மெடிக்கல் தொழில்- லாபமா, நஷ்டமா?
ஒரு மெடிக்கல் கடை முதலாளி மதிய உணவு அருந்துவதற்காக வீட்டுக்கு கிளம்பினார். அப்பொழுது அவருடைய பத்து வயது பையனை கடையில் உட்கார வைத்துவிட்டு மருந்து ,மாத்திரை எல்லாவற்றிலும் விலைகள் இருக்கிறது. அவற்றை பார்த்து யாரும் கேட்டார்கள் என்றால் விற்று காசு வாங்கி வைத்து இரு, என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.
சுமார் இரண்டு மணி நேரம் கழித்து திரும்பி வரும்போது பையன் சந்தோசமாக ஒரு மருந்து பாட்டிலை விற்றேன், 18 ரூபாய்க்கு என்று எழுதி வைத்திருந்தான்.
உடனே கடைக்காரர் கோபத்தில் அவனை அடித்து விட்டார் .அடப்பாவி ,எண்பத்தி ஒரு ரூபாய் மருந்து ,தலை கீழாக பார்த்து 18 ரூபாய்க்கு விற்றிருக்கிறாய் என்றவுடன் பையன் அழ ஆரம்பித்துவிட்டான்.
5 நிமிடம் கழித்து அவனை ஆறுதல் படுத்தினார். சரி, சரி விடு .அதிலும் பத்து ரூபாய் லாபம் இருக்கிறது என்று தட்டிக் கொடுத்தார் .பையன் சமாதானமானன்.
சார் என்ன கேட்டிங்க?
-படித்தது