[05/08, 6:52 am] மணிகண்ட பிரபு: No man has a good enough memory to be a successful lier
"யார் ஒருவரும் வெற்றிகரமாகப் பொய் சொல்லுகிற அளவுக்கு மிகத் தேர்ந்த நினைவாற்றல் உடையவராக இருக்க முடியாது
-லிங்கன்
[05/08, 7:05 am] மணிகண்ட பிரபு: ஆண் தெய்வங்கள் கோயில்கள் அனைத்தும் கிழக்கு நோக்கியும், பெண் தெய்வங்கள் கோயில்கள் வடக்கு நோக்கியும் இருக்கும்.
*பெண்களே அக்காலத்தில் போருக்கு தலைமை தாங்கியதால் வடக்கு நோக்கி ஆயுதமேந்தியபடி நிற்கின்றன.மூன்று திசையில் கடல் இருப்பதால் வடக்கில் இருந்துதான் பகை வந்திருக்கக்கூடும்.
அதனால் வடக்கு நோக்கி நிற்கின்றன.
காளி போன்ற தெய்வங்கள் ஆவேசமுடன் நிற்பதை காண முடிகிறது.
-தொ.பரமசிவன்
[05/08, 8:01 am] மணிகண்ட பிரபு: சிந்தனைகளில் ஈடுபாடு கொள்வது மிகப் பெரிய மனப்புரட்சி
-சுந்தர ராமசாமி
[05/08, 7:47 pm] மணிகண்ட பிரபு: ஒரு சூழ்நிலையைச் சரியாக,முழுமையாக நீங்கள் புரிந்து
கொள்வதற்கு முன்பு இருந்த
மனநிலைதான் "தன்னம்பிக்கை"
[06/08, 7:10 am] மணிகண்ட பிரபு: இட்டவி
அன்றாட உணவில் இட்லி என்பது முக்கியமானது.9ம் நூற்றாண்டை சேர்ந்த திவாகர் நிகண்டில் இட்லி என்பது இட்டவி என இருக்கிறது.இட்டு அவித்தல் என்பதை இட்டவி என்னும் சொல்லாய் வழங்கியிருக்கலாம்.
-சுப.வீ
[06/08, 7:11 am] மணிகண்ட பிரபு: வாழ்த்துக்கள் வளர்த்துமளவிற்கு தன்னம்பிக்கை கூட வளர்க்காது
*கமல்ஹாசன்
[07/08, 9:12 am] மணிகண்ட பிரபு: நீ என்பது ஒருமை
நான் என்பது தனிமை
நாம் என்பதல்லவோ இனிமை
#கலைஞர்
[08/08, 7:20 am] மணிகண்ட பிரபு: நீ கிடைத்துவிடாதே
உன்னைத் தேடுவதில்தான்
என் இருத்தல்
இருக்கிறது
-அப்துல் ரகுமான்
[08/08, 7:44 pm] மணிகண்ட பிரபு: வேறு ஏதோர் கலக்கத்தில்,
வேறு ஏதோர் மனவருத்தத்தில் இருப்பார்கள்.
ஆனாலும்
நம்மால் காயப்பட்டுவிடவில்லை என்பதை
உறுதிசெய்து கொள்ளப் பிரயாசை கொள்கிறது-
அன்பாலே ஆகிப்போன மனம் ஒவ்வொன்றும்.
-யாத்திரி
[08/08, 7:47 pm] மணிகண்ட பிரபு: "நானொரு பறவை; இவ்வுடல் எனது கூண்டு.
அதை அடையாளமாக வைத்துவிட்டு நான் பறந்து செல்கிறேன்..."
-
ரூமி
[09/08, 7:33 am] மணிகண்ட பிரபு: முதுமை
முதுமை
நிமிஷக் கறையான்
அரித்த ஏடு
இறந்தகாலத்தையே பாடும்
கீறல் விழுந்த இசைத்தட்டு
ஞாபகங்களின்
குப்பைக் கூடை
வியாதிகளின்
மேய்ச்சல் நிலம்
காலத்தின் குறும்பால்
'கார்ட்டூன்' ஆகிவிட்ட
மாமிச ஓவியம்
-அப்துல்ரகுமான்
[09/08, 7:43 am] மணிகண்ட பிரபு: தன் மனைவியின் பிறந்தநாளை மறந்த கணவன் இரவு வெகுநேரம் கழித்து வீடு திரும்பினான்.
மனைவி அவனிடம் என்னை 4 நாட்கள் பார்க்காவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டாள்.
உடனே கணவன் சந்தோஷத்தில் அவனையறியாமல் குதித்து எழுந்து ஆஹா அருமை என்றான்.
முதல் நாள்.
மனைவியை பார்க்கமுடியவில்லை.
...
இரண்டாம் நாள்.
அன்றும் மனைவியை பார்க்கமுடியவில்லை.
முன்றாம் நாள்.
அன்றும் மனைவியை பார்க்கமுடியவில்லை.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
நான்காம் நாள்.
வீக்கம் சிறிது குறைந்ததால் இடது கண்ணோரம் மனைவி சிறிது மங்கலாக தெரிந்தாள்..
😷😷😷
[09/08, 7:49 am] மணிகண்ட பிரபு: #புத்தம் புதுக் காலை..
இன்று ஆகஸ்ட் 9..
"வெள்ளையனே வெளியேறு" தினம்..!
1942 ஆம் வருடம், ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி அன்று, மகாத்மா காந்தி துவக்கிய இந்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில், லட்சக்கணக்கான மக்கள் திரண்டு ஆங்கிலேயருக்கு எதிராக போராட்டம் நடத்தினர்..
இதில் இறந்த வீரர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த தினம், ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது..
"Quit India.."
"வெள்ளையனே வெளியேறு.."
என்ற வார்த்தையை முதன்முதலாக பயன்படுத்தியது மகாத்மா காந்தியடிகள் என்றாலும், அது உருவான நிகழ்வு சுவாரசியமானது..
போராட்டத்திற்கு ஒரு தினம் முன்பாக, 1942 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 8ம் தேதி அன்று, மும்பையில் கௌலியா மைதானத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் போது..
"Do or Die.."
"செய் அல்லது செத்துமடி.."
என்று காந்தியடிகள் தனது உரையைத் துவக்கினார்..
மறுநாள் நாடெங்கும் நடக்கவிருக்கும் போராட்டத்திற்கான, சிறந்த வாசகத்தை முன் வைக்குமாறு மகாத்மா காந்தி, போராட்டக் குழு உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்ள..
"Retreat..!"
"Withdraw..!"
"Get Out..!"
என்ற பல முழக்கங்களை ராஜாஜி உட்பட பலரும் கூறினர்..
அப்போது,
"யூசுப் மெஹெரெலி" என்ற அந்த 39 வயது காந்தியவாதி எழுந்து நின்று,
"Quit India.."
என்று முழங்க..
காந்தியடிகள்,
"Amen.." என்று ஆமோதித்தாராம்..!
"வெள்ளையனே வெளியேறு'
என்ற தீர்மானம் அன்று நிறைவேற்றப்பட்டது..
அதில் பேசிய
மகாத்மா காந்தி,
"In the democracy which I have envisaged, a democracy established by non-violence, there will be equal freedom for all.
Everybody will be his own master. It is to join a struggle for such democracy that I invite you today.." என்ற தனது
உரையை,
"செய் அல்லது செத்துமடி.." என்ற கோஷத்துடன் துவக்கி வைத்தார்..
"வெள்ளையனே வெளியேறு.."
என்ற வாசகம், மக்கள் மனதில் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியது..
ஆகஸ்ட் 9ம் தேதி மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல் உள்ளிட்ட தலைவர்களை ஆங்கிலேயர் சிறை பிடித்தனர்..
இருப்பினும் போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்தது..
ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு பயப்படாமல் மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர். அறவழியில் துவங்கிய இப்போராட்டம் வன்முறையாக மாறியது. லட்சக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்..
அதன் பின் ஐந்து ஆண்டுகள் கழிந்து, அதே ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா சுதந்திர நாடாக உருவானது..
"வெள்ளையனே வெளியேறு.."
இயக்கத்தின் 75 வது ஆண்டை குறிக்கும் வகையில் இன்று இந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது..
நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
#ஆகஸ்ட்புரட்சி..
#மொழிபெயர்ப்பு
-சசித்ரா தாமோதரன்
[09/08, 7:54 am] மணிகண்ட பிரபு: மனது எல்லைகளை மட்டுமே பார்க்கும். அன்புக்கு மட்டுமே எல்லைகளை கடந்து செல்கிற ரகசிய பாதை தெரியும் .
ரூமி