#கற்கை_நன்றே_179
சிறந்தவராக இருப்பதை விட தனித்துவமானவராக இருப்பதே மேல். சிறந்தவராக இருந்தால் நீங்கள் நம்பர் ஒன் ஆகத்தான் இருக்க முடியும். தனித்துவமாக இருந்தால் 'ஒன்லி ஒன்னாக' இருக்கலாம்
-ரவிக்குமார்
சமீபத்தில் நறுக்கு ஒன்று படித்தேன். புழுவாய் துடிக்கும் நெஞ்சம் எப்போது?
ஒரு புழுவை காலால் நசுக்கித் தேய்க்கும் போதுதான் என்று இருந்தது.வன்மமும் எரிச்சலும் தான் புழுவை நாம் கொன்றிடத் தூண்டுகிறது.கோபமும் அது போல் தான். நமக்கு கீழானவர்களிடம் அதிகம் வருகிறது.அதனை அந்த நேரத்தில் கட்டுப்படுத்த தான் அதிகம் பயிற்சி தேவைப்படுகிறது.
ஜப்பானில் ஒருவருக்கு கோபம் ஏற்பட்டால் அவர்கள் ஒரு மரபு ரீதியான வழிமுறையை வைத்திருக்கிறார்கள். யாருக்காவது கோபம் ஏற்பட்டால் உடனடியாக அவர் கோபமல்லாத ஏதாவது ஒரு செயலை செய்தாக வேண்டும். அப்போது, இதுவரை கோபத்துக்குள் சென்று கொண்டிருந்த அதே ஆற்றலானது இப்போது கோபமின்மைக்கு செல்கிறது.
ஆற்றல் நடுநிலையானது. ஒருவர் மீது உங்களுக்கு கோபம் வந்தால், அவரை நீங்கள் அறைய விரும்பினால், அவருக்கு ஒரு பூவைக் கொடுத்து என்ன நிகழ்கிறது என்பதை பாருங்கள்.அதே போல் மற்ற உதாரணம் ஒன்று..
விலையுயர்ந்த மூன்று பீங்கான் ஜாடிகள் மன்னரிடம் இருந்தன. அரண்மனை பணியாளர் ஒருவர் அதை சுத்தம் செய்யும் போது உடைத்து விடுகிறார். கோபம் கொண்ட மன்னன் அவருக்கு மரண தண்டனை விதிக்கிறார்..
உனது கடைசி ஆசை என்ன என்று கேட்கும் போது மீதமுள்ள இரண்டு ஜாடிகளை இப்போது பார்க்க வேண்டும் என்று கூறிவிட்டு அதனையும் உடைத்து விடுகிறார். ஏன் இப்படி செய்தாய்? என்று கேட்டார் மன்னர். உடைந்து போகிற ஜாடிக்காக மனித உயிரை எடுக்கச் சொன்ன உங்களை என்னால் ஒன்றும் செய்ய முடியாது.
இவ்வாறு உடைப்பதன் மூலம் குறைந்தபட்சம் இரு உயிர்களை காப்பாற்ற முடியுமே அதனால்
இப்படி செய்தேன் என்கிறார். தனது தவறை உணர்ந்து தீர்ப்பை திருத்தி அவரை விடுவித்தார்.
கோபம் கொள்வது
எந்த மனிதனும் செய்யக்கூடிய
மிக எளிதான செயல்தான்.
ஆனால்,
சரியான நேரத்தில்,
சரியான நபரிடம்,
சரியான காரணத்திற்காக
கோபப்படுவது
எளிதான செயல் அல்ல...!!
என்கிறார் அரிஸ்டாட்டில்
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு