கற்றதும் பெற்றதும்-55
*மணி
#ஏ.எம்.ராஜா
-மணிகண்டபிரபு
பெரும்பாலானோர் சினிமாவில் வரும் பாட்டுக்கள் அனைத்தும் நடிகர்களே பாடுவார்கள் என நம்பிக்கொண்டிருந்த காலம். அப்போது விஜய் சேதுபதியின் முந்தைய வெர்சன் மாதிரி ஜெமினியின் படம் வித்தியாசமான படங்களாய் இருக்கும்.தம் கட்டி வசனம் பேசுவதோ,சதா சண்டையிடுவதோ இல்லாமல் அசால்டா படங்களில் ஸ்கோர் செய்வார்.
அப்போது தான் அந்த வசீகர குரல் வரும்.இன்னும் நூறு வருசம் கேட்டாலும் மக்காத மைக்ரான் குறைந்த ப்ளாஸ்டிக் மாதிரி "மிஸ்ஸியம்மா" படத்தில் வரும் "வாராயோ வெண்ணிலா..வே கேளாயோ எங்கள் கதையே". அந்த மெட்டும் பாட்டும் அவ்வளவு ஈர்ப்பு.என்ன இப்படி ஒரு குரல்னு சிலாகித்து பார்த்ததுண்டு.
அப்புறம் தான் அது ஏ.எம் ராஜாவின் கைவண்ணம் எனப் படித்தேன்.அப்படத்திலேயே மெல்லிய நீரோடை போல் தொடங்கும் "பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமென்றே" என்ற பாடலில் மெட்டும் பாட்டோடு பிணைந்திருக்கும்.
#கல்யாணப்பரிசு
ஸ்ரீதரின் கல்யாணபரிசு முதன்முதலில் முக்கோண காதல்கதையை அறிமுகப்படுத்தியவர்.முதல்பாதி முழுக்க ஜாலி. பின்பாதி முழுக்க இறுக்கம்.தமிழில் ஏ.எம்.ஆர் க்கு முதல்படம்.
காட்சிகளால் மிரட்டும் ஸ்ரீதர் க்கு பக்க பலமாய் இருந்தது இவரின் பாடல்களே.படக்கதை முழுவதையும் ஒரு பாடலில் "காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன்" எனும் துக்கத்தை அனைவரின் தொண்டியிலும் சேர்க்கத்தெரிந்தவர்.. படத்தின் முற்பகுதியில் "வாடிக்கை மறந்ததும் ஏனோ" வில் துள்ளலிசை கொடுத்திருப்பார். குரலிலும் வாழ்விலும் இவருக்கு இணையான் இணையர் பாடகி ஜிக்கி.
"உன்னை கண்டு நானாட" எனும் பாடல் பேத்தா சாங் போல் பின்பு சோக கீதத்திலும் ஒலிக்கும்.
தனித்துவமான குரலில் "துள்ளத்தான மனமும் துள்ளும்" பாடலில் உருக வைத்திருப்பார். "துன்பக்கடலை தாண்டும்போது தோணியாவது கீதம்" னு பாடும்போது மெல்லிய குரலில் உச்சத்தை தொட்டிருப்பார் ஜிக்கி.
#தேன் நிலவு
கல்யாண பரிசு கூட்டணி அப்படியே தொடர்ந்தது.இம்முறை இளமை ததும்பும் கதை.ஜெமினி-வைஜெயந்தி மாலா அறிமுகப்பாடல்.இசைக்கு குதிரை செல்கிறதா அல்லது குதிரை நடைக்கு இசை அமைத்ததா எனும்படி "பாட்டு பாடவா" பாட்டு. ஒரு பெப்பியான பாடல்.
மெலடியில் மயிலிறகால் வருடியது "நிலவும் மலரும் பாடுது" எனும் பாடல்.துடுப்பால் நீரை தள்ளி படகு முன்னேறுவது போல் இசையும் நம்மை இழுத்துக்கொண்டு முன்னே தள்ளும்.
கர்நாடக இசையில் இமயச்சாரலில் "காலையும் நீயே" பாடலும், "சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்" பாடல் துள்ளலிசையுடன் அமைந்த ஒன்று. இதே சாயலில் ராஜாவும் இதயம் படத்தில் ஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்,ராசாவின் மனசிலே வில் வரும் "பாரிஜாத பூவே" ஏ.எம். ராஜாவின் சாயல்படி அமைத்திருப்பார்.
#என் தனிமை கிண்ணத்தில் உள்ளது. யாரேனும் பருக வருவார்கள் என..!
என்பது தஸ்தாவெஸ்க்கி புகழ்பெற்ற வரி.இது போல் தனிமையின் சிறப்பை ஆடிப்பெருக்கு படத்தில் "தனிமையிலே இனிமை காண முடியுமா" பாடலில் குளிர்ந்த இரவில் மேலும் குளுமையான சுசீலா வின் குரலில் கேட்பது தெய்வீகம்
#பெற்ற மகனை விற்ற அன்னை படத்தில் வீணை இசையுடன் துவங்கும் "தென்றல் உறங்கிய போதும்" பாடலின் சரணத்தில் கேட்டால் குடை ராட்டான் தூரியில் கீழுறங்கும்போது ஏற்படும் மெல்லிய உண்ர்வு போல்
"நீல இரவிலே தோன்றும் நிலவைப் போலவே.. நிலவைப்போலவே
வாலை குமரியே நீயும் வந்த போதிலே .. வந்தபோதிலே"
இதய வானிலே இன்ப கனவு கோடியே ... கனவு கோடியே
உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே ... ஆடும் போதிலே"
எப்போது கேட்டாலும் மகிழ்வு ஏற்படும்
#எம்.ஜி.ஆருக்காக இவர் பாடிய என நினைக்கிறேன்.
"மாசிலா உண்மைக்காதலே" மற்றும்
குலேபகாவலியில் "மயக்கும் மாலைப் பொழுதே நீ வா வா..இனிக்கும் இன்ப இரவே நீ வா
#தேன் உண்ணும் வண்டு மாமலரை கண்டு பாடல் இனிமை நிரம்பிய பாடல்
#சக பாடகியான ஜிக்கியை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த இசைத் தம்பதியர்தான் மும்பை சென்று இந்திப் படத்துக்காகப் பாடிய முதல் தென்னிந்தியப் பாடகர்கள். ராஜா சிங்களப் பாடல்களும் பாடியுள்ளார்.
#"காத்திருந்தேன் தனியே" பிரசாந்த் நடித்த ராசா மகன் திரைப்படத்துக்காக ஏ.எம்.ராஜா புதல்வர் சந்திரசேகரைப் பாடவைத்தார் இளையராஜா
#பஞ்சு அருணாசலம் இளைய ராஜாவின் திறமையை பார்த்து ராஜா (ராசய்யா) எனும் பெயரை ஏ.எம் ராஜாவிற்கு அடுத்து நீதான் எனும் நோக்கில் சூட்டிய பெயரே இளையராஜா. ராஜாவும் ஏ.எம் ராஜா இசைக்குழுவில் கிதார் வாசித்திருப்பது குறிப்பிடத்தக்கது
#நெல்லை அருகே ரயிலில் ஏற முயன்றபோது, எதிர்பாராவிதமாக கால் தவறி விழுந்து 59-வது வயதில் இசைஞனை இயற்கை அணைத்துக்கொண்டது.
#இதென்ன பழைய பாட்டை சிலாகிப்பதாக நினைக்காமல் இசைக்கு எல்லை ஏது.மனதை வருடும் மயிலிறகை கொண்டது ஏ.எம்.ராஜாவினுடையது.ஒரு முறை கேட்டுப்பாருங்க.
தோழமையுடன் மணிகண்டபிரபு