#Reading_Marathon2025
#25RM055
Book No:111/150+
Pages:-559
தென்புலத்து மன்பாதை
-தொ.பரமசிவன்
கற்றவர்களிடத்தில் பண்பாட்டுத்தளத்தில் இயங்குவதற்கு இயங்குகிறவர்களிடத்தில் தவ பரமசிவன் என்ற பெயர் மிகவும் பிரசித்திமானது சமயங்களின் அரசியலை பெரியாருடைய பார்வையில் பேசியவர் பெரியாரியத்தை நாட்டார் தெய்வங்களோடு இணைத்து விவாதித்தவர் அவருடைய கருத்துக்கள் என்றும் படிப்பவர்களை செழுமை படுத்தும் விதத்தில் எழுதுபவர் நிகழ்காலத்தில் ஒருத்த குரலில் தன்னுடைய கருத்துக்களை சொல்வதில் வலிமை மிக்கவர்.
இந்நூலில் 16 தலைப்புகளில் 84 கட்டுரைகள் அடங்கியுள்ளன
சங்க காலத்தைப் பற்றி சொல்லும்போது" ஒரு காலம் என்பது சமூகத்தில் அதுவரை நிலை பெற்ற கருத்துக்கள் செல்வாக்கிலிருந்து புதிய கருத்துக்கள் தோன்றி வளர்கின்ற கால அளவை குறிக்கும்" என்று கொள்ளலாம். இந்த அளவீட்டின் படி சங்க இலக்கியம் குறித்த மதிப்பீடு மற்றும் சமூக ஆய்வுகள் சங்க இலக்கியத்தில் சாதி அமைப்பின் மூலப்படிவங்கள் பற்றி இதில் கூறியுள்ளார்.
பண்பாடு குறித்த பல்வேறு கட்டுரைகள் இவர் எழுதியிருந்தாலும் இந்த புத்தகத்திலும் பண்பாடு குறித்த கட்டுரைகளில் நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. அது குறித்து மொகஞ்சதாரோ கால ஆய்வுகளில் இருந்து தற்காலத்தில் மனிதர்கள் குளிப்பது நீராடுதல் போன்ற பல்வேறு வகையான பண்பாட்டு நிகழ்வுகளை உதாரணத்துடன் கூறியுள்ளார். மேலும் பெண்கள் அணியும் தாலி கோலம் மாலை பண்பாட்டின் வாழ்வியல் போன்ற தலைப்புகளில் பண்டைய மனிதர்கள் கால வழக்கில் இருந்த சடங்குகள் சம்பிரதாயங்கள் எவ்வாறு தோன்றி இருக்கின்றன உருமாறி இருக்கின்றன என்பது பற்றி விரிவாக அலசி இருப்பார்.
பொதுவாக கோலமிடுவது இன்றும் வழக்கத்தில் உள்ள நடைமுறையாகும். தெய்வங்கள் கால் பதிப்பதற்காக போடப்படும் ஆசனங்கள் தான் கோலம். மண்ணில் அதைத்தான் போடுகிறார்கள். வீட்டுக்கு வரும் தெய்வம் அதிலே தான் கால் பதித்து வீட்டுக்குள் வருகிறது என்பது நம்பிக்கை. அதில் கலையின் அம்சமாக புள்ளிகளும் வளைகோடுகளும் இருக்கிறது.
தமிழ் நாட்டின் வரலாறு, மக்கள் பண்பாட்டு நினைவுகள், நம்பிக்கைகள், சடங்குகள், புராணங்கள்—இவை அனைத்தையும் ஆழமாக ஆராய்ந்து நமக்கு ஒவ்வொரு அத்தியாயத்திலும் சங்க இலக்கிய பாடல்கள் எடுத்துக்காட்டுகளுடனும் இதில் விளக்கியுள்ளார். கிராமியத்தின் வாழ்வியலில் இருந்து கிடைக்கும் பண்பாட்டு உணர்வையும் சமூகச் சிந்தனையையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது
தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குப் போன சொற்களில் ஒன்று (COOLIE) கூலி என்பதாகும். ஆக்ஸ்போர்டு அகராதி இந்தச் சொல்லிற்கு 'இந்திய, சீனத் தொழிலாளி' என்று பொருள் கொள்கின்றது. இந்தச் சொல் வழக்கு ஆங்கிலேயர்களால் இழிவாக வழங்கப்பட்டதுண்டு.
இந்தச் சொல்லின் வேர்ச்சொல் 'கூலம்' எனபதாகும். இதற்குத் 'தானியம்' என்பது பொருள். செய்கின்ற வேலைக்கு அன்றன்று தானியங்களை (கூலத்தை )ப் பெறுபவர் கூலியாவார்.கூலி என்ற சொல்லிற்கு மாற்றாக ஊதியம், சம்பளம் ஆகிய சொற்கள் பிற்காலத்தில் வழங்கப்பட்டன. சம்பளம் என்பது, சம்பா நெல்லும் அளத்து உப்பும், உழைப்புக்குப் பதிலாகப் பெற்றதைக் குறிக்கும் சொல்லாகும். பணப் பொருளாதாரம் பெரிதாக இல்லாமல் பண்டமாற்றுப் பொருளதாரம் நிலவிய வேளாண் சமூகக் காலத்தில் ஏழைத் தொழிலாளர் பெற்றதே 'கூலி'யாகும். பிற்காலத்தில் கூலி வேலை செய்யும் ஏழை மக்களைக் - குறிக்கவும் 'கூலி' என்ற சொல் பயன்பட்டது என்னும் வரலாற்று ஆய்வை நமக்கு எளிமையாக விளக்குகிறார்.
சோறு என்றவுடன் நமக்கு இன்று அரிசி சோறு மட்டும் புழக்கத்தில் உள்ளது. ஆனால் புஞ்சை நிலத்தில் வாழும் மக்கள் கம்பு சோளம் குதிரைவாலி ஆகிய தானியங்களையும் சோறு என்று அழைத்தனர். அரிசி என்னும் சொல்லும் நெல் அரிசி மட்டுமல்லாது அவித்து உண்ணும் சிறிய தானியங்கள் அனைத்தையும் குறிக்கும். அரியென்னும் வேர் சொல்லுக்கு சிறிய என்பது பொருள். அரி மணல் அரி நெல்லிக்காய் போன்று வெள்ளைப்பூண்டின் சிறிய கீற்றுகளையும் வெள்ளை பூண்டு அரிசி அன்று பெண்கள் கூறும் வழக்கம் உண்டு என்று கூறுகிறார்.
அண்மை காலங்களில் பெரியாரையும் பெரியாரையும் பற்றி பேசும்போது நாட்டார் தெய்வங்களை கொண்டாட முடிகின்றது அந்த கேள்வியை ஒருபுறம் சிந்தனை உணர்வோடு மறுபுறம் கேலியாகவும் கேட்கப்படுகிறது நான் எண்ணிப் பார்க்கிறோம் அதற்கான விடையை பெரியாரியலும் நாட்டார் தெய்வங்களும் என்னும் கட்டுரையில் விரிவாக இது பற்றி கூறியுள்ளார்.
இந்த புத்தகத்தின் அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் துறை சார்ந்து பகுக்கப்பட்டுள்ளது. கேள்வி பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கருத்தாழமிக்க தரவுகளை எப்போதும் நம்முடன் தொ.ப விவரிப்பார்.
சூழலியல் கட்டுரைகளின் சிலப்பதிகாரத்தில் இருந்து பல்வேறு தாவரங்களின் பெயர்களை குறிப்பிட்டு இருப்பது புத்தகங்களில் விரிவாக எடுத்துக் காட்டியுள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த புத்தகம் மொழி, பண்பாடு, மானுடவியல், விளிம்பு நிலை மக்கள், வழக்காறுகள், நாட்டார் தெய்வங்கள், பெரியார் என்னும் தளத்தில் வாசிப்பதற்கு மிக எளிமையாகவும் பொது அறிவு தகவல்கள் பலவற்றை தாங்கியும் அமைந்துள்ளது
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு