சிந்திக்க ஒரு நொடி
===============
தீக்குச்சி
விளக்கை ஏற்றியது
எல்லோரும்
விளக்கை வணங்கினார்கள்
பித்தன்
கீழே எறியப்பட்ட
தீக்குச்சியை வணங்கினான்
"ஏன் தீக்குச்சியை
வணங்குகிறாய்?"
என்று கேட்டேன்
"ஏற்றப்பட்டதை விட
ஏற்றி வைத்தது
உயர்ந்ததல்லவா" என்றான்.
------------------------------
- கவிக்கோ அப்துல் ரகுமான்.
(ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்)
×××××××××××××××
💥TNPTF MANI💥: காற்றில் வினோத நடனம் புரியும்
இலைகளை கைவிரலால் பற்றினேன்.
ஒவ்வொரு முறையும் இலைதான் சிக்குகிறது
நடனம் எங்கோ மறைந்துவிடுகிறது
-தேவதச்சன்
[14/11, 5:33 p.m.] 💥TNPTF MANI💥: காயப்படுவோம் என்ற அச்சத்தில் தான்
சுவர் எழுப்பிக் கொள்கிறார்கள்
-ஜெயகாந்தன்
[14/11, 5:35 p.m.] 💥TNPTF MANI💥: தாமரை என்றான் தலைகுனிந்து நின்றேன்
மல்லிகை என்றான் மயங்கி நின்றேன்
ரோஜா என்றான் சிவந்து நின்றேன்
வரதட்சணை என்றான் வாடி நின்றேன்
-பாலபாரதி
[14/11, 5:37 p.m.] 💥TNPTF MANI💥: மனச திடப்படுத்திக்கோங்க ன்னுட்டு சொல்ல ஆரம்பிக்கும்போதே இருக்கற கொஞ்ச நஞ்ச தைரியமும் போய்டுது"
-சொரூபா
[14/11, 7:00 p.m.] 💥TNPTF MANI💥: இந்தி மொழியின் ஓசை குதிரை வண்டி ஓசை,தூக்கத்தில் கற்றுக்கொள்ளும் மொழி,
அதன் எழுத்துக்கள் தொங்கும் மந்திகள்
-தமிழன்பன்
[14/11, 7:15 p.m.] 💥TNPTF MANI💥: ...எனக்குப்பிடித்த கவிதைகள் (1 - 15):
1. "ரேசன் கடைக்காரருக்கு
குழந்தை பிறந்தது....
எடை குறைவாக...!"
2. "வராந்தாவிலேயே
இருந்த
வயதான தந்தை....
இறந்த பின்
ஹாலுக்குள் வந்தார்
புகைப்படமாய்...!"
3. “வீட்டின் பெயரோ
அன்னை இல்லம்..!
அன்னை இருப்பதோ
முதியோர் இல்லம்..!”
4. " புறாக்கள் வளர்க்கும்
எதிர் வீட்டுக்காரர்
என்னிடமிருந்து பறிக்கிறார்
பூனை வளர்க்கும்
சுதந்திரத்தை...."
- நா. முத்துக்குமார்.
5. " பறித்த மலரை
ஆண்டவனுக்குச் சூட்டினாலென்ன?
கல்லறையில் வைத்தாலென்ன?
மலருக்கென்னவோ
பறித்ததுமே வந்துவிட்டது
மரணம் ! "
6. “சர்க்கரை இல்லை...
கொழுப்பு இல்லை...
எஜமானரோடு
வாக்கிங்
போகுது
ஜிம்மி...!”
7. "வேலிக்கு வெளியே
தலையை நீட்டிய என்
கிளைகளை வெட்டிய
தோட்டக்காரனே...!
வேலிக்கு அடியில்
நழுவும் என் வேர்களை
என்ன செய்வாய்...?"
-- மு. மேத்தா.
8. "ஒவ்வொரு முறையும் அவன் அவளை
பிறந்த வீட்டுக்கு அனுப்பும் போதெல்லாம்
திரும்பவும் அவர்களை
ஒன்று சேர்த்து வைக்கிறது
ஹோட்டல் சாம்பார்!"
--S. செல்வகுமார்
9. "பேருந்தில்
சிதறுகிறது நாணயங்கள்....
தேடலுக்குப்பிறகு
கிடைத்தன....
சில நாணயங்கள்
தொலைந்தன...
சிலர் நாணயங்கள்...!"
-ப. உமாமஹெஶ்வரி.
10. "பேற்றின் வலியோடு
அலறும் குரலில்
இணைந்தே ஒலிக்கிறது
என் நிர்வாணத்துக்கான
அழுகையும்...!"
-- அ. வெண்ணிலா.
11. "கோழித்திருடனை
ஜெயில்ல போட்டாங்க...
ஜெயில்ல அவனுக்கு
கோழிக்கறி போட்டாங்க..!"
-- ஒப்பிலான்.
12. "மாங்கல்யத்தின் மகிமையை
மனைவி அறிவாள் …
மணவாளன் அறிவான் …
அவர்கள் இருவரையும் விட
மார்வாடியே
அதிகம் அறிவான்...!'
-- கவிஞர் தமிழன்பன்.
13. "காற்றில் பறந்து
பறவை மறைந்த பிறகும்
கிளை தொடங்கிய
நடனம் முடியவில்லை !"
- நா. முத்துக்குமார்.
14. "உடைந்த பொம்மை
அழாத குழந்தை
கவலையோடு அப்பா..!"
-- சிவா.
15. பிள்ளையார் சுழி
"ஆற்றங்கரைப்
பிள்ளையாருக்கு
கிராமத்துப்
பெண்டுகள் மீது
கோபமோ கோபம்.
ஆண்டவனாய்
என்னை
வணங்காவிட்டாலும்
பரவாயில்லை.
ஒரு ஆண் பிள்ளையாய்
நடத்தக்கூடாதா?
குளித்துவிட்டு வந்து
ஈரப்புடவையை
என் பக்கம் திரும்பி நின்றா
மாற்றிக் கொள்வார்கள்.
சீச்சீ!"
-- தஞ்சாவூர் கவிராயர்
💥TNPTF MANI💥: இப்போதுள்ள சிக்கல்
ஒரே மாதிரியானவர்களில்
ஒருவரைத் தேர்ந்தெடுப்பது
-யுகபாரதி
[15/11, 7:09 a.m.] 💥TNPTF MANI💥: அத்தனை பேர் கூடிய விழாவில்
"மொய்" செய்யாது போனவன் குறிப்பிட்டுச்
சொல்லப்படுகிறான் எப்பவும்..
-யுகபாரதி
[15/11, 7:14 a.m.] 💥TNPTF MANI💥: மனதை வருடிய கவிதை?
பெண் சுதந்திரம்
உணவகம் நில்லா
விரைவு பேருந்து
பொட்டல் வெளியில்
வேகம் குறைத்து நின்றது...
ஓட்டுனரும்,நடத்துனரும்
அவசரமாய் இறங்க...
(குறி)யீட்டை
புரிந்து கொண்டு
சில ஆண்களும் இறங்கினர்...
எனை ஏதும் கேட்காமலே
என் கணவரும் இறங்கினார்...
பெண்கள் ஒருவரும் இறங்கவில்லை
சிலர் புடவை தலைப்பு
கலைந்து தூங்கினர்
சில பெண்கள்
இறங்கிய ஆண்களை
வெறித்து பார்த்தனர்...
பேருந்தின் பின்புறத்தை
கட்டணமில்லா கழிவறையாக்கினர்..
இறங்கிய ஆண்கள்...
ஒரு சில ஆண்கள்
முகத்தில் தீர்வு கண்ட
பரவசத்துடன்
பேண்டில் சிந்திய
சிறுநீரைதட்டியபடி
பேருந்து
படிகளில் ஏறினர்...
ஒரு மணிநேரத்துக்கு மேலாக...
உள்பாவாடை
நனையும் பயத்தில்
சிறுநீரை
அடக்கி கொண்டு
பயணிப்பது
யாருக்கு தெரியபோகின்றது...
பேருந்து
மேடு பள்ளங்களில்
பயணிக்கும் போது
சிறுநீர் வந்து விடுமோ?என்று
மனம் முழுவதும்
பயத்தோடும்
வேதனையோடும்
பயணிப்பதை
ஆண்வர்க்கம் அறியுமா?
எல்லாவற்றிலும்
சரிபாதியாய்
என்னோடு பயணிக்கும்
என் கணவனுக்கே...
என் நிலை புரியாத போது,
ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும்
எப்படி புரியும்????
ஆத்திரத்தை அடக்கினாலும்
மூத்திரத்தை அடக்க முடியாது என
பொது இடத்தில்
பேசும் தைரியம்...
எந்த இடத்திலும்
ஜிப்பை அவுத்துக்கொள்ளும்
சுதந்திரம் உள்ளவர்களுக்கு
எப்போதுதான் புரிய போகின்றது...
நாங்களும்
ரத்தமும் சதையுமான
கழிவுஉறுப்புகளை கொண்ட
மனிதபிறவிகள் என்று..!
[15/11, 9:46 p.m.] 💥TNPTF MANI💥: நீங்கள் ஒடுக்கப்பட்டவர்களானால்
அது கண்ணீரின் குருதி
நீங்கள் ஒதுங்குபவர்களானால்
அது குருதியின் கண்ணீர்
-சேரன்
[15/11, 10:56 p.m.] THANGAM: புத்தகங்கள் என்பது
வெறும் தாளும் மையும் மட்டுமல்ல
அதற்குள் எழுதியவனின்
ஆன்மா இருக்கிறது
ஒரு செடியில்
வேருக்கும் விழுதுக்கும்
உள்ள தொடர்பு போன்றது
புத்தகங்களுக்கும்
வாசிப்பவனுக்கும் உள்ள தொடர்பு
புத்தகங்களின் மீது சமூகம்
நடந்து போகிறது
நடந்து போவது என்றால்
எழுதியவனின் மனநிலையை
நாம் உணர்ந்து கொள்வது.
-. தொ.பரமசிவன்
[16/11, 7:15 a.m.] 💥TNPTF MANI💥: எளிமையை பற்றி பேசவும் எழுதவும் தாம் தயங்குவதில்லை,ஆனால் அப்படி வாழத்தான் தயங்குகிறோம்
-மு.வ
[16/11, 7:58 a.m.] 💥TNPTF MANI💥: எதெல்லாம் தலை போகிற விஷயமாக ஒரு வயதில் இருந்ததோ, இன்னொரு வயதில் அது காலுக்கு கீழே தூசாய்ப் போய் விடுகிறது
-பாலகுமாரன்
[16/11, 7:59 a.m.] 💥TNPTF MANI💥: உனக்காக எதை வேண்டுமானாலும் தருவேன் என் உயிரைத் தவிர,
அதை உன்னோடு வாழ்வதற்காக வைத்திருக்கிறேன்
-தபூசங்கர்
[16/11, 7:59 a.m.] 💥TNPTF MANI💥: தும்மல் வரும்போது உடலின் சில பகுதிகள்
நின்றுவிடும்,
நீ வரும்போது தும்மலே நின்றுவிடும்
#தபூசங்கர்
[16/11, 8:05 a.m.] 💥TNPTF MANI💥: சுஜாதா எனும் மகான்
சுஜாதா
வயதாவதை நாம் அடையாளம் கண்டுகொள்வதில்லை .இது ஒன்றும் அத்தனை கடினமில்லை. வயதாக துவங்கி விட்டது என்பதற்கு சில தெளிவான அங்க அடையாளங்கள் உண்டு. அவை.இவை..
1. முதலில் வயிற்றில் ஆரம்பிக்கும்.ஒரே ஒரு தோசையோ அல்லது ஒரு இட்லி வடையோ சாப்பிட்டு,ஒரு காபி மட்டும் சாப்பிட்டால் வயிறு நிரம்பாது.
2.காரோ,பைக்கோ ஓட்டும்போது ஏற்படும் ஜாலி குறையும்,கொஞ்சம் போரடிக்குறார் போல் தோன்றும்.
3. பத்து வயசு பையன்களோடு பேசும்போது அவர்களுக்கு ஶ்ரீகாந்த் ,வெங்சர்கார் (இன்னைக்கு டிரெண்ட் க்கு அகார்கர் , அஜய் ஜடேஜா, ஶ்ரீநாத் ) போன்ற பெயர்கள் எல்லாம் தெரியாது என்பார்கள். ஆச்சரியமாக இருக்கும்.
4. வீண் வம்புக்காக சண்டைக்கு போவதில் ஒரு த்ரில் இருந்ததே.அது திடீரென்று காணாமற்போய்விடும்.
5. உங்கள் க்ளாஸ்மெட் வீட்டுக்கு போனால் ,அதிர்ச்சி காத்திருக்கும். அவனுக்கு குழந்தை இருக கும்.
6. ஞாயிற்றுக்கிழமை ஊர் சுற்றுவீர்களே!!இப்போது சுற்றாமல் தூங்க வேண்டும் போல் இருக்கும்.
7. முன்பெல்லாம் அப்பா அம்மா பேசுவதை நின்று கவனிக்கவே நேரமிருக்காது.இப்போது உங்கள் பெற்றோர் பேசுவதில் கொஞ்சம் உண்மை இருப்பது போல் தோன்றும்.
8.நீங்கள் கண்ணில் நீர் வர உருகிய சில சினிமா பாட்டுகளை த்தில் திரும்பக் கேட்கும்போது அப்படியொன்றும் பிரமாதமாக இல்லை என்று தோன்றும். சில சமயம் அபத்தமாக கூட தெரியும்.
9. நீங்கள் பைண்டு பண்ணி சேர்த்து வைத்திருந்த அந்த எழுத்தாளரின் தொடர்கதை ,இப்போது படிக்கும்போது ,"இந்த கண்றாவியவா வாராவாரம் கடையில் காத்திருந்து வாங்கினேன்"என்று தோன்றும் .
10. தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரம் முன்பிருந்தே அதை பற்றி பரபரப்பு இருக்குமே. "இப்போது அது எங்கே போச்சு".?
11. பனியன்,பாவாடை, அண்டர்வேர் ,பாடி போன்ற உள்ளாடைகளை துவைக்காவிட்டால் என்ன? பழசையே போட்டுகொள்ளலாம் என்று தோன்றும்.
12. ஆண்களுக்கு தினம் ஷேவ் செய்து கொள்வது அப்படி ஒன்றும் அவசியமில்லை என றும். பெண்களுக்கு மாட்சிங் ப்ளவுஸ் முக்கியமில்லை என்றும் தோன்றும்.
13. மத்தியான தூக்கம் சுகமாக இருக்கும்..
#இந்த அடையாளங்கள் உங்களுக்கு இருந்தால் நிச்சயம் நீங்கள் முப்பது. ...
#சுஜாதா
[16/11, 8:34 a.m.] 💥TNPTF MANI💥: பூப்பதற்கான விநாடியை
எதிர்நோக்குகிறது ஒறு மொட்டு.
காத்திருக்கத் தெரியாத வண்டு
மொட்டறுத்து உள்புக முயற்சிக்கிறது
மொட்டவிழ்க்கவே தெரியாத வண்டுக்கு
தேன் உண்ணவா தெரியப்போகிறது
-தெலுங்கு கவிதை
(சொல்லாததும் உண்மை)
[16/11, 8:39 a.m.] 💥TNPTF MANI💥: செய்த வேலைக்கு நெல்லும்(சம்பாவும்)
உப்பும்(அளத்தில் விளைவது) கொடுத்த வழக்கத்தினால்தான் "சம்பளம்" எனும் சொல் பிறந்தது
-தொ.ப
[16/11, 10:09 a.m.] 💥TNPTF MANI💥: எவ்வளவு நல்ல அரசியலமைப்புச் சட்டமாக இருந்தாலும் ஆட்சியில் உள்ளவர்கள் மோசமானவர்களாக இருந்தால் அரசியலமைப்பும் மோசமாகிவிடும்.
எவ்வளவு மோசமான அரசியலமைப்புச் சட்டமாக இருந்தாலும் ஆட்சியில் உள்ளவர்கள் திறமைமிக்கவர்களாக இருந்தால் மோசமான சட்டமும் நல்ல பலனைத் தரும்.
- டாக்டர் அம்பேத்கர்
(திருமாவேலன்)
[16/11, 6:43 p.m.] 💥TNPTF MANI💥: மடக்கி மடக்கி மாடி வீடு கட்டினோம்
வாழ்க்கை வற்றி வராண்டாவில்
முடிந்தது
-ஆதவன் தீட்சண்யா
[16/11, 9:10 p.m.] 💥TNPTF MANI💥: கரையானை பொறுத்தவரை ப்ளாஸ்டிக் தான் அந்நிய முதலீடு.
[16/11, 11:22 p.m.] 💥TNPTF MANI💥: காலத்தின் கரங்கள் கருணையற்றவை. அது கலைகளைத் தவிர மாமனிதர்களைக்கூட அழித்து விடுவதில் தயக்கம் காட்டுவதேயில்லை.
- எஸ். ராமகிருஷ்ணன்