நவபாரத சிற்பிகள்
பி.ஆர்.அம்பேத்கர்
-டபிள்யு.என்.குபேர்
“கல்வி என்பது தனிமனித முன்னேற்றத்திற்கான கருவி மட்டுமல்ல; சமூக மாற்றத்திற்கான சக்தியும் ஆகும்.”
நிகழ்கால வருங்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் இந்த நவபாரத சிற்பிகள்.புத்தகம் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம்
வெளியிட்டுள்ளது.15 அத்தியாங்களாக விரியும் இந்நூல் அம்பேத்கரின் முகங்களை பதிவு செய்கிறது.சமூகத்தின் அடித்தளத்தில் பிறந்த ஒருவராக, தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட தீண்டாமை, சாதிப் பாகுபாடு, சமூக அவமதிப்பு போன்ற தடைகளை கல்வி மற்றும் அறிவின் துணையுடன் எதிர்கொண்டு உயர்ந்த அம்பேத்கரின் பயணத்தை நூல் எடுத்துரைக்கிறது.
சமூக கட்டமைப்பு பகுதிக்குள் சாதியின் தோற்றுவாய் உருவான வரலாற்றையும் அதன் தொடர்ச்சியாக தீண்டாமை பின் விளைவாய் அமைந்தது.புத்தர்,கிறிஸ்தவ, பிரிட்டிஷ் ஆட்சியிலும் தொடர்ந்தது. இந்திய தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் சேவை சங்கம் 1917ல் மாநாடு கூடி தீண்டத்தகாதவர்களின் கோரிக்கையை அன்றைய காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது.
அம்பேத்கரின் வாழ்க்கையை வெறுமனே ஒரு தனிமனிதரின் வெற்றிக்கதையாக ஆசிரியர் அணுகவில்லை. சமூக சமத்துவம், கல்வி, மனித உரிமை, பெண்களின் உரிமை, பொருளாதார நீதி, அரசியல் பிரதிநிதித்துவம் போன்ற பல்வேறு தளங்களில் அவர் முன்வைத்த சிந்தனைகளையும் பதிவு செய்கிறார்.
'இந்தியாவிற்கான தேசியப் பங்கீடு: வரலாறு பூர்வமான பகுப்பாய்வு எனும் ஆய்வுக்கட்டுரையை 1916 சமர்ப்பிக்கிறார்.அதில் பிரிட்டிஷாரின் தொழில் கொள்கை, உற்பத்தியாளர் நலன்,சமூக ஒடுக்குமுறைகள் அதில் பேசப்பட்டுள்ளது.
பரோடா மன்னரின் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டும் அவமானஙகளை சந்தித்தார்.அதனபின் தீண்டாமை ஒழிப்பு மாநாடு, மூக்நாயக் இதழ், லண்டனில் பொருளாதார படிப்பு, என செல்கிறது. அவர் தனது ஆசான்களாக கபீர், ஜோதிபாபூலே, புத்தர் ஆகியோரைக் கொண்டிருந்தார்.1927ல் மனு ஸ்மிரிதி எரிப்பு போராட்டம், அர்ச்சகர் தொழில் ஜனநாயக்கப்படுத்தல், சத்தியாகிரகம்
கோவில் நுழைவு போராட்டங்கள், போன்ற சமூகப் போராடஙகளை விரிவாக எடுத்துரைத்துள்ளனர்.
தனி வாக்காளர் தொகுதிகளும், தனி இட ஒதுக்கீடும் தீண்டாமையை ஒழிப்பதற்கான வழிகள் அல்ல என்றார் காந்தி.
தனி வாக்காளர் தொகுத்திக்கான வரலாற்று ரீதியிலான போராட்டங்கள், சீக்கியர்கள், முஸ்லீம்கள் அப்படியே தொடரலாம் எனில் தீண்டத்தகாதவர்கள் அவ்வறே தொடரலாமா என அண்ணல் கேள்வி எழுப்பினார்.அதற்குபின்வருமாறு உறிதி அளித்தார்.
காந்திஜி, "ஐந்தாண்டுகள் அல்லது என் வாழ்நாளுக்குள்" என்று தம் இறுதி முடிவாகக் கூறினார். ஆனாலும் காந்திஜி பத்தாண்டுகளுக்குத் தம் ஒப்புதலைக் கொடுத்தார். இந்தத் தீர்ப்பாணையின் மூலம் தனியே தேர்தலை நடத்துவதற்குப் பதிலாக, தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் தலைவர்கள் இரு கட்டங்களில் தேர்தல்களை நடத்திட ஒப்புக்கொண்டார்கள். நான்கு வேட்பாளர்கள், தனித் தாழ்த்தப்பட்ட வகுப்பு வாக்காளர்களிலிருந்து தேர்ந் தெடுக்கப்பட வேண்டும் என்றும், பின்னர் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நால்வரில் ஒருவரை, பொது வாக்காளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே அவர்கள் முன்வைத்த ஒப்பந்தமாகும். பின்னர் இந்த ஒப்பந்தம் 1932 செப்டம்பர் 24 சனிக்கிழமையன்று 5 மணியளவில் கையொப்பமிடப்பட்டது. இதுவே வரலாற்றில் பூனா ஒப்பந்தம் எனப் பதிவு செய்யப்பட்டது. இந்தப் பூனா ஒப்பந்தம் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1935ம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பின்னர் பூனா ஒப்பந்தம் மாற்றாக 1944 செப் 23ல் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி வாக்காளர் தொகுதி கோரி தீர்மானம் கொண்டு வந்தார்.சிறுபான்மையின அடிப்படை உரிமைகளை பெற்றிட வேண்டுமென தம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்.
ஹரிஜன இயக்கம், இந்து மதத்திலிருந்து வெளியேறும் போராட்டம்,இரட்டை வாக்குரினை அதிருப்தியை வைஸ்ராயிடம் கூறினார். உலகப்போர் வந்ததால் வைஸ்ராய் போர் முடிந்தவுடன் சரிசெய்வதாக கூறி,எக்ஸிக்யூட்டிவ் கவுன்சிலில் தொழிலாளர் உறுப்பினராக நியமிக்கபப்ட்டார். அப்போது வந்த வெள்ளையனே வெளியே இயக்கத்தை பற்றி அதிருப்தியை வெளியிட்டதால் விமர்சிக்கப்பட்டார்.இந்து முஸ்லீம் மட்டுமல்லாது தாழ்த்தப்பட்ட வகுப்பினரிடையேயும் முத்தரப்பு ஒப்பந்தம் அவசியம் என கூறினார்.
மேலும் பிரிட்டிசார் சென்றாலும் தாழ்த்தப்பட்டவர்க்கு அரசியலைப்பு சட்டத்தில் பாதுகாப்பு வழஙகிட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் அம்பேத்கரின் பங்களிப்பு நூலின் முக்கியமான பகுதியாக அமைகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம், ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமைகள் வேண்டும், சமூக நீதியின்றி உண்மையான ஜனநாயகம் சாத்தியமில்லை எனக்கூறுகிறார். அரசியலைப்பு சட்டத்தை வெற்றிக்கரமாக.முடித்த அரசியல் சூழல் காரணமாக 1951 செப் 27ல் அமைச்சரவையிலிரிந்து ராஜினாமா செய்கிறார்.1952 தேர்தலில் தோற்கடிக்கப்படுகிறார்.காஷ்மீர் பிரிவினையை நியாயப்படுத்தியது, பம்பாய் முஸ்லீம்களுக்கு தனித்தொகுதி கோரியது, கட்சியின் ஸ்தாபன பலவீனமும் தோல்விக்கு காரண்மாகின.1954 இடைத்தேர்தலிலும் தோற்கடிக்கப்பட்டார்.
தான் புத்த மதத்திற்கு மாறியதற்கான காரணத்தை எடுத்துரைக்கும் பகுதி சுருக்கமாகவும் ஆழமாகவும் தரப்பட்டுள்ளது.தலாய்லாமா விழாவை முடித்துக்கொண்டு டிசம்பர் 4 ல் மாநிலங்களவையில் பங்கேற்று டிச்மபர் 6 அன்று உறக்கத்திலேயே இறந்துவிட்டதை அவர் மனைவி அறிந்தார்.சர்க்கரை நரம்பு மண்டல நோயின் விளைவாக அவர் இறந்தார். விமானம் மூலம் பம்பாயில் அவர் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.இரங்கல் கூட்டத்தில் அவரது மகன் மறைவு குறித்து விசாரணை நடத்த முறையீடு செய்கிறார்.1957 நவம்பர் 26 மக்களவையில் நேரு அம்பேத்கர் இயற்கையாகவே மரணம் அடைந்ததாக குறிப்பிடுகிறார்.
*7மொழிகள் அறிந்திருந்தார். ராஜ்கிரிகா எனும் தனது பங்களாவை நல்ல நூலகமாக கட்டினார்.அங்கேயே தங்கி உறஙகுவார்.
*உஸ்மானியா, கொலம்பியா பல்கலைக்கழகங்கள் முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.
*தீண்டாமை எப்படி உருவானது என்பது குறித்து அவர் கூறுவதாவது: கி.பி. 200 வரை தீண்டாமை உருவாக வில்லை. பின்னர் அது கி.பி. 600 வாக்கில்தான் உருவாகத் தொடங்கியது. கி.பி. நான்காம் நூற்றாண்டு வாக்கில் பசுக்களைக் கொல்லுதல் மாபெரும் குற்றமாகக் கருதப்பட்டது. எனவே, தீண்டாமை என்பது கி.பி. 400 வாக்கில் வந்திருக்கலாம் என்கிற முடிவுக்கு அவர் வந்தார். புத்தமதத்திற்கும் பிராமணீயத்திற்கும் இடையிலான போராட்டத்திலேயே தீண்டாமை பிறந்தது என்கிறார்.
*அம்பேத்கதால் உருவாக்கப்பட்ட இந்திய குடியரசுக்கட்சி 1969ல் இரண்டாக பிளவுண்டது.1974ல் ஒன்றிணைந்தது.1975 மாநாட்டில் கவாய் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அம்பேத்கர் குறித்து அறிந்து கொள்ள உதவும் நூல்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு