பொருள் மயக்கம் என்னும் அழகு ❤
குறியீடுகள் நிறைந்தப் படம் என்று ”குறியீடு” என்கிறச் சொல்லை கடந்த 10-12 வருடமாக இணையத்தில் வைரலாகப் பயன்படுத்தி வருகிறோம்.இதன் பழைய மாடல் ”சிம்பாலிக்” (symbolic) என்கிற சொல்.பாலச்சந்தர் இதன் உலகக் காப்புரிமையை வைத்திருந்தார்.அவர் படங்களில் பார்க்கலாம்.லோக்கலில் நாங்கள் இதை “டைரக்ஷன் காட்றது” என்போம்.😃வீட்டில் யாரவது இறந்தால் சுவர் கடிகாரப் பெண்டுலம் நின்று விடும்.வாழை மரம் தலை சாயும்.அவுட் அண்ட் அவுட் நாடகத்தனம் இருக்கும்.அப்போதைய டிரெண்ட்.
பல வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட புகழ் பெற்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளில் ரயில் நிலையம் ஒரு படிமமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது எவ்வளவுப் பேருக்குத் தெரியும்?அதைக் குறியீடாக சிலாகித்து இந்தப் புத்தகத்தில் "சில பொழுதுகள் சில நினைவுகள்” வெங்கட்சாமிநாதனும் பாவண்ணனும் உரையாடுகிறார்கள்.
குமாரபுரம் ஸ்டேஷன் – கு.அழகிரிசாமி, சிலிர்ப்பு – தி.ஜானகிராமன்,யில்வே ஸ்தானம் – பாரதியார்,
விடியுமா – கு.ப.ரா.
மல்லேஸ்வரம் ரயில் நிலையத்தில் வெங்கட்சாமிநாதன் பாவண்ணன் உரையாடல் நடுவே இந்த ரயில் நிலையத்தைச் சிலாகித்து உரையாடல் நீள்கிறது.
”ஸ்டேஷன் ரயில் எல்லாமே வலிமையானப் படிவம்.மறைமுகமா ஒரு மனிதனுக்குள்ள நடக்கிற டிரான்ஸ்ஃபர்மேஷனை ரொம்ப சுலபமா முன் வைக்க ஒரு எழுத்தாளனுக்குக் காலம் காலமா ஸ்டேஷன் சித்தரிப்புகள் ரொம்ப உதவியா இருந்திருக்கு” வெ.சா.
குமாரபுரம் ஸ்டேஷன் – கு.அழகிரிசாமி
புத்தரருக்குப் போதி மரத்தடியில் ஞானம் கிடைச்ச மாதிரி அந்த வாத்தியாருக்குக் குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷ்ன்ல ஞானம் கிடைச்சிட்டுது……..அதுதான் பெரிய தரிசனம்.குமாரபுரம் ஸ்டேஷன்கிறதே அந்த நேரத்துல ஒரு பெரிய குறியீடாயிடுது.அற்புதமான கதை.
ரயில்வே ஸ்தானம் – பாரதியார்
ஒரு கதைக்குரிய நுட்பத்தையும் கவித்துவத்தையும் இந்தச் சித்திரத்தில் வச்சிருக்காரு பாரதியார்.முஸ்லீம் இளைஞனுக்கு மூன்று பொண்டாட்டி.அதனால் வீட்டில் பிரச்சனை.ஒரு நாள் கனவில் அல்லா மூணுல ரெண்டு பேரை மணவிலக்குச் செஞ்சு ஒருத்தியோடு வாழுன்னு சொல்லிட்டு போயிடறாரு.ரயில்வே ஸ்டேஷன்ல உட்கார்ந்துதான் யோசிப்பதாக கதை ஆரம்பிக்கிறது.
அழுகை துக்கம்.இந்தப் பிரச்சனைக்கு என்ன தீர்வு சொல்றதுன்னு கதைச் சொல்லிக்கு ஒரே குழப்பம்.
தடுமாற்றம்.நல்ல வேளையா தொடர்ந்து பேச முடியாதபடி ரயில் வந்துடுது.அவனும் அதில் கிளம்பி போயிடறான். கதை முடிஞ்சுடுது.ரயிலும் ஸ்டேஷனும் சரி டிரன்ஸ்ஃபர்மேஷனை சுட்டிக் காட்டக் கூடிய குறியீடுகள்.முக்கியமான முடிவை நோக்கி வந்துட்டான் அவன்.ஆனால் இப்ப எடுக்கப் பட போகுதுங்கற சூட்சுமமா சுட்டிக் காட்டத்தான் ரயில்வே ஸ்டேஷன் பின்னணி.
(மேல் சொன்னக் கதையைப் பாவண்ணனுடன் இரண்டுப் பக்கத்திற்கு அலசுகிறார் வெ.சாவுடன்)
விடியுமா? கு.ப.ரா❤
இந்தச் சிறுகதையில் கூட ஒரு ரயில் பயணம் வருது.கணவன் இறந்துட்டார்னு தந்தி கிடைச்சதும் மனைவியும் அவள் தம்பியும் ஊருக்குக் கிளம்புகிறார்கள்.செத்துப்போன கணவனைப் பற்றிய ஞாபகங்கள் வந்துட்டே இருக்கு.எப்படா விடியும்னு இருக்கு.கணவன் உயிரோடு இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்னு இரு சாத்தியப்பாடு உருவாகுது.ஒரே குழப்பம்.ரயில் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் நின்னு நின்னு போகுது.ஒரு பக்கம் ரயில் பயணம் அதனுடைய விவரங்கள் பெட்டிக்குள்ள பயணம் செய்யக்கூடிய மற்ற பிரயாணிகளுடைய எதிர்வினைன்னு சொல்லிக்கிட்டே போறாரு.ஒரு கதையைப் பற்றி யோசிப்பதற்கும் அசைப்போடுவதற்கும் ஒரு வாய்ப்பை அந்த பொருள்
மயக்கம் காலம்காலமாக தக்கவச்சிருக்குது.
சிலிர்ப்பு – தி.ஜா.(stunning one. என்னால் மறக்கவே முடியாத கதை❤👌)
ஒரு ரயில் பயணம் நம் கண்களையெல்லாம் திறந்துடுது……………..ஓடும் ரயிலில் பல விவரங்கள் சொல்லப்படுகிறது.சிறுமியின் கதையும் சொல்லப்படுகிறது
.(இந்தக் கதை ஆரம்பமே ரயில்வே ஸ்டேஷன் விவரிப்புதான்.உரையாடலில் மிக மிக சொற்பமாகத்தான் இருக்கிறது.இருவரும் கதையின் உள்ளடக்க சிலாகிப்பிற்குப் போய்விட்டார்கள் உரையாடல் முழுவதும்.
கதையின் ஆரம்பம்:( இது புத்தகத்தில் இல்லை.படிப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக)
❤
// திருச்சிராப்பள்ளியிலிருந்தே புறப்படுகிற வண்டி அது. மாயவரத்தோடு நின்றுவிடும். பத்தரை மணிக்குத் தொடங்கி மூன்று மணியோடு அதன் வாழ்வு முடிந்துவிடும். மதுரை, மானாமதுரை, ஈரோடு என்று எல்லா வண்டிகளையும் அனுப்பிவிட்டு திருச்சிராப்பள்ளி ஜங்ஷன் புயல் புகுந்து விளையாடின தோப்பைப் போல, ஒரே வெளிச்சமாக ஹோவென்று வெறிச்சிட்டுக் கிடந்தது. வாழைத்தொலி, ஆரஞ்சுத்தொலி, எச்சில் பொட்டணம், தூங்குமூஞ்சிகள்- இவற்றைத் தவிர ஒன்றையும் காணவில்லை. வண்டி புறப்பட இன்னும் அரைமணிதான் இருக்கிறது. எஞ்சின், கார்டு, ஒன்றும் வரவில்லை. வண்டிக்கு வண்டி ஒரு பரட்டை, அழுக்கு இப்படி ஏதாவது தூங்கிக் கொண்டிருந்தது. //
வெ.சாவின் ரசனையில் மிகையும் உண்டு.சாதாரண விஷயத்தை இப்படி பில்ட் அப் கொடுப்பதாக.இப்போத் கதை,சினிமா,குறும்படம் எல்லாவற்றிலும் drill down & detailing லெஃப்ட் அண்ட் ரைட் வந்துவிட்டது.96 படத்தை ஒவ்வொரு முறைப் பார்க்கும் போதும் கதையை ஒட்டிய ஒவ்வொரு hidden element கண்டுப்பிடித்திருக்கிறேன்.
பாரதியார் கதையில் ரயில்வே ஸ்டேஷன் தவிர நிறைய விஷயங்கள் உண்டு.அது உரையாடலில் இல்லை.
நன்றி நாகராஜன்