உப்புக்கடலைக் குடிக்கும் பூனை
-க.சீ சிவக்குமார்
‘உப்புக்கடலைக் குடிக்கும் பூனை’ என்ற தலைப்பு வாசகனுக்குள் உடனடியாக ஒரு வினாவை எழுப்புகிறது.பூனை ஏன் உப்புக்கடலைக் குடிக்கிறது?
இது இயல்புக்கு மாறான ஒரு காட்சியை உருவாக்குகிறது. ஆனால் சிவகுமாரின் கதைகளின் இயல்பே இதுதான். வாழ்க்கையில் சாதாரணமாகத் தோன்றும் சம்பவங்களுக்குள் இருக்கும் விசித்திரத்தையும் நகைச்சுவையையும் அவர் கண்டுபிடிக்கிறார்.தலைப்பு வெறும் நகைச்சுவைத் தலைப்பு அல்ல; வாழ்க்கையின் முரண்பாடுகளைச் சுட்டும் படிமம்.
நவீன சிறுகதைகளில் அரிதாகிவரும் நகைச்சுவை சிவகுமாரின் எழுத்தில் இயல்பாக வெளிப்படுகிறது. அவரது கதாபாத்திரங்கள் பெரிய சாதனையாளர்களாகவோ, அசாதாரண மனிதர்களாகவோ இருப்பதில்லை; நம்மைச் சுற்றி வாழும் எளிமையான, பாசாங்கற்ற, வெள்ளந்தியான மனிதர்களே. அதனால் அவர்களுடன் வாசகன் மிக நெருக்கமாகப் பயணிக்க முடிகிறது
"அறிவின் புனித ஊற்று தொடர்ந்து பீறிட்டே கொண்டே இருப்பதால் யாருடமாவது பேசியே தீர வேண்டுமென" தேனி தேனரசனின் குணாதிசியத்தை அமிழ்து அமிழ்து கதை மூலம் காணலாம்.தன்வினை, பிறவினையை தமிழில் படித்திருப்போம் அது சாராயம் விற்கும் வேலன்துறை அய்யப்பனுக்கு நடக்கும்.போது நமக்கு எளிதில் புரிகிறது. தற்கொலை செய்த நண்பனின் பிணத்தை தூக்கிக் கொண்டு வருகையில் வழி தோறும் அவன் நினைவுகளின் வலியை இயல்பிகந்த கிண்ணாரத்தில் வெளிப்படுத்தியிருப்பார். அக்கதையில் தன் பெயரையே பயன்படுத்தியிருப்பது இன்னும் ஆச்சர்யம்.உன் கல்லறை வாக்கியம் என்ன என முடிகிறது கதை
கடிகாரத்தை பழுது பார்க்க செல்கையில் நடக்கும் சுவாரஸ்யத்தை சுற்று கதையில் தவறவிடக்கூடாது. நிலவொளியில் வானவில்லை தோன்ற செய்யும் காதலர்களாக கானலங் காதலில் எள்ளலுடம் வெளிப்படுத்தியிருப்பார்.
"கைக்கு கிடைக்கும் வரை சொந்த கோழியும் சொந்த கோழி அல்ல" என கறி.கதையில் புதிய கோணத்தில் எழுதியிருப்பார்."ஈடில்லாததும், வீடில்லாததுமான அந்த நாய்’’ என ஆரம்பிக்கும் தி நேம் இஸ் மணி ஜாக்கிசான் பட டைட்டில்.கதை அக்மார்க் நையாண்டி. " அடிபடாமல் நீண்டநாள் வாழனும்னா கொஞ்சம்.கட்டுக்குள் தா இருக்கனும்னு ஜென் தத்துவத்தை போதித்திருப்பார்.
கிராமிய வாழ்வையும், எளிய மனிதர்களின் அன்றாடப் பாடுகளையும், அவர்களுடைய ஆசை–ஏமாற்றங்களையும் நகைச்சுவையும் கருணையும் கலந்த பார்வையில் அணுகுகிறது.
சினிமா ஆசையில் சென்னையில் ரூம் மேட்டாக வரும் பூந்துறை பாரதி, ஒடலை காமராசுவின் யதார்த்த வாழ்க்கை பலரின் நிழல்களை தொட்டுப் பார்க்கிறது.குருசேவ் குழந்தையாக இருக்கும்போது கதை கிட்ணன்-ராச்சாளின் சுய விளம்பர கதைகளை சொல்கிறது.சாதி சான்றிதழ் வாங்கச் செல்லும் அனுபவம என்பது ஏழு மலைஎழு கடல் தாண்டி செல்லும் ராஜசேகர ரணதீரன் உண்மையில் மாவீரன் தான். கிளி.ஜோசியம் பார்த்து பீதியடைந்த ஓட்டுநர் தர்மராஜின் பயமயம் சிரிக்க வைக்கிறது நம்மை." பிராய்டுகள் தோன்றியிருக்கவிட்டாலும் கனவுகள் தோன்றியிருக்கக் கூடும் என்பது அக்மார்க் குசும்பு.செத்தது எதுவாக இருந்தாலும்.மத்தது அதுவாக இருக்கும் என் எந்த பூனை செத்தது என நம்மையும் கண்ணாமூச்சி ஆட வைத்திருப்பார்.
தனிமை, ஏக்கம், உறவுகளின் வெறுமை போன்ற ஆழமான உணர்வுகளை அவர் நேரடியாகப் பிரசங்கிப்பதில்லை. அவற்றைச் சாதாரண நிகழ்வுகள், விலங்குகள், மனிதர்களின் நடவடிக்கைகள் ஆகியவற்றின் வழியாக வெளிப்படுத்துகிறார்.வீட்டுக்கு ஓடு மாற்றும் மராமத்து அவஸ்தைகளை இயல்பாடு வீடு கதையில் சொல்லியிருப்பார்.
பைக் ஓட்டும் மகளிடம் இயல்பாக தாய்க்கு ஏற்படும் பயத்தை தனக்கே உரிய பாணியில் பயம் வந்திட கதையில் சொல்லியிருப்பார். வாழ்த்து அட்டையை, காதல் கடிதங்களை மையப்படுத்திய கரு சுவாரஸ்யமானது.மளிகை பாக்கி செலுத்த வேண்டியது தான் மட்டுமே
என மனைவி சொல்லும் நோக்கத்தில் தன்மானம் மிளிர்கிறது. கைம்பெண்ணுக்கு கலர் புடவை கட்டியதை முற்போக்குத்தனமாக எதிர்கொள்ளாமல் இன்னும்.பழைய காலத்தில் உழலும் அக்கா கணவனுக்கு சரியான பதிலடி கொடுத்திருப்பார் மல்லிகா
அண்ணன் தங்கைக்கு எழுதும் ஒரு கடிதம் தான் கதை.அதில் சொல்ல மறைத்த ஆயிரம் விஷயங்கள் இருக்கும்.கடன் பாக்கி வைத்ததை செலுத்தவரும் நோயாளி.. கதை நெகிழ்ச்சியுடன் மனிதனின் விவரமான மறுபக்கமும் தெரிகிறது.
"கடல் வத்தி மீன் புடிக்கலாம்னா முடியாதே". புகுந்த வீட்டில் செத்துப் போகும் நினைவைக் கொண்டு வரும் ரோமி நாய் நெஞ்சை உலுக்குகிறது.
"ஜெயிச்சா ஊருக்கு நல்லது, தோத்தா நமக்கு நல்லது" என அரசியல் அரிச்சுவயை அஞ்சாப்பு வாய்ப்பாடு மாதிரி எளிதில் சொல்லியிருப்பார்.
தன்னுடைய கதைகளை பற்றி முன்னுரையில் கூட கதைகள் அனுபவத்தில் முகிழ்ந்தவை.அதை கைப்பற்றுத் திராணியற்றவர்களின் கழிவிரக்கத்தோடு பொருத்துகையில்
கறுப்பு நகைச்சுவையுடன் கூடிய ஒரு கலையாக மாறுவதாக கூறுகிறார்.
எந்த ஒரு வருணனை, மூக்குத் தொடும் வித்தையெல்லாம் இன்றி இயல்பான நகைச்சுவையுடன் எள்ளலுடன் கதை சொல்லும் பாணி கைவரப்பெற்றவர் க.சீ சிவக்குமார். இந்த ஸ்ட்ரெஸ் உள்ள காலத்தில் அவரின் நகைச்சுவை எழுத்தினை இந்த தமிழ் சமூகம் மிஸ் செய்கிறது.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு