Saturday 30 September 2023
Friday 29 September 2023
Tuesday 26 September 2023
janakiraman
மீள் பதிவு
பாடகராக எஸ்பிபி மாபெரும் லெஜன்ட். ஆனா ஓர் இசையமைப்பாளராகவும் எஸ்பிபி சாதித்திருப்பார். சிகரம் படத்தின் "அகரம் இப்போ சிகரம் ஆச்சு" பாடல் எனது எல்லா சோகங்களிலும், வாழ்வின் நம்பிக்கை இழக்கும் தருணங்களிலும் மிகப்பெரிய ஆருதலாக இருந்திருக்கிறது.
இவரே மிகச்சிறந்த பாடகர் என்றாலும், இநத பாடலை ஜேசுதாஸுக்கு அளித்திருப்பார். பாடல் வரிகள் - இசை - பாடகரின் குரல் என மூன்றும் ரொம்ப அரிதாகத் தான் ஓர்மைப் பட்டு உன்மத்த நிலை அடையும். அந்த வரிசை பாடலில் அகரம் இப்போ... நிச்சயம் முன் வரிசையில் இடம் பெறும்.
கேட்பதற்கு எளிமையான சந்தம் போல இருக்கும். ஆனா அதில் இருக்கும் சிரமத்தை ஜேசுதாஸ் ஒரு லைவ் கான்டெஸ்டில் கூறுவார். செமயா இருக்கும். (இணைப்பில் காணவும்). தனிப்பட்ட வகையில், நான் இந்தப் பாடலை எஸ்பிபி யே பாடியிருக்க வேண்டும் என்று கருதுகிறேன். அவரது குரல் இந்த பாடலின் ஆன்மாவை இன்னும் உயரமாக, வேறு தளத்துக்கு கொண்டு சென்றிருக்கும்.
//பசியார பார்வை போதும்
பரிமாற வார்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்
தலை சாய்க்க இடமா இல்லை
தலை கோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை
இளைப்பாறு தரவா இல்லை
நம்பிக்கையே நல்லது..
எறும்புக்கும் வாழ்கை உள்ளது..//
-janakiram
ஜப்பானில் ஒருவருக்கு கோபம் ஏற்பட்டால் அவர்கள் ஒரு மரபு ரீதியான வழிமுறையை வைத்திருக்கிறார்கள். யாருக்காவது கோபம் ஏற்பட்டால் உடனடியாக அவர் கோபமல்லாத ஏதாவது ஒரு செயலை செய்தாக வேண்டும். அப்போது, இதுவரை கோபத்துக்குள் சென்று கொண்டிருந்த அதே ஆற்றலானது இப்போது கோபமின்மைக்கு செல்கிறது.ஆற்றல் நடுநிலையானது. ஒருவர் மீது உங்களுக்கு கோபம் வந்தால், அவரை நீங்கள் அறைய விரும்பினால், அவருக்கு ஒரு பூவைக் கொடுத்து என்ன நிகழ்கிறது என்பதை பாருங்கள்
Thursday 21 September 2023
Wednesday 20 September 2023
காந்தி
இந்தியாவில் முதலில் காந்திஜி படம் இருக்கவில்லை. முதலில் அசோகச் சக்கரம், அசோகர் தூண் படங்கள் போட்ட ரூபாய் தாள்களே பழக்கத்தில் இருந்தன.
முதன்முதலில் 1996ல் ரிசர்வ் பேங்க் காந்திஜியின் படத்தை அச்சிட முடிவு செய்தது. ஏன் ?
பெரும்பாலான நாடுகள் தங்களது முக்கியமான தலைவர்களின் குளோசப் முகப்படங்களை அச்சிட்டன. இந்திய ரூபாய் நோட்டுக்களில் வேறு படங்கள், கட்டடங்கள் , இயற்கை காட்சிகள்,நினைவு சின்னங்கள் இருப்பது , போலி நோட்டுக்கள் அச்சிட இலகுவாக ஆகிவிட்டது. முகங்களை அச்சிடும்போது , வித்தியாசங்கள் இலகுவாக கண்டுபிடித்து விடமுடியும். அதனால் காந்திஜி முகத்தை தேர்ந்தெடுத்தார்கள்.
ஏன் காந்திஜி முகம் ?
நேரு, பட்டேல், அம்பேட்கர், போஸ், சாஸ்திரி, இந்திரா, மற்றும் எல்லோரையும் அச்சிடலாமே. இவர்களெல்லாம் அரசியல் கட்சி, சிலமாநிலங்களில் மட்டும் புகழ் பெற்றவர்கள்.
புத்தர், சமணர், இந்துக்கடவுள்கள், இவ்வாறு மதங்களை அச்சிட்டால் சட்டப்படி கூடாது. நமது நாடு மதம் சார்ந்ததல்ல.
1996களில் மக்களிடையே பெருமதிப்பு, மரியாதைகளைக் கொண்ட ஒரே தலைவர் மகாத்மா. அதனால் காந்திஜியின் முகத்தைத் தேர்ந்தெடுத்தது ரிசர்வ் பேங்க்.
இந்த காந்திஜி முகப்படம் எப்படி கிடைத்தது ?
1946ல் இங்கிலாந்து லார்டு ப்ரெட்ரிக் லாரன்ஸ் என்பவர் தற்போதைய ராஷ்டிரபதி பவனில் காந்திஜியை சந்தித்துப் பேசியபோது எடுத்த பல படங்களில் இந்த படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த போட்டாவிலுள்ள முக அமைப்பு மட்டும்தான் ரூபாய்தாள்களில் அச்சிடப்படுகிறது.
Tuesday 19 September 2023
லிங்கன்
ஆபிரகாம் லிங்கன் குடியரசுத் தலைவராக இருந்தபோது கோச் வண்டியில் சென்று கொண்டிருந்தார்.புதைகுழியில் பன்றி ஒன்று விழுந்து போராடிக் கொண்டிருந்தது. லிங்கன் வண்டியை நிறுத்தி பன்றி குட்டியை காப்பாற்றினார்.
அப்போது அவரது உடையில் சேரும் சகதியும் பட்டுவிட்டன. அப்படியே வெள்ளை மாளிகைக்கு சென்றார். அவரை அனைவரும் பாராட்டினார்கள். லிங்கன் குறுக்கிட்டு என்னை யாரும் புகழாதீர்கள்.
அந்த சின்னஞ்சிறிய உயிர் புதைக்குழியில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது என் இதயத்தில் ஒரு முள் தைத்தது போல் உணர்ந்தேன். அதன் உயிரை காப்பாற்றினேனோ இல்லையோ என் இதயத்தில் தைத்திருந்த
முள்ளை நான் அப்புறப்படுத்தி விட்டேன். அதை மட்டும் செய்யாதிருந்தால் என் இதயத்தில் தைத்த முள் என் வாழ்நாள் முழுவதும் ஆறாத காயத்தை ஏற்படுத்தியிருக்கும் என்றார்
Monday 18 September 2023
ஷான்
பாறையாய்க் கிடக்கும் மனங்களை மெல்லிய குச்சி ஒன்றால் தட்டித் தட்டி திறக்க முயன்றபடி ரயிலாடி நடக்கிறாள் அவள்
சிலர் வாங்குகிறார்கள்
சிலர் பேரம் பேசுகிறார்கள் சிலர் இரக்கப் படுகிறார்கள் சிலர் பயணம் மட்டும் செய்கிறார்கள்
பேனா கீசெயின் பொம்மை டார்ச்லைட் எது வாங்கினாலும் இலவசமாய்க் கிடைக்கிறது வாழ்க்கைக்கான பாடமொன்று பார்வையற்ற சிறுமியிடம்.
-ஷான்
Sunday 17 September 2023
தஸ்தா
'எல்லாவற்றிற்கும் மேலாக பொய்ம்மையை விலக்கு! எல்லாப் பொய்ம்மைகளையும். குறிப்பாக உன்னோடு நீ சொல்லிக் கொள்ளும் பொய்ம்மையை.
உன் சொந்தப் பொய்ம்மையை எப்போதும் கவனித்துக் கொண்டே இரு. ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும், வெறுப்பை விலக்கு. மற்றவர் மீதும் உன் மீதும் கொள்ளும் வெறுப்பை.உனக்குள் வெறுப்புத் தோன்றினால், அதைக் கூர்ந்து கவனிப்பதன் மூலம் அதைக் கழுவிக் களைந்து விடலாம்.
அச்சத்தை அகற்று.
அச்சம், பொய்களின் விளைவு.
அன்பைச் சாதிக்கும் போது, உன் அற்பமான சுயநலம் கண்டு அஞ்சி விடாதே.
சில சமயங்களில் நீ தவறாகச் செயல்பட்டால் அதற்காக மிகவும் கலவரப்பட்டு விடாதே.
இதைவிட உறுதிப்பாடான எதையும் என்னால் சொல்ல முடியாது.
பொய்யான நேசத்தை விட மெய்யான நேசம், கடினமானதும், பயங்கரமானதும் ஆகும்!
கற்பனை நேயம், உடனடியான சாகசச் செயல்களை உருவாக்கும். அவை அனைவர் கண்களுக்கும் புலப்படும்.'
- தஸ்தயேவ்ஸ்கி
Saturday 16 September 2023
Friday 15 September 2023
Thursday 14 September 2023
ஆள்வதற்காக அரசக்கட்டிலில் அமர்பவன் ஒரு தாயைப் போல இருக்க வேண்டும். ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்குரிய தர்மமே அரச தர்மம்.தனக்கு விருப்பமான உணவைவிட, கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான உணவையே ஒரு தாய் ஏற்பாள்.ஆட்சியாளனும் தனக்கு உரியதை செய்யாமல் மக்கள் நலனுக்கு உகந்ததை செய்யவேண்டும்-தருமனுக்கு அறம் போதித்த பீஷ்மர்
படித்தது
அன்று மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பிய சிறுமி தன் தாயிடம் நம் உடம்பில் முக்கியமான உறுப்பு எது? என்று கேட்டாள்
அதற்கு தாய் உடம்பிலேயே கண்தான் முக்கிய உறுப்பு ஏனென்றால் கண் இல்லை எனில் உலகம் இருட்டாகிவிடும் என்றாள். அந்த பதிலாக திருப்தி அடையாத மாணவி சிந்தித்தாள்.
கடைசியில் சிறுமி தன் பதிலை சொன்னாள்.. நம் உடலில் முக்கியமான உறுப்பு தோள்கள் தான். மற்ற உறுப்புகள் எல்லாம் நமக்கு உதவியாக இருக்கும்.ஆனால் தோள்கள் தான் ஆறுதல் தேடும். அன்பு முகங்கள் புதைந்து கொள்ள இடம் கொடுக்கும். இதோ, நான் கூட இப்போது உன் தோள்களில் தானே முகம் புதைத்து அழுகிறேன். என்னைப் பொறுத்தவரை அடுத்தவர் அழுவததிற்கு இடம் கொடுக்கும் தோள்கள் தான் முக்கிய உறுப்பு என்றாள்
-படித்தது
Wednesday 13 September 2023
அலெக்சாண்டர்
அலெக்சாண்டர் சில அறிஞர்களிடம் கேட்ட முக்கியமான மூன்று கேள்விகளும் மூன்று பதில்களும்.
1) எல்லோராலும் நேசிக்கப்பட
என்ன செய்யவேண்டும்? 'அதிகாரம் இருந்தாலும் அதிகாரம் செலுத்தாமல் அன்பு செலுத்த வேண்டும்.
2) மனிதன் கடவுளாக மாற
என்ன செய்ய வேண்டும்? 'மனிதனால் முடியாதென்று நினைக்கப்படுவதை செய்து காட்ட வேண்டும்.'
3) வாழ்க்கை பெரிதா? மரணம் பெரிதா?
வாழ்க்கைதான் பெரிது. ஏனெனில் மரணம் தாங்காத துயரங்களையெல்லாம் வாழ்க்கைதான் தாங்குகிறது.
Tuesday 12 September 2023
மைக்டைசன்
மைக் டைசன், ஒரு தொலைக்காட்சி பேட்டியின் போது-
தொகுப்பாளர் : நீங்கள் பயிற்சி செய்வதற்காக அதிகாலை 4 மணிக்கு எழுந்து விடுவீர்களாமே - அது உண்மையா?
மைக் டைசன் : இல்லை. 4 மணிக்கு நான் ஓடிக்கொண்டிருப்பேன். அதனால் அதற்கு முன்னரே எழுந்து விடுவேன்.
தொகுப்பாளர் : நீங்கள் ஏற்கனவே ஒரு உலக சாம்பியன், இதையெல்லாம் ஏன் செய்கிறீர்கள்?
மைக் டைசன் : நான் ஒரு உலக சாம்பியன் - அது, அதுதான் இதற்கெல்லாம் காரணம். என்னுடைய எதிரிகள் வெற்றி மமதையில் இரவு பார்ட்டி செய்துவிட்டு வெகு நேரம் தூங்கி, சரியான உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடை கூடுகிறார்கள்.
அவர்களில் ஒரே ஒருவர் அதிகாலை 4 மணிக்கு ஓடிக்கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டால் நான் 2 மணிக்கே எழுந்து ஓட ஆரம்பித்து விடுவேன்.
அவர்களில் ஒரே ஒருவர் அதிகாலை 2 மணிக்கு ஓடிக்கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டால், நான் தூங்குவதையே விட்டு விட்டு இரவு முழுவதும் ஓடி உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பேன்.
அதனால் தான் நான் உச்சியில் இருக்கிறேன். இப்படி பயிற்சி செய்வது என்னுடைய பொறுப்பு, அவர்களுடையதல்ல
ஹெர்மான் ஹெஸ்ஸே
ஒருவரை நமக்குப் பிடித்துப் போகிறது என்றால் அவர்களுடைய பலவீனங்களை நாம் பெரிது படுத்துவதில்லை என்று அர்த்தம். அதே சமயம் ஒருவரை நாம் நேசிக்கிறோம் என்றால் அவர்களுடைய பலவீனங்களையும் சேர்த்துதான் நேசிக்கிறோம் என்று அர்த்தம்.
-ஹெர்மான் ஹெஸ்ஸே
Monday 11 September 2023
Sunday 10 September 2023
அச்சம், பயம், பீதி
நமக்கு ஆபத்து வரும் என்று தெரியும் போது நாம் முதலில் அடைவது 'அச்சம்'
அந்த ஆபத்து எந்த வடிவில் எப்படி வரும் என்று தெரியாத நிலை ஏற்படும்போது உண்டாவது 'பதற்றம்'
வந்த ஆபத்தை நம்மால் எதிர்கொள்ள முடியாதபடி நாம் உறைந்து கிடக்கும்போது ஏற்படுவது 'பீதி'. -p
Friday 8 September 2023
Thursday 7 September 2023
Wednesday 6 September 2023
Tuesday 5 September 2023
Monday 4 September 2023
காபியின் தரம் என்பது, கோப்பைகளால் தீர்மானிக்கப்படுவதில்லை. வாழ்க்கையில் முழுமை என்பது, நம்மைச் சுற்றி இருக்கும் மற்றவர்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. சிறந்த கோப்பைகளைப் பற்றியே யோசிக்கும் நமக்கு, பல சந்தர்ப்பங்களில் காபியின் சுவை தெரிவதில்லை.அதே போல் பணத்தையும் பதவியையும் விடாமல்துரத்தும் நாம், அவற்றை விடவும் முக்கியமான வாழ்க்கையை அனுபவிக்கத் தவறி விடுகிறோம். நமது துன்பங்களுக்கு எல்லாம் இந்த தவறான அணுகுமுறை தான் காரணம் -சுகபோதானந்தா
ஆதித்யா L-1 : பூமியைச் சுற்றும் ஒரு செயற்கை கோள் பூமியில் விழாமல் சுற்ற வேண்டுமென்றால் அது பூமியின் இழுவிசைக்கு எதிராக அதி வேகத்தோடு சுற்ற வேண்டும். இந்த வேகத்தை செயற்கை கோளை ஏவும் ராக்கட்டு அளிக்கும். இப்படியான செயலுக்கு எரிபொருள் அதிகம் தேவைப்படும். எரிபொருள் அதிகம் தேவைப்பட்டால் கோளின் எடை கூடிவிடும், மொத்தத்தில் அதிக பணம் தேவைப்படும். ஆனால் பூமியின் இழு விசையிலிருந்து தப்பித்து குறைந்த எரிபொருள் துணையோடு சுற்ற இன்னொரு வழியும் இருக்கிறது. அதுதான் இந்த Lagrange point. விண்வெளியின் பார்க்கிங் ஸ்பேஸ் என்கிறார்கள் இதை. இரு கோள்களுக்கிடையிலான இழுவிசைகள் சமமாக இருக்கும் பகுதி இந்த Lagrange point. நிலவுக்கும் பூமிக்கும் இடையில் இப்படியான பகுதி உண்டு. அந்த வகையில் சூரியனின் இழு விசையும் பூமியின் விசையும் சமமாக இருக்கும் ஒரு பகுதிதான் இந்த Lagrange point-1. இந்த பகுதியில் செயற்கை கோளை நிறுத்தினால் சூரியனை நோக்கி விழாமல் பூமியை நோக்கியும் விழாமல் அதே நேரத்தில் சூரியனை சுற்றும். இதற்கு எரிபொருளும் குறைவாக தேவைப்படும். மேலும். இந்த Lagrange point-1ல் நிலை நிறுத்தப்படுவதால் பூமியைவிட சூரியனுக்கு அருகில் ஆதித்யா இருந்தாலும் அது சூரியனை சுற்ற எடுத்துக் கொள்ளும் நேரம் பூமி எடுக்கும் அளவில் ( 365 நாட்கள்) இருக்கும். பூமிக்கு நிகராக / நேராக சுற்றும். இதன் முலம் ஆதித்யாவிற்கும் பூமிக்கும் இடையில் தொலை தொடர்பு எளிதாகவும் சீராகவும் இருக்கும். சூரியனை ஆராய அனுப்பப்படுவதால் சூரியனுக்கு பூமிக்கும் இடையில் உள்ளLagrange point-1ல் நிலை நிறுத்தப்படுகிறது ஆதித்யா-L1. இதில் L1 என்பது Lagrange point-1 ஐ குறிக்கிறது. அந்த வகையில் இன்று ஏவப்பட்ட ஆதித்யா-L1 செயற்கை கோள், பூமியை சுற்றி, ஸ்லிங் ஷாட் அடித்து சூரியன் சுற்றுப் பாதையில் போய் சேர இன்னும் 4 மாதங்கள் ஆகும். Lagrange point என்பது “திரிசங்கு சொர்க்கம்” மாதிரி அந்தக் காலத்திலே அதை குறித்து அறிவு நம்மிடம் இருந்தது. பஞ்சாங்கத்தில் இருந்தது போன்ற வாட்சப் பதிவுகள் வரும். அவற்றை தள்ளி வைத்துவிட்டு. அயராத உழைப்பால், வியக்க வைக்கும் அறிவாற்றலால் அறிவியல் துணையோடு இந்த திட்டத்தை செயல்படுத்திய அனைவருக்கும் திட்ட குழு தலைவரான திருமதி நிஹார் ஷாஜி அவர்களுக்கும் அறிவு வணக்கத்தை சொல்லி மகிழ்வோம். .
ஆசிரியர் தினம்
சீன - ஜப்பானிய மொழியில் ஆசிரியரை சென்சே (Sen-Sei) எனக்குறிப்பிடுவார்கள். சென்சே என்றால், தமக்கு முன் பிறந்தவர் என்று அர்த்தம். இது வெறும் வயதை மட்டும் குறிப்பதில்லை. ஜென் மார்கத்தில், தனக்கு முன் ஞானமடைந்தவர், உலகை உணர்ந்தவர் என்று அர்த்தம்.
சீடர்கள், ஏற்கனவே ஞானமடைந்தவரை அணுகி, தானும் ஞானம் பெற வேண்டும் என அவரிடமிருந்து கற்றுத் தேற வேண்டும் என்பதைக் குறிக்கும் சொல்லாகவும் இருக்கிறது.
மாணவன் குருவைத் தேடி அடைவது டிமாண்ட் ட்ரைவன் ப்ராசஸ். இப்ப இருக்கும் நடைமுறைப் போல ஆசிரியரகள் நமக்கு பள்ளி/கல்லூரி அமைப்பின் மூலம் அறிமுகமாவது போல இல்லாமல், கற்பவர், தமக்கான ஆசிரியரை ஒரு தேனீயைப் போல தேடிக் கண்டடைய வேண்டும்.
இந்த சென்'சே என்பதை ஜப்பானிய சித்திர எழுத்து வடிவத்தில் இரண்டு கேரக்டரை கொண்டு எழுதுவார்கள்.
முதல் கேரக்டர், நம்ம ஊர், நடராஜரின் ஆனந்த தாண்டவ நிலை போல இருப்பது ஞானமடைந்த குருவையும், இரண்டாவது கேரக்டர், அந்த ஆனந்த தாண்டவ நிலையின் முன் பணிந்து, முழங்காலிட்டு அமந்து கேட்கும் சீடனையும் குறிப்பதாக நான் புரிந்து கொள்கிறேன்.
எனது சென்-சேக்களுக்கு மனங்கனிந்த வணக்கங்கள்.
****
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள். 🌸
Sunday 3 September 2023
திருச்செந்தாழை
மிகவும் சிறிய நாவல்.
இரண்டே பாத்திரங்கள்தான். நிறைமாத கர்ப்பிணியான பன்றி, அதனை வளர்க்கின்ற கிழவன்.
காட்டுக்குள் காணாமல்போய்விடுகிற அந்த பன்றியைத் தேடிச்செல்கிற கிழவனின் ஓரிரவு அனுபவத்தை ஓவியம்போல சொல்கின்ற மொழி.
குறிப்பாக, ஒரு மாபெரும் முயற்சிக்குப் பிறகும் தோல்வியையே அடைந்துவிடுகிற ஒருவரது மனவோட்டங்களை மிகையின்றி வெளிப்படுத்துகின்ற விதத்திலும்,
நம்பிக்கைக்கும்,அவநம்பிக்கைக்கும் நடுவே மனிதன் திகைத்து நிற்கின்ற கணத்தில் தன்னைத்தானே அவன் தட்டி நிமிர்த்துக்கொள்ள தனது பழைய நினைவுகளை, அதன் வெற்றிகளை ஒரு சூத்திரம்போல ஆக்கி வைத்திருக்கின்ற மனதின் கைவைத்தியத்தையும் இந்த சிறிய நாவல் ஒரு ஈட்டியின் முனையால் எழுதப்பட்டதைப்போல எழுதிச்செல்கிறது.
"வெயில் சூரியனிடமிருந்து வருகிறது. நிலவொளி சந்திரனிடமிருந்து வருகிறது. பின் இருள் எங்கிருந்து வருகிறது? ஒருவேளை இருளுக்கு பிறப்பு,இறப்புகள் இல்லைபோல.அது எப்போதும் இருக்கும்போல"
தீவிர யுத்தத்தைப்போல கடந்துசென்றுவிட்ட இரவிற்கு பிறகு, தனது செயல் அனைத்திலும் தோல்விகண்ட கிழவன் மயக்கமாகி புல்வெளியில் கிடக்கிறான்.அவனது உள்ளம் மட்டும் சிதைபோல எரிந்துகொண்டிருக்கிறது.அப்போது அவன் எண்ணிக்கொள்வதாக ஒருவரி வருகிறது.
"உருவமுள்ள எனது உடல் உயிரில்லாததுபோல தோல்வியில் துவண்டு விழுந்துகிடக்கும்போது,
உருவமில்லா உள்ளம் புல்வெளியில் வண்ணத்துப்பூச்சி போல பறந்துகொண்டிருக்கிறது '
அழுதுகொண்டே உறங்கிவிடுபவர்கள் கண்களை கசக்கியபடி, மற்றொரு புதிய தினத்தின் மீது எழுந்தமரும்போது
வருகின்ற இறந்தகாலத்தின் இருள்படியாத அந்த புதிய கண்களை இரவு திரும்பவும் தந்துசெல்வதைப்போல,
ஒருவனது தோல்வியினூடே அவனை அகவிசாரணைகளின்வழியே சலித்து, தூய்மைப்படுத்தி திரும்ப தனது நிலத்திற்கு அனுப்புகின்ற இந்த சிறிய நாவலின் வாசிப்பனுபவம் மிக அந்தரங்கமானது.
அவன் காட்டை வென்றான் - கேசவரெட்டி.
NBT வெளியீடு.
நன்றி திருச்செந்தாழை
Saturday 2 September 2023
Friday 1 September 2023
கோகுல்
காந்தியச்சிந்தனை பக்கத்திலிருந்த பதிவு:
காந்தி வழக்கறிஞராக இருந்த போதும் குற்றவாளி என அறிந்த ஒருவருக்காக ஒருபோதும் வாதிட்டதில்லை. திருடனுக்காகப் பரிந்துபேசியதில்லை. பணம் கிடைக்கும் என்பதற்காக நியாயத்திற்கு மாறாக ஒரு போதும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டதில்லை
ஒரு முறை ஒரு திருடன் அவரிடம் தனக்காக வாதிட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போது திருட்டுத் தவறு என்று தெரிந்தும் ஏன் திருடுகிறாய் என்று காந்தி கேட்டார். அதற்கு அவன் நான் வாழ வேண்டும் என்று தீர்மானமான குரலில் பதில் சொன்னான். அதைக் கேட்ட காந்தி ஏன் என்று பதில் கேள்விகேட்டார்.
இந்த ஏன் என்ற கேள்வி எளிதானதில்லை.
நீங்கள் ஏன் உயிர்வாழ வேண்டும் என்று ஒவ்வொருவரும் சுயமாகக் கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வியது. அதன் பொருள் உங்கள் வாழ்க்கைக்கு என்ன பயன் இருக்கிறது. யாருக்காக, எதற்காக நீங்கள் உயிர் வாழுகிறீர்கள். வெறும் சுகபோகங்களை அனுபவிப்பது மட்டும் தான் வாழ்க்கையா என்பது அதற்குள் அடங்கியிருக்கிறது.
இந்த ஏன் என்ற கேள்விக்குத் திருடனிடம் பதில் இருக்காது. ஆனால் அந்தக் கேள்வியை எழுப்புவதன் மூலம் காந்தி அவன் மனசாட்சியைத் தொட முயல்கிறார்.
இதே கேள்வியைத் தான் தன்னைப் பின்தொடருகிறவர்களிடம் காந்தி கேட்டார். உங்கள் வாழ்க்கையின் பயனாக எதை நினைக்கிறீர்கள் என்பதே அவரது வினா.. அதற்கான பதிலாகவே அவரது பொதுவாழ்க்கை அமைந்திருந்தது. அதிகாரத்தாலும் மிரட்டலாலும் ஒரு மனிதனை நேர்மையானவனாக மாற்றிவிட முடியாது. அவன் மனசாட்சியோடு பேசி அவனை உணரச்செய்வதே வழி என்று நினைத்தார் காந்தி. அது அதிகமான எதிர்பார்ப்பு தான்.
மந்தை மனநிலை கொண்ட மக்களிடம் மனசாட்சியின் படி நடந்து கொள்ளச் சொன்னது விந்தையானது. பெரும்பான்மை மனிதர்களுக்கு தாங்கள் தவறு செய்கிறோம் என்ற சுய உணர்வு கூட இருப்பதில்லை. அதைவிடவும் ஏதாவது காரணம் சொல்லி பெருந்தவறுகளை கூட நியாப்படுத்தவே முயற்சிக்கிறார்கள். குற்றம் சொல்லும் மனநிலை பெருகி இருக்கிறதேயன்றி மாற்று செயல்பாடுகள் குறைவே
இந்திய மக்களிடம் காந்தி உண்மையில் மிக அதிகமான எதிர்பார்ப்பு கொண்டிருந்தார். அவர்கள் மதச்சண்டை. இனச்சண்டை என மோதிக் கொள்ளும் போது அதற்குத் தண்டனையாகக் காந்தி தன்னை வருத்திக் கொண்டார். அவரது உண்ணாவிரதங்கள் யாவும் இந்திய மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக நடந்தவையே.
தன் எதிர்பார்ப்பு பொய்த்துப் போகும் போது காந்தி மனம் வருந்தினார். எங்கே தவறு நடக்கிறது என்று சுயபரிசோதனை செய்து கொண்டார். தன் பக்கம் தவறு இருந்தால் அதை வெளிப்படையாக ஒத்துக் கொண்டார்
அவர் இந்தியர்களை ஏமாற்றவிரும்பவில்லை. பொய் வாக்குறுதிகள் தரவில்லை. அவர்களின் பலத்தை, வலிமையை அவர்களுக்கே அடையாளம் காட்டினார்.
காந்தி தனது முடிவுகளின் மீது பிடிவாதமான பற்றுக் கொண்டிருந்தார். அதே நேரம் விவாதத்திற்கான வாசலை எப்போதும் திறந்தே வைத்திருந்தார். தான் மேற்கொள்ளும் முயற்சி பிழை என்று உணர்ந்தால் உடனே கைவிட அவர் தயங்கியதேயில்லை.
janakiraman
காந்தியச்சிந்தனை பக்கத்திலிருந்த பதிவு:
காந்தி வழக்கறிஞராக இருந்த போதும் குற்றவாளி என அறிந்த ஒருவருக்காக ஒருபோதும் வாதிட்டதில்லை. திருடனுக்காகப் பரிந்துபேசியதில்லை. பணம் கிடைக்கும் என்பதற்காக நியாயத்திற்கு மாறாக ஒரு போதும் நீதிமன்றத்தில் நடந்து கொண்டதில்லை
ஒரு முறை ஒரு திருடன் அவரிடம் தனக்காக வாதிட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போது திருட்டுத் தவறு என்று தெரிந்தும் ஏன் திருடுகிறாய் என்று காந்தி கேட்டார். அதற்கு அவன் நான் வாழ வேண்டும் என்று தீர்மானமான குரலில் பதில் சொன்னான். அதைக் கேட்ட காந்தி ஏன் என்று பதில் கேள்விகேட்டார்.
இந்த ஏன் என்ற கேள்வி எளிதானதில்லை.
நீங்கள் ஏன் உயிர்வாழ வேண்டும் என்று ஒவ்வொருவரும் சுயமாகக் கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வியது. அதன் பொருள் உங்கள் வாழ்க்கைக்கு என்ன பயன் இருக்கிறது. யாருக்காக, எதற்காக நீங்கள் உயிர் வாழுகிறீர்கள். வெறும் சுகபோகங்களை அனுபவிப்பது மட்டும் தான் வாழ்க்கையா என்பது அதற்குள் அடங்கியிருக்கிறது.
இந்த ஏன் என்ற கேள்விக்குத் திருடனிடம் பதில் இருக்காது. ஆனால் அந்தக் கேள்வியை எழுப்புவதன் மூலம் காந்தி அவன் மனசாட்சியைத் தொட முயல்கிறார்.
இதே கேள்வியைத் தான் தன்னைப் பின்தொடருகிறவர்களிடம் காந்தி கேட்டார். உங்கள் வாழ்க்கையின் பயனாக எதை நினைக்கிறீர்கள் என்பதே அவரது வினா.. அதற்கான பதிலாகவே அவரது பொதுவாழ்க்கை அமைந்திருந்தது. அதிகாரத்தாலும் மிரட்டலாலும் ஒரு மனிதனை நேர்மையானவனாக மாற்றிவிட முடியாது. அவன் மனசாட்சியோடு பேசி அவனை உணரச்செய்வதே வழி என்று நினைத்தார் காந்தி. அது அதிகமான எதிர்பார்ப்பு தான்.
மந்தை மனநிலை கொண்ட மக்களிடம் மனசாட்சியின் படி நடந்து கொள்ளச் சொன்னது விந்தையானது. பெரும்பான்மை மனிதர்களுக்கு தாங்கள் தவறு செய்கிறோம் என்ற சுய உணர்வு கூட இருப்பதில்லை. அதைவிடவும் ஏதாவது காரணம் சொல்லி பெருந்தவறுகளை கூட நியாப்படுத்தவே முயற்சிக்கிறார்கள். குற்றம் சொல்லும் மனநிலை பெருகி இருக்கிறதேயன்றி மாற்று செயல்பாடுகள் குறைவே
இந்திய மக்களிடம் காந்தி உண்மையில் மிக அதிகமான எதிர்பார்ப்பு கொண்டிருந்தார். அவர்கள் மதச்சண்டை. இனச்சண்டை என மோதிக் கொள்ளும் போது அதற்குத் தண்டனையாகக் காந்தி தன்னை வருத்திக் கொண்டார். அவரது உண்ணாவிரதங்கள் யாவும் இந்திய மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக நடந்தவையே.
தன் எதிர்பார்ப்பு பொய்த்துப் போகும் போது காந்தி மனம் வருந்தினார். எங்கே தவறு நடக்கிறது என்று சுயபரிசோதனை செய்து கொண்டார். தன் பக்கம் தவறு இருந்தால் அதை வெளிப்படையாக ஒத்துக் கொண்டார்
அவர் இந்தியர்களை ஏமாற்றவிரும்பவில்லை. பொய் வாக்குறுதிகள் தரவில்லை. அவர்களின் பலத்தை, வலிமையை அவர்களுக்கே அடையாளம் காட்டினார்.
காந்தி தனது முடிவுகளின் மீது பிடிவாதமான பற்றுக் கொண்டிருந்தார். அதே நேரம் விவாதத்திற்கான வாசலை எப்போதும் திறந்தே வைத்திருந்தார். தான் மேற்கொள்ளும் முயற்சி பிழை என்று உணர்ந்தால் உடனே கைவிட அவர் தயங்கியதேயில்லை.
Subscribe to:
Posts (Atom)