்/ எனும் வரி நன்று.இசையோடு கேட்கும் போது ட்யூன் தான் மனதில் முதலில் பதியும். இதுபோன்ற பாடல்களை மட்டும் வாசிக்கும்போது பாடலின் அர்த்தமும் தத்ததுவங்களும் இன்னும் ஆழமாக புரிகிறது.ஒவ்வொரு பாடலுக்கும் அப்பாடல் சார்ந்த முன்னுரையை சுருக்கமாக கூறுவது அருமை. காதல் என்றால் என்ன என்று புரியாத வயதில் கற்பிதங்கள் கற்பனைகளாக உருக்கொள்கின்றன பக்குமடையும் போது இவையாவும் உதிர்ந்துவிடும் எனும் யதார்த்த வரிகளை பதிகிறார்.

கைக்கிளை பெருந்திணை என் இலக்கியத்தில் சொல்லப்பட்ட பொருந்தா காதலை எதார்த வரிகளில் கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை பாடல் சொல்கிறது.

கொடுக்கப்பட்ட இசைக்கு வார்த்தைகளை இட்டு நிரப்புவது மட்டும்.கவிஞனின் வேலை இல்லை. அந்த காட்சி வார்த்தைகளின் வழியே பார்ப்பவருக்கு கடத்தப்பட வேண்டும் பொருத்த்தமான வார்த்தைகளை கண்டறிந்து பொருத்தும் மகத்தான பணியாக கவிஞர் குறிப்பிடுகிறார்.

/நீ ஒரு தேசம் நான் ஒரு தேசம் எல்லை கடந்தால் சந்தோசம்/ எனும் வரி யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது.

சில பாடல்கள் பிரபலமாக தெரியும் சில பாடல்க்ள் நாம் கேட்டறியாதது. ஆனால் அதில் உள்ள வரிகள் ஆழமாக யோசிக்க வைக்கிறது. எந்த பாடலாக இருந்தாலும் கவிஞரின் அழகியலும் மெனக்கெடலும் ஒவ்வொரு பாடலிலும் தெரிகிறது.

வித்யாசாகர் பற்றி சொல்லும்போது செய்தித்தாளைக்.கொடுத்தால் கூட இசையமைத்துவிடும் ஆற்றல் உள்ளது. இமான் குறித்து சிலாகிக்கும் யுகபாரதி இளையராஜா பற்றிச் சொல்லும்போது ஆயிரமாயிரம் இரவுகளுக்கு அவரே இசை வெளிச்சம் என்கிறார். அத்தனை உணர்வுகளுக்கும் ஆரத்தி எடுப்பவர் என அழகர்சாமியின் குதிரை பாடலை மேற்கோள் சொல்கிறார்.சப்பாத்திக் கள்ளி சம்பங்கி ஆவதும் கோரைப்புல் வானவில்லாவதும் எனும் வரிகள் அடிக்கடி நான் பயன்படுத்துவது எனக் கூறுகிறார்.

பெரும்பாலான பாடல்களில் காதல் பற்றியதாக இருந்தாலும் ஒவ்வொரு பாடல்களையும் தன் தனித்துவ வார்த்தைகளில் வேறுபடுத்திக் காட்டுகிறார்./ நில்லாமல் காலம் செல்லுதே, அதைப் போல நாமும் செல்ல செல்ல சந்தோசம்/ என காலத்தைக் கடந்து நிற்க ஓடச் சொல்கிறார்.கண்டதும்.காதல் என்றாலே உ.ண்மைமைக்கு புறம்பான பொய்களை உற்பத்தி செய்ய வேண்டும். ஆலமர காக்கை அய்யனார் சாமி அவளுக்காக காத்திருப்பதாய் எழுத வேண்டுமென எள்ளலை வெளிப்படுத்துகிறார்.

ஓசை நயமுடைய சொற்கள் பாடலுக்கு மிகவும் வலுசேர்ப்பதாகும் 

/அழகைப் பார்த்து தொடங்கும் காதல் அவதியாகுமே,அறிவைப் பார்த்து தொடங்கம் காதல் சிலுவையாகுமே/

/அவளது ஆணியடிக்கும் கண்களால்
அகல முடியாமல் அவிழ்கிறான்/

மெய்யெழுத்துகளே இல்லாமல் எழுதிய சாரலே சாரலே பாடலை புதிய முயற்சி எனலாம்.அய்யோ, பிசாசே போன்ற வார்த்தைகள் காதலில் இதமான மெல்லிசைக்கு இடறாத சொற்களாக பொருத்தியது,

பாடலின் முதல் வார்த்தைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பற்றி சொல்லியிருப்பார். அவரின் பலபாடல்களில் முதல் வரி அருமையாய் இருக்கும்./உன்னைப் போல ஒருத்தரநான் பார்த்ததேயில்லை, உன் உசரம் பார்த்து வானம் கூடகுனியுமே மெல்ல/

/சும்மா இருக்கிறது ஈசி இல்ல- நாங்க ஒன்னா திரிஞ்சாலும் லேசி இல்ல/

ப்ரேக்கிங் நியூஸ் வந்த சமயத்தில் சற்றுமுன் கிடைத்த தகவல் என  சொன்னால் பரபரப்பாகிவிடுவோம். அதையே முதல் வரியாய் வைத்து 

/சற்றுமுன் கிடைத்த தகவல் படி தொலைந்துபோனது என் இதயமடி/ என் எழுதியிருப்பார்.அதே போல் /பார்வை நரைகாது.அப்படியே நரைத்தாலும் அது கொண்டிருந்த காதலின் அழகைக் குறைக்காது/ எனும் வரி எளிமை

ஒவ்வொரு பாட்டுக்கும் அவர்தரும் முன்னுரையையே புத்தகமாய் போடலாம்.புரட்சிக்கு மக்களைத் தூண்ட வேண்டியதில்லை. நடப்புகளை அவர்களுக்கு உணர்த்தினாலே போதும் என்கிறார்.

/ஏழைவாழவே எழுவோம் நொடியிலே, யாரும் ஒன்றுதான் உணர்வோம்.முடிவிலே/

பிரபலமான பாடல்கள மட்டும் நல்ல வரிகள் இல்லாமல் பிரபலமே ஆகாத பாடல்களில் கூட அழகிய வரிகள், ஆழமான கருத்துகள் எழுதியுள்ளது தெரிகிறது. ரிப்பீட் மோட் இல்லாமல் புதிது புதிதாக கற்று அதனை பாடல் வரிகளில் வெளிப்ப்படுத்தியுள்ளார். பத்து சிச்சுவேசன்கள் திரும்ப திரும்ப வந்தாலும் ஒவ்வொன்றிலும் வித்தியாசத்தை காட்டியிருப்பது அவர் தொழில் பக்தியை காட்டியிருக்கிறது. கவித்துவம், கானா, ஓபனிங் சாங் என எல்லா ஏரியாவிலும் அடித்து ஆடியுள்ளார்.

இவரன்  பாடல்களில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் வாங்கும் அளவிற்கான வரிகளை தந்துள்ளார்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Sunday, 21 June 2026

34


#Reading_Marathon2026
#26RM009

Book No:34/150+
Pages:-588

அறிவியல் கதைகள்
-ஆயிஷா இரா நடராசன்

ஆயிஷா இரா. நடராசன் தமிழில் அறிவியல் கதைகளை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை  எளிமையாகவும் சுவாரசியமாகவும் கொண்டு சென்ற முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர்.அறிவியல் கருத்துக்களை கதை வடிவில் சொல்லும் பாணி தனித்துவமானது.
இலக்கியத்தின் மீதான காதலைப் போல அறிவியல்.மீது ஈர்ப்பு குறைவுதான். ஆனால் நடராசன் அவர்கள் ஆய்வுக்கூடத்தில் கண்டறியும் உண்மை போல் இந்நூலில் 73 ஆய்வக கதைகளை கூறியுள்ளார்.

வாசகனை ரசிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கிறார்.
அறிவியல் கதைகள் என்பது அறிவியல் கோட்பாடுகள், தொழில்நுட்ப வளர்ச்சி, விண்வெளி, காலப்பயணம், செயற்கை நுண்ணறிவு, எதிர்கால உலகம் போன்ற கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு
அறிவியலையும் கற்பனையையும் இணைத்து வாசகர்களின் சிந்தனையைத் தூண்டுவதே இதன் நோக்கம்.

அறிவியல் கதைகள் மொழிபெயர்ப்புகளாக இருந்த காலத்திற்கு பிறகு தமிழிலும் அறிவயல் புனைவுகள் துவங்கியது.
சுஜாதாவை இதற்கு முன்னோடியாக சொல்லலாம்..தற்காலத்தில்.அறிவியல் சிந்தனைகளை நடராசன் அவர்கள் அதிகம் பயன்படுத்தி வருகிறார்.

அறிவியல் கதைகளின் நோக்கமே அறிவியல் சிந்தனைகளை வளர்ப்பதுதான். மூடநம்பிக்கை இருளில் அறிவியல் சிந்தனை வெளிச்சத்தை ஏற்படுத்தும். எதிர்கால தொழில்நுட்பத்தை இன்றைய நிலையில் விளக்குதல்.
இப்புத்தகத்தின் கதைகள் குழந்தைகளை மையப்படுத்தியவை. அவர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை அதிகரிக்க செய்பவை.

ஹோட்டலில் பரிமாறும் ரோபோ கேட்கும் வேதியல் கேள்விக்கு சரியான பதில் சொல்லும் நடேசன் ப்ளாஷ்பேக்கில் நடந்த ரசாயன ஆலை விபத்தை நினைத்துப் பார்க்கிறார். முதல் பரிசு வெல்லும் நடேசன் உட்பட 146 பேரை வேனில் சுற்றுலா அழைத்துச் செல்லும் போது ஒரு ட்விஸ்ட் வருகிறது.

நூறு வருடத்திற்கு பிறகு மனிதர்கள் வாழும் ஜோதி எனும் கோள்களில் நடைபெறும் கதை தான் அருட்பெருஞ்சோதி.பேராசிரியர் மாத் ருபூதத்தின் தாய்மொழி மெல்ட்ரான் இது கணினி மென்பொருள் அல்ல.. இவரின் தாய்மொழி என டிகிரிகாப்பி கதை துவங்குகிறது.காலச் சக்கர ஆம்னியில் நூற்றாண்டு கடந்த பயணம் வருங்காலத்தை கண்முன் காட்டுகிறது என விண்வெளி சார்ந்த கதைகள், வானவியல் அதிசயங்களை முன்வைத்து சில கதைகள் உள்ளன.

ஆன்லைன் ரம்மி மனிதர்களை சூறையாடுகிறது.கதையில் மனிதன் கண்டுபிடித்த அல்கோரிதத்தால் கணினி வழி சூதாட்டம் ஆன்லைன் திவாலான கதை சுவாரஸ்யம். செயற்கை நுண்ணறிவின் உச்சக்கட்டமாக இடியாப்ப சிக்கலான வழக்கின் நீதிமன்றத் தீர்ப்பு  சாட் ஜிபிடி உதவியுடன் நான்கு நிமிடத்தின் திரையில் தோன்றியது.
இதனைப் படித்த போது நீதிமன்றத் தீர்ப்புகளில் இதை நடைமுறைப்படுத்தினால் பல கோடி வழக்குகள் சில நாட்களில் தீர்ந்துவிடும் என தெரிந்தது.

நமது உடலின் செல்களுக்கு உள்ளே இருக்கும் கண்ணிற்குப் புலப்படாத ஒன்று மிட்டோ கான்ரியா. அதை மைட்டோ கான்ரியா என்றும் அழைப்பார்கள். ஒரு மனிதன் இப்புவியியல் பிறந்தநாள் முதல் வளர்ந்துகொண்டே வயதாகி வயதாகி முதிர்ச்சி அடைவது ஏதோ மீள முடியாத சமன்பாடுபோல இருக்கிறது அல்லவா? அதற்கு காரணம் மிட்டோ கான்ரியா ... 'ஒருவர் இறந்தால் விதி என்று சொல்கிறோமே அது சுத்த அபத்தம் என்றார் அப்பா... 'ஒருத்தர் இருப்பதா, இறப்பதா என்பதை தீர்மானிப்பது மிட்டோ கான்ரியாதான்' என்று அம்மா ஒரு தீர்ப்புபோல அறிவித்தார் என உரையாடலில் அறிவியல் உண்மைகளை கூறுகிறார்.

ஓய்வு பெற்ற ஆரம்பபள்ளி ஆசிரியருக்கு ராணுவத்தில் பணியாற்றும் நண்பர் வேலைக்கார யானைவெடி ரோபோட் ஒன்றை பரிசளிக்கிறார்.அதனிடன் திட்டினாலோ, வாக்குவாதம் செய்தாலோ கோபத்தில் 75 மில்லி ஆம்பியர் மின்சாரத்தைப் பாய்ச்சி கொன்றுவிடும்.இந்த நேரத்தில் வைரமாணிக்கம் சித்தப்பா விருந்தளியாக வருகிறார்.

"அகனமர்ந்து செய்யாள் உறையும்-முகமர்ந்து

நல்விருந்து ஓம்புவான் இல் எனும் குறள் கூறும் ரோபோட்டால் ஒரு பிரச்சனை வருகிறது. அது என்ன என்பது க்ளைமேக்ஸ் கதை

வெற்றிகரமாக செவ்வாய்க்கு செல்லும் வாசுகியின் கதை, துத்தநாக சல்பேட் மற்றும் பீனால் எனும் வேதியியல் ஆய்வகத்தில் நடந்த காதல் ஆய்வுகள் கதை, ஆயிஷா தான் இக்கதைகளின் தோற்றுவாய் என்கிறார்.

அறவியலில் அன்றாடம் புழங்கும் சொற்கள், விண்வெளி சார்ந்த சொற்கள், நவீன தொழில் நுட்பத்தில் பயன்படுத்தும் கருத்துக்களை புகுத்தி நவீன சிறுகதைகளை உருவாக்கியுள்ளார்.எதிர்காலத்தில் வசிக்கின்ற ஒருவன் இறந்தகாலத்தில் நடந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்து கதைகளை கருவாக எடுத்துள்ளார்.
இதில் சமூகம் சார்ந்ததாகவும் மானுடம் சார்ந்ததாகவும் கொண்டுவந்துள்ளார்.

அறிவியல் புனைவுகள் வெறுமனே காதில் பூ சுற்றும் வித்தைகளை காட்டாமல் நம்பகத்தன்மையை இதில்.ஏற்படுத்தியுள்ளார்.ஓபரா, சைபர் பங்கு பற்றியும், கார்ப்பரேட்டுகளின் முகத்தையும், ஆயுள் நீட்டிப்பில் மனித குலம் எதிர்கொள்ளும் சவால்களையும், கருவிமயமாக்கப்பட்ட வாழ்வியலை இனி எவ்வாறு வாழப்போகிறோம் எனும் அபாயத்தையும் தன் கதைகளில் அழகுபட சொல்லியுள்ளார்.

அறிவியல் சிந்தனைகளின் முன்னோடியாக பட்டினபாலையில் கப்பல் கட்டுமானம் குறித்த புனைவுகள் ஆச்சர்யப்பட வைத்ததாக கூறுகிறார்.

 அறிவியல் என்பது ஆய்வகத்தில் மட்டுமல்ல, அன்றாட வாழ்க்கையிலும் உள்ளது என்பதை அறிவியல் கதைகள் உணர்த்துகின்றன.தமிழில் அறிவியல் கதைகள் வெறும் பொழுதுபோக்கு அல்ல; அவை அறிவியல் சிந்தனையை வளர்க்கும் இலக்கிய வடிவமாகும். அறிவியலை எளிமையாகவும் இனிமையாகவும் அறிமுகப்படுத்துவதில் தமிழ் அறிவியல் புனைகதைகள் முக்கிய பங்காற்றுகின்றன

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Monday, 15 June 2026

ஒளவையார்


வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான் 
தேன்சிலம்பி யாவருக்கும் செய்யரிதால் - யாம்பெரிதும் 
வல்லோமே என்று வலிமைசொல்ல வேண்டாம்காண் 
எல்லோர்க்கும் ஒவ்வொன்(று) எளிது.

"தூக்கணாங் குருவியின் கூட்டைப்போல மற்றொரு பறவையால் செய்ய இயலாது. அரக்குப்பூச்சி செய்வது போல் செய்ய வேறொரு பூச்சியால் முடியாது. கறையான் புற்றெடுப்பது போல் இன்னோர் உயிரியால் புற்றெடுக்க ஒண்ணாது. தேனீக்கள் கூடமைப்பது போலவும், சிலந்திப் பூச்சிகள் வலை பின்னுவது போலவும் செய்வது என்பது எவ்வுயிருக்கும் அரிதான காரியம்.

 இவையெல்லாம் அவ்வவற்றிக்குரிய தனிப்பண்புகள்; தனித் திறமைகள். இவ்வாறே மனிதர்களும் தனித்தனி இயல்புகளுடன் பிறக்கிறார்கள். எல்லோருக்கும் ஏதாவது ஒரு காரியம் எளிதாகவே இருக்கும். மற்றவர்களிடம் பொதுவாகக் காண முடியாத சிறப் பறிவை, தனித்திறமையைப் பெற்றிருக்கவே செய்வார்கள். இது பிறவி இயல்பு. இதில் ஆச்சர்யப்படுவதற்கோ ஆஹா ஓஹோ என்று கொண்டாடுவதற்கோ எதுவுமில்லை. ஆதலால், யாரும் தன்னை ஒரு குறிப்பிட்ட காரியத்தில் வல்லவன் உயர்த்திப் பேசிக் கொள்ள வேண்டியதில்லை."

-ஒளவையார்

Sunday, 14 June 2026

33


#Reading_Marathon2026
#26RM009

Book No:33/150+
Pages:-318

ஒரு துறவியைப் போல் சிந்தியுங்கள்
-ஜே ஷெட்டி

சுயமுன்னேற்ற நூல்களின் வெற்றியே அறியாத தகவல்களை ஜெயித்தவர்களின் கதையை, உளவியல் பார்வையை பயிலும் போது ஏதேனும் ஒரு தருணத்தில் ஏதேனும் ஒரு கருத்தில் ஒன்றி விடுகிறோம்.பலரின் அனுபவங்கள் மேற்கோள்கள் படிக்க சுவாரஸ்யமளிப்பவை. மூன்று பகுதிகளா இப்புத்தகம் பகுக்கப்பட்டுள்ளது. முதலாவதாக விட்டுத்தள்ளுங்கள் பகுதி.
'துறவிகளைப் போல் ஏன் சிந்திக்க வேண்டும்? எனும் கேள்வியை வலியுறுத்தி வாழ்வை பார்ப்பதற்கான அணுகுமுறையை அதற்கான பதிலைத் தருகிறது.

இப்புத்தகத்தை பார்த்தவுடன் ஆசிரியர் யாரையும் துறவி ஆகச் சொல்லவில்லை. இன்றைய வாழ்க்கைச் சூழலில் துறவு மனம் ஏன் தேவைப்படுகிறது என்பதை விவரிக்கிறார்.கவனச் சிதறல் இக்காலத்தில் இருக்கும் மக்களுக்கு இருக்கும்.பெரும்குறை. இதை களைவதற்கான பயிற்சிகளை சொல்கிறார்.இதன்மூலம் ஆற்றல் அதிகரித்து நிகல்கணத்தில் கவனத்தை குவிக்க உதவுகிறது.
மனநிறைவான வாழ்க்கையே கவனச்சிதறல்களை திசை திருப்பதிலிருந்து காக்கிறது.

#வளருங்கள்

ஒரு தலை சிறந்த மனிதன் எதைச் செய்தாலும் அதைச் சாமானிய மனிதர்கள் பின்பற்றுவார்கள் எனும் கருத்தை சொல்லி கற்றுக் கொள்வதன் மூலம் வளர்வதற்கான சிந்தனைகளை சொல்கிறார். அகத்துக்குள் செய்யும் பயணம் நம்.வளர்ச்சிக்கு உதவுகிறது. வளர்ச்சிக்கான பாதை என்பது பலங்களை வளர்ப்பதில் அல்ல, பலவீனங்களை கண்டறிவதில் தான்.

ஒரு செயல் அல்லது ஒரு திறன் நம்க்கு வரவில்லையெனில் விட்டுவிடுகிறோம்.நமது அனுபவமின்மையை பலவீனத்திடன் ஒப்பிடாமல், பலப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

துறவு என்பது வாழ்நிலை மட்டுமல்ல, மனநிலையும் கூட. இருப்பது அனைத்தையும் துறக்கும் எண்ணம் வேண்டும். ஆசை இல்லாத தூய வாழ்வு.மனித மனம் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு ஓடுகிறது. நிலையாக இருப்பதில்லை.இதற்கு துறவு மனப்பான்மை உதவுகிறது. பற்றே வேதனை என்றார் புத்தர். எதிர்பார்ப்புகளே பல ஏமாற்றங்களுக்கும் காரணம். இந்த எதிர்பார்ப்பு மனம் ஏற்படுத்திய ஒன்றுதான். அதிலிருந்து முதலில் அகவிடுதலை கிடைக்கும்போது நிம்மதி கிடைக்கிறது.

தீங்கு விளைவிக்கும் செயல்களை எண்ணுவதை துறவு  மனம் தடுக்கிறது.எதிர்மறை சிந்தனைகளை கைவிடுதல்.
அந்த வெற்றிடத்தில் நல்ல சிந்தனைகளை துளிர்க்கச் செய்கிறது.நிகழ்காலத்தில் வாழ அனுபவிக்க கற்றுக் கொடுகிறது. பயத்தை கையாளும் திறன் வாய்க்கும் போது தான் புரிதலுக்கான கதவுகள் திறக்கப்படுகின்றன. மகிழ்ச்சி என்பதை ஏதோ ஏழுகடலுக்கு அப்பால்.உள்ளது போல் நினைகிறோம். அதனை துரத்துகிறொம். இறுக்கமான வாழ்க்கைச் சூழலில் நமது ஓய்வு நேரத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பது, நாம் எதற்கு மதிப்பளிக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. நோக்கத்துடன் வாழ்தல் என்பது புற இலக்குகளை புறந்தள்ளிவிட்டு, உள்.நோக்கிப் பார்ப்பதாகும்.

துறவியின் முக்கிய செயல்களில் ஒன்று நேரம். அதிகாலை எழுவது, ஒரு முழுநாளையும் நோக்கத்துடன் செலவழிக்கத் தயார்படுத்திக் கொள்வது, திட்டமிட்டபடி செயல்களை செய்வது,நிகழ்காலத்தில் வாழ்வது என நேரத்தை அவர்களின் வாழ்க்கைக்கு ஏற்றாற்போல் வசமாக்கிக் கொள்கின்றார்.நேரத்திற்கு நினைவாற்றல் உண்டு.தினசரி அதனை செய்யும்போது அப்பழக்கம் வழக்கமாகி விடுகிறது.

ஒரு புகழ்பெற்ற வயலின் கலைஞர் மக்கள் அதிகம் பயணிக்கும் ஒரு ரயில் நிலையம் அருகில் சிறந்த இசையை வாசிக்கிறார்.ஆனால் 30டாலர் மட்டும் பெறுகிறார். முந்தைய நாள் வேறு ஊரில் 100 டாலர் சம்பாதித்தார்.ரசிக்காமல் செல்ல பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவர் திறமைசாலி இல்லை என ஆகிவிடாது. மக்களை பாராட்டும் போது குளிர்விப்பதற்காக பாராட்டுகிறார்கள் எம சந்தேகம் கொள்கின்றனர். ஒருவரும் பாராட்டவில்லையெனில் ஏங்குகின்றனர்.ஆகவே எண்ணங்களில் தெளிவு நமக்கு வேண்டும் என்கிறார்.
ஒவ்வொன்றுக்கும் உவமையாக குரங்கினை சொல்கிறர். அதன மூலம் மனம் பற்றிய கண்ணோட்டத்தை கூறுகிறார்.

ரோமானியர்களிடம் போரை வென்று வரும் தளபதியின் காதில் நீங்கள் ஒரு சாதாரண மனிதர் என்று ஒருவர் காதில் கூற வேண்டும். அதன் மூலம் தான் பெரிய சாதனை செய்யவில்லை என நினைக்குமாறு செய்வார்களாம்.பணிவுக்கான  பாதையில் தலைக்கனம் இருக்க கூடாது என்கிறது துறவு.

#கொடுங்கள்

நன்றியுணர்வை வளர்க்க வேண்டியதின் அவசியத்தை கூறுகிறார்.நாம் நேர்மறை எண்ணங்களை மனதில் உருவாக்க நன்றியுணர்வு அவசியம்.துறவிகளின் முக்கிய விசயமாக இதனை பகிர்கிறார்.
கோப்பையில் உப்பிட்டால் உவர்க்கும். அதுவே ஏரியில் இட்டால் சுவை தெரியாது. உன்னுடைய உணர்வுகளை விசாலமாக்கிகொள் என வலியுறுத்துகிறார்.

*அன்பு கிடைக்காதது போல் உணரும்போது, ​​எதையும் எதிர்பார்க்காமல் நமக்குக் கொடுப்பவர் யார் என்று சிந்திக்குமாறு அவர் நம்மிடம் கூறுகிறார்

*கைவிடுதல் நமக்கு விடுதலையைத் தருகிறது, மகிழ்ச்சிக்கு விடுதலை மட்டுமே ஒரே நிபந்தனை. நம் இதயத்தில் கோபம், கவலை அல்லது உடைமைகள் என எதையேனும் நாம் இன்னும் பற்றிக்கொண்டிருந்தால், நம்மால் விடுதலை அடைய முடியாது. 

*உங்களுடைய நேரம்.குறுகியது. வேறொருவருடைய வாழ்க்கையை வாழ அதை வீணாக்கிவிடாதீர்கள்

*ஒவ்வொரு நாளும் கண் விழிக்கும்போது, ​​'இன்று நான் உயிரோடு இருப்பதற்குப் பாக்கியம் செய்திருக்கிறேன், எனக்குக் கிடைத்திருப்பது ஒரு விலைமதிப்பற்ற மனித உயிர், நான் அதை வீணாக்கப் போவதில்லை' என்று எண்ணுங்கள்-தலாய் லாமா

அமைதி மற்றும் நோக்கத்தை அடைவதற்கு எல்லோருக்கும் ஏற்றப் பாதை என்ற ஒன்று கிடையாது. நம்முடைய சொந்த வழியில், நமக்கு ஏற்ற ஒரு வேகத்தில் சென்று, வாழ்க்கையில் நமக்கு என்ன வேண்டுமோ அதில் நம் கவனத்தைக் குவிப்பதன் மூலம் மட்டுமே அதை நம்மால் அடைய முடியும்.துறவு என்பது வெறுமனே அமர்ந்துருப்பது மட்டுமனறு மனமதை செம்மையாக்கும் முயற்சி. இன்றைய அவசர உலகில மனதை செம்மையாக்கவே நாம் முயல வேண்டும்.

தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு

தோட்டத்திற்கு வெளியேஎங்கோ பூத்திருக்கும்ஒற்றைப் பூவின் மணம்எப்போதாவதுஜன்னல் வழியேஉள்ளே நுழைகிறதுஅந்த மணம்ஒரு நபரைக் குறிப்பதில்லைஒரு வாழ்வை உணர்த்துகிறது - வண்ணதாசன்

பூக் கொய்தல்பூக் கிள்ளுதல்பூப் பறித்தல்*கொய்தல் என்பது கொடியில் பூத்த மலர்களை குறிக்கும்* தரையில் படரும் தாவர மலர்களை கிள்ளுதல் என்ற சொல் சுட்டும்*பறித்தல் என்பது செடி,மர மலர்களை புலப்படுத்தும்#தமிழ்

Thursday, 11 June 2026

மாடசாமி


சிறிய பள்ளிகளே சிறப்பானவை...

சிறிய பள்ளிகள் முக்கியமானவை; நம்பிக்கைக்குரியவை. அங்குதான் உறவுகள் சாத்தியம்; குழந்தைகளின் வித்தியாசம் வித்தியாசமான பிரச்சனைகளுக்குத் தீர்வு சாத்தியம்.

பெரும் பள்ளிகளின் பெருங்கூட்டத்தினிடையே குழந்தைகளின் தனித்துவங்கள் தொலைந்து போகின்றன. கூட்டத்துக்குள் ஒரு தனிமை உண்டாகிறது. பிடிமானமின்மை நேர்கிறது. பெயரற்றுப்போகும் பரிதாபம் நிகழ்கிறது.

பெரிய பள்ளி அனுபவம் - நெரிசலான ஒரு பெரிய கடைவீதியில் நடந்துபோகும் அனுபவம்தான். பிரமிப்பு இருக்கும்; நெருக்கம் இருக்காது.

சிறிய பள்ளிகளின் சிறிய வகுப்பறைகளில்தான் ஒவ்வொரு குழந்தையிடத்தும் மின்னும் நட்சத்திரங்களைக் காண முடியும்.

வகுப்பறையில் சிரிக்கிற முகங்கள் எல்லாம் ஏறத்தாழ ஒரே மாதிரி இருக்கின்றன. வாடிய முகங்கள்தாம் பல விதமாக இருக்கின்றன. ஒவ்வொரு வருத்தமும் ஒவ்வொரு விதம் மாணவர்கள் கும்பல் அல்ல; வகுப்பறை - ஒரே முகம் அல்ல.

கலகலப்பான தருணங்களிலும் ஒட்டாமல் உட்கார்ந்திருக்கும் மாணவர் சிலரை என் வகுப்பறையில் பார்த்திருக்கிறேன். நெருங்கிப் போனால்- குடும்பம், சாதி, வறுமை என ஏதோ ஒரு சுமையின் பாரத்தோடு அவர்கள் வகுப்பில் இருப்பார்கள்.

அவர்கள்தான் பாடத்துக்கு வெளியே ஒரு சமூகம் இருக்கிறது என்று ஆசிரியர்களுக்கு உணர்த்துகிறார்கள். வாடிய முகம் ஒவ்வொன்றும் ஒரு புத்தகம் போல! கண்களைத் திறக்கின்றன... ஆசிரியர்களுக்கு வாயா முக்கியம்? கண்கள் அல்லவா முக்கியம்!

-பேராசிரியர் ச.மாடசாமி, கல்வியாளர்.

Tuesday, 9 June 2026

book-32


#Reading_Marathon2026
#26RM009

Book No:32/150+
Pages:-128

மூன்று காலங்களுக்குப் புறப்பட்டுச் சென்ற மூன்று ரயில்கள்

-தூயன்

சமகால எழுத்தாளர்களில் கவனிக்கத் தகுந்த எழுத்தாளர்களின் ஒருவர். அவரின் வலைதளங்களில் அவருடைய எழுத்துக்களை வாசித்த உந்துதலில் வாங்கிய புத்தகம் இது. தலைப்பு வித்தியாசமாக இருந்தது. புத்தக அளவு பயமுறுத்தாமல் குறைவான பக்கங்கள் இருந்தது. நுண்கதைகளை நான் எப்போதும்.விரும்பி வாசிப்பேன். அது CBSE பாடப்பிரிவில் அதிக மதிப்பெண் எடுக்கும் சிரத்தை உடையது.கூர்மையான சொற்களும் இறுக்கமான நடையும் அவசியம். குறைவான பக்கங்களில் எடுப்பு தொடுப்பு முடிப்பு அவசியம்.

வயதான முதியவர் ஒருவர் சாலை விபத்தில் அடிபட்டு இறந்துவிட்டார்.
பயணிகள் சிலர் ஓரமாக தூக்கிவைத்து விடுகின்றனர். இதற்கு இடையே மீதிப்பணத்தை முதியவரிடம் கொடுக்க டீக்கடை பையன் வந்து பாக்கெட்டில் பணம் வைக்கிறான்.இதுதான் சூழல். கும்பலுக்கு எப்போதுமே வேடிக்கைதான் என பிரபல வரி உண்டு. இதை தன் எழுத்து சாகசத்தில் படைத்திருக்கிறார்.

"கூட்டம் வட்டச்சுருள்போல மனித உடல்களால் சுற்றியுள்ளது. அவனுக்கு உள்ளே நுழைந்து அதன் மையத்தை அடைவதில் ஆர்வம். ஒவ்வொரு வட்டமாக வளைந்து மையத்தை நெருங்குகிறான் மையத்தில் யாரும் இல்லை. மையம் வெறும் காலியிடம்தான். மொத்தக் கூச்சலும் மையத்துக்கு வெளியேதான். மையம் அமைதியாக இருக்கிறது. அங்குதான் அவர்கள் பேசிக்கொள்ளும் விபத்து நடந்திருக்க வேண்டும்" என சிறுவன் பார்வையில் கதை வார்த்தையில் நம்மையும் உள்ளே நுழைக்கிறது.

புகை வண்டியில் ஏறும் படிமத்தை அழகிய சொற்களில் காட்சிப்படுத்துகிறார் /வண்டி புறப்பட இன்னும் இரண்டு மணிநேரம் இருக்கிறது. அதுவரை இடத்தைப் பிடிக்க நிறைய சமரசமற்ற நிர்பந்தங்களும் தர்மசங்கடங்களும் பொய்ப் பித்தலாட்டங்களும் வெளிவரப்போகிறது. புஜபலபராக்கரமங்களை வெளிப்படுத்தும் பெண்களையும் மல்யுத்தத்திற்குத் தகுதியான ஆண்களையும் இனிப் பார்க்கலாம். குழந்தையுடன் ஏறுகிறவர்களுக்கு உரக்கப் பேசி இடத்தைப் பிடிக்கும் உரிமை உண்டு. பறிபோன அதிர்ஷ்டத்தை மொழி தெரியாதவர்களிடம் இழந்ததற்கு இவ்வுலகைச் சலித்துக்கொள்ள வேண்டியிருக்கும். கதவோரங்களில் வசதியாக உட்காரவும் காற்றை வாங்கவும் பொறுமையும் சங்கோஜமும் அவசியம். தண்ணீர் குடிக்காமலிருந்தால் ஏழு கடல் ஏழு மலை தாண்டிக் கழிவறை அடைவதை நிறுத்த முடியும். இப்படி ஆளுக்கொரு மனச்சொற்களால் வண்டியை நகர்த்த முடிவெடுத்தோம்/ வண்டியில் நாமும் அமர்ந்திருப்பதை உணர வைத்திருப்பார் 

கடலில் இறந்து கரை ஒதுங்கிய பெண்ணின் ஆடையில் சிக்கிய மீனும் இறந்திருந்தது. அவள் விளையாடிய நடந்த காலடித் தடங்களை அழித்தது தவிர வேறு எதுவம்தெரியாது என அலைகள் புலம்புவதாக நுண்கதை ஒன்று படிக்கும் போது நம்மையும் ஒன்ற வைக்கும்.சிறிய கதைக் கருவை நுட்பமான விவரிக்கும் முறை சலிப்பின்றி வாசிக்க வைக்கிறது. அவை சாதாரண கதையாக நிகழ்வாக, செயலாக இருந்தாலும் கூட.

செவிலித்தாய் கேள்விப்பட்டிருப்போம். நவீன காலத்தில் வாடகைத்தாய்க்கு தான் தேவை அதிகம்.அப்படியாக குழந்தையின்மை தம்பதியர் வாடகை த்தாயை தேடிச் செல்லும் குறுங்கதை. இறுதியில் ஷேர் ஆட்டோ போல கட்டுபடியாகும் என பேரம் பேசி விடுவது யதார்த்தம். வட நாட்டு பெண்கள் தான் இதற்கு அதிகம் தயாராக உள்ளனர் என்பதும் புதிய செய்தி. தெய்வமே நீங்க இங்கயும் வந்திட்டீங்களானு நினைக்கத் தோனுது.

படிப்பு முடிந்து செல்லும்.மூவரும் ஆல்ஃபா கடிகாரம் கட்டிச் செல்கின்றனர்.மூன்று ரயில்களில் வெவ்வேறு பாதைகளில் செல்கின்றனர். மூன்று ரயில்கள் வருகிறபோது கடிகார மணி ஓசை கேட்கும். அப்போது ரயிலைன்நிறுத்தி சந்திப்பதென்பது திட்டம். அவ்வாறு நடந்ததா அவ்வாறு நிகழ்ந்தபோது ஏற்பட்ட உணர்வை யதார்த்தமாய் சொல்லியிருப்பார்.சஸ்பென்சுடம் கூடிய எதிர்பார்ப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது. இக்கதைதான் புத்தக தலைப்பிற்கான கதையும் ஆகும்.

காலம் குறித்த கதைக்கரு அதிகம் தொட்டு பேசியுள்ளார்.இக்கதைகள் அனைத்தும் அன்றாட வாழ்வில் மனதில் தோன்றும் சாதாரண பக்கங்களை இக்கதை தொடுகிறது. சிலவற்றில் காட்சி படிமத்தை விளக்குகிறது."அடக்குவதுதான் அதிகாரத்தின் முதல் வெற்றி" என வர்க்க தத்துவத்தையும் பேசுகிறது.

'உலகத்தின் தேவதைகளெல்லாம் மறைந்துபோன பிறகு கடைசியாக, சந்தோஷம், துக்கம் என்ற இரு தேவதைக் குழந்தைகள் பிறந்தன எனும் துவக்க வரி கடைசி தேவதைகள்.கதைக்கான நல்ல துவக்கம்.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Sunday, 7 June 2026

கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா?’ கழுத்திலோ, காதிலோ, தலையிலோ ஆபரணங்களைப் பூண்டால், அவற்றை அணிந்துகொள்கிறவர்கள் கண்ணாடியின் உதவியோடுதான் அவற்றைப் பார்க்க முடியும். ஆனால், மோதிரம், வளையல் போன்ற ஆபரணங்களைக் கையிலே பூணும்போது, கண்ணாடியின் உதவியின்றியே அவற்றைப் பார்க்கலாம். இதைத்தான் ‘கைப்பூணுக்குக் கண்ணாடி தேவையா?’ என்று சொன்னார்கள். நாம் ‘பூண்’ என்பதைப் புண்ணாக்கிவிட்டோம்!-ரவிஷங்கர்

"திண்ணையிலிருந்த தாத்தாவீட்டிற்குள் வந்தார்படமாக"-சேது மாதவன்

பிஸ்கட்" என்பது பிரெஞ்சு சொல்"bis" இரண்டு முறை (twice)"cuit" வேகவைக்கப்பட்டது (cooked)அக்காலத்தில், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க மாவால் செய்யப்பட்ட ரொட்டியை முதலில் சுட்டு, பின்னர் மீண்டும் உலரச் சுடுவார்கள். இம்முறையில் தயாரிக்கப்பட்டதால் அதற்கு "biscuit" என்று பெயர்

Thursday, 4 June 2026

ஜீயொ டாமின்


நாம் பிறக்கும் முன்பே இந்த ஓட்டப் பந்தையத்தின் விதிகள் எழுதப்பட்டு விட்டன. பால்வாடி பிள்ளைகள் தொடங்கி, ரேப்பிடோ டிரைவர், இன்ஸ்டா இன்புளூயன்சர், ஐடி ஊழியர், அம்பானி, அதானி, எலான் மஸ்ட், டிரம்ப், நான், நீங்கள் என எல்லோரும் இந்த பந்தையத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம். 

இதில் பலருக்கு மூச்சிரைக்க ஓட வேண்டியிருக்கிறது; சிலருக்கு ஒய்யார நடைபோடும் அனுகூலம் இருக்கிறது. 

இந்த பந்தையத்தில் வெற்றி பெற்றால் வாழ்வு சிறக்கும் என்று நாம் ஒவ்வொருவரும் நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம். என்றாலும், பந்தையத்தின் விதிகள் எப்போதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச்சிலர் மட்டுமே வெற்றிபெறுமாறு கச்சிதமாய் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. 

தோற்கும் தொண்ணூற்றொன்பது விழுக்காட்டினரைவிட வெற்றி பெறும் ஒரு விழுக்காட்டினரின் கதையாடலே இங்கு பேசுபொருளாகிறது. ஆகவே, வெற்றி பெறும் அந்த மிகச்சிலரைக் குறித்த சித்திரமே பந்தையத்தில் ஈடுபட்டிருக்கும் எண்ணூற்று ஐம்பதுகோடிபேரையும் வேகமாய் ஓடச்செய்கிறது. 

பெரும்பான்மையினர் எவ்வளவு வேகமாக ஓடுகிறார்களோ அவ்வளவு வேகமாக வெற்றி பெற்றோரிடம் செல்வம் திரள்கிறது. 

ஓட்டத்தின் போக்கில் இந்தப் பெருந்திரள் கூட்டமானது பல்வேறு இயற்கை வளங்களை மதிப்புக்கூட்டி, வெற்றி பெற்றோர் நுக்வதற்கான பண்டமாக்குகிறது. இயற்கையைச் சுரண்டி விற்பனைப் பொருளாக்குவதே இந்த ஆட்டத்தின் மையம். எவ்வளவு விற்பனை அதிகரிக்கிறதோ அவ்வளவு அதிக வளர்ச்சி என்று சொல்லப்படுகிறது. இந்த மதிப்புக் கூட்டல் இயற்கை வளச் சுரண்டலாகவும், கார்பன் உமிழ்வாகவும், சூழல் மாசுபாடாகவும், கையாள முடியாத குப்பைகளாகவும் பெருகுகிறது. 

நூறாண்டுகளுக்கும் மேலாய் வெளியேறிய கார்பன் மைதானத்திலிருந்து திரண்டு எழும்பி வானத்தின் மூடிய வாசல்களைத் திறந்துவிட்டு சூரியனின் நெருப்பை மழையாய் மக்கட் திரள்மீது பொழியச் செய்திருக்கிறது. காற்று மாசுபாடும் நீர் மாசுபாடும் கொள்ளை நோய்போல ஓடுவோரைக் கொத்துக்கொத்தாய் கொன்றொழித்துக் கொண்டிருக்கிறது. 

ஓட்டப்பந்தையம் ஆறாம் முற்றொழிப்பில்தான் (6th mass extinction) முடியக்கூடும் என்பது உறுதியாகியிருக்கிறது. என்றாலும், போட்டி வளமான எதிர்காலத்தைத் தருமென்ற கதையாடலும் நம்பிக்கையும் இன்னும் உயிர்ப்போடும் அசுர பலத்தோடும் இருக்கிறது.

கொஞ்சம் நிதானமாய் யோசித்தால் நமக்கு வேண்டியது இந்த ஓட்டம் அல்ல என்பதையும் இது நமக்கு நிறவாழ்வைத் தர முடியாது என்பதையும் உணர முடியும்; இன்னும் கொஞ்சம் ஆழமாய் அவதானித்தால், நம் எதிரி கார்பன் டை ஆக்சைடு அல்ல; நம் நோய்க்கு மருந்து சோலார் பேனலும், மியாவாக்கிக் காடும் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள முடியும்!

ஆனால், இதை எப்படி எல்லோரும் அறியச் செய்வது? எப்படி இந்த முடிவுறா பந்தையத்தின் விதிகளை மாற்றி எழுதுவது?

இந்த கேள்விகளுக்கான பதிலிலேயே நம் வாழ்வும் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது.

ஜூன் 5 – உலக சுற்றுச்சூழல் நாள்