நீண்ட நாட்களுக்குப் பிறகு சின்ன தியேட்டர் முதல் மல்டிப்ளக்ஸ் தியேட்டர் வரை கூட்டம். டைட்டில் கார்ட் போடும்போது சாமி சப்பரம் வரும் போது போட்டோ எடுப்பது போல் அத்தனை பேருல் போட்டோ எடுத்தனர்.படித்தவர், படிக்காதவர் என அத்தனை பேரும் ஆர்வமுடன் வந்திருந்தனர்.நாவலை படமாக்குவதில் என்னென்ன சிக்கல் எப்படி பல்லாண்டுகளாக விற்பனையில் கொடிகட்டி பறக்கும் பொன்னியின் செல்வனை திரையில் காட்டுவர்..கற்பனை நிஜப்படுத்த முடியுமா என்பதை எல்லாம் பூர்த்தி செய்தனரா என்பதை படமாய் பார்த்ததை பகிர்வோம்
#கதை
ஆதித்த கரிகாலன்(விக்ரம்)பல்வேறு போர்களில் வெற்றிக் கொண்டு வருகிறார்.தன் தாய் நாடான சோழ நாட்டில் உள்ள அரசியல் சூழ்ச்சிகளை தன் தந்தை பிரகாஷ் ராஜ்க்கும், தங்கை த்ரிஷாவுக்கும் எச்சரிக்கை செய்தி அனுப்பவும் உளவு பார்க்கவும் கார்த்தியை அனுப்புகிறார்.கடம்பூர் மாளிகையில் பெரிய பழுவேட்டரையர் சரத்குமார் தலைமையில் நடக்கும் சோழ நாட்டின் அதிகாரப்ப்போட்டியில் பங்காளி மதுராந்தகன் ரகுமானை மன்னராக்க முடிவெடுக்கின்றனர். இதை அறிந்து கொண்டு கார்த்தி தஞ்சாவூர் நோக்கி செல்கையில் நந்தினி ஐஷ்வர்யாவை சந்தித்து ஒரு டீல் பேசுகிறார் கார்த்தி.
கோட்டைக்குள் நுழைந்து மன்னரிடமும் த்ரிஷாவிடமும் செய்தி கூறுகிறார்.த்ரிஷா தன் தம்பி அருண்மொழி வர்மனை இலங்கையிலிருந்து அழைத்து வரும் டாஸ்க் தருகிறார். இலங்கையிலிருந்து ஜெயம் ரவியை அழைத்து வந்தாரா?பல போர்களில் வெல்லும் விக்ரம் தன் தம்பி அருண்மொழியை காக்க என்ன செய்தார்? ஏன் தஞ்சைக்கு செல்லவில்லை?சோழர்களை அழிக்கத் துடிக்கும் பாண்டியர்களின் திட்டம் வென்றதா?சோழ சாம்ராஜ்யத்தை அழிக்க நினைக்கும்
ஐஸ்வர்யாவின் திட்டம் என்ன? என வலைப்பின்னலில் சிக்கிய கதைக்கு சீராக சிக்கெடுத்துள்ளனரா என்பதே கதை
#ப்ளஸ்
*கதாபாத்திரத் தேர்வு அற்புதம்
*எந்த இடத்திலும் கதைக்கு தேவையான திரைக்கதை அமைத்து சென்றிருப்பது மணிரத்னத்தின் பலம்
*படத்தில் ஐஸ்வர்யா நந்தினியாகவே வலம் வருகிறார்.
*கார்த்தி,ஜெயராம்,ஜெயம்ரவி, த் ரிஷா, கிஷோர் ஆகியோர் பெர்பெக்ட் மேட்ச்
*படத்தின் பலம் ரவிவர்மனின் ஒளிப்பதிவு.பொன்னி நதி, வங்ககடல்,கோட்டைகளை தத்ரூபமாக காட்டியுள்ளார். ரஹ்மான் இசை இன்னொரு பலம்
*தோட்டாதரணி கலை இயக்கமும், ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங்கும் தொய்வின்றி போகிறது.
*ஒவ்வொரு காட்சியிலும் ஒரு பெரிய நடிகர் இருப்பது நல்ல திருப்தி
*"பேரழிகளை விட ஆசைகாட்டுவது மணிமுடி" "அழகில் மயங்கி விட்டீரா..கொஞ்சம்..என இழுக்கும் வசனங்களில் ஆசான் தெரிகிறார்
#மைனஸ்
*குந்தவையும் வந்தியத்தேவனும் சந்தித்துக் கொள்ளும் காட்சி புத்தகத்தில் ஈடு இணையற்ற காதல் காட்சி.இதில் தூரமாய் பார்க்கும் போது சாதாரணமாக பார்த்துட்டு திடீர்னு பிரம்மிப்பா பார்ப்பது போல இருந்தது. கதையில் இருவரும் ஓரிரு முறை பார்க்க மிஸ்ஸாகி பின்னர்தான் பார்ப்பார்கள் அந்த எதிர்பார்ப்பு.. இதில் அது மிஸ்ஸிங்
*த் ரிஷாவோடு வரும் வானதி கேரக்டர் இதில் ரொம்ப சிம்பிளா இருக்கும். பூங்குழலி போல வானதி கேரக்டருக்கும் மெனக்கெட்டிருக்கலாம்
*பாகுபலியில் போர்க்களத்தில் வரும் அந்த கல்லாலான குண்டு போடும் காட்சி இதிலும் வருவதால் அதை கம்பேர் பன்ன தோனுது.இன்னும் சில காட்சிகளும்
*சோழர்கள் பயன்படுத்திய போர் நுணுக்க முறையை அதிகம் காட்டியிருக்கலாமோனு தோனுது.
குறைகள் குறைவுதான். படத்தின் ஓட்டத்தில் தெரியவில்லை.நந்தினி அம்மாதான் ஊமைத்தாய்னு நமக்குத் தெரிந்தாலும் படிக்காதவர்க்கு அடுத்த பாகத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும்.ஃபீல் குட் மூவி.
புத்தகத்தில் ஃப்ளாஷ்பேக் அதிகம். இதில் குறைவு.ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரே காட்சியில் வந்தாலும் அழுத்தமாய் தாங்கள் யார் என்பதை நடிப்பில் உணர்த்தியுள்ளனர். படமாய் திரையில் தொய்வின்றி செல்கிறது. கட்டாயம் பார்க்கலாம்
தோழமையுடன் மணிகண்டபிரபு