Friday 25 December 2020

அசோமித்திரன்

இந்திய பஸ்களே பஞ்சத்தில் அடிபட்டுச் சாகப் போகிறவர்களின் இறுதிப் பயணத்துக்காகத் தயார் செய்யப்பட்டவை போல் உள்ளன

-அசோமித்திரன்

Tuesday 22 December 2020

ஐன்ஸ்டீன்

எதிர்காலத்தை பற்றி நினைக்கத் தேவையில்லை.அது தானாகவே சீக்கிரம் வந்துவிடும்

-ஐன்ஸ்டீன்

Monday 21 December 2020

பாவக்கதைகள்*மணி




இப்படியெல்லாம் இந்தக்காலத்தில நடக்குமா?ஆணவக்கொலையெல்லாம் சுத்த ஹம்பக்னு சொல்றவங்க எல்லாரும் நியூஸ் பேப்பரில் கிரிக்கெட் செய்தியும் தலைப்புச் செய்தியும் பார்க்கிற கூட்டமா தான் இருக்கும். ஒரு புலனாய்வு வார இதழில் மாதத்தில் குறைந்தது இரு இதழ்களிலாவது ஆணவ கொலைகள் அட்டைப்படத்துடன் வருவதை பார்த்திருக்கிறேன். நிச்சயம் இதுபோல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அதனை ரத்தின சுருக்கமாக மனம் கனக்கும் வகையில்,உள்ளது உள்ளபடியே படைத்த நான்கு இயக்குநருக்கும் சபாஷ். ஆந்த்ராலஜி படம்னாலே ஓவியத்திலிருந்தோ, கார்ட்டூனிலிருந்தோ படம் விரிய வேண்டும் என்பது சாங்கியம் போல இருக்கு.


#தங்கம்

1981ல் கோவையை பின்னணியாக கொண்ட கதையில் திருநங்கையாக காளிதாஸ் ஜெயராம்.அவரின் தங்கையை விரும்பும் நாயகனாக சாந்தனு.இந்து-முஸ்லிம் ஈகோ வர அண்ணனான காளிதாஸே இருவரையும் இணைத்து ஊருக்கு அனுப்புகிறார்.முடிவில் என்ன்ச் என்பது கதை.கிட்டதட்ட  பம்பாய் போல செல்லும் கதையில் இறுதியில் நெகிழ வைக்கின்றனர். காளிதாஸின் நடிப்பு அபாரம். கோவை நேட்டிவிட்டினாலே ஒன்ற,என்றனு சினிமாத்தன பேச்சு பேசாமல் "ஈடு,ஆகாவலி, திருவாத்தான்,ஒத்தனம் குடு,சித்தங்காட்டி,கதவநீக்கு"என பேச்சு வழக்கை பேச்சுவாக்கில் சொன்னது சிறப்பு.அம்மாவின் அழுகை சோககீதம்.


#லவ் பண்ணா உட்றணும்

விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் யதார்த்தமாய் ஆரம்பித்து வேறு பாணியில் செல்கிறது.தேனி ஈஸ்வரனின் கிராமம் அழகியல்.

காதல் மிக புனிதமானது
நம் பிள்ளைகளுக்கு வராத வரை னு ஒருகாலத்தில் ஷேக்ஸ்பியரே சொல்லியிருக்காரு.
கலப்பு திருமணம் செய்து வைக்கும் ஊர் பெரியவருக்கு இரட்டையர் அஞ்சலி.இருவரும் பேசிக்கொள்வதில்லை.மூத்த மகள் ஒருவரை காதலித்தார் என்பதால் கொலை செய்துவிடுகிறார்.இது தெரியவரும் இளையமகள் என்ன செய்தார் என்பது கதை.

அல்லக்கை நரிக்குட்டியாக வருபவர் சிக்ஸர் அடித்திருக்கிறார். லெஸ்பியன்னா ESPN சேனல்தானேனு சொல்லும் இடமும் தாடி வைத்தவரை KGF என அழைப்பது லகலக.அக்கா கொலையை கண்டுபிடிக்கும் போது புத்திசாலித்தனமா எதாச்சும் நடக்கும்னு நினைச்சா புஸ்ஸூனு போகிடுச்சு பாஸ்.நான்கில் கடைசி இடம்தான் இதற்கு.



#வான்மகள்

இருமகள்,ஒரு மகனுக்கு அப்பாவாகவும்,சிம்ரனுக்கு கணவனாகவும் வாழ்ந்து வருகிறார் கெளதம் வாசுதேவ்மேனன். பாசத்தில் திளைத்து மூவரையும் கண்ணும் கருத்துமாய் வளர்க்கிறார்.
மூத்தவள் வயதுக்கு வந்தவுடன் சிம்ரன் பேசும் வசனம் கூர்மையானது "இந்த உடம்பு உன்னுது..உனக்கு மட்டும்தான் உரிமை இருக்கு.அதனால் உன் உடம்பை  மதிக்க கத்துக்க, பாதுகாக்க கத்துக்க என பேசும் இடம் நச்.

எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழும் போது குடும்பமே உடைந்து போகிறது.வழக்கமான ஆணவக்கொலை போல் அல்லாமல் பெண்ணின் பார்வையில் சொல்லியிருப்பது நுட்பம்.ஆனால் ஒரு பெண் இவ்வளவு தூரம் செய்வார்களா என்பது ஆச்சர்யமளிக்கிறது.


#ஓர் இரவு

அண்ணாவின் ஓர் இரவு போல் அல்லாமல் நெஞ்சை கனக்க வைக்கிறது வெற்றி மாறனின் ஓர் இரவு.பிரகாஷ்ராஜ்க்கு மூன்று மகள்கள் ஒரு மகன்.அக்குடும்பத்தில் ஒருவரான சாய்பல்லவி காதல் திருமணம் செய்து பெங்களூருவில் செட்டிலாகிறார்.கர்ப்பமாய் இருப்பதால் ஊருக்கு அழைத்து வளைகாப்பு செய்ய நினைக்கிறார் பிரகாஷ் ராஜ்.அந்த ஓர் இரவில் என்ன நடந்தது என்பது நெஞ்சை கனக்க வைக்கும் கதையாய் சொல்லி இருக்கிறார்.

மகளுக்காக பாசத்தில் மருகுவதும், மருமகனின் கையால் தண்ணீர் கூட குடிக்காமல் கெத்து காட்டு ஊர் மனுஷனாக வாழ்ந்திருக்கிறார் பிரகாஷ் ராஜ்.நேர்த்தியான நடிப்பிலும்,தன்னால் படிப்பு பாதிக்கப்பட்ட சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்பதிலும் ஸ்கோர் செய்கிறார் சாய்பல்லவி.


4கதைகளும் சொல்லும் பாடம் இன்னும் ஆணவ கொலைகள் இருக்கிறதென மக்களிடம் ஆவண படுத்தியிருக்கிறது.இதற்கு தீர்வு இல்லையானு இயக்குநர்களை கேட்காமல் இப்படிப்பட்ட கேடுகெட்ட காரியங்களை செய்யாமல் இருப்பதும்,இப்படி செய்வோரை சட்டத்தில் பிடித்து தருவதும், இது பற்றி இளைஞர்கள் விவாதிப்பதும் தான் தீர்வாக அமையும்.ஜாதியை ஒழிக்க முடியாது.. புறக்கணிக்க கற்றிக்கொண்டாலே ஜாதி ஒழியும்


நான்கு படங்களுமே கெளரவ கொலைகள் குறித்த படம் தான். இதில டூயட் இல்ல, காமெடி இல்லனு சொல்லாம இது குறித்து படம் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்ற நால்வருக்கும் பூங்கொத்துக்கள்


-மணிகண்டபிரபு



அ.கி.பரந்தாமனார்

வலிமிகுதல் என்கின்ற இப்பண்பு உலகில் வேறெந்த மொழிகட்கும் இல்லை. இது தமிழுக்கும் மலையாளத்திற்கும் மட்டுமே உரிய மொழிப்பண்பு

-அ.கி.பரந்தாமனார்

Thursday 17 December 2020

info

தாயைப் பிழைத்தாலும் தண்ணீரைப் பிழைக்காதே.
பழிக்காதே இல்லை.தாய்க்கு ஒரு பிழை செய்துவிட்டால் அவள் மன்னித்துவிடுவாள். தண்ணீர்க்கு ஒரு பிழை செய்து நஞ்சு போன்றவற்றை கலந்தால் மன்னிக்க மாட்டாள். எல்லோரையும் கொன்றுவிடுவாள்.

#info

படித்தது

நாய்களுக்கான ஒரு அறிவு மனிதனுக்கில்லை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
"நாய்கள் பார்த்த மாத்திரத்திலேயே தங்களிடம் அன்புள்ளவர்களையும், அன்பில்லாதவர்களையும் தெரிந்து கொண்டு விடுகின்றன

-க.நா.சு


விலா எலும்பு கோணலாக இருந்தால்தான் பயன்படும். அதற்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது.அதை நேராக்க முயல கூடாது. முயன்றால் உடைந்துவிடும். பெண்களுடைய குணங்களும் நமக்கு கோணலாகத் தெரியலாம்.அவற்றை மாற்ற முயலகூடாது.ஏனெனில் அவை தேவை கருதியே அவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது

-அப்துல்ரகுமான்



கண்டெனன்,கற்பினுக்கு அணியை,கண்களால்,
தெண் திரை அலைகடல் இலங்கைத் தென் நகர்.

#கண்டேன்.கற்பினுக்கு அணியாக இருக்கிறாள்.என் கண்களால் கண்டேன்.கண்ட இடம் இலங்கை.

-அனுமன்

மொரீஸ் ட்யூவர்ஜி

ஒவ்வொரு தொகுதியிலும் ஏன் இரண்டு வேட்பாளர்கள் மட்டும் வலுவானவர்களாக இருக்க வேண்டும்?மூன்றாவது வேட்பாளர் ஒப்பீட்டளவில் பலவீனமானவர் என்பதால் பலவீனமானவர்க்கு ஓட்டளித்து தங்கள் வாக்குகளை வீணடிக்க விரும்புவதில்லை.ஒரு தொகுதியில் இரு வலுவான வேட்பாளரே இருக்க முடியும்

-மொரீஸ் ட்யூவர்ஜி

Tuesday 1 December 2020

அண்ணா

எல்லா மொழிகளிலும் தமிழ்நாட் என எழுதப்படும் தீர்மானம் கொண்டுவந்தார் அண்ணா. ம.பொ.சி இரு திருத்தம் வேண்டினார்.Tamil என்பதை thamizh என்றும் nad nadu என மாற்றக்கோரினார்.

பிறமொழிக்காரர்கள் tamil என உச்சரிப்பது சரியாய் இருக்கும் ஆனால் நாட் என்பதை நாடு என மாற்றி அண்ணா உத்தரவிட்டார்

Friday 27 November 2020

ஜல்லிக்கட்டு (மலையாளம்)*மணி



லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில், 2019ல் வந்த மலையாளத் திரைப்படம் 'ஜல்லிக்கட்டு'. தற்போது, சிறந்த அயல்நாட்டு / சர்வதேசத் திரைப்படம் என்கிற பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பாகப் போட்டியிட 'ஜல்லிக்கட்டு' தேர்வாகியுள்ளது.
இதுவரை மதர் இந்தியா, சலாம் பாம்பே, லகான் ஆகிய மூன்று இந்திய படங்கள் தொடர்ந்து தற்போது ஜல்லிக்கட்டு ஆஸ்கருக்கு செல்கிறது.
ஹரீஷ்.எஸ் எழுதியிருந்த ‘மாவோயிஸ்ட்’ என்கிற சிறுகதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம்.

அப்போது பார்க்கத் தவறிய படத்தை நேற்று பார்த்தேன்.ஒரு மணி நேரம் முப்பது நிமிடங்கள் படம்.தலைப்பை பார்த்து ஏதோ மாடு பிடி கதை என்பதை ஊகிக்க வேண்டாம்.

#கதை

இடுக்கி மாவட்டத்தில் கறிக்கடை நடத்தி வருபவர் வர்க்கி.படத்தின் டைட்டிலின் போதே விடியலில் ஒவ்வொருவரும் கண் விழித்தவுடன் அடுத்து செல்லும் இடம் கறிக்கடைக்குதான்.எருமைக்கறி பிரியர்களான அவர்கள் தினசரி சாபிடுவது தான் வழக்கம்.அய்யே ச்சீ னு முகம் சுளிக்க வேண்டாம். அவர்கள் வழக்கம் அது.

ஒரு நாள் அதிகாலை எப்போதும் போல் எருமை வெட்ட போகும் போது
உதவியாளர் கயிற்றை விட திடீரென ஊருக்குள் மூர்க்கத்துடன் ஓடுகிறது.
தகவலறிந்தவுடன் ஒவ்வொரு வீட்டின் ஆண்மகனும் பிடிக்க கிளம்புகின்றனர்.ஊருக்குள் துவம்சம் செய்தவுடன் காட்டுக்குள் போகிறது.ஒவ்வொருவரும் எப்படியாவது அதை பிடித்து கொன்றுவிட துடிக்கும் அன்னவெறி கண்ணையானாக துரத்துகிறார்கள்.

காட்டில் ஒரு கிணற்றில் விழுகிறது.
கயிறு கட்டி தூக்கும் போது ஒருவர் உயிரிழக்கிறார்.மீண்டும் எருமை தப்பித்து ஓடுகிறது. இறுதியில் பிடிபட்டதா இல்லையா என்பதே கதை

#கதை

*எது கிராபிக்ஸ் எருமை, எது உண்மை எருமையென கண்டுபிடிக்க முடியாதது நல்ல டெக்னிக்

*கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு ஓடி ஓடி உழைத்திருக்கிறது. பதுங்கி இருந்து எருமையைப் பார்ப்பது, இரவின் விளக்கொளியில் ஓடி வருவது,குதிரை வேகத்தில் கேமரா பயணிக்கிறது.

*இந்த ஒன்லைனின் இடையில் ஒரு பெண்ணிற்காக ஆண்டணி குட்டச்சன் மீது சந்தன மரம் வெட்டுவதாய் சிறைக்கு அனுப்புவதும், திரும்பி வந்து பழிவாங்குவது வருகிறது.

*பாடல் இல்லாதது,ஹீரோ, ஹீரோயின் இல்லாதது மிகப்பெரிய ப்ளஸ்.ஊர் மக்கள்தான் ஹீரோ.

*மணிஓசை கேட்கும் சோன்பப்படி விற்கும் போது, ஒளிந்திருக்கும் போது கொடுத்த கடனுக்கு வட்டி கேட்பது ரசனை

*ஆனால் ஓரிருவாய் ஓடும்போது இறுதியில் அத்தனை மனிதர்கள் வருவார்களா? கிணற்றிலிருந்து வந்த எருமை எப்படி தப்பித்தது?
எருமைக்கு அத்தனை பலம் இருக்குமா என நம்மை யோசிக்க வைக்கிறது?

*எருமைத் துரத்தும் ஒவ்வொரிவரின் மனநிலையையும் படத்தின் இறுதியில் மூதாதையராக காட்சிப்படுத்தியது அழகியல்

இதிலென்ன இருக்கிறது..
இதெல்லாம் எப்படி விருதுக்கு போகும் என நினைக்கும் முன்
அந்த ஊரின் கலாச்சாரம் என நினைத்தால் படம் பார்க்கலாம்

-மணிகண்டபிரபு

Thursday 26 November 2020

அந்தகாரம் விமர்சனம்*மணி



திகில், பேய் படம்னாலே சிரிப்பு படமாக்கிட்டாங்க.ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல திகில் படம். பேய் இல்ல அமானுஷ்ய படம்.ஆனால் பேய் படம் மாதிரியே கொண்டு போய் லெப்ட் இன்டிகேட்டர் போட்டு அமானுஷ்ய படமாய் மாறி இருக்கு. மூன்று மணி நேரத்தில் மூன்று கதை. கிரிக்கெட் கோச், ஆவிகளுடன் பேசும் மாற்றுத்திறனாளி,மனநல மருத்த்துவர் என மூன்று கதைகளும் சம்பவங்களுமே கதை.மூணு புள்ளி மூணு வரிசை போல் இல்லாமல் 16 புள்ளி 16 வரிசை கோலம் போட்டதுதான் சபாஷ் சொல்ல வைக்கிறது திரைக்கதை.

க்ளைமேக்ஸை 3முறை பார்த்தேன், ஆறு பார்த்தேன்னு சொல்லியிருப்பாங்க.ஆனா இந்த படத்தில ஓபனிங் சீனை இருமுறை பார்த்தால் தான் புரியும்.படத்தின் முடிச்சு இங்குதான் இருக்கிறது. முதல் அரை மணி நேரம் இந்திக்காரங்க பேசும் போது திருதிருனு முழிப்பது போல் இருக்கும்.அப்புறம் லைட்டா புரிய ஆரம்பிக்கும்.தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குநர் அட்லிக்கு வாழ்த்துகள்.நல்ல படம் கொடுத்ததற்கு.

#கதை

கிரிக்கெட் கோட்ச் வினோத்தின் மொபைல் தொலைந்து விட்டதால் லேன்ட்லைன் போன் வாங்குகிறார். பழைய மாடல் போன் வந்த நாள் முதல் அறையில் ஏதோ வித்தியாசமாய் நடக்கிறது.முகம் தெரியாத அழைப்பு வந்து.. உன் ஆன்மாவை வெளியேற்றுவதாய் சொல்கிறது. காதலியிடம் இதை சொல்ல நம்ப மறுக்கிறார்.

பார்வை இல்லாத மாற்றுத்திறனாளியான செல்வம் நூலகத்தில் பணிபுரிகிறார். இரவில் ஆவிகளுடன் பேசி கேசட்டில் பதிவு செய்து வைக்கிறார்.சிறுநீரக குறைபாட்டால் டயாலிஸ் செய்யும் அவருக்கு மாற்று சிறுநீரகம் கிடைக்க 80,000 தேவை.எனவே ஆறாவது மாடியில் சீல் வைத்த அறையில் பேய் ஓட்ட ஒப்புக்கொள்கிறார்.

படத்துவக்கத்தில் மனநல மருத்துவர் இந்திரனின் குடும்பத்தையும் கொன்றுவிட்டு அவரையும் சுட்டுவிட்டு தன்னையும் மாய்த்துக் கொள்கிறார் அவருடைய நோயாளி. 8 மாத கோமாவுக்கு பிறகு திரும்பும் மருத்துவரை மருத்துவ கவுன்சில் நிராகரிக்கிறது.மீண்டும் பழைய நிலைக்குத்திரும்ப தன் பழைய நோயாளிகளை சந்திக்கிறார். ட்ரீட்மென்ட் கொடுக்கிறார்.

இந்த மூன்று கதைகளும் இணையும் போது க்ளைமேக்ஸ்.மிகவும் சிக்கலாம கதைக்கு நேர்த்தியான திரைக்கதை.ஐந்தாறு கேரக்டர்களை வைத்துக்கொண்டு மூன்று மணி நேரம் கதை சொல்லுவது அசாத்திய திறமை.

#டின்ஜ்

*கிரிக்கெட் கோச் கேரக்டரில் செம பிட் அர்ஜுன்தாஸ்.you play the end என தனக்கு கற்றுக்கொடுத்த குருவின் வார்த்தையை கடைசி வரை தெரிந்து கொள்ள காட்டும் ஆர்வம் நச்.

*பார்வையில்லாதவராக வாழ்ந்திருக்கிறார் வினோத் கிஷன்.6 வது மாடி வரை செல்லும்போது, தனிமை வீட்டில் இருக்கும்போதும், நூலகத்தில் புத்தகத்தை தேடிக் கொண்டு வரும்போதும் ஜொலிக்கிறார்.

"தோல்விங்கிறது சாதாரண விஷயம்.
ஆனால் அதை நாம தைரியமாய் பார்க்கனும்"

"நாம பண்ணின தப்பிலிருந்து எவ்வளவு வேணா ஓடலாம். ஆனால் தப்பிக்க முடியாது.

"நான் கோபப்படுறேனு நினைக்கிற.. என்னோட பயந்தான் கோபமா மாறுது"

"இந்த உலகத்தில் பார்க்க எந்த தகுதியான விஷயமும் இல்லை"

"வழி தவறிப் போவதை விட வழி தெரியாம போவது எவ்வளவோ மேல்"என ஆங்காங்கே பளிச் வசனங்கள் பிரகாசிக்கின்றன.

*படத்தின் மற்றொரு பலம் இசையும் ஒளிப்பதிவும்.டெம்போ குறையாமல் இறுதி வரை இழுத்துக்கொண்டு போகிறது.

*டாக்டரான குமார் நடராஜன் பக்கா ஃபிட்.ஞாபகம் ஒரு அரக்கன்.அதை தட்டுற விதத்தில் தட்டணும்.அதைவிட முக்கியம் அதை தட்ட வேண்டியவன் தான் தட்டணும் வசனம் க்ளாஸ்.

*எல்லாம் தெரிந்த டாக்டரை ஒருத்தன் கொல்ல வர்றான். அதற்கான காரணத்தை சொல்லியிருக்கலாம். 

*பாட்டிலில் அடைத்த பேய் மீண்டும் வரவில்லை.போங்கடானு போயிருச்சா.

பொறுத்தார் நல்ல படம் பார்ப்பார் என்பது போல் 2-51 நிமிடம் பொறுத்தால் நல்ல படம் பார்க்கலாம்.
இயக்குநர் விக்னராஜனுக்கு பாராட்டுக்கள்.படம் முடியும் போது டைட்டிலில் தீபம் அணைவது நல்லாயிருந்துச்சு

-மணிகண்டபிரபு

Wednesday 25 November 2020

அண்டன் பிரகாஷ்

மூளையில் சுரக்கும் மெலட்டோனின் எனும் ஹார்மோன் தான் நம்மை தூங்குவதற்கு உந்துகிறது.
கண்களால் கிரகிக்கும் ஒளியை லக்ஸ் எனும் யூனிட்டால் அளக்கிறார்கள்.
மெழுகுதிரி 3லக்ஸ், இரவு பல்பு 100லக்ஸ்.இது அதிகமாகும் போது மெலட்டோனின் சுரப்பு குறையும்.

9000.லக்ஸ் உள்ள வெளிச்சத்தைக் கண்கள் பார்த்தால் அந்த இரவில் சுரக்காமலே போகும். கண்கள் வழியே திரையிலிருந்து வரும் நீல வெளிச்சத்தால் இயலாது.

நீண்டநேரம் டி.வி,செல்போன் பார்த்தால் மெலட்டோனின் சுரக்காமல் தூக்க சுழற்சி பாதிக்கும்

-அண்டன் பிரகாஷ்

Tuesday 24 November 2020

எஸ். இராமகிருஷ்ணன்

வாசிப்பு மனநிலை!

- எஸ். இராமகிருஷ்ணன்

ஒருவரை மலையேற வைப்பது கூட எளிதானதுதான். அதை விடவும் கடினமானது புத்தகம் படிக்க வைப்பது. மக்கள் ஏன் புத்தகங்களை வெறுக் கிறார்கள் எனப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எதற்குப் படிக்க வேண் டும்? புத்தகம் படித்து என்ன ஆகப் போகிறது? வெறும் காலவிரயம்தான் என படித்த தலைமுறைகூட ஆழமாக நம்புகிறது என்பதுதான் காலக் கொடுமை!

எனது நண்பர் உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு, தானே 100 புத்தகங்களை வாங்கிக் கொண்டு வீடு வீடாகப் போய் இலவசமாக புத்தகம் கொடுத்து படிக்க வைக்க முயன்றார்.

அவருக்கு என்ன நடந்தது தெரியுமா?

அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு வீட்டுக்குப் போய் அவர் அழைப்பு மணியை அழுத்தியிருக்கிறார். கதவை திறந்த ஆள், ‘யார் என்ன..’ என எதையுமே கவனிக்காமல் ‘வேண்டாம் போ’ எனச் சொல்லி கதவை மூடிவிட் டார். அடுத்த வீட்டில், ‘இதை வெச்சிட்டு என்ன செய்றது? யாரும் படிக்க மாட்டாங்க; வேற ஏதாவது கிஃப்ட் இருந்தா குடுங்க…’ என ஒரு பெண் கேட்டிருக்கிறார்.

இன்னொருவர் வீட்டில், ‘புக்ஸ் எல்லாம் வேஸ்ட் சார். நாங்க நியூஸ் பேப்பர் கூட வாங்குறதில்லை…’ எனச் சொல்லி துரத்தியிருக்கிறார்கள். இப்படியாக 5 மணி நேரம் பல்வேறு குடியிருப்புகளில் ஏறி, இறங்கியும் அவரால் 10 புத்தகங்களைக் கூட இலவசமாக கொடுக்க முடியவில்லை.

ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து வெளியே வரும்போது அதன் காவலாளி அவரை அழைத்து, தனது பேத்தி படிக்க ஒரு புத்தகம் வேண்டும் எனக் கேட்டு வாங்கியிருக்கிறார். அவர் ஒருவரைத் தவிர வேறு யாரும் புத்தகத்தைக் கேட்டு வாங்கவே இல்லை.

நண்பர் விரக்தியோடு சொன்னார்: ‘‘அப்பா அம்மா புக்ஸ் படிச்சாதான் பிள்ளைகள் படிப்பாங்கன்னு நினைச் சேன். பெரியவங்களைப் படிக்க வைக் கிறது ரொம்ப கஷ்டம். எதையும் படிச்சிரக்கூடாதுன்னு பிடிவாதமா இருக்காங்க. அப்படியே பிள்ளை களையும் வளர்க்குறாங்க, இப்படி இருந்தா இந்த நாடு உருப்படவே உருப்படாது!”

இதுதான் நிதர்சனம். புத்தகம் படிக்க வைக்க நாடு தழுவிய ஓர் இயக்கம் இன்று அவசியமான தேவையாக உள்ளது.

மழலையர் பள்ளி ஒன்றின் ஆண்டு விழாவுக்குப் போயிருந்தேன். நிறையப் பெற்றோர்கள் வந்திருந்தார்கள். அதில் ஒருவர் கூட எந்த எழுத்தாளரையும் பற்றி அறிந்திருக்கவில்லை. எதைப் படிப்பது? எப்படி புத்தகங்களை தேர்வு செய்வது என்பதைப் பற்றியதாக அன்றைய கலந்துரையாடல் நடை பெற்றது.

அந்த நிகழ்வில் ‘மார்டிமர் ஜே அட்லர்’ எழுதிய ’ஹவ் டு ரீட் எ புக்’ (How to Read a Book) என்ற ஆங்கிலப் புத்தகம் குறித்துப் பேசினேன். 1940-ம் ஆண்டு வெளியான புத்தகம் அது.

‘புத்தகம் படிப்பது எப்படி?’ என்பது குறித்து விரிவாக எழுதப்பட்டது அந்தப் புத்தகம். நாம் ஏன் படிக்க வேண்டும்? எப்படி படிக்க வேண்டும்? புரிந்துகொள்வதில் உள்ள சிரமங்கள் எவை? அதை எப்படி அகற்ற முடியும் என்பதற்கான கையேடு போல இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.

மேலோட்டமாக வாசிப்பது, ஆழ்ந்து வாசிப்பது என இரண்டுவிதமான வாசிப்பு முறைகள் உள்ளன. பொதுவாக செய்தி களை, தகவல்களை மேலோட்டமாக வாசிக்கிறோம். தீவிரமான கட்டுரைகள், கவிதைகள், நாவல்கள், அறிவியல் சிந்தனைகளை ஆழ்ந்து வாசிக்கிறோம்.

பொழுது போவதற்காக வாசிப் பது ஒருவிதம். அறிவையும், அனுப வத்தையும், ஆளுமையையும் வளர்த் துக்கொள்ள வாசிப்பது இன்னொரு விதம். வாசிப்பின் குறிக்கோள்தான் எதை வாசிக்கிறோம் என்பதை தீர்மானிக்கிறது.

எந்த ஒன்றையும் கற்றுக்கொள் வதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று, ஆசான் வழியாக கற்றுக்கொள்வது. மற்றது, நாமாக கற்றுக் கொள்வது. இந்த இரண் டும் சிலவேளைகளில் இணைந்து செயல்பட வேண்டியிருக்கும். நாமாக ஒன்றைக் கற்றுக்கொள்வதுதான் வாசிப்பின் முதல் செயல். புத்தகம் ஓர் அரூப ஆசிரியன். அதில், குரல் மட்டுமே ஒலிக்கும்; ஆளைக் காண முடியாது.

ஆரம்ப நிலை வாசிப்பு, தேர்ந்த வாசிப்பு, பகுத்தாயும் வாசிப்பு, முழுமையான ஆழ்ந்த வாசிப்பு என வாசிப்பில் நான்கு நிலைகள் இருக்கின்றன.

அறிவியல் புத்தகங்களை எப்படி படிப்பது? தத்துவப் புத்தகங்களைப் பயில்வது எப்படி? புனைக் கதைகள், நாவல்கள் மட்டும் ஏன் விரும்பிப் படிக்கப்படுகின்றன? கவிதைகள் ஏன் எளிதில் புரிவதில்லை? வரலாற்று நூல்களை வாசிக்க ஏன் சிரமமாக உள்ளது… என்பதை குறித்து, தனித் தனி கட்டுரைகளாக விரிவாக எழுதி யிருக்கிறார் மார்டிமர்.

எந்தப் புத்தகம் குறித்தும் முன்முடிவு கள் தேவையற்றவை. புத்தகத்தைத் தேர்வு செய்வதற்கு அது குறித்த அறிமுகமும் பரிந்துரைகளும் மிகவும் அவசியம். ஆரம்ப நிலை வாசகர்கள் 50 பக்கங்களுக்குள் உள்ள புத்தகம் ஒன்றை தேர்வு செய்து படிக்கப் பழகி னால், அதை முழுதும் படித்து முடித்து விடுவார்கள். அதை விடுத்து 1,000 பக்க புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தால், அதை முடிக்க முடியாததோடு புத்தகம் படிப்பதன் மேலேயே வெறுப்பு ஏற்பட்டுவிடும்.

ஜப்பானியர்கள் எதையும் படக் கதை வடிவில் படிக்கிறார்கள். இதனால் படிப்பது எளிமையாவதோடு வேகமாக வும் படிக்க முடிகிறது. கோட்பாடுகள் சார்ந்தப் புத்தகங்களைப் படிக்கும் முன்பு கோட்பாடுகள் யாரால், எப்படி, எதற்காக உருவாக்கப்பட்டன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். வரலாற்று நூலை வாசிக்கும் முன்பாக வரைபடங் களைத் துணைக்குக் கொள்ள வேண்டும். அறிவியல் சிந்தனை களைப் புரிந்துகொள்ள ஆதார விஷயங்கள் தெரிந்திருக்க வேண் டும். கவிதையை ரசிக்க கற்பனை வேண்டும்... என படிப்பதற்கு நம்மை எவ்வாறு தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும் மார்டிமர் வலியுறுத்துகிறார்

ஒரு புத்தகத்தை எப்படி படித்தால் நினைவில் நிற்கும்? படித்த விஷயங் களை எப்படி குறிப்பு எடுத்து வைத்துக் கொள்வது என்பதற்கும் உதவிக் குறிப்புகள் கொடுக்கிறார் இவர்.

மகாபாரதம், ராமாயணம், ஒடிஸி போன்ற இதிகாசங்களை வாசிப்பது என்பது ஒரு தனி அனுபவம். ஒரு நாவல் அல்லது கவிதைப் புத்தகம் வாசிப்பதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட மகிழ்ச்சியும் பல்வேறுபட்ட உணர்வெழுச்சிகளும் தரக் கூடியது.

இதிகாசங்களை வாசிப்பது எளிதான தில்லை. ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்டது. ஆகவே பொறுமையும், ஆழ்ந்த வாசிப்பும் மிக அவசியம். இதி காசத்தின் கட்டமைப்பு மிக முக்கிய மானது. அதன் ஒவ்வொரு பகுதியும் தன்னளவில் முழுமையானது. அதே நேரம் ஒன்று சேரும்போது விரிந்த அனு பவம் தரக் கூடியது. ஆகவே, அந்தக் கட்டமைப்பின் ஆதாரப் புள்ளியை அறிந்துகொள்வது அவசியமானது.

இதிகாசம் ஒரு பிரம்மாண்டமான பேராலயம் போன்ற தோற்றம் கொண் டது. அதற்கு நிறைய உள்அடுக்குகளும், குறியீட்டு தளங்களும், உபகதைகளும், தத்துவ விசாரங்களும் இருக்கின்றன. அதைப் புரிந்துகொண்டு படிக்கும்போது தான் முழுமையான வாசிப்பு சாத்தியப்படும்

வாரம் ஒரு புத்தகம். மாதம் நான்கு புத்தகம்… என்ற இலக்கோடு தொடங் குங்கள். நிச்சயம் அது வளர்ச்சியடையும் என்கிறார் மார்டிமர். எனது சிபாரிசும் அதுவே!

- எஸ். இராமகிருஷ்ணன்,
எழுத்தாளர்

நெஞ்சுக்கு நீதியில் கலைஞர்

நானும் கவிஞரும் பேசாத காலகட்டம்.மேகலா நிறுவனத்தில் இருப்போரிடம் பேசும்போது அங்கே கவிஞர் பேசுவது கேட்டது.அப்போது யார் கவிஞரா?என்றேன்.அவர் யார் கலைஞரா? என்றார். பிறகு அவர்..

நான் உங்களைத் தாக்கி எழுதுவதை எல்லாம் படிக்கிறீரா என்றார்.அதற்கு நான்,விடாமல் படிக்கிறேன். எவ்வளவு வேண்டுமானாலும் தாக்கி எழுதுங்கள்.ஆனால் என்றைக்காவது ஒருநாள் ஒருவரையொருவர் மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் வைத்து எழுதினால் தாக்குகிற நேரத்தில் பகை உணர்ச்சி உள்ளத்தில் நிச்சயம் இருக்காது என்றேன்.

நானும் பகையுணர்ச்சியோடு எழுதவில்லை என்றார் கண்ணதாசன்.

-நெஞ்சுக்கு நீதியில் கலைஞர்

காந்தி

காந்தியின் பிரார்த்தனை பாடலான 'வைஷ்ணவ ஜனதோ' எனும் பாடல் இந்துக்களுக்கு மட்டும் உகந்ததாக இருந்ததால்

'ஈஸ்வர அல்லா தேரே நாம்
சப்கோ சன்மதி தே பகவான்'

என சேர்த்தார்."ஈஸ்வரன் அல்லா எல்லாம் உமதுபெயரே. எல்லார்க்கும் எல்லாம் கொடுப்பாய் கடவுளே"!

Monday 23 November 2020

ஓஷோ

முயற்சி எப்போதும் உங்களிடமிருந்து வரும்.அந்த முயற்சியைத் தடுக்கும் சோம்பேறித்தனம் உங்கள் மனதிலிருந்தே வரும்

-ஓஷோ

Saturday 21 November 2020

திருக்குறளில்

திருக்குறளில் வரும் 'ஆல்' என்பது அசைச்சொல்.அதற்கு அர்த்தமில்லை.அதேபோல் கொல்,மன்,அரோ,ஏ இந்த எழுத்துக்களெல்லாம் அசைச் சொல்லாக இசையை நிரப்ப வருகின்றன.

*கற்றதன லாய பயன்என் கொல்-இதில் கொல் என்பது அசைச்சொல்.அதற்கு அர்த்தம் பண்ணக்கூடாது

என்றும் காந்தி

நடை என்பது உடற்பயிற்சிகளின் இளவரசன்.

ஒரு முறை மகன் மணிலால் பத்து வயதாய் இருக்கும்போது தன் கண்ணாடியாய் மறந்து வந்துவிட்டார்.5கி.மீ வந்தபிறகு தான் தெரிந்தது.உடனே மகனைத் திருப்பி அனுப்பி எடுத்துவரச் சொன்னாராம்.

-என்றும் காந்தி நூலில்

Friday 20 November 2020

எண்ணெய்

எண்ணெய்

எண்ணை என்று எழுதாமல் எண்ணெய் என்று எழுத வேண்டும்.'எள்ளிலிருந்து பிழியப்படும் நெய்' என்பது பொருள்.எண்ணெய் என்பதே எல்லா விதைப் பிழிவுகளுக்கும் பொதுப்பெயராயிற்று.

-மகுடேசுவரன்

Thursday 19 November 2020

லஷ்மி சரவணகுமார்

ஒருவனோடு நண்பனாகும் போது அவனுக்கு மட்டுமே நண்பனாகிறோம்; எதிரியாகும்போது அவன் சம்பந்தப்பட்ட எல்லோருக்குமான எதிரியாகிறோம்

-லஷ்மி சரவணகுமார்

ஓஷோ

ஓர் உணர்வின் அடிமட்டத்தைத் தொட்டுவிட்டால் அதன்பின் அதனைத் தாண்டி சென்றுவிடுவீர்கள்

-ஓஷோ

டாக்டர்

ஒரு பைத்தியகார மருத்துவமனையில் புதிதாய் ஒரு மருத்துவர் பதிவியேற்றார்.
விடுதி முழுக்க பைத்தியங்கள் மிகவும் கொண்டாடினர். இத்தனை மகிழ்ச்சியாய் இருந்ததே இல்லை.ஏன் என டாக்டர் வினவினார்..

"நீங்கள் எங்களைப் போலவே இருக்கிறீர்கள்.முன்பிருந்தவர் அப்படியில்லை'என்றனர்.

பலரும் உன்னை பாராட்டும் போது இதை நினைவில் வைத்துக்கொள்.உன்னிடம் ஏதோ ஒரு வகையில் தாழ்வானது இருக்க வேண்டும்.

Tuesday 17 November 2020

நக்கீரன்

நூறடி ஆழத்துக்குக் கீழேயுள்ள நிலத்தடி நீரை ஆங்கிலத்தில் அக்விஃபர்(Aquifer)என்பர்.
தமிழில் நீரகம் என்பர்.'நீரகம் பொருந்திய ஊரகத்தே இரு' என்கிறது கொன்றை வேந்தன்.

-நக்கீரன்

Monday 16 November 2020

மகுடேசுவரன்

தண்மை என்பது குளிர்ச்சியைக் குறிக்கும். குளிர்ந்த நீரைத் தண்ணீர் என்கிறோம்.குளிர்ந்த நிழல் தண்ணிழல்.

வத்தி என்பது தீப்பற்றும் முனையுடைய திரிப்பொருள். தீப்பந்தத்தை தீவத்தி என்பதே சரியானது.மெழுகுவத்தி, ஊதுவத்தியே சரியான சொல்

-மகுடேசுவரன்

Saturday 14 November 2020

சூரரைப் போற்று விமர்சனம்*மணி



இன்னும் கூட வானத்தில் திடீர்னு ஏரோப்ளைன் சத்தம் கேட்டால் எங்க இருக்குதுனு கண்கள் தேடும்.ஏன்னா அது எப்பவும் நமக்கு எட்டாக்கனிதான்னு நம்ம ஆழ்மனசில இருக்கும். கோயம்புத்தூர்ல, மதுரைல ஏரோப்ளைனை பக்கத்தில பார்த்தேன்னு சொல்லும் 80கிட்ஸ்,90 கிட்ஸ் இருக்கிறாங்க.

ஐபிஎல் டீமில் சி.எஸ்.கே வின் பன்னும் காத்திட்டு இருந்து..அது முடியாமப்போக டெல்லிதான் ஜெயிக்கும்னு உறுதியாய் சொல்லி ஒரு வேளை அதுஜெயித்திருந்தால் வரும் திருப்திபோல சூர்யா அந்த மக்களின் கனவை நனவாக்குவது கதை.ஏர்டெக்கன் நிறுவன இயக்குநர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி அவர் எழுதிய Simple fly புத்தகத்தை தழுவியும் எடுக்கப்பட்டுள்ளது

#கதை

மதுரை சோழவந்தானில் பூ ராமு வாத்தியாரின் மகன் நெடுமாறன் ராஜாங்கம்.ஊரில் ரயில் நிற்க அப்பா மனு கொடுத்துக்கொண்டிருக்க சூர்யாவோ தர்ணாவை கையிலெடுக்க இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லை.அப்போது தேசிய பாதுகாப்பு அகாடமியில் இடம் கிடைக்கச் செல்கிறார்.அப்போது குடும்பத்தில் ஏற்படும் எதிர்பாராத சிக்கலால் எளியோரும் வானில் பறக்க சபதம் ஏற்கிறார்.இதை எப்படி சாத்தியப்படுத்தி சாதித்தார் என்பதே கதை. 

ஆறு படத்தில் பார்த்த அதே சூர்யா போல கச்சிதநடிப்பு. முதல் 20 நிமிசம் ஓப்பனிங் சாங்,இழுத்து இழுத்துப் பேசும் ஹீரோயின் என வழக்கம்போலவோ என நினைத்தால் அதற்கு பிறகு அனைத்தையும் மறக்கடிக்கச் செய்கின்றனர். பக்கபலமாய் ஹீரோவுக்கு துணையிருக்கும் அபர்ணா, சென்சிடிவ் அம்மாவாக ஊர்வசி, கருணாஸ்,போஸ் வெங்கட் என ஒவ்வொருவரும் நிறைவு. வில்லனை டம்மி செய்யாமல் கடைசிக்கு முந்தின ஃப்ரேம் வரை முதலாளித்துவத்தின் முகமாக  வில்லன்.மோகன்பாபு கேரக்டர் ஓரிரு இடத்தில் மட்டும் வந்து அட்டென்டன்ஸ் போடுகிறார்.

முதல் காட்சிக்கான விளக்கம் ஃப்ளாஷ்பேக் முடியும் போது சொன்னதும்,தான் ஏன் ஏழைகளை பறக்க வைக்க வேண்டுமென பின்னணி காரணமும் நச். சிட்டுக்குருவி மூலம் சிறிய ரக விமானம் செய்யத்தூண்டும் ஐடியா,
ஒவ்வொரு முறையும் மனைவியை பெருமிதமாய் பார்க்க வைக்கும்போதும் நெகிழ வைத்திருக்கிறார் இயக்குநர் சுதாகொங்கரா.

நிகேத் பொம்மியின் கேமரா நிழல் எது நிஜம் எது என வேறுபடுத்த முடியாமல் உழைத்திருக்கிறது.பாடல்களில் ஜி.வி யின் உழைப்பு தெரிகிறது.

"பார்க்க நல்லவனா இருக்கான். அவனே நாசமா போயிருவான். நாம வேடிக்கை மட்டும் பாத்தா போதும்"

*"You are a socialite..i am a socialist

*வானம் ஒன்னும் உங்க அப்பன் வீட்டு சொத்து இல்லடா போன்ற விஜயகுமாரின் வசனங்கள் பூஸ்ட் பேக்.

#டின்ஜ்

*படத்தின் நீளத்தை ட்ரிம் செய்திருக்கலாம்.
*குடியரசுத்தலைவரை ஈசியா பார்க்கச் செல்லுதல்
*ஊரே சொத்தை வித்து பணம் அனுப்புவது
*ஆல் இந்தியா ரேடியோ எல்லாரும் கேட்கும் சினிமாத்தனம் என கேள்விகள் இருந்தாலும் எளியவன் ஒரு ரூபாயில் வானத்தில் பறக்க வைக்கலாம்..அதில் உள்ள கார்ப்ரேட்டின் கோர முகத்தை உரித்துக் காட்டியதில் சூரரையும் சூர்யாவையும் போற்றவே செய்யலாம்

-மணிகண்டபிரபு

மூக்குத்தி அம்மன் விமர்சனம்*மணி



அம்மன் பட சீசன்னா ஆடிவெள்ளியில் தான் ஆரம்பித்து.. அப்போது சக்கைப் போடுபோட்டது. அதே வரிசையில் அதிக படம் வந்து அந்த உக்கிரம் அடங்கிய பின் தெலுங்கு ரீமேக் அம்மன் வந்து ரீ என்ட்ரி கொடுத்தார் அம்மன். கிராபிக்சில் வந்த பின் தான் அம்மன் பட மார்க்கெட் எகிறியது. பேருக்கு பின்னால் குமார் சேர்க்கும் 80 கிட்ஸ் ட்ரென்ட் போல.. எந்தப் படம் பேர் வைத்தாலும் பேருக்கு பின்னும் அம்மன் சேர்த்து விட்டனர்.ஒரு கட்டத்தில் படம் ஓடாமல் சீசன் முடிந்த பிறகு அம்மனே அப்புறம் வர்றேன்னு போய்ட்டாங்க.
திரும்பவும் எப்பெல்லாம் அம்மனை மறக்கிறோமோ அம்மனே அவதாரம் எடுப்பது போல் வந்தவர்தான் மூக்குத்தி அம்மன்.

வழக்கமா குடும்பத்தில் மருமகளுக்கு பிரச்சனையெனில் ஓடி வரும் அம்மன் இம்முறை சமூக பிரச்சனைக்கு வந்திருப்பதை வரவேற்கலாம்.சாமியை நம்பு சாமியாரை நம்பாதே னு சொல்லியிருக்காங்க.

#கதை

நாகர்கோவிலில் வசிக்கும் மிடில் க்ளாஸ் குடும்பம் ஆர்.ஜே.பாலாஜி.
சிறுவயதில் வீட்டை விட்டு ஓடிபோன அப்பா,தாத்தா மெளலி, அம்மா ஊர்வசி,மூன்று தங்கைகள். டெம்ரவரி நியூஸ் ரிப்போர்டராக பணிபுரிந்து வருகிறார்.தாய் ஊர்வசி திருப்பதி செல்லும் ஆசைநிராசை ஆகிக்கொண்டே இருக்க..ஒரு கட்டத்தில் குலதெய்வமான மூக்குத்தி அம்மனை வழிபட குடும்பமாய் செல்கின்றனர்.அன்றிரவு அவனுக்கு காட்சித்தருகிறார் மூக்குத்தி அம்மன். சிறு தெய்வ வழிபாட்டை புறக்கணிக்கும் மிடில்க்ளாஸ்களை கண்டு காண்டாகும் அம்மன்.. தன் கோயிலும் பிரபலமடைய பாலாஜி உதவியை நாடுகிறார். சில வழிகள் மூலம் கோயில் பிரபலமடையும் போது கார்ப்ரேட் சாமியார் அங்கு வந்து மலைகளை அழித்து 13,000 ஏக்கர் அதாவது 45கி.மீ நிலத்தை தனக்காக்கிக் கொள்கிறார்.

சாமியே ஸ்டன் ஆகிவிடுகிறது இதைப் பார்த்து.. சாமியா? சாமியாரா? பாட்ஷாவா? ஆண்டனியா?எனும் கேள்விக்கு கப்புனு குத்துது மூக்குல மூக்குத்தி அம்மன் க்ளைமேக்ஸில்..
போலிச்சாமியார்களை கண்டு கடவுளே இப்பிடி காண்டாகி வந்தால் தான் உண்டு என நினைக்கத் தோன்றுகிறது.

#டின்ச்

*படத்தின் கதையை டைட்டிலிலேயே ஆரம்பித்திருப்பது நன்று. இப்படிப்பட்ட கதையை தைரியமாய் எடுத்ததற்கே பாரட்டலாம் ஏங்கல்ஸ் ராமசாமியாக வரும் ஆர்.ஜே.பாலாஜி,என்.ஜே சரவணன்

*கடவுளும் கந்தசாமி பிள்ளையும், அறை எண் 305ல் கடவுள் போல் கடவுள் வந்து நீதாண்டா எல்லாம்னு சொல்லிட்டு போய்டுவாங்க ஆனால் நயன்தாரா போலிச்சாமியாரை நம்பாதேனு சோசியல் மெசேஜ் சொல்லிட்டு போயிருக்காங்க.

*சிறு தெய்வங்களை நம்பாமல் பெரு தெய்வங்களை மட்டும் பூஜிக்கும் அம்மாவாக ஊர்வசி கச்சிதம். வெங்கடாசலபதி நீ என்னை காப்பத்தலைனா அடுத்து பாபாவை கும்பிடுவதை தவிர வேற வழியில்லனு சொல்லும் மிடில் க்ளாஸ் அம்மாவாய் நிறைவு.

*போலிச்சாமியார் அஜய் கோஷ் கண்களால் மிரட்டுகிறார்.தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு நாகர்கோவிலை நகர் வலம் வர வைத்திருக்கிறது.இடையில் வரும் பாட்டுகள் கொஞ்சம் கொட்டாவி வரவைக்கிறது.

*ட்விட்டர் வசனங்கள் ஆங்காங்கே தெரிவது போல் இருப்பது எனக்கு மட்டுந்தானா."சமையல் பிடிக்கலைனா உடனே சொல்லுவோம், பிடிச்சதுன்னா சொல்லமாட்டோம் மாதிரி.

*குடும்பத்தை விட்டு சென்று சாமியாரிடம் சேரும் நடப்பு சம்பவங்களையும் நாடி பிடித்து சேர்த்திருப்பது நன்று.

*முதல் பாதியில் இயல்பான கலகலப்பில் அஞ்சாவதுகியர் போட்டுச் செல்லும் இடைவேளைக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து இறுதியில் வேகமெடுக்கிறது.

*இரண்டாம் பாதியில் சுவாரஸ்யமான காட்சிகள் குறைவாய் இருக்கிறது.கமேண்டிங் ஆர்டரில் இருக்கும் அம்மன் களத்தில் இறங்கியிருந்தால் அதகளம் செய்திருக்கலாம்.

*பட டைட்டில் ஆரம்பிக்கும் போதே வெள்ளி மலை வெள்ளியங்கிரி ஆண்டவர், வன அழிப்பு, யானை வழித்தடப்பாதை ஆக்கிரமிப்பு என எளிதில் யூகிக்கமுடிகிறது.அதனை தைரியமாய் சொன்ன இயக்குநருக்கு பாராட்டுகள்.

#ஃபேமிலி எண்டர்டெய்னர்.. தாராளமாய் பார்க்கலாம். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தா சூப்பரா வந்திருக்கும்.கார்ப்ரெட் சாமியார் பக்தர்களுக்கு பிடிக்காது

-மணிகண்டபிரபு

Friday 6 November 2020

ஆன்டன் செக்காவ்

ஒரு துப்பாக்கி சுவரின் மீது மாட்டப்பட்டிருப்பதாகக் கதை துவக்கத்தில் நீ வர்ணிப்பாயானால் கதையின் முடிவில் அது கட்டாயம் வெடித்தாக வேண்டும்.அது வெடிக்கவில்லையெனில் நீ கதையின் முற்பகுதியில் குறிப்பிட்டிருக்கவே கூடாது

-ஆன்டன் செக்காவ்

கந்தர்வன்

எம்.எல்.ஏ சட்டையில் ஒரு பை வைத்தார்.

எம்.பி சட்டையில் பல பை வைத்தார்.

மந்திரி,பையையே சட்டையாக மாட்டிக்கொண்டார்

-கந்தர்வன்

Tuesday 3 November 2020

தாகூர்

தாகூர் ஒரு சிலேட்டுப் பலகையில்தான் முதன்முறையாகத் தன்னுடைய கவிதைகளை எழுதத் தொடங்கினாராம். காரணம், ‘எழுதியது பிடிக்காவிட்டால் எப்போது வேண்டுமானாலும் அழித்துவிடலாம்’ என்கிற சுதந்தரம் அவருக்குப் பிடித்திருந்தது, அதுவே அவருக்கு எழுதும் துணிச்சலைத் தந்திருக்கிறது.

‘அச்சப்படாதே’ என்று அந்தச் சிலேட்டு தன்னிடம் சொல்வதாக உணர்கிறார்* தாகூர், ‘உனக்குப் பிடித்த எதை வேண்டுமானாலும் எழுது, சரிப்பட்டுவராவிட்டால் பிரச்னையில்லை, ஒரே தேய்ப்பு, அனைத்தையும் சட்டென்று அழித்துவிடலாம்.’

-என்.சொக்கன்

Monday 26 October 2020

மீரா

இலக்கிய கூட்டம்
பரவசமூட்டும்
பக்திக் கூட்டம்
எந்தக் கூட்டம் என்றாலும்
வைர மூக்குத்தி கடுக்கன் சகிதம்
முன்னால் இருப்பாள்
"காது மட்டும் கேட்காது"

-மீரா

Sunday 25 October 2020

காட்டுப்பன்றி

காட்டுப்பன்றி ஒன்று தன் கொம்புகளைத் தீட்டிக் கொண்டிருந்தது.அதைப் பார்த்த நரி நீ ஏன் கொம்புகளைத் தீட்டுகிறாய்?

அதற்கு பன்றி எதிரி நம் முன் திடீரென வந்துவிட்டால் எப்படித் தீட்ட முடியும் என்றது

"யுத்த காலத்தில் செய்ய வேண்டியதை சமாதான காலத்தில் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்"!

Saturday 24 October 2020

ஆபிரகாம் லிங்கன்

தவறுகள் செய்யபடி சூழல் தூண்டும்போது, வடக்கேயும் தெற்கேயும் பார்க்காதீர்கள். மேலேயும் கீழேயும் பார்க்காதீர்கள்.உங்கள் உள்ளுக்குள் பாருங்கள்.அங்கே ஒரு தராசு இருக்கிறது.அதன் பெயர் மனசாட்சி

-ஆபிரகாம் லிங்கன்

முட்டாள்

தாடி வைத்த சாமியார் சுவடியில் ஒரு வரி கண்டு திடுக்கிட்டார்..அதில் "நீண்டதாடி வளர்த்திருப்பவர் முட்டாள் என்றதும்..

எண்ணெய் விளக்கில் நீண்டதாடியை கருக்கினார். தீ நீண்டு மீசை,புருவம், தலைமுடி எரிந்தது.கருகிய முகத்துடன் மீண்டும் படித்தார் "நீண்டதாடி வளர்த்திருப்பவர் முட்டாள் என்று"

Thursday 22 October 2020

இரா.சிவசித்து எழுதிய English is funny language

இரா.சிவசித்து எழுதிய English is funny language கதை சுருக்கம்

90களில் கிராமத்து பள்ளி மாணவர்களின் ஆங்கிலம் குறித்து தான் கதை முழுவதும்.ஓவிய ஆசிரியரின் ஸ்போக்கன் இங்கிலீசை குருட்டு மனப்பாடம் செய்வதில் கதை துவங்குகிறது.come வா,dont come- வராதே என சினிமா வசனம் போல் ஒப்புவிக்க வேண்டும்.

பூச்சு – பொட்டுக்களை புடிக்க விருட்டென்று நீளும் பள்ளி நாக்கைப் போல அசுர வேகத்தில் நீளும் ஓவிய ஆசிரியர் கை அகப்பட்டவன் காதைப் பிடித்து ஒரு ஆட்டு ஆட்டும். அகப்பட்ட பயல் அந்த வசனத்தை மறுபடி அழ வேண்டும். சொல்லத் தெரியவில்லையென்றால் அன்றைக்கு கூத்து அவனை வைத்துத்தான்.ஏ க்ளாசுக்கு ஒண்டிக் குடித்தனம் போகும் இன்னும் பயம் அதிகமாகும்.ஏன்னா அது இங்கிலீஸ் மீடியம்.

வேப்பமரத்தடியில் எமகா பைக் இல்லையெனில் சந்தோசம் குழந்தைகளுக்கு.இங்கிலீஸ், ஓவிய பீரியடில் இருந்து காப்பாத்துனு வேண்டாத குழந்தைகளே இல்லை.
சில நாளில் பரிட்சை வந்தது. மொழிபெயர்ப்பு படித்தால் ஆச்சர்யம்.
பேப்பரை அனைவர் முன்னிலையில் திருத்தினார் ஆசிரியர்.

"Blood Is thicker then Water” ஐ “தண்ணியை விட ரெத்தம் கட்டியானது”

East or West home is best” என்பதற்கு “கிழக்கு, மேற்கில் வீடு இருந்தால் சிறந்தது என எழுதியிருந்தனர்.

அடியில் இருந்த மொசக்கித்தரை குளிர்ச்சி டவுசரைத் தாண்டி குளிரூட்டியது அனைவருக்கும். ரோல்நெம்பர் 
305’ எவன்டா?”

வேலு வாத்தியார் சத்தம் கேட்டதுமே முருகனுக்கு கால்கள் சூடேறி முதுகு காந்தியது. ஒவ்வொரு அடியும் நெஞ்சுக் கூட்டுக்குள் புடிக்கும்.முப்பது பேர அடிச்சும் வாத்தியார் அயர மாட்டீங்கிறாரே என  அங்கலாய்ப்பு வேற.

இப்படியாக யதார்த்த நடையில் வசவுகளும் வார்த்தைகளுமாய் ராஜபாளையம் வட்டார நடையில் இருந்தது.90 களில் ஆங்கிலம் படித்தவர்க்கு மட்டும் தெரியும் ஆங்கிலம் எவ்வளவு கடினம் என்று.
படிக்கும் போது நாம் எழுதிய நோட் மேக்கிங்கில் rough copy  அடித்துவிட்டது fair copy எழுதியது.
டெவலபிங் ஹின்ட்ஸில் எல்லா கோட்டையும் எடுத்துவிட்டு அப்பிடியே எழுதியது அனைத்தும் மனக்கண் முன் ஓடியது.அது ஒரு கனாக்காலம்தான்

-மணிகண்டபிரபு

மாட்டு வாகடம்-போகன் சங்கர்

மாட்டு வாகடம்
-போகன் சங்கர் Bogan Sankar

நண்பருக்கு சகிக்க முடியாத உடல்வலி.எத்தனை மருத்துவரிடம் சென்றும் நோய் மட்டும் செளக்கியமாய் இருந்தது.டாக்டருக்கெல்லாம் டாக்டர் ஒருவர் இருக்கிறாரென நண்பர் பரிந்துரைத்தார்.ஊர் எல்லையில் அடர் இருளில் விசாலாமான கேட்டினை கதறக்கதற திறந்து கொண்டு உள்ளே போனோம். டாக்டர் எங்கே என ஒரு பெண்ணிடம் கேட்க பின்னால் கேட்க டாக்டர் மாட்டுத் தொழுவத்தில் இருந்ததாய் பதில் வந்தது.

அப்போதுதான் தெரிந்தது அவர் மாட்டு டாக்டரென.ஆரு என்ற குரல் கேட்ட வழியே சென்றபோது சாணி மிதித்து நகர முடியாத செஸ் காய்களைப் போல் நின்றோம்.டாக்டர் வந்தவுடன் வைத்திய வரலாறை கூறினோம்."ஒரு வெயில்ல அலை" வைட்டமின் டி குறைப்பாடு வேற ஒன்னுமில்ல.மருந்து சீட்டு ஒன்று கொடுத்து கால்நடைத் தீவனம் வாங்கிவா என பணித்தார். வாங்கி சென்றபோது நண்பனை காணவில்லை.டாக்டர் அவரை கொஞ்சம் தழை பறிக்கக் கூட்டிட்டுப் போயிருக்காராம்.

*ஒரு சாதாரண நிகழ்வை தனக்கேயுரிய நகைச்சுவையுடன் சொல்லியிருப்பார்.

Wednesday 21 October 2020

சார்லி மலையாளம்*மணி



2015ல் துல்கர் சல்மான்,பார்வதி நடிப்பில் வந்த படம் சார்லி.இது தற்போது மாறா எனும் பெயரில் தமிழுக்கு மாதவன் நடிப்பில் வரவுள்ளது.அப்போதே மிகப் பெரும் வெற்றியை பெற்ற படம்.லாக்டவுன் ஆரம்பித்த நாட்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட படம்.நாயகி நாயகனை தேடும் கதைதான் என்றாலும் அத்தனை சுவாரஸ்யமாய் கதை சொன்னபடம்.

#கதை

பெங்களூரில் பணிபுரியும் பார்வதி சொந்த ஊருக்கு திரும்புகிறார்.கண்டிப்பான தாய் சீதா.. பார்வதிக்கு அழகற்ற ஒரு மாப்பிள்ளை பார்க்க யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு சென்று ஒரு பழைய வீட்டில் குடியேறுகிறார். அங்கு முன்பு குடியிருந்த துல்கர் சல்மான் விட்டுச்சென்ற பொருள் இருக்கிறது.அதனை அப்புறப்படுத்தும் போது துல்கர் வரைந்த படக்கதை புத்தகம் கண்ணில் படுகிறது.அதில் புத்தாண்டு இரவில் துல்கர் வீட்டில் திருட வரும் திருடனுடன் நட்பாகி அன்று இரவு ஒரு த்ரில்லுக்காக அவனுடன் திருட செல்கிறார் துல்கர்.அங்கு வீட்டின் ஓட்டை பிரிந்தவுடன் இருவரும் ஷாக்காகி நிற்க..படக்கதை புத்தகமும் பாதியில் நிற்க, படித்த பார்வதியும் ஆடியன்சும் என்னவெனத் தெரியாமல் ஷாக்காகி பாதியில் நிற்க.. அப்பிடி என்னதான் வீட்டிற்கும் பார்த்திருப்பார்கள் என யோசிக்கின்றனர்.

அதிலிருந்து மீதிக்கதை தேட கிளம்பும் பார்வதி.. சார்லியையும் ஆர்வத்துடன் தேடும் கதை ஆரம்பிக்கிறது. அப்பிடி என்னதான் ஓட்டுக்குள் இருந்தது திருடனில் ஆரம்பித்து,அவன் சொல்லும் நபர், அவர் சொல்லும் இன்னொரு நபர் என சங்கிலித் தொடர் போல் சார்லி குறித்த சுவாரஸ்ய சம்பவங்கள் பார்வதி கேட்கிறாள். கதையோடு சேர்த்து சார்லியை காண வேண்டும் என ஆவல் பிறக்கிறது. தேடிச் செல்கிறாள்.முடிவில் என்ன ஆனது என்பது தான் கதை.

ஜே.ஜே சில குறிப்புகள் போல் ஒரு பிம்பத்தின் மீது வரும் மரியாதையைப் போல் படம் நெடுகிலும் சார்லி குறித்த பாசிட்டிவ் எனர்ஜி பார்வதிக்கு. வழிப்போக்கனாய்,ஜிப்சியாய் திரியும் பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் துல்கர் கச்சிதம்.தான் பார்த்த அழகியலை ஒவ்வொருவருக்கும் விளக்கும் போது வாழ்க்கை மீது பிடிப்பை ஏற்படுத்துகிறார் துல்கர்.

தேடல், ஏமாற்றம் என படம் முழுக்க தாங்கிச் செல்கிறார் பார்வதி.ஒவ்வொரு இடத்திலும் நாயகன் மீதான அபிப்ராயம் வளர வளர ஆர்வத்துடன் அடுத்தடுத்த இடங்களுக்கு செல்கிறார்.இறுதிக் காட்சியில் அத்தனை ஆச்சர்யத்தையும் செல்லுலாய்டில் துல்கரை பார்த்து பதிவிடுகிறார்.

முதல் காட்சியில் லிப்ட் கொடுப்பதை இறுதியில் கனெக்ட் செய்தது, இன்டர்வெல் ப்ளாக்கில் முன்பின் சொல்லும் ஒரு சிறுகதை,இறுதியில் தான் ஸ்ருதி என அறிமுகமாகி துல்கரின் அன்பை பார்க்கும் இடம்,
என திரைக்கதையில் சுவாரஸ்யம் தந்திருக்கிறார் இயக்குநர் மார்டின் பிரக்கட்.கழுகுப் பார்வை ஒளிப்பதிவில் அத்தனை ரம்மியம். உறுத்தல் இல்லாத
ஒரு நல்ல ஃபீல் குட் மூவி.

-மணிகண்டபிரபு

ஓஷோ

இரு விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்.முதலாவது
"நீ எப்பொழுது பிறருக்கு எப்போது வாக்குறுதி கொடுத்தாலும் அதை நேர்மையாக இருந்து நிறைவேற்று.இரண்டாவது யாருக்கும் எந்த வாக்குறுதியையும் கொடுக்காதே

-ஓஷோ

Monday 19 October 2020

சுந்தர ராமசாமி

மெளனம்  உன்னதமானது. அது கேள்வியை உயிரோடு வைத்திருக்கிறது.கேள்வியைச் சீரழிக்காமல் பார்த்துக் கொள்கிறது.பதில் உளறல்கள் கேள்வியைத் துவம்சம் செய்துவிடுகிறது.

-சுந்தர ராமசாமி

பாரதியார்

ஒரு தகராறு,முரண்பாடு மேற்குறிப்பிட்ட எந்த ஒரு புள்ளியிலிருந்தும் என்பதை பாரதியார் சொல்கிறார்..

ஐந்து தலைப் பாம்பென்பான்-அப்பன்
ஆறுதலை யென்று மகன் சொல்லிவிட்டால்,
நெஞ்சு பிரிந்திடு வார்-பின்பு
நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்.

சுப்ரமணிய ராஜூ

கிழம்

நேற்றைய கவலையில்
இன்றைய காலையும்
இன்றைய மாலைக்கு
பிற்பகல் நினைவும்
நாளைய பயத்தில்
இன்னொரு இரவையும்
கழித்தே நாட்களை
கடத்திய பின்

எண்ணிப்பார்த்தால்
எழுவத்தி நாலு.

-சுப்ரமணிய ராஜூ

Sunday 18 October 2020

Coppola

நீங்கள் அதிக வெற்றிப்படங்களை தருகிறீர். வெற்றியின் ரகசியம் என்ன?

நீங்கள் வெற்றி பெற வேண்டுமெனில் மணமுடித்திருப்பது அவசியம். (சிரிப்பு) மணமுடித்தவர் மனது வெகு சீக்கிரம் சமநிலை அடைகிறது. ஆழமான சிந்தனைகளையும் தூண்டும்.

The Godfather பட இயக்குநர் Francis Ford Coppola

கார்பன்

உலகில் இந்த ஆண்டு கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தின் அளவு,8.8% குறைந்துள்ளது. விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில்,கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு கார்பன் அளவு 155 கோடி டன் அளவுக்கு குறைவு. இவ்வளவு பெரிய சரிவு, இரண்டாம் உலகப் போர் சமயத்தில் கூட ஏற்பட்டதில்லை என தெரிவித்தனர்

-சுப.வீ

ஒருவன் செய்த பிழையை அவன் முகத்துக்கு நேரே பரிவாய் இதமாய் எடுத்துச் சொல்லுதல் அறங்கூறுதல்.

ஒருவன் செய்த அல்லது செய்யாத பிழையை அவன் இல்லாத இடத்தில் கூறுவது புறங்கூறுதல்

-சுப.வீ

Saturday 17 October 2020

புத்தம் புதுகாலை விமர்சனம்-மணி



சில்லுக்கருப்பட்டி,awe,ஐந்து சுந்தரிகள் படங்கள் போல ஐந்து கதைகள் உள்ள ஆந்தாலஜி படம். லாக்டெளன் காலத்தில் எடுக்கப்பட்டதால் அதிக கதாபாத்திரமின்றி ஓரிரு கேரக்டருடன் ஒவ்வொரு இருபது நிமிடங்களில் நீளும் ஐந்து கதை. ரம்மியில் செவன்ஸ் ஆடி முடித்தவுடன்.. சரி தூங்குவதற்கு முன் ஃபைவ்ஸ் ஆடி பாய்ன்டில் டிக் அடித்தது யாரு,ஃபுல்லு வாங்கினது யாருனு பார்ப்போம்.

#இளமை இதோ இதோ

சுதா கோங்கரா இயக்கத்தில் முதல் கதை.மனைவியை இழந்த கணவனான ஜெயராமை சந்திக்க கணவனை இழந்த தோழியான ஊர்வசி வரும்போது லாக்டெளன் ஆரம்பிக்கிறாங்க.அங்கேயே தங்கும் நிலையில் அவர்களின் இளமை பருவத்தில் காளிதாஸ் ஜெயராமும் கல்யாணி பிரியதர்சனும் பேசுவது போல் காட்சியமைப்புகள்.அதன் இறுதியில் என்ன என்பது மீதி. சில்லுகருப்பட்டி டார்டாய்ஸ் கதையை தாண்டல.கொஞ்சம் பனம்கருப்பட்டி மாதிரிதான் இருந்துச்சு

டிக் அடிக்க முடியல.so பாய்ன்ட்டை குறைத்தது போல் இருந்தது.

#அவளும் நானும்-கெளதம் மேனன்

அம்மா காதல் திருமணம் செய்ததால் தாத்தாவுக்கு கோபம்.பேத்தி லாக்டெளனில் சயின்டிஸ்ட் தாத்தா எம்.எஸ்.பாஸ்கரை சந்திக்க போறாங்க.எதனால் அம்மா வெறுத்தார்,அவரின் நாலெஜை பார்த்து மெய்சிலிர்க்கிறாங்க பேத்தி. ஏன் அம்மா மேல அப்பா மேல கோபம்னு அழகிய நடிப்பால் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார் எம்.எஸ்.

இந்த ஆட்டத்தில் டிக் அடித்தது போல் இருந்தது.

#காபி எனிஒன்-சுஹாசினி

கோமாவில் இருக்கும் அம்மாவை சந்திக்க வெளிநாட்டில் இருந்து சுஹாசினி,அனுஹாசனும் வர்றாங்க. வீட்டிற்கு வந்து அம்மாவின் அன்பை நினைத்து உருகுறாங்க.ஒரு கட்டத்தில் சுருதி ஹாசனின் வீடியோ கால் பார்த்து நினைவு வந்திருது..
 (முதல்லயே வீடியோ கால் பேசியிருக்கலாமே).இறுதியில் என்னாச்சு என்பது கதை.
ஹை க்ளாஸ் ஃபேமிலி குடும்பக்கதை என்பதால் இங்கிலீஸ் செகன்ட் பேப்பர் பரிட்சை மாதிரி தான் இருந்துச்சு.

இதில் ஃபுல்லு 90 பாய்ன்ட் வாங்க வச்சிட்டாங்க மச்சி.பாய்ன்ட் ஏறுனதுதான் மிச்சம்

#ரீ யூனியன்-ராஜீவ் மேனன்

இதுவும் ஹை க்ளாஸ் கதை. பஞ்சரான பைக் உருட்டிவரும் ஆன்ட்ரியா..தன் பள்ளி நண்பரான மருத்துவர் விக்கி வீட்டுக்கு வர்றாங்க.ப்ரன்ட் வீட்டுக்கு வந்ததும் அவர் அட்டென்ட் செய்த பேஷன்ட்டுக்கு கொரோனா வர இவர் வீட்டு மாடியில் தனிமையில் இருக்க ஆன்ட்ரியா அங்கியே இருந்து அவர் அம்மாவை கவனித்துக்கொள்ளும் சூழல்.இதற்கு இடையில் அவர் ட்ரக் அடிக்ட் னு தெரியவர இறுதியில் என்ன என்பது கதை.ஸ்டைலிஸ் ஸ்பீச், மியூசியம் வீடு போல் செயற்கையாய் நாடகத்தனமாய் இருந்தது.

இதில் டபுல் ஃபுல் 180 பாய்ன்ட் வாங்கினால் எப்பிடி இருக்குமோ அப்பிடி.

#மிராக்கிள்-கார்த்திக் சுப்புராஜ்

ஓபனிங் ஆட்டத்தில் டிக் அடித்தால் எப்படி ஒரு கதையோ அதுபோல் வொர்த்தான கதை.20 நிமிசத்தில் ஒர்த்தான காமிடி ட்விஸ்ட் என இதுதான் நெம்பர் ஒன் கதை.அதான் க்ளைமேக்ஸில் வச்சிருக்காங்க.

பாபி சிம்ஹாவும் இன்னொரு திருடனும் ஒரு காரில் ஏதோ இருக்குனு திருட போறாங்க ஒன்னுமில்லாமல் போகுது.சரி வந்ததுக்கு ஒரு டயரை திருடிட்டு ஒரு வீட்டில் கொள்ளையடிக்க போறாங்க. அங்கே மூட்டை மூட்டையாய் பணம். அப்புறம் என்ன நடந்ததுனு சஸ்பென்ஸ்.

இதுபோன்ற கலவைப் படங்கள் ஒவ்வொருவரையும் ஒரு கதை திருப்திப்படுத்தும்.ஆனாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பில் சிக்ஸ் அடிச்சாங்களா,சிங்கிள் அடிச்சாங்களா என்பதுதான் முக்கியம்.இதற்கு முன் வந்த நானியின் ரகசியம்,மலையாள ஐந்து சுந்தரிகள் போல படங்கள்தான் தமிழ் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஐந்துமே ஒன்றுக்கொன்று போட்டி போட்டு நல்லாயிருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும்

-மணிகண்டபிரபு

Thursday 15 October 2020

நண்பர்கள் நான்கு விதம்

நண்பர்கள் நான்கு விதம் 
அவசிய நண்பர்கள், ஆத்மார்த்த நண்பர்கள், நெடுங்கால நண்பர்கள், பேருக்கு நண்பர்கள்.

அவசிய நண்பர்கள் நம் உள் வட்டத்தில் இருக்கும் உன்னத மானவர்கள். கொடி மரம் போல எல்லா தருணங்களிலும் இருப்பார்கள். நமக்கு எது ஏற்பட்டாலும் முதலில் அவர்களுக்கு தான் சொல்லத் தோன்றும். இவர்களின் பெருந்தன்மையே முக்கிய காரணம்.

ஆத்மார்த்த நண்பர்கள் நெருக்கமானவர்கள் அல்ல. ஆனால் நெஞ்சுக்கு உகந்தவர்கள். எல்லா நிகழ்வுகளிலும் பங்கெடுக்க மாட்டார்கள். அதே நேரத்தில் எதையும் அவர்களிடம் மனம் விட்டு பேச முடியும்.இவர்களின் ஆலோசனைக்கு மதிப்பளிப்போம். நெருங்கிய நண்பரிடம் சொல்ல முடியாததை கூட இவர்களிடம் சொல்லுவோம்.அவர்களுக்கு நம்மைத் தெரியும் என்பதே மற்றவர்களுக்குத் தெரியாது.அவரிடம் இறக்கி வைத்தால் அத்தனை பாரமும் குறையும்

நெடுங்கால நண்பர்கள் எல்லாருக்கும் உண்டு. சின்ன வயதிலிருந்து பழகுவார்கள். உடன் இருப்பார்கள். ஒரே தெருவில் இருப்பார்கள். சிலர் அவசிய நண்பர்கள் ஆவதும் உண்டு, இது அணுகு முறையை பொறுத்து அமையும்.

பேருக்கு நண்பர்கள் நம்மை பாதித்த சம்பவங்களை பகிர்ந்து கொள்ள மாட்டோம். ரகசியமாய் வைத்திருப்பார்களா என்ற சந்தேகம் நமக்குள் இருக்கும். ஒரே மைதானத்தில் விளையாடுவது அவ்வப்போது பார்ப்பது என்று இருக்கும் அந்த உறவு முறையில் எந்தவித பொறுப்பும் இருப்பதில்லை

-ஜெஃப்ரி கிரீஃப்
தமிழில் இறையன்பு

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

மானிட இனத்திற்குப் பெரிய அச்சுறுத்தல்
தீயவர்கள் இழைக்கும் தீங்கு அல்ல.மாறாக, நல்லவர்கள் செயலற்றியிருப்பது தான்

-மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

Saturday 3 October 2020

சின்னச் சின்னதுதான்

சின்ன புறக்கணிப்புதான்
மனதை எவ்வளவு வருத்துகிறது

சின்ன நெளிவுதான்
எவ்வளவு மரியாதை தருகிறது

சின்ன புன்னகைதான்
எவ்வளவு பகையை உடைக்கிறது

சின்னச் சின்னதுதான்
எவ்வளவு பெரிதாக இருக்கிறது?

-ப.உமா மகேஸ்வரி

Wednesday 30 September 2020

அப்துற் றஹீம்

பணத்தின் முக்கிய ஆற்றல் என்னவென்றால் அது நம்முடைய தேவைகளை நிறைவு செய்வதுடன்..
99 சதவீத தேவைகளை உற்பத்தியும் செய்துவிடுகிறது

-அப்துற் றஹீம்

info

நோபல் பரிசுக்கு காந்தியின் பெயர் ஐந்து முறை பரிசீலிக்கப்பட்டது.முதல் நான்கு முறை ஏகமனதாக தேர்வு செய்யப்படவில்லை. 1947ம் ஆண்டு இறுதியில் அடுத்த ஆண்டு நோபல் கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.

1948 ஜனவரியில் படுகொலை செய்யப்பட்டதால் நோபல் பரிசு வழங்கப்படவில்லை

#info

Tuesday 29 September 2020

அண்ணா

அண்ணா நண்பர்களோடு காரில் செல்லும்போது..ஒரு மாட்டு வண்டியை கார் முந்தியதால் மாட்டு வண்டிக்காரர் காரிலிருப்போரை திட்டினார்

அதற்கு அண்ணா பார்த்தீர்களா.. காருக்கு இணையாக அவரால் வரமுடியவில்லை என்றவுடன் திட்டுகிறார்.நம் வளர்ச்சி பொறுக்காமல் திட்டுவார்கள்.அதை கவனிக்காது நம் வழியில் முன்னேற வேண்டும்.
வெய்யிலின் உக்கிரம் ஏற ஏற மழைக்கான அதிகாரம் கூடிக்கொண்டே போகும்

-சோ.தர்மன்

Monday 28 September 2020

காந்தி

இயன்றவரை எனும் சொல்லை வெறுக்கிறேன்.
'இயன்றவரையில்' இதைச் செய்வேன் என்று சொல்கிறவன் தன் ஆணவத்தை வெளிப்படுத்துகிறான் அல்லது தன் ஆற்றலின்மையை காட்டுகின்றான்.

-காந்தி

Sunday 27 September 2020

அண்ணா

அறிஞர் அண்ணாவிற்கு வரவேற்பளித்த நகர் மன்றத்தலைவர் ஒரு மிளகாய் வியாபாரி..சிறப்பாக பேசினார்.

பதிலுக்கு அண்ணா 
"i Never thought that a chille merchant can speak so sweet

(ஒரு மிளகாய் வியாபாரி இவ்வளவு தித்திப்பாக பேசுவார் என நான் நினைக்கவில்லை)

கற்றதும் பெற்றதும்-94*மணி



பகத்சிங் பிறந்ததினம்

மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட போது அவனுக்கு வயது 23 மட்டுமே ஒரு தலைசிறந்த தலைவனுக்குரிய அத்தனை அடையாளங்களம் ஆளுமைகளுடன் இருந்திருக்கிறார். தூக்கிலிடப்படுவதற்கு ஏழு மாதங்களுக்கு முன்பு 1930 ஜூலை மாதம் 24 ஆம் தேதி லாகூர் சிறைச்சாலையிலிருந்து தன் பள்ளிக் கால நண்பன் ஜெயதேவ் குப்தாவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.

 அந்த கடிதத்தில் மிலிட்டரியிசம்,why men fight,Civil war in France,Land revolution in Russiya உள்ளிட்ட
 பத்து புத்தகங்களை பற்றி பட்டியலிட்டு எழுதி.. இந்த பத்து புத்தகத்தையும் துவாரகதாஸ் நூலகத்திலிருந்து எப்படியாவது எடுத்து..வருகிற ஞாயிற்றுக்கிழமை தனது தம்பி என்னை பார்க்க வருகிறான் அவரிடம் கொடுத்து விடுமாறு வேண்டுகிறார்.

அதுமட்டுமின்றி பஞ்சாப் பொது நூலகத்தில்  வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்ற புத்தகத்தையும் எடுத்து வரச் சொல்லியிருக்கிறார். இதுபோன்ற புத்தகங்களை எல்லாம் நாற்பது ஐம்பது வயது நிரம்பியவர்கள் மட்டுமே படித்து உள்வாங்கிக் கொள்ள முடியும்.ஆனாலும் இறப்பதற்கு முன் இதனை படிக்க ஆர்வம் கொண்டிருக்கிறார்.

அதோடு நிற்காமல் பாஸ்டல் சிறைச்சாலை நூலகத்தில் ஒரு புத்தகப்பட்டியல் அனுப்பி புத்தகம் படிக்க வேண்டியுள்ளார்.இவை அனைத்தும் அரிய புத்தகங்கள். லாகூரில் துவாரகதாஸ் நூலகம் உள்ளது.இந்நூலகத்தை சுற்றித்தான் பகத்சிங்,சுகதேவ் கல்லூரிகளில் படித்து வந்துள்ளார்கள். அந்நூலகத்தின் நூலகராய் உள்ள ராஜாராம் சாஸ்திரியை பற்றி பெருமையாக சொல்லியுள்ளார். தனக்கான மிகச்சிறந்த புத்தகத்தை தேர்வு செய்து படிக்க கொடுத்தவர் என பெருமையாய் கூறியுள்ளார்.

காந்தியவாதியான நூலகர் ராஜாராம் 1930 சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்று பகத்சிங்குடன் தங்கியுள்ளார்.தூக்கிலிடப்படுவதற்கு முதல் நாள், சிறையில் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றிவந்த பேபே என்ற இஸ்லாமியரின் வீட்டில் இருந்து உணவு கொண்டு வருமாறு பகத்சிங் கேட்டுக்கொண்டாராம்.ஆனால் பகத்சிங்கின் கடைசி ஆசையை பேபேவால் நிறைவேற்ற முடியவில்லை. ஏனெனில் 12 மணி நேரத்திற்கு முன்னதாகவே பகத்சிங் தூக்கிலிடப்பட்டார். சிறைக்குள் செல்ல பேபே அனுமதிக்கப் படவில்லை.

தி டிரிபியூன் எனும் இதழில் வெளியான நூல் விமர்சனம் ஒன்றை படித்துவிட்டு அந்நூலை வாங்கி வர வழக்கறிஞர் பிராணநாத் மெஹாதா விடம் கேட்டார் பகத்சிங்.அந்நூல் மாமேதை லெனின் வாழ்க்கை வரலாற்றுநூல்.1931 மார்ச்23 வழங்கினார்.அன்று மாலைதான் தூக்கிலிடப்பட்டார்

கடைசியில் தூக்கில் போடுவதற்கு முன்னால் மார்ச் 23ஆம் தேதி மாலையில்  வெளியே வா என்று அழைத்த போது உலகின் மிகப் பெரியதொரு புரட்சியாளனுடன் கை குலுக்கி பேசிக் கொண்டிருக்கிறேன் என்றார்.லெனின் எழுதிய அரசும் புரட்சியும் என்ற புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்த பகத்சிங் இன்னும் கொஞ்சம் வாசித்து விட்டு வந்து விடுகிறேன் என்று வாக்குறுதி கொடுத்தவாறு பக்கங்களை வாசித்து முடித்துவிட்டு தூக்குமேடை ஏற தயாரானார். 

ஒவ்வொருவரின் எடையும் பார்க்கப்பட்டு, குறிக்கப்பட்டது. அனைவரின் எடையும், முன்பு இருந்த்தை விட அதிகமாகியிருந்தது! இறுதிக் குளியலை மேற்கொள்ளலாம் என்று அவர்களிடம் கூறப்பட்டது. பிறகு கருப்பு உடை அணிவிக்கப்பட்டது, ஆனால், அவர்களுடைய முகம் மூடப்படவில்லை.அப்போது ஒரு சுதந்திர கீதத்தை பாடினர்

அந்த நாளும் கண்டிப்பாக வரும்,
நாம் சுதந்திரம் அடையும் போது,
இந்த மண் நம்முடையதாக இருக்கும்,
இந்த வானமும் நம்முடையதாக இருக்கும்... 

என்ற பொருள் கொண்ட பாடல்கள் அவை.

சிறைச்சாலையின் கடிகாரம் ஆறு மணியை காட்டியதும், கைதிகளின் ஓலக்குரல் தொலைவில் இருந்து கேட்டது. அத்துடன் காலணிகளின் கனமான ஓசையும் ஒலித்தது. அத்துடன், பாடலும் கேட்டது."தியாகத்தின் ஆசையே எங்கள் இதயத்தில் உள்ளது" என்ற பொருள் கொண்ட பாடல் அது.

"இன்குலாப் ஜிந்தாபாத்" என்றும், "ஹிந்துஸ்தான் ஆஜாத் ஹோ" ("புரட்சி ஓங்குக", இந்தியா விடுதலை வேண்டும்") என்ற முழக்கங்கள் எழுந்தன.தூக்குக்கயிறு மிகவும் பழையதாகவும், வலுவிழந்தும் இருந்தது. ஆனால், தூக்கில் இடப்படுபவர்களோ மிகவும் பலமானவர்களாக இருந்தார்கள். தூக்கில் இடும் பணியை நிறைவேற்றுவதற்காக, லாகூரில் இருந்து சிறப்புப் பணியாளர் ஒருவர் வரவழைக்கப்பட்டிருந்தார்.

பகத்சிங்கின் குரல் கொடுத்த உத்வேகத்தில், சிறைக் கைதிகளும் முழக்கங்களை எழுப்பினார்கள். மூன்று இளம் புரட்சியாளர்களின் கழுத்திலும் தூக்குக்கயிறு மாட்டப்பட்டது. அவர்களின் கைகளும் கால்களும் கட்டப்பட்டன. அப்போது தண்டனையை நிறைவேற்றுபவர் கேட்டார், "யாருக்கு முதலில் இறக்க விருப்பம்?".

சுகதேவ் முதலில் சொல்வதற்கு விருப்பம் தெரிவித்தார். ஒன்றன் பின் ஒன்றாக தூக்குக் கயிற்றை இழுத்து, அவர்களின் காலின் கீழ் இருந்த பலகையை அகற்றினார் தண்டனை நிறைவேற்றுபவர். தூக்கில் இடப்பட்ட புரட்சியாளர்களின் வீர உடல்களும் நீண்ட நேரத்திற்கு தொங்கிய நிலையிலேயே விடப்பட்டன.

இறுதியில் அவர்களை கீழே இறக்கியபோது, அங்கிருந்த மருத்துவர்கள், லெஃப்டிணென்ட் கர்னல் ஜே.ஜே.நெல்சன் மற்றும் லெஃப்டிணென்ட் கர்னல் எம்.எஸ்.சோதி மூவரின் மரணத்தையும் உறுதி செய்தனர்.சிறையில் அடக்கம் செய்தால் பிரச்சனை வரும்.வெளியில் அலைஅலையாய் கூட்டம். எனவே சிறையின் பின்புறச் சுவர் உடைக்கப்பட்டு, அந்த வழியாக டிரக் ஒன்று வரவழைக்கப்பட்டது.

 மிகவும் தரக்குறைவான முறையில், பொருட்களைப் போல வீரர்களின் உடல் டிரக்கில் ஏற்றி, கொண்டுசெல்லப்பட்டது.
இறுதிச்சடங்குகள் ராவி நதிக்கரையில் நடத்தலாம் என்ற யோசனை, அங்கு நீர் குறைவாக இருந்ததால் கைவிடப்பட்டு, பிறகு சட்லஜ் நதிக்கரையில் சிதையூட்ட என்று முடிவு செய்யபட்டது. சிதையூட்டிய உடலை காண மக்கள் கூட்டம் திரண்டு வந்து பார்த்தனர். மறுநாள் புரட்சி வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் மூன்று மைல் தொலைவுக்கு பேரணி ஒன்று நடத்தப்பட்டது. எதிர்ப்பை காட்டும் வகையில் ஆண்கள் கருப்பு நிற பட்டைகளையும், பெண்கள் கருப்பு நிற உடைகளையும் அணிந்திருந்தார்கள்.

*புரட்சி என்பது அங்கொன்றும், இங்கொன்றும் குண்டுகளை வீசும் செயலல்ல. புரட்சி கடவுளுக்கு எதிரானதாக இருக்கலாம். ஆனால், அது மனிதனுக்கு எதிரானது அல்ல

*புரட்சியின் பலிபீடத்தில் எங்களது இளமையைக் காணிக்கையாக்குகிறோம்

*என்னை தூக்கலிடும்போது என் கண்களை கட்ட வேண்டாம், சாகும்போது கூட இந்த மண்ணை பார்த்து கொண்டே தான் சாக வேண்டும்

*நேற்றைய வரலாறு தெரியாது போனால்,இன்று நடப்பது புரியாமல் போகும்.இன்று நடப்பது தெரியாமல் போனால் நாளை என்பது நம் வசம் இல்லை

ஏராளமான புத்தகங்களை வாசித்து அறிவை விரிவு செய்து கொண்ட இளம் தலைவர் என்பதில் சந்தேகமில்லை.

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன்

-மணிகண்டபிரபு

Saturday 26 September 2020

ரிச்சர்ட் லெட்டிஸ்

திங்கள் ஒரு மோசமான நாள்; வேலைக்கு மீண்டும் வருவதால்!

செவ்வாய் இன்னும் சிறந்த நாள்; திங்கள் கடந்து சென்றதால்!

புதன் நம்பிக்கை அளிக்கும் நாள்; வாரத்தில் பாதி கடந்ததால்!

வியாழன் ஒரு தூங்குமூஞ்சி நாள்; பெரிதாக எதுவும் நடக்காததால்!

வெள்ளியோ ஆரவாரமான நாள்; வாரஇறுதி வந்துவிட்டதால்!

சனி, ஞாயிறு இரண்டு நாள் எல்லோருக்குமே இன்பத் திருநாள்!

-ரிச்சர்ட் லெட்டிஸ்

Friday 25 September 2020

நம்பிக்கை

ஆயிரம் வார்த்தைகளைக் காட்டிலும் ஒரு செயல் மேன்மையானது.

ஆயிரம் செயல்களைக் காட்டிலும் ஒரு சாதனை மேம்பட்டது.

ஆயிரம் சாதனைகளைக் காட்டிலும் ஒரே ஒரு உள்ளத்திலாவது நம்பிக்கை விளக்கேற்றுவது

கண்ணதாசன்

வருவன யாவையும் வழிநடை போட்டபின் மறைவது தெரிகின்றது.
இந்த வரவுக்கும் செலவுக்கும் வழிவிட்ட இறைவனின் வழிமட்டும் தொடர்கின்றது

-கண்ணதாசன்

Monday 21 September 2020

அசோகமித்திரன் பிறந்ததினம்

அசோகமித்திரன் பிறந்ததினம்

*அபிப்ராயங்கள் என்பவையைச் சொல்லப்படும் அந்த நிமிடத்துக்கு மட்டுமே உண்மை என்று எடுத்துக்கொள்ள வேண்டும்
-அசோகமித்ரன்

*கண்கள் வயதை மட்டும் காட்டவில்லை.ஒரு மனிதர் வாழ்ந்த வாழ்க்கை,வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை எல்லாவற்றையும் காட்டிவிடுகிறது-அசோகமித்ரன்

*எந்த புகைப்படமும் அதை எடுத்த நாளில் திருப்தி தருவதில்லை.,
அது அழகாக மாற அந்த மனிதனுக்கு வயது கூட வேண்டியிருக்கிறது
-அசோகமித்ரன்

*அர்த்தம், நாம் தேடிச்செல்லச் செல்ல அது நழுவிக்கொண்டே இருக்கிறது #அசோகமித்திரன்

*சாவதற்கு கூட நல்ல மகத்தான காரணங்கள் கிடைப்பதில்லை.
-அசோகமித்திரன்

*உண்மைதான் மிகப்பெரிய நகைச்சுவையாக இருக்கிறது. நகைச்சுவைதான் மிகப்பெரிய உண்மையாகவும் இருக்கிறது
-அசோகமித்திரன்

*“எல்லாவற்றுக்கும் மேலாக இந்தத் தலை கட்டுக்கடங்காத யோசனைகளால் வெடித்துக் கொண்டிருக்கிறது. எண்சாண் உடம்புக்கும் தலையே பிரதானம். எண்சாண் உடம்புக்கும் தலையே பிரதானத் தொல்லை.” 
 - அசோகமித்திரன்.

*ஒருவருடைய பெருமைகளையும் சாதனைகளையும் விதந்துரைக்க அவரின் மரணம் வரை காத்திருக்க வேணுமா -அசோகமித்திரன்

*மனிதன் கீழே விழுவதுதான் இயற்கை, ஆனால் அதற்குத்தான் அவன் அளவுக்கு மீறி அலட்டிக் கொள்கிறான்.  -அசோகமித்திரன்

*"அழகென்றால் அப்படியொன்றும் அழகில்லை! 
ஆனால் உற்று நோக்கினீர்களானால் காதல்வயப்பட வாய்ப்புள்ளது!!" 
- அசோகமித்திரன்

*மானுட வெறுப்பை காரணகாரிய ரீதியாக விளக்கவே முடியாது.
-அசோகமித்திரன்

*மேலோட்டமாக பார்த்தால் அவ்வளவு பேருடைய பொருளாதார நிலைமையும் பொதுவாக ஒன்றுதான்...எல்லோருக்கும் எப்போதுமே பற்றாக்குறை...
     -அசோகமித்திரன்

*சமகால மனிதர்கள் பற்றி அபிப்ராயம் கூறிவிட்டு ஒருவருடைய வெறுப்பையாவது பெற்றுக்கொள்ளாது தப்பிப்பது கடினம். கடைந்தெடுத்த அபிப்பிராயமே விமர்சனம்
-அசோகமித்திரன்

திருவள்ளுவர்

நாநலம் என்றும் நலனுடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று

*பேச வேண்டாத நேரத்திலே, பேச வேண்டாத இடத்திலே பேசாமல் வாயை மூடிக் கொண்டிருப்பவன் தான் நல்ல பேச்சாளன்

-திருவள்ளுவர்



#பலசொல்லக் காமுறுவர் மன்றமாக அற்ற
சிலசொல்லல் தோற்றா தவர்

பேச வேண்டியவற்றை சுருக்கமாகப் பேசத் தெரியாதவர்கள்தான் பேச்சை நீண்ட நேரம் வீணாக நீட்டிப் பேசுவர்

-திருவள்ளுவர்

Thursday 17 September 2020

ஞானக்கூத்தன்

பொருந்தி மூடாக் கதவின் சந்தில்
குத்திட்டு நிற்கும் குழல் விளக்காகத்
தெரிந்திடும் நீலவானை
எத்தனை நேரம் பார்த்துக் கிடப்பது

-ஞானக்கூத்தன்

Tuesday 15 September 2020

விஐபி நபர்களைப் பாதுகாக்கும் ஸ்பெஷல் ஃபோர்ஸ்...! - எப்படிச் செயல்படும்? #MyVikatan-மணிகண்டபிரபு



கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்றல் அதுவே படை
என்கிறார் வள்ளுவர்.

 எமனே படை திரட்டி வந்தாலும், திரண்டு எதிர்க்கும் ஆற்றல் உடையதே படை.

ஒவ்வொரு முறை தலைவர்களின் பாதுகாப்புக்கு வரும் படைகளை ஆச்சர்யமாய் பார்ப்போம்.

சமீபத்தில் ஒரு நடிகைக்கு பாதுகாப்பு அரணாக படைகள் வந்தபோது, அது `ஒய் படையா’, `ஒய் ப்ளஸ்ஸா’ என்ற சந்தேகம் வந்தது. அதை அறிந்துகொள்ள நேர்க்கையில் சில விஷயங்கள் தெரிந்தன.

ஒவ்வொருவருக்கும் காவல் துறையினர் பாதுகாப்பு அளிப்பதுபோல உயரதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு பிரத்யேகப் பாதுகாப்பு அளிக்க பாதுகாப்புப் பிரிவுகள் உள்ளன.
இவர்கள் தவிர விஜபிக்கள், நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்களுக்கு பாதுகாப்பு வழங்குகின்றனர். இந்தியாவில் பாதுகாப்பு அமைப்பு X, Y, Y+, Z, Z+, SPG ஆகிய சிறப்பு பாதுகாப்புகளை வழங்குகிறது.

READ MORE

பிரெஞ்சு பொன்மொழி

மொழிபெயர்ப்பு ஒரு மனைவியைப் போல; அழகாக இருந்தால் விசுவாசமாக இருக்க மாட்டாள், விசுவாசமாக இருந்தால் அழகாய் இருக்க மாட்டாள்” 

-

வாழப்பாடி ராமமூர்த்தி

சிதம்பரத்தில் படிக்கும்போது திராவிடர் கழகத்தில் இருந்தவர் ராமமூர்த்தி.திமுகவை பெரியார் ஆதரித்ததால் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.

ராமமூர்த்தி என மூன்றுபேர் இருந்ததால்
கண்ணதாசனிடம் போனில் நான்தான் வாழப்பாடியிலிருந்து ராமமூர்த்தி பேசுகிறேன் என்றவுடன் அதுவே நிலைத்துவிட்டது.
-

Thursday 10 September 2020

பாரதிதாசன்

அருவியின் வீழ்ச்சி போல நெஞ்சிலிருந்து கவிதை சலசலவென்று பெருகி உருவாக வேண்டும். கவிதையை உருவாக்க வேண்டும் என்பதற்காக வலிந்து சொற்களைப் பொறுக்கிக் கொண்டிருக்க கூடாது..

#பாரதியிடம் கற்றுக் கொண்டதாக பாரதிதாசன்

Monday 7 September 2020

Awe (ரகசியம்)*மணி


#

ஓபனிங் சாங் இல்லை.சினிமாத்தனம் இல்லை.
ஆனால் படம் பார்த்த அனுபவம் முழுமையாய் இருந்தது. ஐந்து அடுக்கடுக்கான கதைகள் பத்து நிமிடத்துக்கு வருகிறது.முதல் 50 நிமிடத்துக்கு அப்புறம் படத்தை லிங்க் செய்த விதம் படு சுவாரஸ்யம்.
அந்த ஐந்து கதைகளுமே செம க்யூட் கிட்டத்தட்ட சில்லுக்கருப்பட்டி மாதிரி. ஆனால் வேற வேற ஜார்னர்ல.


#கதை

*பிறந்தநாள் அன்று காஜல் அகர்வால் ஹோட்டலில் தனிமையில் கொண்டாடி தற்கொலை செய்துகொள்ள தயாராகிறார்.


*ஆர்த்தடாக்ஸ் தம்பதிகள் மகளின் வருங்கால கணவரை அறிமுகப்படுத்த காத்திருக்கும் தருணத்தில் மாப்பிள்ளை ஒரு செம ட்விஸ்ட்

*சமையலே தெரியாதவன் ஒரு ஹோட்டலில் வேலைக்கு சேர அவனுக்கு உதவி செய்கிறது ஒரு வாய் பேசக்கூடிய மீன்.ஆனால் அதற்கு உதவியாய் மீனின் ஆசையை நிறைவேத்தனும்.

*கடைக்கு மேதாவி மேஜிக் நிபுணர் தனக்கு போட்டியாய் இருக்கும் இன்னொரு மேஜிக் நிபுனருடன் தொழில் போட்டி நடக்கிறது.அதில பாத்ரூமில் மாட்டி எப்படி வெளிய வர்றார்

*வெயிட்டராக இருக்கும் ரெஜினா தனது காதலனுக்கு உதவி செய்ய
ரெஸ்டாரென்ட் லைட்டை 40செகன்ட் ஆஃப் செய்வதற்குள் காதலன் உள்ளே நுழைந்து ஒரு கோடி ரூபாய் பணத்தை அடிக்க உதவி செய்யனும்.


*ஹோட்டலில் கதவு திறந்துவிடும் வாட்ச்மேன் இளைஞன் அறிவியல் ஆர்வம் கொண்டவன்.டைம் மெஷின் கண்டுபிடிக்க முயலும் போது 20 வருசத்துக்கு அப்பாலுள்ள பெண்மணி இப்போது இவன் முன் வந்து உதவுகிறாள்.

இந்த ஐந்து கதையும் 50 நிமிடத்துக்குப் பிறகு ஒரு புள்ளியில் லாஜிக்குடன் சந்திக்கிறது தான் கதை


#டின்ஜூ

*படத்தோட பெரிய பலம் சுவாரஸ்யமான சின்னக் கதைகள் ஒரு புள்ளியில் இணைய வைத்த திரைக்கதை

*கதையில் அடிக்கடி கரன்ட் கட் ஆவது நம்மையும் ஹோட்டலில் இருக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.

*சினிமாத்தனம் இல்லை, பாட்டு இல்லை.புதுமையான கதை. அடுத்து என்ன என எதிர்பார்க்க வைக்கிறது.

*ஒவ்வொரு ஓவியம் அதிலிருந்து கதை வருவது சுவாரஸ்யம்.

*எல்லா எதிர்ப்பார்ப்பும் ஏற்றி விட்டு கடைசியில் அதுநான் தான் என்பது விடாது கருப்பு இந்திரா செளந்தர்ராஜன் டெக்கினிக்

*அத்தனை ரணகளத்திலும் கண்டக்டர் பஸ்ஸில ட்ரிப் சீட் எழுதற மாதிரி காஜல் அகர்வால் எழுதுவதை பார்த்தா காண்டாகுது..பின்னால் அதற்கும் லிங்க் வைத்திருப்பது நறுக்.

*மீனின் குரலில் நானியின் குரல் கனகச்சிதம்.

*ரெஜினா வருவது நல்ல த்ரில் கொடுக்கிறது.

*கடைசியா எல்லா கேரக்டரும் காஜலின் பிம்பம் என்பதை சொல்வது கொஞ்சம் உறுத்துகிறது.

*அதிக லாஜிக் மிஸ்டேக் இல்லாதது ஒரு ஆறுதல்


நல்ல படம்,நல்ல சுவாரஸ்யம்
நம்பிப் பார்க்கலாம்.


-மணிகண்டபிரபு

Sunday 6 September 2020

Maniyarayile Ashokan மலையாளம்*மணி




அரெஞ்ச் மேரேஜ் செய்தவர்கள் ஒரு கணம் ஆமால்ல அப்டினு நினைக்கும் படம்.ஆயிரம் ஜாதகத்தை ஜெராக்ஸ் எடுத்து,27 வயசில தேட ஆரம்பிச்சா 30 வயசுல ஒரு வழியா பொன்னு கிடைக்கும்.அதிலும் நம்மை ரிஜக்ட் செய்த பெண்களை ஒரு குயர் நோட்டு போட்டுத்தான் எழுதனும்.
சரி லவ் மேரேஜ் செய்யலாம்னா கூச்சம் வேற.சொல்ல மாட்டோம் பயம்.அறிஞர் அண்ணாவைக் கூட அத்தனை பேரு அண்ணானு கூப்பிட்டிருக்க மாட்டாங்க. அண்ணாந்து பார்த்தாலே அண்ணானு கூப்பிடும் பெண்கள் அதிகம்.அப்பிடியான ஒரு கதை மணியாறிலே அசோகன்.

ரொம்பவும் நல்லா இருக்காது. மினிமம் கேரன்டிதான் படம். சுமாரான பையனுக்கு பெண் கிடைக்கும் அவலத்தை சொல்லியிருக்காங்க.துல்கர் சல்மான் தயாரிப்பு என்பதால் ஒரு எதிர்பார்ப்பு.பட் கொஞ்சம் குறைவுதான்.ஆனால் இதை அனுபவித்தர்களுக்கு கொஞ்சம் நிறைவு.

#கதை

ஹீரோ ஜேக்கப் கிரிகோரி ஒரு அரசாங்க ஊழியர்.உயரமில்லை. குட்டையானவர்.அழகில்லை. எங்கு தேடியும் பொன்னு கிடைக்கல. ஜாதக தோஷம்.ஒரு இடம் செட்டாகுது ஆனால் அந்த பெண் இவனை கட்டிக்கிட்டா செத்துருவேன் மிரட்ட அதை இவர் கேட்க விரக்தியின் உச்சத்துக்கே போறார் பேரழகன் பிரேம்குமார் மாதிரி.அப்பதான் இவரையும் காதலிக்கிறாங்க அனுபமா.எல்லா சரியாப் போகும்போது ஜாதகத்தில முதல் மனைவி செத்துப் போயிடுவானு சொல்லுபோது கல்யாணம் நின்னிடுது.

இலவசம் இல்லாத வெள்ளை கலர் ரேசன் கார்டு வச்சிருக்கவங்க மாதிரி உடைஞ்சு போறாரு.இரக்க குணம் அதிகமுள்ள கிரிகோரி வாழைமரத்துக்கு தாலி கட்டி முதல்.மனைவியா எத்துக்கிறார். அதக்கு பிறகு என்னானது, கல்யாணம் ஆச்சா என்பது தான் கதை.


#டின்ஜூ

*படத்தின் பெரிய ப்ளஸ் லொக்கோசன்.ஈரமான, எப்பவும் மழை வரும்போலுள்ளது போல் அவ்வளவு அழகான இடங்கள். ரம்மியமான ஒளிப்பதிவில் ரசிக்க வைக்கிறார்.

*அசரீரி போல் ஒலிக்கும் மெல்லிய இசை மனதை வருடும்.

*சுத்தியுள்ள எல்லோருக்கும் கல்யாணம் ஆகும்போது நமக்கும் மட்டும் ஏன் இப்பிடினு 90 கிட்ஸின் அனுபவத்தை திரையில் விரிக்கிறார்

*கற்பனையில் உருகும் ஹீரோவுக்கு ஒரு சீனில் வரும் துல்கர்..நிலா வானத்தில் தான் இருக்கு.அதை தண்ணீரில் தேடக்கூடாதுனு சொல்லிபுரிய வைக்கிறார்.

*மேரேஜ் ஆகாதவங்களுக்கு சொல்லும் ஒரே அட்வைஸ் "உனுக்குனு ஒருத்தி பொறந்திருப்பா" னு சொல்வது.அதை கேட்டுட்டு அப்பிடியே ஓடிப்போயிடலாம்னு தோனும்.ஆனா அந்த பேங்க் பொன்னு சொன்னதும் அமைதியா போறாரு.

*கடைசி ட்விஸ்ட் நஸ்ரியாவை கல்யாணம் செய்வது.எப்பிடிணேனு தெரியல.

பூவரசன் படத்துல கவுண்டமணிக்கு செந்தில் சொல்லும் செங்கல் லாஜிக்

செங்கல்..அதை கொட்டுனா பொடி.. அதை ஊதுனா..ஒன்னுமேயில்ல.
அதான்னே வாழ்க்கை ம்பார்.
அதுதான் படம் பார்த்து முடிச்சதும் நினைவுக்கு வந்துச்சு.


அழகியலுக்காக ஒரு முறை பார்க்கலாம்.


-மணிகண்டபிரபு

Saturday 5 September 2020

V movie(telugu)*மணி


V movie(telugu)
*மணி

நானி நடித்து நேற்று வெளியான படம் வி.இரு ஹீரோக்கள் சப்ஜெக்ட். விக்ரம் வேதா போல ஏதோ புதுசா இருக்குனு உட்கார்ந்த தார் ரோட்டை வெட்டி போட்டு ஊர் பூராவும் சுத்தி வீட்டுக்கு போற கதையா இருக்கு படம்.லாக்டெளன் காலத்தில் எல்லாரும் உலகப்படம்,வெப் சீரிஸ் எல்லாம் பார்த்து ஜெட்வேகத்தில் போக வாங்க அப்படியே ஜாலியா மாட்டு வண்டில போலாம்னு சொன்ன எப்பிடி இருக்கும்.


#கதை

எங்க தப்பு நடந்தாலும் தடயம் இருக்குதோ இல்லயோ அங்க போலீஸ் சுதிர் பாபு இருப்பார். ஒரு நாள் அன்னோன் நெம்பர் காலில் கொலைசெய்யப் போறதை சொல்ல 
இவரும் சீரியசா கொலை நடப்பதை தடுக்கப்போனா..அங்க நானி கொலை அந்நியன் ஸ்டைலில் கொலை செய்து,அதே பட் பானியில் ஒரு துண்டு சீட்டை க்ளுவா விட்டுட்டு போவாரு.அதை விட்டுட்டு சுதிர்பாபு நிவேதாதாமஸுடன் சந்தோசமா இருக்கும்போது இன்னொரு கால் இன்னொரு கொலை.

இப்பிடி போகும் போது ஏன் கொன்னாரு நானி னு சொல்லும் படம் தான் கதை.

தமிழ் பட ஹீரோக்களுக்கு சிவானு பேர் வைச்சா படம் ஓடுங்கிற மாதிரி.
 கொஞ்சம் ஹஸ்கி வாய்சில் அசால்டா பேசுனா அவர்தான் கொலைகாரன்னு இன்னும் எத்தனை படம் தான் வருமோ.


#டின்ஜ்

*ஆரம்பத்தில் பேர் பாடியோட சுதீர் பாபு வருவதும், படம் முழுக்க ஏதோ மிடில் ஆர்டர் பேட்ஸ் மேன் மாதிரி.. அடிச்சும் ஆடாம அவுட்டும் ஆகாம ஆடுகிறார்

*ப்ளாஷ் பேக்கில் வரும் நானி போர்சன் பொங்கலுக்கு வடகறி மாதிரி இருக்கு

*நேர்த்தியான கதைக்கு ஹீரோயின் வரும் காட்சிகள் ஸ்பீட் பிரேக்

*கொலைக்கான காரணம் அழுத்தம் இல்லாம இருக்கு.எது கிடைச்சாலும் ஷேர் செய்யிற டிஜிட்டல் இந்தியாவுல ஆதாரம் இருக்கிற வீடியோவை அடுத்தவர்க்கு ஷேர் செய்திருக்கலாமே பாஸ்

*ரயில் பயணங்களில் போல ஹீரோயின் கடைசியா புக் எழுதியிருக்காங்க

*வித்தியாசமான காட்சி அமைப்புகளோ,புதுமையான ட்விஸ்ட்டுகளோ இல்ல.படம் போட்ட பத்தாவது நிமிஷத்திலேயே ரசிகன் யோசிக்க ஆரம்பிச்சுடுறான்.
அட போங்க பாஸ்


-மணிகண்டபிரபு

Thursday 3 September 2020

C U SOON(REVIEW)

C U SOON(மலையாளம்)
*மணி

இருநாட்களுக்கு முன்பு பார்த்தாலும் இப்பதான் டைம் கிடைத்தது பகிர.
சினிமா பெரிய திரை ல பாத்திருப்ப,சின்னத்திரைல பாத்திருப்ப மொபைலின் வெண் திரைல பார்த்திருக்கியா என்பது போல் உண்மையில் வித்தியாச அனுபவமாய் இருந்தது.

முதன்முதலில் கேப்டன் பிரபாகரன் படத்தில் டைட்டில் போட கால்மணி நேரம் ஆனது போல..இப்படத்தின் டைட்டிலும் தாமதமாய் வந்தாலும் அவ்வளவு கவித்துவமாய் இருந்தது. படம் முடியும்போது கதைக்கேற்ற 100% டைட்டில் என்பதை மீண்டும் நிரூபித்தது.படம் முழுக்க வீடியோ காலில் பார்த்தது அவ்வளவு ரியாலிட்டியாய் இருந்தது.இதற்கு முன் 2014ல் Unfriended 2018ல் searching இரு படங்கள் திரை வழியே கதை சொன்னவை..அந்த வகையில் இது மூன்றாவது.

#கதை

துபாயில் வங்கியில் வேலை செய்யும் ஜிம்மி ஆன்லைன் சாட்டில் அனுவுடன் அறிமுகமாகிறான். கண்டதும் காதல்போல் இனி சாட் செய்தவுடன் காதல்.உரையாடல் துவங்கிய சில நாட்களில் அவளை திருமணம் செய்ய முடிவெடுத்து குடும்பத்துடன் குரூப் காலில் அறிமுகப்படுத்துகிறான்.அவனின் அம்மா இப்பெண்ணை குறித்து விசாரிக்க  உறவினரான சைபர் செக்யூரிட்டி எக்ஸ்பர்ட் பகத் பாசிலிடம் சொல்கின்றனர்.அவரும் மேலோட்டமாய் பார்த்துவிட்டு சொல்ல பதிவுத் திருமணத்திற்கு காத்திருக்கிறான் ஜிம்மி.

ஒரு கட்டத்தில் அனு தொடர்பு எல்லைக்கு வெளியே செல்ல சந்தேகம் வருகிறது.கூடவே போலிசும் வருகிறது. அந்த பெண்ணை விசாரிக்கையில் சிம் கார்ட் இல்லை,பாஸ்போர்ட் இல்லை.அவளைப்பற்றிய எந்த தடயமும் இல்லை. மீண்டும் பகத் பாசில் துப்புறவு மூளையில் தேட C u Soon என நெகிழ்ச் வைக்கும் முடிவை தொடுகிறது.

#டின்ஜ்

*ஆன்லைனில் படம் பார்த்த காலம் போய் ஆன்லைனையே படமாய்  பார்க்க வைத்துவிட்டது

*மூன்று கேரக்டர்களை வைத்து மங்காத்தா,ரம்மி ஆடுவது போல் அடுத்து என்ன எனும் விறுவிறுப்பு

*வீடியோ கால்,ஸ்க்ரீனில் படம் பார்க்கிறோம் எனும் உணர்வின்றி ஒன்ற வைத்தது ஒளிப்பதிவும், இசையும்.

*துபாய் சென்ற ஆண்களின் துயரையே அதிகம் சொன்ன படங்கள் பெண்களின் நிலையை முதலில் சொல்லி இருக்கிறது

*அனு குறித்த உண்மையை அறியும் இடத்தில் காமன் மேனின் உணர்வுகளை படர விட்டிருக்கிறார் பகத் பாசில்

*என்ன நெட்வொர்க்னு தெரியல எதை அடித்தாலும் இத்தனை வேகமா செல்வதைப் பார்த்தால் கொஞ்சம் ஆயாசமாத்தான் இருக்கு

*திரையில் ஒரு கேரக்டர் ஆன்லைனிலும் மற்றது கேமராவில் படம் பிடித்தாலும் அந்த உணர்வே ஏற்படாதவாறு படம் முழுக்க லைவ்விலேயே செல்கிறது.

*அங்கங்கே லாஜிக் மீறல்கள் இருந்தாலும் திரைக்கதை ஓட்டத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை

C u soon.. பார்க்கலாம்

-மணிகண்டபிரபு

காந்தி

சின்ன மறதி தான்
பெரிய மறதிகளை உருவாக்குகிறது

-காந்தி

கவிதை குறித்து சுஜாதா

தெ.சு.கவுதமன்

கீழே விழுமோ
என்பதைவிட
மேலே விழுமோவென்ற
பயம்தான்
உத்திரத்துப் பல்லியை
பார்க்கும் போதெல்லாம்!

-தெ.சு.கவுதமன்

யுகபாரதி

கூண்டுக் கிளிக்கு
பரிதாபப்படுகிறார்கள்
அறுப்பதற்கென்றே
கோழி வளர்ப்பவர்கள்

-யுகபாரதி

Tuesday 1 September 2020

நாகராஜன்

குடத்தில் நீர் நிரம்புவது போல 
மவுனத்தில் கவலைகள் நிரம்புகின்றன

-ஜி.நாகராஜன்

info

Neo-New புதிய எனும் பொருள்படும் சொற்கள் இவை.
New என்பது வரலாற்றுத் தொடர்பில்லாத முற்றிலும் புதியதை குறிப்பது

Neo என்றால் ஒரு பழைய யோசனையை மறுபரிசீலனை செய்வதைப் பயன்படுத்துவது அல்லது ஒரு இடைவேளைக்குப் பின் மாற்றமின்றி மீண்டும் தொடர்வது

#info

Monday 31 August 2020

பராரிகள்

கண்கள் பாதையைத் தொலைத்துவிட்டு நிற்கும் போதெல்லாம்.. கால்கள் ஒரு புதிய பாதையைக் கண்டுபிடித்துத் தரும்

-பராரிகள்

-சுப.உதயகுமாரன்

வறுமையால் வாடிய ஒரு புலவர் அதிலிருந்து மீள வேறேதும் வழியறியாது, அந்நாட்டு மன்னனிடம் சென்றார். திறமையைப் போற்றும் தாராளகுணம் படைத்த அந்த மன்னன், புலவரின் அருமையான கவிதையை செவிமடுத்துவிட்டு, ""என்ன பரிசு வேண்டும்?'' எனக் கேட்டான்.

மன்னனின் முன்பிருந்த சதுரங்கப் பலகையைப் பார்த்த புலவர், ""மன்னர் பெருமானே, இந்த சதுரங்கப்பலகையின் முதற்கட்டத்தில் ஒரே ஓர் அரிசியை வைத்து, ஒவ்வொரு கட்டம் நகரும்போதும் அதனை இரண்டு மடங்காக்கி எனக்குப் பரிசளித்தால், அதுவே எனக்குப் போதும்'' என்றார்.
எண் திறனில்லா அந்த மன்னன் அதனைச் சாதாரணமாக நினைத்துக்கொண்டு, ""கையளவு அரிசி போதுமா?'' என்று ஏளனத்துடன் கேட்டான். ""போதும்'' என்றார் புலவர். அப்படியே செய்ய ஆணையிட்டார் அரசர்.

அரண்மனை ஊழியர்கள் சதுரங்கப்பலகையின் முதற்கட்டத்தில் ஓர் அரிசியை வைத்தார்கள்.

இரண்டாவது கட்டத்தில் 2 அரிசிகள், மூன்றாவது கட்டத்தில் 4 அரிசிகள், நான்காவது கட்டத்தில் 8 அரிசிகள் என்று வைத்துக்கொண்டிருந்தார்கள். பத்தாவது கட்டத்துக்கு வந்தபோது, 512 அரிசிகள் தேவைப்பட்டன. இருபதாவது கட்டத்தை அடைந்தபோது, 5,24,288 அரிசிகள் வைத்தார்கள். மொத்தம் 64 கட்டங்கள் கொண்ட சதுரங்கப்பலகையின் பாதியான 32}வது கட்டத்தை எட்டியபோது, 214,74,83,648, அதாவது 214 கோடிக்கும் அதிகமான அரிசிகள் தேவைப்பட்டன.

தேவைப்படும் அரிசிகளின் எண்ணிக்கை லட்சம் கோடிகளைத் தாண்டிச் சென்றது. என்ன பரிசு வழங்குகிறோம் என்று எண்ணிப் பார்க்காத மன்னன், எண்ணற்ற அரிசியை வழங்க வேண்டிய நிலைக்கு ஆளாகி, தனது நாட்டையே அந்தப் புலவனிடம் இழந்தான். அத்தனையும் ஒரே ஓர் அரிசியில் தொடங்கியது

-சுப.உதயகுமாரன்

முகுந்த் நாகராஜன்

வழியில் அழுது அடம் பிடிக்கும்
குழந்தையை மிரட்ட
இருப்பதிலேயே சின்ன கிளையை
சாலையோர மரத்தில்
தேடுகிறாள் அம்மா
அழுகையை நிறுத்திய குழந்தை
அதே மரத்தில்
பூ வேண்டும் என்கிறது

-முகுந்த் நாகராஜன்

Sunday 30 August 2020

ஆதவன்

அவனுடைய உப்புமா வாழ்க்கையில் அவள் ஒரு ஊறுகாய்

-

எல்லோருக்கும் ஆசையாத்தான் இருக்கிறது. படிப்பைத் தவிர்ப்பதற்கு, படிக்காமலேயே புத்திசாலிகளாக இருக்கவே எல்லோரும் விரும்புகிறார்கள்

-ஆதவன்

புதிர்போல் ஏதாவது நடந்தால், அது விடுபடும் வரை கவனம் வேறுபக்கம் எப்படி போகும்?
   - எம்.வி.வெங்கட்ராம்

மழையில் நனைந்து
தூறலில் தலைதுவட்டிக் கொள்வான்

-ராஜா சந்திரசேகர்

Thursday 27 August 2020

அழகியல்*மணி

அழகியல்
*மணி

"மழலை மொழியில் வார்த்தைகளே கிடையாது, வெறும் அர்த்தங்கள் மட்டுமே.""

என்று படித்திருக்கிறேன்.

அதுபோல் இன்று ஒரு மழலையர் போட்டியில் ஆத்துச்சூடி ஒப்புவித்தலுக்கு நடுவராக சென்றிருந்தேன்.
இனிமையான பொழுதாய் இன்றைய நாள் அமைந்தது.ஒவ்வொரு குழந்தையும் வந்து ஆத்திச்சூடியை தனக்கே உரிய பாணியில் சொன்னது.அதில் நடந்த சுவாரஸ்யங்கள்..

#ஒவ்வொரு குழந்தையும் பாத்ரூமுக்குள்ள பல்லி இருக்குதானு பார்க்கிற மாதிரி நைசா நடுவரை எட்டிப்பார்ப்பாங்க.

#எவ்வளவு படிச்சீங்க னு கேட்டால் இரண்டாவது னு சொல்லும். சரிமா எவ்வளவு ஆத்திச்சூடி படிச்சிருக்கீங்க கேட்டால் இரண்டாவது னு சொல்லும்

#பொதுவா டக் இன் செய்வது 2வகை.சட்டை மேல் பேன்ட் போடுவது.இன்னொன்னு அவசரத்தில் டவுசருக்குள் சட்டையை சாக்குமூட்டைக்குள் சொருகுவது போல் செருகுவது. இது மாதிரி இரண்டு பசங்க வந்திருந்தாங்க

#ஒரு பொன்னுக்கு பர்த் டே. தலை முழுக்க மல்லிகை பூ.உச்சந்தலையே தெரியல.கையிலிருந்த டைரி மில்க்கை கடைசி வரை விடவேயில்லை. கொடிகாத்த குமரன் போல்

#சில குழந்தை தேம்பி தேம்பி புருசன் அடிச்சதை மகளிர் காவல் நிலையத்தில் கம்ளைன்ட் செய்வது மாதிரி..தேம்பி தேம்பி சொன்னாங்க

#சில குழந்தைகள் 109 ஆத்திச்சூடியும் ஒப்புவித்து, பாரதியின் ஆத்திச்சூடியும் ஒப்பிச்சாங்க.

#ஒரு குழந்தை ஒளவை மாதிரி வேஷம் போட்டு, லேஸ் சாப்பிட்டு துடைக்காமல் வந்து சொல்லுச்சு

#ஒரு குழந்தை வந்ததில் இருந்து அக்கா அக்கானு அழுதுச்சு..

சமாதானம் செய்தவுடன் எப்போதும் வேணாலும் வெடித்து அழும் துக்கம் தோய்ந்த குரலுடன் சொல்லி முடித்து..சென்றது

#ஒன்றாவது படிக்கும் பையன்.. பாடகர் உதித் நாராயணனின் சிறுவயது குரல் போல

"அகைவகுக்கும் வகக்கம்.ஆத்திச்சூகி

அகம் செய்ய விகும்பு
ஆகுவது செனம்
இகவது ககவேல்
ஈவகு விகக்கே

என பன்னிரண்டும் சொல்லி முடித்து, இகை எகுதியவர் அவ்வையா ணு சொல்லி நன்கி னு சொன்னான்.

#சில குழந்தைக அமைதிப்படை அமாவாசை மாதிரி கைகட்டி வந்து பவ்யம் காட்டியது

#சில குழந்தைகள் வகுப்புக்குள் நுழையும்போது ஆத்திச்சூடி சொல்லிக்கொண்டே வந்தது

#சில குழந்தைகள் சொல்லும்போது இன்டிகேட்டர் வேலை செய்யாத பைக்கில தலையை வெட்டி வெட்டி கிராஸ் செய்வது மாதிரி தலையை வெட்டி வெட்டி சொன்னது

#ஒரு சில குழந்தைகள் தலையை ஆட்டி ஆட்டி சொன்னது. நானும் அதனுடன் சேர்ந்து ஆட்டியதில் அதற்கு கொஞ்சம் கம்பெனி கொடுத்தது மாதிரி ஆகி இன்னும் ஜிமிக்கியை ஆட்டி ஆட்டி சொன்னது

#சில குழந்தைகள் கண்ணை பார்க்காமல், தவிர்க்கும்பொருட்டு கீழே விழுந்த சில்லரை காசை தேடுவது போல் தேடிக்கொண்டே சொல்லியது

#ஒரு குழந்தை சீலிங் பேனிடமும், கடிகாரத்திடமும் சொல்லிச் சென்றது

#மறந்த வரிகளின் போது எச்சில் விழுங்கியது.பின் மீண்டும் ஏர் வாங்குன கம்ப்ரசர் மாதிரி நின்னு நின்னு ஓடியது போல் சொல்லியது

#பொதுவாய் போட்டி என்பது பெயருக்குத்தான். குழந்தைகள் அதை மிக இயல்பாய் எடுத்துக்கொண்டனர். ஒரு விளையாட்டும் போட்டியும் நல்லதுக்குத்தான். தோல்வி கிடைத்தால் நாளை வெல்வேன் என்ற நம்பிக்கை கிடைக்கும். தோல்வியை தாங்கும் மனவலிமை கிடைக்கும். எந்த போட்டியிலும் கலந்துகொள்ளாமல் முதல்முறை தோல்வி கிடைக்கும்போது அதை தாங்கும் மனப்பக்குவம் இல்லாமல் உடைந்துவிடுகின்றனர். 

சிறுவயதிலிருந்து விளையாட்டும் போட்டியிலும் ஈடுபடுவோனுக்கு தன்னம்பிக்கையும், தோல்வி கண்டு துவளா மனமும் இருக்கும். வெற்றியைத்தான் இழந்தோம் களத்தை இழக்கவில்லை எனும் மன தைரியம் வரும்.இதில் அக்குழந்தைகளின் உள்வாங்கிச் சொல்லும்திறன் வெளிப்பட்டது, சைகை,உச்சரிப்பு உடல் மொழியில் வெளிப்படுத்திய பாங்கு அமைந்திருந்தது.பள்ளியில் படித்த போட்டியை பற்றிய தங்கவிதியொன்று நினைவுக்கு வருகிறது. "Taking part is more important than winning"!

-மணிகண்டபிரபு
மீள் பதிவு

Wednesday 26 August 2020

ஆதவன்

எதை நீங்கள் புரிந்து கொள்ள விரும்புகிறீர்களோ அதை மட்டுமே நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள்.
எல்லாவற்றையும் அல்ல, பூரணமாக அல்ல

*ஆண்களின் பொறுமையை சோதிப்பவர்கள் இல்லை பெண்கள்.ஆனாலும் சகித்துக் கொள்ளப்பட வேண்டியவர்கள்

-ஆதவன்


காலேஜ் முடித்துவிட்டு இவ்வளவு நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தாய்?

உங்களுடைய விளம்பரத்துக்கு காத்துக் கொண்டிருந்தேன்

-ஆதவன்
(இண்டர்வியூ)

பெ.பாண்டியன்

குழந்தைகளின்
கூட்ஸ் ரயில்..
தடம் கவிழ்ந்து எழுந்த
ஒரு பெட்டிக்கு
முழங்காலெல்லாம் சிராய்ப்பு
ஆறுதல் சொல்கின்றன
மற்ற பெட்டிகள்

-பெ.பாண்டியன்

Friday 21 August 2020

கல்யாண்ஜி

எதையும் சொல்லவில்லை
எதையும் கேட்கவில்லை
சும்மாதான் வந்தேன்
என்றுவிட்டுப் போனான்
காற்றுப் போல
வெயிலைப் போல
சும்மாதான் வருகிறவர்கள்
முக்கியம் எனக்கு

-கல்யாண்ஜி

கல்யாண்ஜி

கைப்பிள்ளையுடன் பேசிக் கொண்டே
கோலம் போடுகிறாள் அந்தப் பெண்
நிபந்தனையற்ற அன்பில்
நேர்த்தியாகிக் கொண்டிருக்கிறது வாசல்

-கல்யாண்ஜி

Tuesday 18 August 2020

மு.முருகேஷ்

 டிக்கெட்டுக்காய்
கொடுத்த சில்லறையில்
இருப்பதைஞ்சு காசு
குறைகிறதென
அந்த கிழவியைத் திட்டிக்கொண்டே
நகர்கின்ற கண்டக்டர்

இன்னமும் தரவேயில்லை
எனக்கான எழுபத்தைந்து காசு
சில்லரைப் பாக்கியை

-மு.முருகேஷ்


#எல்லா மூங்கில்களும்
புல்லாங்குழல் விற்பவன்
கைகளில் சங்கீதமாகிறது

பல புல்லாங்குழல்
வாங்கிப் போகிறவர்களின்
கைகளில் மூங்கிலாகின்றன

-மு.முருகேஷ்

தபூசங்கர்

நீ நரகத்துக்குச் செல்ல வேண்டும்
உன்னை விட்டால் வேறு யாரால் முடியும்
அதை சொர்க்கமாக்க

-தபூசங்கர்

Thursday 13 August 2020

மகுடேசுவரன்

முட்டாள்

முட்டாள்- முட்டுகின்ற ஆள். முட்டு என்றால் மோதுவது. முட்டிக்கொள்வது.தெளிவான பார்வையில்லாமல் தனக்குத் தெரிந்ததை நம்பி மேற்சென்று
முட்டி நிற்கும் ஆள்களை முட்டாள்கள் என்கிறோம். மடத்தனமாக முட்டி நிற்பது. முட்டுகிற ஆள் முட்டாள்.

-மகுடேசுவரன்

Monday 10 August 2020

தேர்ந்த நிர்வாகமும் பொறுப்புள்ள மக்களும்! - மீன்பிடித்தீவு, சிங்கார சிங்கப்பூர் ஆன கதை MyVikatan-மணிகண்டபிரபு


சிங்கப்பூர் என்றவுடன் நினைவுக்கு வருவது சிங்கத்தின் வாயிலிருந்து வரும் நீர், வானுயர கட்டடங்கள், சினிமாக்களில் வரும் பாடல்கள் மற்றும் 90களில் யாரேனும் சிங்கப்பூரில் வேலையில் இருந்தால் சிங்கப்பூர்காரர் வீடு என வழிவழியாய் அவர்களை அழைப்பது என்பது தான் சிங்கப்பூர் குறித்த பால்ய வயது அறிமுகம். இணையம் அறிமுகமானவுடன் சிங்கப்பூர் குறித்து அறிந்து கொண்ட போது இன்னும் வியப்பை தந்தது. தென் கிழக்கு ஆசியாவில் 704கி.மீ உள்ள ஒரு தீவு தான் சிங்கப்பூர். மலேசியாவின் ஜோஹர் நீர்ச்சந்தியும், இந்தோனேசியாவின் சிங்கப்பூர் நீர்ச்சந்தியும் சிங்கப்பூரை பிரிக்கின்றன.

கிழக்கு ஜாவாவை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியத்தின் மீது அருகில் உள்ள அரசர்கள் போர் தொடுத்ததால் அந்நாட்டின் இளவரசன் சாங் நிலா உத்தமா நாட்டை விட்டு தப்பி ஓடினான். அந்நாட்டின் கடைசியாய் இருந்த ஒரு தீவில் தஞ்சமடைந்தான். காடுகள் நிறைந்திருந்த அத்தீவின் புலிகள் அதிகம் காணப்பட்டதை சிங்கங்கள் என நினைத்து இச்சிங்கத்தை கண்டதால்தான் இத்தீவு தனக்கு கிடைத்ததை அதிர்ஷ்டமாய் நினைத்தார். மலாய் மொழியில் சிங்கா என்றால் சிங்கம், பூரா என்றால் ஊர்.. என சிங்கங்கங்களுக்கு நன்றி அறிவிப்பாக தன் தீவுக்கு சிங்கப்பூர் என பெயரிட்டார்.
மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட மீன்பிடித்தீவாய்.. கேளிகைக்கென உருவான நகரமாய் இருந்தது. போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்களால் ஆளப்பட்டாலும் முன்னேற்றமின்றி இருந்த நகரத்தை 1819 ஜனவரி 29ல் இங்கிலாந்தின் ராஃபிள்ஸ் பார்வையிட்டு இந்திய - சீன வர்த்தகத்துக்கு சிங்கப்பூரா துறைமுகத்தைத் தேர்ந்தெடுத்தார்.

பிப்ரவரியில் ஆங்கிலேயர் வசமாகி உச்சரிப்பில் சிங்கப்பூரா என வராததால் சிங்கப்பூர் ஆனது. மலாய், சீனர்கள், இந்தியர்கள் என கலந்து வாழும் கலாச்சாரம் துவங்கியது. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியர்கள் வசம் மூன்றரை ஆண்டுகளுக்குப்பின் 1942 செப்டம்பர் 12ல் மீண்டும் ஆங்கிலேயர் வசமானது சிங்கப்பூர்.


மொழிப்பிரச்சனை, தொழிலாளர் பிரச்சனை, தனி நாடு கோரிக்கை என முதல்வர் மார்ஷல் மற்றும் மலேய விடுதலைக்கு துங்குவும் போராடியதால் ஆகஸ்ட் 31,1957 மலேயா சுதந்திரம் பெற்றது. துங்கு ஒருங்கிணைந்த மலேஷியாவின் முதல்வரானார். சிங்கப்பூர் மக்களுக்கும் லீ க்கும் ஏமாற்றம் மிஞ்சியது.

#சிங்கப்பூர் உதயமானது

மலேசிய கூட்டமைப்பில் சிங்கப்பூர் தொடர்ந்து இருந்து வந்தது. இருப்பினும் சிங்கப்பூர் வளர்ச்சியையும் லீ யின் செல்வாக்கும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் உயர்ந்து கொண்டு இருந்தது. கோலாலம்பூரை விட சிங்கப்பூர் முக்கியத்துவம் பெறும் அச்சம், கூட்டரசுக்கும் மாநிலத்திற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்தன.
சீனர்கள் மலாய் மக்களிடயேயும் கலவரங்கள் தொடர்ந்தது. இதன் விளைவாய் 1965 ஆகஸ்ட் 9ம் நாள் மலேசிய நாடாளுமன்றத்தில் சிங்கப்பூர் உறுப்பினர்கள் இல்லாத நிலையில் 126 உறுப்பினர்கள் வாக்களித்து சிங்கப்பூரை வெளியேற்றிவிட்டனர்.
போராட்டமின்றி சிங்கப்பூர் அரசு சுதந்திரம் பெற்றது.

#லீ குவான் யூ

சிங்கப்பூரின் காட் ஃபாதராக விளங்கியவர் லீ குவான் யூ. பள்ளிப் படிப்பை முடித்த பின் கேம்பிரிட்ஜில் சட்டம்படித்து சிங்கப்பூர் வந்து புகழ் பெற்ற வழக்கறிஞரானார். ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசகராக இருந்தாலும் பின்னாளில் தனிக்கட்சி ஆரம்பித்தார். 1959ம் ஆண்டு சிங்கப்பூரின் பிரதமரானார். ஆட்சிக்கு வந்தவுடன் 14,000 அரசு ஊழியர்களில் 6,000 உயர்மட்ட அதிகாரிகளின் ஊதியத்தை குறைத்தார். ஏழைகளுக்கு அரசின் சார்பில் அடுக்குமாடி வீடு என அதிரடி காட்டினார். பொருளாதார ரீதியாக நாட்டை உயர்த்தினார். அரசு துறைகளை ஊக்குவித்தார்.


"நான் வகுப்புகளுக்குத் தாமதமாகச் சென்றபோதெல்லாம், என் ஆசிரியர்களிடம் பிரம்படி வாங்கியிருக்கிறேன். அதை நினைத்து நான் எப்போதுமே வருந்தியது இல்லை. இதுபோன்ற தண்டனைகள் சமூகத்துக்கு நன்மை செய்யும்’ எனச் சொல்லி ஒழுக்கமான தேசத்தை அவர் நிர்மாணித்தார்.
நான்யாங் பல்கலைக்கழகம், நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூர் என சர்வதேசப் பல்கலைக்கழகங்களுக்கு இணையாக கல்விநிறுவனங்களை அமைத்தார். பிரதமர் பதவியைவிட்டு விலகும்போதுகூட, 'சவக்குழியில் என்னை இறக்கும் தருணமாக இருந்தாலும் சரி.. எங்கேயாவது தவறு நடப்பது தெரிந்தால், நான் எழுந்து வருவேன். ஜாக்கிரதை’ என ஆட்சியாளர்களை எச்சரித்திருந்தார்.

இன்றளவும் தேர்ந்த நிர்வாகியாக உலக மக்களால் நினைவுக் கூறப்படுகிறார்.

#Trace Together

உலகளவில் கொரோனா பாதிப்பு உச்ச்த்தை தொட்டாலும் சிங்கப்பூர் கணிசமாக கட்டுப்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் முயற்சியில் சிங்கப்பூர் அரசு Trace Together என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு பயனரின் விபரங்களும் சேமிக்கப்படும். செயலியை இன்ஸ்டால் செய்து ப்ளூ டூத் ஆன் செய்தால் 10 மீட்டர் இடைவெளியில் கொரோனா எச்சரிக்கையை அருகில் உள்ளோர்க்கு MOH மூலம் தெரிவிக்கப்படும். COVID-19 க்கு பாசிட்டிவ் சோதனைக்கு முன்னும் பின்னும் தொடர்பு கொண்ட அனைத்து மக்களையும் விவரிக்க உதவும். வைரஸ் பரவுதலின் அபாயத்தை குறைக்க முடியும். தன்னார்வமாக பயனர் தன் சோதனை முடிவை பகிரலாம்.

ஒவ்வொருவரும் கடைசியாக சென்ற இடங்களை குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவித்துக் கொண்டே இருக்கும். உதாரணமாக கடைசியாக இரு நாட்களுக்கு முன் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றால் அங்கு யாருக்கேனும் இன்று பாசிட்டிவ் வந்திருந்தால் நாம் சென்றிருந்த தகவலை வைத்து நம்மையும் சோதனைக்கு அழைத்து பரிசோதித்து முழுமையாய் கட்டுப்படுத்த முடியும்.
*jobs support system எனும் வேலை ஆதரவு திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இதன்படி சிங்கப்பூர் வாழ் குடியுரிமை பெற்றவர்கள், நிரந்தர வாசிகள்(permanent residents) ஆகியோர்களுக்கு கம்பெனிகள் ஊதியம் கொடுக்க சிரமப்படும் பட்சத்தில் 75% ஊதியம் வழங்க உதவுகிறது. இது ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

*தொடர்ந்து முழுமையாக பணியாற்றும் உள்ளூர் ஊழியர்களுக்கு சிபிஎஃப்-க்கு முதலாளிகளின் பங்களிப்புகள் உட்பட தற்போதுள்ள சம்பளத்தை வழங்க வேண்டும்.

#18 வது பொதுத்தேர்தல்

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் 18வது சிங்கப்பூர் நாடாளுமன்றத் தேர்தல் 93 இடங்களுக்கு நடைபெற்றது.

83 இடங்களில் ஆளும் மக்கள் செயல் கட்சி வென்று லீ சியன் லூங் பிரதமராகியுள்ளார்.10 இடங்களில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

27 பெண்கள் வென்றிருப்பதும் ஒரு சாதனையே. இதுவும் ஒருவகையில் டிஜிட்டல் தேர்தலாக சமூக ஊடகங்களில் பரப்புரை மேற்கொண்டன. 21 வயது நிறைந்த அனைவரும் இரவு 10மணி வரை ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். சிங்கப்பூரை சேர்ந்த முரளி கிருஷ்ணன் கூறுகையில், ``ஆளும் கட்சி தோல்வி அடைந்த இடங்களில் இனி அதிகம் களப்பணி ஆற்றும். மீண்டும் அந்த இடங்களில் அடுத்த முறை வெற்றி பெற கடுமையாய் உழைப்பார்கள். இதுதான் ஆளும் கட்சியின் மகத்தான பண்பு" என்றார். சிலாகித்துப்போனது.

#சுதந்திர தினம்

55 ஆண்டுகள் நிறைவு பெற்று 56வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது சிங்கப்பூர். எத்தனை சவால்கள் வந்தாலும் சாதிக்க தயாராய் உள்ளனர்.
நாட்டின் வளர்ச்சிக்கு மக்களின் ஒத்துழைப்பு முக்கிய காரணமாய் விளங்குகிறது. உலக ஏற்றுமதியில் 14வது இடம் வகிக்கிறது. உலக அளவில் அதிகளவு கப்பல்கள் வந்து செல்லும் துறைமுகமாகவும், அதிக சரக்குகளைக் கையாளும் துறைமுகமாகவும் சிங்கப்பூர் உள்ளது. சிங்கப்பூரில் பணியாற்ற ஆங்கில அறிவு அவசியம். நிரந்தரவாசி (Permanent residents)பெற அதிகம் பேர் விரும்புகின்றனர்.


இதன் மூலம் சலுகைகள், குடியுரிமை பெற ஏதுவாய் இருக்கும். 2008 வரை எளிமையாய் இருந்த நடைமுறை பின்பு பாதுகாப்பு காரணங்களுக்காக விதிமுறைகள் அதிகம் வகுக்கப்பட்டுள்ளன. இன்றும் தம் நாட்டினை குறித்து பேசும்போது பெருமை பொங்க பேசுகின்றனர்.

Winners donot do different things, they do things differently.

வெற்றியாளர்கள் எதையும் புதிதாய் செய்வதில்லை. செய்வதையே வித்தியாசமாய் செய்கிறார்கள் வெற்றி பெறுகிறார்கள். சிங்கப்பூர்காரர்களும் அவ்வாறே!

-மணிகண்டபிரபு

வ.சு.ப.மாணிக்கனார்

சீதையைப் பார்க்கச் செல்லும் ராவணன் மனைவி மண்டோதரியிடம் மாட்டிக்கொள்கிறான்

கள்ளமாய் எழுதித்தேர்வில்
கைப்படு பேதைபோல
எள்ளலாய்ப் பெண்ணைப்பேசி
இடிபடுங் கயவன் போலத்
துள்ளலாய் வேலிதாண்டித்
தொடுத்துணும் மாடுபோல
உள்ளமாய் நடுக்கங் கொண்டான்
உம்பரை நடுங்க வைத்தான்

-வ.சு.ப.மாணிக்கனார்

சுப.உதயகுமாரன்

அதிகமாகப் பாருங்கள், அளவோடு பேசுங்கள், ஆர்வத்தோடு  கேட்பீர்கள்' என்பதுதான் அந்தக் கவிதை சொல்லும் செய்தி.

சரி, எப்படித்தான் செவிமடுக்கும் திறனை உயர்த்திக் கொள்வது?

உங்களைச் சமநிலையில் வைத்திருப்பது முதற்படி. அதாவது, உங்கள் மனக்கோப்பை காலியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். திறந்த மனதோடு இருங்கள். உங்களிடம் பேசுகிறவரை நீதித்தராசில் வைத்து நிறுக்கவோ அல்லது உங்கள் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அவரை எடை போடவோ செய்யாதீர்கள்.

கவனச் சிதறலின்றி  கேளுங்கள். பேசுபவரின் நடை, உடை, பாவனைகளில் கவனம் செலுத்தாது, அவர் பேசும் வார்த்தைகளின் உள்ளடக்கத்தில் மனதைச் செலுத்துங்கள். பேசப்படும் பொருள், பேசுபவரின் எண்ணவோட்டம் மற்றும் உணர்வுகளில் மனதைக் குவித்துக் கேளுங்கள்.

நீங்கள் கவனமாகக் கேட்கிறீர்கள் என்பதைப் பேசுகிறவர் புரிந்துகொள்ளும் வகையில், அவரது கண்களைப் பாருங்கள்; தலையை அசையுங்கள், முக பாவனையை, குரலைப் பயன்படுத்துங்கள்.

உங்களை அவருடைய இடத்தில் நிறுத்தி, அவருடைய வாழ்வுலகுக்குள் நுழைந்து, அவருடைய விழுமியங்கள், பார்வைகள், அனுமானங்களைப் புரிந்து, கவனமாகக் கேளுங்கள்.

பேசுகிறவர் விவரிப்பது போன்ற உங்களின் சொந்த அனுபவங்களைப் பகிர வேண்டாம். அவர் கொட்டிக் கொண்டிருக்கும் உணர்வுகளுக்கு, பிரச்னைக்கு விடையோ, தீர்வோ சொல்ல வேண்டாம். வெறுமனே  கேளுங்கள். மனம்திறந்து கேளுங்கள்.

பேசுகிறவர் நிறுத்தினால், தயங்கினால், அமைதி காத்தால், குழம்பினால், அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தையை, சொற்றொடரை அல்லது பகிர்ந்துகொண்டிருந்த உணர்வை அவருக்கு நினைவூட்டி அவர் தொடர்ந்து பேசுவதற்கு உதவுங்கள். பேசுபவரை ஊக்குவித்து இன்னும் தெளிவாக, விளக்கமாகப் பேசவைக்க சில குறிப்பிட்ட உத்திகளைக் கையாளலாம்.

ஊக்குவித்தல்: பேசுபவரோடு உடன்படவோ அல்லது மாறுபடவோ  செய்யாமல், நடுநிலைமையான வார்த்தைகளுடன், உங்கள் ஈடுபாட்டைத் தெரிவிக்கலாம். "இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன்?' எனக் கேட்டு, தொடர்ந்து பேச உதவலாம். 

தெளிவுபடுத்துதல்: கேள்விகள் கேட்டு, பேசுபவர் கூடுதல் விவரங்கள், விளக்கங்கள் அளிக்க உதவி செய்யலாம். "இது எப்போது நடந்தது?' "அப்படி யார் சொன்னது?' போன்ற கேள்விகளைக் கேட்டு இன்னும் தெளிவாகப் பேச வழிகோலலாம். 

திரும்பச் சொல்லுதல்: பேசுபவர் சொல்கிற அடிப்படைத் தகவல்களை, கருத்துகளை மீண்டும் ஒருமுறை உங்கள் வார்த்தைகளில் திரும்பச் சொல்லி, பேசுகிறவர் சொல்வதை நீங்கள் கவனமாகக் கேட்கிறீர்கள், புரிந்திருக்கிறீர்கள் என்பதை அவருக்குத் தெரிவிக்கலாம். உங்களுடைய  புரிதல் சரிதானா என்பதையும் பரிசோதித்துக் கொள்ளலாம். "உங்கள் பெற்றோர் உங்களை முழுமையாக நம்பவேண்டும் என்று விரும்புகிறீர்கள், அப்படித்தானே?' என்பன போன்ற கேள்விகள் மிகவும் உதவும். 

பிரதிபலித்தல்: பேசுபவரின் அடிப்படை உணர்வுகளைச் சுட்டிக்காட்டி, அவர் எப்படி உணர்கிறார் என்பதை நீங்கள் புரிந்துகொண்டிருப்பதை எடுத்துரைக்கவும். அவர் தனது உணர்வுகளை மதிப்பீடு செய்வதற்கும் உதவலாம். "அந்த வார்த்தைகள் உங்களை மிகவும் கோபப்படுத்தியிருக்கின்றனவா, இல்லையா?' போன்ற கேள்விகள் பயனளிக்கும். 

சுருக்கிக் கூறுதல்: பேச்சில் முன்னேற்றத்தைப் பரிசீலிக்கவும், முக்கியமான கருத்துகள், தகவல்கள், உணர்வுகளை ஒருங்கிணைக்கவும், தொடர் கருத்துப்பரிமாற்றத்துக்கு வழிகோலவும், அவர் பேசுவதைச் சுருக்கிக் கூறுவது மிகவும் உதவும். 

உறுதி செய்தல்: பேசுபவரின் பிரச்னைகள், உணர்வுகளை ஆமோதிக்கவும், அவரது முயற்சியைப் பாராட்டி அங்கீகரிக்கவும், அவரது நன்மதிப்பை எடுத்துரைக்கவும் இது உதவும். 

கூர்மையாகக் கேட்க வேண்டுமென்றால், நீங்கள் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.  ஏனென்றால் பேசும்போது கேட்க முடியாது. அதே போல, ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது, உங்கள் மனதில் அவருக்கு எதிராக வாதிடுவதை நிறுத்திவிட்டு, பொறுமையாக, நிதானமாக இருங்கள். அவர் பேசும் வார்த்தைகள், கருத்துகள், உணர்வுகளின்மீது கவனம் செலுத்துங்கள்.

பேசுபவரோடு வாதிடாதீர்கள்; விமர்சனம் செய்யாதீர்கள்; அவரைப் பகைமையோடு நடத்தாதீர்கள். பேசுகிறவரின் கலாசாரப் பின்புலத்தை அறிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில் அவரைப் புரிந்துகொள்ளுங்கள். பேசுகிறவரை வகைப்படுத்திப் புறக்கணிக்காதீர்கள். பேசுகிறவர், பேசப்படும் பொருள், இடம், பொருள், ஏவல் போன்றவை பற்றிய உங்களின் பாரபட்ச உணர்வுகளை இனம்கண்டு, அவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

காது பற்றியும், கேட்பது குறித்தும், கேட்கும் தகவல்களை ரகசியமாகப் பாதுகாப்பது தொடர்பாகவும், நமது தமிழ்ச் சமூகத்தில் புழங்கும் கதை ஒன்று மிக முக்கியமானது.

ஒரு ராஜாவுக்கு ஒட்டுக் கேட்பதில் அலாதிப் பிரியம் ஏற்படவே, தன் காதுகளைப் பெரிதாக வளர்த்துக் கொள்ளும் பொருட்டு ஒரு மருந்தைக் குடிப்பார். அவரது காது கழுதைக் காது போல வளர்ந்துவிடும். இந்த ரகசியம் ஊருக்குத் தெரியாமலிருக்க ராஜா தலைப்பாகை அணிந்துகொண்டார். ஒரு முறை ராஜாவுக்கு முடிவெட்ட வந்தவர் இந்த ரகசியத்தை அறிந்துவிட்டார். இதை வெளியே  சொன்னால் கொன்றுவிடுவேன் என்று அவரை மிரட்டி அனுப்பி வைத்தார் ராஜா. 

மேற்படியாருக்கு இந்த ரகசியத்தை யாரிடமாவது சொல்லாவிட்டால், தலை வெடித்துவிடும் போல இருந்தது. எனவே ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்திற்குச் சென்று ஒரு குழி தோண்டி, அதற்குள் "ராஜா காது கழுதைக் காது' என்று மூன்று முறை உரக்கச் சொல்லிவிட்டு வீடு திரும்பினார். அந்த ராஜ ரகசியம் எப்படி ஊர்முழுக்கப் பரவியது, பின்னர் என்னென்ன விடயங்கள் நடந்தேறின என்று பல்வேறு வடிவங்களில் அந்தக் கதை சொல்லப்படுகிறது.

கதையின் மையக் கருத்துகள் இவைதான்: கூர்மையாகக் கேட்பதற்கு காதுகள் பெரிதாக இருக்க வேண்டிய  தேவையில்லை. பிறர் உங்களிடம் சொல்ல விரும்பாத விடயங்களைத் தெரிந்துகொள்ள, ஒட்டுக் கேட்காதீர்கள். அதேபோல, நீங்கள் கேட்டவற்றைப் பிறரிடம் பகிர்ந்தே ஆகவேண்டும் என்கிற அழுத்தத்துக்கு ஆளாகாதீர்கள். இவற்றை நீங்கள் செய்தால், கேவலப்படுவீர்கள் என்பதுதான் கதையின் பாடம். 

கேட்பதிலுள்ள சில சூட்சுமங்களைப் புரிந்துகொள்ள ஓரிரு செய்முறைப் பயிற்சிகள் உங்களுக்கு உதவலாம்:

(1)  நான்கைந்து நண்பர்களை அமர்த்திக்கொண்டு, பத்து வார்த்தைகளை வேகமாகச் சொல்லிவிட்டு, எத்தனை வார்த்தைகளை அவர்கள் உள்வாங்கி, நினைவில் நிறுத்தி, திருப்பிச் சொல்ல முடிகிறது என்று பாருங்கள். பெரும்பாலானவர்களால் மூன்று முதல் ஐந்து வார்த்தைகளுக்கு மேல் சொல்ல முடியாது.

(2) நண்பர்கள் பத்து பேர் ஒரு வட்டமாக அமர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் ஒரு வாக்கியத்தை உங்களுக்கு வலதுபக்கம் இருப்பவரின் காதில் ஒரே ஒரு முறை மட்டும் சொல்லுங்கள். அவரும் இதேபோல தனக்கு வலதுபக்கம் இருப்பவரின் காதில் ஒரே ஒரு முறை அதைச் சொல்லட்டும். இப்படியே அந்த வாக்கியம் அந்த வட்டத்தைச் சுற்றி உங்களிடம் வந்து சேரும்போது, எப்படி உருமாற்றம் பெற்றிருக்கிறது என்று பாருங்கள். நமது கேட்கும் திறன் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பது புரியும்.

-சுப.உதயகுமாரன்