Thursday 29 December 2016

வலைபாயுதே பெஸ்ட் ஆஃப் 2016

ஆனந்த விகடன்Jan,4th 2017
2016 - பெஸ்ட் ஆஃப் வலைபாயுதே

twitter.com/Rajinthan077: பேசிட்டு இருந்த பொண்ணு, திடீர்னு பேசாம இருந்தா... அவங்க வீட்ல பேசி முடிச்சுட்டாங்கனு அர்த்தம்!

twitter.com/chevazhagan1: என் காதல் கதையை சுவாரஸ்யமாகக் கேட்டுக்கொண்டிருந்த மனைவி, ‘என்னங்க, கதையில ஒரு ட்விஸ்ட்டுகூட இல்லை’ என்கிறாள் # அடிப்பாவி... அந்தத் திருப்புமுனையே நீதான்டி!

twitter.com/yugarajesh2: சூர்யா, நிஜமாவே சிங்கமாக மாறுகிற வரைக்கும் ஹரி படம் எடுத்துக்கிட்டே இருப்பார்போல! # `சிங்கம்-3’

twitter.com/chevazhagan1: சின்ன வயசுல எங்க அப்பாவால வாங்கித் தர முடியாத சைக்கிளை என் மகனுக்கு வாங்கித் தரணும்னு லட்சியமா வெச்சிருந்தேன். ஆனா, அவன் பைக் கேட்கிறான்!

twitter.com/withkaran: மிக்ஸிக்கு ஒரு சைலன்ஸர் கண்டுபிடிங்கய்யா... ‘சட்னி அரைக்கிறேன்’னு காலையிலயே எழுப்பிவிட்டுறாங்க!

twitter.com/venkatesh6mugam: பாரில் இருந்து வரும் ஆணும், பார்லரில் இருந்து வரும் பெண்ணும் ஒரு `மிதப்போடு’தான் வெளியே வருகிறார்கள்!

twitter.com/g_for_Guru: பர்த்டே பார்ட்டியில் ரிட்டர்ன் கிஃப்ட் குடுக்கிறப்ப, பிரிக்க முடியாத மாதிரி பேக் பண்ணிக் குடுங்கப்பா, அங்கேயே பிரிச்சு அங்கேயே அடிச்சுக்குதுங்க!

twitter.com/udanpirappe: அம்மா அழைப்பு மையத்தை 20,000 பேர் தொடர்புகொண்டனர் - ஜெயா நியூஸ் # இதுக்குப் பெருமைப்படக் கூடாது சென்றாயன்... வெட்கப்படணும்!

twitter.com/king_prasath: இந்தப் பூமி, வேறு ஒரு கிரகத்தின் நரகமாகவும் இருக்கலாம்!

twitter.com/Sathik_Twitz: பொண்ணுங்களைப் பொறுத்தவரையில், அவங்க யார் மேல இம்ப்ரஸ் ஆகுறாங்களோ... அவன் நல்லவன்; அவங்க மேல யார் இம்ப்ரஸ் ஆகுறானோ... அவன் கெட்டவன்!

twitter.com/sowmya_16: அஞ்சு நிமிஷம் யூஸ் பண்ற ஏடிஎம் மெஷின்ல Select Language-ல English-னு செலெக்ட் பண்ற நாமதான், `எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்’னு சண்டை போடுறோம்!

twitter.com/i_Soruba: சாமி கும்பிடும்போது முகத்தை சீரியஸா வெச்சிக்க ட்ரை பண்ணுதுங்களே... அப்ப குழந்தைகள் அழகோ அழகு :-)

twitter.com/KartikThoughts: ராத்திரி முழுக்க புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வராது. ஆனா, காலையில எந்த பொசிஷன்ல படுத்தாலும் தூக்கம் வருது!

twitter.com/meenammakayal: எதைப் பற்றியும் ஓர் அளவுக்கு மேல் சிந்தித்தால், எல்லாம் முட்டாள்தனமாகத்தான் தோன்றுகிறது!

twitter.com/deebanece: நான் கிஸ்ஸிங் ஸ்மைலி அனுப்பினதுக்கு, நீ செருப்பு ஸ்மைலி அனுப்புனியே அப்போ அது ‘லவ்’தானே ஜெஸ்ஸி?!

twitter.com/VignaSuresh: அர்த்த ராத்திரியில் தெர்மக்கோல் நறுக்கிக்கொண்டிருக்கிறேன். பெற்றோரை டிசைன் டிசைனாக டார்ச்சர் செய்வது பற்றி சி.பி.எஸ்.சி பள்ளிகள் நன்கு அறியும்!

twitter.com/indirajithguru: பையில் இருந்த சிகரெட் காணாமல்போகும் வரை, மகன்கள் தோளுக்கு மேல் வளர்ந்த விஷயம் பல தந்தைகளுக்குப் புரிவது இல்லை!

twitter.com/teakkadai: வேறு எந்தக் கணத்தையும்விட என்னைத் தோல்வியாளனாக உணர்வது, பிள்ளைகளை அடித்து முடித்த மறுகணம்தான்!

twitter.com/SettuOfficial: `யாரடா லவ் பண்ற?’னு கேட்கிறவன் நண்பன்; `இப்ப யாரடா லவ் பண்ற?’னு கேட்கிறவன் உயிர் நண்பன்!

twitter.com/naiyandi: ரீசார்ஜ் செய்யக்கூட காசு இல்லை என்பதுதான் வறுமையின் அடையாளமாக மாறி வருகிறது!

twitter.com/meenammakayal: `இல்லை’ என்பதைவிட `இருந்தது’ என்பது வலிமிக்கது!

twitter.com/Lalithajeyanth:
நான்: வாவ்..! Rainbow பாருடா!
மகன்: நான் அப்பவே பார்த்துட்டேன்மா.
நான்: ஏன்டா என்கிட்ட சொல்லலை?
மகன்: சொன்னா, நீ rainbow-க்கு ஸ்பெல்லிங் கேப்ப.

twitter.com/indirajithguru: என் அம்மாவுக்கு என்னைவிட நன்றாகப் பொய் சொல்லவரும் என்பது, எனக்குப் பெண் பார்க்கப் போகும் போதுதான் தெரியும்!

twitter.com/kattathora: ஸ்கூல்ல இருந்து திரும்பும் மகள், `அப்பா... இன்னிக்கு என் உண்டியல்ல இருந்து காசு எடுத்தியா?’ எனக் கேட்கும்போது, கொஞ்சம் மானக்கேடாதான் இருக்கு!

twitter.com/pshiva475: சண்டைக்கு அப்புறம் மனைவி என்ன சொல்லியும் சமாதானம் ஆகலைன்னா, உடனே சமையலறைக்குள்ள போயி, எல்லா பாட்டில்களோட மூடிகளையும் இறுக்க மூடிவிட்டுத் தூங்கிவிடுங்கள்!

twitter.com/navi_n: நாம் கழுவிவைத்த பாத்திரத்தை மறுபடியும் கழுவிவிட்டு உபயோகிப்பது எல்லாம், மனைவி போகிறபோக்கில் செய்யும் அவமானம்!

twitter.com/paidkiller: என்னை நானே கதறக்கதற அடிச்சு, மிதிச்சு, தரதரனு இழுத்துட்டுப்போறேன்... ஆபீஸுக்கு!

twitter.com/Shiva__27: சாப்பிடும்போது `கடைசியில ரசம் ஊத்திக்கணும்’னு சொல்றது, தட்டை ஈஸியாக் கழுவுறதுக்காக ஏதோ ஒரு பொண்ணுதான் கண்டுபிடிச்சிருக்கணும்.

twitter.com/mekalapugazh: சிவராத்திரிக்கு விடுமுறை அறிவிப்பது என்றால்... அடுத்த நாள்தானே விடணும்!

twitter.com/jroldmonk: ‘வீடு வாங்கியிருக்கேன்’, ‘காரு வாங்கியிருக்கேன்’னு சொல்றாங்க. ஆக்சுவலி நீங்க எல்லாம் கடன் வாங்கியிருக்கீங்க மக்கா!

twitter.com/withkaran: தே.மு.தி.க-வுல இனி எல்லாம் அண்ணிதானாம். `நான் எல்லாம் செக் பண்ணிட்டேன். நீங்க வீட்டைப் பூட்டிட்டு மட்டும் வாங்க’னு கேப்டன்கிட்ட சொல்லிருச்சுபோல!

twitter.com/thalabathe: பிரிஞ்சதுக்கு அப்புறம் `என்னைய மறந்துடு’னு பொண்ணுங்க கெஞ்சின காலம் போயி, `இப்ப தயவுசெய்து செல்ஃபியை டெலிட் பண்ணிடு’னு வந்து நிக்குதுக!

twitter.com/VignaSuresh: `இந்தா’ என, குழந்தை இரண்டு கைகளையும் நீட்டி தன்னையே தருகிறது!

twitter.com/urs_priya: அன்னக் கரண்டியை கைபோலவே வடிவமைத்தவரின் ரசனையை எண்ணி வியக்கேன்!

twitter.com/Lekhasri_g: ஒரு நாளைக்கு அஞ்சு டிரெஸ் போட, பணக்காரனாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை; குழந்தையாக இருந்தாலே போதும்!

twitter.com/ BoopatyMurugesh: ஆபீஸ்ல வேலை பார்க்கலாம்னு உட்காரும்போது `மீட்டிங்’னு கூட்டிப்போய்டுறாய்ங்க. மீட்டிங்ல வெச்சு `என்ன வேலைபார்த்த?’னு கேட்கிறாய்ங்க. :-(

twitter.com/ thoatta: `யார் யாருக்கு எவ்வளவு கோடி?’ங்கிறது எல்லாம் வைகோ தெளிவா சொல்றாரு, அப்ப த்ரிஷா, நயன் சம்பளம் எல்லாம் நிச்சயம் தெரிஞ்சுவெச்சிருப்பார்ல!

twitter.com/ aroobii: தனிமனிதத் தவறுகளை `தனிமனித சுதந்திரம்’ எனக் கடந்துவிடவும் ஏற்றுக்கொள்ளவும் பழகுகிறீர்கள்!

twitter.com/ arattaigirl: `நல்லா வாழ மாட்ட’ என்பதைவிட `நல்ல சாவு வராது’ என்பதுதான் மோசமான சாபம்!

twitter.com/ KingViswa: ஒரு பிரபலம் தன் நண்பனாக இருக்கவே அனைவரும் விரும்புகின்றனர். தன் நண்பன் பிரபலமாவதை நிறையப் பேர் மனதார விரும்புவதும் இல்லை; ரசிப்பதும் இல்லை!

twitter.com/amuduarattai: பேக்குக்குள் ரகசிய அறை, ரகசிய அறைக்குள் பர்ஸ், பர்ஸுக்குள் போன், போனும் சைலன்ட் மோடு... என, பெண்களின் போன்கள், நான்கு அடுக்குப் பாதுகாப்பு நிறைந்தவை!

twitter.com/Rajeshveeraa: சின்னக் குழந்தைகளுக்கு நல்ல பழக்கத்தைச் சொல்லிக்கொடுங்கய்யா... சிப்ஸ் பாக்கெட்ல ரெண்டு எடுத்தா கத்துது!

twitter.com/sorubaravi: நமது பொய்யைச் சட்டெனக் கண்டுபிடிப்பவர், ஏற்கெனவே அதைச் சொன்னவராக இருக்கக்கூடும்!

twitter.com/kavathu: மகன்களைப் பெற்ற அம்மாக்களுக்கு மட்டுமே தெரியும்... அவனை மளிகைக்கடைக்கு அனுப்புனா மீதி காசு வராதுனு!

twitter.com/ikrthik: கடிகாரத்தை மட்டும், எந்த நேரத்தில் பழுதானது எனச் சரியாகச் சொல்லிவிடலாம்!

twitter.com/Prazannaa: டென் எண்ணுறதுக்குள்ள பால் குடிச்சுறணும்... ஓ.கே-யா? நான் பால் குடிச்சு முடிக்கிற வரைக்கும் டென் எண்ணிட்டு இருக்கணும். ஓகே-யா? # மகளதிகாரம்!

twitter.com/Koothaadi: நாம் நேசிக்கும் ஒரு புத்தகத்தை யாரேனும் படிப்பதைப் பார்க்கையில், அந்தப் புத்தகம், நமக்கு ஒருவரைப் பரிந்துரைப்பதுபோல் உள்ளது!

twitter.com/mekalapugazh: கை கழுவும் இடத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்தால், நிறையத் தண்ணீர் மிச்சம் பிடிக்கலாம்!

twitter.com/chevazhagan1: ரெண்டு கொசுவத்தியைத் தனித்தனியாப் பிரிக்கிறதுக்கு நான் படுறபாடு இருக்கே... ஸ்ஸப்பா! எப்பிடித்தான் இந்த இந்தியா, பாகிஸ்தான் எல்லாம் பிரிச்சாங்களோ!

twitter.com/arattaigirl: பழக்கடையில ஒரு அம்மா.... `ஸ்லீவ்லெஸ் திராட்சை இருக்கா?’ - கண்டிப்பா இங்கிலீஷ்ல பேசியே தீரணுமா?

twitter.com/unmaivilambbi: எல்லோர் அலைபேசியிலும் உள்ளது... முன்பு ஒருகாலத்தில் எல்லாமுமாக இருந்த ஒரு நபரின் தொலைபேசி எண்.

twitter.com/manipmp: `நாளையில் இருந்து படிக்கிறேன்’னு சொன்னவனும், `நாளையில் இருந்து குடிக்கலை’னு சொன்னவனும் ஜெயிச்சது இல்லை!

twitter.com/vandavaalam: டிக்கெட் புக் பண்ணாம, ஊருக்கு பஸ் ஏறிய கடைசித் தலைமுறை நாம்!

twitter.com/pshiva475: லேடீஸ் துணிக்கடையில சேல்ஸ்மேன்கிட்ட இருந்து திட்டுவாங்காம தப்பிக்கிற ரெண்டு மெத்தட்ஸ்... இந்த கலர்ல வேற டிசைன் இருக்கா, இந்த டிசைன்ல வேற கலர் இருக்கா?

twitter.com/kumarfaculty: `ஒரு போன்கூடவா உன்னால செய்ய முடியலை’ என என்னிடம் கோபப்பட்டவரிடம் போனும் என் நம்பரும் இருந்தன!

twitter.com/cablesankar: மதர்ஸ் டேவுக்கு ரகசியமாக கிஃப்ட் வாங்கிவைக்கும் புள்ளைங்க, ஃபாதர்ஸ் டேக்கு வந்து `என்ன ட்ரீட்?’னு கேக்குதுங்க. அப்பனா பொறந்தாலே கஷ்டம்யா!

twitter.com/urs_priya: கணவனை ஒரு சின்ன வேலை செய்யவைக்க எளிய வழி... அந்த வேலையை மகளைச் செய்ய சொல்வதே :-)

twitter.com/bommaiya: ஓடுற அத்தனை ட்ரெய்ன்லயும் ஓப்பன் டாய்லெட்டைக் கட்டிவெச்சுட்டு, `திறந்தவெளியில் மலம் கழிக்காதீர்கள்’னு பல ஆயிரம் கோடி செலவுல அட்வைஸ் பண்றாங்க!

twitter.com/David_EXIM: `உங்களை மாதிரி இல்லை. நம்ம பையனை நான் நல்லவனா வளர்க்கிறேன்’கிறா... # எவ்ளோ நுட்பம்

twitter.com/aruntwitz: மொபைல் கேமராவுக்கு விதவிதமா போஸ் கொடுக்க தெரியுது. பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுக்கு மட்டும் முகத்தை எப்படி வெச்சுக்கிறதுனுதான் தெரியலை!

twitter.com/iKappal: குழந்தையைத் தூங்கவைக்கிறது இருக்கே... கை வலிக்க அரை மணி நேரம் தொட்டிலை ஆட்டி முடிச்ச பிறகு உள்ளே பார்த்தா, `நீ யார்றா கோமாளி?’னு பார்க்கும்!

twitter.com/Sandy_Offfl: டெக்னாலஜி தெரியாத பெற்றோர்களைக் கிண்டல் செய்யாதீர்கள். கீரை பேர்கூட என்ன எனத் தெரியாமல்தான் வளர்ந்து கொண்டிருக்கிறோம்!

twitter.com/vandavaalam: எங்கே பார்த்தாலும்... யாரைப் பார்த்தாலும் வெயிட் குறைக்கிறதுலேயே குறியா இருக்காங்க. ரெண்டு கிலோ குறையும்னா மூளையைக் கூடக் கழட்டி வெச்சுருவானுகபோல!

twitter.com/nithya_shre: `அண்ணா’ எனச் சொல்லி பல கட்சிகள் வளர்ந்துள்ளன; பல காதல்கள் அழிந்துள்ளன!

twitter.com/mpgiri: எல்லாம் தெரிந்த பரமாத்மாவுக்கே தெரியாதது ஒன்று உண்டு என்றால், அது... இலையில் ஊற்றிய ரசம் எந்தப் பக்கம் செல்லும் என்பதுதான்!

twitter.com/srivishiva: குழந்தையின் காய்ச்சலுக்கு, குடும்பமே துவண்டுவிடுகிறது!

twitter.com/teakkadai: கட்டும் சேலைக்கு மேட்ச்சாக, பெண்கள் தினமும் தங்கள் மொபைல் கேஸை மாற்றிக்கொண்டிருக்கும் வரை பூமி பூப்பூப்பதை நிறுத்தாது!

twitter.com/twittornewton: `நம்மால் முடியாது’ என நினைப்பது தன்னம்பிக்கைத் துரோகம்!

twitter.com/iMaandiyar: டேய்... அது என்னங்கடா அடுத்தவன் காலை மிதிச்சுட்டு, உங்கள் கையில முத்தம் குடுத்துட்டுப் போறீங்க :(

twitter.com/chevazhagan1: டாஸ்மாக் பார்ல போன் வந்ததும் ஒருத்தன் தனியா போய்ப் பேசுறான்னா, போன் பண்ணது ஒண்ணு பொண்டாட்டியா இருக்கணும்; இல்ல மேனேஜரா இருக்கணும்!

twitter.com/Ulaganandha: ஹெட்போன்ல வலது இடது இருக்கா?! இந்த விஷயம் தெரியாம 25 வருஷம் வாழ்ந்துட்டோமே... ச்சே!

twitter.com/sathik_twitz: ஒரு செகண்ட்ல கொலவெறி உண்டாக்குறவன், டிராஃபிக்கே இல்லாத ரோட்ல பின்னாடி இருந்து ஹார்ன் அடிக்கிறவன்தான்!

twitter.com/vandavaalam: செக்யூரிட்டியே ஏழு மொழி பேசுறான்னு சந்தோஷப்படுறதா, இல்லை... ஏழு மொழி தெரிஞ்சவன் செக்யூரிட்டியா இருக்கானேனு வருத்தப்படுறதா?

twitter.com/karthekarna: எவனாவது சீரியஸா எழவு நியூஸ் சொல்லப்போறான். தாடையைத் தடவிக்கிட்டே ‘மகிழ்ச்சி’னு சொல்லிருவோமோனு பயமா இருக்கு. `கபாலி’ ஃபீவர்!

twitter.com/HaridiBaby: கழுதைகிட்ட 100 ரூபா நோட்டைக் கொடுத்தா, அப்படியே சாப்பிட்டுடும். அதுக்குத் தெரியாது அதுல மூணு கொயர் பேப்பர் வாங்கிச் சாப்பிடலாம்னு!

twitter.com/Mithrasism: வேலை பிடிக்கலைன்னா உடனே வேலையைவிடுற தைரியம்தான்... பொருளாதாரச் சுதந்திரம்!

twitter.com/aruntwitz: குப்பை போடுவதும், தொப்பை போடுவதுமே நாட்டின் தலையாயப் பிரச்னைகளாக இருக்கின்றன!

twitter.com/ashokcommonman : `ஜோக்கர்’ படம் ஆரம்பக் காட்சியில் ஒரு மணல் லாரி கிராமத்தைவிட்டுப் போகுது. ஒரு ஆள் அதே ஊருக்குள்ள தண்ணி கேன் போடப்போறார். குறியீடு... குறியீடு!

twitter.com/SettuOfficial: புதிதாக ஆம்புலன்ஸ் வாங்கி பூஜை போடுகிறார் ஒருவர். கடவுளிடம் என்ன வேண்டிக் கொள்வார் என்ற ஆர்வம் எனக்கு???!!!!

twitter.com/ManiPmp: கால்கள் இரண்டையும் தரையில் தேய்த்து, உதடு மடித்து, அனுமார்போல் வைத்திருந்தால், பெண்கள் பைக்கை நிறுத்தப்போகிறார்கள் என அர்த்தம்!

twitter.com/altappu: `மோடி எப்படி ரிலையன்ஸ் மாடலாக வரலாமாம்?’ # அட லூஸுகளா... உங்க பிரதமர், ரிலையன்ஸ் மாடல் ஆகலை. ரிலையன்ஸ் மாடலைத்தான் நீங்க பிரதமர் ஆக்கியிருக்கீங்க!

twitter.com/Rama Periasamy: `அதை எடுத்துட்டு வா’னு அப்பா சொல்ல, `எது?’னு அம்மாவுக்கு மட்டும் புரியும் ரகசியம்தான் காதல்.

twitter.com/manipmp: ஒவ்வொரு புது மொபைலுக்குப் பின்னாலும் பழைய மொபைலை வாங்கிக்கொள்ளும் மனைவி இருக்கிறாள்.

twitter.com/thoatta: சைக்கிள்ல எட்டு, பைக்ல எட்டு, ஏன்... கார்லகூட எட்டு போட்டுப் பார்த்திருக்கேன். ஆனா, சிரிக்கிறப்ப வாய்ல எட்டு போடுறது கீர்த்தி சுரேஷ்தான்!

twitter.com/kaviintamizh: காமராஜர் எளிமையாக வாழ்ந்ததைவிட, `அப்புறம் தம்பி... எப்ப கல்யாணம்?’னு கேட்கிற சொந்தக்காரங்களை எப்படிச் சமாளித்தார் என்பதே மிகப்பெரிய ஆச்சர்யம்!

twitter.com/karuthu_ganesan: டிஸ்கவுன்ட் சேல்னாலும் தேவைன்னா மட்டும் வாங்குங்க. வாங்கலைனா, நமக்கு 100 சதவிகிதம் டிஸ்கவுன்ட்.

twitter.com/erode_kathir: இதுவரை வெளியான வதந்திகளிலேயே பெரிய வதந்தி, `ஓ.பி.எஸ்., எடப்பாடி ரெண்டு பேரும் காவிரிப் பிரச்னைக்காக கவர்னரைச் சந்திச்சாங்க’னு சொன்னதுதான்!

twitter.com/kumaresann01: வைகோவுக்கும் அதே வசனம்தான் குடுப்பானுக. ஆனா, பாடிலாங்வேஜ்ல அண்ணன் ஸ்கோர் பண்ணிருவாரு! #அப்போலோவில் வைகோ!

twitter.com/Kozhiyaar: கணவன்கள் உறங்கும் அறையின் மின்விசிறியை நிறுத்திவிட்டு, சுத்தம்செய்வது மனைவிகளின் ஆகச்சிறந்த பொழுதுபோக்கு!

twitter.com/mpgiri : நேத்து வரை `புத்தகத்தை எடுத்துவெச்சுப் படிக்க உட்கார்டா’னா... வீட்டுக்குள்ளகூட வரலை. இன்னைக்கு பூஜையில வெச்சப்புறம் `படிக்கணும்பா... எப்ப புக் தருவ?’ங்கிறான்!

twitter.com/Dhrogi: `ஹீரோயினை வெகுளியாக் காண்பிச்சா பசங்களுக்குப் பிடிக்கும்’னு எவனோ இயக்குநர்களுக்கு நல்லா பிரெய்ன்வாஷ் பண்ணிவிட்டுருக்கான்!

twitter.com/mokrish: இந்த டச் போனில் படித்ததில் பிடித்ததை `வெட்டி’னால் அதை வேறு இடத்தில் ஓட்டும் வரை எல்லா சொற்களும் விரல் நுனியில் இருப்பதுபோல் ஒரு ஃபீலிங்!

twitter.com/Aruns212: தனியாக வீட்டில் இருக்கும்போது, டிஸ்கவரி சேனல் பார்ப்பவனை விடவா சிறந்த யோக்கியன் இந்த உலகில் இருந்துவிடப்போகிறான்!?

twitter.com/Jvs2020: சில சம்பவங்களைத் தொந்தரவுசெய்யாதீர்கள்... அது உங்களுக்குத் தீர்க்கமான சில முடிவுகளைக்கூடக் கொடுக்கலாம்!

facebook.com/ArumugaSelvamV: ஜல்லிக்கட்டு நடக்க, மாட்டுப் பொங்கல் அவசியம் இல்லை. தேர்தல் மட்டுமே அவசியம் என்பதை உணர்ந்த வருடம் 2016.

facebook.com/vinayaga.moorthy.5070: எல்லா பசங்களும் ‘சிங்கிள்’னு அழுவுறாங்க. எல்லா பொண்ணுங்களும் ‘committed’னு சொல்றாங்க. என்னடா நடக்குது இங்கே... ஒண்ணும் புரியலை. யாரு, யாரைத்தான் லவ் பண்றீங்க?

facebook.com/jill.kamatchirajan: ராஜீவ் காந்தி படுகொலை, பிரபாகரன் படுகொலை. இந்த இரண்டு துருவக் கொலைகளிலும் தி.மு.க மட்டும் தர்ம அடி வாங்குவது வரலாற்று விநோதம்!

facebook.com/iMuthuram: Jio சிம் வாங்காதவனை எல்லாம் `தேசத்துரோகி’னு சொல்லுவாய்ங்களேனு நெனச்சாதான் துக்கம் தொண்டையை அடைக்குது!

facebook.com/aruna.raj.35: பொங்கல்ல போட்ட முந்திரி, நம்ம தட்டுக்கு வரவே வராது. ஆனா, பிரியாணில் போட்ட ஒரே ஒரு ஏலக்காய் எப்பவுமே நம்ம வாய்க்குள்ளதான் மாட்டும்.

facebook.com/jv.balaji: கூரை மேல சோறு போட்டா காக்கா வருதோ இல்லையோ, வீட்டுக்காரன் வர்றான்... அசிங்கமா திட்டிக்கிட்டு. #வாடகை வீடு அட்ராசிட்டீஸ்!

facebook.com/rasanaikkaaran: நான் வளர்ற காலத்துல `அப்பா மூட்அவுட்ல இருக்கார். ஏதும் கேட்டு வாங்கிக் கட்டிக்காதே’னு எச்சரிக்கை செய்வார் அம்மா. இப்ப, `பாப்பா மூட் சரியில்லை. அவகிட்ட பேச்சு குடுக்காத’னு தங்ஸ்கிட்டேருந்து எச்சரிக்கை வருது. ஒரு குடும்பத் தலைவருக்கு நாட்டுல மரியாதை இல்லியா?!

facebook.com/saravanan.chan dran.77: இரண்டு நாட்களுக்கு முன்பு வரைக்கும் ரோட்டில் ஓர் இடத்தில் மட்டும் கூட்டம் தெரிந்தால், அது டாஸ்மாக்; இப்போது ஏ.டி.எம்!

facebook.com/prabhakrr: என்கிட்ட இருக்கிற ரெண்டு மூணு 500 ரூபாய் நோட்டை அட்லாண்டா இந்து கோயில் உண்டியலில் போட்ருவேன். பெருமாள்: எனக்கே விபூதி அடிக்கப் பார்க்கிறல?

Wednesday 28 December 2016

புதுமைபித்தன்

நன்றி: பாரத் பாரதி

*புதுமைப்பித்தன்*
💥நான் எடுத்தாளும் விவகாரங்கள் பலர் வெறுப்பது; சிலர் விரும்புவது.
நான் கதை எழுதுகிற சீர் சிறப்பு எல்லாம் இந்த மாதிரிதான் என்று வைத்துக்கொள்ள வேண்டாம்.
அதாவது நான் எழுதவேண்டியதுதான் பாக்கி. அது நேராகப் பத்திரிகையின் பக்கங்களில் போய் உட்கார்ந்து கொள்வது நிச்சயம் என்று கருதவேண்டாம். அப்படி ஒன்றும் இல்லை.
💥ஒரு காலத்தில் என் கதைகளைப் போல பத்திரிகைகளில் நுழைய அனுமதி மறுக்கப் பட்டவை வேறு இருக்கவே முடியாது.
நான் இப்பொழுது பிரசுரித்துள்ளவற்றின் அளவுக்கு ஏறக்குறைய சமமான எண்ணிக்கையுள்ள கதைகள், அதை எழுதப்பட்ட காலத்திலிருந்த பத்திரிகைக் காரியாலயங்கள் எல்லாவற்றையும் ஷேத்திர தரிசனம் செய்துவிட்டுத் திரும்பியவையாகும்...'
-புதுமைப்பித்தன்.
குறிப்பு:
💥மகாகவி பாரதிக்குப் பிறகு தமிழிலக்கியத்தின் தரத்தை உலகத் தரத்துக்கு உயர்த்திய மேதைகளில் ஒருவர் புதுமைப்பித்தன்.

Tuesday 27 December 2016

கவிதாஞ்சலி- சுதர்சன்

sudarsan

இந்த ஆண்டில் எழுதிய 'கவிதாஞ்சலி' தொடர்பதிவின் மொத்தத் தொகுப்பு இது. புதிதாக இணைத்துக்கொண்டவர்கள் படிக்கத் தவறியிருக்கலாம். அதற்கு முதல் கவிஞர் குட்டி ரேவதி ஒருமுறை பகிர்ந்துகொண்ட தகவல்:
"திரைப்பட இயக்குநர் வெர்னர் ஹெர்சாக்கிடம் ஒரு நேர்காணலில் அவர் படங்களின் இசை பற்றிக் கேள்வி கேட்கிறார்கள்.
'உங்கள் படத்தில் இசை இவ்வளவு சிறப்பாக இருக்கிறதே?
நீங்களும் சேர்ந்து இசையமைப்பீர்களா?'
'இல்லை. முழுக்க முழுக்க அது, இசை இயக்குநரின் வெளிப்பாடு தான்.'
'அவர்களின் இசைக்குறிப்புகளில் நீங்கள் திருத்தம் சொல்வீர்களா?'
'இல்லை. இசை பற்றிய பாலபாடம் கூட எனக்குக் கிடையாது. இசைக்குறிப்புகள் என்ன அர்த்தத்தில் இருக்கின்றன என்று கூடத் தெரியாது. இசை பற்றிய என் படிப்பறிவு, சுழியம்'
'பின், எப்படி உங்களின் ஒவ்வொரு படத்திலும் இசை பெருஞ்சுழிப்புடன் உள்ளிழுப்பதாய் இருக்கிறது?'
'வேறொன்றுமில்லை. என் இதயத்தை இசைக்குப் பழக்கப்படுத்துவதில் தான், நான் என் முழு வாழ்க்கையையும் செலவழித்திருக்கிறேன். ஓர் இசை ஒலிக்கும்போது, அது சிறந்த இசையா இல்லையா என்று என் இதயத்தை வைத்துத்தான் தேர்ந்தெடுப்பேன். ஒவ்வொரு முறை இசையைக் கேட்கும்போதும், என் இதயத்தின் தலையசைப்பிற்காக நான் காத்திருப்பேன்!'"
அதேபோல எனக்கு மொழி...
ஒரு பாடல் அதனுள்ளே கவிதைத்தன்மை கொண்டிருப்பது என்பது மிகவும் அரிதான விடயம். அப்படியான பாடல்கள் நிச்சயமாக என் தெரிவுகளில்(Playlist) முதலிடத்தைப் பிடித்துவிடும். பாடலைக் கேட்டுக்கொண்டே இருக்கும்போது வார்த்தைத் தேர்வுகளில் நழுவித் தொலைந்துபோவது ஒரு சுகானுபவம். என்னைப் பொறுத்தவரைக்கும் ஒருபாடல் தரக்கூடிய அதியுச்ச சுகம் என்றால் அதுதான் என்பேன். அப்படியான பாடல்களைத் தொகுக்கவேண்டும் என்பது நீண்டநாள் விருப்பம் . கவிதைகளில் இருக்கும் மீமொழி(metalingualism) அழகு. அதாவது, இரண்டாம் அடுக்கு மொழி. ஒன்றை நேரடியாகச் சொல்லாமல் இன்னொரு கவிதை மொழி மூலம் வெளிப்படுத்துவது. அதில் கற்பனைக்கு நிறையவே வேலை இருக்கும். "கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும்வரை" என்பது போல, அந்தப் புதிருக்குள் நுழைந்து யாத்திரை செய்வது ஒருவித போதை.
உதாரணமாக, "உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது. இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது." என்கிற வைரமுத்துவின் வரிகளை எடுத்துக்கொள்ளலாம். கற்பனைச் சிறகு விரிந்தால் இதற்கு இரண்டு அல்லது மூன்று அர்த்தங்களுக்கு மேலே எழுதிவிடலாம். சாய்ந்ததில் உன் பூக்கள் உதிர்ந்து இந்தப் பூமியை நிரப்பிவிட்டன என்று சொல்லலாம். அல்லது, அந்த அழகைக் கீழிருந்து கண்ட இந்தப் பூமி சிலிர்த்து மலர்ந்தது எனலாம். இல்லாவிட்டால், பெண்ணழகு கண்டு என் இளமை எனும் பாலைவன பூமி மலர்ந்துவிட்டது என்றுகூடக் கொள்ளலாம். கவிஞர் எழுதிய பொருளையே படிப்பவரும் கொள்ளவேண்டும் எனும் விதிமுறைகள் கவிதைகளுக்குக் கிடையாது. கவிஞர் அப்படித்தான் சிந்தித்திருக்க வேண்டும் என்கிற அவசியமும் கிடையாது.
இதில் வெறுமனே பாடல்களைப் பற்றி எழுதிய பதிவுகளைத் தவிர்த்திருக்கிறேன். முழுக்க முழுக்க கவிஞரின் மொழி நயத்தைப் பேசும் பதிவுகள் இவை.
https://www.facebook.com/sudha001/posts/969839946457414 - கவிதாஞ்சலி 1
https://www.facebook.com/sudha001/posts/887290571379019 - கப்பலேறி போயாச்சு
https://www.facebook.com/sudha001/posts/895917977182945 - வெண்ணிலவே வெண்ணிலவே
https://www.facebook.com/sudha001/posts/952929071481835 - நீர் - காதல்
https://www.facebook.com/sudha001/posts/953738394734236 - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
https://www.facebook.com/sudha001/posts/970979759676766 - தீண்டாய் மெய் தீண்டாய்
https://www.facebook.com/sudha001/posts/976449482463127 - தொடத் தொட மலர்ந்ததென்ன
https://www.facebook.com/sudha001/posts/992743210833754 - வெள்ளி மலரே
https://www.facebook.com/sudha001/posts/984919831616092 - மலர் சூடும் வயது - மலர்களே
https://www.facebook.com/sudha001/posts/1017515755023166 கண்ணாளனே
https://www.facebook.com/sudha001/posts/1039625346145540 - முத்தாடு
https://www.facebook.com/sudha001/posts/1037260969715311 குல்மொஹர் மலரே
https://www.facebook.com/sudha001/posts/1029536460487762 - குறுக்குச் சிறுத்தவளே
https://www.facebook.com/sudha001/posts/1056271287814279 - குறுக்கு சிறுத்தவளே 2
https://www.facebook.com/sudha001/posts/1068693439905397 - கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
https://www.facebook.com/sudha001/posts/1047481072026634 - காதல் வந்தால் சொல்லி அனுப்பு
https://www.facebook.com/sudha001/posts/1124845377623536?pnref=story
ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில்
https://www.facebook.com/sudha001/posts/1140826276025446
விம்ம விம்முவா

Sunday 25 December 2016

மருதன்

வலதுசாரி தலைவர்கள்,தன்னிச்சையாக எழுச்சிப் பெற்றுவிடுவது இல்லை.அவர்களை கைதட்டி வரவேற்று ஆரவாரம் செய்பவர்கள் மக்களில் ஒரு பிரிவினர்தான்.அவர்களுடைய ஆதரவுடன் வெறுப்பு அரசியல் அவர்களால் வளர்த்தெடுக்கப்படுகிறது.

  மக்களின் அச்சங்களையும்,எதிர்பார்ப்புகளையும்,
உணர்வற்ற நிலைகளையும் பயன்படுத்திதான் இந்த தலைவர்கள் மேலெழுந்து வருகிறார்கள்.எனவே நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான்,
மனிதர்களை சக மனிதர்களோடு இணைக்கும் மக்கள் அரசியலை அவர்களிடம்  கொண்டுசெல்ல வேண்டும்.அது ஒன்றே வெறுப்பு அரசியலை வீழ்த்தும்!

-மருதன்
(பலம் பெறும் வலம்)