Monday 30 March 2020

31-3-20

[31/03, 7:34 am] மணிகண்ட பிரபு: இரவின் மெளனத்தை
பறவையின் முதல் குரல் 
கலைக்கிறது

-அ.வெண்ணிலா


வாழ்வின் மீதான பற்று ஒரு பக்கமும்,வாழ முடியாத நெருக்கடி மறுபக்கமும் எஸ்தர் சித்தியை ஊசலாடச் செய்கிறது..

-வண்ணநிலவன்


# என் முதல் பைக்கை
வாங்கிய போதுதான்
உலகின்
எல்லாச் சாலைகளும்
எனக்கும் சொந்தம்
என்பதை உணர்ந்தேன்!

-மகுடேசுவரன்

#இருளின் மெளனத்தில்
தேடியெடுத்த
தீப்பெட்டி நீ
[31/03, 10:46 am] மணிகண்ட பிரபு: 

இது உயிருக்கு வந்த சாவு அல்ல
சாவுக்கு வந்த உயிர்!
    - காசி ஆனந்தன்...

Thursday 19 March 2020

valaipayuthe

Ayyappanum koshiyum

அய்யப்பனும் கோஷியும்
*மணி

ஒரு பட்டிமன்றம் பார்க்கும்போது இரு தரப்பு வாதமுமே தரமாய் தம் கருத்தை வைத்தால் இரண்டு டீமுமே ஜெயிக்கணும் னு நினைப்போம். நடுவரும் இது இல்லாமல் அது இல்லைனு முடித்து வைப்பார். அப்படி ஒரு படம் தான் இது.

#கதை

ஹீரோ 2 பேர். பிரித்வி&பிஜூ மேனன். பணக்கார வீட்டுப் பையன் பிரித்வி கார்ல தண்ணி அடித்துவிட்டு படுத்துகொண்டு வருவார். அந்தகாட்டுப் பாதையில் ஆல்கஹால் கொண்டு செல்வது குற்றம். செக்போஸ்ட் இன்ஸ்பெக்ஸர் பிஜூமேனன் ப்ரித்வியை கைது செய்து சிறையில் அடைக்கிறார் ஒரு 10 நாள். இதற்கு இடையில் தன் கன்னத்தில் அடித்த பிஜு  வை பழிவாங்க அவர் யதெச்சையாய் மது குப்பியை ஓபன் செய்வதை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர சஸ்பெண்ட் ஆகிறார்.இனி பழிவாங்க பிஜுவும், வெறி அடங்காத ப்ரித்வியும் மோதிக் கொள்ளும் படம் தான் அய்யப்பனும் கோஷியும்.

#பிரித்வி

பணக்கார பையனுக்குரிய திமிருடன், சிறு தோல்வியை கூட தாங்கிக்க முடியாத ஆளாய் அசத்தி இருக்கிறார். அதென்ன்ன அவ்வ்வ்வ்லோ திமிர்ருனு நம்மை கேட்க வைப்பதே அவரின் நடிப்புக்கு கிடைத்த வெற்றி

#அய்யப்ப நாயர்

தம்பி படத்தில் வில்லனாய் நடித்த அதே பிஜு மேனன் இதில் போலிஸாய் வாழ்ந்திருக்கிறார்.ஊர் மதிக்கும் எஸ்.ஐ யாகவும்,மனைவிக்கு நல்ல கணவனாகவும்,வஞ்சத்தினால் வேலை இழந்தவராகவும், நேர்மையாய் இருந்தாலும் தன் மீது விழுந்த பழிக்கு ப்ழி தீர்க்கும் போது மனுஷன் வாழ்ந்திருக்கிறார்.

#ஒளிப்பதிவு நம்மை அட்டப்பாடி வாசியாகவே வாழவைத்திருகிறது

*ராஜ் டிவியில் போட்ட இந்தியன் படம் மாதிரிநீளமாய் இருந்தாலும் போர் அடிக்கவில்லை.

*இருவரையும் இத்தனை பிரச்சனையிலும் மோதவிடாமல் க்ளைமேக்ஸ் வரை நம்மை எப்ப சண்டை போடுவாங்கனு  எதிர்பார்க்க வைத்திருக்கார் இயக்குநர்

*ஹரி,பேரரசு பட வெறியர்களுக்கு பிடிக்காது.

*இருவரும் அடிச்சுக்க மாட்டாங்களே தவிர மாறி மாறி வெறுப்பேத்தி வந்து அடிக்க வைக்க வெறுப்பேத்துவார்கள். அது ஆடியன்சையும் வெறி ஏத்தி எப்படா யாரு அடிப்பாங்கன்னு காக்க வைக்குது.

*ஹீரோயின் இல்லை.ஒரு பாட்டு மற்றும் கிராமிய பாட்டு மட்டும் உண்டு.

*தமிழ்ல ரீமேக் ஆகும்னு சொல்றாங்க.
அதனாலயே மலையாளத்தில பார்த்திட்டேன்.

எப்பிடியும் இந்த பர்னிச்சரை தமிழ் இயக்குநர்கள் உடைச்சிடுவாங்கனு தான்

-மணிகண்ட பிரபு