#Reading_Marathon2026
#26RM009
Book No:29/150+
Pages:-361
உங்களால் வெல்ல முடியும்
-ஷிவ் கோரா
வெற்றி என்றாலே அது அதிர்ஷ்டத்தில் வந்துள்ளதாக எண்ணுவர்.தங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லையெனில் அதிர்ஷ்டம் இல்லையென்று அலுத்துக்கொள்வர்.இப்புத்தகம் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு மந்திரவார்தையாக ஒவ்வொரு அத்தியாயத்திலும் சொல்லியிருக்கார்.முதலாவதாக வெற்றிக்குத் தேவை மனப்பாங்கு என்கிறார்.இதற்கு உதாரணமாக விவசாயி-வைரம் கதையை சொல்கிறார். அக்கதை சொல்ல வந்த கருத்திற்குமிகவும் பொருத்தமாக இருக்கிறது.
நாம்.உடனிருக்கும் பணியாளர்களை கையாளவது பற்றிய கார்னெஜியின் விளக்கம்..நாம் தங்கத்தை தோண்டி எடுக்க முனையும்போது மண்ணை பார்க்க மாட்டோம். தங்கத்தை மட்டும் தேடுவதுதான் நம் நோக்கம் போல் நேர்மறை எண்ணங்களை பயன்படுத்துங்கள் என்கிறார்.
நல்லனவற்றை செய்வது, கடந்தகால தவறுகளை எண்ணிக்கொண்டு நில்லாமல் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைத்து செயலாற்றுவது,
அறிவு என்பது எதையும் விரைவாகக் கற்பது. திறமை என்பது கற்றதைச் செயல்படுத்துவது. செயல் திறன் என்பது கற்றதைச் செயல்படுத்தும் திறமையும் விருப்பமும் ஆகும். விருப்பம் என்பது திறமை படைத்த ஒரு மனிதரைச் செயல்திறன் உடையவராக மாற்றும் ஒரு மனப்பாங்காகும். எத்தனையோ திறமைசாலிகளெல்லாம் செயல்திறன் அற்றவர்களாக இருக்கிறார்கள். நல்ல மனப்பாங்கு இல்லாத மனிதர்களிடம் இருக்கும் திறமைகள் உபயோகமில்லாமல் போய்விடும்.ஆகவே அறிவையும் தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.
சுயமதிப்பை வளர்த்துக் கொள்வதன் மூலம் வெற்றி அடைய உள்ள விசயங்களை கதைகள் உரையாடல்கள் வழியே முன்வைக்கிறார்.வெற்றி என்பது புரியாத புதிர் அல்ல;மாறாக சில அடிப்படைக்கொள்கைகளை விடாமல் பயன்படுத்துவதால் வரும் விளைவு ஆகும்.ஒரு மதிப்பு வாய்ந்த இலக்கை படிப்படியாக அடைவதே வெற்றியாகும் என்கிறார் ஏர்ல் நைடிங்கேல்.உதாரணத்திற்கு கூட்டுப்புழுவில் இருந்து வண்ணத்துப்பூச்சி வெளிவரும் சமயத்தில் யாரும் உதவக்கூடாது என்றார் ஆசிரியர். ஆனால் ஒரு மாணவர் அப்பூச்சி போராடுவதை பார்த்து உதவியதால் அது இறந்தது. ஆசிரியர் உடனே அப்போராட்டம் தான் அப்புச்சி உயிர்வாழி முக்கியமானது என்று விளக்கி தடைகளை தாண்டினால் உயிர்வாழ்வது சாத்தியம் என்றார்.
சில வரலாற்று செய்திகள் நம்பிக்கை ஊட்டும் விதத்தில் உள்ளன
"ரிச்சர்ட் ப்ளெச்னிடென், 1904 இல், செயின்ட் லூயிஸ் உலகக் கண்காட்சியில் இந்திய டீயின் விற்பனையை மேம்படுத்த எண்ணினார். மிகவும் சூடாக இருந்ததால், அவரது டீயை யாருமே மாதிரிக்குக்கூட குடித்துப் பார்க்கவில்லை. மற்ற எல்லாக் குளிர்பானங்களும் நன்றாக விற்றுக் கொண்டிருப்பதைப் கவனித்தார். தன் டீயைக் குளிர வைத்து, சர்க்கரையுடன் கலந்து விற்கலாம் என்ற யோசனை திடீரென்று அவருக்குத் தோன்ற, அப்படியே அவர் செய்தார். மக்களும் அதை விரும்பினார்கள்.அதுவே உலகிற்கு குளிர்ந்த டீயை அறிமுகப்படுத்திய நிகழ்ச்சியாகும்.
ஒரே வேலைதான். ஆனால் பணியாளர்கள் வெவ்வேறு மனநிலையில் பணியை ஏற்பதால் அயர்ச்சி ,எதிர்மறைத்தன்மை ஏற்படுகிறது. இதை களைவதற்கான வழியை சொல்கிறார். பணியிடத்தில் அகத்தூண்டல், புறத்தூண்டல் செயல்ப்டும் விதம் அழகியகதை மூலம் விளக்கப்படுகிறது. "ஒரு பணியாளரிடம் வாடிக்கையாளர் 'இங்கே எப்போதிலிருந்து வேலை செய்கிறீர் எனக் கேட்டதற்கு என்னை அவர்கள் வெளியேற்றிவிடுவேன் என பயமுறுத்திய நாளிலிருந்து என்று பதிலளித்தார்.இதற்கு நேர்மாறாக ஊக்கம், பொறுப்புணர்வு மிகுந்த அகவயத்தூண்டல் எவ்வாறு ஊழியர்களை பணிசெ ய்ய வைக்கிறது என்பதன் உதாரணத்தையும் நமக்குத் தருகிறார்.
வெற்றி பெறுவதற்கு சுய கெளரவம் மிக முக்கியம். பென்சில் விற்கும் பிச்சைக்காரரிடம் நீங்களும் என்னை போல் வியாபாரி தான் என்று கூறி பிச்சையிடாமல் பென்சில் வாங்கியது அவரை ஊக்குவித்து வெற்றியடைய வைத்தது.பொருள் பற்றிய அறிவை விட மக்களைப் பற்றிய அறிவுதான் வியாபாரிக்கு மூலதனம்.ஹென்றி போர்ட் v8 என்ஜினை உருவாக்க அவரின் உதவியாளர்கள் சாத்தியமில்லை என்றனர். இறுதியில் அவரே ஊக்குவித்து உருவாக்கினார். கல்வியின் வன்முறையைத் தாண்டி கற்பனையை ஓட விட்டதால் இக்கண்டுபிடிப்பு சாத்தியமென்றார்.
அகம்பாவம் என்பது முட்டாள்தனத்தின் வலி தெரியாமல் இருக்கச் செய்யும் மயக்க மருந்தாகும் என்கிறார் நியூட் ரோக்னே. வெற்றி பெற தேவையானது அகம்பாவமில்லாமல் இருப்பது.எப்போதும் மற்றவர்களிடம் நன்றியுடன் இருப்பது முக்கியமாகும்.ஒரு பவுண்ட் கெட்டிக்காரத்தனத்தை விட ஒரு அவுன்ஸ் விஸ்வாசம் அதிக மதிப்பு உடையது.நேர்மையாய் இருப்பது உண்மையாய் இருப்பது பொறுமையுடன் செயல்படுவது என ஒவ்வொரு அத்தியாத்திற்கும் ஏற்ற பொன்மொழிகள் சிறு துணுக்குகள், கதைகள் முடிந்தபின் அதற்குரிய செயல்திட்டங்கள் விளக்கமாய் கொடுக்கப்பட்டுள்ளன.
இலக்குகளே வெற்றியை அடைய கவனச் சிதறலின்றி ஓடவைக்கிறது.
ஒரு தரமான புகைப்படம் எடுக்க கேமராவிற்கு ஃபோகஸ் முக்கியமோ அதுபோல இலக்கும் முக்கியமானது.
அர்த்தமில்லாத இலக்கையும் குறிப்பிடுகிறார்..ஒரு நாய் ஒவ்வொருகாரையும் பின் தொடர்ந்து குரைக்கும்.அந்த காரை பிடித்து விட்டால் அந்த காரை வைத்து அந்த நாய் என்ன செய்ய இயலும் என கேள்வி எழுப்பும்போது அர்த்தமற்ற இலக்குகளை பற்றிய தெளிவு நமக்கு கிடைக்கிறது.
நூற்றுக்கணக்கானவர்களோடு ஒரு மூன்று நபர்கள் மராத்தான் பந்தயத்தில் ஓடினார்கள். பதக்கத்தை வென்றதோ நான்காவது நபர். அதற்காக இந்த மூவரும் தோல்வியடைந்து விட்டார்கள் என்று பொருளாகுமா? இல்லவே இல்லை. அந்த மூவருமே வெவ்வேறு
குறிக்கோள்களுடன் பந்தயத்தில் கலந்து கொண்டார்கள்.
முதலாமவர், தன் நீடித்த உறுதிப்பாட்டைச் சோதிக்க ஓடினார், இரண்டாமவர், முன்னர் தான் நிகழ்த்தியதை விட முன்னேற்றிக் காட்ட விரும்பினார்;மூன்றாமவர், தன் வாழ் நாளில் அதற்கு முன்னால் மராத்தானில் ஓடியதே இல்லை. அவரது குறிக்கோள் பந்தயத்தில் முழுமையாக ஓடி இலக்குக் கோட்டை அடைந்துவிட வேண்டும் என்பதேயாகும். அதனையே அவரும் செய்தார். இவை நமக்கு என்ன சொல்கின்றன? வெவ்வேறு குறிக்கோள்களை உடைய அந்த மூவரும் அவற்றை நிறைவேற்றினார்கள். ஆகவே, யார் பதக்கத்தை வென்றிருந்தாலும் அவர்கள் எல்லோருமே வெற்றியாளர்களே.
மார்க் ட்வைன் சொன்னதுபோல, ஒரு கௌரவத்தைப் பெற்றிருந்து, அதற்குத் தகுதியற்று இருப்பதை விட அதைப் பெறும் தகுதி இருந்தும், அதனைப் பெறாமல் இருப்பதே சிறந்ததாகும். ஏனென்றால், மதிப்பு என்பது தகுதி பெற்று இருப்பதே தவிர வேறு எதையும் பெற்றிருப்பது இல்லை.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு