Wednesday 29 December 2021
நிலாகண்ணன்
பத்தாம் பசலி
ஆலிவர் வெண்டல் ஹோம்ஸ்
ஞானக்கூத்தன்
Saturday 25 December 2021
கல்யாண்ஜி
Friday 24 December 2021
இவோ ஆண்ட்ரிச்
இறையன்பு
Thursday 23 December 2021
Monday 20 December 2021
ஹராரி
ஓஷோ
Sunday 19 December 2021
கல்யாண்ஜி
Thursday 16 December 2021
ஓஷோ
லின்யுடங்
இறையன்பு
Monday 13 December 2021
ஆபிரகாம் லிங்கன்
புத்தர்
Sunday 12 December 2021
பாஷோ
Wednesday 8 December 2021
தங்கம் மூர்த்தி
படித்தது
Monday 6 December 2021
ஆண்டன் பெனி
Saturday 4 December 2021
மார்க் கியூபன்
Wednesday 1 December 2021
இறையன்பு
ராமச்சந்திர குஹா
Wednesday 24 November 2021
பழமொழி
மால்கம் எக்ஸ்
Saturday 20 November 2021
தங்கம் மூர்த்தி
Friday 19 November 2021
வெங்கட் தாயுமானவன்
Thursday 18 November 2021
ஜென்
இளங்கோ கிருஷ்ணன்
பேயோன்
Tuesday 16 November 2021
பெருந்தேவி
Friday 12 November 2021
பியொதர் தஸ்தயேவ்ஸ்கி
Thursday 11 November 2021
யுகபாரதி
கார்ல் மார்க்ஸ்
ஜார்ஜ் சந்தாயனா
Monday 8 November 2021
யுகபாரதி
Sunday 7 November 2021
மெடிக்கல்
Saturday 6 November 2021
கல்யாண்ஜி
Monday 1 November 2021
பஹ்லுல்
Friday 29 October 2021
Harry Potter
சிக்மண்ட் ப்ராய்டு
Wednesday 27 October 2021
கார் Air bag க்கு காற்று எங்கிருந்து வருகிறது ?
கற்பதுவே பகிர்வதுவே-25*மணி
கல்யாண்ஜி
Tuesday 26 October 2021
கற்பதுவே பகிர்வதுவே-24*மணி
Sunday 24 October 2021
BABL
காந்தி
பிரான்சிஸ் கிருபா
Saturday 23 October 2021
பிடிவாரண்ட்
காந்தி
Thursday 21 October 2021
ஜெயமோகன்
சுகபோதானந்தா
Wednesday 20 October 2021
அருணகிரிநாதர்
படித்தது
Monday 18 October 2021
.நாகராஜன்
படித்தது
Sunday 17 October 2021
சூஃபி
Saturday 16 October 2021
info
Friday 15 October 2021
ஜே.கிருஷ்ணமூர்த்தி
Thursday 14 October 2021
வெண்ணிலா
Wednesday 13 October 2021
விநோதய சித்தம் விமர்சனம்*மணி
Tuesday 12 October 2021
கற்பதுவே பகிர்வதுவே-24*மணி
info
கற்பதுவே பகிர்வதுவே-23*மணி
Monday 11 October 2021
தற்புகழ் வேண்டா;
நேரு
Sunday 10 October 2021
ஜியாங் ரோங்
info
மருதன்
Thursday 7 October 2021
பாக் தேசிய கீதம்
வணிகத் தேவைக்காக நாட்டு விலங்குகள் படும் துயர்! - தெளிவாக விளக்கும் புத்தகம்
ஒரு வழிகாட்டின்றி தேடி அலையும் பாதையிலே நடப்பவனுக்கு இரண்டு நாள் வழியும் நூறுநாள் வழியாக ஆகிவிடும்ரூமி மஸ்னவி
பொதுவாக சூழ்நிலையியல் வகுப்பில் உனக்குத் தெரிந்த காட்டு விலங்குகள் பெயரையும் நாட்டு விலங்குகள் பெயரையும் எழுதி வரச்சொல்லுவோம். உண்மையில் வீட்டு விலங்குகள் வீட்டிலேயே தோன்றியதா என யோசித்து இருக்கிறேன். ஒவ்வொரு வீட்டு விலங்கினங்களுக்கும் இருக்கும் வரலாற்றினை அறியும் போது பிரம்மிப்பாக இருக்கிறது. மனிதன் தன் சுய தேவைக்காக விலங்கினங்களை மாற்றியதும், வணிகத் தேவைக்காக இந்த நாட்டு விலங்கினங்கள் படும் துயரத்தையும் விளக்கும் நூலாக சூழலியலாளர் கோவை சதாசிவம் எழுதி குறிஞ்சி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
ஒரு ஆறு துவங்கும் இடத்தில் இருக்கும் ஒருவர்.. இறுதியாய் கடலில் கலக்கும் இடத்தை பார்க்கும் போது எவ்வளவு துயர் அடைவாரோ அது போலத்தான் நாய்களின் வரலாற்றினை அறியும் போது தெரிகிறது. நாயினம் காட்டு விலங்கான சாம்பல் நிற ஓநாயிலிருந்து பரிணாம வளர்ச்சியிலிருந்து வந்தது. நாய்க்கும் மனிதனுக்கும் உள்ள உறவையும், ஊளையிடல், குரைத்தலுக்கான காரணங்களையும், நாய்களின் வரலாறினையும் விரிவாய் எடுத்துக்கூறுகிறது. நாயின் நாக்கு போல் விளிம்பு முனை கொண்ட நாவாய் கப்பல் உருவாக்கியதும், நாய்களின் பல்வேறு குணாம்சங்களை கூறுவதுடன் தெருநாய்கள் தண்ணீரை மட்டுமே குடித்துக் கொண்டு ஒரு வாரம் உயிர்வாழப் பழகியவை என இது போன்ற பல அறியப்படாத செய்திகளை சொல்கின்றன.
மாடும் முருங்கையும் இருந்த வீடு வறுமையை சந்திக்காது என்பது பெரியோர்களின் மொழி. மேய்ச்சல் நிலத்தில் தொழுவத்திற்குப் பின்பே குடில் அமைப்பார்கள் என்றும், யானைக்கு நிகரான பலமுள்ள காளையை மனிதன் ஏன் அடக்கினான் என்பதை காரண காரியத்துடன் விளக்குகிறது. Man's best friend ஆக நாயைச் சொன்னாலும் மாடுகள் தான் மனிதனுக்கு நீர் இறைக்க, உழவுக்கு, பொதிசுமக்க என குடும்பத்தில் ஒருவராய் வாழ்ந்து வருகிறது. அந்த அற்புதமான நாட்டு மாட்டினங்கள் அருகி வரும் உண்மையும், கலப்பின மாடுகளின் அதிகரிப்பையும் படிக்கும்போது இத்தனை மாட்டினங்கள் வலம் வந்த நம் தமிழகத்தில் நாம் தொலைத்தவை என்ன என்பதை உணர வைக்கிறார்.
"கருங்காலி கட்டைக்கு நாணாக் கோடாலி
இருங்கதலி கட்டைக்கு நாணும்- பெருங்கானில்
கார் எருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றது
ஈரிறவு துஞ்சாது என் கண்
கருங்காலி கட்டையால் ஆன கோடாலி எந்த பெரிய மரத்தையும் வெட்டிவிடும். ஆனால் வாழை மரத்தை வெட்டும் போது வழுக்குவது போல் எருமை மேய்க்கும் சிறுவனிடம் தான் தோற்றதை பாடுகிறார் ஒளவையார்.சோதனை முடிந்தவுடன் தோன்றும் முருகன்..ஒளவையின் தமிழை அறியவே பெருமைக்கு எருமை மேய்த்ததாய் சொல்லுவார்.
இதன் மூலம் மேய்ச்சல் நில காலத்திலிருந்தே எருமை இருப்பதும் அதனை மனிதன் மேய்த்ததும் அறிய முடிகிறது. ஆனால் நவீன கால மனிதன் எருமை என்றாலே அபசகுனம், எமனின் வாகனம் என உதாசீனம் செய்கிறான். ஆனால் மாடுகள் சமவெளியில் உழுவது போல் சதுப்பு நிலங்களில் எருமைகள் தான் உழுகின்றன. அதாவது சேற்று நிலத்தை உழக்க எருமைகளை பயன்படுத்தி தமிழர்கள் பயிர் செய்ததை இப்புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது.பழங்குடியினரான தோடர்கள் ஏன் எருமைகளை வளர்த்தனர்,சபரிமலையில் உள்ள எருமேலி என்பதற்கான பெயர்காரணம் என்ன என கூறுவதும் சுவாரஸ்யமானது.
கால்நடை பொருளாதாரத்தில் ஆடுகளின் பங்கு இன்றியமையாதது. சங்கப் பாடலில் வரையாடுகள் முதல் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆடுகள் மனிதனுக்கு எங்ஙனம் உதவியாய் இருந்ததை விளக்கும் ஆசிரியர் வெள்ளாடுகளின் தனிச்சிறப்பையும்,
கிடாமுட்டு, உணவுச்சங்கிலியில் ஆடுகளின் பங்களிப்பையும், அதன் தோல்கள் இன்று வணிகமயமானதையும் கூறுகிறது.
இதனை படிக்கும் போது ஒரு கதை நினைவுக்கு வருகிறது..
"ஒரு செம்மறி ஆட்டு மந்தையின் மேய்ப்பன்..ஆடுகளுக்கு ஒரு அறிவிப்பை வெளியிடுகிறான். குளிர்காலம் நெருங்குவதால் ஒவ்வொரு ஆடுகளுக்கும் கம்பளிப் போர்வை தருவதாக கூறுகிறான். அனைவரும் கைதட்டி மகிழும் போது ஒரு செம்மறி ஆடு மட்டும் இந்த
கம்பளிக்கான ரோமங்கள் எங்கிருந்து வரும் என கேட்டவுடன் திகைப்படைகிறான்.மற்ற ஆட்டினங்கள் தங்களுக்கு கம்பளி கிடைக்காமல் செய்யப் பார்க்கிறாயா எனக்கூறி அடித்து விரட்டுகின்றன. இதனை படித்தவுடன் இக்காலத்தின் மக்களுக்கும் பொருத்திப் பார்க்கத் தோன்றுகிறது.
காடறிதல் பயணத்தில் ஆதி உழவனான பன்றியை சந்திக்காமல் இருந்ததில்லை என்கிறார் கோவை சதாசிவம். பன்றிகள் குறித்து அறியாத பல சுவாரஸ்யமான தகவல்களை இதில் பகிர்ந்துள்ளார்.
ஆடுகள் மேய்க்கும் கீதாரிகளை தெரிந்து கொள்ளும் நாம் பன்னியாண்டிகளைப் பற்றியும் அவர்களின் பணிகளையும் இன்றைக்கு அவர்களின் வாழ் நிலையினையும் எடுத்துக் கூறியிருக்கிறார்.
You own a dog but cat owns you. உங்களுக்கு நாய்களைப் பிடித்தால் போதும்.ஆனால் பூனைகளுக்கு உங்களைப் பிடித்தால் மட்டுமே பழக முடியும்.பூனைகளின் வரலாறும் அதன் குணங்களும் கூறும்போது அதன் தனிச்சிறப்புகள் நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றன.பூனையின் மீசையில் இத்தனை விசயங்கள் இருக்கிறதா எனவும் இன்றைய உலகில் பூனைகளை மனிதன் எவ்வாறு நடத்துகிறான் எனவும் பாடம் எடுத்திருக்கிறார்.அடுத்து முட்டையா? கோழியா? என்பதற்கு விளக்கமும், கூமுட்டை என ஏன் சொல்கிறோம் என்பதற்கான பெயர்
காரணத்தையும் இதில் விளக்கியுள்ளார்.முல்லை நிலத்தில் காட்டுயிரியாகவும், மருத நிலத்தில் வீட்டு உயிரியாகவும் மாறிய கோழிகளின் வாழ்வியலைப் படம் பிடித்துள்ளார்.இன்றைய நாட்டுக் கோழிகளையும் பிராய்லர் கோழிகளையும் ஒப்பிட்டு கூறியுள்ளார்.
கடைசி அத்தியாயத்தில் ஆதிகாலத்தில் விலங்கினங்கள் பலியிடுவதற்கான நம்பிக்கைகளின் வேர்களையும், கிராமத்து மக்களின் வாழ்வியலையும் சொல்லியிருக்கிறார்.சிறு தெய்வ வழிபாடு,தூய்மையின் குறியீடாக நெருப்பு இருந்ததையும், மனிதர்கள் குலசாமியிடம் தூய்மையை நிரூபிக்க தீ மிதிப்பதும், தீ சட்டி தூக்குவதும் என இன்றளவும் புழக்கத்தில் உள்ள வழக்கங்களையும் பதிவு செய்துள்ளார்.சடங்குகளில் கலப்பின ஆடு,மாடு, கோழிகளை குலசாமிகளுக்கு ஏன் நேர்ந்து விடுவதில்லை என கேள்வி கேட்கும் போது நம்மை நாமே சுய பரிசோதனை செய்துகொள்ள வைக்கிறார்.
கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என காந்தி சொன்னதற்கான காரணங்களில் தற்சார்பு பொருளாதாரமும் ஒன்று.
தங்களுக்கு தேவையானவற்றை தாங்களே உற்பத்தி செய்து தன்னிறைவு பெற்றனர்.இதற்கு அங்கிருந்த நாட்டு விலங்கினங்களும் உதவி செய்தன.
ட்ராக்டர் கண்டுபிடிக்கப்பட்ட போது ட்ராக்டர்கள் சாணி போடுமா என ஜே.சி குமரப்பா சொன்னதும் நினைவுக்கு வருகிறது.
தற்போது கிராமத்துக்குள் நுழைந்த பன்னாட்டு வர்த்தகம் கொஞ்சம் கொஞ்சமாய் இயற்கையோடு இயைந்த வாழ்வை சிதைத்து வருவது வருத்தத்திற்கு உரியது. ஒவ்வொரு விலங்கினங்களின் வரலாற்றை பார்க்கும் போது.. தற்போது யாரும் கண்டு கொள்ளாமல் தெரு விலங்குகளாய் இருப்பதையும், கலப்பின ஊசிகளின் விளைவால் நாட்டு உயிரினங்கள் அழிந்து வருவதையும் படிக்கும் போது குற்றவுணர்ச்சி ஏற்படுகிறது. சூழலியலில் நாட்டு உயிரினங்களின் தாக்கத்தையும் பேசுகிறது.
-மணிகண்டபிரபு
Tuesday 5 October 2021
அந்தோன் செகாவ்
Monday 4 October 2021
மொய்
Saturday 2 October 2021
காந்தி
ராஜன்
Wednesday 29 September 2021
எம்டன் கப்பல் சென்னையைத் தாக்கியது எப்படி? - குட்டி ஸ்டோரி
யுத்தம் பொறுமைக் கோருகிறது. மனிதனாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி, சந்தர்ப்பங்கள் தம்மை முன்னிறுத்தும்போது பொறுமைசாலிகளே அத்தகைய சந்தர்ப்பங்களை சாதகமாக்கிக் கொள்கிறார்கள்.ஜியாங் ரோங்
முதலாம் உலகப்போர் 1914-ம் ஆண்டு துவங்கியது. உலக நாடுகள் எல்லாம் ஒன்றையொன்று தாக்கிக் கொண்டிருந்த நேரத்தில் அமைதிப் பூங்காவான தமிழகம் நவராத்திரி கொண்டாட்டங்களில் கவனம் செலுத்திக் கொண்டு இருந்தது. போர்க் காலம் என்பதால் வங்கக் கடலில் தீவிர கண்காணிப்புடன் இருந்தனர் ஆங்கிலேய படை வீரர்கள். அவர்களின் கண்களில் படாமல் சென்னை துறைமுகத்திற்கு 2.7 கி.மீ தொலைவில் கேப்டன் கார்ல் வான் முல்லர் தலைமையில் தமிழரான பொறியாளர் செண்பகராமன் உட்பட பல வீரர்களும் இருந்த எம்டன் போர்க்கப்பல் நங்கூரம் பாய்ச்சி நின்றது
போலந்து நாட்டில் உருவாக்கப்பட்டு.. எத்தகைய அலையிலும் முன்னேறிச் செல்லும் பொருள்கொண்ட எம்டன் கப்பல் ஒரு ஜெர்மானிய போர்க்கப்பல் ஆகும்.
ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த, எம்டன் கப்பல், தன் பணி காலத்தில், 31 கப்பல்களை மூழ்கடித்திருக்கிறது. தன் வசீகர தோற்றத்தால், 'கிழக்கின் அன்னப்பறவை' என, எதிரி படைகளாலும் வர்ணிக்கப்பட்ட பெருமை, இதற்கு உண்டு. திடீர் தாக்குதல் மூலம் வெற்றி பெற்ற எம்டன் இருபதுக்கும் மேற்பட்ட கப்பல்களை கைப்பற்றியுள்ளது.
மோஸ்கெட் எனும் போர்கப்பலையும், செம்ச்சுக் எனும் ரஷ்யக் கப்பலையும் மூழ்கடித்துள்ளது.
கைப்பற்றப்பட்டவற்றுள் எஸ்.எஸ்.ரியாசான்,எஸ்.எம்.எஸ் கார்மோரான் என்பவைகள் ஜெர்மன் போர்க்கப்பலாக மாற்றம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து புயல் போல் வேகத்தில் வந்த குண்டுகள் முதலில் துறைமுகத்தில் இருந்த 'பர்மா ஆயில் கம்பெனியின்' 5000லிட்டர் கொள்ளளவு கொண்ட மண்ணெண்ணெய் கிடங்கை தாக்கியதில் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தன. சென்னை மக்கள் அதனை நீண்டநேரமாய் வானவேடிக்கை பார்த்தனர்.
மூன்று கிடங்குகளும், ஒரு வர்த்தக கப்பலும் சேதமடைந்தது. சிறிய வணிக கப்பலை சுட்டு வீழ்த்தியதிலில் மூன்று பேர் உயிர் இழந்ததுடன் சிலர் காயமும் அடைந்தனர். சென்னை துறைமுகம் அறுபது சதவீதம் சேதம் அடைந்ததாக தெரிவித்தன்ர். உயர்நீதி மன்றத்தின் கிழக்குச் சுவர் உட்பட பல கட்டிடங்கள் சேதமடைந்தன. முதல் உலகப் போரில் இந்தியாவின் மீது நடந்த ஒரே தாக்குதல் இதுதான் எனும் பெருமையையும் எம்டன் தான் சென்னைக்கு பெற்றுத் தந்தது.
ஜெர்மானிய கப்பல் படையில் முக்கிய அங்கம் வகித்த, இந்த கப்பலுக்கு, 1913ல், வான் முல்லர் என்பவர், எம்டனின் கேப்டனாக பொறுப்பேற்றிருந்தார்.பல்வேறு வெற்றிகளைப் பெற்று தந்த ராசியான எமகாதகன் எம்டன் சீனா தேசத்தில் வெற்றிக் கொண்ட பெருமிதத்துடன் வங்காள விரிகுடாவில் வலது காலை எடுத்து வைத்து தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தான். கேப்டன் தனது திட்டத்தை விளக்கி முடித்தவுடன்.
இரவு 9.30 மணியைத் தாண்டியவுடன் தாக்குதல் துவங்கியது. சற்றும் எதிர்பாராத ஆங்கிலேயர்கள் நிலைகுலைந்து போயினர். 13 சுற்றுகள் ஒரு சுற்றுக்கு 10 குண்டுகள் வீதம் 130 குண்டுகளிலும் சென்னையின் பெயர் எழுதப்பட்டிருந்தது. தாக்குதலில் இருந்து காக்க ஆங்கிலேயர்கள் புத்திசாலித்தனமாக நகர் முழுவதும் மின்சாரத்தை துண்டித்தனர். ஆனால் கலங்கரை விளக்கம் மற்றும் சென்னை உயர்நீதி மன்ற கோபுர விளக்கை அடையாளம் கொண்டு தாக்குதலை துவங்கினர்.
பிரிட்டன் படைகள், சுதாரித்து, எதிர்தாக்குதல் நடத்த, அரைமணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது.
தாக்குதல் நடத்திய சில மணி நேரத்தில் மறைந்தது.சென்னை வாழ் மக்கள் பலருக்கு இந்த உண்மையே விடிந்தவுடன் தான் தெரிந்தது. விஷயம் அறிந்தவுடன் சிலர் பீதியில் ஊரைவிட்டு சென்றாதகவும் கூறப்படுகிறது.அப்போதைய சென்னை ஆளுநராக இருந்த பெண்ட்லாண்ட் ஓய்விற்காக ஊட்டி சென்றிருந்தார்.தகவல் அறிந்ததும் செப்டம்பர் 25ம் தேதி சென்னை திரும்பினார்.
ஆங்கிலேயரையே தலை குனிய வைத்த எம்டனை சென்னை மக்கள் பெருமையுடன்பேசினர்.வெடிக்காமல் கிடந்த குண்டு எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
#ஜெய்ஹிந்த் செண்பகராமன்
எம்டன் என்றவுடன் நினைவுக்கு வரும் பெயர் பொறியாளர் செண்பகராமன். இக்கப்பலில் உதவிப் பொறியாளராக பணியாற்றினார்.1891ல் திருவனந்தபுரத்தில் பணியாற்றிய காவல் அதிகாரியின் மகனாய் பிறந்த தமிழ்க் குடும்பத்தை சேர்ந்தவரான இவர், இளம் வயதிலேயே சுதந்திர வேட்கையுடன் இருந்தார். ஜெர்மானிய உளவு அதிகாரியான சர்.வில்லியம் உடன் தன் 17ம் வயதில் அயல்நாடுகளுக்கு சென்று கல்வி பயின்றார். சுவிட்ஸர்லாந்தில் அறிவியலில் பட்டமும், ஜெர்மனியில் பொறியியலில் முனைவர் பட்டமும் பெற்றார். 12க்கும் மேற்பட்ட மொழிகளை கற்றார்.
நிறவெறிக்கு எதிரான பார்வையும், அடிமைத்தளையை உடைத்தெறியும் கோபமும் இயல்பாகவே அவரிடம் இருந்தது.'ப்ரோ இந்தியா' பத்திரிக்கையை ஆரம்பித்து ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும்இந்தியாவுக்கு ஆதரவான செய்திகளையும் வெளியிட்டார்.
ஜெர்மனியில் கெய்சர் இவர்பால் ஈர்க்கப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பெர்லினில் சக்தி வாய்ந்த மனிதராக வலம் வந்தார்.1933ம் ஆண்டு வியன்னா நகரில் நடைபெற்ற மாநாட்டில் தான் ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.ஜெய் ஹிந்துஸ்தான் (jai Hindustan) எனும் வெல்க இந்தியா எனும் பொருளில் ஜெய்ஹிந்த் அமைந்திருந்தது. நேதாஜி இந்திய ராணுவ படைக்கு இந்த மந்திரத்தையே பயன்படுத்தினர்.
இந்தியர்கள் பிரிட்டிஷாருக்கு அடிமையாகவே இருக்கவே தகுதி படைத்தவர் எனக்கூறிய ஹிட்லரை தன் வாதத் திறத்தால் மன்னிப்பு கேட்க வைத்தார். இதனை வெறுத்த ஜெர்மானியர்கள் உணவில் விஷம் வைத்து கொன்றதாக கூறப்படுகிறது. இறக்கும் தருவாயில் மனைவி தனக்குப் பின் இந்திய சுதந்திரத்திற்காக போராட் வேண்டுமெனவும் தனது அஸ்தியை கரமனை ஆற்றிலும், நாஞ்சில் நாட்டு வயல்களிலும் தூவும் படியும் கூறிவிட்டு மறைந்தார்.
எம்டனின் இறுதிக்காலம்
சென்னை உள்ளிட்ட பகுதிகளை தாக்கிவிட்டு இறுதியாக ஆஸ்திரேலியா சென்றான் எம்டன்.அங்கு நடைபெற்ற கடற்படை சண்டையில் HMAS Sydney என்ற கப்பலினால் தாக்கப்பட்டதால் “எம்டன்”கப்பல் 1914 நவம்பர் 09 அன்று கடலில் தரைதட்டி நிறுத்தப்பட்டது.கப்பலில் இருந்த 376 பேரில் 133 பேர் கொல்லப்பட்டு மீதமுள்ளோர் சிறைபிடிக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.அப்போது வென்றஇந்த சிட்னி கப்பலை இரண்டாம் உலகப் போரில் ஜெர்மன் கப்பலான கார்மோரான் தாக்கி மூழ்கடித்து தானும் மூழ்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் 'எம்டன்' கப்பல் குண்டு வீசிய பகுதியான உயர்நீதிமன்ற வளாகத்தில் நினைவு கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. குண்டு வீசிய பொறியாளர் செண்பகராமனுக்கு சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. "நீரைவிட பலவீனமானது வேறொன்றுமில்லை ஆனால் வன்மையை வெற்றிக் கொள்வதில் அதைவிட உயர்ந்தது வேறொன்றுமில்லை"ம்என்பார் தாவோ. தனியொரு மனிதனாக அயல் தேசம் சென்றாலும் தாய் நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டு ஆங்கிலேயரால் பிடிக்க முடியாமல் உயிர்துறந்த செண்பகராமன் எம்டன் குண்டுவீச்சினை நினைக்கும் போதெல்லாம் நினைவு கூறப்படுவார்.
-மணிகண்டபிரபு
Tuesday 28 September 2021
செல்வேந்திரன்
Monday 27 September 2021
நாலடியார்
திருச்செந்தாழை
Sunday 26 September 2021
ஜெயமோகன்
பாரதியார்
பெரும்பாலும் ரயில்கள் ஏன் நீல நிறத்தில் இருக்கிறது?
ஹெர்னியா
Friday 24 September 2021
ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் விமர்சனம்*மணி
Thursday 23 September 2021
பாரதியார் குறித்து இன்குலாப் சொன்ன வரிகள்
Wednesday 22 September 2021
யாழிசை மணிவண்ணன்
ஜெயமோகன்
சமஸ்
Friday 17 September 2021
பெரியாரின் பொன்மொழிகள் நூறு
தில்லி எலிக்கு வான் பருந்து தெற்குத் திசையின் படை மருந்து கல்லாதோர்க்கு நன் மருந்து கற்றவர்க்கு வண்ணச் சிந்துபெரியார் குறித்து பாரதிதாசன்
பெரியாரை முதல் முதலில் தெரிந்து கொண்டது ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் தான்.'தொண்டு செய்து பழுத்த பழம்..' என ஆரம்பிக்கும் பாடலில் அவரின் முழு உருவமும் தெரிந்தது.பின்பு காலஒட்டத்தில் அவரை படிக்கும் போதெல்லாம் பல விஷயங்கள் அறிய முடிந்தது. முனைவர் நன்னன் தொகுத்த பெரியாரைக் கேளுங்கள், பெரியார் கணினி, பெரியார் களஞ்சியம்,பெரியார் மொழிகள் என்று அவர் சொன்ன கருத்துகள் எல்லாம் அவ்வப்போது குறித்து வந்துள்ளேன்.'பெரியாரை துணைகொள் என்பது போல் சில வரிகள் நெற்றிப் பொட்டில் அடித்தது போல் இருக்கும், சில வரிகள் தத்துவார்த்தமாய் இருக்கும்.
பெரியாரின் இக்கருத்துகள் யாவும் படித்த கருத்துகளோ, மேலை நாட்டு சிந்தனையோ அல்ல.. தம் கண் முன் கண்ட காட்சிகளை கருத்தாக கூறியிருக்கிறார்.அவற்றையும் பகுத்தறிவு கொண்டு தெளியும்படி வலியுறுத்தியிருக்கிறார்.அறிவும், அனுபவமும் மனிதர்க்கு இருப்பதால் அதை ஆராய்ந்து தெளிய அறிவுறுத்துகிறார்.
இதில் எளிமையும் இனிமையும் நிறைந்த 100 பொன்மொழிகளில் உள்ளன
*காலமெல்லாம் மடையனாக இருந்து சாவதைவிட அறிவைக் கொண்டு சிந்திக்க வேண்டும் என்றார்.from bad to the worse என்பது போல் கெட்டதிலிருந்து கழிசடைக்கு செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
*" என்னை கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்கின்றனர் சிலர் உண்மை அஃதன்று;நான் நம்பிக்கை வைக்க அப்படி எதுவும் இருப்பதாக புலப்பட காணோமே என ஏங்குபவன் நான்
*கடவுள் மறுப்பாளன் என்று என்னை குறிப்பிடாதீர்கள். அதனையும் தேடி அலைந்து அலுத்துக் களைத்து ஓய்ந்தவன் என்று வேண்டுமானால் என்னை குறிப்பிடுங்கள். ஏனெனில் நான் கடவுள் வேண்டாம் என்று அது இருக்கக் கூடாது என்று கூறவில்லையே
*மக்களில் இரண்டு விதப் பிறவி உண்டு ஒன்று மக்களைப்போல் மக்களை அனுசரித்து மக்கள் விருப்பப்படி நடப்பது; மற்றொன்று தங்களை மக்களில் ஒருவன் என்றே கருதாமல் தங்களை தனிப்பிறவி என்று கருதிக்கொண்டு மக்கள் கருத்தை பற்றி கவலை இல்லாமல் நடப்பது.என தலைவனை பற்றி கூறுகிறார்
* எதிரிகளுடன் போராடுவது முக்கிய வேலை தான் ஆயினும் அதைவிட முக்கியம் துரோகிகளை ஒழிக்க போராடுவது ஆகும்
* எவனுக்கு பொய் சொல்ல தைரியம் இருக்கின்றதோ எவனுக்கு பொருள் செலவு செய்ய சக்தி இருக்கிறதோ எவனுக்கு பொய் பிரச்சாரம் செய்ய சௌகரியம் இருக்கிறதோ அவனுக்கு வெற்றி கொடுக்க நம்நாடு தயாராக இருக்கிறது
*வாழ்க்கை ஒழுக்கத்தில் கணவனுக்கு ஒரு சட்டம் மனைவிக்கு வேறு சட்டம் இருக்கிறது
* நிந்தனையான பேச்சுக்கள் எப்போதும் ஒரு விஷயத்துக்கு நியாயமான பதிலாக முடியாது
* வளைய முடியாத (கொள்கையுள்ள) கல்தூணில் (போட்டி என்னும்) பிளவு ஏற்பட்டால் பிறகு அபாயத்தை தான் எதிர் பார்க்க நேரிடும்
* நமக்கெல்லாம் கடவுள் எது என்றால் இந்தப் புராணங்களில் வரும் பாத்திரங்கள் கடவுள்களாக இருக்கின்றனவே தவிர தத்துவப்படி ஆன கடவுள் நமக்கு இல்லை
* கையாலாகாதவனுக்கு கடவுள் துணை, அறிவு இல்லாதவனுக்கு ஆண்டவன் செயல். தவற்றை உணரமுடியாத உனக்கு தலைவிதி
*கணவனிழந்த பெண்ணை எப்படி விதவை என்று கூப்பிடுகிறோமோ அது போலவே மனைவி இழந்த புருசனை விதவன் என்று கூப்பிட வேண்டும்.
*மற்ற நாடுகளில் மக்களை ஒன்று படுத்தவே கடவுள் மதம் இருக்கின்றன. நமது நாட்டில் மக்களை வேறு வேறாக பிரிக்கவே கடவுள் மதம் இருக்கின்றன
*சிந்திப்பவன் மனிதன்
சிந்திக்க மறுப்பவன் மதவாதி
சிந்திக்காதவான் மிருகம்
சிந்திக்க பயப்படுகிறவன் கோழை
* கல்லை கடவுளாக்கும் மந்திரங்கள் ஏன் ஒரு மனிதனை மற்ற மனிதனுக்கு சமத்துவமான மனிதனாக்க கூடாது
* மற்ற நாடுகளில் மக்களை ஒன்று படுத்தவே கடவுள் மதம் இருக்கின்றன. நமது நாட்டில் மக்களை வேறு வேறாக பிரிக்கவே கடவுள் மதம் இருக்கின்றன
*உலகிலுள்ள மக்களில் பலருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்றாலும் அவர்களெல்லாம் நம்மைப் போல் முட்டாள் தனமாக கடவுளை நம்புவதில்லை
*மனிதன் பிறந்தநாள் முதற்கொண்டு சாகின்ற வரையில் உலகில் மாணவனாக இருக்கிறான்.அவன் கற்றுக்கொள்ள வேண்டியது அவ்வளவு இருக்கின்றது.
* பச்சை உண்மையானது மக்களுக்கு எப்போதும் கலப்பு உண்மையை விட அதிகமான அதிருப்தியை கொடுக்கக்கூடியதாக இருக்கும். உண்மையை மறைக்கப் பேசுவது என்பது, எப்போதும் பேசுகின்றவனுக்கும், பேச்சு கேட்பவர்களுக்கும் திருப்தியை கொடுக்கக்கூடியதாக இருக்கும். திருப்தியை உண்டாக்கும்படியும் செய்து கொள்ளலாம். ஆனால் உண்மை பேசுவதன் மூலம் அப்படி செய்ய முடியாது.
*ஊரார் உழைப்பைக் கொள்ளை கொள்ளாமல் எவனும் பணக்காரனாக முடியாது.
*முட்டாள்தனம் சுலபத்தில் தீப்பிடிக்கக் கூடியது.அறிவு சற்று தீப்பிடிக்க தாமதமாகும்.
*ஊரில் பேசிக் கொள்கிறார்கள் என்பது கீழ்த்தரமான தன்மையாகும்
*மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்;மானமற்ற ஒருவருடன் போராடுவது கஷ்டமான காரியம்.
*ஓய்வு ,சலிப்பு என்பவற்றைத் தற்கொலை என்றே கருதுகிறேன்.
*நீ இன்ன காரியம் செய்தால் உன் பாவம் மன்னிக்கப்படும்;பரிகாரமாகி விடும்;நீ பாவமற்றவனாக ஆகிவிடுவாய் என்று சொல்வதால் ஒழுக்கக்கேடே வளர்கிறது.
*தெரியாததை,இல்லாததை நம்ப வேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்றவனாக ஆகி விடுகின்றான்.
*என்ன கஷ்டப்பட்டாவது மறு உலகத்தை தயவு செய்து மறந்துவிட்டு இந்த உலக நடவடிக்கைகளுக்கு உங்களுடைய வாழ்க்கையைப் பொருத்துங்கள்.
*எண்ணெய் இருந்தால்தான் விளக்கு எரியும் என்பது போலச் சிந்தனை இருந்தால்தான் உண்மை விளங்க முடியும்.
*உள்ளதைப் பங்கிட்டு உண்பது, உழைப்பைப் பங்கிட்டுச் செய்வது என்ற நிலை ஏற்பட்டால் கடவுளுக்கு வேலையோ அவசியமோ இருக்காது.
*ஒருவன் தன் தேவைக்கு மேலே எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டியவை கிடைத்துவிடும்.
*துறவிகள் மோட்சத்திற்கு போக வேண்டும் என்று பாடுபடுகின்றார்களே தவிர, சமூகத்தில் மனித மேம்பாட்டுக்காக பாடுபடுவதில்லை
*முன்நோக்கிச் செல்லும் போது பணிவாக இரு.. ஒருவேளை பின்நோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள்.
*ஒரு காலத்து முறைகளே எக்காலத்துக்கும் என்றால் மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்பதுதான் பொருள்.
*விதி என்பது மிதிக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் கொதித்து எழாதிருக்க செய்யப்பட்ட சதியாகும்
*பிச்சைக்காரனுக்குச் சோறு போடுவது நாத்திகமேயாகும். ஏனெனில் கடவுள் பார்த்து ஒருவனை அவனது கர்மத்திற்காகப் பட்டினி போட்டிருக்கும் போது நாம் அவனுக்கு சோறு போடுவது கடவுளுக்கு விரோதமான செயல் தானே.
*நாத்திகம் என்றால் தன் அறிவுகொண்டு எதையும் ஆராய்ந்து பார்ப்பவன்
*சமுதாய சீர்திருத்தத்தின் கடைசி எல்லை பொதுவுடைமை என்பதைப் போலவே நாத்திகமும் அறிவின் உண்மையான கடைசி எல்லையாகும்
*தண்டனை என்பது குற்றவாளிக்குக் கஷ்டத்தைக் கொடுக்கக் கூடியதாய் இருக்க வேண்டுமே தவிர,கண்டிப்பாய் சுகம் கொடுக்கக் கூடியதாக இருக்க கூடாது
*தேசாபிமானம் பாஷாபிமானத்தை விட உயர்ந்தது மனிதாபிமானம்
*மக்கள் தங்கள் தகுதிக்கேற்ற தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள்
*ஆயுதமும் காகிதமும் பூஜை செய்ய அல்ல..புரட்சி செய்ய..
*எப்போதும் நான் நன்றி பெறுவதில் கவலைப்படுவதே இல்லை.மனித ஜீவனிடம் நன்றி எதிர்பார்ப்பது அறிவில்லாத தன்மையே யாகும்
*நன்றி என்பது பலன் பெற்றவர் காட்ட வேண்டிய குணம்.செயல் செய்தவர் எதிர்பார்க்கக் கூடாது
*என்னை 'உண்மையாய்' எதிர்க்கத் துவங்குங்கள். அந்த உண்மை ஏன் எதிர்க்கின்றோம் என்ற கேள்வியை மூளைக்குள் எழுப்பும். அந்த கேள்விக்கான தேடல் நீங்கள் மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் இந்தியாவில் எப்படிப்பட்ட அடிமுட்டாளாய் வாழ்கிறீர்கள் எனும் விடையில் கொண்டு சேர்க்கும் -
*அச்சத்துக்கும் அறியாமைக்கும் பிறந்த குழந்தையே கடவுள்
*நான்கு ஆண்களும்,ஒரு பெண்ணும் குடும்பத்தில் இருந்தால் முதலில் அந்தப் பெண்ணைத்தான் படிக்க வைக்க வேண்டும்
*அறிவுக்கு ஏற்றது,மக்களுக்கு நன்மை பயப்பது,மக்களின் அறிவை வளர்ச்சியடையச் செய்வது எதுவோ அதைப்பற்றி பேசு
*ஆரியமே! நீ என்னை முழ்கடிக்க முயற்சிக்கும் பேரெல்லாம் ஆழிப்பேரலையாய் உயர்ந்து வருவேன்.
*கல்வி அறிவும்,சுயமரியாதை எண்ணமும்,பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்!
*உன்னை யோசிக்க வைப்பதுதான் என் நோக்கமே தவிர..என்னைப் பின்பற்று,உன்னை மாற்றிக்கொள் என்பது அல்ல..நீ நீயாகவே இரு.!
*முற்போக்கு அறிவும்,அக்கறையும் வளர வளர, புரட்சிகள் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கும்.
*என் கஷ்டத்தைச் சாத்திரமும், மதமும், கடவுளும் கவனிக்கவில்லை. ஆதலால் நான் ஏன் அவைகளை மதிக்க வேண்டும்?
*தகுதியும், திறமையும் பெறத்தான் ஒருவன் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ வருகிறான்.ஆனால் பள்ளிக்கோ கல்லூரிக்கோ வரவே தகுதி திறமை தேவை என்பது மிகப்பெரிய அயோக்கியத்தனம் "
*அறிவுக்கும் அனுபவத்திற்கும் ஒத்து வராததைப் பயத்தால் நம்புகிறவன் பக்குவமடையாத மனிதனாகிறான்
*மனித வாழ்வில் வெற்றி என்னவென்றால் அவனவன் மனத் திருப்தியோடு வாழ்வதுதான்
*மற்றவர்களிடம் பழகும் விதத்தையும், ஒழுக்கத்தையும் சிறுவயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்வில் பெரிய மனிதனாகிறான்
*மனசாட்சி என்று சொல்லுவதே அகிம்சை என்பதைப் போல கோழைகளுடைய ஆயுதமாகிவிட்டது
*ஒருவன் வாழ்வது என்பது அவனுடைய வாழ்க்கையால் பிறர் நன்மையடைந்தார்கள், மற்றவர்கள் சுகங்கண்டார்கள் என்று அமைய வேண்டும்.
*மந்திரிப் பதவி பெரிதல்ல; பணக்காரனாக இருப்பதும் பெரிதல்ல;மனிதனாக வாழ்வதுதான் பெருமை
*எந்த மனிதனுக்கும் அவனுடைய கருத்தை எடுத்துச் சொல்ல உரிமையுண்டு.அதைத் தடுப்பது அயொக்கியத்தனம்
*மனிதன் தன் வாழ்நாளில் அடைந்த வெற்றிக்கு,மேன்மைக்கு அறிகுறி, முடிவின் போது அடையும் புகழ்தான்
*மதம் மனிதனை மிருகமாக்கும் சாதி மனிதனை சாக்கடையாக்கும்
*சாதியின் கடைசி வேர் அறுபடும்வரை என் சிந்தனைகள் தொடரும்
*எந்த பாவத்தை செய்தாவது சாதியை ஒழிக்க வேண்டும்..
*ஒரு கருத்தை யார் சொல்லியிருந்தாலும் நானே சொல்லியிருந்தாலும் பகுத்தறிவுக்கு முரணாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளாதே"
*ஆத்மாவைப் பற்றி பேச வேண்டுமெனில் அறிவையும், அனுபவத்தையும் தூர வைத்துவிட்டு வெறும் நம்பிக்கை மீதே ஒப்புக்கொண்டு பேச வேண்டியதாய் இருக்கிறது.
*ஆத்மா என்பது ஆகாயத்தில் தளவாடம் இல்லாமல் கட்டப்பட்ட ஒரு கோட்டை
*நூறு அறிவாளிகளுடன் மோதுவதை விட, ஒரு மூடனோடு மோதுவது மிகச் சிரமமானது
*என் அபிப்ராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு.ஆனால் என் அபிப்ராயத்தை வெளியிட எனக்கு உரிமையுண்டு.
*எதிரியை அடக்கணும், அவனை ஒழிக்கணும் என்றால் நாம் அவனை வெறுக்கணும். கூண்டோடு நம்மை அவன் ஒழித்தாலும் சரி என்று துணிந்து இறங்கினால் தானே அவன் பயப்படுவான்
*நாதசுரக்குழாயாய் இருந்தால் ஊதியாக வேண்டும்; தவுலாயிருந்தால் அடிபட்டுத்தானாக வேண்டும் என்பது போல் எனக்குத் தொண்டை, குரல் உள்ள வரை பேசியாக வேண்டும்; பிரசங்கம் செய்தாக வேண்டும்
*நானே எழுதி, நானே அச்சுக்கோர்த்து, நானே அச்சடித்து, யாரும் வாங்காவிட்டாலும் நான் ஒருவனே படிப்பேன்
*வேறு ஒருவன் வந்து உங்களுக்கு உதவி செய்வான் என்று எதிர்பார்ப்பதும் பெரிய முட்டாள்தனமாகும். உங்களையே நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்ளத் துணிவு கொள்ள வேண்டும்
*நம்மை எவன் இழிவுபடுத்துகிறானோ, அவனை நாம் மதிப்பதில்லை என்று முடிவு கட்டிக்கொள்ள வேண்டும்.
*சாதியை ஒழிப்பது என்பது செங்குத்தான மலையில் தலைகீழாக ஏறுவது போன்றது.
*தலைவிதி,முன் சென்மக் கர்மப்பலன் என்பவைகள் மனிதனுடைய முட்டாள்தனத்துக்கும் அயோக்கியத்தனத்துக்கும் பரிகாரமாக்கப்படுகிறது.
*சகுனம் பார்க்கிறோமே! சாப்பிடும் போது சகுனமோ, ராகுகாலமோ பார்க்கிறோமா?நீதி மன்றத்தில் ராகுகாலம் பார்த்தால் என்ன ஆகும்?
*வெங்காயத்தை உரித்துக்கொண்டே போனால் கடைசியில் எதுவுமே மிஞ்சாது. ஒன்றும் இல்லாத பூஜ்யப் பேர்வழிகளைத் தாக்கவே அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறேன்
*எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறதென்றால் துணிவு ஒன்றுதான்.வேறு எந்த யோக்கியதையும் எனக்கு கிடையாது.
*யாரோ ஒருவன், எப்போதோ ஒரு காலத்தில், ஏதோ ஒரு மொழியில், என்னமோ ஒரு உத்தேசத்தின் மீது சொன்னதாக, யாராலோ எழுதி வைக்கப்பட்டதை ஒப்புக்கொண்டு பின்பற்றச் சம்மதிப்பதை விடப் பெரிய அடிமைத்தனம் வேறு இல்லை
*வாழ்த்து என்பது ஒரு சம்பிரதாயம் ஒழிய அதனால் எந்த பயனும் இல்லை. இந்த முறை எல்லாம் 2000 ஆண்டுகளுக்கு முந்தியது.
*சுயமரியாதை உடையவன் இந்தியை ஆதரிக்க மாட்டான்
*பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவதாகும்
*எந்த மனிதனும் எனக்கு கீழானவன் இல்லை.அதேபோல் எவனும் எனக்கு மேலானவனும் இல்லை
*கல்வியினுடைய குறிக்கோள் என்பது பணம் சம்பாதிப்பது மாத்திரம் என்று நினைக்கக் கூடாது
*முட்டாள்கள் உள்ள வரை அயோக்கியர்கள் ஆட்சி செய்வார்கள். இதுதான் ஜனநாயகம்
*மூட்டை தூக்கும் பொழுது பாரத்தினாலே நான் கஷ்டப்பட்டிருப்பேனே தவிர, வெட்கத்தினால் ஒரு போதும் கஷ்டப்பட்டதில்லை.
*கோர்ட் மக்கள் சவுகரியத்திற்காகவே தவிர, வக்கீல்கள் சவுகரியத்துக்காக அல்ல
*பக்தி ஆசையிலிருந்தும் அன்னியர் பார்த்து மதிப்பதிலிருந்தும் வளருகிறது
*பக்தி ஆசையிலிருந்தும் அன்னியர் பார்த்து மதிப்பதிலிருந்தும் வளருகிறது
*நமது அறிவிக்கு ஒரு காரியம் சரி என்று பட்டாலும் அனேக விஷயங்களை உணர்ந்தே அதைப் பிரயோகிக்க வேண்டும்
*எனக்கும் கடவுளுக்கும் என்ன முன்விரோதமா?நான் அவரைப் பார்த்ததுகூட இல்லை!’
*கீழ்சாதி என்பதற்கும், தொடக்கூடாதவர் என்பதற்கும் மதத்தையோ கடவுளையோ காரணம் காட்டுவது வெறும் பித்தலாட்டம்.
*பக்தி என்பது தனிச்சொத்து ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து
*பக்தி வந்தால் புத்தி போகும்; புத்தி வந்தால் பக்தி போகும்
*எந்த இனம் தன்னுடைய உரிமைக்காகப் போராட முன் வரவில்லையோ அந்த இனம் உரிமைகளை அனுபவிக்க தகுதியற்றது
*எங்கே விழுந்தாய் என்று பார்க்க வேண்டிததில்லை..எங்கே வழுக்கியது என்று பார்க்க வேண்டும்
*இந்த சமுதாயத்தை மானமும் அறிவுமுள்ளதாக மாற்றவும், மனிதனுக்கு மனிதன் ஜாதிய ஏற்றத்தாழ்வில்லாமல் வாழச் செய்வதே என் லட்சியம்
*என்னைக் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்கின்றனர். நம்பிக்கை வைக்கத்தக்க அப்படி எதுவும் இருப்பதாக புலப்படக் காணோமே என ஏங்குபவன் நான்
*சேவை என்பது கூலியை உத்தேசித்தோ, தனது சுயநலத்தை உத்தேசித்தோ செய்வதல்ல. மற்றவர்கள் நன்மை அடைவதை பார்த்து மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவதற்காகவே செய்யப்படும் காரியம் தான்
*தொடர்ந்து கற்றுக்கொள்,
ஆய்வு செய்
உருமாறு.!
இதில் உள்ள கருத்துக்கள் எல்லாம் சிலரால் ஏற்றுக் கொள்ளாமல் போகலாம்.ஆனால் ஏதேனும் ஒரு கருத்து உங்கள் இதயத்தை தொட்டது என்றால் அதுவே பெரியாரின் வெற்றி.இந்த வரிகளோடு நம் வாழ்வை உயர்த்த விரும்பிய பெரியாரை இந்த நன்நாளில் நினைவு கூர்வோம்.
- மணிகண்டபிரபு