கார்கி விமர்சனம்
*மணி
சாய் பல்லவி நடித்துள்ள ஹீரோயின் ஓரியண்டட் படம்.ஹீரோ,பாடல்கள் பில்டப், பாடல், ஹீரோயினிசம் எதுவும் இல்லாமல் நம்பகமான திரைக்கதை வழியாக நல்ல கதாபாத்திரமாக மனதில் பதிகிறாள்.அன்றாடம் படித்துக் கடக்கும் குழந்தைகள் வன்கொடுமை செய்திகளை தொகுத்து திருப்தியான திரைபடமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர்.அறிமுக காட்சியிலே கதை துவங்கி விடுவது சந்தோசமா இருக்கு.
#கதை
பள்ளி ஆசிரியையான சாய் பல்லவிக்கு காதலனுடன் திருமணம் நிச்சயமாகப் போகிறது.மாவு ஆட்டி வைக்கும் அம்மா, தங்கை, அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டி
வேலை செய்யும் தந்தை என அக்மார்க் மிடில் க்ளாஸ் குடும்பம்.
9 வயது சிறுமியை வன்கொடுமை செய்யும் 4 வடமாநிலத்தவர் போலிசில் பிடிபடுகின்றனர். அதே அப்பார்மெண்டில் செக்யூரிட்டி வேலை செய்யும் சாய் பல்லவியின் தந்தையும் ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்படுகிறார்.
நிலை குலைந்து போகும் குடும்பத்தையும், உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கவும், அப்பாவியான தன் தந்தையை விடுவிக்க சாய்பல்லவி எடுக்கும் முயற்சிகளும், இறுதியில் ஆயிரம் நியாயங்கள இருந்தாலும் தர்மம் ஒன்றுதான் எனும் அடிப்படையில் சட்டத்தின் முன் குற்றவாளியை பிடித்துக் கொடுப்பதும் தான் கதை.
#ப்ளஸ்
*படத்தின் முக்கியப் பலம் சாய்பல்லவி தான்.நம் வீதியில் இருக்கும் பெண்ணைப் போல இயல்பான நடிப்பு.சிறுவயதிலிருந்து குழந்தைகளிடம் அத்து மீறினால் என்ன நடைபெறும் என்பதை நன்கு உணர்ந்த பாத்திரம்
*யூகிக்க முடியாத திரைக்கதை. க்ளைமேக்சில் இவர் செய்திருப்பாரா என சந்தேகம் இருந்தாலும், யாராக இருந்தாலும் தப்பு தப்புதான் என சொல்லியிருப்பது நம்பகத்தன்மையை கூட்டுகிறது.
மாலை ஆறு மணி முதல் ஆறரை மணி வரை குற்றவாளி யாராக இருக்கும் என்பது யோசிக்க வைக்கிறது.
*ஜூனியரான காளி வெங்கட் இந்த வழக்கில் ஆஜராவதும், மெடிக்கல் ஷாப்பில் இருப்பதால் மருந்து டோஸ் கொண்டு பாய்ண்ட் பிடிப்பதும் ஓகே ரகம்
*திருநங்கை கதாபாத்திரமும், முரட்டு அப்பாவான சரவணன்.. சாய் பல்லவியின் தங்கையின் உருவில் தன் மகளை பார்ப்பது போல் உடைந்து அழுவது நெஞ்சம் கனக்க வைக்கிறது
*காட்சியின் வலியின் மனோநிலையை இசையின் மூலம் சொல்லும் கோவிந்த் வசந்தாவிற்கு பாராட்டுக்கள்
*நீங்க விரும்பறத சொல்றது நியூஸ் இல்ல,நடந்ததை சொல்றதுதான் நியூஸ் மற்றும் அவ்வப்போதும் வரும் டைமிங் வசனங்களூம் சிறப்பு.
*ஸ்ரையந்தி, பிரேம்கிருஷ்ணா அக்காடு இருவரின் ஒளிப்பதிவும் படத்துடன் ஒன்ற வைக்கிறது.
*கார்த்திக் நேத்தாவின் வரிகள் நாயகியின் உணர்வுகளை அசரீரி போல் ஒலிக்கிறது.
#மைனஸ்
*இரண்டாம் பாதி கொஞ்சம் மெதுவாய் போவது போல் இருந்தது. பின் வேகமெடுக்கிறது
*அவ்வளவு பெரிய அப்பார்ட்மெண்டில் சி.சி டி வி கேமரா இருக்காதா? அதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை.
*சம்பவ இடத்தில் வரும் நாய்..முதலாளியை பார்த்து குரைக்காது. மற்ற மூவரை பார்த்து குரைக்காதா?அந்த சத்தம் கேட்டு வரமாட்டாங்களா?தேமேனு படுத்திருக்கு. அதுக்கு டோஸ் கொடுத்திட்டாங்களா?
*பேட் டச் பற்றி சொல்லிக் கொடுத்த ஒருவர் சபலத்தில் இப்படி செய்வாரா? அப்படி ஒரு வக்கிர எண்ணம் தோன்றுமா எனவும் சந்தேகிக்க வைக்கிறது
*அப்படியே குற்றவாளி குற்றம் செய்திருந்தாலும் தப்பி செல்வாரா இல்லை குழந்தைக்கு முதலுதவி செய்வாரா என யோசிக்க வைக்கிறது.
அடுத்து என்ன என யோசிக்க வைக்கும் காட்சிகளும்,நம்பகமான நடிப்பும், திரைக்கதையும் நிச்சயம் பார்க்க வைக்கும்
தோழமையுடன் மணிகண்டபிரபு