Thursday, 16 December 2021

ஓஷோ

பணிவைக் குறிக்கும் Humble எனும் சொல் humus எனும் வார்த்தையிலிருந்து வருவது. humus என்றால் மண்.எந்தப் பகட்டும் இல்லாதது.அந்த வார்த்தையே human,humanity க்கு வேர்ச்சொல்.

பணிவுள்ளவனாகும் போதே மனிதனாகிறாய்.
பகட்டற்றவனாகிறாய்.

-ஓஷோ

லின்யுடங்

தேநீரில்
இயல்பிலேயே
ஏதோ ஒன்று இருக்கிறது
அது -
அமைதியாகச் சிந்திக்கும் உலகத்துக்கு
வாழ்க்கையை அழைத்துச் செல்கிறது.

-லின்யுடங்

இறையன்பு

பேச்சு தங்கத்தைப் போன்றது. அதை அதிகம் பயன்படுத்தும் போது மங்கித் தகரமாகி விடுகிறது

-இறையன்பு

Monday, 13 December 2021

ஆபிரகாம் லிங்கன்

சின்னச் சின்ன மாற்றங்கள் செய்யுங்கள்! முதலில் சின்ன சின்ன தவறுகளை சரி செய்யுங்கள்! Compound effect படி நீங்கள் தினமும் செய்யும் சின்ன சின்ன மாற்றம், காலப்போக்கில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படும் வழி செய்யும்!

-ஆபிரகாம் லிங்கன்

புத்தர்

எவையெல்லாம் உன்னுடையது இல்லையோ, அவற்றையெல்லாம் உன்னிடமிருந்து விடுதலை செய். நீ கொடுக்கின்ற விடுதலை தான் வரப்போகிற காலத்தில் உனது மகிழ்ச்சிக்கான பாதை.

புத்தர்

Sunday, 12 December 2021

பாரதி ஜிப்ரான்

தரைமீது என்ன கோபமோ..!
எப்போதும் தண்ணீரிலேயே
வாழும் நிலா

-பாரதி ஜிப்ரான்

பாஷோ

எழுதும் போது உனக்கும் உன் கருப்பொருளுக்கும் ஒரு மயிரிழை கூட இடைவெளி இருக்க கூடாது.உள்மனதை நேரடியாகப் பேசு.. எண்ணங்களை கலைய விடாமல் நேராகச் சொல்

-பாஷோ

Wednesday, 8 December 2021

தங்கம் மூர்த்தி

கதிரவன் அழகு

நாம் அதனருகே செல்லாதவரை.

மின்னல் அதனினும் அழகு

அது நம்மருகே வராத வரை’

–தங்கம் மூர்த்தி

படித்தது

குளிரில் நடுங்கிக்கொண்டிருக்கிறாயா 
தேநீர் உன்னைச் சூடாக்கும் 

வெப்பத்தில் தகித்துக்கொண்டிருக்கிறாயா தேநீர் உன்னைக் குளிரச்செய்யும்

 பெருங்குழப்பத்தில் இருக்கிறாயா 
தேநீர் உன்னை ஆற்றுப்படுத்தும் 

படபடப்பாக இருக்கிறாயா 
தேநீர் 
உனக்குள் அமைதியைப் பாய்ச்சும்.

-படித்தது

Monday, 6 December 2021

ஆண்டன் பெனி

மகனுக்கும் எனக்குமான
சதுரங்க விளையாட்டு
இப்படியாக துவங்குகிறது.
அவன் சதுரங்கத்திலும்
நான் அவனிலும் கவனித்திருக்க
ஒருபோதும் தோற்றதில்லை இருவரும்.

-ஆண்டன் பெனி

Saturday, 4 December 2021

மார்க் கியூபன்

இந்த யுகத்தில் அறிவு, மற்றும் தகவல் எல்லார்க்கும் சமமாக தான் படைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் அதை தேர்ந்தெடுக்கிறோமா என்றால்? அது தான் இல்லை.

-மார்க் கியூபன்

Wednesday, 1 December 2021

இறையன்பு

இலக்கு,நோக்கம் என இரு விஷயங்கள் உள்ளன. 'மருத்துவர் ஆவேன்' என்பது இலக்கு,எளியவர்க்காக பணியாற்றுவேன் என்பது நோக்கம்.

எல்லோரும் இலக்கை நோக்கி பயணிக்கிறார்கள்.ஆனால் யாரெல்லாம் நோக்கத்தை நோக்கி பயணிக்கிறாரோ, அவர்களே இலக்கை நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்

-இறையன்பு

ராமச்சந்திர குஹா

மனிதர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும்பசிக்கு இயற்கையை இரையாக்கிக் கொண்டிருக்கிறார்கள்

-ராமச்சந்திர குஹா

Wednesday, 24 November 2021

பழமொழி

பிறந்தால் நாயாகப் பிற!
இளையவனாக மட்டும் பிறக்காதே!

கழுதையாகப் பிற!'ஆனால்,
மூத்தவனாக மட்டும் பிறக்காதே

-பழமொழி

மால்கம் எக்ஸ்

உனக்கென்று ஒரு தனித்தன்மையை உருவாக்கிக்கொள். மற்றவர்களிடம் இருந்து சிறிய அளவிலாவது மாறுபடு.நீ செய்யும் ஒவ்வொரு காரியமும் மற்றவர்களை ஆச்சரியப்பட வைக்கவேண்டும். அதிர்ச்சியில் வாயடைக்கப்படவேண்டும். மற்றவர்கள் செய்யாமல் விட்டது எது என்பதை கண்டறிந்து செய்துவிடவேண்டும்.

 மால்கம் எக்ஸ்

Saturday, 20 November 2021

தங்கம் மூர்த்தி

தேர்வுகளின் கடைசிநாள் கொண்டாட்டத்தில் சட்டைகளில் இங்க் அடித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது சந்துகளில்
பீர் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

-தங்கம் மூர்த்தி

Friday, 19 November 2021

வெங்கட் தாயுமானவன்

வாழ்வின் தூற்றலில்
காற்றின் திசையில் பயணித்த
உமியாக நான்..
மூட்டைக்குள் அடைபட்ட 
நெல்லாக நீ !!

-வெங்கட் தாயுமானவன்

Thursday, 18 November 2021

ஜென்

நீ  நல்ல நல்ல புத்தகங்களை வாசிப்பேயானால், ஒவ்வொரு கடைசி பக்கங்களிலும் கரைக்கு வந்து விட்டோமே என்ற ஏமாற்றம் இருக்கும்.

-ஜென்

இளங்கோ கிருஷ்ணன்

உதிர்ந்த இலையில்
தன் மரணத்தை
பார்த்துக்கொண்டிருக்கிறது
மரம்

குனிந்து
அந்த மரத்தைப்
பார்த்துக்கொண்டிருக்கிறது
வானம்

-இளங்கோ கிருஷ்ணன்

பேயோன்

மழைக்குப் பிந்தைய வெயில்
உக்கிரமாக இருக்கிறது
விட்ட இடத்திலிருந்து தொடர்வது போல
விட்டதைப் பிடிக்க முயல்வது போல
மறந்துவிடாதே என்று எச்சரிப்பது போல.

-பேயோன்

Tuesday, 16 November 2021

பேயோன்

போதாமல் சேர்த்த சர்க்கரை
காபி தீர்ந்த பின்
மிச்சமிருக்கிறது

-பேயோன்

பெருந்தேவி

அறியாமையின் பெருவெளி
சிறகடிக்கத் தூண்டியது.
அவநம்பிக்கையின் ஒரு கல்
பறத்தலை ஊர்தலாக்கியது

-பெருந்தேவி

Friday, 12 November 2021

பியொதர் தஸ்தயேவ்ஸ்கி

ஒரு  மனிதனின் வீழ்ச்சியையும் , அவன் படுகிற அவமானத்தையும் கண்டு மகிழ்வுற எப்போதுமே   மனிதர்கள்  ஆசை கொள்கிறார்கள்

-பியொதர் தஸ்தயேவ்ஸ்கி

Thursday, 11 November 2021

யுகபாரதி

போகும்போது
கூப்பிடக் கூடாதென்று
தயங்கி நிற்கிறாய்

கூப்பிட நினைத்து
மூச்சிரைக்க
ஓடி வருவாயோவெனத்
திரும்பிப் பார்க்கிறது
என் காதல்

-யுகபாரதி

கார்ல் மார்க்ஸ்

ஒரு மாமனிதனுடைய தனிப்பட்ட குணங்களால் வரலாறு கட்டமைக்கப்படுகிறது என்பதற்காக மாமனிதன் என்று அழைக்கப்படுவதில்லை. அவனுடைய குணங்கள் அன்றையச் சமூகத் தேவைகளுக்குப் பாடுபட அவனுக்கு உதவிசெய்கின்றன என்பதற்காகவே அவ்வாறு அழைக்கப்படுகிறான்.

-கார்ல் மார்க்ஸ்

ஜார்ஜ் சந்தாயனா

எந்த சமூகம் சரித்திரத்தின் இறந்தகால அட்டூழியங்களையும்,அதன் காரணங்களையும் மறந்து விடுகிறதோ,அது எதிர்காலத்தில் மீண்டும் அதே இறந்த காலத்தை எதிர் கொள்ள நேரிடும்

-ஜார்ஜ் சந்தாயனா

Monday, 8 November 2021

யுகபாரதி

நின்று பார்ப்பதற்குள்
கடந்துவிடுகிறது காலம்
நீ கடந்து போவதற்குள்
நின்றுவிடக்கூடாதா
இந்தக் கடிகாரம்

-யுகபாரதி

Sunday, 7 November 2021

மெடிக்கல்

மெடிக்கல் தொழில்- லாபமா, நஷ்டமா?



ஒரு மெடிக்கல் கடை முதலாளி மதிய உணவு அருந்துவதற்காக வீட்டுக்கு கிளம்பினார். அப்பொழுது அவருடைய பத்து வயது பையனை கடையில் உட்கார வைத்துவிட்டு மருந்து ,மாத்திரை எல்லாவற்றிலும் விலைகள் இருக்கிறது. அவற்றை பார்த்து யாரும் கேட்டார்கள் என்றால் விற்று காசு வாங்கி வைத்து இரு, என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.

சுமார் இரண்டு மணி நேரம் கழித்து திரும்பி வரும்போது பையன் சந்தோசமாக ஒரு மருந்து பாட்டிலை விற்றேன், 18 ரூபாய்க்கு என்று எழுதி வைத்திருந்தான்.

உடனே கடைக்காரர் கோபத்தில் அவனை அடித்து விட்டார் .அடப்பாவி ,எண்பத்தி ஒரு ரூபாய் மருந்து ,தலை கீழாக பார்த்து 18 ரூபாய்க்கு விற்றிருக்கிறாய் என்றவுடன் பையன் அழ ஆரம்பித்துவிட்டான்.

5 நிமிடம் கழித்து அவனை ஆறுதல் படுத்தினார். சரி, சரி விடு .அதிலும் பத்து ரூபாய் லாபம் இருக்கிறது என்று தட்டிக் கொடுத்தார் .பையன் சமாதானமானன்.

சார் என்ன கேட்டிங்க?

-படித்தது

Saturday, 6 November 2021

கல்யாண்ஜி

கைப்பிள்ளையுடன் பேசிக்கொண்டே
கோலம் போடுகிறாள் அந்தப்பெண்.
நிபந்தனையற்ற அன்பில்
நேர்த்தியாகிக் கொண்டிருக்கிறது வாசல்.

குற்றம் பார்க்கின்
சுற்றம் இல்லை.
கோலம் பார்க்கின்
துக்கம் இல்லை

-கல்யாண்ஜி

Monday, 1 November 2021

பஹ்லுல்

உடல் அடிபடுவதை விட அதிக உபாதை கொடுக்கக் கூடியது பெயர் அடிபடுவது.உடலின் வலியை விட அதிக இம்சை தருவது மனத்தின் அடி

-பஹ்லுல்