#Reading_Marathon2025
#25RM055
Book No:121/150+
Pages:-548
நெக்சஸ்
-யுவால்நோவா ஹராரி
தமிழில் நாகலட்சுமி சண்முகம்
2025 ம் ஆண்டு துவக்கத்தில் வாங்கியபுத்தகம் இது.பல இலட்சம் ஆண்டுகள் பரிணாமத்திற்கு பின்னும் மனிதகுலம் இருத்தல்சார் நெருக்கடிகள் இருப்பதை பற்றி பேசுகிறது.மலையளவு தகவல்கள் உள்ள போதும் பகுத்தறிவைக் கைவசப்படுத்துவதில் இன்னும் போதாமை இருக்கிறது.தங்கள் பொறுப்புகளை கைவிட்டுவிட்டு அதற்கு பதிலாக கடவுள் மீது விசுவாசம் கொள்கிறோம். தகவல்களை பெறுகின்ற நாம் அதை அலசுவதோ ஆராய்வதோ இல்லை. வெகுளித்தனமான கண்ணோட்டம் வலையமைப்பு, ஏ.ஐ உருவாக்கும் புதிய அபாயங்களை பற்றிக் கூறுகிறது. அதிகமான தகவல்கள் மேம்படுத்துவதை விட மோசமாக்கியதே அதிகம்.
அதிகாரமும் நாகரிகமும் யாரிடம் தகவல் ஓட்டத்தின் கட்டுப்பாடு இருக்கிறதோ அவர்களிடமே சென்று சேரும்; இன்று அது மிக வேகமாக மனிதர்களிடமிருந்து செயற்கை நுண்ணறிவுக்கு நகர்கிறது.
தகவல்கள்தான் நவீன யுகத்தின் ஆக்ஸிஜன்..அது முட்கம்பிகள் பதிக்கப்பட்டச் சுவர்களை ஊடுருவிச் செல்கிறது.21ம்நூற்றாண்டில் முட்கம்பிக்குபதிலாக சிலிக்கான் நுண்சில்லுகளாலும், கணினி நிரல்களாலும் ஆன புதிய உலகளாவிய மோதல் நடைபெறுமென எச்சரிக்கிறார்.
இப்புத்தகம் மூன்று முதன்மை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது, பகுதி 1: மனித வலையமைப்புகள். இந்தப் பகுதி தகவலின் அடிப்படைத் தன்மைபற்றி ஆராய்கிறது. உண்மையும் யதார்த்தமும் வெவ்வேறு விஷயங்களாகும். ஏனெனில் ஒரு பதிவு உண்மையானதாக இருந்தாலும் எதார்த்தத்தை பிரதிபலிக்க முடியாது.
தகவல்களில் எது உண்மை,
இயேசு, ஸ்டாலின், இதிகாச, பைபிள் கதைகள்,, உண்மைகளும் திரிபுகளும், ஆவணங்கள், பிழைகள் மற்றும் சுயதிருத்த அமைப்புகளை ஆராய்கிறது. அதன் பின்பு வந்த ஜனநாயககட்டமைப்புகளைப் பற்றிக் கூறுகிறது.
மேலும் இருபதாம் நூற்றாண்டு வரை நிகழ்ந்த அரசியல்வரலாறு, வல்லாட்சி பற்றி கூறுகிறது.தகவல் உண்மையைப் பிரதிபலிக்க வேண்டியதில்லை; அது மனிதர்களை இணைத்து பெரிய சமூகங்களை உருவாக்குகிறது. மதங்கள், நாடுகள் போன்ற கற்பனைக் கதைகள் மூலம். ஜனநாயகம் சுயதிருத்தம் செய்யும் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு வலையமைப்பாக விவரிக்கப்படுகிறது.
இரண்டாம் பகுதியில் கனிம வலையமைப்பு சொல்லப்பட்டுள்ளது.
முந்தைய தகவல் புரட்சிகளிலிருந்து மேம்பட்ட தகவலைப்பில் வாழ்கிறோம்.முதல்முறையாக அதிகாரம் மனிதர்களிடமிருந்து விலகி வேறு ஏதோ ஒன்றை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது.இவை மனிதர்களைத் தாண்டி சுதந்திரமாக செயல்படலாம். முதன்மைத் திறவுகோலை கைப்பற்றிக் கொண்டிருக்கும்.மனித சிந்தனையில் உருவானவை தான் பரிணாம வளர்ச்சி அடைந்து சர்வாதிகாரம் அச்சமடைவது, தீவிர கண்காணிப்பு மனிதர்களுக்கிடையே நாடுகளுக்கிடையே என எப்போதும் இயங்குகிறது.
நாடுகளிடையே பகைமை உணர்ச்சி, வெறுப்பையும் வன்முறையும் பெருக்கும்.அல்காரிதம்களை கட்டுப்படுத்தாவிடில் பல்வேறு அபாயங்கள் நடைபெறும். மூளைச்சலவை எளிதில் நடைபெறும்.சமூகப் பொறுப்பு மனிதர்களுக்கும் ஊடகங்களுக்கும் இருக்க வேண்டுமென கூறுவதுடன் இதனை ஒத்திசைவு பிரச்சனையாக கருதுகிறார்.இப்பிரச்சினையை தீர்க்க கோர்சிகத் தொடர்புகளை கூறுவதுடன் சாத்தியமுள்ள ஐந்து இலக்குகளை முன் வைக்கிறார்.
மூன்றாவதாக கணினி அரசியல் பற்றி புத்தகம் கூறுகிறது.
அண்மையில் தவறாக அச்சுறுத்தும் தகவல்களை சிறுவனுக்குதெரிவித்த ஆபத்து பற்றி நாம் படித்திருப்போம். இப்பகுதி ஜனநாயகத்தை அழிக்கும் ஆபத்து, ஜனநாயகத்தால் தாக்குப்பிடிக்க முடியுமா? என வினவி தொழில்நுட்பப் புரட்சியுடன் ஒப்பிடுகிறது;
இரண்டு உளவியலாளர்கள் சாட்ஜிபிடியின் பதிலை 0-என்ற அளவீட்டைக் கொண்டு தனித்தனியாக மதிப்பிட்டனர்.0 என்பது விவரிக்கப்பட்டிருந்த உணர்ச்சிகள் அந்தச் சூழ்நிலைக்குப் பொருந்தவேயில்லை என்று சுட்டிக்காட்டுகிறது; 10 விவரிக்கப்பட்டிருந்த உணர்ச்சிகள் அந்தச் சூழ்நிலைக்குக் கச்சிதமாகப் பொருந்தியதைச் சுட்டிக்காட்டுகிறது. இறுதிக் கணக்கீட்டில், சாட்ஜிபிடியின் மதிப்பெண்கள், மனிதர்களின் மதிப்பெண்களைவிடக் குறிப்பிடத்தக்க அளவு அதிகமாக இருந்தன: அதன் ஒட்டுமொத்தச் செயல்திறனுக்குக் கிடைத்த மதிப்பெண்ணும் கிட்டத்தட்ட உச்சபட்ச மதிப்பெண்ணை எட்டியது."
ரோபோட்டுகள் விளையாடுவதை பார்க்க மனிதர்களிடம் ஆர்வமில்லை.மனிதருடன் உணர்வுபூர்வமாய் உரையாட பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. வேலைவாய்ப்பில் நிலையற்ற தன்மை ஏற்படுத்தும்.தொழில்நுட்ப முன்னேற்றம் மனித நெறிமுறைகளை விட வேகமாக ஓடுகிறது.ஜனநாயகம், தனிநபர் சுதந்திரம் ஆகியவை புதிய சவால்களை சந்திக்கின்றன
தீர்வுகளை விட எச்சரிக்கைகளே அதிகம் தேவைப்படுகிறது.
புத்தகத்தின் இறுதியில் நாம் மிகவும் அறிவார்ந்தவர்கள் எனில் பிறகு ஏன் நாம் நம்மை நாமே அழித்துக் கொண்டிருக்கிறோம்?குறை நம்முடைய இயல்பில் இல்லை. மாறாக தகவல் வலையமைப்பில் உள்ளது.
*தகவல் என்பது வெறும் செய்தி அல்ல; மனிதர்களை ஒன்றாகக் கட்டி இணைக்கும் சிமெண்ட் போல செயல்படும் ஒரு சமூக சக்தி
* “உண்மை பேசுவதற்காக” அல்ல, “அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக” தகவல் வலயங்கள் பெரும்பாலும் செயல்பட்டிருக்கின்றன
*வலைதளங்கள் மனிதர்களின் முன்னேற்றத்துக்கும் மனித துயரத்துக்கும் ஒரே நேரத்தில் பொறுப்பான இரு முனை வாளாக படம் பிடிக்கப்படுகின்றன.
*“நாம் மனிதர்கள் உண்மையைத் தேடும் உயிர்களா, இல்லையா அதிகாரம், பாதுகாப்பு, கண்ணியம் ஆகியவற்றைக் காப்பாற்ற எந்த கதையையும் நம்பத் தயங்காதவர்களா?”
*உன்னால்.கட்டுப்படுத்த முடியாத சக்திகளை ஒருபோதும் வரவழைக்காதே
தகவலை எப்படிப் பயன்படுத்தப் போகிறோம்?” என்ற கேள்வியை இன்று வாழும் ஒவ்வொரு மனிதரின் முன்பும் வைக்கும் சிந்தனைத் தூண்டும் நூலாக திகழ்கிறது.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு