Thursday, 30 April 2020

RIP-RishiKapoor

1977 தேர்தல் நேரம். இந்திராகாந்திக்கு எதிராக ஜெய்பிரகாஷ் நாராயணன் உச்ச பட்ச பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அதனை தடுக்க அரசின் டிவி சேனலில் "பாபி" படத்தை ஒளிபரப்பியது.ஆனாலும் பத்து லட்சம் பேர் திரண்டுவிட்டனர். பாபியை பாபுஜி வென்றுவிட்டார் என ஊடகம் கூறியது.

#info
#RishiKapoor

Tuesday, 28 April 2020

29-4-20

உளி பழக செதுக்குகிறேன்
சிலை காண அல்ல.
~~~~
ஒரே மூச்சில் போய்
சேர்ந்திருக்கலாம்
பெருமூச்சில்
தூரத்தை 
அதிகமாக்கி விட்டீர்கள்.
~~~
கடந்து வந்த தூரம்
கடக்க வேண்டிய 
தூரத்தைக்
குறைத்துக்கொண்டே 
வருகிறது.
~~~
யாரோ தள்ளி 
யாரோ விழுவதைப்போல
உங்கள் வீழ்ச்சியை
பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்.
~~~
நீந்தி தேடுகிறது 
நதி
குளித்துப்போனவளின்
தடத்தை.
~~~~
வேலை முடித்தாயிற்று
யாரும் எழுப்ப மாட்டார்கள்,
என்று படுத்தேன்
அடுத்த வேலை எழுப்பிவிட்டது.

~~~~
கவனம் பெறும் ஒன்றை
நாம் செய்ய வேண்டும்
என்பதை விட
நாம் செய்யும் ஒன்று
கவனம் பெற வேண்டும்
என்பது சக்தி வாய்ந்தது.

~~~~
எழேத்தின் ருசியை
விட்டுவிட்டு
பிழையின் கசப்பை
அருந்துகிறீர்கள்.

~ராஜா சந்திரசேகர்



#தனித்து வரும்போது-கெட்ட
தறுதலை கண் வைத்தால்
இனிக்க நலம் கூறு-பெண்ணே
இல்லாவிடில் தாக்கு..

உமியல்ல பெண்ணின் வலக்கை-தீயோர்
உயிரை இடிக்கும் உலக்கை

-பாரதிதாசன்



#கடும்புதர் விலக்கிச் சென்று
களாப் பழம் சேர்ப்பார் போல

நெடும்புவி மக்கட்கான
நினைப்பினிற் சென்று

பலப்பல நுணுக்கம் சேர்ப்பார்
படித்தவர் அவற்றையெல்லாம்

கொடும் என அள்ளி உன் தாள்
கொண்டார்க்குக் கொண்டு போவாய்

-பாரதிதாசன்

(அதாவது படித்து அறிந்த அனுபவங்களை ஷேர் செய்யுங்கள் னு சொல்றார்)


 No man is a hero to his wife

நீங்க எல்லாருக்கும் ஹீரோவாக தெரியலாம்..ஆனால் உங்கள் மனைவிக்கு அல்ல

யுகபாரதி

"போக்குவரத்து நெரிசலுக்கிடையே 
நீந்தும் வாகனத்தில் 
நானும் ஒருவனாக  அமர்ந்திருந்தேன்.

ஒருவரை ஒருவர் 
அதீத வெறுப்போடும் 
அந்நியத்தோடும் பார்த்துக்கொண்டனர்.

சனப்பெருக்கத்துக்கு 
யார் யாரெல்லாம் காரணமென்று 
வசைப்பாடத் தொடங்கினர்.

அரசு ஏன் இதற்கெல்லாம் 
வழிவகை செய்வதில்லை என்றும் 
யாவும் ஊழல் மலிந்ததன் 
உபாதை என்றும்  பொருமினர்.

வஞ்சிக்கும் அதிகாரிகளை 
வாரித் தூற்றி வயிறெரிய 
சபித்தனர்.

பெரும் இரைச்சலுக்குப்பின் 
மெல்ல நகரத் தொடங்கின வாகனங்களும் 
மக்களிடமிருந்த கோபங்களும்..!"  


- யுகபாரதி.

Saturday, 25 April 2020

கற்றதும் பெற்றதும்-91*மணி

கற்றதும் பெற்றதும்-91
*மணி

மு.வ எனும் இலக்கிய முன்னோடி

எளிமையை பற்றி பேசவும் எழுதவும் தாம் தயங்குவதில்லை,ஆனால் அப்படி வாழத்தான் தயங்குகிறோம் என்பார் மு.வ எனும் மு.வரதராசன். அவரின் எழுத்துகளும் என்றும் எளிமையானது.நேர்மறையான எண்ணத்தினை விதைத்தவர்.

#குறட்டை ஒலி

பள்ளிப்பருவத்தில் துணைப்பாட சிறுகதைகளை படிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.அப்போது படித்த இவரின் சிறுகதையான குறட்டை ஒலியை மறக்க முடியாது. எல்லா கதைகளும் கதைமாந்தர்தான் சொல்லுவார். அவ்வகையில் இதில் மேல்மாடியில் இருக்கும் ஹாவுஸ் ஓனர்தான் கதை சொல்கிறார்.

வாடகைவீட்டில் வசிக்கும் ஒரு குடும்பத்தில் நாய் ஒன்றை வளர்க்கின்றனர்.அது குட்டி ஈன்றவுடன் நகராட்சி அதிகாரிகள் அந்த நாயை பிடித்து சென்றுவிடுகின்றனர்.தாயை பிரிந்த குட்டிகளை தேற்றுகின்றனர். இறுதியில் ஒரு குட்டி மட்டும் பசியால் கத்திக்கொண்டே இருக்கிறது.இறுதியில் அந்த தாய் தன் தாய்ப்பாலை பீய்ச்சி ஒரு தொட்டியில் அந்தக்குட்டிக்கு கொடுக்கிறார்.அதை படிக்கும்போது படிக்கிறவர்களின் நெஞ்சமும் கொஞ்சம் கலங்கிவிடும்.இப்போது அந்த மேல்மாடியில் குறட்டை ஒலி சத்தம் கேட்டது என முடித்திருப்பார். இதுதான் அவரின் கதைகளை தேடி வாசிக்க தூண்டுகோலாய் அமைந்தது.

#கல்வி

துவக்கக் கல்வியை வேலத்தில் நிறைவு செய்த வரதராசன், உயர்நிலைக் கல்வியைத் திருப்பத்தூரில் பயின்றார்.முருகைய முதலியார் என்பவரிடம் முறையாகத் தமிழ் பயின்றார். 1935ல் வித்வான் தேர்வு எழுதி மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். இதற்காகத் திருப்பனந்தாள் மடம் வழங்கிய பரிசுத்தொகை ரூபாய் ஆயிரத்தைப் பெற்றார். தொடர்ந்து திருப்பத்தூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணிபுரிந்து பின்  பி.ஓ.எல். பட்டம் பெற்றார்.  இவரது முதல் நூல் 'குழந்தைப் பாட்டுக்கள்' 1939ல் வெளியானது.

1944ல் "தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்" என்ற தலைப்பில் ஆராய்ந்து எம்.ஓ.எல். பட்டமும் "சங்க இலக்கியத்தில் இயற்கை" என்ற தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழத்தின் முதல் முனைவர் பட்டம் பெற்றார்.

#படைப்புகள்

1946-ஆம் ஆண்டு மு.வரதராசன் எழுதிய முதல் நாவல் "செந்தாமரை". 13 நாவல்களையும், நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதினார். 1958-இல்   வெளிவந்த  "அகல்விளக்கு' 1961-ஆம் ஆண்டு  சாகித்ய அகாதெமி  விருது பெற்றது.  மு.வ. எழுதிய  "தமிழ் இலக்கிய வரலாறு' முக்கியமான படைப்பாகும்.

 தம் கருத்துக்களை "தம்பிக்கு" என கடிதமாய் எழுதினார். அவ்வகையில் அண்ணாவுக்கு முன்னோடியாய் விளங்கினார்.

#கதையின் தலைப்பு

ஒரு கதைக்கு பொருத்தமான தலைப்பு கிடைப்பது அபூர்வம். ஆனால் மு.வ அவர்களின் எல்லா கதைகளும் தலைப்புக்கு ஏற்ற வகையில் இருக்கும். ஒரு பெண்ணை கள்ளாக பார்த்தலும் காவியமாய் பார்த்தலும் நம் கண்கள் தான் எனும் வகையில் கள்ளோ காவியமோ..

சிறுவயதில் செய்த தவறை நினைத்து வருந்துவதை நெஞ்சில் ஒரு முள் புதினத்திலும், ஒரு குடிசையில் எலிகளுக்கு மத்தியில் வாழ்வதை போலத்தான் பிரச்சனைகளுக்கு இடையில் மனிதர்கள் வாழ வேண்டும் என மண் குடிசையிலும்,இலக்கியம் கூறும் களவு மற்றும் காதலை அடிப்படையாகக் கொண்ட பாவையிலும்,அணையும் விளக்கு பிரகாசமாய் எரிவதை அகல் விளக்கிலும் சுட்டிக்காட்டியிருப்பார்.

 #திருக்குறள்

கல்லூரியில் திருக்குறள் பாடம் எடுக்க வேண்டி இருந்தால் முன் தயாரிப்பு இல்லாமல் வகுப்பினுள் நுழையமாட்டாராம்.பரிமேழகர் உரைக்குப் பின் மு.வ வின் உரையே சிறப்பானதாக எளிமையானதாக இன்றளவும் கருதப்படுகிறது.

ஒரு முறை தன் நாவல் திருத்தப் பணியில் மா.ர.பொ.குருசாமி உள்ளிட்ட மாணவர்கள் அவர் நாவல் அச்சேற உதவினர்.அப்போது மா.ர போ அவர்கள் முகப்பு அட்டையில் தம் ஆசிரியர் பெயரை மு.வ என சுருக்கி அச்சிற்கு அனுப்பிவிட்டாராம். அச்சில் வந்த நூல்களை கண்ட மு.வ முதலில் அதிர்ச்சியடைந்து பின் ஏற்றுக்கொண்டதாக மா.ர.பொ ஒரு முறை நினைவுகூர்ந்தார்.

#பணிகள்

ஒரு எழுத்தராய்,ஆசிரியராய் பணியை துவக்கிய மு.வ பின் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் ஆனார்.1961ல் சென்னை பல்கலையில் தமிழ்த்துறை தலைவரானார்.1971ல் மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தரானார்.1972ல் அமெரிக்காவில் உள்ள ஊஸ்டர் கல்லூரி இவரது தமிழ்ப் பணிக்காக டி.லிட். பட்டம் வழங்கிக் கௌரவித்தது. 

#ரசித்தவை

*கரிய பெரிய மேகம் ஒன்று திங்களை விழுங்கி இறுமாந்து நிற்கிறது.அந்த ஏழைத்திங்கள் அந்நிலையிலும் தன்னாலான ஒளியை உலகிற்கு அளிக்கவே செய்கிறது

*தெளிவாய் உணர்ந்து,முற்போக்காய் வாழ்ந்தால் சுற்றுப்புறம் வெறுக்கிறது.மந்தையோடு ஒன்றாய் கலந்து கண் மூடித்தனமாய் வாழ்ந்தால் மதிக்கிறது

*பாதை போட்டவர்களை பயணிப்பவர் நினைக்க வைப்பது வரலாறு

*பிறர் சுமையை சுமக்க ஆசைப்படாதீர்கள்,
உங்கள் புகழை மற்றவர் சுமக்கும் அளவுக்கு நீங்கள் வளர முயற்சி செய்யுங்கள்

*எத்தனை வள்ளல்கள் வாழ்ந்தும் வறுமையை ஒழிக்க முடியவில்லை. ஒரு நல்ல அரசாங்கம் ஏற்பட்டால் வள்ளல்கள் தேவை இல்லை.

*ஜாதியை ஒழிக்க முடியாது.,
புறக்கணிக்க கற்றுக் கொள்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Friday, 24 April 2020

25-4-20

செய்வதையே திரும்பத் திரும்ப செய்துவிட்டு விளைவுகளை மட்டும் வேறுவேறாகக் கற்பனை செய்யாதீர்கள்

-ஐன்ஸ்டீன்



[25/04, 7:43 am] மணிகண்ட பிரபு: இந்த உலகத்தில் சரஸ்வதி கடாட்சம் பெறாத குழந்தை என்று யாரும் இல்லை

-சுந்தர ராமசாமி



[25/04, 7:46 am] மணிகண்ட பிரபு: ஒரு மரணம் என்பது துக்கம். ஆயிரம் மரணங்கள் என்பது கணக்கு.அவ்வளவே"
[25/04, 7:48 am] மணிகண்ட பிரபு: 


குழந்தைகளுக்கு வாழ்க்கைல நாம நிறைய சொல்லி தர்றோம்..
ஆனா குழந்தைங்க தான் நமக்கு வாழ்க்கையை சொல்லித் தர்றாங்க.. 

-ராதாமோகன்
[25/04, 7:53 am] மணிகண்ட பிரபு: 


கனவுகள் கூடிவரும்போது
விழிப்பு அதனை
கலைத்துப் போடுகிறது

-கலீல் ஜிப்ரான்

24-4-20

[24/04, 7:34 am] மணிகண்ட பிரபு: நூறு பூ தாங்க
எனக் கேட்கும்
குழந்தைக்கு 
எண்ணாமல் 
பத்துக் கண்ணிகள்
அதிகமாய் விட்டு
நறுக்கித் தரும்
பெண்ணுக்காகப்
பெய்கிறது மழை

-கலாப்ரியா



[24/04, 7:44 am] மணிகண்ட பிரபு: மகிழ்ச்சியான குடும்பங்கள் எல்லாம் ஒன்றுபோலவே உள்ளன.சண்டை போட்டுக்கொள்ளும் குடும்பங்களோ விதவிதமான காரணங்களாக சண்டை போட்டுக்கொள்கின்றன

-டால்ஸ்டாய்
[24/04, 7:48 am] மணிகண்ட பிரபு: 



தோசை தெய்வம்

தோசை என்ன ருசி என்று கேட்டால்
என்ன சொல்ல முடியும்?
என் பாட்டி சுட்ட தோசையா?
என் அம்மா சுட்ட தோசையா?
வெளியூர் பஸ் வழியில் நிறுத்தியபோது
அங்கே சாப்பிட்ட தோசையா?
தோசை என்ன ருசி என்று கேட்டால்
என்ன சொல்ல முடியும்?
அந்தந்த தோசையில் உள்ள ருசியை
அடுத்த தோசையில் தேடுதல் பெரும் பிழை.
ஒவ்வொரு அவதாரத்திலும்
ஒவ்வொரு குணம்.
இரண்டும் ஒரே ருசி என்று
எப்போதும் சொல்லாதே.
தோசை தெய்வம் கோபித்துக்கொள்ளும்.

-படித்தது

Thursday, 23 April 2020

கற்றதும் பெற்றதும்’ – சுஜாதா

யாரும் நம் தின வாழ்க்கையில் உள்ள 'டாப் 10' பொய்களைச் சேகரித்ததாகத் தெரியவில்லை. இதோ அந்தப் பட்டியல்! எந்தச் சூழ்நிலையில், இந்தப் பொய்கள் சொல்லப்படுகின்றன என்பதை விகடன் வாசகர்கள் சுலபமாக யூகிக்கலாம்.

1. அனுப்பிச்சாச்சே... இன்னும் வந்து சேரலையா?
2. இந்தப் புடவைல நீ பருமனாவே தெரியலை!
3. இப்படித் தலை வாரினா, உங்களுக்கு நல்லா இருக்கு!
4. நாப்பது வயசுனு சொல்லவே முடியாது!
5. ஒரு தடவை கேட்டுட்டா, அப்படியே பாடிடுவா!
6. ஒரே ஒரு மார்க்ல போச்சு!
7. இந்த விருதை நான் எதிர்பார்க்கவே இல்லை.
8. உங்க நம்பர் என்கேஜ்டாவே இருந்தது!
9. நான் பொய் சொல்லவே மாட்டேன்.
10. ஏழ்மை நிச்சயம் ஒழிஞ்சுடும்!

இந்த 'டாப் 10' பொய்களில் விட்டுப்போன கீழ்வரும் வார்த்தைகளைச் சேர்த்தால், 'டாப் 10' நிஜங்கள்...

1. எத்தனைனு ஞாபகமில்லை.
2. விலையையே பார்த்துக்கிட்டு இருக்கேன்.
3. வழுக்கையை மறைக்கிறதால...
4. நாப்பத்தஞ்சு சொல்லலாம்.
5. அபஸ்வரமா!
6. நாலாவது தடவையும்.
7. எத்தனை பேரைப் பார்த்து, எத்தனை லஞ்சம் கொடுத்தேன்!
8. உங்க நம்பர் என்ன?
9. மௌன விரதத்தின்போது!
10. எப்பனு சொல்ல மாட்டேன்.

#கற்றதும் பெற்றதும்’ – சுஜாதா

Tuesday, 21 April 2020

யுகபாரதி

முப்போகமும்
முங்கித் திளைத்த
மகசூலால்
வைப்பதற்கு இடமற்ற
நிறை வாழ்வு

மினுக்கும், ஷோக்கும்
மேலோங்க
குதிரை வண்டிகளில்
சேக்காளி சகிதம்
கூத்தியாளை வாழவைக்க
கழுத்து நிரம்பிய
காசு பணத்தைக்
காமத்துக் கழித்த
கதைகள் கோடி

காவிரிப் பாசனம்
கரை புரண்டோட
வருஷம் முழுக்க
வற்றாத வாழ்க்கை

வருமானத்தை பத்தாயத்திற்குள்
பதுக்கின ஜமீன் குடில்கள்

இஷ்டத்துக்கு இறைத்த கேணி
ஊற்றுக்கண் அடைபட
பூசிய சாயம் பொய்யென்றாகக்
கதியானதோ கந்தல் துணி
கக்கடைசியில்

சோறுடைத்த சோழநாடு
சோத்துக்கில்லாமல்
பக்கத்தூர் பனியன் கம்பெனிகளில்

-யுகபாரதி

பொய்

பொய்

“பழைய சேலை கேட்டு ஒருத்தி
வாசலுக்கு வெளியே நிற்கிறாள்.
கூடுதல் அனுதாபத்திற்காக
எல்லாம் வெள்ளத்தில் போய்விட்டதாக
ஒரு பொய் சொல்கிறாள்.

வாசலுக்கு உட்புறம் இருப்பவர்கள்
இன்னொரு தடவை வந்தால்
தருவதாகச் சொல்கிறார்கள்.
தங்கள் கருணையை மெய்ப்பிக்க
இப்போதுதான் அனாதை விடுதிக்குக்
கொடுத்தோம் என்று
ஒரு பொய் சொல்கிறார்கள்.

அந்தப் பக்கம் ஒரு பொய்யும்
இந்தப் பக்கம் ஒரு பொய்யுமாக
அசையாமல் இருக்கிறது வாசல் கதவு
உண்மையின் துருப்பிடித்த மௌனத்துடன்..!”

- வண்ணதாசன்.

Monday, 20 April 2020

Add

விளம்பரங்களின் தந்தை என அழைக்கப்படுபவர் Edward luis bernay. உளவியலாளர் ப்ராய்டின் அத்தைமகன்.
'எல்லாவற்றையும் கவர்ச்சியே தீர்மானிக்கிறது'எனும் ப்ராய்டின் தாக்கத்தால் தன் முதல் விளம்பரத்தை கவர்ச்சியுடன் எடுத்திருந்தார்.

அதன்பின் சோப்,உள்ளாடை&சம்பந்தமே இல்லாத கார்,பெயின்ட் என எல்லாமே இதே பாணியில் எடுத்தார்.இது இன்றுவரை தொடவது குறிப்பிடத்தக்கது.

Saturday, 18 April 2020

Vikrithi (மலையாளம்)*மணி



எந்த எதிர்பார்ப்போ பெரிய நடிகரோ இல்லை.ஆனால் ஒரு ஃபீல் குட் மூவி. ஒரு உண்மை சம்பவத்தை மிக அழகாக நேர்த்தியாக சொல்லும் படம்.பெரிய திருப்புமுனை எதுவுமின்றி சிறிய விஷயம் எப்படி பெரிய விஷயமாய் உருவெடுக்கிறது என்பதே கதை.

#கதை

வாய்பேச முடியாத தம்பதிகளாக ட்ரைவிங் லைசென்ஸ் புகழ் சூரஜ்ஜும் அவர் மனைவியும். சூரஜ் ஒரு பள்ளியில் லைப்ரரியன்.அவர் மனைவி ஒரு தையல் வேலை செய்யும் தொழிலாளி.ஒரு கால்பந்து வீரரான மகன் மற்றும் தங்கை.அமைதியாய் செல்லும் வாழ்க்கை

அதே ஊரில் துபாயிலிருந்து வரும் செளபின்.மிடில் க்ளாஸ் முஸ்லிம் குடும்பம்.அவன் தங்கையோடு பிடித்த பெண்ணை காதலித்து கைப்பிடிக்க நாள் குறிக்கப்படுகிறது.

ஒருநாள் சூரஜ்ஜின் மகளுக்கு காய்ச்சல். மருத்துவமனை ஐசியூவில் அனுமதிக்கப்படுகிறார்.2 நாள் முழுக்க இரவும் பகலும் கவனித்துக் கொள்கிறார் சூரஜ்.மனைவியை விட்டுவிட்டு வீட்டுக்கு மெட்ரோவில் செல்லும்போது அசதியில் நீட்டி படுத்துவிடுகிறார்.அப்போது அதே ரயிலில் வரும் செளபின் அவரை போட்டோ எடுத்து குடிகாரன் என முகநூலில் பகிர அது சூரஜ்ஜின் வாழ்விலும் குடும்பத்திலும் ஏற்படும் குழப்பம் தான் கதை.இது தவறென தெரியவர செளபீனின் மன உளைச்சல், அவனை கைது செய்ய வரும் காவல்துறை அதிகாரி,இறுதியில் ஒரு நெகிழ்வான நிகழ்வுடன் படம் முடிகிறது.

#சூரஜ்

ஒருகை ஓசை, மொழி  படத்துக்குப் பின் ஒரு வாய் பேச முடியாத கதாநாயகன்.ரொம்ப உணர்வு பூர்வமாக இயல்பாய் அவரின் உடல்மொழி உள்ளது.தான் குடிக்கவில்லை என கதறும்போதும், மகனிடம் அதை உணரவைக்கும் போதும் நம் மனசையும் கரைத்துவிடுகிறார் சூரஜ்.

முகநூலை அன் இன்ஸ்டால் செய்வது,செய்ததவறுக்கு மருகுவது, மீண்டும் வெளிநாடு செல்ல திட்டமிடுவது,மன்னிப்பு கேட்க மன்றாடுவது, இறுதிகாட்சியில் பீதி என  பக்கத்து வீட்டுக்காரராய் தெரிகிறார் செளபீன்.

#டின்ஜ்

*பொருத்தமான இடங்களில் வரும் மான்ட்கேஜ் சாங் கச்சிதம்

*படம் மெதுவாகத்தான் நகரும் ஆனால் ரசிக்கும் விதத்தில்

* வாய் பேச முடியாதவர் மனைவியும் அவ்வாறு இருப்பது நடைமுறை இயல்பாய் இருக்கிறது.பரிதாபம் வருகிறது.

*தந்தைக்காக கோபப்படுவதும்,
அந்த இயலாமையை தந்தையிடம் காட்டுவதும்,காவல் நிலையத்தில் ஆக்ரோஷமாகவும் மகன் வாழ்ந்திருக்கிறார்.இறுதியில் தன் தந்தை குடிகாரனில்லை எனவும் சமூக வலைதளத்தில் பகிர்கிறார்..தந்தையை விட்டுக்கொடுக்காமல்

*படத்தின் இறுதிக்காட்சி தான் மைல்கல்.பொழுதுபோக்கிற்கு ஒரு போட்டோ எடுத்து லைக்கிற்காக பகிர,
பாதிக்கப்பட்ட சூரஜ் அந்த கோபத்தில் அவரின்  குடும்பத்தை சந்திக்கும் போது அதை தன் நடிப்பால் உணர்வு பூர்வமாய் நம்மையும் உணர வைப்பார்.அட்டகாசம் சாரே.

ஒரு நல்ல எதார்த்த படம். பார்க்கலாம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Friday, 17 April 2020

MANI


வீட்டிலிருந்து பார்
*மணி

உன்னைச் சுற்றி
பல்பு எரியும்...
வீடு அர்த்தப்படும்...
பகலின் நீளம்
விளங்கும்.

குளிக்காமல் உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும் கலங்கும்

நொறுக்கித் தின்றால்
நூறு வயது-நீ
நொறுங்குத் தீனி தின்றே
நூறு கிலோவாவாய்

வீட்டிலிருந்து பார் !

காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமாகும்
வருஷங்கள் யுகங்களாகும்

அண்டை வீட்டுக்காரன் கூட
அணுக பயப்படுவான்
எதிர்வீட்டுக்காரன் 
எச்சரிக்கையோடு பார்ப்பான் 

காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...
நீ தும்மினால்
 உலகமே ஒருமுறை
உன்னை கவனிக்கும்

செல்போன் ஒன்று உன்
கையிலிருக்கும் அல்லது 
சார்ஜில் இருக்கும்

வீட்டிலிருந்து பார்!

அடிக்கடி செய்தி பார்ப்பாய்
இறப்பு எத்தனை
என கணக்கிடுவாய்
இன்று பிழைத்து விட்டோம்
என இறுமாப்பு கொள்வாய்

ஓயாமல் யாரிடமாவது 
போனில் பேசுவாய்
கதறி அழும் தொலைக்காட்சிக்கு
கருணை காட்ட மாட்டாய்

வீட்டிலிருந்து பார்!

சும்மாதான இருக்கீங்க
எனப் பேசியே
வீட்டுவேலை வாங்குவார்கள்
அடிக்கடி கடைக்கு போய்வர
தாங்குவார்கள்

அழுக்குத்துணி குறையும்
அழுக்குப் பாத்திரம் நிறையும்

எப்படா விடியும்
எப்படா முடியும்
எனத் தோன்றும்

வீட்டிலிருந்து பார்!

-மணிகண்ட பிரபு

lock down article-chezhian


சிறப்புக் கட்டுரை: தனித்திரு



செழியன்

‘வெளியில் வராதீர்கள். வீட்டிலேயே இருங்கள். யாரையும் வீட்டுக்குள் விடாதீர்கள்’ - கற்பனையில் கூட இப்படி ஒரு சூழல் வருமென்று நாம் யாரும் நினைத்திருக்க முடியாது. சார்த்தர் எழுதிய ‘மீள முடியுமா?’ என்ற நூலில் ஒரு வரி வருகிறது - ‘நரகம் என்பது மற்றவர்கள்தான்.’

பொருளாதாரம் வீழ்ந்துவிட்டது. சொந்த நாட்டின் மக்கள் அகதிகள் போல நடந்தே ஊருக்குத் திரும்புகிறார்கள். வழியில் பசியால் நூற்றுக்கு மேற்பட்டோர் இறந்து போகிறார்கள். பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு மிகப்பெரிய இடப்பெயர்வு. உலகத்தையே தலைகீழாகக் கவிழ்த்தியது போல மாற்றங்கள் நிகழ்கின்றன. இன்னும் நாம் கற்பனையே செய்ய முடியாத அரசியல் மாற்றங்கள் உலகில் நிகழப்போகின்றன.

இந்த க‌ஷ்டகாலத்திலும் நிறைய நல்ல விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. நாயக பிம்பங்கள், வேஷங்கள், பொய்கள் எல்லாம் கலைகின்றன. கங்கை நதி குடிநீராக மாறுகிறது. சூழல் மாசு கட்டுக்குள் வந்திருக்கிறது. மதியம் கிளிகளின் சத்தம் கேட்கிறது. இந்த ஏப்ரல் மாத இரவில் சென்னை லேசாகக் குளிர்கிறது.

தீவிரமான நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாகின்றன. கடவுள் நம்பிக்கை கொண்ட ஒரு நண்பர் ‘கடவுள் இருக்கிறாரா என்ற சந்தேகம் வருகிறது‘ என்கிறார். ‘நீங்கள் எல்லாருமே திருடர்கள். எனவே யாரும் என்னைப் பார்க்க வராதீர்கள்’ என்று கடவுளே தன் வழிபாட்டுத்தலங்களைப் பூட்டச் சொல்லிவிட்டார் என்கிறார் ஒரு முதியவர்.



இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால், நாடுகளின் பெயரால், சாதிகளின் பெயரால் நாம் கொண்டிருந்த பெருமைகள் எதுவும் நம்மைக் காப்பாற்றாது. விஞ்ஞானத்திலும், மருத்துவத்திலும் நாம் செய்த கண்டுபிடிப்புகளையெல்லாம் பார்த்து இயற்கை புன்னகைக்கிறது. வல்லரசுகளே தடுமாறுகின்றன. தனித்திருப்பதைத் தவிர தப்பிக்கும் வழிகள் இல்லை.

இந்த வருடம் அமோகமாக இருக்கும் என்ற சோதிடக் கணிப்புகள்தான் இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவை. முடியாது என்று நினைத்த விஷயங்களில் ஒன்று டாஸ்மாக்கை மூடுவது. இன்னொன்று தொலைக்காட்சித் தொடர்களை நிறுத்துவது. இரண்டுமே நடந்துவிட்டது. கவனித்துப் பார்த்தால் நம் இயல்புக்குப் பொருந்தாத எல்லாம் விடை பெறுகின்றன.

மண்டபங்கள் வரும் வரை நம் திருமணங்கள் வீட்டில் நடந்தன. இப்போது திருமணங்கள் எந்த புரோகிதமும் இல்லாமல் திரும்பவும் வீட்டுக்கே வந்துவிட்டன. கர்ப்பிணிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அத்தனை டெஸ்ட்டுகள், ஸ்கேன்கள் எடுக்க வேண்டுமென்பது கட்டாயம் என்று வலியுறுத்தும் மருத்துவர்கள் இப்போது அதெல்லாம் தேவையில்லை. வீட்டிலேயே இருங்கள் என்கிறார்கள். தொற்றுக்காகத் தவிர்க்கப்படுகிறது என்றாலும் தவிர்க்கப்படுவதால் ஒன்றும் ஆகாது என்ற உண்மையும் அதில் இருக்கிறது.

கிராமத்திலிருந்து வந்தவர்கள் கிராமத்துக்கே திரும்பிவிட்டார்கள். ‘மகன் வெளிநாட்டில் இருக்கிறான்’ என்று ஒருமாதம் முன்புவரை பெருமையாக இருந்த இந்த விஷயம் இப்போது பெருமையாக இல்லை. மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தீவிரமாகப் பேசிய வாய்கள் அனைத்தையும் மாஸ்க் மூடிவிட்டது. மதம் பற்றிப் பேசியவர்கள் மலேரியா மாத்திரை குறித்தும் கபசுரக் குடிநீர் குறித்தும் பேசுகிறார்கள்.

துறை சார்ந்து அறம் தவறியவர்களாகப் பார்க்கப்பட்ட மருத்துவர்களும் காவலர்களும்தான் உயிரைப்பணயம் வைத்து முன் வரிசையில் நிற்கிறார்கள். அவர்கள் அதிகம் வராத செய்திகளில் இப்போது அவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். தேசத்தைக் காப்பதாக எப்போதும் பேசும் அரசியல்வாதிகள் அந்தச் செய்திகளைப் பார்த்துக்கொண்டு வீட்டில் இருக்கிறார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் சம்பளத்தில் முப்பது சதவிகிதம் கொடுத்தது செய்தியாகிறது. என்ன சம்பளம் என்று தெரியாத துப்புறவுத் தொழிலாளர்கள் வீடு வீடாகச் சென்று அழைப்பு மணி அடிக்கிறார்கள். வீட்டுக்குள்ளே இருந்து ஒரு குரல் கேட்கிறது. ‘யாரு?’ ‘குப்பை’. சமூக இடைவெளி மட்டும் எப்போதும் போல அப்படியேதான் இருக்கிறது.


ஸ்வீடனில் ஒருவர் தான் சேர்த்துவைத்த பணத்தை எல்லாம் வெளியில் வீசுகிறார். தெரு முழுக்கப் புரளும் பணத்தை எடுப்பதற்கு யாரும் இல்லை. உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? உங்களுக்கு எவ்வளவு பெரிய வீடு இருக்கிறது? நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள். பிரிட்டிஷ் பிரதமராக... ஹாலிவுட் நடிகராக... மருத்துவராகக் கூட இருங்கள். எதுவும் முக்கியம் இல்லை. உங்கள் உடலில் எவ்வளவு எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்பதுதான் முக்கியம்.

மதிப்புகள் அனைத்தும் மாறுகின்றன. பிரான்ஸில் 92 வயது மூதாட்டி நான் நன்றாக வாழ்ந்து விட்டேன்.போதும், அவரை வாழவையுங்கள் என்று தனக்குக் கொடுத்த வெண்டிலேட்டரை முப்பது வயது இளைஞருக்கு கொடுக்கச் சொல்லிவிட்டு நோயுடன் வீடு திரும்புகிறார். கண்கள் கலங்குகின்றன. வெண்டிலேட்டர் இல்லாத தேசத்தில் சொந்த மக்களைக் காப்பாற்றுவதற்காக எத்தனை அணு ஆயுதங்கள் யுத்த விமானங்கள்.

கைகளைச் சோப்புப் போட்டுக் கை கழுவுங்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். நைஜீரியாவின் மக்கள் நெருக்கம் மிகுந்த லாகோஸ் நகரில் ஒருமுறை சோப்பு போட்டுக் கைகழுவுவதுகூட ஆடம்பரம் என்கிறது செய்தி.

1,400 கிலோமீட்டர் தனியாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து ஒரு தாய் நகரத்தில் இருக்கும் தன் மகனை சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார். 65 வயதுக் கணவர் வலியால் துடிக்கும் தன் மனைவியை சைக்கிளில் வைத்து அழுத்தி கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். ஒரு தாய் நல்லதங்காள் போல தன் ஐந்து குழந்தைகளை கங்கையில் வீசுகிறாள். இவையெல்லாம் வெறும் காட்சிகள் அல்ல. வரும் ஆண்டுகளுக்கான குறியீடுகள்.

பெரும்பாலான நாடுகள் மூத்த குடிமக்களை கைவிட்டு விட்டது. உடல் நலம் சரியில்லை என்றால் எங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்ற நிலைக்கு அரசுகள் வந்துவிட்டது என்றால் இனி என்ன நடக்கும். அழுத்தம் தாளாமல் குக்கர் வெடிப்பது போல பல நாடுகளில் புரட்சி வெடிக்கப்போகிறது என்கிறது ஓர் ஆங்கிலக் கட்டுரை. திருக்குறளின் 56ஆவது அத்தியாயத்தை ஒருமுறை படித்துப் பாருங்கள்.

“உணவுப் பொருட்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஒழுங்காக உரிய நேரத்துக்குள் கையாளாமல் விட்டால் நாட்டில் பெரும் உணவுப்பஞ்சம் ஏற்படும். பஞ்சாபில் ஆயிரக்கணக்கான டன் கோதுமை அறுவடை செய்யப்படாமல் இருக்கிறது. அறுவடை செய்ய வேண்டுமெனில் பிகாரில் இருந்து தொழிலாளர்கள் வர வேண்டும். அறுவடை செய்ததை நிரப்ப மேற்கு வங்கத்தில் கோணிப்பை தொழிற்சாலை திறக்கப்பட வேண்டும். கோதுமை மூட்டைகளை நாடு எங்கும் கொண்டு செல்ல டிரக்குகள் வேண்டும். ஒரு டிரக் டிரைவர் நூறு ஊர்களைக் கடந்து செல்ல வேண்டும். எங்கெல்லாம் இறங்குவார்? தொற்று இருந்தால் என்ன நடக்கும்? ‘ஒன்றை ஒன்று வெகுவாகச் சார்ந்திருக்கும் இந்தியப் பொருளாதாரத்தில் உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாக அனுப்புவதுதான் எங்கள் முன் இருக்கும் மிகப்பெரிய சவால்’ என்கிறார் இந்தியக் குடிமையியல் அதிகாரி ஒருவர்.

‘உங்கள் வாழ்வில் நித்தியமானது மரணம் ஒன்றுதான். அதற்கு தயாராகாமல் நீங்கள் எதெதற்கோ தயாராகிறீர்களே ஏன்?’ என்று புத்தர் கேட்டதையே நோம் சாம்ஸ்கி ’பல வருடங்களாக கிருமி இருந்தும் மருந்து கண்டுபிடிக்காமல் அழகு க்ரீம்களைக் கண்டுபிடிப்பதில் ஏன் கவனம் செலுத்தினீர்கள்?’ என்று கேட்கிறார்.

இந்தக் கிருமியின் வளர்ச்சியைப் பற்றி உலகின் நவீன விஞ்ஞானமும், நவீன மருத்துவமும் யோசிக்காததன் காரணம் பல துறைகள் தனியார்வசம் போனதுதான் என்கிறது புள்ளிவிவரம். வாழ்வாதாரங்கள் இழந்து எல்லைகளில் நுழைகிற அகதிகளைக் கொன்று கொண்டிருந்தோம். இன்று எல்லைகள் அனைத்தும் கேலிக்குரியவனாகி விட்டன. அமெரிக்காவுக்கு வியட்நாம் மருந்து அனுப்புகிறது.

கதவில் இருக்கலாம். கைப்பிடியில் இருக்கலாம். செய்தித் தாளில் இருக்கலாம். பால் பாக்கெட்டில் இருக்கலாம். தும்மினால் மூன்று மணி நேரம் காற்றில் இருக்கலாம். ஒருமுறை இதன் சுற்று முடிந்தாலும் ஆறு மாதங்களில் இதன் மறு சுற்று ஆரம்பிக்கலாம். வதந்திகளும் செய்திகளும் கிருமியைவிட வேகமாகப் பரவுகின்றன. தொலைக்காட்சிக்கு நாள் முழுக்க பிரேக்கிங் நியூஸ். திகில் படத்துக்கான இசையுடன் மனிதர்கள் இறந்த செய்திகள்.

நல்ல வேளையாக இது பறவைகள் மூலம் பரவவில்லை. பறவைகள் மூலம் பரவினால் மனித குலம் பிழைத்திருப்பது கடினம் என்கிறார் ஒரு மருத்துவர். இப்போது வௌவால் மூலமும் பரவும் என்கிறார்கள். அமேசான் காட்டில் வசிக்கும் யனோமாமி பழங்குடியினருக்கும் தொற்று பரவிவிட்டது என்கிறது ஒரு செய்தி.

மருந்தில்லா கிருமிக்குப் பயந்து ஒட்டுமொத்த மனிதகுலமும் பயத்தில் இருக்கிறது. இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? வீட்டில் இருக்க வேண்டும். சீன அரசு எல்லாமே தந்தது. வீட்டுக்குள் இருந்தார்கள். இங்கு கூட்டம் கூட்டமாக வெளியில் வருகிறார்களே ஏன்? கிருமியை விடவும் பசியும் வேலையின்மையும் கொடுமையானது. கட்டுப்பாடுகளைக் கடுமையாகப் பின்பற்றிய சீனாவில் டிசம்பரில் தொடங்கிய ஊரடங்கை ஏப்ரலில்தான் தளர்த்தினார்கள். எனில் கடைவீதிகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் அலைமோதும் நம் தேசத்தில் இந்தத் தொற்று கட்டுக்குள் வர எத்தனை மாதங்கள் ஆகும்?

ஒரு நாள். பிறகு 21. பிறகு 19. பிறகு? இது தொடரும் நிலையில் என்னென்ன நூல்கள் படிக்கலாம், என்னென்ன திரைப்படம் பார்க்கலாம் என்று சமூக ஊடகங்களில் வருகிற பொழுதுபோக்குத் திட்டங்கள் எல்லாம் அர்த்தமற்றுப்போகும். முதல் வாரத்தில் கணவர்கள் படும் அவஸ்தைகள் குறித்து வந்த மீம்ஸ்கள் இப்போது குறைந்து விட்டன. குடும்ப வன்முறையும், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் குறித்த செய்திகள் அதிகம் வரத் தொடங்குகின்றன.

அடுத்த அத்தியாயத்தை இயற்கை எழுதிக் கொண்டிருக்கிறது. ‘ஆட்கள் வேலை செய்கிறார்கள். மாற்றுப் பாதையில் செல்க’ என்ற அறிவிப்பு சாலையில் இருப்பதைப்போல ‘இயற்கை வேலை செய்கிறது. நாம் மாற்று வழிகளை யோசிக்க வேண்டும். பரிணாம விதிகளில் பொருந்திப் பிழைத்திருக்கும் விதமாக வரும் ஆண்டுகளில் எல்லாமே மாறப்போகிறது என்பது மட்டும் சூசகமாகத் தெரிகிறது.

அச்சு ஊடகங்கள் விடை பெறலாம். மக்கள் கூடுகிற வழிபாட்டுத்தலங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் இன்னும் பல மாதங்களுக்கு மூடி இருக்கும் நிலை வரலாம்.

இதெல்லாம் முடிவுக்கு வரும்போது முதல் இரண்டு இடங்களுக்கு மக்கள் ஆர்வமாகத் திரும்புவார்கள். ஏனெனில் இந்த இரண்டு இடங்களிலும் மனித இடைவெளி சாத்தியம். மூன்றாவதான திரையரங்கு என்னாகும்? யாருமே காப்பாற்ற முடியாது என்ற நிலையில் பயத்துடன் இருந்தவர்களுக்கு அனைவரையும் காப்பாற்றும் நாயகர்களின் படங்கள் என்ன பொருள் தரும்? இணைய தளங்கள் வழியாக இத்தனை வாரங்கள் படங்கள் பார்த்துப் பழகியவர்கள் திரையரங்குக்குத் திரும்புவார்களா?

இரண்டாம் உலகப்போர் பற்றிய திரைப்படங்களைப் பார்க்கும்போது ‘அத்தியாவசியமான பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து உடனே வெளியேறுங்கள்’ என்று ஒரு அறிவிப்பு வரும். அதற்கு இணையான சூழல்தான் இப்போதும். முரண் என்னவெனில் அத்தியாவசியத்தோடு வீட்டுக்குள் இருங்கள் என்பதுதான். அன்றாட வாழ்க்கைக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை இயற்கை முன் மொழிந்துவிட்டது. தொழில்நுட்பம் அதை வழிமொழியப்போகிறது.

சமீப வருடங்களில் நுகர்வுக் கலாச்சாரத்துக்கு எதிராக மினிமலிஸம் என்ற ஒரு கருத்து உலகம் முழுக்கப் பரவி வருகிறது. ‘கடந்த ஒரு வருடத்தில் எதை நீங்கள் பயன்படுத்தவில்லையோ அது உங்களுக்கு எப்போதும் பயன்படாது. எனவே அதைத் தூக்கி எறியுங்கள். பொருட்களைத் துடைக்க, பொருட்களை ஒழுங்கு செய்ய என்று உங்கள் ஆயுளை பொருட்களிடம் செலவழிக்காதீர்கள்’ என்பதுதான் அந்தக் கோட்பாடு. ‘சிறுகக் கட்டி பெருக வாழ்’ என்று தமிழில் சொல்லப்பட்ட விஷயம்தான்.

இந்த மாதத்தில் எங்கள் வீட்டில் ஒரு பிறந்தநாள் வந்தது. நண்பர்களை அழைத்து, கேக் வெட்டி கொண்டாட்டமாக நடத்துவது சாத்தியமில்லை என்பதால் குழந்தைகள் வாழ்த்து அட்டையைக் கைகளால் வரைந்தார்கள். கேக் இல்லை. கூடி அமர்ந்து கைதட்டி வாழ்த்துச் சொன்னோம். முந்தைய பிறந்தநாட்கள் எல்லாம் நிழற்படங்களாக ஹார்டு டிரைவில் இருக்கின்றன. இந்தப் பிறந்தநாள் முழு வாழ்க்கைக்கும் மனத்தில் இருக்கும்.

பிறரைப் பார்த்து பிரதியெடுத்த போலியான கொண்டாட்டங்கள் அனைத்தும் விடை பெறுகின்றன. குப்பை உணவுகள் போய் வீட்டுச் சமையலில் கீரையும், மிளகு ரசமும் வந்துவிட்டது. நாகரிகம் என்ற பெயரில் நாம் மறந்த மரபுகள் அனைத்தையும் ஒரு கிருமி நமக்குத் திருப்பித் தந்துவிட்டது.

இத்தனை நாளும் பணத்தின் பின்னால், அதிகாரத்தின் பின்னால் பெருமைகளின் பின்னால் நீங்கள் ஓடிக்கொண்டிருந்தால் உங்கள் சக்கரங்களை நிறுத்துங்கள். உங்கள் அருகில் ஒரு குடும்பம் இருக்கிறது. அதில் குழந்தைகள் இருக்கிறார்கள். உங்கள் ஓட்டம் இவர்களுக்காகத்தான் எனில் அவர்களின் உண்மையான தேவை என்ன?

வெளியேறுவது என்பது கதவின் வழியாக மட்டும் அல்ல ஒரு நூலின் வழியாக, சமூக ஊடகம் வழியாக, திரைப்படத்தின் வழியாகவும் வெளியேற முடியும். எனவே தனித்திரு என்பதை வள்ளலாரின் பொருளில், விழிப்புடன் இருங்கள் என்பதை ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பொருளில், விலகி இருங்கள் என்பதை ஓஷோவின் அர்த்தத்தில் யோசிக்கும்போது இந்தத் தனிமையின் அர்த்தம் என்ன?

எதிர்மறை உணர்வுகளும், பயமும், அவ நம்பிக்கையும் சூழ்ந்த இந்தக் கடினமான நாட்கள் சீக்கிரமே முடிந்துவிடும். இதுபோல பல நூறு தொற்றுக்களைப் பார்த்த மனிதகுலம் ஆரோக்கியமாக மீண்டு எழுந்து வரும். எனவே இது மாதிரியான தனிமை உங்கள் வாழ் நாளில் திரும்பவரப் போவதில்லை. எனவே தனித்திருங்கள். பல வருடங்கள் கழித்து இதையெல்லாம் நம் சந்ததியினருக்கு ஒரு கதையாகச் சொல்ல முடியும்.

தொற்று தொடங்கிய முதல் வாரத்தில் எதிர்வீட்டில் ஒன்று நடந்தது. ஆண்டன் செகவ் பார்த்திருந்தால் ‘பால் பாக்கெட்’ என்று ஒரு சிறுகதை எழுதி இருப்பார். பக்கத்து ஃப்ளாட்காரர் முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு கதவில் இருக்கும் பால் பாக்கெட்டை கைபடாமல் ஒரு குச்சியின் உதவியால் எடுத்து எப்படி மஞ்சளும் உப்பும் கலந்த வாளியில் போட்டார் என்பதுதான் கதை. இதுபோல என் மனைவி இரண்டாவது மாடியிலிருந்து தக்காளி வாங்கிய கதையும் இருக்கிறது.

‘கடுமையான நெருக்கடிக்குள்தான் காமெடி இருக்கிறது’ என்று சாப்ளின் சொல்லுவார். நெருக்கடி மிகுந்த இந்த நாட்களை மன அழுத்தமில்லாமல் எளிதாகக் கடந்து வருவோம். இந்தச் சூழலில் நமக்குத்தேவை நம்பிக்கை. சக மனிதனுக்கு நம்பிக்கையையும் நம்மால் முடிந்ததையும் கொடுப்போம்.

ஸ்பார்டகஸ் நாடகத்தில் ‘மண்ணிலிருந்து வந்தேன். மண்ணுக்கே திரும்புகிறேன்’ என்று ஒரு வரிவரும். அதன் வெவ்வேறு அர்த்தங்களை யோசித்துப் பார்க்கிறேன். ‘நமக்கான உணவை நாமே உருவாக்கும் அளவுக்கு ஒரு தற்சார்புப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடிந்தால் போதும். எத்தகைய வீழ்ச்சியில் இருந்தும் நம்மால் மீண்டு எழுந்துவிட முடியும் என்கிற நம்மாழ்வாரின் இயற்கை விவசாயம் குறித்துப் படித்துக்கொண்டிருந்தேன்.

இந்தப் பேரிடரை முன்வைத்து தமிழரின் மரபு சார்ந்த வாழ்வை, விவசாயத்தை, மரபு சார்ந்த மருத்துவத்தை நாம் புதுப்பிக்க வேண்டும். நம் கலாச்சாரம் சார்ந்த எளிமையான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும்.

தனித்திருப்போம். கைகளைக் கழுவிக்கொண்டே இருப்போம். ஏனெனில் நம் கைகளில் கண்களுக்குத் தெரியாத கிருமிகள் இருக்கிறதோ இல்லையோ பல வருடங்களாக நாம் கொன்ற இயற்கையின் ரத்தம் கறையாக இருக்கிறது.

நன்றி: மின்னம்பலம் 

கட்டுரையாளர் குறிப்பு

செழியன், சர்வதேச விருதுகளும் தேசிய விருதும் பெற்ற திரைப்பட  இயக்குநர்,ஒளிப்பதிவாளர், எழுத்தாளர். உலக சினிமா தொகுதிகள் உள்ளிட்ட திரைப்படம், மேற்கத்திய இசை குறித்த இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.

Monday, 30 March 2020

31-3-20

[31/03, 7:34 am] மணிகண்ட பிரபு: இரவின் மெளனத்தை
பறவையின் முதல் குரல் 
கலைக்கிறது

-அ.வெண்ணிலா


வாழ்வின் மீதான பற்று ஒரு பக்கமும்,வாழ முடியாத நெருக்கடி மறுபக்கமும் எஸ்தர் சித்தியை ஊசலாடச் செய்கிறது..

-வண்ணநிலவன்


# என் முதல் பைக்கை
வாங்கிய போதுதான்
உலகின்
எல்லாச் சாலைகளும்
எனக்கும் சொந்தம்
என்பதை உணர்ந்தேன்!

-மகுடேசுவரன்

#இருளின் மெளனத்தில்
தேடியெடுத்த
தீப்பெட்டி நீ
[31/03, 10:46 am] மணிகண்ட பிரபு: 

இது உயிருக்கு வந்த சாவு அல்ல
சாவுக்கு வந்த உயிர்!
    - காசி ஆனந்தன்...

Thursday, 19 March 2020

valaipayuthe

Ayyappanum koshiyum

அய்யப்பனும் கோஷியும்
*மணி

ஒரு பட்டிமன்றம் பார்க்கும்போது இரு தரப்பு வாதமுமே தரமாய் தம் கருத்தை வைத்தால் இரண்டு டீமுமே ஜெயிக்கணும் னு நினைப்போம். நடுவரும் இது இல்லாமல் அது இல்லைனு முடித்து வைப்பார். அப்படி ஒரு படம் தான் இது.

#கதை

ஹீரோ 2 பேர். பிரித்வி&பிஜூ மேனன். பணக்கார வீட்டுப் பையன் பிரித்வி கார்ல தண்ணி அடித்துவிட்டு படுத்துகொண்டு வருவார். அந்தகாட்டுப் பாதையில் ஆல்கஹால் கொண்டு செல்வது குற்றம். செக்போஸ்ட் இன்ஸ்பெக்ஸர் பிஜூமேனன் ப்ரித்வியை கைது செய்து சிறையில் அடைக்கிறார் ஒரு 10 நாள். இதற்கு இடையில் தன் கன்னத்தில் அடித்த பிஜு  வை பழிவாங்க அவர் யதெச்சையாய் மது குப்பியை ஓபன் செய்வதை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர சஸ்பெண்ட் ஆகிறார்.இனி பழிவாங்க பிஜுவும், வெறி அடங்காத ப்ரித்வியும் மோதிக் கொள்ளும் படம் தான் அய்யப்பனும் கோஷியும்.

#பிரித்வி

பணக்கார பையனுக்குரிய திமிருடன், சிறு தோல்வியை கூட தாங்கிக்க முடியாத ஆளாய் அசத்தி இருக்கிறார். அதென்ன்ன அவ்வ்வ்வ்லோ திமிர்ருனு நம்மை கேட்க வைப்பதே அவரின் நடிப்புக்கு கிடைத்த வெற்றி

#அய்யப்ப நாயர்

தம்பி படத்தில் வில்லனாய் நடித்த அதே பிஜு மேனன் இதில் போலிஸாய் வாழ்ந்திருக்கிறார்.ஊர் மதிக்கும் எஸ்.ஐ யாகவும்,மனைவிக்கு நல்ல கணவனாகவும்,வஞ்சத்தினால் வேலை இழந்தவராகவும், நேர்மையாய் இருந்தாலும் தன் மீது விழுந்த பழிக்கு ப்ழி தீர்க்கும் போது மனுஷன் வாழ்ந்திருக்கிறார்.

#ஒளிப்பதிவு நம்மை அட்டப்பாடி வாசியாகவே வாழவைத்திருகிறது

*ராஜ் டிவியில் போட்ட இந்தியன் படம் மாதிரிநீளமாய் இருந்தாலும் போர் அடிக்கவில்லை.

*இருவரையும் இத்தனை பிரச்சனையிலும் மோதவிடாமல் க்ளைமேக்ஸ் வரை நம்மை எப்ப சண்டை போடுவாங்கனு  எதிர்பார்க்க வைத்திருக்கார் இயக்குநர்

*ஹரி,பேரரசு பட வெறியர்களுக்கு பிடிக்காது.

*இருவரும் அடிச்சுக்க மாட்டாங்களே தவிர மாறி மாறி வெறுப்பேத்தி வந்து அடிக்க வைக்க வெறுப்பேத்துவார்கள். அது ஆடியன்சையும் வெறி ஏத்தி எப்படா யாரு அடிப்பாங்கன்னு காக்க வைக்குது.

*ஹீரோயின் இல்லை.ஒரு பாட்டு மற்றும் கிராமிய பாட்டு மட்டும் உண்டு.

*தமிழ்ல ரீமேக் ஆகும்னு சொல்றாங்க.
அதனாலயே மலையாளத்தில பார்த்திட்டேன்.

எப்பிடியும் இந்த பர்னிச்சரை தமிழ் இயக்குநர்கள் உடைச்சிடுவாங்கனு தான்

-மணிகண்ட பிரபு

Friday, 28 February 2020

Anandha vikatan 6/3/20

பார்னம் விளைவு


பார்னம் விளைவு

ஒவ்வொரு நிமிடமும் ஒரு ஏமாளி பிறக்கிறான்" என்ற புகழ்பெற்ற சொற்றொடர் ஒன்று உள்ளது.

சிறுவயதில் கிளி ஜோசியம் பார்த்திருப்போம்.கிளி எடுத்துக் கொடுத்த சீட்டிற்கு அப்புறம் தன் மஞ்சள் பையிலிருந்து ஒரு பாக்கெட் சைஸ் நோட்டினை எடுத்துப் படிப்பார் ஒரு தாத்தா. அதில் உள்ளவற்றை கேட்க கேட்க அப்படியே ஆச்சர்யத்தில் உறைந்து போய் உட்கார்ந்திருப்போம்." எந்த ஒரு இக்கட்டான சூழலிலும் திறமையாய் முடிவெடுப்பதில் வல்லவர் நீங்க னு வார்த்தையை கேட்கும் போது வடிவேல் ஸ்டைலில் ஆமுங்க ஆமுங்க னு சொல்லுவோம். இவருக்கு எப்படி நம்மைப் பற்றி இவ்வளவு தெரிந்திருக்கிறது என நினைத்து எழுந்துபோவோம். 

கொஞ்சம் வளர்ந்த பிறகு நம் ராசி என்ன என தெரிந்தபிறகு.. அம்பது மீட்டர் தூரத்தில் இருந்தாலும் நம் ராசியை மட்டும் ஃபோகஸ் செய்து படிப்போம். அதிலும் அந்த முதல் வரி தான் க்ளாசிக்..
"பொறுமையும்  புத்திசாலித்தனமும் நிறைந்த ரிஷப ராசி நேயர்களே என்றால்.. நம்ம மனசு உடனே ஆஹா அச்சரா..நான் தான்னு மனசு உடுக்கை அடிக்க ஆரம்பித்துவிடும்.சரி மற்ற ராசிகளையும் பார்க்கும்போது அதே போல் வேறு வரிகளில் ஆரம்பித்திருப்பார்கள்.இருந்தாலும் நம்மைப் பற்றி சொன்ன வரிகள் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் தான்.

இதையெல்லாம் வேறு ஒருவர் முகத்துக்கு நேராக சொன்னால் அடப் போங்கனு போயிருவோம்.ஆனால் ஒரு புத்தகத்திலோ அல்லது செய்தியாக வந்த நிகழ்வை படிக்கும்போது நம்மை ஒப்பிட்டுப் பார்த்து புளகாங்கிதம் அடைவதை கவனிச்சிருக்கீங்களா.
"உங்களிடம் உள்ள திறமைக்கு நீங்க இந்த ஆபிசில் இருக்க வேண்டியவ ஆளே இல்லை எனச்சொல்லும் போது ஷோல்டரை தூக்கி மார்பை விரிந்த நிலையில் வைத்திருப்போம் இல்லையா....

அடுத்தவர் உங்களை பார்த்து எப்படி எல்லோருக்கும் பிடித்த மாதிரி இருக்கீங்கனு எதெச்சையா கேட்கும்போது மனசுக்குள்ள அப்பிடியே ஏ.சி போட்டது போல் இருக்கும்.

#பார்னம் விளைவு.

உளவியல் ரீதியில் இதற்கு 
பார்னம் விளைவு (Barnum effect) என்று பெயர். பலருக்கும் பொதுவாக ஒத்துப்போகக்கூடிய விஷயங்களை, பொதுவான சில ஆளுமை பண்புகளைத் தனிநபர்களிடம் கொடுத்துச் சோதிக்கும்போது அவை தம்மையே மிகத்துல்லியமாகக் குறிப்பனவாக அவர்கள் கருதுவதாக இருக்குமாம்.
இது ஜோதிடம், வருடாந்திர பலன், மற்றும் கிரக பெயர்ச்சி பலன்களில் பார்த்திருக்கலாம்.

1948 ஆம் ஆண்டில், ஒரு "கிளாசிக் பரிசோதனை" என்று விவரிக்கப்பட்டுள்ள நிலையில்,  உளவியலாளர் பெர்ட்ராம் ஆர். ஃபோரர் ஒரு உளவியல் பரிசோதனையை வழங்கினார் - அதில் 
ஒரு ஓவியம் கொடுத்து பரிசோதித்ததில் அனைவரும் ஒன்றே போல் பதிலளித்தனராம்.இது ஃபோரெர் விளைவு (Forer effect) என்றும் அழைக்கப்படுகிறது

அதன் முடிவில் ஆழ் மட்டத்தில், மனம் நம்பிக்கையில் கவனம் செலுத்துகிறது. நனவான மட்டத்தில் இருக்கும்போது, ​​அது எதிர்மறையில் கவனம் செலுத்துகிறது. நம்மிடமுள்ள நேர்மறை எண்ணங்களை எப்போதும் நினைவில் வைத்திருத்தல் அல்லது நம்மிடம் ஒருவர் பாசிட்டிவ் விஷயத்தை சொல்லும் போது உடனே ஒப்புக்கொள்ளுதல் போன்றவைகளால் இது சாத்தியமாகிறது.




பொதுவான போக்கினை கூறினாலும்
மனிதன் தம் அகநிலையை சரிபார்த்து தன் குணாதிசியத்தை பொருத்திப் பார்க்க முயன்று அதில் வெற்றியடைகிறான்.
உதாரணத்திற்கு நீங்கள் எப்போதும் சுறுசுறுப்பாய் இருப்பீர்கள்.சில நேரங்களில் சோம்பலாய் இருப்பீர்கள்.இதில் "சிலநேரங்களில்"என்பது அனைவருக்குமே பொருந்தும். இந்த மாதிரி இடத்தில் தான் அனைவரும் ஒத்துப் போகிறோம்.இது ஒரு வகையில் நன்மையே. இதன் மூலம் நேர்மறை எண்ணத்தை நினைவு படுத்தி அதனை தொடர் வைக்கிறது.

#பலரும் தம்மையே குறிப்பதாகக் கருதிக்கொள்ளக்கூடிய விஷயங்கள் என உள்ளன.


*நீங்க வாழ்க்கையில் படாத கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்திருப்பீங்க

*நீங்க பார்த்தா சட்டுனு பேசமாட்டீங்க
ஆனா பேச ஆரம்பித்தால் கலகல டைப்

*நீங்க எல்லோரையும் நம்புவதால் உங்களை எளிதில் ஏமாற்றுவிடுவார்கள்

*எந்த ஒரு வேலையையும் நேர்த்தியாக செய்வதில் அலாதி ஆர்வம்

*புதுமையான விஷயத்தை கற்றுக்கொள்ள ரொம்ப மெனக்கெடுவீங்க

*நீங்க முன்னேறுவது உங்களை சுற்றியுள்ளவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியாது.இருந்தாலும் உங்க திறமையால் அடுத்தடுத்த இடம் கிடைத்துக்கொண்டே இருக்கும்

*சவாலையெல்லாம் சர்பத் குடிப்பது
போல் உங்களுக்கு


*நீங்க பொதுவா யாரையும் எளிதில் நம்பமாட்டீங்க.நம்பி விட்டால் அப்புறம் கடைசி வரை கன்டினியூ பன்னுவீங்க

இப்படியெல்லாம் படிக்கும்போது இந்த அறிகுறி எல்லாம் நமக்கு இருக்குனு நினைப்போமே அதுதான் பார்னம் விளைவு.


பாபநாசம் படத்தில் பெண் போலிஸ் அதிகாரி சொல்வது போல் ஒரு வசனம் வரும்."ஒரு சினிமாவில் ஒரு நல்ல சீன் வந்தால் அது மட்டும் நினைவில் இருக்கும் மத்த எல்லா சீனையும் மற்ந்திருவோம் னு.அது போல் நம்மை பற்றி ஒருவிசயம் சொல்லப்பட்டாலும் அந்த ஒரு விஷயம் பிடித்திருப்பதால் மற்ற எல்லாவற்றையும் நம்புகிறோம். 
எதிர்மறையாய் சொன்னால் நம்பமாட்டோம்.அதனால்தான் 
ஜோசியரின் மீதுதான் நம்பிக்கை குறைகிறதே தவிர..
ஜோசியத்தின்  மீது நம்பிக்கை குறைவதே இல்லை.



#உஷார்

பொதுவாக நம்பிக்கை சார்ந்த எதையும் புரிய வைப்பது கடினம்.ஆனால் அந்த நம்பிக்கையை மூலதனமாய் வைத்து ஒருவர் ஏமாற்றும்போது நாம் உஷாராய் இருக்க வேண்டும்.பத்து விஷயம் சொன்னதில் மூன்று ஒத்துப்போய்விட்டால் பதினொன்றாவது விஷயத்தை அவர் எப்படி கூறினாலும் நம்பகூடாது. சுயபரிசோதனை செய்துபார்க்கனும்.ஓஷோ கூறுவார் 
நல்லவேளை  மனிதர்களோடு மட்டும் நீ உன்னை ஒப்பிட்டுக்கொள்கிறாய். உண்மையில்  நீ அப்படித்தான் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறாய்
இல்லையெனில் மற்றவைகளோடு ஒப்பிட்டு வேதனை அடைவாய் னு சொல்வார். உண்மையில் மற்றவர்களை விட நாம் ஒரு படி மேல் என்ற எண்ணம் உள்ளூர அனைவருக்கும் உள்ளது. இதை பயன்படுத்தி சொல்லும்போது எளிதில் வீழ்ந்துவிடுகிறோம்.ஆகவே நேர்மறை எண்ணதுக்காக இதனையெல்லாம் நம்புவோம். ஏமாற்றும்போது விழிப்புணர்வோடு இருப்போம்

-மணிகண்ட பிரபு




Friday, 21 February 2020

இந்த வார வலைபாயுதேவில் என் இரு கீச்சுகள்..நன்றி ஆனந்தவிகடன்

நமக்குள்ளே


நமக்குள்ளே...

கேரளா இன்று பெருமையுடன் உச்சரிக்கும் ஒரு பெயர் - அனுஜத் சிந்து வினயல். திருச்சூரைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் அனுஜத் வரைந்த `என் அம்மாவும் அக்கம்பக்கத்து அம்மாக்களும்’ என்கிற ஓவியம் கேரள மாநிலத்தின் பாலின பட்ஜெட்டின் முகப்பு அட்டையை அலங்கரித்திருக்கிறது. அரசே கொண்டாடும் அளவுக்கு அந்த ஓவியத்தில் அப்படி என்ன இருக்கிறது?

பெண்கள் தங்கள் வீடுகளில் செய்யக்கூடிய ‘வீட்டு வேலை’களையே அனுஜத் சித்திரித்திருக்கிறான். பால் கறப்பது, கோழிகளுக்குத் தீனி போடுவது, துவைப்பது, துணிகளை உலரவைப்பது, தேங்காய் பறிப்பது, மீன் கழுவுவது, காய்கறி வாங்குவது, மிளகாய் காயவைப்பது, கிணற்றில் நீர் இறைப்பது, மசாலா அரைப்பது, சமைப்பது, பாத்திரம் தேய்ப்பது, வீடு கூட்டுவது, தோட்ட வேலை செய்வது, குழந்தைகளைப் பேணுவது என்று தன்னைச் சுற்றியுள்ள பெண்கள் செய்யும் `நன்றியோ, ஊதியமோ அற்ற' பணிகளை ஓவியமாக வரைந்திருக்கிறான்.

சமூகம் பெண்ணுக்கானது என்று சுட்டும் ‘வீட்டு வேலைகள்’ இந்தச் சிறுவனின் மனத்தைத் தொட்டிருக்கின்றன. இந்த ஓவியத்தை வரையும்போது அனுஜத்துக்கு வயது 10. துரதிர்ஷ்டவசமாக, எந்தத் தாயை அங்கீகரிக்க வேண்டி அனுஜத் இந்த ஓவியத்தை வரைந்தானோ அந்தத் தாய், கடந்த நவம்பர் 14 அன்று இறந்துவிட்டார்.

பத்து வயதுச் சிறுவனின் கண்ணுக்குத் தெரியும் பெண் உழைப்புச் சுரண்டலை சமூகம் எவ்வளவு எளிதாகக் கடந்து செல்கிறது? குடும்பம் என்கிற அமைப்பு, வீடு, வீட்டுக்குள் செய்யும் வேலைகள்... இவை எல்லாமே பெண்ணின் கடமைகள் என்கிற கோட்பாட்டை விதித்துவைத்திருக்கும் நாம், அந்த உழைப்புக்கான அங்கீகாரத்தை எப்போதேனும் அவளுக்குத் தருகிறோமா?

தென்னாப்பிரிக்கா மற்றும் சீனப் பெண்களைவிட 40 சதவிகிதம் அதிக பணிச்சுமையை இந்தியப் பெண்கள் சுமந்துகொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் ஒரு பெண் வீட்டுவேலைக்கு மட்டுமே நாளொன்றுக்கு 352 நிமிடங்கள் செலவிடுகிறாள். அதாவது, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் எந்த பலனையும் எதிர்பாராத உழைப்பு. வீட்டிலுள்ள ஆண் இதற்காகச் செலவிடுவது அதிகபட்சம் 52 நிமிடங்கள் மட்டுமே.

2020-ம் ஆண்டிலும் ஆண் செய்யும் வேலை, பெண் செய்யும் வேலை என்று பணிகளைத் தரம் பிரிப்பது ஏன்? குடும்பம், குழந்தை வளர்ப்பு, வீட்டு நிர்வாகம் போன்றவற்றைப் பெண்ணின் தலையிலேயே தொடர்ச்சியாகச் சுமத்துவது ஏன்? இவையெல்லாம் வீட்டிலும் வேலை செய்து, வெளியிலும் பணிக்குச் செல்லும் பெண்களுக்குக் கடும் அயர்ச்சியையும் மன உளைச்சலையும் தருகின்றன.

இந்தியாவின் பெருமையான குடும்பம் என்கிற கட்டமைப்பைத் தாங்கிப் பிடிக்கும் தூண்கள் பெண்களே. இவர்களுக்குச் சரியான அங்கீகாரம் அளிப்பதோடு, பெண்களின் பணியில் தோள் கொடுக்கவும் ஆண்கள் துணைவர வேண்டும். இல்லையெனில், காலப்போக்கில் இந்த அமைப்பே சீர்குலைந்து போகும். பெண்ணின் பணியையும் உழைப்பையும் மதிக்கத் தொடங்குவோம்... வீட்டுப் பணிகளில் ஆண்களும் குழந்தைகளும் கைகொடுப்போம். ஆணின்றிப் பெண்ணில்லை; பெண்ணின்றி எதுவும் இல்லை!

இப்போது விற்பனையில் உள்ள
அவள் விகடன் (3.3.2020) இதழில்...


Thursday, 30 January 2020

கற்றதும் பெற்றதும்-90*மணி

கற்றதும் பெற்றதும்-90
*மணி

ஒரு வளர்ப்பு நாயை மெல்ல மெல்ல பழக்குவது போல,
தண்ணீரை காசு கொடுத்து வாங்குவதற்கு நம்மை பழக்கப்படுத்திவிட்டனர்
-பாரதி தம்பி

#நீர் எழுத்து
-நக்கீரன்

சமீபத்தில் யாரேனும் நல்ல புத்தகங்கள் இருந்தால் ஒன்று பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்டால் நான் தயக்கமின்றி பரிந்துரை செய்யும் புத்தகம் நக்கீரன் எழுதிய இப் புத்தகமே. கடந்த ஆண்டு 2019ஆம் ஆண்டு புத்தகங்களுடன் புத்தாண்டு எனும் நிகழ்வை அவிநாசி தமுஎகச கிளை நடத்தியது. அதில் என்னை இப்புத்தகத்தின் உரையாற்ற அழைத்ததை நான் எண்ணிப்பார்க்கிறேன். நீர் குறித்த கட்டுரை முதலில் நான் பாரதி தம்பி எழுதிய தவிக்குதே தவிக்குதே என்ற புத்தகத்தை தான் முதலில் வாசித்தேன். அதற்கு பிறகு இப்புத்தகம் நீண்ட நெடிய ஆய்வு தகவலும் நிரம்பியுள்ளன.

#நீர் அதிகாரம்

உலக நீர் வரலாற்றில் பொலிவியாவில் உள்ள கொச்ச பம்பா என்னும்  நகரம் புகழ் வாய்ந்தது. 1998ல் உலக வங்கியிடம் 250 லட்சம் டாலர் கடன் வாங்கியதற்காக தண்ணீரை தனியாருக்கு விட நிபந்தனை விதித்தது.பெக்டெல் நிறுவனம் பொறுப்பேற்ற பின் மழை நீருக்கு கூட கட்டணம் கேட்டது.3ல் 1பங்கை கட்டணம் செலுத்த இயலாமல் மக்கள் தவித்தனர். அப்போது போராடி அந்நிறுவனத்தை விரட்டியடித்தனர்.

 ஆசியாவிலேயே நீர் தனியார்மயமாக்கப்பட்ட முதல் மாநகராட்சி திருப்பூர் தான். புதிய திருப்பூர் பகுதி வளர்ச்சி நிறுவனம் இதில் பெக்டெல் நிறுவனமும் அடக்கம் .அது குறித்து நீண்ட நெடிய கட்டுரை எழுதியுள்ளார். கோவையில் சூயஸ் நிறுவனம் தென்னாப்பிரிக்காவில் மிக நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு அதனை விரட்டி அடித்தது. தற்போது அது கோவை நகரின் நீர் விநியோக உரிமையை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு நீர் விநியோக உரிமையை தனியாருக்கு கொடுத்து பின் மீண்டும் மாநகராட்சியே கையில் எடுத்துக் கொண்டது மைசூர்தான்.

உலகெங்கும் உள்ள மக்களின் ஒரு சாதாரணமான கேள்வி கடல்நீரை குடிநீராக்கலாம் என்பதுவே.
கண்டங்களிலிருந்து ஆவியாகி செல்லும் நீரின் அளவு 70 ஆயிரம் கன கி.மீட்டர் மழையாக கிடைப்பது ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன மீட்டர் அதாவது கூடுதலாக 40 ஆயிரம் கன கி. மீட்டர் நமக்கு கிடைக்கிறது. இதனை சேமித்து வைத்து நீர் தேவையை பூர்த்தி செய்யலாம்.
ஒருவேளை கடல்நீரை குடிநீராக்கினால் அதற்குஅதிக மின்சாரம் தேவைப்படும்.
மின் பற்றாக்குறை உள்ள நமக்கு அது கடினம் தான்.அப்படியே செய்தாலும் சொற்ப க.கி.மீ நீர்தான் கிடைக்கும்.

 இதற்கு இடையே நீர் பூங்காக்களில் நீர் வீணடிப்பது பெண்கள் நீருக்காக படும் அவலம் குறித்து தெளிவாக விளக்கியுள்ளார்.மேலும் போர்வெல் போடும் அவலத்தையும் அதிக நீரை உறிஞ்சும் மக்களையும் புள்ளி விபரங்களோடு குறிப்பிடுகிறார் ஆசிரியர்.. இக்கட்டுரையில்

 #ஜான் பெர்கின்ஸ்ஒருமுறை சொன்னார்.. தங்கத்தையும் எண்ணெயையும் சேர்ந்தால் என்ன மதிப்போ அந்த மதிப்பு எதிர்காலத்தில் நீருக்கு இருக்கிறது. எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு நீருக்கு நாம் உரிமையாளர் ஆகி விடவேண்டும். எவ்வளவு தீர்க்கதரிசனம் பாருங்கள்

தேசிய நீர் கொள்கை 2012 ஆம் ஆண்டு ஒருவரை வெளியிட்டது. அதில் நீர் சேவையானது தனியார் வசம் இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

பருவமழை குறித்து தனது கட்டுரையில் எல் நினோ லா நினோ பற்றி தெரிவிக்கிறார். அதாவது கடலின் வெப்பநிலை வழக்கத்தைவிட சற்று அதிகரித்தால் அது தான் எல்நினோ. எனினும் அது உருவான நமக்கு தென்மேற்கு பருவமழை குறையும். மாறாக கடலில் வெப்பம் வழக்கத்தைவிட குறைந்தால் அதன் பெயர் லாநினா.  இதனை பெருநாட்டின் கடலில் கணக்கிடுகின்றனர்.

குளிர்கால மழை குறித்து சொல்லும்போது  குளிர்காலத்தில் ஒரு மரம் ஈரப்பதத்தை பனித்துளிகள் ஆக மாற்றி மழையாக தரும். உதாரணத்திற்கு கோவில்பட்டியில் மாதம் சராசரியாக 24 இரவுகளில் மட்டும் பெய்யும்.ஒவ்வொரு நீரிலும் 0.5 மில்லி மீட்டர் அளவுக்கு நீராக மாற்றும். காவிரிப்படுகையில் 52 இரவுகள் பனிபெய்யும் இது சராசரியாக 0.14 மி.மீட்டர் அளவில் பனியை நீராக மாற்றும்.

மதுரை வில்லாபுரம் இடதுசாரி கவுன்சிலர் லீலாவதி நீர் விற்பனைக்கு குரல் கொடுத்ததால்
1997ல் ஏழுபேர் கொண்ட கும்பல் 24இடங்களில் வெட்டி வீழ்த்தியது. நீருக்காக உயிர்நீத்த அந்த லீலாவதிக்குதான் இப்புத்தகத்தை சமர்ப்பித்துள்ளார்.

#ரசித்தது

*பத்து நாளுக்கு ஒரு முறை என்று மாதம் மும்முறை மழை பெய்வதால் இதனை மும்மாரி என வழங்குகிறார்கள்

*தோட்டம் துரவு என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.. தோட்டம் சரி துறவு என்றால்.. பெரிய அளவில் பாசனத்திற்கு பயன்படும் கிணறுதான் துரவு. இதன் நீள அகலம் 1:1,1:2,1:3  எந்த விதத்தில் அமைய வேண்டும்

*உலகின் இரண்டு இடங்களில் குளங்கள் நெருக்கமாக அமைந்துள்ளன. ஒன்று எகிப்து இன்னொன்று தமிழ்நாடு

*வயக்காடு என்பதை ஆங்கிலேயர்கள் உச்சரிக்கத் தெரியாமல் VAYACUT என்றழைக்க அச்சொல்லில் இருந்து V விழுந்து AYACUT ஆகி தமிழிலும் ஆயக்கட்டு ஆக மாறிவிட்டது

*ஆறுகள் தொடர்ந்து நீரை கடலுக்கு அளித்தால் இயற்கை அதை திருப்பி அளிக்கும் என்கிற படத்தை கற்றுக்கொள்ளவேண்டும்

*உலகிலேயே கட்டி முடிக்கப்படாத அணைகள் அதிகம் இருப்பது இந்திய ஒன்றியத்தில் தான்

*தமிழ்நாட்டில் நில அமைப்பில் நீர் ஊடுருவும் தன்மை கொண்ட மண் வகை வெறும் 27 சதவீதம் மட்டுமே, மீதமுள்ள 73 சதவீதம் நிலத்தின் அடியில் பல வித பாறைகள் இருப்பதால் அங்கு நீர் ஊடுருவும் தன்மை குறைவு

*500 சதுர அடி பரப்பளவுள்ள மாடிகளைக் கொண்ட 20 ஆயிரம் வீடுகள்.. மழை நீரை முழுவதும் கிணற்றிலோ நிலத்திலோ சேமித்தால் அது மேட்டூர் அணையின் கொள்ளளவு சமம்

*அதிக நீர் உட்கொள்ளும் தொழில்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் திட்டமிட்டு மூன்றாம் உலக நாடுகளில் தொடங்குகின்றன

இதுதவிர தமிழ்நாடு நீர் கொள்கைக்கான 20 பரிந்துரைகளை பின்னிணைப்பாக ஆசிரியர் கொடுத்துள்ளார்

#கற்றதும் பெற்றதும்

எதிர்காலத்தில் நீர் குறித்தும் அதில் அயல்நாடுகளின் வணிகப் பொருளாகவும் மாறவிருக்கும் நீர் குறித்த எச்சரிக்கை நூல்.இதோடு ஆறுகளை இணைத்தல், தமிழக மழைவளம்,காவிரி, கல்லணை குறித்து அறியாத செய்திகளை பகிர்ந்துள்ளார்.சங்கப்பாடல்களில் நீர் குறித்தும்,கிராமத்து சொலவடை குறித்தும் ஆய்ந்து எழுதுயுள்ளார். எழுதுவதற்காகவே பல இடங்களில் பயணித்தது காணமுடிகிறது.

ஒருகார் ஏற்றுமதியாகும் போது 6இலட்சம் லி தண்ணீர் ஏற்றுமதியாவதாய் படித்த நினைவு. வாழ்வாதார நீரை வணிக ஆதாரத்துக்கு பயன்படுத்துவதை நினைக்கும்போது வேதனை தருகிறது.படிக்கும் அனைவரையும் குற்ற உணர்வுடன் தான் படிக்க வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.நீரை பூமியில் தேடாதே வானத்தில் தேடு எனும் நம்மாழ்வர் வரிகளே நினைவுக்கு வருகிறது.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்ட பிரபு

28-1-20

எதிர்பார்ப்புகள் தான் நம் முதலீடு.அதை கைவிடாமலிருக்க வேண்டும்

-ஷாபு கிளித்தட்டில்
தமிழில் கே.வி.ஷைலஜா

#அன்பினுக்கு அவதி இல்லை.’ என்னை ஆட்கொள்ளும் அன்பு கொஞ்ச நஞ்சமில்லை. ‘அடைவு என்கொல்?’ இதனால் என்ன நேரும்? ‘அறிதல் தேற்றேன்!’

-

மலை மீது ஏறி வரும் இருவர்; அவர்களை நோக்கி இறங்கி வரும் அனுமன். அவர்களை அணுகுவதற்குள் முகத்தோற்றம், உருவம், காட்சியினால் கிடைக்கும் விவரம் என்று ஒவ்வொன்றாக அலசிப் பார்த்துக் கொண்டே முன்னேறுகிறான். அறிவு பூர்வமான விளக்கமும் ஓரளவு கிடைத்தது. உணர்வு பூர்வமாக ‘ஏன் இப்படி ஓர் அன்பு தோன்றுகிறது, எதனால் நான் இவர்கள்பால் ஈர்க்கப்படுகிறேன், என்னை எது இப்படி ஆட்கொள்கிறது’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டு

வருகின்ற நேரத்திலும் அறிவு முற்றிலுமாக ஒடுங்கவில்லை. ‘இதனால் என்ன நேரும்’ என்று கேட்டுக்கொள்கிறான். அது குறித்த தெளிவின்மையை ‘அறிதல் தேற்றேன்’ வெளிப்படுத்துகிறான். எல்லாம் சில கணங்களுக்குத்தான்.

-கம்பர்

#அசைவ உணவகம்
முனியண்டி விலாஸைப்
போன்றதுதான் இந்தியாவும்
எல்லா மாநிலத்திலும்
இதற்குக் கிளைகளுண்டு

பரிமாறுபவர்கள்
முதலமைச்சர்களையும்
கல்லாவில் இருப்பவர்
பிரதமரையும் நினைவூட்டுவர்

அனைத்து வகை
அசைவமும் வீற்றிருக்கும்
அகலமான தட்டுபோல
நாட்டின் வரைபடம்

தவறுதலாக மட்டுமே
தென்படும்
விலைப்பட்டியல்கள்
பட்ஜெட்கள்

முண்டா பனியன்கள்
சமையற்காரர்கள்
முக்கிய மந்திரிகளாகவும்
மேஜைத் துடைப்பவர்
எதிர்க்கட்சியாகவும்
நடத்தப்படுவர்

ரசமிழந்த கண்ணாடி
பாராளுமன்றமாகவும்
கையலம்பும் நீராக
ஐந்தாண்டுக் கொள்கையும்
நிரந்தரமானவை

-யுகபாரதி

#இன்றெமது ஊரில் எட்டுத் துளிகள் விழுந்தன.அதை மழை என்றெண்ணி மகிழ்ந்தோம்

-மகுடேசுவரன்

# கும்பலே
கோமாளி 
வேடமிட்டு
நடந்தால்
கோமாளிக்கு 
யார் 
சிரிப்பார்?
- புதுமைப்பித்தன்

#ஆச்சர்யத்துடன் அன்னாந்து பார்த்தே பலரை உயரமாக்கி விட்டோம்.
-ராஜா சந்திரசேகர்

30-1-20

# ஹாபி என்பதற்கும்,Pastime என்பதற்கும் entertainment என்பதற்கும் வேறுபாடு உள்ளன.
Hobby-என்பது பணி தவிர நாம் கவனம் செலுத்தும் இன்னொரு செயல்

pastime-பணியைக் காட்டிலும் அதிக அக்கறை செலுத்தும் செயல்.அது ஆரோக்யமானதல்ல

entertainment என்பது வெறும் பொழுதுபோக்கு

-இறையன்பு

# ஒவ்வொருவரும் ஜனாதிபதியாகி அதிகாரம் செலுத்த முடியாது.ஆனால் கணவனாகி மனைவி மீதும், மனைவி தாயாகி குழந்தை மீதும், குழந்தை விளையாட்டு பொம்மை மீதும் அதிகாரம் செலுத்தலாம்.பாவம் பொம்மைக்கு தான் கீழே ஒருவரும் இல்லை.இது ஒரு அதிகாரத்துவம் மிகுந்த சமூகம்.

-ஓஷோ


#எவரும் வருந்திடாத 
பாதைகளில் பயணிப்பதை
சாதுர்யமாய்த்
தவிர்த்துவிடுபவர்களில்
என்னிடம் ஒரு 
கேள்வி இருக்கிறது
சாகசங்களே அற்ற உங்கள்
பாதைகளில் பயணிக்க
நைந்துபோன செருப்பு போதாதா

ராம்ப்ரசாத்

மக்கள் தொலைக்காட்சியில் என் வரிகள்

க்ற்றதும் பெற்றதும்-89-*மணி

கற்றதும் பெற்றதும்-89
*மணி

உடல் சந்தை நான் கற்பனை செய்திருந்ததை விட மிகப் பெரியது
-ஸ்கார்ட் கார்னி

#சிவப்புச்சந்தை
-ஸ்கார்ட் கார்னி

ஜூனியர் விகடன் கழுகுப்பார்வை சிறப்பிதழில் புத்தியை துலக்கிய புத்தகங்கள் பட்டியலில் சிவப்பு சந்தை புத்தகம் ஒன்று. எதேச்சையாக நான் நூலகத்தில் பார்த்துக்கொண்டிருந்தபோது இப்புத்தகத்தை கண்டறிந்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. உடல் சந்தை குறித்து நாம் அறியப்படாத பல விஷயங்களை இப்புத்தகம் பேசுகிறது.

மூன்று வகையான சந்தைகள் இருப்பதாக தெரிவிக்கின்றனர். கருப்புச் சந்தை என்பவை சட்டத்திற்குப் புறம்பான பொருட்களான துப்பாக்கிகள் போதைப்பொருட்கள் கடத்தல் போன்ற சேவை பரிமாற்றம். திருட்டு டிவிடிவடி ஆகியவை சாம்பல் சந்தை, வருமான வரி ஏய்ப்பு போன்றவை வெள்ளைச்சந்தை.மனித உறுப்புச் சந்தையே சிவப்பு சந்தை எனப்படுகிறது.

#மனித உடல்

உன் விரல்கள் பத்தும் மூலதனம் என்பார் தாராபாரதி.உண்மையில் இதை படித்துப் பார்த்த போது உடல் முழுக்க மூலதனம்தான் வணிகத்துக்கு கார்ப்ரேட்டுக்கு.ஒரு துறவியர் மடத்தில் ஒரு இளம் பெண் துறவி இறந்துவிடுகிறார்.அவள் பெயர் எமிலி. பிரேத பரிசோதனையில் உறுப்புகளை பிரிக்கின்றனர். மரணித்த பின்பு நேரும் கொடுமைகளை விவரிக்கும்போது உடல் சில்லிடுகிறது.

மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு மருந்துகளை சோதிக்க உயிருள்ள மனிதர்கள் தேவைப்படுகிறார்கள்.

#எலும்புத்தொழிற்சாலை

நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாதவகையில் எலும்பு வணிகம் குறித்து சொல்லியிருக்கிறார். எலும்புக்கூடுகள் எளிதாய் கிடைப்பதில்லை.அதற்கென்றே இருக்கும் சந்தையில் அதற்கு தேவை அதிகம்.1985ல் இந்திய அரசு மனித உடல் மிச்சங்ககளின் ஏற்றுமதியை தடுக்க சட்டம் இயற்றியதிலிருந்து டிமான்ட் அதிகம்.உடல்களை தோண்டி எடுத்து எலும்புகளை கைப்பற்ற கூட ஆட்கள் இருக்கிறார்கள்.மற்றுமொரு முறை பிணங்களை சுருட்டி ஆற்றில் நங்கூரமிட்டு மீன்,நுண்ணுயிரிகளை சாப்பிடவிட்டு உருக்குறைப்பு செய்து எலும்பை பதப்படுத்தி வெள்ளை நிறம் வர ஒருவாரம் காயவைத்து HCL ல் ஊறவைக்கின்றனர்.

அமெரிக்காவின் எல்லா மருத்துவ வகுப்பறைகளிலும் இருந்த எலும்புக்கூடுகள் இந்தியாவிலிருந்து வந்தவை என்கிறார்.

#சிறுநீரகம்

சினிமாவில் பார்த்ததுதான். வறுமையைப் பயன்படுத்தி சிறுநீரை எடுக்கின்றனர்.சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களிடம் கிட்மிவாக்கம் என சொல்லுமளவிற்கு ஒரு ஏரியாவில் கிட்னி விற்பனை அதிகம் நடந்ததாம்.
உடலுறுப்பு விற்பனையில் கோடி கொடுத்து வாங்குகிறார்கள் அதில் இடைத்தரகர்களின் சுரண்டல் அதிகம்.அந்த நிழல் உலக பேரங்களை அப்பட்டமாய் புலனாய்வு போல நம் முன் நிறுத்துகிறது.

#கருத்தரிப்பு

நவீன காலங்களில் கருத்தரிப்பு மையங்களில் எண்ணிக்கை அதிகரிக்கிறது.உடல் ரீதியான குறைபாடு மற்றும் சுற்றியுள்ளவர்களின் நச்சரிப்பினால் இலட்சக்கணக்கில் கொட்ட காத்திருப்பதை புரிந்து கொண்டு இத்தொழிலில் ஈடுபடுகிறார்கள். கருமுட்டை தானம்,சோதனைக் குழாய் குழந்தை என ஒவ்வொரு ஆண்டும்.2,50,000 குழந்தை பிறப்பதாக தகவல் தெருவிக்கிறது. பல நாடுகளில் இது சென்றடைந்திருக்கிறது.கரு முட்டை தானம் அவ்வளவு எளிதல்ல.இரு வார ஹார்மோன் தூண்டுதல் பின் அறுவை சிகிச்சை என அதிலுள்ள தகவல்களை அடுக்கடுக்காய் கூறுகிறது.

இன்னும் இரத்தப்பணம்,பரிசோதனைப் பிராணிகள்,ஸ்டெம் செல் குறித்து அலசுகிறது இப்புத்தகம்

ரசித்தவை

*மனித குலத்தின் மகிழ்ச்சியை இலக்கங்களாக மாற்ற முடியும்.

*முன்னறிந்து கூறுவதற்கான இயலாமையோடு வரும் ஆபத்தை தணிக்க முயற்சிக்கிறோம்

*மரணத்தை புரிந்துகொள்ள எளிய வழி பிணங்களின் அருகில் அமர்ந்து சிந்திப்பதே.

*குறைந்த விலையில் வாங்கு. உயர்ந்த விலையில் விற்றிடு.

*மரணத்தின் கடைசி அவமதிப்பு நம் உடலுடனான உறவை இழப்பதே

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்ட பிரபு

கற்றதும் பெற்றதும்-88*மணி

கற்றதும் பெற்றதும்-88*மணி
கற்றதும் பெற்றதும்-88
*மணி

இலக்கணங்களும் விவாதங்களும் மறைப்பதனாலேயே நவீன வாசகன் பழைய கவிதைகளை அந்நியமாக உணர்கிறான்.தனக்குக் கற்பனை செய்யவோ,கண்டடையவோ அவற்றில் ஏதுமில்லை என்று எண்ணுகிறான்

-ஜெயமோகன்

#சங்கச்சித்திரங்கள்
-ஜெயமோகன்

உடன் பணியாற்றும் புத்தக ஆர்வர் நண்பர் அவ்வப்போது தான் படித்த விஷயங்களை பகிர்ந்துகொள்வார். தமிழ் இலக்கியம் படித்தவர் என்பதால் அன்று சங்கப்பாடல் ஒன்றினை சிலாகித்து கூறினார். அப்போது நான் சங்கச்சித்திரங்கள் பற்றிக்கூறி அதனை படிக்க கொடுத்து பின்பு அதுகுறித்து விவாதித்தது மகிழ்ச்சியளித்தது.

விகடனில் தொடராக வந்தபோது வாசித்தேன்.தற்போது ஒன்பது ஆண்டுக்கு பிறகு மறுவாசிப்பு செய்த போது அதே புத்துணர்வு அளித்தது.ஒன்றரை பக்கத்தில் சங்கப்பாடலுடன் ஒரு சிறு சம்பவத்தை கூறி நம்முடன் உரையாடுவது போல் இருக்கும். நான் இக்கதைகளில் ஒரு சிலவற்றை நண்பர்களுடன் அடிக்கடி பகிர்ந்துள்ளேன்..

*வலியின் கொடுமை உணர்த்தும் சிறைபனி உடைந்த சேயரி..பாடலின் பொருளாய் "மழைத்துளி நிரம்பிய குளிர்ந்த காற்றில் ரத்தம் உறிஞ்சும் ஈக்களின் கடிதாங்காது தொழுவத்து எருமை தலை குலுக்கும்போது எழும் கழுத்து மணியோசை எனைப்போல தாளமுடியாத துயருடன் புரண்டு படுத்தபடி இரவெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் வேறு யார் உள்ளனர் இந்த ஊரில்? என துயருற்றவனின் இரவு கண் முன் விரிகிறது.

*ஒரு ரயில் பயணத்தில் ஒருவர் செம்புலப் பெயனீர் போல எனும் புகழ் பெற்ற கவிதைக்கு ஒருவர் விளக்கம் சொல்ல பிறிதொருவர் சற்றுநேரம் கழித்தால் செம்மண்ணும் நீரும் பிரிந்துவிடுமே என எண்ணியிருக்கலாம் என்றார்.அதற்கு இன்னொரு விளக்கத்தை ஜெமோ அனந்தராம அய்யர் எழுதியதாக சொல்கிறார்.
செம்புலம் என்றால் பாலைநிலம். பாலை நிலத்தில் பெய்த மழை எனக்கூறுவது பொருத்தம் என்றார்.
புதுமழைக்கு மண் புத்துயிர் பெறும் எனச் சொல்லி உரையாடல் நீளும்.

*புறநானூற்றில் கலஞ்செய் கோவே பாடலில்..கணவன் இழந்த அப்பாவி பெண் வருகிறார்.உலகம் தெரியாமல் இத்தனை ஆண்டுகள் இருந்திருக்கிறார்.இதற்கு உதாரணமாய் இப்பாடலின் கருத்தை சொல்கிறார்.."ஐந்து நிலங்களின் உருண்டு வரும் சக்கரம் அதில் ஒட்டியிருக்கும் பல்லிக்கு அந்த நிலங்களின் வெம்மையும் குளுமையும் எல்லாம் தெரியும். ஆனால் வழிநடையின் களைப்பை அது அறியாது.அதுபோல உலகம் தெரியாத மனைவியாய் சிலர் இருப்பதாக கூறுவார்.
நெகிழ்ச்சியாய இருக்கும்.இக்கதையை பலரிடம் நான் பகிர்ந்திருக்கிறேன்.இது ஒரு படிமம்.காலம் காலாய் இருப்பார்கள் ஆனால் ஒன்றை கற்றிருக்க மாட்டார்கள். பிறரே செய்வார்கள்.. நமக்கென்ன.. என இருப்பது.

*பெருஞ்சோறு பயந்து பல்யாண்டு பாடலில்.."யானையை பார்ப்பது எப்போதும் கண்கள் நிறையும் அனுபவம்தான்.விடியாது பெருகிச் செல்லும் இரவு போல.அது சென்ற பிறகு ஒரு அசிங்கமான வெளிச்சம் இருப்பதாகவும் அதை நிரப்ப எவ்வளவு சொற்களும் கற்பனையும் தேவை என்பதை வாழ்வியல் அனுபவத்தை பொருத்திக் கூறுவது இலக்கிய இன்பம்தான்.

*அந்தக்காலத்தில் அண்டை வீடுகளில் கணவன் விட்டுச்சென்ற வீடுகளை அதிகம் பார்த்திருக்கிறேன்.அதுகுறித்து சொல்லியிருக்கிறார் இதில்." பிரிவு என்பது எந்தக் காலத்திலும் ஆணின் ஆயுதமாய் இருக்கிறது.பெண்ணின் சக்தியை உறிஞ்சி அதற்கு அஞ்சி அஞ்சி மேலும் பலவீனம் கொள்கிறாள்.தன் மனைவியின் மனத்தில் பேருருவம் கொள்ளும் பொருட்டு ஆண் போடும் வேடம் தான் அது என சங்ககாலத்திலேயே சில ஆண்களின் மனநிலையை படம் பிடித்துக் காட்டுகின்றன.

ரசித்தது

*கண்மூடிப் படுத்துவிட்டால் காடு வந்து உடம்பை மூடிவிடும்.

*ஒருவர் நிரப்பியிருந்த இடம் எவ்வளவு என்று அவரது இழப்பின் மூலம் நாம் அறியலாம்.வெற்றிடத்தின் வலிமை அதன்மீது மோதும் சூழலின் அழுத்தமே. மெள்ள அந்த வெற்றிடம் சுருங்கிச் சுருங்கி ஒரு புள்ளியாகிறது, கருந்துளையாகிறது.

*துரோகத்துக்கும் அவமானத்துக்கும் ஆளானவர்களின் முதல் எதிரி அவர்கள் மனம்தான். அது ஓய்வதேயில்லை. கறையான் புற்றுப்போல அனைத்தையும் உண்டு வளர்ந்தபடியே இருக்கிறது அது.ஒரு கணம் செயலற்றுப் படுத்தால் கூட ஆயிரமாயிரம் கறையான் கொடுக்குகள் கால் நுனியை வந்து பற்றிவிடும்.

*பிரியத்தை அறிவதற்கு ஒரு திரை எப்போதுமே தேவைப்படுகிறதா?

#கற்றதும் பெற்றதும்

இது போன்ற 40 பாடல்களை எளிமைப்படுத்தி அன்றாட வாழ்வுடன் தொடர்பு படுத்தி சொல்லியிருப்பார்.நான் இதை படித்தவுடன் விவரிக்கவோ இன்பத்தை பகிரவோ இதுபோல் ஒத்த அலைவரிசையுடைவர்கள் யாரும் இல்லை.படிப்பதை பகிர ஆள் இல்லாத சோகம் புத்திர சோகம் போன்றது.

இதுவரை இப்புத்தகத்தை எந்த எழுத்தாளரும் சொல்லததும் பரிந்துரைக்காததும் வியப்பாய் உள்ளது.ரஷ்ய,பிரெஞ்சு இலக்கியங்களை விட மேலானது தமிழ் இலக்கியம்.தாய்மொழி இலக்கியத்தை படிக்காமல் அயல் நாட்டு இலக்கியம் படிப்பது முரணாகும்.இப்புத்தகம் சங்க இலக்கியத்தை அறிவதற்கு ஒரு தொடக்கம்.

ஒரு வாசகனாக இன்னொரு வாசகனுக்கு சொல்வது இதை நம்பி வாசிக்கலாம். தமிழ் இலக்கியபாடல்கள் என்றாலே பாடலுக்கு பொழிப்புரை எழுதுவதோடு நின்றுவிடுவார்கள்.
ஆனால் இதில் வாழ்வியல் அனுபவத்தை தொடர்புபடுத்தியிருப்பார்.
(தமிழினி வெளியீடு)

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Thursday, 12 December 2019

HBD rajini

ரஜினி ரசிகன் என்ற முறையில்
*மணி

முதல் நாள் முதல் ஷோ முரட்டுக்காளை பார்த்த சின்னச்சாமி அண்ணனின் அனுபவத்தை அப்போது ரசித்துக் கேட்போம்.குறிப்பாய் பொதுவாக எம் மனசு தங்கம் பாடலை

பிறகு நாங்கள் மாப்பிள்ளை படத்தை கோபிச்செட்டிபாளையம் காது குத்து வைபவத்தில் இன்னும் நினைவில் உள்ளது.என்னோட ராசி நல்ல ராசி பாட்டில் வெள்ளை ஆடை பார்த்து எடுக்கச்சொல்லி அடம்பிடித்தது

*பாண்டியன் படம் வந்த புதிதில் சட்டை பாக்கெட்டில் ரைட் சிம்பல் போட்டிருப்பது பரம் வீர் சக்ரா பாக்கெட்டில் இருப்பது மாதிரி

*தர்மதுரை படத்தில் ஓபனிங் வெள்ளை சூ வந்தபோது வீதியில் முக்கால்வாசி பேர் அதை எடுத்து நடப்பாங்க.

*கமல் ரசிகராய் மதம் மாறியது போல் மாறினவரை மீண்டும் ரஜினி பக்கம் இழுத்து வந்தது தளபதி தான். பலரின் சலூன் கடையில் இன்றும் அதன் முகப்பு இடத்தில் ரஜினி திரும்பியது போல் இருப்பதை கேட்கலாம்

*பலரின் சைக்கிள் மக்கேடுகளில் தளபதி தான் எழுதியிருப்பார்கள்

*பணக்காரன் படத்தில் ஷோலோவாய் ஆடியது அவ்வளவு ரசித்தோம். குறிப்பாய் அதில் வெள்ளை நிற கோட் அணிந்த ரஜினி புகைப்படம் தான் அன்றைய பொங்கல் வாழ்த்து அட்டையில் அனுப்புவோம்

*அண்ணாமலை பட பாணியில் எங்கள் ஏரியா பூ விற்கும் முருகன் ரஜினி பாணியில் சைக்கிளில் டேப் ரெக்கார்டர் வைத்து சுத்தியது பூ விற்பனையை உயர்த்தினார்

*நாட்டுக்கொரு நல்லவன் படம் ஓடாதது பலர் பெட் கட்டி தோற்றது நினைவில் உள்ளது.

*89ல் செல்வராஜ் தியேட்டரில் பார்த்த ராஜா சின்ன ரோஜா படத்தில் சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா பாட்டில் கலர் வெடிகுண்டு மாதிரி அந்த வருச தீபாவளிக்கு பட்டாசு கடையில் வெள்ளந்தியாய் கேட்டது நினைவில் இருக்கு

*கொடி பறக்குது பாணியில் எம் பேரு ஈரோடு சிவகிரி ஓம் பேர் என்னா னு எல்லாரையும் பார்த்து கேட்போம்

*உழைப்பாளி படத்தை திருச்சியில் பார்த்து எல்லோரும் ஜீன்ஸ் பேன்ட்டை கத்தரி வைத்து கத்தரித்து கிழிஞ்ச பேன்ட் போட்டிருப்பதை பார்த்து எங்கப்பா எல்லார் முன்னாலயும் ரஜினி கோவனம் கட்டி நடித்தால் எல்லாரும் கோவனம் கட்டிப் போவாங்கனு கிண்டல் செய்தார்.

*வள்ளி படத்தில் ரஜினி பேசிய வசனம் எழுதி அனுப்பினால் அவர் கையோப்பம் இட்ட போட்டோ வீட்டுக்கே வரும். அதை பலரும் தங்கள் ஹாலில் மாட்டியிருப்பாங்க

*எஜமான் படம் பார்த்து குளிக்க போகும் முன் எல்லாம் துண்டை சுற்றி தோளில் போட்டு ஸ்டைல் காண்பிப்பது.

*வீரா படம் ஏனோ அதிகம் பிடிக்கவில்லை

*அடுத்து வட்டியும் முதலுமாய் அஞ்சாம் வகுப்பு படிக்கும் போது பாட்ஷா வந்தது. அதில் வந்த ஆட்டோகாரன் பாட்டை மனப்பாட பாட்டு மாதிரி மனப்பாடம் செய்து ஓப்பிப்பது

*பழனி பஸ்ஸில் போகும்போதுதான் முத்து படத்தில் வந்த தில்லானா தில்லானா கேட்டது புதுமையா இருந்துச்சு.அதிலிருந்து தான் விக் வச்சு நடிச்சாரு.பாட்ஷாவில் அவ்வளவு தெரியல

*அருணாச்சலத்தை கேபிள் டிவியில் பார்த்தோம்.படையப்பா அப்போது வந்த ட்ரன்ட் செட்டர் படம்.அதில் தாடி வைத்த தோற்றமும் நீள அங்கியும்,அந்த ஊஞ்சல் சீனும் அவ்லோ மாஸ்.அப்புறம் சிவாஜி படம் அவரின் பழைய பிம்பத்தை ஓரளவு கொண்டு வந்தது.

*பாபா படம் ஓபனிங் எஸ்.பி.பி பாடாதது என்னவோ போல் இருந்தது. படமும் ஓடல.அப்புறம் சந்திரமுகி க்ளாஸ். அதுக்கு அப்புறம் எந்த படமும் பார்க்கல.

#ரசிகன்

இன்னும் ரஜினி ரசிகராய் இருக்கிறோம். 
இருந்தாலும் அவர் ஸ்டைலை,பஞ்ச் ஐ தற்போது ரசிக்க முடிவதில்லை. வயசாகிடுச்சானு தெரியல.அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பது ஒவ்வொரு வருச பிறந்தநாளிலும் வரும் கேள்விக்குறி.இருந்தாலும் அவரின் மாஸ் என்றும் அவருக்கு நிகர் அவரே.
பிறந்தநாள் வாழ்த்துகள் சார்