துவக்க காலத்தில் வெளியூர்களிலிருந்து செய்திகளைத் திரட்டியவர்கள் அவற்றை கடிதங்கள் மூலம் ஆசிரியர் குழுவிற்கு அனுப்பி வைத்தனர்.சமஸ்கிருதத்தில் கடிதத்திற்கு 'நிருபம்' எனப் பெயர்.இதனால் செய்தி தருபவர்கள் 'நிருபர்கள்' என அழைக்கப்பட்டனர்
#செய்திகள்..நிஜமும்,நிழலும்
-கோமல் அன்பரசன்
எம்.ஏ ஆங்கில இலக்கியம் படிக்கும் போது இரண்டாம் ஆண்டில் இதழியல்(Journalism) பற்றி ஒரு பேப்பர் இருக்கும்.அதை படிக்கும் போதுதான் இதழியல் குறித்து முழுமையாய் தெரியவந்தது.ஏழாம் வகுப்பு படிக்கும் போது..எங்க அப்பா தமிழ் வாசிக்க தலையங்கம் படிக்கச் சொல்வாரு.அப்டீனா னு கேட்டவுடன் ஒரு பத்திரிக்கையின் ஆன்மா போன்றது தலையங்கம் என்பார்.இதழியலில் எடிட்டர் மற்றும் பத்திரிக்கையின் கருத்தாக நடுப்பக்கத்தில் இடது ஓர பெட்டியில் இருப்பதாக அன்றுதான் அறிந்தேன்.
தினத்தந்தி ஆதித்தனாரின் இதழாளர் கையேடுதான் நிருபர்களுக்கான பாலபாடம்.அதற்கு அடுத்து சுஜாதா ஒரு கட்டுரையில் கோமல் அன்பரசனின் "செய்திகள் நிழலும்,நிஜமும்" எனும் புத்தகத்தை மேற்கோள் சொல்லியிருந்தார். பல ஆண்டுகள் தேடுதலின் பயனாக பழைய புத்தகக் கடையில் வாங்கி விட்டேன்.65 தலைப்புகளில் எவ்வாறு எழுத வேண்டுமென மிக சுவாரஸ்யமாய் சொல்லியிருப்பார்.
ஜெர்னலிசம் எனும் சொல் லத்தின் மொழிச்சொல்லான டையர்னலில் இருந்து பிறந்தது.இதன் பொருள் 'அன்று'.அன்றாடம் நடந்தததை எழுதிவைக்கும் ஏடு 'ஆர்னல்'.இதுவே மருவி ஜெர்னலிசமாகிவிட்டது.
சுவாரஸ்யமானதை செய்தியாக்க வேண்டும்.வடிகட்டி மிக முக்கியமானதை எழுத வேண்டும்.
உலகலாவிய செய்திகளை ராய்ட்டர் நிறுவனமும்,ஏபிடிஎன்,இந்தியாவில் PTI,UNI இரு செய்தி நிறுவனங்களும் செய்திகளை பத்திரிக்கைகளுக்கு தரும். ஐந்து கேள்விகள் செய்திக்கு தேவை என்ன,ஏன்,எப்பொழுது, எங்கே,யார்? இவை ஐந்துமே செய்திகளை உருவாக்கும்.
ஒரு செய்தியை வாக்கியமாய் எழுதும்போது எப்படி எழுத வேண்டும், நடை,வசீகர வார்த்தை குறித்து விளக்கியிருப்பார்.ஒருமுறை திருப்பூர் புத்தகத் திருவிழாவில் திருப்பூர் கிருஷ்ணன் பகிர்ந்து கொண்ட சம்பவம்.. சென்னை உஸ்மான் ரோடு ஒரு வழிப்பாதையாகிறது.இதனால் மக்களுக்கு ஏற்படும் சிரமம் குறித்து கட்டுரை எழுதினாராம்..ஆனால் தலைப்பு எப்படி வைத்தாலும் பொருத்தமாயில்லை.. யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில் நா.பா உள்ளே வந்த அறிந்து கொண்டு தலைப்பு சொன்னாராம்
"உஸ்மான் சாலை ஒரு வழி'யாகிறது'
சிலேடையில் என்ன ஒரு அருமையான தலைப்பு என சிலாகித்தாராம்.
இவ்வாறு ஒரு கட்டுரையின் உள்ளடக்கத்தை ஒரே வரியில் சொல்லும் ஆற்றல் அளப்பறியது.
ரஜினி குறித்த கட்டுரையில் தி.கண்ணன் சார் விகடனில் எழுதிய ரஜினியாய் இருப்பதன் கஷ்டம் ரஜினிக்கு மட்டும் தான் தெரியும்"எனும் இறுதி பஞ்ச் இன்னும் எவர்கிரீன்.
"கண்ணகி என்ன கரடி பொம்மையா" என ஞாநி எழுதிய ஒரு கட்டுரை அப்போது வைரலானது.
பரபரப்பான செய்திகளை விறுவிறுப்பாக தரவேண்டும். எந்த ஒரு செய்தியையும் புதிய கோணத்தில் தர வேண்டும்.(தினத்தந்தியின் புதிய உக்தியாக பத்தி பிரித்து7 பக்கம் 3 ம் பத்தி பார்க்க அப்போது மிகுந்த சுவார்ஸ்யமாய் இருந்ததாம்). தலைப்பைப்போல முதல் வரியும் மிகவும் முக்கியம்.
ஒரு குறிப்பிட்ட துறையில் முழுஅறிவு அவசியம்.ஆங்கிலமும் தமிழும் இதழியலாளருக்கு முக்கியமானது. எல்லா துறைகளிலும் நட்பு வட்டத்தை ஏற்படுத்தி வைத்திருக்க வேண்டும்.
நீதிமன்ற வழக்கு குறித்து எழுதும் போது தனித்த கவனம் வேண்டும்.
ஒவ்வொரு கட்டுரை முடிவிலும் ஒரு பெட்டி செய்தி இருக்கும்.அதில் இதழியல் குறித்து சுவாரஸ்யமான தகவல் சொல்லப்பட்டிருக்கும். எந்த ஒரு செய்தியை எவ்வாறு சேகரிப்பது, எழுதுவது, தலைப்பிடுவது குறித்து எளிமையாகவும்,உதாரணத்துடன் சொல்லியிருக்கிறார்.நூலின் இறுதியில் கலைச் சொற்கள் இணைத்திருப்பது சிறப்பு.இளம் பத்திரிக்கையாளர்களுக்கு ஏற்ற நூல்.
#ரசித்தது
*வலதுபுறங்களில் வரும் செய்திகளே முதலில் கண்ணில் படும்.இதனால் முக்கிய செய்திகள் வலது புறம் முதலில் நிரப்பப்படுகின்றன (ஆமாம்ல)
*முதல் பக்கம் மட்டும் செய்தி ஆசிரியர் வடிவமைப்பார்.மற்ற பக்கங்கள் துணை ஆசிரியர்களால் நிரப்பப்படும்.
*news-சாலை விபத்தில் 20 பேர் இறந்தால் செய்தி
Views-கடந்த சில மாதங்களில் தொடரும் விபத்து குறித்து எழுதுவது
*திரு,திருமதி,செல்வன்,செல்வி.. பெயர் முடியும்போது அவர்கள் என குறிப்பிட்டு எழுதுவது இல்லை
*கூறப்படுகிறது,தெரிகிறது, நம்பப்படுகிறதுஎன இது போன்ற ஸ்கூப் வார்த்தைகள் போட்டுக் கொள்ளலாம்.
*செய்தி வறட்சி இருக்கும் நாட்களில் கட்டுரை,சிறப்புச் செய்திகள் தயாரித்து வைத்திருக்க வேண்டும்.
*வேகம்+நேரம்+கவனம் அவசியம்
*ஒரு புகைப்படமிட்டு நச் வரிகளை சேர்ப்பதும் ஒரு உக்தி.
*ஒரு வாக்கியத்தில் அதிக பட்சம் ஏழிலிருந்து எட்டு வார்த்தைகளுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
#நான் படித்திருக்கிறேன்.காலை பத்து மணிக்கு எடிட்டர் மற்றும் உதவியாளர்களுடன் கலந்துரையாடல் நடந்து அந்த நாள் செய்திகளை அலசி அதிலிருந்து தலையங்கம் தயாரிப்பார்களாம். உதவியாசிரியர்கள் ஒன்றிணைந்து இறுதி வடிவம் கொடுப்பார்களாம். எடிட்டர் என்பவர் பரந்து பட்ட அறிவும், கூர்ந்த நோக்கும் இருந்தால் மட்டுமே முடியும்.செய்தியே இல்லாமல் இருந்தால் என்ன ஆகும்னு யோசித்துள்ளேன்.ஏதோ ஒரு ஆண்டு அப்படி நிகழ்ந்து ஒரு நாள் இன்று செய்தி ஒன்றும் இல்லை என வந்ததாம்.
டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது வந்த கார்ட்டூன் வசனம் பிரபலமானது.ஒரு படகில் ஐவர் ஏற உத்தரவிட்டபோது ஆறாவதாய் ஒரு கர்ப்பினி பெண் வந்தாராம்..ஐந்தாம் நபர் எழுந்து வழிவிட்டாராம்.அதற்கு ஒரு பஞ்ச் "இயற்கை மனிதனிடம் தோற்ற இடம் " என்று.
இன்றைய உலகில் நாளிதழ் படிப்போர் குறைந்து விட்டனர்.அதான் போன்லயே வருதே அப்புறம் என்னனு கேட்கலாம். நீங்கள் போனில் படித்தால் ஒரு செய்தியை மட்டும் அறிந்து கொள்வீர்கள்.அதுவே நாளிதழில் படித்தால் பல செய்திகள், சொற்களை வாசிக்கலாம்.
தொடர்ந்து பகிர்வோம்
தோழமையுடன் மணிகண்டபிரபு